Tuesday, October 23, 2018

தங்க நகை வியாபாரம்*

தங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீர்கள்!

முன்பெல்லாம் தங்க நகைகளை நம்பிக்கையின் அடிப்படையில் நன்கு பழகிய கடைகளில்தான் வாங்கினார்கள். ஆனால், இன்றோ ஹால்மார்க் முத்திரை வந்துவிட்டது. இந்த முத்திரை பொறித்த நகைகளை வாங்கினால் போதும், தங்கத்தின் தரத்திற்கு கியாரண்டி. இந்த ஹால்மார்க் முத்திரை எவ்வாறு வழங்கப்படுகிறது?

ஹால்மார்க்!

சுத்தமான தங்கம் என்பதன் அடையாளமாக காட்டப் படுவதுதான் ஹால்மார்க் முத்திரை. தங்கத்தில் 24, 22, 18, 14, 10, 9, 8 கேரட்கள் உள்ளன. இதில் 24, 22, 18 கேரட் மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 24 கேரட் என்பது 99.9% சுத்தமான தங்கம். முதலீட்டு அடிப்படையில் தங்கக் கட்டிகளாக வாங்குகிறவர்கள் இந்த 24 கேரட் தங்கத்தையே வாங்குவார்கள். இந்த 24 கேரட் தங்கத்தின் விலை 22 கேரட் தங்கத்தைவிட சற்று கூடுதலாக இருக்கும். இந்த சுத்த தங்கத்தைக் கொண்டு ஆபரணங்கள் செய்ய முடியாது என்பதால், சில உலோகங்களைச் சேர்த்து 22 கேரட் மற்றும் 18 கேரட்களில் நகை செய்கிறார்கள். இந்த நகையைதான் ஆபரணத் தங்கம் என்கிறோம்.

அதிக அளவில் உலோகத்தைக் கலக்கும்போது தங்கத்தின் சுத்தத் தன்மை குறைந்துவிடுகிறது. வாங்கும் போது 22 கேரட்டுக்கான விலை கொடுத்து வாங்கிவிட்டு, விற்கும்போது அது வெறும் 18 கேரட் தங்கம்தான் என்பது தெரியவரும்போது வாங்கியவர்கள் நொந்துபோய் விடுகிறார்கள். 

யார் வழங்குகிறார்கள்?

இந்திய அரசின் தரக்கட்டுப்பாடு அமைப்பான 'பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்டு’ (பி.ஐ.எஸ்.) என்கிற அமைப்புதான் இந்த ஹால்மார்க் முத்திரையைத் தருகிறது. ஹால்மார்க் முத்திரை வழங்கும் டீலர்கள் நாடு முழுக்க இருக்கிறார்கள். இந்த முத்திரை வழங்குவதற்கு பி.ஐ.எஸ். அமைப்பு இவர்களுக்கு லைசென்ஸ் தந்திருக்கிறது. இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்கள் மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்க முடியும்.

தர பரிசோதனை! 

தங்களுக்குத் தேவையான நகைகளை பொற்கொல்லர்களை வைத்து செய்வது தான் நகைக் கடைகளின் முந்தைய வழக்கம். ஆனால், இப்போதோ வளையலுக்கு ஒருவர், நெக்லஸுக்கு ஒருவர், மோதிரத் திற்கு இன்னொருவர் என பலரிடமிருந்து நகைகளை மொத்தமாகச் செய்து, அதை வாங்கி விற்கின்றனர் நகைக் கடைக்காரர்கள். இப்படிச் செய்யப்படும் நகைகளை ஹால்மார்க் டீலர்களிடம் கொடுத்து நகையின் தரத்தைப் பரிசோதிக்கின்றனர்.

இப்படி தரம் பரிசோதிக் கப்பட்ட நகைகள் 22 கேரட் எனில் 91.6% ஹால்மார்க் முத்திரையைத் தருகின்றனர். 18 கேரட் நகை எனில் 75% ஹால்மார்க் முத்திரை தருவார்கள். எனவே, ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்று பார்ப்பதோடு, அது 91.6 சதவிகிதமா, இல்லை 75 சதவிகிதமா என கட்டாயம் பார்ப்பது அவசியம். 

முத்திரையில் ஏமாற்றினால்..? 

நகை வாங்கும்போது 22 கேரட் என வாங்கிவிட்டு, விற்கப் போகும்போது 18 கேரட் என தெரிய வந்தால் உடனடியாக பி.ஐ.எஸ். அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம். சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் இந்த அலுவலகம் இருக்கிறது. தரம் குறைவாக இருக்கும் நகையை அவர்கள் பரிசோதித்து புகார் உறுதி செய்யப்பட்டால் அந்த ஹால்மார்க் முத்திரை வழங்கிய டீலரின் லைசென்ஸை உடனடியாக ரத்து செய்வார்கள்.

எந்த கடையில் நகை வாங்கினோமோ அந்தக் கடை கண்டிப்பாக நஷ்டஈடு வழங்கியாக வேண்டும். ஒருவேளை நஷ்ட ஈடு தர மறுத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம்.  சின்ன மோதிரமோ, காதில் அணியும் தோடோ அனைத்து நகைகளிலும் இந்த ஹால்மார்க் முத்திரை இருக்கும். ஹால்மார்க் முத்திரை வழங்கும் ஒவ்வொரு டீலருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாளத்துடன் கூடிய முத்திரை இருக்கும். இந்த முத்திரையை வைத்து அதை வழங்கிய டீலரை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும்.   

ஹால்மார்க் முத்திரை என்பதை ஏதோ ஐ.எஸ்.ஐ. முத்திரை போல பொதுவான ஒரு விஷயமாக மக்கள் நினைக் கிறார்கள். தரத்திற்கேற்ப இந்த முத்திரையும் மாறும் என்பதில் கவனம் கொண்டால், நகை வாங்கும்போது நாம் ஏமாற வாய்ப்பில்லை என்பது நிச்சயம்.
*உலகில் நடக்கும் வியாபாரங்களில் அதிக அளவிலான மோசடி நடக்கும் வியாபாரம் தங்க நகை* வியாபாரமேயாகும்‼️

*🎙நம்மால் ஒண்ணும் பண்ணமுடியாது .*
இருந்தாலும் தெரிந்து வைத்துகொள்வோம்.‼️

*💔முதல் மோசடி:*

🎙முதலாவது மோசடி என்னவென்றால் *கல்லுக்கும் தங்கத்தின்* விலையை வாங்குவதாகும்.

*🎙நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் கண்ணாடிக் கற்கள்* பதித்த நகை என்றால் அதன் விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்⁉️ நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் *கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும்* தான் நிர்ணயிக்க வேண்டும்.

*🎙ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான விலையை நம்மிடம்* வாங்கி விடுகின்றனர். *தங்கத்தின் விலையும் கல்லின் விலையும்* சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே *ஏணி வைத்தாலும் எட்ட* முடியாத வித்தியாசம் உள்ளது.

🎙நாற்பது கிராம் *தங்கத்துக்கு ஐம்பது கிராம் பணத்தை வாங்குவது மோசடியாகும்.* ஐம்பது கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் கொண்டு
*கல் முத்து பவளம் இலவசம்* என்று கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். *சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது* கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு *கல்லுக்கு தனியாகவும்* பணத்தை வாங்கி *இரட்டை மோசடி* செய்கிறார்கள்.

🎙அதே சமயம் நாம் *பழைய நகையை* விற்கச் சென்றால் *கல்லை அப்புறப்படுத்தி விட்டு* தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் தருகிறார்கள். *இதற்கு நிகரான ஒரு மோசடி வேறு* எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று தெரியவில்லை.

*💔இரண்டாவது மோசடி:*

🎙சொக்கத் தங்கம் எனப்படும் *தனித்தங்கத்தில் நகை செய்ய முடியாது.* அதில் செம்பு கலந்தால் தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் *நகை செய்ய 916 கிராம் தங்கமும் 84* கிராம் செம்பும் சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும்
*916 KDM என்றும்* சொல்லப்படுகிறது.

🎙916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து விட்டு *1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை* போடப்படுகிறது. *செம்புக்கு தங்கத்தின் விலை போடுவது மற்றொரு மோசடியாக* உள்ளது.

*💔மூன்றாவது மோசடி:*

🎙 தங்கத்துக்கு இன்றைய காலத்தில் *இரண்டு விலை* உள்ளது.
*ஒன்று மூலப் பொருளுக்கான விலை.* மற்றொன்று நாம் விரும்பும் வகையில்
*தயார் செய்வதற்கான* கூலியாகும்.

🎙ஐந்து பவுன் தங்கத்தில் ஒரு நகை வாங்கினால்
*ஐந்து பவுன் தங்கத்திற்கான* விலையையும் நாம் கொடுக்க வேண்டும். அதைக் குறிப்பிட்ட *நகையாக செய்ததற்கான கூலியையும்* கொடுத்தாக வேண்டும். இது மட்டும் இருந்தால் *இதில் மோசடி* ஏதும் இல்லை.

🎙ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் *பணம் வாங்கிக் கொண்டு அதற்கான கூலியையும் நம்மிடம்* வாங்கிக் கொண்டு *சேதாரம்* என்ற பெயரில் ஒரு *தொகையையும்* வாங்கிக் கொள்கின்றனர்.

🎙அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது
*பத்து சதவிகிதம்* சேதாரம் ஆகி விட்டது எனக் கூறி அதற்கான *பணத்தையும் நம்மிடம்* வாங்கிக் கொள்கின்றனர்.

🎙அதாவது ஐந்து பவுனுக்கு
*மட்டும் பணம்* வாங்காமல் இன்னொரு *அரை பவுனுக்கும்* சேர்த்து நம்மிடம் பணம் கறந்து விடுகிறார்கள்.

🎙நகை செய்யும் போது *அரை பவுன் சேதரமாக* ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து *வாங்குவது முறையானது தான்.* ஆனால் தங்கத்தில் *எதுவுமே சேதாரம் ஆவது கிடையாது.*
நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் *தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி குப்பைக்குப் போகாது.*
துகள்களாக உள்ளதை மீண்டும்
*வேறு நகைக்கு* அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள்.
இதற்கெல்லாம் சேர்த்துத் தான் *செய்கூலி வாங்கிக்* கொள்கின்றனர். *மக்களுக்குப் புரியாத டெக்னிகல்* வார்த்தைகளைப் பயன்படுத்தி
*மோசடி செய்கின்றனர்.* இதைச் செய்யாத நகை *வியாபாரிகளைக்* காண முடியவில்லை.

🎙அது போல் பழைய நகை வாங்கும் போது *செய்கூலி சேதாரம் எல்லாம் தர* மாட்டார்கள். அது நியாயமானது தான்.
ஆனால் நாம் *கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு* எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் விலையைத் தர வேண்டும் என்று நாம் கூறவில்லை.
*அவர்கள் வாங்கும் விலையைக் கொடுக்க வேண்டுமல்லவா⁉️* அப்படி கொடுக்க மாட்டார்கள்.  மாறாக *நாம் நாற்பது கிராம் நகையை விற்கச்சென்றால் அதில் கால் வாசிக்கு மேல் குறைத்துத் தான்* தருவார்கள்.

*🎙கொள்ளைக்காரர்கள் மட்டுமே* செய்யக்கூடிய தொழில்
*தங்க நகை வியாபாரம்*

❣🎙❣🎙❣🎙❣🎙❣🎙❣


1 comment:

  1. அருமையான (வாட்ஸ் ஆப் ல் வந்த) செய்திகள்
    ஆனால் தவறான தகவல்கள் சேர்த்து கொடுத்து உள்ளீர்கள்.

    ReplyDelete