Saturday, April 18, 2020

வீட்டிலேயே சுவையான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி?*

☪🕋☪🕋☪🕋☪
*🏡வீட்டிலேயே சுவையான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி?*

*📑தேவையான பொருட்கள்:*

*🍚பச்சரிசி - 500 கிராம்*
*🧄பூண்டு - முழு பூண்டு-1*
*🥜கடலைப்பருப்பு -50 கிராம்*
*🧂வெந்தயம் - 2 தேக்கரண்டி*
*🥐இஞ்சி - இருவிரல் அளவு*
*🧂சீரகப்பொடி - 2-3 தேக்கரண்டி*
*🥫மஞ்சள் பொடி - 1 டீ ஸ்பூன்*
*🌶மிளகாய்பொடி - அரை டீ ஸ்பூன்*
*🧂உப்பு - தேவையான அளவு*
பெரிய வெங்காயம் - 2 
*🥕கேரட் - பாதி*
*🍅தக்காளி - 2*
*🥫சமையல் எண்ணை - 50 மில்லி*
*🌶பச்சை மிளகாய் - 2-3 (காம்பு நீக்கியது)*
*🥬புதினா+மல்லி -தலா ஒரு கொத்து*
*🍋எலுமிச்சம் பழம் - 1*
*🥥தேங்காய்ப் பால் - 300 மில்லி*
*🐐மட்டன் எலும்பு/கறி - 100 கிராம்*

*👨🏻‍🍳சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:*

*🌐1. சாதாரண தண்ணீரில் பச்சரிசி, வெந்தயம், சிறு பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.*

*🌐2. ஆட்டுக்கறி அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்பொடி ஆகியவற்றை கலந்து தயாராக வைக்கவும்.*

*🌐3. தக்காளி, வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.*

*🌐4. புதினா, கொத்தமல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.*

*🌐5. கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.*

*🌐6. எஞ்சிய இஞ்சியையும், பூண்டையும் தோல் நீக்கி மிக்ஸியில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.*

*👩🏻‍🍳செய்முறை:*

*🔮1. சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.*

*🔮2. நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.*

*🔮3. ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.*

*🔮4. நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயையும் சேர்த்து வதக்கவும்.*

*🔮5. வதங்கும்போது சீரகப் பொடி, மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.*

*🔮6. மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடி வைக்கவும்.*

*🔮7. அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1க்கு 3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.*

*🔮8. கொதி வந்த பிறகு அரிசியை  மெல்லமாக போட்டு 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.*

*🔮9. கொதிக்கும்போது பாதி எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.*

*🔮10. தேவையான அளவு உப்பு கலந்து சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.*

*🔮11. அரிசி கரைந்த பிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.*

*🔮12. புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும். சுவையான நோன்புக் கஞ்சி தயார்*

*💻மேலும் இஸ்லாம் மற்றும் சமுதாய செய்திகளை தெறிந்துகொள்ள நமது பக்கத்தை லைக் செய்யவும்:*

*📲ISLAM AND SOCIAL MESSAGE*

No comments:

Post a Comment