Sunday, April 29, 2018

உங்களுக்கு தையல் தெரியுமா?

உங்களுக்கு தையல் தெரியுமா?

*தையல் மிஷினை மாதமொருமுறை எண்ணெய் போட்டு துடைக்க வேண்டியது அவசியம். எண்ணெய் போடும் முன் இயந்திரத்தில் உள்ள நூல், அழுக்கு, தூசிகளை பிரஷ் கொண்டு எடுத்து விட வேண்டும்.

*தையல் மிஷின் டிராயரில் ஒரு பின்குஷனில் சில குண்டூசிகள், ஊசிகள் குத்தி வைத்தால் தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளலாம்.

*ஒரு காந்தத் துண்டினையும் வைத்திருந்தால் ஊசிகள் எங்கு கிடந்தாலும் எடுத்து விடலாம்.

*தடிமனான துணிகளை தைப்பதற்கு முன்பு ஊசியில் சிறிது சோப்பு தடவினால் ஊசிகள் உடையாமல் இருக்கும்.

*ஊசிகளின் முனை மழுங்கி விட்டால் உப்புத் தாளில் பல முறை குத்தி எடுத்தால் கூர்மையாகி விடும்.

*கத்தரிக்கோல் மழுங்கி விட்டால் உப்புக் காகிதத்தை கத்தரியால் கத்தரித்தால் கூர்மையாகி விடும்.

*தையல் மிஷின் பெல்ட் நீளமாக இருந்தால் குளிர்ந்த நீரில் அதை அரைமணி நேரம் ஊறவைத்து பிறகு வெயிலில் காயவைத்தால் சரியாகி விடும்.

*ஊசிகள் வைக்கும் டப்பாவில் சிறிது ஸ்டீல்உல்லை நிரப்பி வைத்தால் ஊசிகள் துருப்பிடிக்காது.

*பிளாஸ்டிக் ஷீட் போன்றவற்றைத் தைக்கும்முன் அதன் மேல் மெழுகு தடவிய காகிதத்தை வைத்துத் தைத்து விட்டு பிறகு அந்தக் காகிதத்தைக் கிழித்து விட்டால் பிளாஸ்டிக் ஷீட் கிழியாது.

*ஜிப் வைத்துத் தைப்பதற்கு முன் செலோஃபென் டேப் கொண்டு ஒட்டி விட்டு பிறகு எளிதாக தைக்கலாம்.

*தையல் மிஷினை சுத்தப்படுத்த டர்பன்டைன் ஆயிலைப் பயன்படுத்தலாம். எண்ணெய் போட்ட பின்பு ஒரு துணியில் சிறிது நேரம் தைத்து விட்டு பின்பு உறையினால் மூடி வைக்க வேண்டும்.

*தைக்கும் போது கையை ஒரு சிறிய குஷன் தலையணை மேல் வைத்துக் கொண்டு தைத்தால் வலிக்காது. அவ்வப்போது மரம், செடிகளைப் பார்க்க வேண்டும், பார்வையைத் திருப்ப வேண்டும். இப்படிச் செய்தால் கண்கள் களைப்படையாது.

*தையல் மிஷினைப் பயன்படுத்தாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடாது. அவ்வப்போது தைக்க வேண்டும்.

Friday, April 27, 2018

உடம்பு தேறமாட்டேங்குதா

எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு தேறமாட்டேங்குதா?... இத சாப்பிடீங்களா?...

நீங்கள் நோஞ்சான்களின் லிஸ்ட்டில் இருப்பின், உடல் எடையை அதிகரித்து அந்த லிஸ்டை விட்டு வெளியேற வீட்டு வைத்தியம் சிறந்த வழிகளில் ஒன்றாகும். இது எளியது , பயனுள்ளது மற்றும் எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாத உணவே மருந்தாகும் மருத்துவ முறையாகும்.சிறப்பு என்னவென்றால், இதில் குறிப்பிட்டுள்ள பல வழிமுறைகளை எளிதாக நீங்கள் பயன்படுத்தலாம்.
அதற்காக வழக்கமான உங்கள் நடைமுறைகளை பெரிதாக மாற்றிக்கொள்ளத் தேவையில்லை. எனவே , எடையைக் கூட்ட வீட்டு வைத்தியங்களே சிறந்த வழியாகும். அதிகமான முயற்சி இல்லாமல் எளிதாக உங்கள் எடையை அதிகரிக்க உதவும் 10 வீட்டு வைத்தியங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன,

வெண்ணை (பட்டர்) மற்றும் சர்க்கரை

• ஒரு தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட வெண்ணை மற்றும் சம அளவு சர்க்கரையைச் சேர்த்து நன்றாக கலக்குங்கள்.• உங்கள் உணவை சாப்பிடுவதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு இந்தக் கலவையை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.• இந்த கலவையை சாப்பிட ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே வியக்கவைக்கும் முடிவுகளை நீங்கள் காணலாம்.

மதிய உறக்கம்

• மதிய நேரங்களில் சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்திற்கு குட்டித்தூக்கத்தை போடுங்கள்.• இது எடையைக் அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், இரவில் நிம்மதியாகத் தூங்கவும் உதவும். எடையை வேகமாகக்கூட்ட இந்த முறையான வீட்டு வைத்தியம் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

மாங்காய் மற்றும் பால்

• ஒரு மாம்பழத்தை (பழுத்த) ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடலாம்.• மாம்பழத்தைச் சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடான பால் குடிப்பதை உறுதி செய்யுங்கள்.• நல்ல முடிவுகளை ஒரு மாதம் கழித்து நீங்கள் காண்பீர்கள்.

அத்தி மற்றும் உலர்ந்த திராட்சை

• உலர்ந்த அத்தி மற்றும் திராட்சை கலோரிகளின் சொர்க்கபுரியாகும், எனவே அவைகள் உங்கள் உடலின் எடையை அதிகரிக்க எளிதாக உதவுகின்றன.• 6 உலர்ந்த அத்தி மற்றும் சுமார் 30 கிராம் உலர்ந்த திராட்சையை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும் .• அடுத்த நாளில் அவைகளை இரண்டு பகுதிகளாகச் சாப்பிடுங்கள் .• பெரும்பாலான மக்கள் 20 முதல் 30 நாட்களில் சாதகமான முடிவுகளைக் காண்கிறார்கள்.

வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெய் அதிக கலோரிகளைக் கொண்டது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எனவே உடல் எடையைக் கூட்ட சரியான வீட்டுத் தீர்வு இதுவேயாகும். உங்கள் எடை என்ன வேகத்தில் அதிகரிக்கிறது என்பதை வேர்க்கடலை வெண்ணெயை உங்கள் ரொட்டி அல்லது பேக்கல் மீது தாராளமாகப் பயன்படுத்திப் பாருங்கள்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்குகள் கார்போஹைட்ரேட்டுகளால் நிரம்பியுள்ளன. எனவே அவற்றைச் சாப்பிடுவது உங்கள் உடல் எடையை அதிகரிக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. கிரில் அல்லது பேக்கிங் உருளைக்கிழங்கு , அல்லது பிரஞ்ச் பிரையாக மேலும் நீங்கள் விரும்பினால் கூடுதல் விர்ஜின் எண்ணெயைப் பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் பிரஞ்ச் பிரையாக சாப்பிட்டால், நுகர்வை ஒரு வாரத்திற்கு இரண்டு முறை மட்டும் என கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள் .

கொட்டைகள்

பாதாம், அக்ரூட் பருப்புகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆளி விதைகள் போன்ற கொட்டைகள் கலோரிகளால் நிரம்பியுள்ளன எனவே அவற்றை உங்கள் உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான நட்ஸ் சுவை, ஊட்டச்சத்து மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவற்றை அனுபவிக்க உதவும் ஒன்றாகவே உள்ளன. ஆரோக்கியமான கொழுப்பைக் கொண்டுள்ள இந்த நட்ஸ் , உங்கள் எடையை ஆரோக்கியமான வழியில் அதிகரிக்க எளிதாக உதவுபவை. இருப்பினும், அதையே தொடர்ந்து சாப்பிடாதீர்கள் பிறகு பசியை உணர மாட்டீர்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம் ஒருவரது உடல் எடையைக் குறைப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும் . நீங்கள் வேலையில் அல்லது வீட்டில் ஒரு மன அழுத்தம் தரும் நிலைமையைக் கையாள்கிறீர்கள் என்றால், அதைப் போக்க உதவும் யோகா அல்லது மாஸ்டர் மூச்சுப் பயிற்சி நுட்பங்களைப் பயன்படுத்துங்கள் .நீங்கள் மன அழுத்தத்தைப் போக்கும் முறையைக் கற்று செயல்படுத்தும்பொழுது உடல் எடை சீராக அதிகரிப்பதைப் பார்க்கலாம்.

வாழை மற்றும் பால்

வாழைப்பழங்கள் கலோரிகளால் நிரம்பியுள்ளன என்ற ரகசியத்தை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். இவைகள் உடனடியான எனர்ஜி லிப்ட் கொடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இதனால்தான் டென்னிஸ் வீரர்கள் பெரும்பாலும் தங்கள் விளையாட்டின் இடைவெளியில் பழம் சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருப்பதைக் காணலாம். தினமும் காலையில் ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டு அதனுடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்த்த மித சூட்டிலுள்ள பாலை அருந்துங்கள்.

பாதாம் பால்

பாதாம் பாலும் சில பவுண்டுகள் எடையைக் கூட்ட உதவும் சிறந்த வழியாகும்.பாதாம், உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பேரிச்சையைச் சேர்த்து பாலைக் கொதிக்க வைக்கவும். ஒரு மாதம் வரை ஒவ்வொரு நாளும் ஒரு வேளைக்கு இந்தப் பாலை அருந்துங்கள் . வேகவைத்த பாதாம், அத்திப்பழம் மற்றும் பேரீச்சையை எறியாமல் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பாதாம் பாலும் சில பவுண்டுகள் எடையைக் கூட்ட உதவும் சிறந்த வழியாகும்.பாதாம், உலர்ந்த அத்திப்பழம் மற்றும் பேரிச்சையைச் சேர்த்து பாலைக் கொதிக்க வைக்கவும். ஒரு மாதம் வரை ஒவ்வொரு நாளும் ஒரு வேளைக்கு இந்தப் பாலை அருந்துங்கள் . வேகவைத்த பாதாம், அத்திப்பழம் மற்றும் பேரீச்சையை எறியாமல் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் எடையை அதிகரிக்க மேலுள்ள பல்வேறு வீட்டு வைத்திய முறைகளைப் பயன்படுத்தலாம். நீங்கள் விரும்பும் எடையை அடையும் வரை இந்த மகத்தான வீட்டு வைத்தியங்களைத் தொடருங்கள் .உங்கள் எடையை அதிகரிக்க உதவுவதற்கு ஆரோக்கியமான, சிறந்த மற்றும் எளிமையான வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இந்த சிறந்த 10 வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்...

Thursday, April 26, 2018

சமையல் குறிப்புகள்

சமையல் குறிப்புகள் !!

பச்சை மிளகாய் பழுக்காமல் இருக்க, ஒரு பாட்டிலில் பச்சை மிளகாயுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி போட்டு, இறுக மூடி வைத்தால் நீண்ட நாட்களுக்கு பழுக்காமல் இருக்கும்.

🍲 முள்ளங்கி, காலிஃப்ளவர் போன்ற காய்களில் உள்ள இலைகளைப் பொடியாக நறுக்கி, பருப்பு சேர்த்து கூட்டு செய்தால் சுவையாக இருக்கும். சு+ப் செய்தும் சாப்பிடலாம்.

🍞 பிஸ்கட்டுகள் நமர்த்துப் போகாமல் இருக்க, மெல்லிய துணியில் சிறிது சர்க்கரைப் போட்டு மூட்டை போல் கட்டி, பிஸ்கட் இருக்கும் டப்பாவில் போட்டு வைக்க வேண்டும்.

🍲 வெஜிடபிள் பிரியாணி செய்யும் போது, அதனுடன் வேக வைத்த சோளத்தையும் சிறிது சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

🍨 பால் பவுடரைச் சற்று வெதுவெதுப்பான நீர் விட்டுக் குழைத்து, நான்கு வித பழங்களை நறுக்கி, இத்துடன் பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து ஃப்ரிட்ஜில் மூன்று மணி நேரம் வைத்தால் சுவையான மில்க் ஃப்ரூட் சாலட் தயார்.

🍩 ரவா உப்புமா மிஞ்சி விட்டால் அதில் சிறிதளவு அரிசி மாவை கலந்து வடை போன்று தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் ருசியாக இருக்கும்.

👉 சமையல் செய்யும் போது கையில் சு+டு பட்டுவிட்டால் பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவினால் விரைவில் குணமாகும்.

🌿 புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் வராது.

🌿 கறிவேப்பிலை துவையலுக்கு உளுத்தம் பருப்புச் சேர்த்து தாளிப்பதற்கு பதிலாக நிலக்கடலையை வறுத்துப் போட்டால் துவையல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

🍝 ஆரஞ்சு பழத்தோலை பொடியாக நறுக்கி, அதனுடன் பச்சை மிளகாய் வதக்கி வத்தல் குழம்பில் கலந்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

🍛 பொட்டுக்கடலை துவையல் செய்யும் போது இஞ்சிக்கு பதில் பு+ண்டு சேர்த்து அரைத்து, அதனுடன் கொத்தமல்லி, சிறிது புளி அல்லது எலுமிச்சை சேர்த்து அரைத்தால் துவையல் ருசியாக இருக்கும்.

🍝 கருவாடு மிளகு குழம்பு செய்யும் போது குழம்பில் அதிகம் தண்ணீர் சேர்க்காமல், குழம்பிற்கு அதிகம் நல்லெண்ணையை சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசியாக இருக்கும்.

🍝 எள்ளு மட்டன் குழம்பு செய்வதற்கு வேக வைத்த மட்டனை சேர்த்தப் பிறகு, ஒரு முருங்கைக்காய் அல்லது ஒரு உருளையை அதனுடன் சேர்த்தால் குழம்பு கூடுதல் சுவையாக இருக்கும்.

கேரட் அல்வா

= *💢 செய்தி களஞ்சியம்💢* =

*🍄சுவையான கேரட் அல்வா செய்வது எவ்வாறு...!*

                      🌀🌀🌀

*தேவையானவை:*

கேரட் - ஒரு கிலோ
பால் - அரை லிட்டர்
நெய் - 50 கிராம்
முந்திரி - 20 முதல் 30
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் - 3
கிராம்பு - 3

*செய்முறை:*

🌾பாலை நீர் ஊற்றாமல் காய்ச்சி வைக்கவும். மற்ற தேவையானவற்றை எடுத்துக் கொள்ளவும். கேரட்டை மேல் தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து துருவிய கேரட்டை மட்டும் சேர்த்து நீர்பதம் வற்ற வதக்கவும். பின் அதில் பால் மற்றும் சீனி சேர்த்து சுருளும் வரை கிளறவும்.

🌾வேறொரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி முந்திரி, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை வறுத்து வைத்துக் கொள்ளவும். பால் வற்றியதும் அதில் வறுத்த முந்திரியை சேர்த்து நெய் பிரியும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். நெய் பிந்து வந்ததும் சுவையான கேரட் அல்வா தயார்.

*குறிப்பு:*

🌾கேரட்டில் உள்ள இயற்கையான நிறமே போதுமானது. சுவையை கூட்ட கன்டன்ஸ்ட் மில்க் சேர்த்துக் கொள்ளலாம். வெறும் வாணலியில் கேரட்டை நீர் போக வதக்குவதால் பச்சை வாசம் நீங்கும்...

                      🌀🌀🌀

🌷= *🔖 செய்திகள் 🔖*=🌷

ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம்

*🌸Mr.Health & Natural Life🌸*

*🔰 ரத்த சோகையை போக்கும் நெல்லிக்காய் ஜாம் 🔰!*

🚩 ரத்தத்தில் கால்சியம், இரும்பு சத்து குறைவால் வளர் இளம் பெண்கள், இளைஞர்கள் அதிகளவில் ரத்த சோகை ஏற்பட்டு முகம் வெளிறி காணப்படுவர். ""ஹீமோகுளோபினை அதிகரிக்க நெல்லிக்காய் ஜாம் தொடர்ந்து சாப்பிட்டால் புத்துணர்ச்சி பெறலாம்,''

*தேவையான பொருட்கள்:*

🚩ஒரு கிலோ நெல்லிக்காய், 

🚩1.25 கிலோ வெல்லம்,

🚩சுக்கு 25 கிராம்,

🚩ஏலக்காய் 10 கிராம்.

*செய்முறை:*

🚩நெல்லிக்காயை 700 மி.லிட்டர் நீரில் நன்கு வேகவைத்து அதிலிருந்து கொட்டைகளை நீக்கிவிடவும். வெல்லத்தை துருவலாக்கி நெல்லிக்காய் வேகவைத்த நீரில் பாகுபோல் காய்ச்சவும். கொட்டை நீக்கிய நெல்லிக்காயை மிக்சியில் அடித்து, கொதிநிலையில் உள்ள வெல்லப்பாகு உடன் சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும். இப்போது நெல்லிக்காய் ஜாம் ரெடி. இதனை சூடாக சாப்பிடக்கூடாது. ஜாடியில் வைத்து ஆற வைத்து தினசரி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி கொள்ளலாம். ஒருமுறை ஜாம் தயாரித்தால் ஆறுமாதம் வரை பயன்படுத்தலாம். அரைமணிநேரத்தில் தயாரித்து விடலாம்.

*மருத்துவ பயன்கள்:*

🚩வெல்லத்தில் மிகுந்துள்ள இரும்பு சத்தும், நெல்லிக்காயில் உள்ள கால்சியம் சத்தும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ரத்த சோகை உள்ளவர்கள் இதைதொடர்ந்து பயன்படுத்தினால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கூடி சிவப்பு அணுக்கள் அதிகரிக்கும். 👌🏻

Wednesday, April 18, 2018

இரத்தத்தையும் சுத்தம் செய்ய சிறந்த பழம்

உடம்பிலுள்ள முழு இரத்தத்தையும் இயற்கையாக சுத்தம் செய்ய சிறந்த பழம்.

உடலில் இரத்தம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. உடலில் உள்ள இரத்தம் ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் இருந்தால் தான், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜன் கிடைப்பதோடு, ஊட்டச்சத்துக்களும் கிடைத்து, உடல் உறுப்புக்களின் செயல்பாடு சிறப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

என்ன தான் இரத்தம் உடலில் இயற்கையாக சுத்திகரிக்கப் பட்டாலும், நாம் உண்ணும் சில உணவுகளால் அசுத்தமாகத் தான் செய்கிறது. இதனைத் தவிர்க்க இரத்தத்தை சுத்தம் செய்யும் செயல்களை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். உடலில் இருக்கும் இரத்தத்தை ஒருசில உணவுப் பொருட்கள் சுத்தம் செய்யும். இப்படி இரத்தத்தை சுத்தம் செய்யும் செயல்முறையின் போது நோயெதிர்ப்பு மண்டலமும் மேம்பட்டு, சரும ஆரோக்கியமும் ஊக்குவிக்கப்படும்.

இங்கு இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ந்து ஒரு வாரம் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தை விரைவில் சுத்தம் செய்ய முடியும். சரி, இப்போது அந்த உணவுகள் எவையென்று பார்ப்போமா!

இலந்தை பழம்
வைட்டமின் சத்துக்கள் அதிகம் கொண்ட இலந்தை பழம், உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரக்கூடியது.இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ, பி, சி, டி, இரும்புச் சத்து, புரதம் மற்றும் தாது உப்புக்கள் அதிகமுள்ளது.இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.

அவகேடோ
அவகேடோ பழம் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுவதோடு, இரத்த நாளங்களையும் சுத்தமாக வைத்துக் கொள்ளும். இதற்கு அவகேடோ பழத்தில் உள்ள க்ளுடாதியோன் தான் காரணம். இது புற்றுநோயை உண்டாக்கும் பொருட்களையும் வெளியேற்றும். மேலும் அவகேடோவில் உள்ள வைட்டமின் ஈ, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஆப்பிள்
மிகவும் ஆரோக்கியமான பழமாக கருதப்படும் ஆப்பிள் சளியில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, அசிடிட்டியைக் குறைக்கும் மற்றும் இரத்தத்தையும் சுத்தம் செய்யும். இப்பழத்தினுள் அடங்கியுள்ள சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். அதிலும் ஆப்பிளை தோலுடன் தான் சாப்பிட வேண்டும். அதில் தான் பெக்டின் என்னும் நார்ச்சத்து உள்ளது. இது தான் உடலில் இருந்து கனமான மெட்டல் பொருட்களை அகற்றும்.

பூண்டு
பூண்டில் இவ்வளவு தான் நன்மை அடங்கியுள்ளது என்றில்லை. இதன் மருத்துவ குணத்தால், இதனைக் கொண்டு பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம். அப்படிப்பட்ட பூண்டு இரத்தத்தை சுத்தம் செய்யாதா என்ன? இதற்கெல்லாம் முக்கிய காரணம் பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள் தான். ஆகவே இரத்தத்தை சுத்தம் செய்ய பூண்டுகளை உணவில் சேர்ப்பதோடு, தினமும் ஒன்றை பச்சையாக சாப்பிடுங்கள்.
பச்சை இலைக் காய்கறிகள்
பச்சை இலைக் காய்கறிகளல் குளோரோபில் ஏராளமான அளவில் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை உறிஞ்சி வெளியேற்ற உதவும். அதோடு இது கல்லீரலையும் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். அதற்கு பச்சை இலைக் காய்கறிகளை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.

பீட்ரூட்
பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாகவும், வைட்டமின்களான ஏ, சி, மக்னீசியம், இரும்புச்சத்து, ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் அடங்கியுள்ளது. இப்படிப்பட்ட பீட்ரூட் பீட்டாசையனின் நிறமியால் தான், அடர் சிவப்பு நிறத்தில் உள்ளது. இந்த நிறமி, கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்க உதவுவதோடு, இரத்தத்தை சுத்தம் செய்து, உடல் முழுவதும் சிறப்பாக ஓடவும் உதவி புரியும். மேலும் இதில் இரும்புச்சத்து உள்ளதால், இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.

ப்ராக்கோலி
காலிஃப்ளவர் போன்றே பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியில், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம், மக்னீசியம் போன்றவைகள் அதிகம் உள்ளது. அதோடு இதில் சல்போராபேன் என்னும் பைட்டோகெமிக்கலும் உள்ளது. இது கல்லீரல் நொதிகளைத் தூண்டி, இரத்தத்தை சுத்தம் செய்து, கார்சினோஜென்களை வெளியேற்றும்.

ப்ளூபெர்ரி
ப்ளூபெர்ரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. ஆகவே இஇதனை சாப்பிட இரத்தம் சுத்தமாவதோடு, இரத்த அழுத்தம் குறையும், சரும ஆரோக்கியம் மேம்படும், சரும புற்றுநோய் வரும் அபாயமும் குறையும். எனவே ப்ளூபெர்ரி கிடைத்தால், அதைத் தவறாமல் வாங்கி சாப்பிடுங்கள்.

கிரேப்ஃபுரூட்
இந்த அற்புதமான பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருட்கள் உள்ளது. இந்த பழத்தை சாப்பிடுவதன் மூலம் கல்லீரல் சுத்தமாவதோடு, இரத்தமும் சுத்தமாகும். மேலும் இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள், ஒட்டுமொத்த உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இத்தகைய பழத்தை அடிக்கடி ஜூஸ் செய்து குடித்து வந்தால், அது கல்லீரல் நொதிகளை ஊக்குவித்து, டாக்ஸின்கள் மற்றும் கார்சினோஜென்களை வெளியேற்றும்.

மஞ்சள் தூள்
மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. இதற்கு அதில் உள்ள குர்குமின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். மேலும் இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. இதனை அன்றாட உணவில் சேர்த்து வருவதன் மூலம், இரத்தம் உறைவது தடுக்கப்படுவதோடு, உடலில் இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். மேலும் மஞ்சள் இரத்தத்தை மட்டுமின்றி, ஒட்டுமொத்த உடலையும் சுத்தமாக்கும்.

கேரட்
இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்களுள் கேரட்டும் ஒன்று. இதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி, சருமத்திற்கும் நல்லது. அதற்கு இதனை பச்சையாகவோ, வேக வைத்தோ அல்லது ஜூஸ் வடிவிலோ உட்கொள்ளலாம். ஆனால் கேரட்டை ஜூஸ் வடிவில் எடுப்பது மிகவும் சிறந்தது. இதனால் உடலுறுப்புக்கள் சுத்தமாகும் செயல்முறை ஊக்குவிக்கப்படும்.

Tuesday, April 17, 2018

கால்சியம்

மூட்டு வலியை ஏற்படுத்தும் கால்சியம் குறைபாட்டை முற்றிலும் நிவர்த்தி செய்ய வழிகள்.
கால்சியம் சத்து உடலில் குறைவாக இருந்தால், எலும்புகள் ஆரோக்கியமின்றி இருப்பதோடு, ரத்த செல்கள் உருவாவதிலும் பிரச்சனைகள் ஏற்படும். உடலில் கால்சியம் சத்து மிகவும் குறைவாக இருந்தால் மூட்டு வலி ஏற்படுகிறது.பொதுவாக கால்சியம் குறைபாடானது, ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். மாதவிடாய் காரணமாக, பெரும்பாலான கால்சியம் உடலில் இருந்து வெளியேறிவிடும். பிரசவத்தின் போதும் நிறைய கால்சியம் போய்விடும். எனவே ஆண்களை விட பெண்கள், கால்சியம் உணவுகளை சாப்பிடுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

பால்
பாலில் கால்சியம் அதிகம் நிறைந்தது. அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்.

கடல் சிப்பி
பொதுவாக கடல் உணவுகளிலும் கால்சியம் ஆக்சலேட் என்னும் பொருள் உள்ளது.ஆனால் இதனை ஆண்கள் அதிக அளவில் சாப்பிட்டால், அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் வந்துவிடும். பெண்கள் இதை சாப்பிட்டால், அதிகப்படியான கால்சியத்தை பெறலாம்.

மத்தி மீன்
மீன்களில் மத்தி மீன் மிகவும் சத்தானது. அத்தகைய மீன், 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

சீஸ் மற்றும் அத்திப்பழம்
பால் பொருட்களில் ஒன்றான சீஸ், பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

அத்திப்பழம் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும், 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது.

பச்சை இலைக்காய்கறிகள்
பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.

தயிர்
பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும், பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.

பாதாம்
பாதாமில் விட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70- 80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்.

இறால்
இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.பற்கள் பிரச்சனை இருப்பவர்கள் இதனை சாப்பிட்டால் பற்கள் வலிமையாகும்