Sunday, August 23, 2015

Tab.....B4 u BuY



டேப்லட் இன்றைய நாளில் அனைவரும் பயன்படுத்தும் சிறிய கணினி சாதனமாக உள்ளது. எங்கும் எந்நேரமும் அலுவலக மற்றும் கல்வி சம்பந்தமான விஷயங்களை பணிகளை செய்ய டேப்லட் உதவி புரிகிறது.

டேப்லட் தற்போது அவரவர் பயன்படுத்தும் நோக்கில் வகைப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. ஆயினும் டேப்லட் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன… அவை…எத்தகைய பணிக்கு ஏற்ற டேப்லட்

அலுவலக பணிக்கான, அலலுவலகம் சார்ந்த, தொழில்முறை சார்ந்த தேவைக்கு எனும்போது முழு அளவு அதாவது 8.9 இன்ச் அல்லது அதைவிட பெரிய திரை கொண்ட டேப்லட் பயன்படும். இதில் கீ போர்டு வெளிப்புற இணைப்பாக இருப்பது அவசியம். ஒவ்வொரு டேப்லட் தயாரிப்பு நிறுவனமும் அலுவலக பணி சார்ந்த இணைப்புகளை கொண்டவாறு டேப்லட்டை உருவாக்கி தருகின்றன. உதாரணமாக, விண்டோஸ் 8.1, டேப்லட்- மைக்ரோ சாப்ட் ஆபீஸ் உடன் ஐ பேட் ஏர்-2வில் ஐ வொர்க் சூட் போன்றவையுடன் வருகின்றன.

விளையாட்டிற்கு ஏற்ற டேப்லட்:

ஆப்பிள் ஐபேடு விளையாட சிறந்த டேப்லட். அதுபோல் ஆண்ட்ராய்டு டேப்லட்டில் உள்ள ஸ்நாப்டிராகன் 805 மற்றும் டெக்ரா ரி1சிறிஹி சிறந்த கிராபிக்ஸ்க்கு உதவி புரிகிறது. டை- ஹார்ட் விளையாட விரும்புபவர்களுக்கு நிவிடியா ஷீல்டு டேப்லட் நல்ல பலனை தருகிறது.

குழந்தைகளுக்கு ஏற்ற பாதுகாப்பு அம்சத்துடன் நிறைய குடும்ப பகிர்வுகளை கொண்ட டேப்லட் சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் அமேசான் பையர் டேப்லட் நன்மை பயக்கும். அமேசான் பையர் 6 மற்றும் 7 பிஞி ரிவீபீs எடிஷன் அதிக வாரண்டி மற்றும் குழந்தைகளுக்கேற்ற பல சிறப்பம்சம் கொண்டது.டேப்லட் காட்சி திரை அளவுகள்:

நமக்கு எந்த அளவு காட்சி திரை வேண்டும் என்பதை தீர்மானித்திட வேண்டும். 7 இன்ச் என்பது நமது கையில் அடக்கிவிட கூடிய அளவு. 8 இன்ச் அளவு என்பிதல் அதிக ஆப்ஸ், கேம்ஸ் மற்றும் படங்கள் கொண்டதாக உள்ளது. 10 இன்ச் என்பது பெரிய அளவாக உள்ளது. எடை 1 முதல் 1.6 பவுண்ட் என்றவாறு இருப்பது டேப்லட். எடை குறைவான டேப்லட் எடுத்து செல்ல வசதியாக இருக்கும்.

இயங்கு தளங்களில் அணி வரிசை: ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் 8, விண்டோஸ் 8.1 என்ற இயங்கு தளங்களை கொண்டவாறு டேப்லட் வருகிறது. இதில் நமக்கு தேவையான இயங்குதளத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இயங்கு தளங்களை கொண்டே சில டேப்லட்களின் விலையும் நிர்ணயிக்கப்படுவதுடன், புதிய தொழில்நுட்ப அம்சங்களும் நிறைய இருக்கும்.எந்த வகையான ஆப்ஸ்கள் வேண்டும்:

ஆப்ஸ் ஸ்டோர்களை தேர்ந்தெடுப்பது நமது கையில் ஆப்பிள் ஆப்ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர், அமேசான் ஆன் டிமாண்ட் இவற்றில் எது நமது ஆப்ஸ் தேவைகளை பூர்த்தி செய்யுமோ அதனை கொண்ட டேப்லட்டை தேர்ந்தெடுங்கள்.

ரேம் வசதி:

டேப்லட்கள் 2ஜிபி ரேம் கொண்டு இருப்பது சிறந்தது. சில டேப்லட் 3 ஜிபி ரேம்-உடன் வருகின்றன. டேப்லட்களை தேர்ந்தெடுக்குபோது மேற்கூறியவைகளை கவனித்து வாங்கவும்.

Bachelor Life





20 வயதில் சர்க்கரை நோய், 40 வயதில் மூட்டு வலி, 50 வயதில் மாரடைப்பு என சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை மருத்துவத்துக்கே செலவிடும் நிலை வந்துவிட்டது. சிறு வயதில் இருந்தே அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள் பற்றிய சரியான புரிதல் இன்மையே பல்வேறு பிரச்னைகளுக்கும் அடித்தளம். கல்லூரி முடித்து, வேலைக்குச் சேர்ந்த, திருமணம் ஆவதற்கு முன்பான இடைப்பட்ட காலம் ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமானது. கல்லூரிப் படிப்பு முடியும் வரை பெற்றோரின் கண்டிப்பில் வளர்ந்தவர்களுக்கு, வேலைக்காகப் பெற்றோரைப் பிரியும்போது, இயல்பாகவே ஒரு சுதந்திரமான உணர்வு இருக்கும். புதிய ஊர், புதிய சூழல், புதிய மரியாதை, புதிய வேலை, கையில் சுயமாக உழைத்த பணம், அந்தப் பணத்தைச் சுதந்திரமாகச் செலவிடும் வாய்ப்பு என சகலமும் மாறும்போது மனதளவில் குதூகலமாக இருக்கும். காலையில், ‘நேரமாச்சு எந்திரி’ என எழுப்புவதற்கோ, ‘பல் துலக்கு, குளித்துவிட்டு வெளியே செல், டிபன் சாப்பிட்டுட்டுப் போ’ எனச் சொல்வதற்கோ யாரும் இல்லாததால், இஷ்டம் போல வாழத் தோன்றும். இதனால், சுதந்திரம் என நினைத்துக்கொண்டு, நேரம் கெட்ட நேரத்தில் தூங்கி எழுந்திருப்பது, உணவு உட்கொள்வது என நாம் செய்யும் வாழ்க்கைமுறைத் தவறுகள் எதிர்காலத்தில் சர்க்கரை நோய் தொடங்கி, மன அழுத்தம் வரை எல்லாவற்றுக்கும் மூலக் காரணமாக மாறிவிடுகிறது. பேச்சிலர் லைஃபில் செய்யும் இதுபோன்ற சிறுசிறு தவறுகளைத் திருத்திக்கொள்வதன் மூலம் எதிர்காலம் ஆரோக்கியமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும். இனி பேச்சிலர்களுக்கான ஹெல்த்தி லைஃப்ஸ்டைலுக்கு சில ஸ்பெஷல் டிப்ஸ்…

காலை உணவு அவசியம்!

நாள் முழுதும் ஓடுவதற்கான ஆற்றலைத் தருவது காலை உணவுதான். அதைத் தவிர்க்கக் கூடாது. 10 நிமிடங்களில் எளிமையாகத் தயாரிக்கக்கூடிய ஆரோக்கியமான டிஷ்கள் இங்கே…

10 மினிட்ஸ் டிஷ்

அறையில் எப்போதும் ஏதாவது பழங்கள், நட்ஸ், பால் போன்றவை இருக்கட்டும். காலையில் எந்தப் பழம் இருக்கிறதோ அதனைச் சிறிது நறுக்கி, ஒரு டம்ளர் பால் சேர்த்து, இனிப்புக்குக் கருப்பட்டி சேர்த்து, மிக்ஸியில் அரைத்தால், மில்க் ஷேக் ரெடி. புரதம், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான அனைத்துச் சத்துகளும் கிடைத்துவிடும்.

எளிதாகத் தயாரிக்கக்கூடியது கேழ்வரகுக் கஞ்சி. கேழ்வரகு மாவைத் தண்ணீரில் கரைத்து, ஐந்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து, பாலில் சிறிது கருப்பட்டி சேர்த்துக் கரைத்து, கேழ்வரகு மாவுடன் சேர்த்தால், கேழ்வரகுக் கஞ்சி ரெடி. இதில், கால்சியம் உள்ளிட்ட தாது உப்புக்களும் ஊட்டச்சத்துக்களும் நிறைவாக உள்ளன.

முட்டையை வேகவைத்தோ, ஆம்லேட்டாகவோ சாப்பிடலாம். கோதுமை பிரெட் வாங்கி வைத்துக்கொண்டால், பிரெட் ஆம்லெட் செய்து சாப்பிடலாம். முட்டையில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள் நிறைவாக உள்ளன.



பேச்சிலர் பிரச்னைகள்

ஆண்கள்

ஹார்மோன் சமநிலை இன்மை இருக்கும். பழக்கவழக்கங்கள் மாறும்போது திடீரென மூன்று மாதங்களிலேயே உடல் எடை அதிகரித்துவிடும்.

தண்ணீர் மாற்றம், ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக, முடி கொட்ட ஆரம்பிக்கும், சருமம் வெடித்துக் காணப்படும். கழுத்துக்குக் கீழே, தோல் கறுப்பாகி தடிமனாகும். தேகம் பொலிவு இழக்கும்.

அதிகம் சாப்பிட வேண்டும் எனும் உணர்வு (Binge Eating ) இருக்கும். சிலர் சரியாகச் சாப்பிட மாட்டார்கள்.

பெண்கள்

ஹார்மோன் சமச்சீரின்மை காரணமாக, மாதவிலக்கு சீராக இருக்காது. சோர்வாகவே இருப்பார்கள்.

ஹாஸ்டல் போன்ற இடங்களில் சாப்பிடும்போது, ஒரே வகையான உணவுகளைச் சாப்பிடுவதால், நுண்ணூட்டச்சத்துக்கள் கிடைக்காது.

உடல் எடை அதிகரித்து, பி.சி.ஓ.டி உள்ளிட்ட பிரச்னைகள் வரக்கூடும். இளம் வயதிலேயே முதிர்ந்த தோற்றம் ஏற்படும்.

ஹோட்டல் உணவு ஆபத்து!

சோம்பல் என்பது கிருமியைப் போல, ஆளையே அரித்துவிடும். சோம்பலை கைவிட்டால், ஹோட்டல் உணவைத் தவிர்க்க முடியும்.

அலுவலக வேலை முடிந்து சோர்வாக வந்து ஹோட்டல்களில், ரோட்டோரக் கடைகளில் வயிறு நிறையச் சாப்பிடுவது தவறு. இந்தப் பழக்கம்தான் நோய்களுக்கு முதல் காரணம். ஹோட்டல் உணவுகளில் நுண்ணூட்டச்சத்துக்கள் அறவே இருக்காது. உணவு அடிக்கடி சூடுபடுத்தப்படும். மாவுச்சத்து மட்டுமே இருக்கும். அளவுக்கு அதிகமான மாவுச்சத்து உடலில் கொழுப்பாக மாறிவிடும். இப்படிச் சாப்பிடுவதால், உடலில் இரவு நேரத்தில் வேகமாக நடக்கும் வளர்சிதை மாற்றம் மெதுவாகும். இதனால், நோய் எதிர்ப்புச் சக்தி குறையும்.

மது, சிகரெட் எந்த அளவுக்கு ஆபத்தோ, அதே அளவுக்கு ஹோட்டல் உணவுகளும் உடலுக்கு ஊறு விளைவிக்கும்.

மாற்று என்ன?

சமையல் என்பது ஒரு கலை என்றெல்லாம் ஒதுக்கிவைக்கத் தேவை இல்லை. நமக்கான உணவை நாம் தயாரிக்க வேண்டும். அது நமது பொறுப்பு. அறையில் மிக எளிமையாக உணவுகளைத் தயார் செய்ய முடியும்.

1. அறையில் என்னென்ன காய்கறிகள் இருக்கின்றனவோ அவற்றை எல்லாம் எடுத்து நறுக்கி, ஒரு கப் அரிசி சேர்த்து, குக்கரில் வேகவைத்தால் ஊட்டச்சத்து மிகுந்த வெஜிடபிள் சாதம் ரெடி.

2. காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாலட் செய்து சாப்பிடலாம்.

3. அவலைத் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து, கொஞ்சம் பால், வெல்லம் சேர்த்துச் சாப்பிட்டால், பசி அடங்கிவிடும்.

4. கேன் தண்ணீர், ஹோட்டல் தண்ணீர் இரண்டுமே நல்லவை அல்ல. எனவே, அறையில் தண்ணீரைச் சூடுபடுத்தி, ஆறவைத்துக் குடியுங்கள்.

ஆரோக்கியம் தரும் உடற்பயிற்சி!

கல்லூரி முடிக்கும் வரை தினமும் அதிக தூரம் நடந்து செல்வார்கள். பள்ளி, கல்லூரிகளில் விளையாடுவது, தெருவில், மைதானங்களில் விளையாடுவது போன்ற காரணங்களால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஆனால், வேலைக்குச் சேர்ந்தவுடன் நடப்பதே அரிதாகிவிடும். விளையாட்டும் இல்லை, உடற்பயிற்சியும் இல்லை எனும்போது, உடலில் செரிமானமாகி வெளியேறவேண்டிய கழிவுகள் மெதுவாக வெளியேறும். உடற்பயிற்சி செய்யாததால் உடலில் உள்ள உள்ளுறுப்புகள் ஓவர்டைம் வேலை பார்த்து, நம்மை நலமாக வைத்திருக்கும். ஆனால், எவ்வளவு காலம்தான் உள்ளுறுப்புகளால் ஓவர்டைம் வேலை பார்க்க முடியும்? அதிக நேரம் வேலை செய்வதால், அதன் செயல்திறன் படிப்படியாகக் குறைந்து, சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய் போன்றவை வந்துவிடும். இதைத் தவிர்க்க உடற்பயிற்சி அவசியம். உயரத்துக்கு ஏற்றவகையில் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதே போதுமானது.

அறையிலேயே எந்தக் கருவிகளின் உதவியும் இன்றி, சில எளிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

ஜஅலுவலகத்தில் உள்ள ஜிம்களைப் பயன்படுத்தலாம். அதிகப் பரப்பளவுள்ள நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், தங்களுடைய அலுவலகத்தை இரண்டு சுற்று சுற்றிவருவது உடலுக்கு நல்லது.

காலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்யலாம். அதிகாலையில் தூய்மையான காற்றைச் சுவாசித்தவாறு, மொட்டைமாடியில் யோகா செய்வது நல்லது.

21 – 28 வயதில்தான் உடல் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கும். இந்த வயதில் பெரிய உடல் நலப் பிரச்னைகள் இருக்காது என்பதால், உடற்பயிற்சி செய்து உடலை நல்ல டோனில் வைத்திருப்பது, அழகையும் ஆரோக்கியத்தையும் கூட்டும்.

செலவைத் திட்டமிடுங்கள்!

மாதத் தொடக்கத்தில் உணவுக்கு அதிகமாகச் செலவிடுவதையும், மாதக் கடைசியில் சாப்பிடாமல் இருப்பதையும் தவிர்க்க திட்டமிடல் அவசியம்.

1. மாத பட்ஜெட்டைத் தயார் செய்யுங்கள். அன்றாட உணவுக்கு என ஒரு தொகையை முன்பே எடுத்துவைத்து, தினமும் திட்டமிட்டபடி செலவிடவும்.

2. ஹோட்டலில் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்து, அறையிலேயே எளிமையாகச் சமைத்துச் சாப்பிடும்போது, உடலுக்குச் சத்து கிடைப்பதோடு, உணவுக்காகச் செலவிடும் தொகையில் 60 சதவிகிதம் குறையும்.

3. அவசர மருத்துவமனைச் செலவுகளுக்கும், திடீரென சொந்த ஊருக்குச் செல்ல நேரும் செலவுகளுக்கும் என, குறிப்பிட்ட தொகையைச் சேமித்துவைப்பது நல்லது.

சுத்தம்! சுத்தம்! சுத்தம்!

நல்லொழுக்கத்தின் முதல் படி, தங்கியிருக்கும் அறை முதல் டாய்லெட் வரை வசிப்பிடத்தைச் சுத்தமாக வைத்திருப்பதே.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பதின் பருவத்தை எட்டியவுடன், அவர்கள் துணிகளை அவர்களே துவைக்கக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

ஒரு வாரம் முழுவதும் துணிகளைச் சேர்த்து, ஒரே நாளில் துவைப்பது தவறு.

உள்ளாடைகளைத் தினமும் துவைத்துக் காயவைத்து, எடுத்துக்கொள்ள வேண்டும். தலையணை உறை, பெட்ஷீட் போன்றவற்றை வாரம் ஒருமுறை அவசியம் மாற்ற வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது தங்கியுள்ள அறையைச் சுத்தம் செய்ய வேண்டும்.

அறைக்குள் குப்பைத்தொட்டிகளை வைக்க வேண்டாம். அறைக்கு வெளியே வைக்க வேண்டும். குப்பைத்தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்வதும் அவசியம்.

சிகரெட், மது வேண்டாம்!

மது அருந்தினால்தான் கெத்து, மது அருந்துபவர்கள் வீரமானவர்கள், மாடர்னானவர்கள், சிகெரெட் பிடிப்பதுதான் ஸ்டைல், போதைவஸ்துகளைப் பயன்படுத்தினால்தான் மூளை நன்றாக வேலை செய்யும் போன்றவை அனைத்தும் கட்டுக்கதைகள்தான். போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவது, உடலுக்கு கேடு மட்டும் அல்ல. அது ஒரு ஒழுக்கக்கேடான செயல், சமூகத் தீங்கு என்பதை உணர வேண்டும்.

புகை மற்றும் மது இரண்டுமே மெல்லக் கொல்லும் ஸ்லோ பாய்சன். இவற்றை எடுத்துக்கொள்வது தற்கொலைக்குச் சமம். தீய பழக்கங்கள் எளிதில் தொற்றிக்கொள்ளும் வயது இது. இந்த வயதில் கவனமுடன் இருந்தால், பிறகு வாழ்க்கை முழுவதும் தீய பழக்கங்களை அண்டவிடாமல் தடுக்க முடியும்.

உங்கள் நண்பர்கள் சிகெரெட் பிடிக்க வற்புறுத்தினாலோ, மது அருந்தச் சொன்னாலோ, கண்டிப்பாக மறுத்துவிடுங்கள். ட்ரீட் என்ற பெயரில் மது, சிகெரெட் போன்றவற்றைப் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும்.

தனிமை தவிர்!

அலுவலக விடுமுறையன்று நாள் முழுவதும் உறங்குவதையோ, குளிக்காமல் உட்கார்ந்தே இருப்பதையோ தவிருங்கள். நீங்கள் தங்கி உள்ள ஊரைச் சுற்றி வலம் வாருங்கள். நண்பர்களோடு அரை நாளைச் செலவிடுங்கள். அரை நாள் ஓய்வெடுங்கள்.

தினமும் பெற்றோருடன் செல்போன் மூலம் பேசுவது அவசியம். பெற்றோருடன் அடிக்கடி பேசும்போது, தனிமை உணர்வு மறையும். அவர்கள் கண்காணிப்பில் இருப்பது உங்களை நல்வழிப்படுத்தும்.

உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வது அவசியம். கராத்தே, நீச்சல், ஜூம்பா டான்ஸ், ஏரோபிக்ஸ், சங்கீதம் எனப் புதிதாகக் கற்றுகொண்டே இருப்பது, உங்களை நீங்களே உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் எளிய வழி.

உடலில் மொத்தம்...



1 நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது.
2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம். சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்.
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை. இந்த மிகச்சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக்காட்டுகிறது. நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான்.
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது. அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட்களை வரை செயல்படுகிறது. தோல் தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண் மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம் பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம் செயல்படுகிறது. அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக அவனது உயிர் பிரிந்தாலும் அவனது உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை.
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில் குழந்தை பிறக்கிறது. 28 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும். பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது. இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள பெண்களுக்கு குழந்தை பிறப்பும் சற்று முன்னாடியே (குறை பிரசவம்) அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுறுங்கி இரவில் 8 மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம் பகலில் நமது வேலைகள் செய்யும்போ து தண்டு வடத்திலுள்ள குறுத்தெலும்பு வட்டுகள் ஈர்ப்பு விசை காரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத் தன்மையு ம் இல்லாமல் படுத்து உறங்குவதால் நமது உடம்பின் உயரம் கூடுகிறது.
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள் உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.
8. நம் உடலில் சுமார் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6 லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன.
9. நமது கைகளில் நடுவிரலில் நகம் வேகமாகவும், கட்டை விரலில்
நகம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல் பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம் மெதுவாக வளர்கிறது.
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல் தூங்குவதில்லை, சு மார் 40 முறை அந்தப் பக்கம், இந்தப்பக்கமாகப்புரண்டு படுக்கிறோம்.
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக் குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர் கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப்பருமன் 4 முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப்பாதங்களிலும் அமைந்திரு க்கிறது.
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித உறுப்பு கட்டை விரல்கள்.
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம் தாடை எ லும்பு.
14. மனிதமுளை 80 முதல் 85 சதவீதம் தண்ணீரைக் கொண்டதாகும்.
15. கல்லீரல் 500 விதமான இயக்கங்களை நிகழ்த்துகிறது.
16. நம் ஒடல் தசைளின் எண்ணிக்கை 630.
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம் பங்கு ரத்தம் உள்ளது.
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்து இரண்டு லட்சம் வரை உள்ளன. அவை 1 மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன.
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம் வயது வரை வளர்கிறது.
20. மனித முகங்களை மொத்தம் 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம்.
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ.
22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது.
23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள் ஊறு காய், உப்புக்கருவாடு, ஆல்கஹால் போன்றவற்றால் பாதிப்படைகிறது. கவனிக்கவும்.
24.பெண்களைவிட ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது. பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது.
25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்.
26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்.
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடை த்துவிடும்.
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள் கிடையாது.
29. மூளையின் மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது.
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்.
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை / கறுப்பு நிறங்களை தவிர வேறு நிறவேறுபாடே தெரியாது.
32. மனித உடலின் தோலின் எடை 27 கிலோ கிராம்.
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன.
34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை, முழங்காலை மாற்றலாம். ஆனால் மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம் ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன் தான் அவன் அந்நியன் தான்.
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பார்கள். அவற்றின் விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும் போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம் அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந்து கண்ணீர் சப்ளை ஆகிறது.
36. நமது உடலிலுள்ள செல்கள் பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது. ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள் இறந்து புது செல்கள் பிறக்கின்றன.
37. தலைமுடி 2 வருஷத்திலிருந்து 4 வருஷம் வரை வளர்கிறது. அதன்பின் 3 மாதம் வளராமல் இருந்து உதிர்கிறது. அப்புறமாக புது கேசம் வளர்கிறது.
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54 தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது.
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின் இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது. ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை, கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால் போதும், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்.
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத் தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்பு கிறது.
41. நமது உடலின் நீளமான எலும்பு தொடை எலும்பு தான்.
42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100 சொற்கள் என்றும் கணக்கிட ப்பட்டுள்ளது.
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளையே.
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம் கூடுதலாக வியர்க் கிறது.
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்.
46. உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி மட்டுமே.
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும் உட்கொள்கிறோம்.
48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
49. நம்முடைய தலை ஒரே எலும்பால் உருவானது அல்ல, 22 எலும்புகளில் உருவானதாகும்.
50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள் உள்ளதாகவும், பெண் களின் முடியை விட ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என்றும் அறியப்படுகிறது.
51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில் தூங்கி விடுகின்றான்.
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டிமீட்டர்.
53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன் முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக இவ்வளவு வார்த்தை களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள் உள்ளன.
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம் வளர்கிறது.
56. நாள் ஒன்றுக்கு நீங்கள் 23,040 தடவை சுவாசிக்கிறீர்கள்.
57. மனிதனின் உடலிலுள்ள குரோ மோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)
58. நாம் பேசக்கூடிய வார்த்தைக்கு 72 தசைகள் வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால் சாதனைகளை நிகழ்த்தலாம்.
59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும் இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது. இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது.
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும் வளரும்.
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும்.
64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர் எச்சிலை ஊறச்செய்கிறான். 1.14லிட்டர் வியர்வை வெளியிடுகிறான்.
65. சிந்தனையின் வேகம் அல்லது ஒரு யோசனையின் தூரம் என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150 மைல்களாகும்.
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண் ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது.
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்.
68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30 கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்.
69. உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது.
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.
71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6கிராம் ஆகும்.
73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதி கமாக நீரை சுரக்கத் தொடங்கி விட் டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்.
74. தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது.
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50 லட்சம் உள்ளன.ஆனால் நாயின் மூக்கில் 22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால் மோப்ப சக்தி அதிகம் காவல் துறையில் வேலை.
76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான். அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான் அவரவர் இதயம் இருக்கும்.
77. நம் நுரையீரலில் உட்புறம் அமை ந்துள்ள ‘ஆலவியோலி’ என்னும் சிறிய காற்று அறைகளின் எண்ணிக்கை மட்டுட் 30 கோடி யாகும் புகைப்பிடித்தல் கூடாது.
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால் ஆனது.
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள் உள்ளன.
80. மனிதனுக்கு 3 வகையான பற்கள் உண்டு.
81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள் 9000 உள்ளன.
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள் உள்ளன.
83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும் தசை. நாக்கு.
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான பகுதி மூளை,மூளையின் வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால் உருவானது.
85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம் தூங்குகிறான்.86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½ லட்சம் கரு முட்டைகளோடு தான் பிறக்கிறாள். இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனி ல் 10 லட்சம் நிரப்பலாம்.
87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600 மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்.
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார் 375 முறை ஏற் படுகிறது.
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம் தடவை லப்டப் செய்கிறது. வருடத்திற்கு 4கோடி தடவை. உங்க வயசை 4கோடியால் பெருக்கிப் பாருங்கள்.
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20 சதுரஅடிகள்.
91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20 ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்.
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900 பென்சில்களை உரு வாக்கலாம்.
93. மனித உடலிலுள்ள கொழுப்பைக்கொண்டு 7 பார் சோப்புகளை செய்யலாம்.
94. மனித உடலின் இரும்பைக் கொண் டு 2 அங்குல ஆணி ஒன்று செய்யலாம்.
95. மனித உடலில் அதிகமாக காணப்படும் தாதுப்பொருள் கால்சியம்.
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட் டர் நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதன் வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது.
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன் குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால் உபரியாக காற்றை உள்வாங்க கொட் டாவி விடுகிறோம்.
98. மனிதன் 21 வயது முடிவதோடு உட லின் எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும் நின்று விடுகிறது. கடைசி தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான் சின்னதாக.. உங்களால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வளர்ச்சி.
99. ஒவ்வொரு மனிதனின் உள்ளங்கைகளில் வலதுகையில் அரபு எண் 1ÙÙ1(18) என்கிற வடிவ ரேகையும், இடதுகையில் Ù1(81) என்கிற வடிவரேகையும் உள்ளது. இரண்டையும் கூட்டினால் 99 .
100. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான் என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம் வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள் வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் டி.வி. முன் மணிக்கணக்கில் உட்கார்ந்தால் எவ்வளவு காலம் வாழ் நாளில் வீணாகும் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்

Online service introduced by GOVT OF INDIA,,,



Dear All,It is an excellent online service introduced by GOVT OF INDIA,,, 

SHARE THIS USEFUL THING,,,

INDIAN **GOVERNMENT** **INTRODUCED **ONLINE Services*

1. Birth Certificate < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=1*
*> .
2. Caste Certificate < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=4*
*> .
3. Tribe Certificate < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=8*
*> .
4. Domicile Certificate < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=5*
*> .
5. Driving Licence < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=6*
*> .
6. Marriage Certificate < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=3*
*> .
7. Death Certificate < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=2*
*> .
Apply for: **
1. PAN Card < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=15*
*> .
2. TAN Card < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=3*
*> .
3. Ration Card < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=7*
*> .
4. Passport < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=2*
* > .
5. Inclusion of name in the Electoral Rolls < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10*
*> .
Register:
1. Land/Property < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=9*
*> .
2. Vehicle < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=13*
*> .
3. With State Employment Exchange < **http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12*
*> .
4. As Employer < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=17*
*> .
5. Company < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=19*
*> .
6. .IN Domain < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=18*
*> .
7. **GOV.IN*
* Domain < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=25*
*> . **

Check/Track:
1. Waiting list status for Central Government Housing < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9*
*> .
2. Status of Stolen Vehicles < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1*
*> .
3. Land Records < **http://www.india.gov.in/landrecords/index.php*
*> .
4. Cause list of Indian Courts < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7*
*> .
5. Court Judgments (JUDIS ) < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24*
*> .
6. Daily Court Orders/Case Status < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21*
*> .
7. Acts of Indian Parliament < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13*
*> .
8. Exam Results < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16*
*> .
9. Speed Post Status < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10*
*> .
10. Agricultural Market Prices Online < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6*
*> . **
Book/File/Lodge:
1. Train Tickets Online < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5*
* > .
2. Air Tickets Online < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4*
* > .
3. Income Tax Returns < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12*
* > .
4. Complaint with Central Vigilance Commission (CVC) < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14*
* > .
Contribute to:
1. Prime Minister's Relief Fund < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=11*
*> .
Others:
1. Send Letters Electronically < **http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20*
*> .
Recently Added Online Services
1. Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages < **http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2691*
* > .
2. Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu < **http://www.india.gov.in/h

தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள்



தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்

1. Thiruvallur Collector 9444132000

044 27661600 27662233 27662299

2. Chennai 9445419966 9444131000

044 25381330 25383962 25228025 25234403 42112110 25228025

3. Kancheepuram Collector 9444134000

044 27237433 27238478 27238477

4. Vellore Collector 9444135000

0416 2252345 2252501 2222000 2253034 2228029

5. Krishnagiri Collector 9444162000

04343 239500 239400 239100 239300
http://www.facebook.com/groups/453406141356664/

6. Dharmapuri Collector 9444161000

04342 230500 232300 232800/ 230886
http://www.facebook.com/groups/453406141356664/

7. Tiruvannamalai Collector 9444137000

04175 233333 233366 232222
https://www.facebook.com/226441914189311/photos/a.278580232308812.1073741827.226441914189311/431252350374932/?type=1&theater
8. Villupuram Collector 9444138000

04146 222450 222480 222470

9. Namakkal Collector 9444163000

04286 281101 280111 280222 281106

10. Salem Collector 9444164000

0427 2452233 2452244 2400200 2400700 2452960

11, Erode Collector 9444167000

0424 2266700 2262444 2261444

http://www.facebook.com/groups/453406141356664/

12. .The Nilgiris Collector 9444166000

0423 2442344 2442233 2443971
http://www.facebook.com/groups/453406141356664/

13. Coimbatore Collector 9444168000

0422 2301320 2213230 2301523

14. Dindigul Collector 9444169000

0451 2461199 2432600 2432133/ 2467082

15. Karur Collector 9444173000

04324 257555 257112 255444 257800

http://www.facebook.com/groups/453406141356664/

16. Tiruchirapalli Collector 9444174000

0431 2415358 2420681 2420181 2411929

17 Perambalur Collector 9444175000

04328 276300 224200 277875

18. Ariyalur Collector

04329 223351 223331
http://www.facebook.com/groups/453406141356664/

19. Cuddalore Collector 9444139000

04142 230999 230651-55 230666/ 230777 230555

20 Nagapattinam Collector 9444176000

04365 252700 247800 247400 253048
http://www.facebook.com/groups/453406141356664/

21. Thiruvarur Collector 9444178000

04366 223344 225142 224738 221033

22. Thanjavur Collector 9444179000

04362 230121 230201 230857 230627

23. Pudukkottai Collector 9444181000

04322 21663/ 221624 221690 221690
http://www.facebook.com/groups/453406141356664/

24. Sivaganga Collector 9444182000

04575 241466 241455 241581 241581

http://www.facebook.com/groups/453406141356664/
25, Madurai Collector 9444171000

0452 2531110 2532290 2530925

26. Theni Collector 9444172000

04546 253676 253626 253626

27. Virudhunagar Collector 9444184000

04562 252525 252345 252500

28. Ramanathapuram Collector 9444183000
04567 231220 221349 230558

29. Thoothukudi Collector 9444186000

0461 2340600 2320050 2326747 2340606

30. Kanniyakumari Collector 9444188000

04652 279555 260666 260999 260999

தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் கடைசியாக உள்ளது

Important Telephone Numbers

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு...!



வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் கவனத்திற்கு...!

* வெளிக்கதவில் கண்டிப்பாக லென்ஸ் பொருத்துங்கள்.

மரக்கதவுக்கு முன்னால் ஒரு இரும்புக் கதவும் அமையுங்கள்.

* முன் பின் அறிமுகமில்லாதவர் தண்ணீர் கேட்டால், \

தண்ணீர் எடுப்பதற்காக கதவைத் திறந்து வைத்து விட்டு வீட்டின் உள்ளே செல்லவே கூடாது.

* ஏதேனும் அவசரத்தில் மறந்துபோய் கதவைத் திறந்து வைத்துவிட்டு

பக்கத்தில் எங்காவது சென்று வந்தால், வீட்டில்
ஏதாவது மாற்றம் இருக்கிறதா, யாராவது இருக்கிறார்களா

என்று பார்த்த பிறகே கதவை மூட வேண்டும்.

* மின்சார பொருட்களை ரிப்பேர் செய்பவர்கள், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் என்ற பெயரில் யாராவது,

"உங்கள் கணவர் அல்லது மகன் அனுப்பினார்" என்று சொல்லிக் கொண்டு வந்தால்,

கதவைத் திறக்காமலேயே "பிறகு வாருங்கள்"
என்று சொல்லி அனுப்பி விடுங்கள்.

* வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்தால் சத்தமாக பேசக் கூடாது.

வெளியிடங்களுக்கு செல்லும் போது, புதிய
நபர்களிடம் உங்களைப் பற்றிய விவரங்களை சொல்லவே கூடாது.

* எப்போதும் வீட்டு வேலைக்காரர்கள் மற்றும் டிரைவர்களின் புகைப்படம்,

அவர்களின் உறவினர்களின் முகவரியை கைவசம் வைத்திருப்பது நல்லது.

* வெளியூர் செல்லும்போது, அருகில் உள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தந்துவிட்டு செல்வதே பாதுகாப்பானது".

இத்தனையையும் தாண்டி ஒருவேளை திருடர்கள் உள்ளே நுழைந்து விட்டால், அவர்களைப் பார்த்து கூச்சல் போடக் கூடாது.

ஏனென்றால் அவர்கள் நம்மைத் தாக்கலாம்.

அதனால் மயக்கமாகி விட்டது போல கீழே விழுந்து விட்டு,

பின் அவர்கள் கவனம் மாறும் போது வெளியே
தப்பி வந்து சத்தம் போடலாம்.

அவர்களின் பலம் தெரியாமல் அவர்களைத் தாக்க முயற்சிப்பது மிகப் பெரிய தவறு

நடைபயிற்சி 4 விஷயங்கள்


நடைபயிற்சி 4 விஷயங்கள்

1. யார் செய்யலாம்?

எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சி இது. 

முக்கியமாக நாற்பது வயதுக்கு மேலானவர்கள் அவசியம் தினம் நடந்தால் உடல் பிரச்னைகள் எதுவும் வரும் முன் தற்காத்துக் கொள்ளலாம்.

2. என்ன நடக்கிறது?

நடக்கும் போது நம் உடலில் உள்ள அனைத்து தசைத் தொகுதிகளும் இயங்குவதால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது.

இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம்.

இரத்த சுழற்சியும் உடலின் எல்லாபாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.

3. எவ்வளவு தூரம் நடக்கலாம்?

அவரவர் வயது, உடல் தகுதிக்கு ஏற்றபடி நடக்கலாம்.

இவ்வளவு தூரம் தான் நடக்க வேண்டும் என்ற வரையறை இல்லை

(அதுக்குன்னு அடுத்தத் தெரு வரைக்கும் வாக்கிங் போனேன்னு பெருமிதப் படக்கூடாது)

தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கிலோமீட்டர் வரை நடப்பது நல்லது என்கிறார்கள் ரெகுலர் வாக்கர்ஸ்.

4. பலன்கள்

சாப்பிட்ட உணவு நன்றாக செரிக்கும்.

ரத்த ஓட்டத்தை சீராக்கி, நுரையீரல் சுவாசத்தை சீராகும்.

மூட்டுகள் பலப்படும்

இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராக்கும்

மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

உடல் பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கும்.

சோர்வு நீங்கும்; எடை குறையும்.

ரெகுலராக செய்து வர மன அமைதி கிடைக்கும்.

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை....



உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?

அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.

டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..

4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.

டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?

இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.

6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?

உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.

டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.

7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?

கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.

டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.

8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?

சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.

டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.

9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?

நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.

டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?

தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.

டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.

11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?

கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.

டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.

12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?

இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.

டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.

13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.

டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.

14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?

சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.

டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.

16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?

பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.

டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது. www.puradsifm.com

17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?

வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.

டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.

18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?

உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்

மிகவும் சோர்வாகத் தெரிகின்றதா???



மிகவும் சோர்வாகத் தெரிகின்றதா? மாடி ஏறினால் சீக்கிரம் மூச்சு வாங்குகின்றதா? உங்களுக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பெண்களாய் இருந்தால் இது மிகவும் அவசியம். இரும்பு சத்தே ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்றது.
ரத்த சிவப்பணுவில் உள்ள முக்கியமான பொருள் இதுவே. ரத்த சிவப்பணு எண்ணிக்கை குறையும் பொழுது இரும்பு சத்து குறைவது ரத்த சோகை எனப்படும். தேவையான அளவு சிவப்பணுக்கள் இல்லாவிட்டால் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காது. தேவையான ஆக்ஸிஜன் இல்லாத போது உடல் சோர்வாகும்.
மூளை சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படும். கர்ப்ப காலத்தில் ரத்த சோகை அதிகமாகும். இதனால் குழந்தை சிறிய அளவிலோ அல்லது உரிய காலத்திற்கு முன்பாகவோ பிறக்கலாம். இரும்பு சத்து திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சருமம், முடி, நகம் இவை நன்கு பராமரிக்கப்படுவதற்கும் அவசியமானது.
வயது மற்றும் ஆண், பெண், ஒருவரது உடல்நிலையை பொறுத்து இரும்பு சத்து தேவைப்படுகின்றது. குழந்தைகளுக்கு பெரியவர்களை விட அதிக இரும்பு சத்து தேவைப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் வேகமாக வளரும் பருவத்தில் இருக்கின்றனர். 4, 8 வயது வரை 10 மி.கி. இரும்பு சத்து அன்றாடம் அவசியம்.
9 முதல் 13 வயது வரை 8 மி.கி. அளவாவது தேவை. பெண்களுக்கு 19-50 வயது வரை தினம் 18 மி.கி. இரும்பு சத்து தேவை. ஏனெனில் மாத விடாய் காலத்தில் அவர்களுக்கு ரத்த இழப்பு ஏற்படுகின்றது. ஆனால் ஆண்களுக்கு இந்த வயதில் தினம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. பெண்களுக்கு மாத விடாய் நின்ற பிறகு அன்றாடம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. உணவிலிருந்தோ அல்லது ஊட்டசத்திலிருந்தோ ஒருவர் இரும்பு சத்தை பெற முடியும்.
கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுவது எப்போது?
* கர்ப்பகாலம்.
* தாய் பால் கொடுக்கும் காலம்.
* வயிற்றில் புண் (ரத்த இழப்பு ஏற்படுத்தினால்).
* வயிறு, உணவுப் பாதையில் பிரச்சினை. அதனால் தேவையான அளவு இரும்பு சத்தினை உறிஞ்ச முடியாமல் போகுதல்.
* அதிக நெஞ்செரிச்சல் மாத்திரைகளை சாப்பிடுவது குடல் இரும்பு சத்து எடுத்துக் கொள்வதை தடுக்கும்.
* ஏதோ காரணத்தினால் (உ.ம். ஆபரேஷன்) எடை குறைந்த பிறகு.
* மிக அதிக உடற்பயிற்சி சிவப்பணுக்களை அழிக்கும்.
* சுத்த சைவமாக இருப்பவர்களுக்கு தாவர வகை இரும்பு சத்தினை உடலால் நன்கு எடுத்துக் கொள்ள முடிவதில்லை.
இரும்பு சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள்:
* மூச்சுவாங்கும்.
* படபடப்பு இருக்கும்.
* கை, கால்கள் ‘ஜில்’லென இருக்கும்.
* குழந்தைகள் பல்பம், மண் சாப்பிடுவர்.
* வளைந்த உடையும் நகம், முடி கொட்டுதல்.
* வாய் ஓரங்களில் வறட்சி புண் காணப்படும்.
இரும்பு சத்தை மாத்திரையாக எடுத்துக் கொள்ளும் பொழுது...
* வயிறு பாதிப்பு
* கறுத்த வெளிப்போக்கு
* வாந்தி, பிரட்டல்
* மலச்சிக்கல்
* வயிற்றுப் போக்கு
போன்றவை ஏற்படலாம். நார்சத்தை கூட்டிக் கொண்டால் இப்பிரச்சினைகள் தீரும். உடலுக்கு ஆக்ஸிஜன் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தாது உப்புக்களும் முக்கியம். உடலின் 5 சதவீத எடை இந்த தாது உப்புக்களே. இவை உடல் செயல்பாட்டுக்கும், மூளை செயல்பாட்டுக்கும் அவசியமானது.
பல், எலும்பு, திசுக்கள், ரத்தம், தசை, நரம்பு இவை அனைத்திற்கும் தாது உப்புக்கள் அவசியமாகின்றது. உடலில் பல செயல்களில் தாது உப்புக்கள் கிரியா ஊக்கி போல் வேலை செய்கின்றது. நரம்பின் மூலம் செய்திகள் பரவ, செரிமானம் நடைபெற வைட்டமின்கள் சீராக வேலை செய்ய தாது உப்புக்களே அவசியம். வைட்டமின் ‘சி’ சத்து உடலுக்கு நன்கு கிடைக்க கால்ஷியம் தேவை. வைட்டமின் ‘ஏ’ சத்து நன்கு உடலில் உறிஞ்சப்பட ‘ஸிங்க்’ தேவை.
பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்கள் கிடைக்க ‘மக்னீஷியம்‘ தேவை. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். ‘ஹீம்’ எனப்படும் இரும்பு சத்து அசைவ உணவிலிருந்து எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. என்றாலும், தாவர வகை இரும்பு சத்தே சிறந்தது என ஆய்வுகள் கூறுகின்றன. இரும்பு சத்து உடைய சைவ உணவுகள்:
* உலர் திராட்சை - இதை நாள் ஒன்றுக்கு 4 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக் கொள்ளலாம். பழங்களுடன் கலந்து உண்ணும் பொழுது இதில் உள்ள இரும்பு சத்து எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.
* பயிறு வகைகள்
* பரங்கி, பூசணி விதைகள்
* சோயா பீன்ஸ்
* கீரை வகைகள்
* எள்
* கை குத்தல் அரிசி
* ஓட்ஸ்
* உருளைக்கிழங்கு
* சோயா பன்னீர்
* முழு கோதுமை
* பச்சை காலிப்ளவர்
* சூரிய காந்தி விதை
* பச்சை பட்டாணி
* அடர்ந்த சாக்லெட். ஒரு தாது உப்பு செயல்பட மற்ற தாது உப்புகளும் உடலில் தேவையான அளவு இருக்க வேண்டும். இவைகளை ‘எலக்ட்ரலைட்ஸ்’ என்பர். இவை நம் உடலில் மின்சாரத்தை தாங்கிச் செல்பவை. பச்சை கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் இவைகளில் தாது உப்புக்கள் கிடைக்கின்றன.
தாது உப்புகள் விவரம்:
கால்ஷியம் க்ரோபியம் காப்பர் புளோரைட் அயோடின் இரும்பு மக்னீசியம் மங்கனீஸ் பாஸ்பரஸ் செலினியம் ஸிங்க் மேஸிமிடனம் என பிரிவுபடும்.

நாக்கின் நிறம் வைத்து நோய்களை.....?



நாக்கின் நிறம் வைத்து நோய்களை இனம் காண்பது எப்படி..?

நாக்கில் காலையில் பல்விளக்கும் போது பார்த்தால் இருக்கும் படிவம் உடலின் நிலையை உணர்த்தும்.
கருப்பு கலந்த மரத்தின் நிறமாக இருந்தால் வாயு கோளாறு.
மஞ்சள் நிறம் கல்லீரல் பாதிப்பையும்,
பச்சை அல்லது சிவப்பு Gall blader பிரச்சனையையும்,
வெள்ளை நிறம் கபத்தினையும் (சளி),
நில நிறம் இதய கோளாறு,
பர்பிள் நிறம் கல்லீரலின் இரத்த ஓட்ட குறைவினையும் காட்டும்,
நாக்கின் நுனியில் பற்களை போன்ற வெளிறிய கோடுகள் போல் தெரிந்தால் உண்ணும் உணவின் சத்துக்கள் சரியாக கிரகிக்கப் படவில்லை என்றும்,
நடு நாக்கில் கோடுகள் போல் இருந்தால் எதிர்ப்பு சக்தியின் குறைபாடு என்றும்,
நாக்கில் வெடிப்புகள் இருந்தால் உடலின் தச வாயு சமநிலை பாதிப்பு என்று பொருள்.
கை, கால்களில் Reflexology புள்ளிகளை பார்த்தது போல் நாக்கிலும் உடல் உள்ளுறுப்புகளின் நரம்பு முடிச்சுகள் உள்ளது.
இதை வைத்தும் உடலின் குறைப்பாடுகளை கண்டுபிடிக்கலாம்.

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை???



ஆணழகன் போட்டி மற்றும் போலீஸ் வேலைக்குத் தயாராகிறவர்கள் பெரும்பாலும் முட்டைகளை அடுக்கடுக்காக உடைத்துக் குடித்து ஆற்றல் பெறுவதைப் போல பல திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
இப்படி, உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க வேண்டியவர்களுக்கு முட்டை ஒரு அத்தியாவசிய உணவு என்றும், தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமான உடல்நலத்தைப் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. அதே வேளையில், ‘முட்டையின் வெள்ளைக்கரு நல்லது, மஞ்சள் கருவை சாப்பிடக்கூடாது’ என்றும் சொல்கிறார்களே... இது எந்த அளவு உண்மை?

ஒருவருக்கு ஒரு நாளைக்கு எத்தனை முட்டை அனுமதி?

‘‘பாடி பில்டர்கள் டஜன்கணக்கில் முட்டை சாப்பிட்டாலும், அதற்கேற்ற கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதால் அவர்களுக்கு எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது. தசைகள் செழுமையாகத் தெரிவதற்கு புரதம் அவசியம். முட்டையின் வெள்ளைக்கருவில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாகவே பாடி பில்டர்ஸ் அடுக்கடுக்காக முட்டைகளை உடைத்துக் குடிக்கிறார்கள். ஒருவர் எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பதை அவரது வாழ்வியல் சூழலை வைத்துதான் முடிவு செய்ய முடியும்.
கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும். உடல் உழைப்பு அதிகமுள்ள வேலைகளில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முட்டை சாப்பிடலாம். பொதுவாக முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் 3 அல்லது 4 வரை சாப்பிடலாம்.
மஞ்சள் கரு சாப்பிடுவதாக இருந்தால், தினமும் ஒன்று சாப்பிட்டால் போதும். தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பு அமிலமான ஒமேகா3 ஆகியவை இருந்தாலும், சில கெட்ட கொழுப்புச்சத்துகளும் அடங்கியிருப்பதால் மஞ்சள் கருவை அதிகமாக சாப்பிடக்கூடாது.
இரவு நேரத்தில் முட்டை சாப்பிடக்கூடாது என்று சிலர் சொல்வதுண்டு. இரவு நேரத்தில் முட்டை சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால், தூங்கப் போவதற்கு 2 மணி நேரத்துக்கு முன் சாப்பிட வேண்டும். மஞ்சள் கருவையும் சேர்த்து முட்டைகளை அதிகமாக சாப்பிடுபவர்களின் உடலில் கொழுப்புச் சத்து அளவு அதிகமாகி, இதய நோய்கள் வரக்கூடும். தேவையான உடற்பயிற்சிகள் செய்துவிட்டு அதன் பின்னர் முட்டை சாப்பிடுவது உடல் வலிமையை கூட்டும்.
முட்டையை அதிக நேரம் சமைக்கக் கூடாது. 1015 நிமிடங்கள் கடாயில் போட்டு வறுத்தால் ஒருவித வாசனை வரும். முட்டை அதன் இயற்கைத் தன்மையை இழந்துவிடும். தண்ணீரில் போட்டு அவித்துச் சாப்பிடும் முட்டையே ஆரோக்கியத்துக்கு உகந்தது. கொதிக்கும் தண்ணீரில் முட்டையை உடைத்து ஊற்றி Pouched egg தயாரிப்பார்கள்.
இதுவும் உடல்நலத்துக்கு ஏற்றது. காய்கறிகளை நறுக்கிப்போட்டு, அதில் முட்டையை உடைத்து ஊற்றி ஆம்லெட் தயாரித்தும் சாப்பிடலாம். ஹாஃப் பாயிலோ, ஆம்லெட்டோ... அதிகமாக வேக வைக்காமல் சாப்பிடுவதுதான் சிறந்தது. முட்டையில் இருக்கும் புரதங்களை உடல் எளிதாக ஏற்றுக்கொள்ளும். ஆதலால், முட்டை சாப்பிடுங்கள்... உடலுக்கு தேவையான பயிற்சிகளையும் கொடுங்கள்!’’
கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்துக் கொண்டாலே போதும்!

Know this .......!!!!

சமையல் அறையில் காஸ்........!!!



ஒரு பெண் ஒருத்தி தன் சமையல் அறையில் காஸ் (Gas stove ) அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில கரப்பான் பூச்சிகளைக் கண்டாள் .உடனே அவள் பூச்சிக் கொல்லி ("Hit", "Mortein" )மருந்தை தெளித்தாள்.அந்த மருந்தின் வேகம் கேஷ் சிலிண்டரை வெடித்து அவள் மேல் 65% தீகாயம் ஏற்பட்டது.

அவளைக் காப்பாத்த முற்பட்ட கணவர் மீதும் தீக்காயம் ஏற்பட்டது.இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.கணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அந்த பெண் பரிதாபமாக சிகிச்சை பலனின்றி இறந்து போனாள்.அவள் இறந்தது கூட கணவனுக்கு தெரியாது.

அதனால் எரிவாயு எரிந்து கொண்டு இருக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறது.

இந்த செய்தியை படித்ததோடு விட்டுவிடாமல் உங்கள் குடும்பத்தினரிடமும் நண்பர்களுடமும் ஏன் முகநூலிலும் பரப்புங்கள் .மற்றவர்களும் தெரிந்து கொள்ளட்டும், நன்றி

ரத்தத்தில் உள்ள பொருட்கள்



1 ரத்தத்தில் உள்ள பொருட்கள் யாவை? 
ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் என, ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது. 

2 ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது? 
எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ‘பிளேட்லெட்’கள் உற்பத்தியாகின்றன.

3 ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; ‘ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.

4 ஹீமோகுளோபினின் பணி என்ன?
ஹீமோகுளோபின் தான், உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது, ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவர்.

5 ரத்த சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள், நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப் பொருளான, ஹீமோகுளோபின் உற்பத்திக்கு, இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக் கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில், இரும்புச் சத்து அதிகம். அவற்றை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால், ரத்த சோகை வராது.

6 ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை, ‘படை வீரர்கள்’ என்று அழைக்கலாம். ஏனெனில், உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்து போராடுபவை, ரத்த வெள்ளை அணுக்களே. அவை, நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

7 ரத்தத்தில் உள்ள, ‘பிளேட்ெலட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி, பிளேட்ெலட் அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி, ‘கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி, மேலும் ரத்தக் கசி அவை தடுத்துவிடும்.

8 ‘பிளாஸ்மா’ என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள் தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும், 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்கள் இருக்கும்.

9 ரத்த அழுத்தம் என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், ‘பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே, ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும், ஒரு நிமிடத்திற்கு, 250 மி.லி., ரத்தம் தேவை.

10 உடலில் ரத்தம் பயணம் செய்யும் துாரம் எவ்வளவு?
ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் துாரம், ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ., ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகம்.

சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!!



பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய வீட்டுக் குறிப்புகள்!!!
வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் தொல்லையாக அமைகின்றன. நமக்கு தொல்லை தரும் பெரும்பாலான பூச்சிகளை அழித்து அவற்றின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இவை உதவினாலும், நமது வீடுகளுக்குள் பல்லிகளைக் காண்பதை நாம் விரும்புவதில்லை.
நமக்கு இவை வேண்டாத விருந்தாளிகளே. கடைகளில் காணப்படும் பல்லி விரட்டி மருந்துகள் நச்சுத்தன்மை கொண்டவை. குழந்தைகளுக்கு வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் மிகவும் ஆபத்தானவை. எனவே யாருக்கும் ஆபத்தை உண்டாக்காத, சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் பல்லிகளை விரட்டுவதற்கான எளிய வழிமுறைகளைப் பின்வருமாறு காணலாம்.
காபித்தூள்
சிறிது காபித்தூளை மூக்குப்பொடியுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். பல்குத்தும் குச்சிகளின் முனையில் இவ்வுருண்டைகளைக் குத்தி, பல்லிகள் நடமாடும் இடங்களில் அவற்றை வைக்கவும். இவற்றை உண்ணும் பல்லிகள் மடிந்துவிடும்.
நாப்தலின் உருண்டைகள்
நாப்தலின் உருண்டைகள் சிறந்த பூச்சிக்கொல்லிகள். உங்கள் வீட்டு அலமாரிகளிலும், சிங்க்குகளிலும், கேஸ் அடுப்புக்கு அடியிலும் போட்டு வையுங்கள். பல்லிகளை விரட்டும் சிறந்த முறை இது.
மயில் இறகுகள்
மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் பயப்படும். பல்லிகள் வசிக்கும் இடங்கள், நடமாடும் இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில் இறகை ஒட்டி வையுங்கள். பூச்சாடிகளில் மயிலிறகைப் போட்டு வையுங்கள். இதனால் உங்கள் வீட்டிலிருந்து பல்லிகள் ஓடிவிடும்.
மிளகுத் தூள்,
பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே மிளகுத் தூளை தண்ணீருடன் கலந்து கொண்டு ஒரு பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே தயாரியுங்கள். சமையலறையில் உள்ள அலமாரிகள், டியூப்லைட் இடுக்குகள், அடுப்புகளுக்கு அடிப்புறம் மற்றும் ஃப்ரிட்ஜ் அடிப்புறம் ஆகியவற்றில் இக்கலவையைத் தெளியுங்கள். இந்த வாசனையினால், எரிச்சலடைந்து பல்லிகள் ஓடிவிடும்.
குளிர்ந்த நீர்
ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சி செய்யப்பட்ட தண்ணீரை பல்லிகள் மீது தெளியுங்கள். இதன் மூலம் பல்லியின் உடல் வெப்பநிலை குறைந்து அவற்றால் அசைய முடியாத நிலை உண்டாகும். அப்போது ஒரு அட்டைப் பெட்டிக்குள் பிடித்து அடைத்து, வீட்டிற்கு வெளியே வீசி விடுங்கள்.
வெங்காயம்
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டி சுவர்களில் தொங்கவிடுங்கள். பல்லிகளின் மறைவிடங்களில் போட்டு வையுங்கள். வெங்காயத்திலுள்ள கந்தக ஆவியானது பல்லிகளால் சகிக்கமுடியாத மணத்தை உண்டாக்கும். இதனால் பல்லிகள் அவ்விடத்தை விட்டு ஓடிவிடும்.
முட்டை ஓடுகள்
முடிந்த அளவுக்கு முழுதாகக் காட்சியளிக்கும் கோழி முட்டை ஓடுகளை பல்லிகள் நடமாடும் பகுதிகளில் போட்டு வையுங்கள். வீட்டுக்குள் வேறு ஒரு பெரிய உயிரினம் இருப்பதாகக் கருதி பல்லிகள் ஓடிவிடும். முட்டை ஓடுகளை 3-4 வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்.
பூண்டு
ஸ்ப்ரே பாட்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெங்காயச் சாறு மற்றும் தண்ணீரைக் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிதளவு பூண்டுச் சாற்றினைக் கலக்கவும். நன்றாகக் குலுக்கி, இதனை வீட்டு மூலைகளிலும், விரும்பும் வேறு இடங்களிலும், தெளியுங்கள் அல்லது பூண்டுப் பற்களைக் கூட வீட்டு மூலைகளில் வைத்து பல்லிகளை விரட்டலாம்.
-------------------------------------------------------------------------------------------------
வீட்டில் எறும்பு தொல்லை போக்க 10 பொருட்களைக் கொண்டே போக்கலாம்.
வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா? மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் ஓட்டை போட்டு தங்கியுள்ளதா? இவற்ற அழிப்பதற்காக கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ் பயன்படுத்தியிருப்பீர்கள். ஆனால் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், இந்த சாக்பீஸ்களைப் பயன்படுத்த முடியாது.
ஆனால் இந்த எறும்புகளை வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே போக்கலாம். மேலும் இந்த இயற்கைப் பொருட்கள் அனைத்தும் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாதவை. அது என்ன பொருட்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? அப்படியெனில் இப்போது எறும்புகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!
ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசமமாக கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எறும்புகள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் அழிந்துவிடும்.
மசாலாப் பொருட்கள்
மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய்
எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் தடுக்கலாம்.
புதினா
புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, அவற்றை எறும்புகள் வரும் இடங்களான ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.
பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை
பேக்கிங் சோடாவுடன் சரிசமமான அளவில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் வரும் இடத்தில் தூவினால், எறும்புகள் அவற்றை சாப்பிட்டு, இறந்துவிடும்.
டால்கம் பவுடர்
இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருள். அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.
கிராம்பு
கிராம்பு சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் இருக்கும்.
பூண்டு
பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறு
எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
போராக்ஸ்
போராக்ஸ் பவுடரை எறும்புகள் உள்ள இடத்தில் தூவியோ அல்லது சர்க்கரை நீரில் கலந்தோ தெளித்தால், எறும்புகளின் தொல்லையில் இருந்து விடுதலைக் கிடைக்கும்.
-------------------------------------------------------------------------------------------------
எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!
வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. அதனால் கடைகளில் விற்கப்படும் எலி பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக உள்ளது. எனவே அந்த எலிகளை இயற்கை முறையில் அழிப்பதற்கும், அதனை வராமல் செய்வதற்கும் ஒருசில வழிகள் உள்ளன. அந்த இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் எலிகள் வருவதைத் தடுக்கலாம்.
பூனை
பூனைகளை வளர்த்து வாருங்கள் உங்களுக்கு செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால், வீட்டில் பூனைகளை வளர்த்து வாருங்கள். வீட்டில் பூனை இருந்தால், எலி வீட்டிற்குள் வரவே வராது.
புதினா
எலிகளுக்கு புதினாவின் வாசனையே பிடிக்காது. மேலும் அந்த வாசனை இருந்தாலே அவை போய்விடும். எனவே எலி பொந்து உள்ள இடத்தில் ஒரு காட்டனில் புதினா எண்ணெயை நனைத்து பொந்தினுள் வைத்தால், அதன் வாசனையை நுகரும் எலியின் நுரையீரல் சுருங்கி இறந்துவிடும்.
மனிதனின் முடி
மனிதனின் முடி உள்ள இடத்திலேயே எலிகள் நிற்காது. இதற்கு முக்கிய காரணம், எலிகள் முடியை விழுங்கிவிடும். இப்படி அவை முடியை விழுங்கினால், அவை இறந்துவிடும்.
நாப்தலின் உருண்டை
நாப்தலின் உருண்டை மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானது. எனவே நிச்சயம் இது எலிகளுக்கும் ஆபத்தானது தான். எனவே இதனைப் பயன்படுத்தியும் எலிகளை அழிக்கலாம்.
அம்மோனியா
எலி பொந்துகளில் சிறிது அம்மோனியாவை தெளித்தால், அதன் நாற்றத்திலேயே எலிகள் இறந்துவிடும்.
மாட்டு சாணம்
எலிகளை இயற்கையாக அழிக்க வேண்டுமானால் மாட்டுச் சாணம் பயன்படுத்தலாம். அதற்கு மாட்டுச்சாணத்தினை சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சீஸ் தடவி வைத்தால், அதனை எலிகள் சாப்பிட்டு, அதன் வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வாந்தி எடுத்து, இறந்துவிடும்.
ஆந்தை
கடைகளில் பிளாஸ்டிக்கில் விற்கப்படும் ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் வைத்தால், எலிகள் பயந்து வராமல் இருக்கும்.
மிளகு
எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி விட்டால், அதனை நுகரும் போது, அதன் நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சு விட முடியாமல் இறந்துவிடும்.
பிரியாணி இலை
பிரியாணி இலையின் நாற்றம் எலிகளுக்கு பிடிக்காது. எனவே அந்த இலையை பொடி செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டால், அதன் நாற்றத்திலேயே இறந்துவிடும்.
வெங்காயம்
எலிகளை அழிப்பதற்கு பயன்படும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். அதற்கு வெங்காயத்தை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் வைத்தால், அதனை உட்கொண்டு எலிகள் அழியும்.
பேபி பவுடர்
பேபி பவுடரை எலி தங்கும் மற்றும் வரும் இடத்தில் தூவினால், எலிகள் அந்த வாசனையால் இறக்கக்கூடும்.