Tuesday, October 31, 2017

வாடகைக்கு வீடு எடுக்கும் வாடகைதாரர்கள

வாடகைக்கு வீடு எடுக்கும் வாடகைதாரர்கள் கவனத்தில் கொள்ள‍ வேண்டிய முக்கிய அம்சங்கள்!
=============================================

இன்றைய காலக்கட்டத்்தில் பலர் வேலை, படிப்பின் காரணமாக வெளியூ ரில் வசிப்பவர்கள், சொந்த வீடு வாங்க முடியாதவர்கள், இப்படி பலதரப்ப ட்ட‍ காரணங்களினால்
வாடகை வீட்டில் வசிக்க வேண்டிய சூழ் நிலையில் தள்ளப்வபடுகிறார்கள். இந்த‌ வாடகைக்கு வீடு எடுக்கும் போது என்னென்ன விஷயங்களை க வனிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

1.வாடகைக்கு வீடு எடுக்கும்போது அதற்கு வாட கை ஒப்பந்ாதப் பத்திரத்தை போடுவது முக்கியம். அதில் வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகை தாரர் ஆகிய இருவரது பெயர்கள், வயது, தந்தை பெயர் ஆகியவை கண்டிப்பாக இருக்க‍ வேண்டு ம். மேலும் வீட்டின்உரிமையாளரது நிரந்தரவீட்டு விலாசம், வாடகை தாரர் தனது நிரந்ரத வீட்டு விலாசத்தையோ (அல்) ஏற்கெனவே குடியிருந்த வீட்டின்விலாசத்தையும் தவறாமல் குறிப்பிட  வேண்டும். அது மட்டுமல்ல, வாடகைவீடு எங்கிருக்கிறதோ அந்த வீட்டின் விலாசத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும்.

2. மாத வாடகை தொகை எவ்வளவு, முன்தொகை தொகை எவ்வளவு, வாடகை ஒப்பந்வதகாலம் எத்த‍ னை மாதங்கள் அல்லதுள எத்தனை் வருடங்கள் என்பதை குறிப்பிட வேண்டும். மாத வாடகையை போல 10 மடங்கு தொ கை மன்தொகை வீட்டு உரிமையாளரால் வசூலிக்க முடியும். மாதம் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்கிறீர்கள் எனில் ரூ.1 லட்சம் முன்தொகை   கொடுக்கவேண்டியிருக்கும். இந்த தொகைக்கு வட்டி எக்காரணம் கொண்டும் கணக்கிடப்பட மாட்டாது. மேலும்  இந்த முன்தொகை, வீட்டின் உரிமையாளரை பொறுத்துமாறும். பெரும்பா லும் முன்தொகை அதிகமாக இருக்கும். அதை ஒப்பந்றதத்தில்குறிப்பிடுவது நல்லது. ஏனெனில் எதாவது பிரச்சனை வரும்போது பணத்தை திரும்ப பெற இது உதவியாக இருக்கும். மேலும் எவ்வளவு நாளைக்கு ஒப்பந்தம் செல்லுபடி ஆகும் என்பதையும் குறிப்பிட வேண்டும். அதே போல தொடர்ந்து வாடகை ஒப்பந்யதத்தை புதுப்பிப்பது அவசியம்.
அல்லதுய குத்தகைதக்குகூட சில வீட்டு உரிமை யளார்கள் விடுகிறார். அதாவது ஒரு பெரிய தொகையை வீட்டுஉரிமையாளர், குத்தகைவதா ரரிடம் வசூலிப்பார். அத்தொகையை வங்கியில் அவரது பெயருக்கு டிபாசிட்செய்து அதில்வரும் வட்டியை வாடகைதொகையாக கருதப்பட்டு வீட்டு உரிமையாளர் எடுத்துக்கொள்வார். அதா வது ஒரு படுக்கையறை கொண்ட வீட்டுக்கு குத்தகை தொகையாக சுமார் 4 முதல் 6லட்சம்வரை இருக்கும்

2 ப டுக்கைய றைகள் கொண்ட வீட்டுக்கு குத்தகைு தொகை யாக ரூ.6 to 10 இலட்சம்வரை இருக்கும். 3 படுக் கையறைகள் கொண்ட வீட்டுக்கு குத்தகை  தொகையாக ரூ.10 முதல் 15 இலட்சம் வரை இருக்கும். மேலும் வீட்டின் சதுரடியை பொறுத்து குத்தகைு தொகை வீட்டு உரிமையாளர்களால் நிர்ணயி க்கப்தபடும்.

3 .குடியிருக்கும் வீட்டில் டியூசன் எடுக்க கூடாது , வீட்டிலே சின்னதாக எதாவது தொழில்செய்யக்கூடாது, சுவரில்ஆணி அடிக்கக்கூடாது, மாடியில் செடி வைக்கக்கூடாது சில வீட்டு உரிமையாளர்கள்  சொல்வர்கள். இதையும் முன்கூட்டியே தெரிந்துவைத்துக்கொண்டால் பல பிரச்னைகளை தவிர்க்க முடியும்.

4.கூடுதலாக எதற்கெல்லாம் பணம் கொடுக்கவேண்டும் என்பதை பார்க்கவேண்டும். வாடகை போர்ஷனுக்கு உண் டான மின் கட்டணகத்தை நேரடியாக மின்வாரிய அலுவலக த்திலேயே செலுத்திக்கொள்ள‍ சில வீட்டு உரிமையாளர்  அனுமதிப்பார்கள். ஆனால்  சில வீடுகளில் வீட்டு உரிமை யாளர்களே மின் வாரிய அனுமதியுடன் சப் மீட்டர்ா பொருத் தியிருப்பர்க அந்த மீட்டர்ர காட்டும் மின்கட்டணம் சில இடங்களில் நியாய மாக இருக்கும் பல இடங்களில் அதிகமாக வசூலிப்பார்கள். அதாவது அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட  கூடுதலாக ஒரு யூனிட்டுக்கு ரூ.5,6 என வசூலிப்பார்கள். மேலும் தண்ணீருக்கு தனியாக, கழிவுநீர் வெளியே எடுப்பதற்கு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பணம் கேட் பார்கள். இதையெல்லாம் முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

5.வாடகைக்கு வீடு, வாடகைதாரர் எடுக்கும்போது, அந்த வீடு நல்ல நிலையில் இருந்ததோ அதே நிலையில் வீட்டை பராமரித்து வரவேண் டும். மீறிவாடகைக்குபோகும் வீட்டில்உள்ள சிலபொருட்கள் சேதம் அடை  ந்தால் அல்லது பழுதடைந்தால் அதற்கு வாடகை தாரரே முழு பொறுப்பு ஆவார். பழுதை சரிசெய்து அதற்கான தொகையை வீட்டு உரிமையாளர்  வாடகைதாரரிடம் இருந்து வசூலிப்பார். அல்லது   அந்த பழுதை  வாடகைதாரரையே சரிசெய்ய சொல் வார். அதாவது தண்ணீர் பைப் உடைவது, ஜன்னல் கண்ணாடி, வீடு தரையில் உள்ள டைல்ஸில் ஏதாவது கீறல் விழும்போது வாடகைதாரரே அவற்றை சரி செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டிய தெரிந்துகொண்டால், நல்லதுு.   சில வீடுகளில் பேன், ஏசி, லைட் ஆகியவற்றை வீட்டின் உரிமையாளரே போட்டு வைத்திருப்பார். இவைகள் பழுதானாலும் அவற்றையும் வாடகைதாரரே சரி செய்ய வேண்டும் என்பதையும் பார்க்க வேண்டும்.

6. வாடகைக்கு எடுத்த‍ வீட்டை நீங்கள் காலிசெய்வதாக இருந்தால், அவ் வீட்டின் உரிமையாளர், வாடகை வீட்டைவந்து பார்வையிடுவார். அவ் வீட்டில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருந்தாலோ அல்லதுர ஏதேனும் மின் பாக் கி வைத்திருந்தாலோ அல்லதுஏ உடைத்திருந்தாலோ அத் தொகையை வாடகைதார‌ர் கொடுத்த‍ முன்தொகையில் இருந்து கழித்துக்கொண்டு மீதித்தொகையை கொடுப்பார். அதனை வாடகைதாரரான நீங்கள்பெற்றுக் கொள்ள வேண் டும்.

7.நோட்டீஸ் பிரீயட் எவ்வளவு நாட்கள் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். வீடு காலிசெய்வதை எவ்வளவு நாளை க்கு முன் தெரிவிக்க வேண்டும் என்பதையும்,அந்த சமயத்தில் எதாவது கூடுதல் கட்டணம் (வீட்டில் சுண்ணாம்பு அடிப்பதற்கு) உள்ளதா என்பதை  தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

8.வாடகைஒப்பந்தப்பத்திரம் தயாரித்தபிமன் பத்திரத்தை படித்தபி றகு முடிவில் எல்லாப் பக்கங்்களிலும் இடது பக்கம்் வீட்டு உரிமையாளரும், வலது பக்கத்்தில் வீட்டு வாடகைதாரரும் மறக்காமல் கையொப்பம்் இடவேண்டு ம். மேலும் சாட்சிகள் இருவர் கையொப்பம்ப இடவேண்டு ம். முதல் சாட்சி, வீட்டு உரிமையாளரது உறவினரோ அல்லதுச  நண்பர் களோ அல்லதுு தெரிந்தவர்களோ கையொப்பம்் இட வேண்டும். இரண்டாவது சாட்சி வாடகைதாரரது உறவினரோ அல்லதுப நண்பர்களோ அல்லதுத தெரிந் தவர்களோ கையொப்பம்ல இடவேண்டும். சாட்சிகள் கையொப்பம்ள இடும்போது, கையொப்பம்ல, பெயர், வயது மற்றும் வீட்டு விலாசம் ஆகியவற்றை தவறா மல் குறிப்படவேண்டும்.

9. எல்லாவற்றுக்கும் மேலாக வாடகைதாரர், வீட்டு உரிமையாளரை பற்றி அக்கம்்பக்கத்ததில் உள்ளவடர்க ளிடம் விசாரித்து அவரை பற்றி தெரிந்து கொள்ள‍ வேண்டும். அதேபோல் வீட்டுஉரிமையாளர், வாட கைதாரர் ஏற்கெனவே குடியிருந்த வீட்டிற்கு சிரமம் பாராமல் சென்று அவரைப் பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள‍ வேண்டும். இதனால் பல பிரச்சனைகள் தவிர்க்கப்தபடும்.

நன்றி- விதை 2 விருட்சம்
(இது பழைய பதிவு - புதிய சட்டப்படி,பெரிய செலவுகளை, உரிமையாளர் செய்து தர வேண்டும், தனி slide கீழே கொடுக்கப்பட்டுள்ளது)

Wednesday, October 11, 2017

ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது

ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்று தெரிவிக்காமல் மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு : சென்னை நுகர்வோர் நீதிமன்றம்:

சென்னை,
ஏற்கனவே உள்ள நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்று தெரிவிக்காமல் மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு என்று கூறி பாதிக்கப்பட்டவருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், மருத்துவ சிகிச்சைக்கான செலவு தொகை மற்றும் இழப்பீடாக ரூ.3½ லட்சம் வழங்க சென்னை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாலவாக்கத்தை சேர்ந்தவர் எட்வின் சுந்தரசெல்வன். டென்னிஸ் பயிற்சியாளர். இவர், சென்னையில் உள்ள மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:–
நான், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மருத்துவ காப்பீடு எடுத்துள்ளேன். இதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பெற முடியும்.
கடந்த 2014–ம் ஆண்டு இருதய நோயால் பாதிக்கப்பட்டேன். இதைதொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனக்கு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்காக ரூ.3 லட்சம் செலவானது. இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த தொகையை வழங்க மறுத்துவிட்டது.
காரணம் கேட்டபோது, எனக்கு இருதய பாதிப்பு 15 ஆண்டுகளாக இருந்து வருவதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும், மருத்துவ காப்பீடு எடுப்பதற்கு முன்பே இருதய நோய் இருந்ததால் காப்பீடு பெற தகுதியில்லை என்றும் கூறியது.
ஏற்கனவே நோய் இருந்தால், அந்த நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவிக்கவில்லை. எனவே, எனக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை ரூ.3 லட்சத்தை வழங்க உத்தரவிட வேண்டும். சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஜெயபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘ஏற்கனவே நோய் இருந்தால், அந்த நோய்க்கு காப்பீடு பெற முடியாது என்பது குறித்து இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரருக்கு தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் மனுதாரருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகையை தர மறுப்பது சேவை குறைபாடு ஆகும்.
எனவே, மனுதாரருக்கு மருத்துவ சிகிச்சைக்கான செலவுத் தொகை ரூ.3 லட்சத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் 6 வாரத்துக்குள் வழங்க வேண்டும். மேலும், மன உளைச்சல் மற்றும் சேவை குறைபாட்டுக்காக மனுதாரருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.50 ஆயிரம் இழப்பீடாகவும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
Source: dailythanthi. ஜூலை 20, 2017,

காப்பீடு சார்பான எனது முந்தைய பதிவுகள்:

Pay emergency claim, district consumer disputes redressal forum to insurance company:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1214213152055900
தாமதத்திற்காக இழப்பீட்டை மறுக்கக் கூடாது: காப்பீட்டு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1214180058725876
வாரிசு சான்றிதழில் பெயர் இல்லை எனக்கூறி ஒருவருக்கான விபத்து இழப்பீட்டு தொகையை தர காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1213594132117802
கைகளை இழந்த சிறுவனுக்கு ரூ.1 கோடி நஷ்டஈடு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1213549725455576
பாலிசி எடுத்தவர் 23 நாட்களில் உயிரிழப்பு: வாரிசுக்கு, காப்பீட்டு நிறுவனம், ரூ.5லட்சம் இழப்பீடு வழங்க, கோவை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு :
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1204849702992245
சென்னை: பெண்ணுக்கு மருத்துவ செலவு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1198538986956650
ரூ.2 இலட்சம் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன், காப்பீடு செய்தவருக்கு கிடைக்கத்தக்கது – நீதிமன்றம்
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1197320830411799
வீட்டில் திருட்டு போன பொருட்களுக்கு ரூ.3.64 லட்சம் இழப்பீடு தர உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1196761233801092
சேவைக் குறைபாடு: பாதிக்கப்பட்டவர் செலுத்திய தொகையை திரும்ப வழங்க உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1196165527193996
ஆயத்த ஆடை கடை உரிமையாளருக்கு ரூ.9.64 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்க உத்தரவு:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1212939015516647
Murder can be accident, forum tells insurer: [மாநில நுகர்வோர் ஆணையம் சென்னை]
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1212765032200712
லாரி உரிமையாளருக்கு வாகன இழப்பீடு நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1209999202477295
மினி லாரியின் உரிமையாளருக்கு இழப்பீடு நெல்லை நுகர்வோர் கோர்ட் உத்தரவு
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1209990939144788
வாகனத்தை பழுதுபார்த்த தொகையை வழங்காததால் வாடிக்கையாளருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்க வேண்டும்:
https://www.facebook.com/trdurai.kamaraj/posts/1207829029360979

வாடகை வீடைச் சொந்தம் கொண்டாட முடியுமா? :

வாடகை வீடைச் சொந்தம் கொண்டாட முடியுமா? : சட்டம் சொல்வது என்ன

வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுவது இயற்கைதான். அப்படி பரவலாக எழும் கேள்விகள் குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து வல்லுநர்களிடம் கேட்டறிந்த கருத்துகளை இங்கே தொகுத்துத் தந்துள்ளோம்.

1. வாடகை வீட்டில் மிக நீண்டகாலம் வசிப்பவர்கள் அந்த வீட்டைச் சொந்தமாக்கச் சட்டத்தில் இடம் இருக்கிறதா?

வாடகை வீட்டுக்காரர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டைச் சொந்தம் கொண்டாடச் சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர சட்டத்தில் வழியிருக்கிறது. அதாவது வீட்டு உரிமையாளர் வாடகை வசூலிக்காமல் இருக்கும் பட்சத்தில் இது சாத்தியமாகும்.

2 .வாடகைக் கட்டணம், அட்வான்ஸ் நிர்ணயிப்பதில் சட்ட வரையறை உண்டா?

வாடகைக் கட்டணம் வசூலிப்பதில் சட்ட வரையறை எதுவும் சட்டத்தில் இல்லை. ஆனால் வாடகைக் கட்டணம் கூட்டுவது குறித்து வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் உரிமையாளர் அதற்கேற்றபடி வாடகைக் கட்டணத்தைக் கூட்டலாம். ஆனால் அதற்கு வாடகைதாரருக்கு உடன்பாடு இல்லாதபோது அவர்கள் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். அதுபோல உரிமையாளரும் வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில் கட்டணம் உயர்த்துவதற்கான உரிய காரணத்தைத்துடன் நீதிமன்றம் சென்று முறையிடலாம்.

வாடகைதாரர் அதிகமான வாடகைக் கட்டணத்திற்கு குடிவந்த பிறகு, அந்தக் கட்டணம் அதிகம் என நினைத்தாலும் நீதிமன்றத்தை அணுகலாம். உதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு ஒருவர் குடி வருகிறார் என வைத்துக்கொள்வோம். அவர் குடி வந்த பிறகு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் நீதிமன்றத்தை அணுகலாம். வாடகை முன்பணத்தைப் பொறுத்தவரை அதற்குச் சட்டம் நிர்ணயித்திருக்கும் தொகை என்பது ஒரு மாத வாடகைதான். அதாவது வாடகைதாரர் அளிக்கவிருக்கும் வாடகையை முன்பணமாகச் செலுத்தினாலேயே போதுமானது.

3. வாடகைதாரர்களைக் காலி செய்யச் சொல்ல என்னென்ன காரணங்கள் உள்ளன?

உரிமையாளர் வீட்டைக் காலி செய்யக் கோர முறையான சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை:
வாடகை ஒப்பந்தப் பத்திரத்தில் குறிப்பிட்ட தேதிக்குள் வாடகையைச் செலுத்தத் தவறும்போது காலிசெய்யச் சொல்லலாம். அதாவது 5க்குள் வாடகை தருவதாக ஒப்பந்தம் என்றால் உரிமையாளர் அந்தத் தேதியில் இருந்து 15 நாட்கள் வரை பார்க்கலாம். அதற்குப் பிறகு வாடகை செலுத்தத் தவறினால் காலிசெய்யச் சொல்லலாம்.

வாடகை ஒப்பந்தப் பத்திரத்திற்கு மாறாக வீட்டை வேறு ஒருவருக்கு உள்வாடகைக்கு விடும்போது காலிசெய்யச் சொல்லலாம். வீட்டின் மதிப்பையும், உபயோகத்தையும் பாதிக்கக்கூடிய வகையில் அதைச் சேதப்படுத்தி இருந்தால் காலிசெய்யச் சொல்லலாம்.
வீடு எந்த உபயோகத்திற்கு விடப்பட்டதோ அதைத் தவிர்த்து மற்ற உபயோகத்திற்குப் பயன்படுத்தும்போது. உதாரணத்திற்கு வசிப்பதற்காக எடுத்து அதில் ஏதெனும் வணிகம் செய்தால். சட்ட விரோதமான செயல்களுக்காக அந்த வீட்டைப் பயன்படுத்திய அல்லது பயன்படுத்த அனுமதித்த குற்றத்திற்காக வாடகைதாரர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்தால்… வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களுக்குத் தொல்லை தரக்கூடிய செயல்களில் வாடகைதாரர் ஈடுபடும்போது… அந்த வீட்டை உபயோகிக்காமல் 4 மாதங்களுக்கு மேல் பூட்டி வைத்திருந்தால்… (மலைவாசஸ் தலங்களுக்கு இந்த வீதிமுறை செல்லாது).

4. வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் உரிமையாளர் இழப்பீடு வாங்கிக்கொள்ள சட்ட வழிமுறை இருக்கிறதா?

வாடகைதாரர் வீட்டைச் சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீடைப் பெற்றுக்கொள்ளச் சட்டத்தில் இடம் இருக்கிறது. வாடகைதாரர் வீட்டிற்காகச் செலுத்தியிருக்கும் அட்வான்ஸில் உரிய தொகையைப் பிடித்துக்கொள்ளும் உரிமையும் உரிமையாளருக்கு உண்டு.

5. வாடகைதாரர்கள் தங்கள் பிரச்சினைகள் தொடர்பாக நீதிமன்றத்தை எப்படி அணுகுவது?

சென்னையைப் பொறுத்தவரை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம். வெளியூர்களில் இருப்பவர்கள் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்.

6. தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகள் நிறுத்தப்படுவது, திடீரென வீட்டைக் காலிசெய்யச் சொல்வது – இது போன்று உரிமையாளர்கள் தொந்தரவு தரும்போது அதற்கான இழப்பீடு வாங்க வாடகைதாரர்களுக்கு உரிமை உண்டா?

தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்துவதற்கு உரிமையாளருக்கு உரிமை இல்லை. இம்மாதிரியான சூழ்நிலையில் வாடகைதாரர் உரிமையியல் நீதிமன்றத்தில் சென்று முறையிடலாம். இம்மாதிரியான வழக்குகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுத் தீர்வு காணப்படும். இதுபோன்ற தொந்தரவுகளால் வாடகைதாரருக்கு ஏதேனும் இழப்பு இருக்கும்பட்சத்தில் உரிமையாளர் அதற்குரிய இழப்பீடைத் தர வேண்டும்.                                                நன்றி - சட்டம் உன் கையில்