22/04/2020
பள்ளிவாசலில் செய்வது போல் நோன்பு கஞ்சி வீட்டிலேயே செய்வது எப்படி?
புனித ரமலான் மாதம் வந்துவிட்டது ரமலான் மாதத்தில் அனைத்து மதத்தினரும் விரும்பி உண்ணக் கூடியது நோன்புக் கஞ்சியாகும்
ஆனால் இந்த வருடம் கொரேனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு உத்தரவு உள்ளதால் பள்ளிவாசல்களில் பொதுவாக வைத்து அனைவருக்கும் வழங்கும் சூழ்நிலை இல்லாததால், அவரவர் வீடுகளில் செய்ய வேண்டி உள்ளது. சிலருக்கு நேன்பு கஞ்சி எப்படி வைப்பது என தெரியாத எதார்த்த நிலையும் உள்ளது நோன்பு காஞ்சி வைக்கும் முறைகளில் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு முறைகள் மற்றும் அதில் சேர்க்கப்படும் பொருட்கள் மாறுபட்டு இருக்கும் ஆனால் அடிப்படையான கஞ்சி வைக்கும் முறை இது
நாள் முழுவதும் நோன்பு நோற்று வாடிப் போய் இருப்பவர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது இந்த கஞ்சி. அத்தகைய நோன்புக் கஞ்சியை தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி = 500 கிராம்
பூண்டு = 1 முழு பூண்டு
கடலைப்பருப்பு = 50 கிராம்
வெந்தயம் = 2 தேக்கரண்டி
இஞ்சி = இருவிரல் அளவு
சீரகப்பொடி = 2-3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன்
மிளகாய்பொடி = அரை டீஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பெரிய வெங்காயம் = 2
கேரட் = பாதி
தக்காளி = 2
சமையல் எண்ணை = 50 மில்லி
பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது)
புதினா+மல்லி = தலா ஒரு கொத்து
எலுமிச்சம் பழம் = 1
தேங்காய்ப் பால் = 300 மில்லி
அசைவமாக இருந்தால் மட்டன் கைமா கறி = 100 கிராம்
சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:
சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி ஊற வைத்துது கொள்ளவும்
தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி நீரில் அலசி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் வைத்து கொள்ளவும்.
இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
செய்முறை:
கஞ்சி செய்யும் சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.
பொன்நிறத்தில் நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.
அசைவ கஞ்சியாக இருந்தால் கறியை சேர்த்து வதக்கவும்.
நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்
வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியினை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.
கொதி வந்த பிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.
தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிபிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.
அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும். சுவையான நோன்புக் கஞ்சி தயார்.
இது போன்று செய்யும் போது சில நேரம் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப அசைவமாகவும் செய்து கொள்ளலாம்
நல்ல சூடான சுவையான நோன்பு கஞ்சி தயார்.......