Tuesday, April 17, 2018

நோயாளிகள் எதை தவிற்க்க வேண்டும்

#நோயாளிகள் எதை தவிற்க்க வேண்டும்

ஒருசில உணவுகளை மற்ற உணவுகளுடன் சேர்த்து சாப்பிடும் போது அது விஷமாக மாறி உடல்நலக்
கோளாறுகளை ஏற்படுத்தி விடுகிறது.தேன் மற்றும் நெய்யை ஒன்றாக கலந்து சாப்பிட்டக் கூடாது, அப்படி சாப்பிட்டால் அது விஷமாக மாறி உடலுக்கு உபாதையை ஏற்படுத்திவிடும்.

அதேபோல் வாழைப்பழம் சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்துக் கொள்ளகூடாது. பொதுகுவாகவே பழங்களை தனியாக தான் சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடும் போது, பழங்களையும் சேர்த்து சாப்பிடக் கூடாது.காய்கறி சாப்பிடும் போது வெண்ணெய் சேர்த்துக் கொள்ளக் கூடாது.மீன், கருவாடு சாப்பிடும் போது தயிர், மோர் சேர்த்து சாப்பிடக் கூடாது.

உடல் ஒல்லியாக இருப்பவர்கள் புழுங்கல் அரிசி சாதம் சாப்பிடக் கூடாது. ஆஸ்துமா, சளி பிரச்சனை உள்ளவர்கள், தக்காளி, பூசணிக்காய், முள்ளங்கி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
மூல நோய் உள்ளவர்கள் முட்டை, காரம், மாமிச உணவுகள் ஆஇயவற்றை சாப்பிடக் கூடாது.

வெண்கல பாத்திரத்தை நெய் வைத்து பயன்படுத்தக் கூடாது. வெறும் வயிற்றில் காபி, டீ குடிக்க கூடாது. அதற்கு முன் ஒரு டம்ளர் நீராவது குடிக்க வேண்டும்.
மஞ்சள் காமாலை மற்றும் அல்சர் உள்ளவர்கள் மிளகாய், ஊறுகாய் போன்ற காரமான உணவுகளை சாப்பிடக் கூடாது.மாதவிடாய் காலங்களில் பெண்கள் கத்திரிக்காய், அன்னாசி, பப்பாளி ஆகியவற்றை சாப்பிடக் கூடாது.
சரும நோய் பிரச்சனைகள் உள்ளவர்கள் கத்திரிக்காய், புடலங்காய், வேர்கடலை, கருவாடு, மீன், காரம், கோதுமையை நல்லெண்ணெய் உடன் சேர்த்து சமைத்து சாப்பிடக் கூடாது.
மூட்டு மற்றும் வாத நோய்கள் உள்ளவர்கள் மாமிசம், மீன், முட்டை மற்றும் கிழங்கு போன்ற உணவுகளை சாப்பிடக் கூடாது

No comments:

Post a Comment