Thursday, May 31, 2018

கம்பு அடை

கம்பு அடை! எளிதில் தேவையான சத்துள்ள உணவுக்கு ஆறுசுவையும் சத்துள்ளது.🐝🐝

#தேவையான_பொருட்கள்:

கம்பு – 250 கிராம்
கடலைப் பருப்பு – 200 கிராம்
துவரம் பருப்பு – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 5
சீரகம் – 1 டீ ஸ்பூன்
வெள்ளைப்பூண்டு – 10 பல்
இஞ்சி – சிறுதுண்டு,

#செய்முறை:🐝🐝

கம்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை நான்கு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். அவை, அரைபட்டுக் கொண்டிருக்கும் போதே காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து அரைக்கவும். பிறகு, தேவையான அளவு உப்பு கலந்து, 2 மணி நேரம் வைத்திருந்து, அடையாக ஊற்றவும்.🐝🐝


வாழைத்தண்டு சூப்:-

வாழைத்தண்டு சூப்:-
................................................................................................
வாழைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறு, மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் கலந்து நீர்விட்டு கொதிக்க வைத்து பிறகு சிறிது எண்ணெய் விட்டு தாளித்து சூப் போல் செய்து அருந்தி வந்தால் கீழ்கண்ட நோய்களுக்கு கண்கண்ட மருந்தாகும். மது, புகை போன்ற தீய பழக்கங்களால் அடிமைப் பட்டவர்களின் கல்லீரல் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கும். ஈரல் பாதிப்பினால் கண் பார்வைக் கோளாறு,காமாலை நோய் தாக்கும். இதற்கு எல்லாம் வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்..

சிறுநீரகத்தில் கற்கள் உருவாகி பயங்கரமான வலி ஏற்படும். இந்த கற்களை அகற்ற வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும். வாழைத் தண்டில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தி சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து தினமும் அருந்தி வந்தால் உடல் பருமன் குறையும்.

மேலும் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உபாதைகளையும், வெள்ளைப்படுதலையும் குணப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றும். தோல் நோய்களைக் குணப்படுத்தும்.

உடலில் நச்சுப் பொருட்கள் கலந்திருந்தால் விரைவில் குணமாக்கும். நீர்ச்சுருக்கம், நீர் எரிச்சல் இவற்றை போக்கும்.

இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.

கையை பிரித்து குதிகால் அல்லது கணுக்காலை பற்றி பிடிக்க வேண்டும். வயிற்றை முன்னோக்கி தள்ளி ஆசனத்தை சரி செய்யவும்.

30 எண்ணிக்கை சாதாரண மூச்சில் இருக்கவும்.

குதிகால்கள் மீது அமர்ந்து ஓய்வு எடுத்து திரும்பவும் செய்யவும். மூன்று முறை செய்தால் போதும்.

பலன்கள்:

ஆஸ்த்மா, ரத்த சோகை போக்கும். சிறு வயதில் ஆரம்பித்தால் உயரம் பெறலாம். கண் பார்வை தெளிவடையும். மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்கிறது. கூன் முதுகு நிமிர்கிறது.


Tuesday, May 29, 2018

ஆட்டுக்கறி டிப்ஸ்

#ஆட்டுக்கறி #வாங்குவோருக்குச் #சில_குறிப்புகள்:"

"நீங்கள் கறி வாங்கச் செல்லும்போது, தொடை, சந்துக் கறிகளைக் கேட்டு வாங்குவீர்கள்."

"ஏனெனில், அப்பகுதிகளில் சதை அதிகமாக இருக்கும். எனினும் இப்பகுதி இறைச்சி சற்றுக் கடினமாக இருக்கும்."

"பொதுவாக நடமாடும்போது அதிகமாக அசையும் தசைகள் கடினமாக இருக்கும்."

"மாறாக நெஞ்சுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதித் தசைகள் மென்மையாக இருக்கும்."

"இதனை அறிந்த நீங்கள் வாங்கினால் சிறப்பாக இருக்கும்."

"மேலும், நீங்கள் வாங்கும் இறைச்சி நல்ல தரமானதுதானா என்பதனை அறிய இறைச்சியில் தேங்கி இருக்கும் இரத்த அளவே அளவுகோல்."

"நல்ல உடல் நலத்துடன் கூடிய ஆடு வெட்டப்படும் போது இரத்தம் முழுவதுமாக வடிந்து விடுவதால், இறைச்சியில் தேங்கி இருக்காது."

"ஆனால் நோயுற்ற ஆடுகளில் சிறிது இரத்தம் தேங்கியிருக்கும். இறந்து போன பின் அறுத்துத் தொங்கவிட்டிருந்தால் இரத்தம் முழுவதும் இறைச்சியில் படிந்திருக்கும்."

"ஒரே வயதான ஆண், பெண் ஆடுகளில் பெட்டை ஆட்டு இறைச்சியே நன்றாக இருக்கும்."

"#வெள்ளாட்டு #இறைச்சியில்
#உள்ள

"ஈரப்பதம் —- 74.2%
புரதம் —- 21.4%
கொழுப்பு —- 3.6%
தாது உப்பு —- 1.1%"

"#மாமிசத்திற்கும்_சில #மருத்துவக்_குணங்களும் #உண்டு."

"சிறப்பாக ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.
பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும்."

"#ஆட்டின்தலை:

"இதயம் சம்பந்தமான பிணியை நீக்கும். குடலுக்குப் பலத்தைக் கொடுக்கும். கபால பிணிகளைப் போக்கும்."

"#கழுத்துக்கறி:"

"மிகவும் மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், மெல்லுவதற்கு ஏற்றது. முக்கியமாக இதில் கொழுப்பு இருக்காது."

"#ஆட்டின்கண்:"

"கண்களுக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். பார்வை துலங்கும்."

"#ஆட்டின்மார்பு:"

"கபத்தை அறுக்கும். மார்புக்குப் பலத்தைக் கொடுக்கும். மார்புப் பாகத்தில் புண் இருந்தால் ஆற்றும்."

"#ஆட்டின்இதயம்:"

"தைரியம் உண்டாக்கும். மன ஆற்றலைப் பெருக்கும். இதயத்திற்குப் பலம் தரும்."

"#ஆட்டின்நாக்கு:

"சூட்டை அகற்றும். தோலுக்குப் பசுமை தந்து பளபளப்பாக்கும்."

"#ஆட்டின்மூளை:"

"கண் குளிர்ச்சி பெறும். தாது விருத்தி உண்டாக்கும். புத்தி தெளிவடையும். நினைவாற்றல் அதிகரிக்கும். மூளை பாகத்திற்கு நல்ல பலத்தைத் தரும்."

"#ஆட்டின்நுரையீரல்:"

"உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும்."

"#ஆட்டுக்கொழுப்பு:"

"இடுப்புப் பாகத்திற்கு நல்ல பலம் தரும். எவ்வித இரணத்தையும் ஆற்றும்."

"#_ஆட்டுக்கொழுப்பு:"

"அம்மை மற்றும் அக்கி நோய்களுக்கு சரியான நிவாரணியாகும்."

"#ஆட்டுக்கால்கள்:"

"எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்."

"#ஆட்டுக்குடல்:"

"வயிற்றில் உள்ள குடல் புண்களை ஆற்றும் சக்தி ஆட்டுக் குடலுக்கு உண்டு"


Monday, May 28, 2018

Kitchen Tips

டிப்ஸ் கார்னர்: கிச்சன் டிப்ஸ்!!!

தோசை மாவில் ஒரு கையளவு கடலை மாவு போட்டு நன்றாக கலந்து தோசை வார்த்து திருப்பிப் போட்டு அதன் மேல் வெண்ணெய்யோ நெய்யோ தடவி வைத்து கொடுங்கள். ஓட்டல் தோசை போன்று மொறு மொறுவென்று இருக்கும்.

பயத்தம் பருப்பு மசியல் செய்ய குக்கரில் பயத்தம் பருப்பு வேகவைக்கும் போது ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி தண்ணீர் குறைவாக வைத்தால் பருப்பு ஒட்டாமல் வரும். வெந்த பிறகு நீர் விட்டு கரைத்து விட்டால் தனித் தனியாகி மசியலும் நன்றாக வரும்.

தக்காளி பச்சடி, கீரை மசியல் செய்யும் போது கடுகுக்குப் பதில் சீரகத்தைத் தாளித்தால் சுவையாக இருக்கும். வாசனையும் தூக்கும்.

பால் பாயாசம் செய்யும்போது கொஞ்சம் பாதாம் பருப்பை அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விட்டுச் செய்தால் பாயாசம் மிகவும் சுவையாக இருக்கும்.

அடைமாவு அரைக்கும் போது வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் போட்டு நைசாக அரைத்து அடை செய்தால் அடை மிகவும் மணமாகவும், ருசியாகவும் இருக்கும்.எல்லா சத்துக்களும் வீணாகாமல் கிடைக்கும்.

முள்ளங்கி இலையைச் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் வறுத்துச் சேர்த்து துவையல் அரைத்தால் டேஸ்ட் அசத்தலாக இருக்கும்.

வாழைப்பூவை ஆய்ந்து வேக வைத்து அத்துடன் சிறிது தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் ஒரு சுற்று சுற்றி தயிரில் கலந்து பெருங்காயம், கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க அருமையாக இருக்கும்.

எந்தக் காயைப் போட்டு சாம்பார் செய்தாலும் அத்துடன் கூட இரண்டு பெரிய நெல்லிக்காய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கி செய்தால் சாம்பாரின் சத்தும் சுவையும் கூடும்.

வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொரிந்து மொறு மொறுப்பாக இருக்கும்.

ஓமப்பொடி செய்யும்போது கடலை மாவு மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு, சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், நொறுங்கிப் போகாமலும் நன்றாக எடுக்க முடியும்.

தோசைமாவு, பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்து போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.


மழைநீர் சேகரிப்பு - அரிய தகவல்கள்

இப்படிச் சேகரித்தால் 10 வருடங்கள் ஆனாலும் மழைநீர் கெடாது!" - `நமக்கு நாமே’ ஐடியா சொல்லும் இளைஞர்

``வருங்காலத்தில் சாப்பிட நல்ல சாப்பாடு கிடைக்கும். எல்லோரும் பயணிக்கவும் சொந்த கார் இருக்கும். ஆனால், பருக சொட்டு நீர் கிடைக்காது" என்று அபாயச் சங்கை ஊதத் தொடங்கியிருக்கிறார்கள் உலகளாவிய சூழலியாளர்கள். அதற்கு, அச்சாரம் சொல்லும்விதமாக தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் ஒரு சொட்டு நீர்கூட இல்லாமல் மக்கள் வெளியேறும் கொடுமை நடக்கிறது. இந்தியாவிலும் அந்த நிலை வரும் காலம் வெகுதூரமில்லை. இந்நிலையில், ``மழைநீரைச் சேமித்தால் பத்து வருடங்கள் வரை அதை வைத்துப் பருகலாம். இங்கே ஏற்படவிருக்கும் குடிநீர்ப் பஞ்சத்தைத் தடுக்க மழைநீர் சேகரிப்பு ஒன்றே வழி" என்று அடித்துச் சொல்கிறார் கருப்பசாமி. நம்மாழ்வாரின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான இவர், சிவகாசியில் உள்ள தனது வீட்டில் மழைநீர் சேகரிப்பைச் செய்திருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள நம்மாழ்வார் துயில் கொள்ளும் வானகத்துக்கு வந்த கருப்பசாமியைச் சந்தித்துப் பேசினோம்.

`` `இயற்கை ஒருபோதும் தவறு செய்வதுமில்லை. தன் கடமையைச் செய்யத் தவறுவதுமில்லை. மனிதர்கள்தாம் இயற்கைக்கு எதிராகத்
கருப்பசாமி
தொடர்ந்து செயல்பட்டு, பின்பு பிரச்னை வரும்போது இயற்கைமீது குறைசொல்லும் தவற்றைச்  செய்கிறார்கள்'ன்னு அய்யா நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். அதனால்தான், நான் அவரை முதன்முறையாகச் சந்தித்த 2009 ம் வருடத்திலிருந்து இயற்கையை விட்டு விலகாத, இயற்கையைச் சிதைக்காத வாழ்வை வாழ்ந்து வருகிறேன். விருதுநகர் மாவட்டம், சிவகாசிதான் எனக்குச் சொந்த ஊர். வருங்காலத்தின் மிகப்பெரிய பிரச்னையா உலகம் முழுக்க ஏற்படவிருப்பது தண்ணீர்ப் பிரச்னைதான். அதனால்தான், எனது வீட்டில் மழைநீர் சேகரிப்பு அமைப்பைக் கட்டமைத்துள்ளேன். 2013 ம் ஆண்டு சிவகாசியில் வானகம் மற்றும் தேன்கனி, இயற்கை வாழ்வியல் அமைப்பினர் ஒருங்கிணைப்பில் நம்மாழ்வார் ஐயா தலைமையில் இயற்கை வாழ்வியல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்வில் திருவாரூர் `மழைநீர்' வரதராஜன் ஐயா அவர்களும் கலந்துகொண்டார். அப்போது அவர் வீட்டின் மேற்கூரையில் பெய்யும் மழைநீரைச் சேகரிப்பது குறித்து தனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்தார்.

அப்போது அவர், `தண்ணீர்ப் பிரச்னை என்று சொல்வது அறியாமை. இயற்கை நமக்கு அளவில்லா தண்ணீரைக் கொடுத்திருக்கிறது; கொடுத்துக்கொண்டும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் அளவுக்கு மனிதனின் அறிவும் அறிவியலும் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஆனால், அதைச் செயல்படுத்தும் அளவுக்கு நம்மிடம் பொறுமை இல்லை. இது மட்டும்தான் இப்போதைய பிரச்னை' என்றார் வரதராஜன். எனக்குச் சுருக்கென்று உறைத்தது. எவ்வளவு பெரிய உண்மை. அதோடு அவர், `வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் இருந்தால்10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது'ன்னு சொன்னார். அப்போதே நான் வீடு கட்டும்போது, மழைநீர் சேகரிப்பு அமைப்பை அமைக்கணும்னு முடிவு பண்ணினேன். எல்லோரையும் மழைநீர் அமைப்பை அமைக்கச் சொல்லி வலியுறுத்தத் தொடங்கினேன். ஏனென்றால், தண்ணீரை காசு கொடுத்து வாங்கிக் குடிக்க வேண்டிய நிலைமை வரும் என்று 20 வருடங்களுக்கு முன்பு யாரேனும் நினைத்துப் பார்த்திருப்போமா?. மழை நீர் சேகரிப்புதான் இதற்குச் சரியான மாற்று. சில ஆயிரங்கள் செலவழித்து மழை நீரைச் சேகரித்தால், வருங்காலத் தலைமுறைக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச்சென்ற பெரும் மனத் திருப்தி கிடைக்கும்.

கேப்டவுன் வெறும் ஆரம்பம் மட்டும்தான். உலகின் பல பெரு நகரங்களும் இந்த நிலைக்குச் சில வருடங்களில் வரும். இந்தத் தகவல் பலரையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனி இயற்கையை அழிப்பதைத் நிறுத்திவிட்டு, மழைநீரை முறையாகப் பயன்படுத்தி இயற்கைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால்தான், நான் சிவகாசியில் கட்டியுள்ள வீட்டில் மழைநீர் சேமிப்பு அமைப்பை அமைத்து முடித்துள்ளேன். 7000 லிட்டர் கொள்ளளவு கொண்ட அமைப்பு இது. சிறிதளவும் காற்று புகாதவாறு அமைத்துள்ளதால், பத்து வருடங்கள் கூட இதில் சேமிக்கப்படும் தண்ணீர் கெட்டுப் போகாது.

எங்கள் வீட்டில் செய்துள்ள அளவின் அடிப்படையைப் பகிர்கிறேன். வீட்டின் மேற்கூரையின் அளவைப் பொறுத்து, ஒரு வருடத்துக்கு வீட்டுக்குத் தேவையான மழைநீரைச் சேகரிப்பதற்கான பெரிய கொள்ளளவு தொட்டிகள் தயாரித்துக்கொள்ளவும். பின்னர்..

1. வடிகட்டிக்கான தொட்டியை, 4 முதல் 5 தட்டுகள் ( சல்லடையைத் தாங்கும் தாங்கிகள் வைக்க ) இருக்குமாறு செய்து கொள்ளவும். அதன் உயரம் குறைந்தது 1 அடியாக இருக்க வேண்டும்.

2. அதன்பின், துருப்பிடிக்காத சல்லடையை ( பிளாஸ்டிக்) வைத்து, அதன் மேல் வடிகட்டி வலை ஒன்று ( பிளாஸ்டிக் கொசுவலை அல்லது நைலான் சல்லடை) வைத்துக் கொள்ளவும்.

3. அதன் மேல் சிரட்டைக்கரித் துண்டுகளை (Activated Carbon) குறைந்தது 4 அங்குலம் அளவுக்கு இட்டு நிரப்பிக் கொள்ளவும்.

4. பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்குக் கூழாங்கற்கள், ஜல்லிக் கற்கள் வைத்து நிரப்பவும்.

5. அதன் பின் அடுத்த தட்டில் மறுபடியும் சல்லடையை வைத்து அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து மறுபடியும் 4 அங்குலம் அளவுக்கு ஆற்று மண் வைத்து நிரப்பவும்.

6. கடைசித் தட்டில் சல்லடையை வைத்து, அதன் மேல் வடிகட்டி வலையை வைத்து விட்டால் முடிந்தது வேலை.

7. அதன் மேல் மழை நீர் வரும் குழாயைச் சிறு சிறு துவாரங்கள் இருக்குமாறு தயார் செய்யவும். இதன் மூலம் தண்ணீரின் வேகம் அதிகரித்தால், தண்ணீர் ஓரிடத்தில் விழுந்து மண் அரிப்பு ஏற்படாமல், பரவலாகத் தண்ணீர் வந்து வடிகட்டப்படும்.

8. வெளிக்காற்றும், வெப்பமும் உள்ளே செல்லாமல் மழைநீர் சேமிக்கப்படும் தொட்டியை வடிவமைத்தோமேயானால், 10 ஆண்டுகளானாலும் இந்தத் தண்ணீர் கெட்டுப்போகாது.

இந்த முறையில்,தண்ணீர்ப் பற்றாக்குறையை நமக்கு நாமே செலவில்லாமல் தீர்த்து, ஆரோக்கியமான குடிநீரை நம் எதிர்கால சந்ததிகளுக்கு உறுதிப்படுத்துவோம். இனி நம்மாழ்வார் ஐயா கூறியபடி, தண்ணீரை நிலத்தில் தேடாமல் வானத்தில் தேடுவோம்.

அதுதான், எதிர்காலத்தில் மிரட்டவிருக்கிற குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரே வழி. வீட்டுக்கு வீடு இந்த அமைப்பை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று முடித்தார்.

https://m.facebook.com/story.php?story_fbid=630023504025350&id=304912163203154



Friday, May 25, 2018

ஈரலிலிருந்து #நச்சுகளை_வெளியேற்றி

#நான்கு_நாட்களில்
#உங்கள்_ஈரலிலிருந்து #நச்சுகளை_வெளியேற்றி #சுத்தப்படுத்தலாம் !!

பொதுவாக நாம் இதயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை . ஏனெனில் இதயம் வேலை செய்வது நின்றால் நம் உயிர் உடலில் தங்காது என்பதாலேயே இந்தப் பயம் . ஆனால் இதயத்தை , ஈரலுடன் ஒப்பிடும் போது இதயத்தின் இயக்கம் சாதாரணமானதுதான் . இதயம் ஓயாது சுருங்கி , விரிந்து இயங்கும் சதைப் பிண்டமே , ஆனால் ஈரல் ஒரு வேதியியல் தொழிற்சாலை போல் ஓயாது இயங்குகிறது.ஈரல் வேலையை நிறுத்திவிட்டால் நாம் ஒரு இரு சக்கர வாகனப் புகையே நம்மைக் கொல்லப் போதுமானது. உடலின் செயல்பாடுகள் அனைத்திற்கும் முக்கிய காரணியாக இருக்கும் உறுப்பு ஈரல்தான்

கிராமங்களில் சொல்வார்கள் எனக்கு அந்த கடுமையான சமயத்தில் ஈரக் குலையே நடுங்கிவிட்டது என்பார்கள் .அதாவது ஈரல் என்பது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்டது. காரணமற்ற கவலை (கவலையே இல்லை என்று கவலைப்படுவார்கள் ) ஈரல் குறைபாட்டின் அறிகுறி.

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.அல்லோபதி மருந்துகளே அதிகம் கல்லீரலைக் கொல்லுபவை . ஏனெனில் அவை கடும் விஷம் கொண்டவை . அவை கொடுக்கும் நோக்கத்தை நிறைவேறுகிறதோ இல்லையோ கடைசியில் அவை கல்லீரலில் அவை விஷமாக தங்கி ஈரலை அதிகம் கொல்லுகின்றன.

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பசித்த பின் சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் இருந்தாலும் , கல்லீரலில் கொழுப்புகள் அதிகரித்துவிடும்.

#கல்லீரல் #பாதிக்கப்பட்டிருந்தால், #என்னென்ன_அறிகுறிகள் #இருக்கும்_என்பதைக்
#கீழே_காண்போம்!!

#வாய்_துர்நாற்றம்:

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும். வாய்துர்நாற்றம் சாதாரணமானது என்று பற்பசை விளம்பரங்களில் வருவதைப் பார்த்தால் , மக்களை எவ்வளவு முட்டாள்களாக நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது .

கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் சோர்வான கண்கள் மற்றும் பார்வைக்குறைபாடுள்ள கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், தோலில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்சனை அதிகம் ஏற்படும் .எண்ணெய்ப் பண்டங்களையும், கொழுப்புப் பொருட்களையும் சாப்பிடும் சமயம் அதிக நெஞ்செரிச்சல் உண்டாகும் .கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் சரியாக வெளியேறாமல் இருப்பதால் கல்லீரல் வீக்கமடையும் ,இதனால் மேல் வயிறு வீக்கமடையும் . இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்

#வெளுத்த_சருமம்:

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள மெலனின் நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்

#அடர்ந்த_சிவந்த_மற்றும் #மஞ்சள்_நிற_சிறுநீர் #__மற்றும்_கழிவுகள்:

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த கரு நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

#மஞ்சள்_நிறகண்கள்:

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்று ஏற்பட்டுள்ளது,அல்லது பித்தப்பையில் உள்ள பித்த நீர் (இதுதான் மஞ்சள் நிறத்தை அளிக்கிறது )உடலில் கலந்து , உடலை விஷமித்த நிலைக்குக் கொண்டு செல்கிறது என்று பொருள் , பித்தப்பையில் கல் உண்டாகி பித்தப்பையின் வாயிலை அடைத்துவிட்டாலும் இது நிகழும்.எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

#வாய்_கசப்பு:

கல்லீரலில் பித்தப்பையில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

#இப்பொழுது_ஈரலை #எவ்வாறு_சுத்தம்_செய்வது #என_பார்ப்போம்.

உலர்ந்த திராட்சை எனப்படும் கிஸ்மிஸ் உங்கள் ஈரலை சுத்தப்படுத்தும் ஒரு எளிய மருந்தாகும்.

காலையில் எழுந்தவுடன் அரை கப் உலர்ந்த திராட்சயை தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு நன்றாக கழுவவும். மறுபடியும் சூடாக்கி ஆறவைத்த தண்ணீரில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுத்த நாள் காலையில் முதலில் வெறும் வயிற்றில் ஊறவைத்த தண்ணீரை குடிக்கவும். அத்துடன் ஊறவைத்த உலர்திராட்சையையும் சாப்பிடவும். பிறகு படுக்கையில் ஒன்றரை மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் ஒரு பாட்டிலில் மிதமான சூடு தண்ணீர் நிறைத்த ஹாட் வாட்டர் பேக் அல்லது பாட்டில் கொண்டு வலது பாகம் வயிற்றில் சூடுபடும் படியாக கிடந்து ஒய்வெடுக்க வேண்டும்.

இவ்வாறு வாரத்தில் ஒரு நாள் வீதம் ஒரு மாதம் செய்யவும். இந்த முறையில் வருடத்தில் இரண்டு தடவை மட்டும் செய்ய வேண்டும். அதற்க்கு மேல் செய்யக்கூடாது.

#ஈரல்பாதிப்பு_நீங்க #மற்றொரு_எளிய_மருந்து:

ஈரல் நோயைக் குணப்படுத்த, சோம்பும் ஒரு மருந்தாகப் பயன்படுகிறது. சோம்பை இளம் வறுவலாக வறுத்து பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து காலை மாலை 1 டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், ஈரல் நோய் குணமாகும்.

உறுப்புகளை பலப்படுத்த

**மூளை முதல் மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த சில எளிய வழிகள்**
==================================================
👽மூளை
========

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.
===============================================
👀கண்கள்
================
பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரை சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.
================================================
😁பற்கள்
==============

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.
==============================================
🍁நரம்புகள்
===================
சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.
============================================
🌹ரத்தம்
===============
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
===========================================
💃சருமம்
=================
தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.
==========================================================
💓நுரையீரல் & இதயம்
===================
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்சிச்சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.
================================================
🍒வயிறு
=============

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
*வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.*

*வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.*

*சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.*

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்
==============================================
🍅கல்லீரல் & மண்ணீரல்
=========================
கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.
============================================
🍓மலக்குடல்
===============
அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.
==================================================
👣பாதம்
================
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.
==================================
நன்றி : வள்ளலார் மருத்துவம்