Sunday, February 15, 2015

உங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation (சான்றொப்பம்) பெறுவது எப்படி

.
உங்கள் கல்வி சான்றிதழ்களை HRD & MEA Attestation (சான்றொப்பம்) பெறுவது எப்படி

HRD (Human Resource Development) எளிதில்பெறும் வழிமுறைகள் :
வெளிநாடு வேலைக்கு செல்லும் முன் நமது Certificate HRD யிடம் முத்திரை பெறவேண்டும்.நமது சான்றிதழ் உண்மையானதுதானா என சோதிக்க நமது சான்றிதழ் நாம் படித்த Universityக்கு அனுப்பி வைத்து அங்கு HRD முடித்து வரும்.
மிகவும் எளிமையான வழிமுறைகள் கொண்ட HRD செய்வதற்கு நம்மில் பலர் முயற்சி செய்யாமல் இடைதரகர்களிடம் பணத்தை கொடுத்து முடித்து விடுகின்றனர். நாம் நேரடியாக சென்று Apply செய்தால் ₹535 ல் முடிந்துவிடும். இடைத்தரகர்கள் ₹3000 முதல்₹4000 வரை கேட்பார்கள்.
Apply செய்ய வேண்டிய இடம்: பழைய தலைமச் செயலகம், பொது வழி (தாம்பரத்திலிருந்து சென்றால் நேராக் பீச் ஸ்டேசன் சென்றாலும் அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்)
நேரம்: காலை 10 மணிக்கு மேல்
தேவையான Documents:-
1. அட்டெஸ்டேசன் பெறவேண்டிய சான்றிதழ் மற்றும் அதன் இரு நகல்கள் (இருபுறமும்)
2. வெளிநாட்டில் வேலை பெற்றதற்கான உத்தரவு ஒரு நகல் (offer letter)
3. பாஸ்போர்ட் முதல் மற்றும் இறுதி பக்கங்களின் ஒரு நகல்
4. விண்ணப்பப் படிவத்தில் ஒட்ட வேண்டிய ஒரு ரூபாய்க்கான நீதி மன்ற அஞ்சல் (இது தலைமச் செயலகத்தின் உள்ளே உள்ள கடையிலும் கிடைக்கும்)
வழிமுறைகள்:-
அவர்கள் documents சரி பார்த்து Application Xerox இல் ஒரு நம்பர் எழுதி கொடுப்பார்கள்(அந்த நம்பர் தான் முக்கியம்
தலைமை செயலகத்தில் பெற்ற அந்த Application form Xerox உடன் ₹500 க்கான டிடியை எடுத்து தலைமை செயலகத்தில் கொடுத்துவிடவும்.
இன்ஷா அல்லாஹ் 20 வேலை நாட்கள் கழித்து தலைமை செயலகத்தில் பெற்று கொள்ளலாம்.
உங்கள் சான்றிதழ் லாமினேசன் செய்யப்பட்டிருந்தால் அதை எந்தவித சேதாரமுமின்றி நீக்கித்தரவேண்டும்
எம் ஈ ஏ (Ministry of External Affairs) தேவையான சான்றிதழ்கள்:
1.சான்றிதழ், அதன் நகல் (தலைமைச் செயலக அப்ரூவலுக்கு பிறகு எடுத்தது)
2.பாஸ்போர்ட் நகல்
குறிப்பு: ஐக்கிய அரபு நாடுகளுக்கு இங்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் எங்கும் எந்த இடைத் தரகர்களையும் நம்பாதீர். எங்கும் பணம் கொடுத்து ஏமறாதீர்கள்.
M.E.A அப்ரூவலுக்கு டெல்லி செல்லவும் தேவையில்லை.கீழ்க்கண்ட முகவரிகளீலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
Ministry of External Affairs of the Government of India
Joint Secretary (Consular), MEA
CPV Division, Patiala House Annexe
Tilak Marg, New Delhi.
Tel.: +91 11 2338 8015
Fax.: +91 11 2338 8385
Email: jscons@mea.gov.in of dcpf@mea.gov.in
————–
Ministry of External Affairs
Branch Secretariat
2 Ballygunge Park Road
Kolkata – 700019
Tel: 033-22879701 / 22802686
Fax: 033-22879703
————–
Ministry of External Affairs
Branch Secretariat
7th Foor EVK Sampath Maligai
68 College Road
Chennai – 600006
Tel: 044-28272200 / 28251323
Fax:044-28251034
—————
Ministry of External Affairs
Branch Secretariat
B Block Room #311-312
Hyderabad – 500022
Tel: 040-23456051
Fax:040-23451244
உங்களுக்கு எதாவது சந்தேகம் இருப்பின் மேலே உள்ள எண்களுக்கு தொடர்புகொண்டு விபரம் அறிந்து கொள்ளுங்கள்.
http://pettagum.blogspot.sg/

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்



பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும். சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது, சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.
மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது. எல்லாம் வல்ல எம் குருநாதரை வணங்கி அகத்தியர் குணபாடத்தை வேறு ஒரு நோய்க்காக அதில் இருக்கும் பாடலை படித்து கொண்டிருந்தோம் மனம் மட்டும் வியர்வை நாற்றத்திற்கான மருந்தை தேடியே இருந்தது, வேறு நோய்க்கான மருந்தின் பாடலின் கடைசி வரியில் துர்நாற்றமும் போக்குமடா இந்த கனி என்று இருந்தது. மனதில் சந்தோசம் கண்களில் மட்டும் கண்ணீர் இரண்டு நிமிடம் வந்தது குருநாதரின் அன்பை என்ன சொல்வேன். குருநாதருக்கு மனதார நன்றி கூறினோம்.
வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான். அடுத்த நாள் அதிகாலை நண்பரிடம் சென்று எலுமிச்சை வாங்கி கொடுத்து அதில் அரை பழத்தை மட்டும் வெட்டி உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வர சொன்னோம் கூடவே ஒரு கண்டிசன் குளிக்கும் போது சோப்பு கூட போடக்கூடாது , குளித்த பின் வாசனைத்திரவியங்கள் , பவுடர் பூசக்கூடாது என்றோம். நம்மை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார், குளித்த பின் காலை 8.30 மணிக்கு உங்கள் வீட்டுக்கு வருகிறேன், அரை மணி நேரம் என்னுடன் தான் இருக்க அருகில் இருக்க வேண்டும் என்றார் , தாராளமாக வாங்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தோம், சரியாக 8.30 மணிக்கு வந்தார் நாம் அருகில் உட்கார்ந்தோம், எப்படி இருக்கிறது மருந்து வேலை செய்கிறதா என்று கேட்டோம். இப்போது நன்றாக இருக்கிறது எந்த நாற்றமும் இல்லை ஆனால் சாயங்காலம் வரை பார்த்தபின் தான் மருந்து எப்படி வேலை செய்கிறது என்று சொல்வேன் என்றார், சாயங்காலம் 6 மணிக்கு வந்தார் அவர் அருகில் தான் நாம் உட்கார்ந்திருந்தோம் எந்த நாற்றமும் இல்லை, வியர்வை எப்போதும் போல் தான் வருகிறது ஆனால் வியர்வை நாற்றம் என்பது துளிகூட இல்லை என்று சொல்லி மனதார நன்றி கூறினார்.
தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம். முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும். நீங்களும் பயன்படுத்தி தங்கள் பதிலை மறக்காமல் தெரிவியுங்கள்.
- See more at: http://www.tradilife.com/…/you-can-get-the-sweat-stinkiness…

3 மாதத்தில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி – க்ரஞ்சஸ் பயிற்சி.!!!


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை.
இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.
அப்படிப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சியை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் 3 மாதத்தில் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம்.
செய்முறை:
முதலில் விரிப்பில் கால்களை நேராக நீட்டி படுத்துக் கொள்ளவும். கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். பின்னர் கால்கள் இரண்டையும் முட்டி வரை மடக்கவும். இயல்பான சுவாசத்தில் இருந்தபடி மெதுவாக முன்னோக்கி வந்து கைகளால் கால் முட்டியை தொடவும். இவ்வாறு எழும் போது முதுகு வளைய கூடாது. படத்தில் உள்ளபடி தான் செய்ய வேண்டும்.
அப்போது தான் முழுபலனையும் பெற முடியும். இவ்வாறு இந்த பயிற்சியை தினமும் 30 முறை செய்ய வேண்டும். பார்க்க எளிமையாக தெரிந்தாலும் செய்யும் போது இந்த பயிற்சி சற்று கடினமாக தான் இருக்கும்.
ஆரம்பத்தில் இந்த பயிற்சியை குறைந்த எண்ணிக்கையில் உங்களால் முடிந்த அளவு செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 50 முறை கூட செய்யலாம். செய்யும் எண்ணிக்கையின் அளவை பொறுத்து விரைவில் பலன் கிடைக்கும்.
Ayurvedic Medicine: 3 மாதத்தில் தொப்பையை குறைக்கும் உடற்பயிற்சி – க்ரஞ்சஸ் பயிற்சி.

சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..!

சேமித்த கொழுப்பை செலவில்லாமல் குறைக்க..!
இன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று 'வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடம்பில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.
இப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது 'கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான்.
பைசா செலவில்லாமல், உடற்பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கவும், குதூகலமாக வாழவும் வழி காட்டுகிறார் ஆற்காட்டை சேர்ந்த சித்த மருத்துவர் மகேஷ்வரன். கூடவே, 'பக்குவமாய் செய்ய ஏது நேரம்?’ என்பவர்கள் பூண்டு, வெங்காயம், வெள்ளரிக்காயை பச்சையாக பயன்படுத்தினாலும் உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு கரைந்துவிடும்’ என்கிறார்.
பூண்டு
'பூண்டுக்கு மிஞ்சிய மருந்து இல்லை’. 5-8 பூண்டு பற்களை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து, காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு கணிசமாக குறைந்துவிடும்.
ஆப்பிள்-வாழைத்தண்டு-கீரை
பொதுவாக, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் கெட்ட கொழுப்பை, உடலில் சேரவிடாமல் தடுக்கும். இதற்கு சிறந்த உதாரணமாக ஆப்பிள் பழத்தை குறிப்பிடலாம். வாழைத்தண்டு, கீரை வகைகளை கூட்டு வைத்து சாப்பிடலாம்.
கொள்ளு
ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.
கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையுடன் கொள்ளு சேர்த்து அரைத்து துவையலாக சாப்பிடலாம்.
மிளகு
வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கவும். உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தவும். உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.
சாம்பார் வெங்காயம்
சின்ன வெங்காயம் ஐந்து எடுத்து, நல்லெண்ணெயில் வதக்கி, வெந்ததும் மோர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
கோடாம்புளி
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கோடாம்புளி என்கிற புளியை நாம் வழக்கமாக பயன்படுத்தும் புளிக்கு பதிலாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
சீரகம் - அதிமதுரம்
தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.
ஒரு லிட்டர் தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது. கேரள மக்கள் அன்றாடம் பருகுவதும் சீரக தண்ணீரைத்தான்.
செம்பருத்தி,ரோஜா இதழ்கள்
செம்பருத்தி பூ இதழ்களை சிறிது எடுத்து உலர்த்தி, 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி பருகவும். இதேபோல் ரோஜா இதழ்களையும் பயன்படுத்தலாம். நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி - ஏலக்காய்
இஞ்சியின் மேல்தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடிக்கவும். இதில் 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.
சோற்றுக் கற்றாழை
சோற்றுக் கற்றாழையின் மேல் தோல் சீவி, ஜெல்லை எடுத்து ஏழு முறை கழுவவும். தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன், கொழுப்பும் குறையும்!
நன்றி: டாக்டர் விகடன்

வெள்ளைப் படுதல்

பெண்களுக்கு வேதனை தரும் வெள்ளை படுதல் பற்றிய தகவல்களும், இயற்கை வைத்தியமும் :-
பெண்களுக்கு இயற்கையாகவே பல உபாதைகள் ஏற்படுகின்றன. மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப் படுதல், கருப்பைக் கட்டி, என பல கோளாறுகள் ஏற்படுகின்றன. வெள்ளைப் படுதல் பெண்களின் பிறப்புறுப்பில் உண்டாகும் ஒரு நோய்.
வெள்ளைப் படுதல் அறிகுறிகள்:-
· பிறப்புறுப்பில் அதிகளவு வெள்ளைப்படுதல்
· வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்தில் நாற்றத்துடன் சளிபோல் வெளியேறுதல்.
· வெள்ளைப்படும் இடங்களில் அரிப்பு, எரிச்சல் உண்டாதல்.
· சிறுநீர் மிகுந்த எரிச்சலுடன் வெளியேறுதல்
· வெள்ளைப் படும் காலங்களில் உடல் சோர்வு, அடிவயிறு வலி, கை கால் வலி உண்டாகுதல்.
· இடுப்பு வலி, முதுகு வலி போன்றவை உண்டாதல்.
நோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
· பொதுவாக ஒரு சில பெண்களுக்கு பூப்பெய்திய காலம் தொட்டே வெள்ளைப் படுதல் இருக்கும்.
· ரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்நோய் அதிகமாக காணப்படும்.
· அதிக உஷ்ணம், மேகவெட்டை போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.
· தூக்கமின்மை, மனக்கவலை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றாலும் இந்நோய் ஏற்படும்.
· சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழித்தால் கூட இந்த நோய் பரவ வாய்ப்புண்டு.
· அதிக மன உளைச்சல், மன பயம், சத்தற்ற உணவு போன்றவற்றால் வெள்ளைப் படுதல் உண்டாகிறது.
· அதீத சிந்தனை, காரம், உப்பு மிகுந்த உணவு அருந்துதல் போன்றவற்றாலும் இந்நோய் உண்டாகும்.
இதனை ஆரம்பத்தில் கவனிக்காவிட்டால் மிகப் பெரிய நோய்களுக்கு இது அடித்தளமாக அமைந்துவிடும். எனவே இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது மிகவும் அவசியம்.
வெள்ளை நோயைத் தவிர்க்க
· உடலை நன்கு சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
· பயம், மன உளைச்சல் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
· உடலுக்கு வெப்பத்தை உண்டாக்கும் உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது.
· நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மருந்து
இந்த வெள்ளைப் படுதல் நோயை குணப்படுத்த இந்திய மருத்துவத்தில் பல மருந்துகள் உள்ளன. மூலிகைகளைக் கொண்டே இதனை குணப்படுத்த இயலும்
மணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி
பூண்டுப்பல் -4
சின்ன வெங்காயம் - 4
நல்ல மிளகு - 5
சீரகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தேவையான அளவு எடுத்து சூப் செய்து இரண்டு வாரம் தொடர்ந்து அருந்தி வந்தால், வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
யானை நெருஞ்சில் சமூலத்தை எடுத்து நீர்விட்டு நன்கு அரைத்து எலுமிச்சம் பழ அளவு எடுத்து அதில் மோர் 200 மிலி. சேர்த்து நன்கு கலக்கி தினமும் வெறும் வயிற்றில் காலை நேரத்தில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.
அருகம்புல்லை எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 4 குவளை நீரில் கொதிக்க வைத்து அது நன்கு வற்றி 1 குவளை ஆனவுடன் எடுத்து அதனுடன் மிளகுத்தூள் தேவையான அளவு பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை இருவேளையும் 15 நாட்கள் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
ஓரிதழ் தாமரை இலைகளை நன்கு நீர்விட்டு அலசி அரைத்து எலுமிச்சம் பழம் அளவு உருண்டை எடுத்து காய்ச்சாத பசும் பால் அல்லது வெள்ளாட்டுப் பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் எளிதில் குணமாகும்.
வெள்ளைப்படுதலுக்கு வர்மப் பரிகார மருந்து
நன்னாரி வேர் - 10 கிராம்
அதிமதுரம் - 5 கிராம்
காய்ந்த திராட்சை - 5 கிராம்
மணத்தக்காளி விதை - 5 கிராம்
சீரகம் - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
காய்ந்த செம்பருத்திப் பூ - 5 கிராம்
காய்ந்த ரோஜா இதழ் - 5 கிராம்
சின்ன வெங்காயம் - 3
நன்னாரி வேரை எடுத்து சிதைத்து அதன் உள்ளே உள்ள வேரை நீக்கி சதையை மட்டும் எடுத்து, அதனுடன் அதிமதுரம், மணத்தக்காளி விதை, காய்ந்த செம்பருத்திப் பூ, காய்ந்த ரோ ஜா இதழ், சீரகம், சோம்பு இவற்றை சேர்த்து நன்றாக இடித்து, அதனுடன் சின்ன வெங்காயம், காய்ந்த திராட்சை சேர்த்து, 2 கப் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி அரை கப் அளவாக வந்தவுடன் வடிகட்டி தினமும் அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் நோய் அடியோடு நீங்கும்.
· சிறுநீர் வெளியேறும்போது சுண்டி சுண்டி இழுப்பது மாறிவிடும்.
· மாதவிலக்குக் கோளாறு உள்ள பெண்களுக்கு அதிக குருதிப் போக்கை மாற்றும், ஒழுங்கற்ற குருதிப் போக்கை சரி செய்யும்.
· ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். கண்களைச் சுற்றியுள்ள கருப்பு, கழுத்திலுள்ள கருப்பு, இடுப்புப்பகுதியில் உள்ள கருப்பு போன்றவற்றை மாற்றும்.
· உடலிலுள்ள தேவையற்ற உப்புகளை நீக்கி முகத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
· மன உளைச்சல் நீங்கும். கை கால் குடைச்சல் நீங்கும்.
சிறுநீர் தண்ணீர்போல் வெளியேறும்வரை, இந்த கஷாயத்தை அருந்தலாம். இந்த கஷாயம் பெண்களுக்கு வரப்பிரசாதமாகும். தேவைப் பட்டால் கஷாயத்துடன் தேன் கலந்து அருந்தலாம்.
உணவு முறை
· அதிக காரம், புளிப்பு, உப்பு இவற்றை குறைக்க வேண்டும்.
· உணவில் வெண்ணெய், பால், மோர் போன்ற உணவுப் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
· உஷ்ணத்தை அதிகரிக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.
· தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
சுக்காங் கீரையைத் தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.
* முக்குளிக் கீரைச் சாறில் தான்றிக்காய் தோலை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.
* துயிலிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை தீரும்.
* சாணாக்கிக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.
மேற்கண்ட மருந்துகளை முறையாக செய்து அருந்தினால், வெள்ளை நோயின் பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடலாம்.
http://neerkondar.blogspot.in/


வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்!!!


அருகம்புல், துளசி, அரசு, கல்யாண முருங்கை, வாழைத்தண்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை, வில்வம், கற்பூரவல்லி, புதினா, வல்லாரை, தூதுவளை, மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை, செம்பருத்தி, முருங்கை இலை, மணத்தக்காளி, வெந்தயகீரை இவற்றை தினமும் நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது வயிற்று புண்ணுக்கு நல்லது.
இளநீரை தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அதேபோல் முற்றிய தேங்காய் பருப்புகளை நன்கு காயவைத்து, செக்காடப்பட்டு எதுவும் கலக்காமல் இருக்கும் தேங்காய் எண்ணெயை வயிறு எரிச்சலின் போது குடிக்கலாம். இப்படி குடித்தால் சிறிது நேரத்தில் எரிச்சல் குறைந்துவிடும்.
அத்துடன் இளநீர் நம் உடலில் சிறு குடலில் உண்டாகும் புழுக்களை அழிக்கிறது. இவற்றில் உள்ள உப்புத்தன்மை மற்றும் வழுவழுப்பு தன்மை குடலில் உள்ள புண்களை குணப்படுத்துகிறது. இவை சிவப்பு ரத்த அணுக்கள் அழியாமல், ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருட்களை அகற்றுகிறது.
http://www.tradilife.com
Ayurvedic Medicine: வயிற்றுப்புண்ணை போக்கும் அருமருந்துகளின் பட்டியல்


உங்களுக்காக ஆயுர் வேத அழகு குறிப்புக்கள்!


* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
• ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
• முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
• நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.
• கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.
• வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
• இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.
• கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
• இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
• முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.
http://neerkondar.blogspot.in/


பாத எரிச்சல் தீர்வதற்கு !!!


பாத எரிச்சலால் அவதி படுபவர்கள் வீட்டிலே பயன்படுத்தும் பொருட்களை வைத்து பாத எரிச்சலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பாத எரிச்சல்
மருதாணி இலை,எலுமிச்சைச் சாறு.
மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்
காலில் கட்டி குறைய
எருக்கின் பழுத்த இலை.
வசம்பு.
எருக்கின் பழுத்த இலை 5, வசம்பு 5 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.பாத எரிச்சலால் அவதி படுபவர்கள் வீட்டிலே பயன்படுத்தும் பொருட்களை வைத்து பாத எரிச்சலில் இருந்து நிவாரணம் பெறலாம்.
பாத எரிச்சல்
மருதாணி இலை,எலுமிச்சைச் சாறு.
மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்
காலில் கட்டி குறைய
எருக்கின் பழுத்த இலை.
வசம்பு.
எருக்கின் பழுத்த இலை 5, வசம்பு 5 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து பசைபோல் வந்தவுடன் இளம் சூடாக காலின் மேல்பாகத்தில் பூசி வர கட்டி குறையும்.
http://neerkondar.blogspot.in/


டயட்டிங் - செய்யக் கூடியவையும் கூடாதவையும் (Dos and Donts)


உடல் மெலிவதற்காக சிலர் தானாகவே உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வார்கள். அப்படி செய்யக் கூடாது. அது தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் அதற்கு முதல் படி உணவுச் சத்து நிபுணரிடம் ஆலோசனைப் பெற வேண்டும்.
செய்யக் கூடியவை
பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அதிகம் சாப்பிடலாம். அவற்றின் கலோரி குறைவாக இருந்தாலும் கால்ஷியம் மற்றும் பிற சத்துக்கள் அதிகம் இருப்பதால் எனர்ஜி கிடைக்கும்.
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எட்டிலிருந்து ஒன்பது க்ளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடல் சக்தியை மேன்படுத்தும். புத்துணர்வுடன் இருக்க நீர்ச்சத்து உடலில் சமன் நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இருபது நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. உடலை வலுவாகவும் ஃபிட்டாகவும் வைக்க பயிற்சி அவசியம். கடினமான பயிற்சிகள் செய்யத் தேவையில்லை. வாக்கிங், ஜாகிங் அல்லது ஸ்விம்மிங் செய்யலாம்.
செய்யக் கூடாதவை
கடைபிடிக்க முடியாத வகையில் டயட் இருக்க‌ வேண்டாம். எளிமையான டயட்டிங் (சத்துணவு, நல்ல உறக்கம், போதிய நீர்ச் சத்து, குறைவான சர்க்கரை, ஜன்க் உணவுகளைத் தவிர்த்தல்) போதுமானது.
சிலர் டயட்டிங் என்று நினைத்து குறைவாக சாப்பிடுவார்கள் . அப்படி செய்யக் கூடாது. உண்ணும் உணவின் அளவு முக்கியம்.
ரெட் மீட், போர்க், பீஃப் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
http://www.tradilife.com


டயட்டிங் - செய்யக் கூடியவையும் கூடாதவையும் (Dos and Donts)

உடல் மெலிவதற்காக சிலர் தானாகவே உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வார்கள். அப்படி செய்யக் கூடாது. அது தேவையற்ற பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் அதற்கு முதல் படி உணவுச் சத்து நிபுணரிடம் ஆலோசனைப் பெற வேண்டும்.

செய்யக் கூடியவை

பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் அதிகம் சாப்பிடலாம். அவற்றின் கலோரி குறைவாக இருந்தாலும் கால்ஷியம் மற்றும் பிற சத்துக்கள் அதிகம் இருப்பதால் எனர்ஜி கிடைக்கும்.

தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். எட்டிலிருந்து ஒன்பது க்ளாஸ் தண்ணீர் குடிப்பதால் உடல் சக்தியை மேன்படுத்தும். புத்துணர்வுடன் இருக்க நீர்ச்சத்து உடலில் சமன் நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் இருபது நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது நல்லது. உடலை வலுவாகவும் ஃபிட்டாகவும் வைக்க பயிற்சி அவசியம். கடினமான பயிற்சிகள் செய்யத் தேவையில்லை. வாக்கிங், ஜாகிங் அல்லது ஸ்விம்மிங் செய்யலாம்.

செய்யக் கூடாதவை

கடைபிடிக்க முடியாத வகையில் டயட் இருக்க‌ வேண்டாம். எளிமையான டயட்டிங் (சத்துணவு, நல்ல உறக்கம், போதிய நீர்ச் சத்து, குறைவான சர்க்கரை, ஜன்க் உணவுகளைத் தவிர்த்தல்) போதுமானது.

சிலர் டயட்டிங் என்று நினைத்து குறைவாக சாப்பிடுவார்கள் . அப்படி செய்யக் கூடாது. உண்ணும் உணவின் அளவு முக்கியம்.

ரெட் மீட், போர்க், பீஃப் போன்றவற்றைத் தவிர்க்கலாம்.
http://www.tradilife.com

நல்ல வருமானம் தரும் நான்-ஓவன் பேக்ஸ்!

நல்ல வருமானம் தரும் நான்-ஓவன் பேக்ஸ்!
கே.அபிநயா, படங்கள்: தி.ஹரிஹரன், மீ.நிவேதன்
''மெஷினரி தயாரிப்பு, பசைத் தயாரிப்பு, தொழிற்சாலைகளுக்குத் தேவையான பிரஷ்கள் தயாரிப்பு... இது மூணும் என் கணவர் ஆரம்பித்த தொழில்கள். அவருக்கு உதவியா இருந்த நானும், இந்தத் தொழில்களைக் கத்துக்கிட்டேன். 5 வருஷத்துக்கு முன்ன அவர் தவறினப்போ, இந்தத் தொழில்களை விடக்கூடாது என்ற உறுதிதான், நானும் தொழில்முனைவோர் ஆன கதை!’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த வசந்தி, உழைப்பைத் துடுப்பாக்கி கரைசேர்ந்த பெண்களில் ஒருவர்.
''அந்த மூணு தொழில்களில், மெஷினரி தொழிலை மட்டும் என்னால தொடர முடியல. பசை தயாரிப்பு மற்றும் பிரஷ் தயாரிப்பை தொடர்ந்து செய்தேன். ஒரு வருஷத்துக்கு முன்ன, 'நான்ஓவன்' பேக்குகள் (non - woven- bags) தயாரிப்பையும் கையில் எடுத்தேன். இந்த மூணு பிசினஸும் நல்லவிதமா போயிட்டிருக்கு. குறிப்பா, வணிக இடங்களில் பொருட்கள் டெலிவரிக்குப் பயன்படுத்துற 'நான்ஓவன் பேக்', பசை தயாரிப்பு இது ரெண்டும் செய்றதுக்கு எளிமையான தொழில்கள்'' என்ற வசந்தி, அவை பற்றிய தகவல்களைத் தந்தார்.
''நான்ஓவன் பேக் தொழிலுக்கு ஒரு லட்சம் முதலீடு தேவைப்படும். ஆனா, இது ஆயுளுக்குமான முதலீடு. ஆர்டர்கள் வாங்கும்போது, அவங்க விலையைக் குறைச்சுக் கேட்டா, அப்போ நீங்க ஆர்டரை அதிகமா கேட்கணும். அதாவது, 1,000 பேக்ஸ் கேட்குற இடத்துல, 1,500 பேக்ஸ் எடுத்துக்கோங்கனு சொல்லணும். இதனால, அவங்களுக்கு குறைந்த விலையும், நமக்கு லாபமும் கிடைக்கும். ஏற்கெனவே போட்டிகள் நிறைந்த ஏரியாவில் தொழில் தொடங்க வேண்டாம். கஸ்டமரை கவரும் வகையில், நிறைய மாடல்கள் வெச்சிருக்கணும். விளம்பரங்கள் முக்கியம். நியூஸ் பேப்பரில் விளம்பரம் செய்வதுடன்... கோயில்கள், கேட்டரிங் போன்ற இடங்களில் நேர்ல போய் வாய்ப்பு கேட்கலாம். எல்லா செலவுகளும் போக, 10 பர்சன்ட் லாபம் கிடைக்கும்!'' என்ற வசந்தி, பசை தயாரிப்புத் தொழிலின் அறிமுகமும் தந்தார்.
''பசை தயாரிக்கும் தொழிலுக்கு மூலப் பொருட்கள், மெஷினரிகள் எல்லாம் விலை அதிகம் என்பதால், குறைந்தபட்சம் 2 லட்சம் முதலீடு தேவை. நிறைய உழைப்பை போட்டா, 20 பர்சன்ட் லாபம் தரும் தொழில் இது. போட்டிக் குறைவு என்பது, இந்தத் தொழிலோட ப்ளஸ் பாயின்ட். நான் செய்யும் இந்த மூணு தொழில்கள், எனக்கு மாதம் 35,000 ரூபாய் வருமானம் தருது. என் மூணு புள்ளைகளையும் நான் படிக்க வெச்சு ஆளாக்கினது, இந்த சுயசம்பாத்திய தெம்புலதான்!''
தொழில்முனைவோராகப் பேச்சைத் தொடங்கி, அம்மாவாக நிறைவு செய்த வசந்தி, பசை தயாரிப்பு மற்றும் 'நான்ஓவன்' பேக்குகள் தயாரிப்பு தொழில்களைப் பற்றி 'வழிகாட்டும் ஒலி’யில் பிப்ரவரி 10 முதல் 16 வரை உங்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்!
நீங்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண் 044 - 66802912.

உழைப்பு பாதி... மார்க்கெட்டிங் மீதி!
''அலுவலகத்திலோ, தொழிற்கூடத்திலோ வேலைக்குச் செல்ல விரும்பும் பெண்கள், சுயமாக தொழில் தொடங்கி முதலாளியாகும் உத்வேகம் பெற வேண்டும்!'' என்று தன்னம் பிக்கை தரும் வார்த்தைகளைத் தருகிறார், சென்னையில் உள்ள தமிழ்நாடு சிறு மற்றும் குறுதொழில் சங்கத்தின் துணைத்தலைவர், சி.கே.மோகன்.  
''ஒரு தொழிலை ஆரம்பிக்கும் முன், அந்தத் தொழிலின் எல்லா நுணுக்கங்களையும் தெரிந்துகொண்டு இறங்கினால், ஆரம்பகட்ட தடுமாற்றங்களை வெற்றிகரமாக சமாளிக்கலாம். முக்கியமான விஷயம், மார்க்கெட்டிங். ஏனென்றால், உற்பத்தியில் உழைப்பைக் கொட்டினாலும், மார்க்கெட்டிங் திறனே அதற்கான பலனைப் பெற்றுத் தரும். ஒவ்வொரு வகை தொழிலுக்கும் ஒவ்வொரு விதமான மார்க்கெட்டிங் யுக்தி இருக்கிறது.
மார்க்கெட்டிங்கில் கவனம் கொடுக்க வேண்டிய ஏரியா, செய்யக் கூடாத விஷயங்கள், அணுக வேண்டிய நபர்கள், செய்துகொள்ள வேண்டிய ஒப்பந்தம்... இப்படி பல சூட்சுமங்கள் உள்ளன. அதைப் பற்றிய புரிதலும் தெளிவும் மிகமிக அவசியம்!'' என்ற மோகன், பிப்ரவரி 17 முதல் 23 வரை 'வழிகாட்டும் ஒலி’யில் சுயதொழில்களுக்கான மார்க்கெட்டிங் விஷயங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார்.  
044- 66802912 என்ற எண்ணுக்கு போன் போடுங்கள். மார்க்கெட்டிங் சூட்சுமங்களை மனதில் ஏற்றிக்கொள்ளுங்கள்.

வேஸ்ட் என்று எதுவும் இல்லை!

வேஸ்ட் என்று எதுவும் இல்லை!
இந்துலேகா.சி
'மினரல் வாட்டர் பாட்டில், சாஃப்ட் டிரிங்க் பாட்டில் எல்லாம் காலியானதும் தூக்கிப் போட்டுருங்க.  திரும்பவும் யூஸ் பண்ணாதீங்க’னு ஒரு பக்கமும், 'பிளாஸ்டிக் குப்பைகளைப் போடாதீங்க’னு இன்னொரு பக்கம் சொல்லிட்டே இருக்காங்க. அப்போ இதெல்லாத்தையும் என்னதான் பண்றதுனு நீங்க புலம்பறது தெரியுது.
உங்களுக்காகவே வலைதளத்துல நிறைய ஐடியாக்கள் வலம் வந்திட்டிருக்கு. அதாவது, பிளாஸ்டிக் பாட்டில்கள், ஸ்பூன்கள், பிளாஸ்டிக் யூஸ் அண்ட் த்ரோ கப்கள்... இதெல்லாத்தையும் ரீ  சைக்கிளிங் முறையில் எப்படி பயன்படுத்தலாம்னு எக்கச்சக்க ஐடியாக்கள் கொட்டிக்கிடக்கு. சில சாம்பிள்ஸ் இதோ...
1. பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பாகம், வெட்டப்பட்டு கோக்கப்பட்ட அழகிய தோரணம்.
2, 2A , 2B.  கயிற்றின் மூலம் வரிசையாக கட்டித் தொங்கவிடப்பட்ட பாட்டில்களின் அடிப்பகுதி மட்டும் பெயின்ட் செய்யப்பட்டால் சிம்பிள் கார் ஷெட் ரெடி.
3, 3A, 3B.  யூஸ் அண்ட் த்ரோ கப்களை வரிசையாக ஒட்டி, உருண்டை வடிவம் கொடுத்து, நடுவே லைட் பொருத்தி அலங்கார விளக்காக மாற்றலாம்.
4. தோட்டத்துக்கு தண்ணீர் விடும் பைப்களின் முனையில், துளைகள் போடப்பட்ட வாட்டர் பாட்டிலை பொருத்தினால், இன்ஸ்டன்ட் வாட்டர் ஸ்பிரேயர் ரெடி.
5. ஒரே அளவிலான வாட்டர் பாட்டிலை வரிசையாக அடுக்கி ஒட்டினால், குழந்தைகளுக்கான மினி நாற்காலி ரெடி.
6. கழுத்துப் பகுதி வெட்டப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை சுவரில் பொருத்தி, டூல்ஸ், பேனா, கத்தி போன்ற சிறுசிறு வீட்டு உபயோகப் பொருட்கள் வைக்கும் ஸ்டாண்டாக உபயோகிக்கலாம்.
7, 7A , 7B. கழுத்துப்பகுதி வெட்டப்பட்ட பாட்டிலில், ஹேண்டில் கட் செய்யப்பட்ட ஸ்பூனை ஒட்டி, பாட்டிலின் நடுவே லைட் செட் செய்து அலங்கார விளக்காக்கலாம்.
8. பிளாஸ்டிக் ஸ்பூன்களின் முனையை கட் செய்து, வட்ட வடிவ கார்ட் போர்டில் ஒட்டி பெயின்ட் செய்து, நடுவே வால் கிளாக்கை ஃபிக்ஸ் செய்தால் அழகிய டிசைனர் வால் கிளாக் ரெடி.
9. பிளாஸ்டிக் பாட்டிலின் அடிப்பகுதியை மட்டும் வெட்டி எடுத்து அதைச் சுற்றிலும் விருப்பமான வடிவங்களில் ஸ்பூன்களின் முனையை கட் செய்து ஒட்டி, மினி பூந்தொட்டியை உருவாக்கலாம்.

டிப்ஸ்... டிப்ஸ்...

புளி, உப்பு, வெல்லம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் டப்பாக்களில் வைப்பதைத் தவிர்க்கவும். இவை, காற்றுபட்டால் நீர் விடும் தன்மை கொண்டவை. பிளாஸ்டிக்குடன் சேர்ந்து ரசாயன மாற்றம் ஏற்பட்டு, ஆரோக்கியத்துக்கும் கெடுதல் ஏற்படக்கூடும். கண்ணாடி அல்லது பீங்கான் டப்பாக்களில் பாதுகாத்து வையுங்கள்.

பிரெட் துண்டுகளின் மேல் வெண்ணெய் தடவுவதற்கு முன்னால், வெண்ணெயில் சிறிது பால் விட்டு நன்றாகக்  குழைத்துக் கொள்ளுங்கள். பிறகு வெண்ணெயை சீராகத் தடவ சுலபமாக இருக்கும் என்பதுடன், வெண்ணெயும் குறைவாகவே தேவைப்படும்.

ட்னி வகைகள் (குறிப்பாக தேங்காய் சட்னி) மிகுந்துவிட்டால், அவற்றுடன் புளிக்காத தயிர், பொடியாக அரிந்த வெங்காயம் அல்லது காராபூந்தி சேர்த்துக் கலந்தால், சுவையான ராய்த்தா தயார்.

வை, சேமியா உபயோகித்து கிச்சடி தயாரிக்கும்போது, தக்காளிப் பழத்தை முதலிலேயே சேர்த்தால், தக்காளித் துண்டுகள் மிகவும் குழைந்துவிடுவதுடன் கிச்சடியின் நிறமும் மாறிவிடும். தக்காளி போடாமல் கிச்சடி தயாரித்துவிட்டு, அடுப்பை அணைத்துவிடுங்கள். தக்காளித் துண்டுகளை கிச்சடியின் மேல்தூவி, ஒரு ஃபோர்க்கால் ஒரு முறை கிளறிவிட்டு கொஞ்ச நேரம் மூடி வைத்துவிடுங்கள், கிச்சடியின் சூட்டில் தக்காளி பதமாக வெந்துவிடுவதோடு, கிச்சடியின் நிறமும் மாறாமல் இருக்கும்

கால் கிலோ வெங்காயம், கால் கிலோ தக்காளி இவற்றைத் துண்டுகளாக நறுக்கி, நாலைந்து மிளகாய் வற்றலுடன் வதக்கிக் கொள்ளவும். இதை தண்ணீர் விடாமல் விழுதாக அரைத்து பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். தேவையானபோது இதை உபயோகித்து... சைட் டிஷ், கிரேவி போன்றவற்றை விரைவில் தயாரித்து விடலாம்... சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.

30 வகை லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி

30 வகை லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி
ள்ளி, கல்லூரியிலிருந்து  பிள்ளைகள் வீடு திரும்பியவுடன் அம்மாக்கள் பலர் செய்யும் முதல் வேலை, பிள்ளைகளின் டிபன் பாக்ஸை திறந்து பார்ப்பதுதான். அது துடைத்துவிட்டாற்போல் காலியாக இருந்தால், அம்மாக்கள் அடையும் மனநிறைவு வார்த்தையில் அடங்காது. '’இந்த மகிழ்ச்சியைப் பெற ’லஞ்ச் பாக்ஸ் காலியாக இருக்க வேண்டும்’ என்று வெறுமனே நினைத்தால் மட்டும் போதாது... நாமும் வித்தியாசமான, விதம்விதமான உணவுகளை செய்துதர முயற்சிக்க வேண்டும்''  என்று சொல்லும், சமையல்கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா, இந்த இணைப்பிதழில், வாய்க்கு ருசியாக, வயிற்றுக்கு நிறைவாக இருப்பதுடன், உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களையும் வழங்கும் '30 வகை லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி’க்களை வழங்குகிறார்.
அனைத்தையும் செய்யுங்கள்... அப்ளாஸ்களை அள்ளுங்கள்!

வெஜிடபிள்  கீரை பிடிகொழுக்கட்டை
தேவையானவை: அரிசி - 200 கிராம், பொடியாக நறுக்கிய முளைக்கீரை  இரண்டு கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய கேரட்  ஒரு சிறிய கப், பீன்ஸ் - 100 கிராம் (பொடியாக நறுக்கவும்), குடமிளகாய்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), இஞ்சி  ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள்  சிறிதளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ரவை போல மிக்ஸியில் உடைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் நறுக்கிய கீரை, கேரட், குடமிளகாய், பீன்ஸ், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். ஒரு பங்கு அரிசி ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கொதிக்கவிடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அரிசி ரவையை சேர்த்துக் கிளறி வேகவிட்டு எடுக்கவும். இந்தக் கலவை நன்கு ஆறியவுடன் சிறு உருண்டைகளாக உருட்டி, இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதே முறையில் கோதுமை ரவையிலும் பிடிகொழுக்கட்டை செய்யலாம்.

பருப்பு உசிலி இடியாப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 200 கிராம், கடலைப்பருப்பு  ஒரு கப், துவரம்பருப்பு  அரை கப், காய்ந்த மிளகாய் - 2, கடுகு  ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள்  சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைத்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அரைத்த மாவை சேர்த்துக் கிளறி, கெட்டி யானதும் இறக்கி, சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். அகலமான பாத்திரத்தில் உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் உருண்டைகளைப் போட்டு, நன்கு வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்துகொள்ளவும்.
பருப்புகளை ஊறவைத்து காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக, சிறிது கொரகொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, அரைத்த பருப்பு சேர்த்து... தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). பருப்பு வெந்து உதிரி உதிரியாக வரும். இதனை பிழிந்த இடியாப்பத்துடன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
குறிப்பு: கொதிக்கும் தண்ணீரில் உருண்டைகள் மேலே மிதந்து வரும்போது எடுத்து இடியாப்பம் பிழிய வேண்டும். அப்பளம், மோர்க்குழம்பு இந்த இடியாப்பத்துக்கு சிறந்த காம்பினேஷன்.

சைனீஸ் நூடுல்ஸ்
தேவையானவை: சைனீஸ் நூடுல்ஸ்  ஒரு பாக்கெட், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது), கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  தலா ஒரு சிறிய கப், இஞ்சி பேஸ்ட்  ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய்  - 2 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: நூடுல்ஸ் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு எண்ணெய் விட்டு நூடுல்ஸை போட்டு ஐந்து நிமிடத்தில் இறக்கி தண்ணீரை வடிகட்டவும். மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி... பச்சைப் பட்டாணி, கோஸ் துருவல், உப்பு, வெங்காயத்தாள், கேரட் துருவல், இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு வேகவிடவும். காய்கள் வெந்ததும்,  வடிகட்டி வைத்திருக்கும் நூடுல்ஸை போட்டு நன்கு கிளறி, நறுக்கிய கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கவும்.

பார்லி உப்புமா
தேவையானவை: பார்லி - 100 கிராம், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்  தலா ஒன்று, தோல் சீவி, பொடியாக நறுக்கிய இஞ்சி  சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள்  சிறிதளவு, எலுமிச்சைச் சாறு  ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: பார்லியை குழையாமல் வேகவைத்து தண்ணீரை வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி, வேகவைத்த பார்லி சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எலுமிச்சைச் சாறும் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ரங்கோலி பணியாரம்
தேவையானவை: இட்லி அரிசி -  200 கிராம், வெந்தயம், உளுத்தம்பருப்பு  தலா ஒரு டேபிள்ஸ்பூன், புதினா  ஒரு கைப்பிடி அளவு, கேரட், சிறிய பீட்ரூட்  தலா ஒன்று, எண்ணெய் - 100 மில்லி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: அரிசி, வெந்தயம், உளுந்து மூன்றையும் ஒன்றாக மூன்று மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவை நான்கு பாகங்களாக பிரித்துக்கொள்ளவும். புதினாவை அரைத்து ஒரு பங்கு மாவுடன் கலக்கவும். கேரட்டை நறுக்கி மிக்ஸியில் நைஸாக அரைத்து ஒரு பங்கு மாவுடன் கலக்கவும். பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி மிக்ஸியில் நைஸாக அரைத்து ஒரு பங்கு மாவுடன் கலக்கவும். ஒரு பங்கு மாவை அப்படியே தனியாக வைக்கவும். பணியாரக்கல்லில் எண்ணெய் விட்டு ஒவ்வொரு மாவையும் தனித்தனியாக கல்லில் ஊற்றி, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, வெள்ளை இப்படி நான்கு கலர்களில் மிகவும் ருசியாகவும், பார்க்க அழகாகவும் இருக்கும் ரங்கோலிப் பணியாரம் தயார்.

சீஸ் பர்கர்
தேவையானவை: பன் - 10, சீஸ்  ஒரு பாக்கெட், கேரட், குடமிளகாய்  தலா ஒன்று, கோஸ் - 100 கிராம், கொத்தமல்லித்தழை  சிறிதளவு, வெண்ணெய், நெய்  தலா - 2 டீஸ்பூன், மிளகுத்தூள்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாய், கேரட், கோஸ் ஆகியவற்றை மெல்லியதாக, நீளவாட்டில் நறுக்கவும். கடாயில் வெண்ணெய் சேர்த்து, காய்கறி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும். சீஸை நீளவாக்கில் ’கட்’ செய்து கொள்ளவும். பன்னை குறுக்கு வாட்டில் பாதியாக ’கட்’ செய்து, வதக்கிய காய்கறி கலவை, சீஸ் ஆகியவற்றை உள்ளே வைத்து மூடவும். தவாவில் நெய் விட்டு, மூடிய பன்னை வைத்து மிதமான தீயில் வாட்டி எடுக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவவும்.
குறிப்பு: வறுத்த எள்ளையும் மேலே தூவலாம்.

பழப்புட்டு
தேவையானவை: புட்டு மாவு - 200 கிராம், நேந்திரன் வாழைப்பழம்  ஒன்று, பலாச்சுளை - 10, தேங்காய்த் துருவல்  ஒரு கப், ஏலக்காய்த்தூள்  சிறிதளவு, நெய் -  50 மில்லி, உலர் திராட்சை  சிறிதளவு.
செய்முறை: வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கி புட்டு மாவுடன் சேர்க்கவும். இதனுடன் உலர் திராட்சை, தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, நெய் சேர்த்துப் பிசிறி, புட்டுக் குழலில் அடைத்து, ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: காய்கறிகளைப் பயன்படுத்தியும் இதே முறையில் புட்டு தயாரிக்கலாம்.

கீரை  உருளைக்கிழங்கு சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், பொடியாக நறுக்கிய முள்ளங்கிக் கீரை   ஒரு கைப்பிடி அளவு, வேகவைத்த உருளைக்கிழங்கு - 4,  எண்ணெய், வெண்ணெய்  தலா - 2 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கிக் கீரையை எண்ணெயில் வதக்கவும். கோதுமை மாவுடன் வெண்ணெய், உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, கீரை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். இந்த உருண்டைகளை சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து வாட்டி எடுக்கவும்.
குறிப்பு: வெந்தயக் கீரை, முருங்கைக்கீரை சேர்த்தும் தயாரிக்கலாம். உருளைக்கிழங்குக்கு பதிலாக சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ஆல்வல்லி கிழங்கிலும் தயாரிக்கலாம்.

முளைப்பயறு ரைஸ்
தேவையானவை:அரிசி - 250 கிராம், முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய பச்சைப்பயறு, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய காராமணி  தலா ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, பூண்டுப் பல் - 10, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து, ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து, இரண்டு விசில் வந்ததும் இறக்கவும்.  எல்லா பயறு வகைகளையும் ஒன்றுசேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, தண்ணீர்விட்டு குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பயறு வகைகளை தண்ணீர் வடித்துவிட்டு, சாதத்துடன் கலக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், தோல் உரித்த பூண்டுப் பற்களை எண்ணெய் விட்டு வதக்கி, பயறு  சாத கலவையைப் போட்டு நன்கு கலந்து, கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: புரோட்டீன் சத்து அதிகம் உள்ளது... இந்த ரைஸில்!

கேப்ஸிகம் ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி -  200 கிராம், குடமிளகாய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய்  தலா ஒன்று, பொடியாக நறுக்கிய இஞ்சி,  நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, கடுகு, பொட்டுக்கடலை (வறுகடலை)  தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.  
செய்முறை: குடமிளகாய், பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பாசுமதி அரிசியுடன் ஒரு பங்குக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொடுக்கடலை, இஞ்சி, பச்சை மிளகாய் தாளிக்கவும். இதனுடன் குடமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கி, சாதத்துடன் கலந்து... மேலே கொத்தமல்லித்தழை தூவவும்.

மாங்காய் சாதம்
தேவையானவை: அரிசி -  250 கிராம், மாங்காய்த் துருவல்  ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி  சிறிதளவு, பச்சை மிளகாய்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), கடுகு, பொட்டுக்கடலை, எண்ணெய்  தலா ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் களைந்து ஒரு பங்கு அரிசிக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு, குக்கரில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து... இஞ்சி, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை சேர்த்துக் கிளறவும். இதனுடன் மாங்காய்த் துருவல், உப்பு சேர்த்து வதக்கி, சாதத்துடன் கலக்கவும்.
குறிப்பு: சாதம் குழையாமல் இருக்க வேண்டும். பச்சைப் பட்டாணி, கேரட், தேங்காய்ப்பால் சேர்த்தும் இதைச் செய்யலாம்.

வெரைட்டி தானிய பொடி
தேவையானவை: துவரம்பருப்பு  ஒரு கப், எள் -  4 டீஸ்பூன், மல்லி  (தனியா) - 2 டீஸ்பூன், ஓமம், சீரகம்  தலா ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், மிளகு - 10, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் துவரம்பருப்பு, எள், தனியா, ஓமம், உளுத்தம்பருப்பு, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடிக்கவும். சாதத்துடன் இந்தப் பொடியைக் கலந்து, நெய் விட்டு பிசைந்து சாப்பிட... ருசியோ ருசிதான்!

மல்டி தானிய சுண்டல்
தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை, முளைகட்டிய பச்சைப்பயறு, முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய காராமணி  தலா ஒரு சிறிய கப், இஞ்சி பேஸ்ட், மிளகுத்தூள்  தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல்  - 4 டீஸ்பூன், பெருங்காயத்தூள்  சிறிதளவு, எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய பயறு வகைகளை ஒன்றுசேர்த்து, தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கி, நீரை வடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வேகவைத்த பயறு வகைகளை சேர்த்து, இஞ்சி பேஸ்ட், மிளகுத்தூள், தேங்காய்த் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: புரோட்டீன் சத்து அடங்கிய இந்த சுண்டல், நீண்ட நேரம் பசி தாங்கும்.

கேழ்வரகு இனிப்பு தோசை
தேவையானவை: கேழ்வரகு மாவு - 100 கிராம், பொடித்த வெல்லம்  - 100 கிராம், ஏலக்காய்த்தூள்  சிறிதளவு, அரிசி மாவு - 4 டீஸ்பூன், நெய் - 50 மில்லி.
செய்முறை: வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, கேழ்வரகு மாவுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். இதனுடன் அரிசி மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்துகொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை தோசைகளாக வார்க்கவும். சிறிதளவு நெய் தடவி, இருபுறமும்  வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், தேங்காய்த் துருவல் சேர்க்கலாம்.

மினி இட்லி ஃப்ரை
தேவையானவை:  இட்லி அரிசி - 250 கிராம், உளுத்தம்பருப்பு - 100 கிராம், இட்லி மிளகாய்ப்பொடி   ஒரு சிறிய கப், எண்ணெய் - 100 மில்லி, உப்பு  தேவையான அளவு
செய்முறை:அரிசி, உளுந்தை தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைத்து, தனித்தனியாக மாவு அரைத்து, உப்பு சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். ஒரு ஸ்பூனால் மாவை எடுத்து, மினி இட்லித் தட்டில் ஊற்றி இட்லி குக்கரில் வைத்து வேகவிட்டு எடுக்கவும். இட்லி மிளகாய்ப்பொடியை எண்ணெய் விட்டு குழைத்து, இட்லியின் இருபுறமும் தடவவும். தவாவில் எண்ணெய் விட்டு, நான்கு ஐந்து இட்லிகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: இட்லியின் மேலே துருவிய கேரட் தூவி அலங்கரித்து கொடுக்கலாம்.

ஓமம்  புதினா சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், பொடியாக நறுக்கிய புதினா  ஒரு கைப்பிடி அளவு, ஓமம்  ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 2 டீஸ்பூன், எண்ணெய்  ஒரு டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: புதினாவை எண்ணெய் விட்டு வதக்கவும். கோதுமை மாவுடன் வெண்ணெய், ஓமம், புதினா, உப்பு சேர்த்து,  சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். மாவை சப்பாத்திகளாக திரட்டி, தோசைக் கல்லில் போட்டு வாட்டி எடுக்கவும். புதினா வாசனையும் ஓமத்தின் சுவையும் சேர்ந்து புதுவித ருசியுடன் இருக்கும் இந்த சப்பாத்தி.

கோதுமை ரவை கிச்சடி
தேவையானவை: கோதுமை ரவை - 250 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பீன்ஸ், கேரட், குடமிளகாய்  தலா ஒரு சிறிய கப்,  பச்சை மிளகாய் - 2 (நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, எலுமிச்சம் பழம்  பாதி மூடி, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள்   சிறிதளவு, எண்ணெய் -  4 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.  
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து... பச்சை மிளகாய், குடமிளகாய், வெங்காயம், கேரட், பீன்ஸ் போட்டு வதக்கி, தேவையான உப்பு சேர்த்து, ஒரு பங்கு கோதுமை ரவைக்கு மூன்று பங்கு என்ற அளவில் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும். கொதித்ததும் கோதுமை ரவை தூவிக் கிளறி, வெந்தவுடன் எலுமிச்சம் பழம் பிழிந்து, கொத்த மல்லித்தழை சேர்த்துக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: பச்சைப் பட்டாணி, கோஸ் சேர்த்தும் செய்யலாம்.

வெஜிடபிள் ரோல்
தேவையானவை: மைதா மாவு  - 100 கிராம், கேரட் துருவல், கோஸ் துருவல்  தலா ஒரு சிறிய கப், உருளைக்கிழங்கு  ஒன்று (வேகவைக்கவும்), இஞ்சி பேஸ்ட்  ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய புதினா சிறிதளவு, வெண்ணெய்  ஒரு டீஸ்பூன், எண்ணெய் -  250 மில்லி, உப்பு  தேவையான அளவு.  
செய்முறை: மைதா மாவுடன் வெண்ணெய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கேரட் துருவல், இஞ்சி பேஸ்ட், கோஸ் துருவல், நறுக்கிய புதினா, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்றாக வதக்கி, மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாகப் பிசைந்து,  உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
பிசைந்த மைதா மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சிறு அப்பளம் போல இட்டு உள்ளே காய்கறி உருண்டைகளை வைத்து சுருட்டிக் கொண்டு இரு முனைகளையும் மாவைக் கொண்டு மூடவும். இந்த ரோல்களை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
மேல்பகுதி கரகரப்பாகவும், உள்ளே மசாலா ருசியுடனும் சூப்பர் சுவையில் இருக்கும் இந்த ரோல்.

வெஜிடபிள் கட்லெட்
தேவையானவை: உருளைக் கிழங்கு  நான்கு, ரஸ்க் - 10 (மிக்ஸியில் பொடிக்கவும்), கேரட் துருவல், பொடியாக நறுக்கிய பீன்ஸ், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம்   தலா ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய இஞ்சி -  2 டீஸ்பூன், பச்சை மிளகாய்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய் -  250 மில்லி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, நன்றாக மசித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கேரட், பீன்ஸ், குடமிளகாய், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கி... இதனை மசித்த உருளைக்கிழங்குடன் சேர்த்து, ரஸ்க் தூளும் சேர்த்துப் பிசைந்து, கட்லெட் வடிவத்தில் தட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, கட்லெட்களை போட்டு பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: சாஸ், கொத்தமல்லித்தழை சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.

வெஜிடபிள்  மிளகு அவல் உப்புமா
தேவையானவை: கெட்டி அவல் -  200 கிராம், பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாய், வெங்காயம்  சிறிதளவு, மிளகு, சீரகம்  தலா - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள்  ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள்  சிறிதளவு, பொட்டுக்கடலை  இரண்டு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு  தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய்  4 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். அவலை நீரில் களைந்து எடுத்து... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துப் பிசிறி, 10 நிமிடம் அப்படியே வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடித்த மிளகு  சீரகம், பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பிசிறி வைத்த அவலையும் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கேரட், குடமிளகாயை வதக்கி இதனுடன் சேர்த்துக் கலக்கவும்.

சுரைக்காய் பருப்பு வடை
தேவையானவை: கடலைப் பருப்பு - 100 கிராம், துவரம்பருப்பு -  50 கிராம், உளுத்தம்பருப்பு  ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் -  2, சுரைக்காய் துருவல்  ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை  சிறிதளவு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள்  சிறிதளவு, எண்ணெய் -  250 மில்லி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை:கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாக ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்க வும். இதனுடன் மஞ்சள்தூள், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், சுரைக்காய் துருவல் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் திருப்பி, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: சட்னி, சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன்

பனீர் சாண்ட்விச்
தேவையானவை: பிரெட்  ஒரு பாக்கெட், கேரட் துருவல், பொடியாக நறுக்கிய குடமிளகாய்   தலா ஒரு சிறிய கப், பனீர் துருவல் - 2 சிறிய கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, வெண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு  தேவையான அளவு, எண்ணெய்  ஒரு டீஸ்பூன்.
செய்முறை:செய்முறை:வாணலியில் எண்ணெய் விட்டு கேரட் துருவல், நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். பிரெட் ஸ்லைஸின் ஓரங்களை 'கட்’ செய்துவிட்டு, அதில் வெண்ணெய் தடவவும். வதக்கிய காய்கறி கலவையுடன்  பனீர் துருவல், கொத்தமல்லித்தழையை சேர்த்துக் கலக்கவும். அதில் கொஞ்சம் எடுத்து பிரெட் ஸ்லைஸின் மேலே பரவலாக போட்டு, மேலே ஒரு பிரெட் ஸ்லைஸ் வைத்து மூடி, டோஸ்டரில் வைத்து எடுக்கவும்.
குறிப்பு: டோஸ்டர் இல்லாதவர்கள் தவாவிலும் செய்யலாம். இதற்கு, சாஸ் சிறந்த காம்பினேஷன்.

ஆனியன் ஊத்தப்பம்
தேவையானவை: இட்லி அரிசி - 200 கிராம், உளுத்தம்பருப்பு - 50 கிராம், பச்சை மிளகாய்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி  சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம்   ஒரு கப், எண்ணெய் - 100 மில்லி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைத்து, தனித்தனியாக மிக்ஸியில் அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயத்தை வதக்கி, மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை கரண்டியில் எடுத்து சற்றே மெலிதான ஊத்தப்பமாக வார்க்கவும். இருபுறமும் சிறிது எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

ரவா உப்புமா
தேவையானவை: ரவை - 200 கிராம், பச்சை மிளகாய்  - 2 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி  ஒரு டீஸ்பூன்,  பச்சைப் பட்டாணி  சிறிதளவு, கடுகு, பொட்டுக்கடலை  தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச்  சாறு -  2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை:வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பொட்டுக் கடலை தாளித்து, பச்சைப் பட்டாணி, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு சேர்த்து வதக்கவும்.  வதங்கியவுடன் அதில் ரவையை சேர்த்து வறுக்கவும். வாணலியில் ஒரு பங்கு ரவைக்கு இரு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, ரவை கலவையை சேர்த்துக் கிளறி இறக்கவும். கொஞ்சம் ஆறியவுடன் எலுமிச்சைச் சாறு, நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
குறிப்பு: சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன். வறுத்த முந்திரியும் சேர்க்கலாம்.

தேங்காய்ப்பால் ரைஸ்
தேவையானவை: அரிசி - 250 கிராம், தேங்காய்ப்பால் -  100 மில்லி, கேரட் துருவல், பச்சைப் பட்டாணி (தோல் உரித்தது)  ஒரு சிறிய கப், பச்சை மிளகாய்  ஒன்று, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, சீரகம்  ஒரு டீஸ்பூன், நெய் -  50 மில்லி, உப்பு  தேவையான அளவு
செய்முறை:ஒரு பங்கு அரிசிக்கு, தேங்காய்ப்பால்   தண்ணீர் சேர்த்து இரு பங்கு என்ற அளவில் எடுத்து... அரிசியுடன் சேர்த்து, குக்கரில் வைத்து இரண்டு விசில் வந்தவுடன் இறக்கவும். வாணலியில் நெய்விட்டு கேரட் துருவல், பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து வதக்கி, சாதத்துடன் சேர்த்து... வறுத்த முந்திரிப்பருப்பு சேர்த்துக் கலக்கவும்.

அடை பீட்ஸா
தேவையானவை: இட்லி அரிசி -  200 கிராம், கடலைப்பருப்பு  ஒரு கப், துவரம்பருப்பு  அரை கப், உளுத்தம்பருப்பு -  2 டேபிள்ஸ்பூன், சீஸ்  ஆறு ஸ்லைஸ், குடமிளகாய், கேரட்  தலா ஒன்று, காய்ந்த மிளகாய் -  4, எண்ணெய் -  100 மில்லி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை:அரிசியைத் தனியாக 3 மணி நேரம் ஊறவைக்கவும் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பை ஒன்றாகச் சேர்த்து 2 மணி நேரம்  ஊறவைக்கவும். அரிசியைத் தனியாக அரைக்கவும். பருப்புகளுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப் பாக அரைக்கவும். மாவுகளை ஒன்றுசேர்த்து, தேவையான உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளவும். கேரட், குடமிளகாயை நீளவாக்கில் நறுக்கவும். சீஸை ரிப்பன் போல 'கட்’ பண்ணிக் கொள்ளவும்.தோசைக்கல்லில் மாவை அடைகள் போல் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, இருபுறமும் எண்ணெய் விட்டு வேகவிட்டு எடுக்கவும். கேரட், குடமிளகாயை சிறிது எண்ணெய்விட்டு வதக்கி அடையின் மேல்புறம் வரிசையாக வைத்து, ரிப்பன் போல 'கட்’ செய்த சீஸையும் வைத்து அழுத்திவிடவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், வெங்காயத்தாளை வதக்கி மேலே பரவலாகத் தூவலாம்.

உருளைக்கிழங்கு போண்டா
தேவையானவை: உருளைக்கிழங்கு - 3, கடலை மாவு  ஒரு கப், அரிசி மாவு  அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி  ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய வெங்காயம்  ஒரு கப், மிளகாய்த்தூள்   ஒரு டீஸ்பூன், எலுமிச்சம்பழம்  ஒரு மூடி, எண்ணெய் - 250 மில்லி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி... தேவையான உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, வேகவைத்த உருளைக்கிழங்குடன் சேர்த்து, இதில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, நன்றாக பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
அரிசி மாவு, கடலை மாவுடன் சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து. உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்துப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். சட்னியுடன் பரிமாறவும்.

சாபுதானா உப்புமா
தேவையானவை: ஜவ்வரிசி -  200 கிராம், பொடியாக நறுக்கிய கேரட்  ஒரு சிறிய கப், பொடியாக நறுக்கிய குடமிளகாய், ஸ்பிரிங் ஆனியன்  சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை - 50 கிராம் (பொடித்துக்கொள்ளவும்), கடுகு, பொட்டுக்கடலை,  பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி   தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, எலுமிச்சம் பழம்  ஒரு மூடி, எண்ணெய், உப்பு  தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை தண்ணீர் தெளித்து, உப்பு சேர்த்துப் பிசிறி வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கேரட், ஸ்பிரிங் ஆனியன், குடமிளகாயை வதக்கி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்துக் கிளறி, வதக்கிய காய்களை சேர்த்து, ஜவ்வரிசியையும் சேர்த்து கிளறவும். இதனுடன் பொடித்த வேர்க்கடலை சேர்த்து, எலுமிச்சம் பழம் பிழிந்து, நறுக்கிய கொத்துமல்லித்தழை தூவிக் கிளறி... ஜவ்வரிசி வெந்தவுடன் இறக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால், வறுத்த முந்திரி, பிஸ்தா சேர்க்கலாம்.

சேமியா பக்கோடா
தேவையானவை: சேமியா -  100 கிராம், பெரிய வெங்காயம்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய இஞ்சி -  2 டீஸ்பூன், பச்சை மிளகாய்  ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை  சிறிதளவு, வறுத்த வேர்க்கடலை -  3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 200 மில்லி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: சேமியாவுடன்  மற்ற அனைத்துப் பொருட்களையும் (எண்ணெய் நீங்கலாக) சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, சிறிது நேரம் ஊறவிட்டு பிசையவும். கடாயில் எண் ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, சேமியா கலவையை பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.

கேரட் தோசை
தேவையானவை: இட்லி அரிசி -  200 கிராம், உளுத்தம்பருப்பு -  50 கிராம், கேரட்  - 2, எண்ணெய் - 100 மில்லி, உப்பு  தேவையான அளவு.
செய்முறை: அரிசி, உளுந்தை தனித்தனியாக 3 மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். கேரட்டை மிக்ஸியில் அரைத்து மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
குறிப்பு: சட்னி, சாம்பார் இதற்கு சிறந்த காம்பினேஷன்.
தொகுப்பு: பத்மினி படங்கள்: எம்.உசேன்

ஆச்சி கிச்சன் ராணி
ஸ்டஃப்டு பிரிஞ்சால்
தேவையானவை: சிறிய கத்திரிக்காய்  கால் கிலோ, ஆச்சி இட்லி மிளகாய் பொடி -  50 கிராம், ஆச்சி தனி மிளகாய் தூள்  தேவையான அளவு, நல்லெண்ணெய் - 50 கிராம், கடலை மாவு -  50 கிராம், உப்பு  தேவைக்கேற்ப, சமையல் எண்ணெய் - 100 கிராம்.
செய்முறை: கத்திரிக்காயை கழுவி காம்பை கொஞ்சம் விட்டு நான்காக அல்லது எட்டாகப் பிளந்துகொள்ளவும். ஆச்சி இட்லி மிளகாய் பொடியில் கொஞ்சம் உப்பு  சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு குழைக்கவும். இதை ஒவ்வொரு கத்தரிக்காயினுள்ளும் நன்றாக அடைக்கவும். கடலை மாவில் தேவையான அளவு ஆச்சி தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்துப் பேஸ்ட்டாகக் குழைக்கவும். அதை கத்தரிக்காயின் பிளந்த பாகங்கள் மூடும்படி தடவிவிடவும். எல்லா கத்திரிக்காய்களையும் இந்த முறையில் தயார் செய்துகொள்ளவும். சற்றே அகலமான வாணலியை அடுப்பில் வைத்து சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் ஸ்டஃப் செய்யப்பட்ட கத்திரிக்காய்களை பரவலாக போடவும். நான்கு நிமிடத்தில் திருப்பிப் போடவும். எல்லாபுறமும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிடவும் (அடுப்பை 'சிம்’மில் வைக்கவும்). மிகமிக ருசியான இந்தக் கத்திரிக்காய் எந்தவிதமான சாதத்துடனும் ஜோடி சேரும். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள்.
குறிப்பு: பூண்டு வாசனையை விரும்புபவர்கள், நாலு பல் பூண்டையும் நசுக்கி, இட்லி மிளகாய் பொடியுடன் கலந்துகொள்ளலாம்.
சாமளி, திருச்சி
படம்: ஆ.முத்துக்குமார்