Sunday, August 16, 2020

ஞாபக_மறதி_பிரச்சினை_என்ற

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்♻️♻️♻️* 


 *🧶🧶🧶#ஞாபக_மறதி_பிரச்சினை_என்ற #டிமென்ஷியா*🧶🧶🧶 


 *🛑🛑🛑#வயசாச்சுன்னா_வர்றதுதானே என்ற அலச்சியம்_வேண்டாம்…❓❗🛑🛑🛑* 


 *✍️✍️✍️இது முதுமையால் ஏற்படும் #டிமென்ஷியா வகை மறதிக்கான எண்ணிக்கை தான்.*
 *நவீன காலகட்டத்தில் இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் ஏற்படும் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்கிறது.* 
 *ஞாபக மறதி என்பதை Dementia என்கிறார்கள். மூளையின் செயல்திறன் குறையும் நிலை. பல நோய்களில் இது அறிகுறியாகத் தென்படும். நினைவாற்றல் பாதிக்கப்படுவதுடன்………*✍️✍️✍️ 


 *▶எண்ணம்,* 

 *▶சிந்தனை* , 

 *▶மொழி* , 

 *▶தீர்மானம் செய்யும் ஆற்றல்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆகியவையும் இதில் பாதிக்கப்படலாம். வயது ஆக ஆக மறதி நோய், ஒருவரைப் பாதிக்கும். 60 வயதுக்குக் கீழே அபூர்வமாகவே இந்தப் பாதிப்பு ஏற்படும். #Alzheimer_s என்பது ஒரு வகை ஆழ்ந்த மறதி நோய். சில நேரம் மூளையில் சீரற்ற புரதங்கள் படிவதால் ஏற்படுவது lewy body disease.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *⭕⭕⭕ மூளைக்கு ரத்தஓட்டம் குறைவதால் ஏற்படும் மறதி #vasculardementia. இவை அல்லாமல்…… ⭕⭕⭕* 


 *👉சிறுமூளைப் பாதிப்பு* , 

 *👉மூளைக் காயம்,* 

 *👉multiple sclerosis என்ற மூளை அழற்சி,* 

 *👉மூளைக் கட்டிகள்,* 

 *👉அதிக மது அருந்துதல்,* 

 *👉ரத்தத்தில் சர்க்கரை,  உப்பு, கால்சியம்  ஆகியவற்றில் ஏற்படும் மாறுதல்கள்* , 

 *👉மிகக் குறைந்த வைட்டமின் பி12 அளவு,* 

 *👉மூளையில் நீர்த்தேக்கம் ஏற்படுதல்,* 

 *👉ஒரு சில மருந்துகள் குறிப்பாகக் கொழுப்பைக் குறைக்கிற மருந்துகள்* 


 *🧶ஆகியவற்றாலும் மறதி ஏற்படலாம்🧶.* 


 *🔴🔴🔴 பாதிப்புகள்🟣🟣🟣* 


 *✍️✍️✍️இப்படிப்பட்ட மறதி உள்ளவர்கள் உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். இவர்களுடைய மொழித் திறன் பாதிக்கப்படும், சிந்திக்கும் ஆற்றலில் தவறு ஏற்படும். இரண்டு வேலைகளைச் சேர்த்துச் செய்ய முடியாது. முடிவு எடுக்க முடியாது, பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது, சற்று முன் நடந்தது, பேசியது மறந்துவிடும்✍️✍️✍️* 
.

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பொருட்களை எங்கே வைத்தோம் என்று தெரியாது. எழுதுவது, படிப்பது, ஆபத்தை உணர்வது ஆகியவற்றில் தவறு ஏற்படும். சமூக விஷயங்களில் இருந்து பின்வாங்குவார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நரம்பு மண்டலம், மூளை பரிசோதனை, ரத்தக் குறைவு உள்ளதா, சோக நிலை உள்ளதா, தைராய்டு அளவு, வைட்டமின் சத்து எவ்வாறு உள்ளது போன்றவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் சிறந்த சிகிச்சையை அளிக்க முடியும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அல்சைமர் நோய் தோன்றி உச்ச நிலையை அடைவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். மூளையில் உள்ள #நியூரான்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்போதுதான் ஞாபக மறதி பிரச்சினை அதிகரிக்கும். நோய் தீவிரமடையும்போது, சிறுவயது நினைவுகளையும் இழக்க வாய்ப்பு உண்டு…🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🟢⚫🟣 மனச்சோர்வு🟡⚫🔵* 


 *✍️✍️✍️நோய் தோன்றிய சில ஆண்டுகளில் மனச்சோர்வும் சேர்ந்து கொள்வது இயல்பு.……✍️✍️✍️* 


 *◀எதிர்மறை எண்ணங்கள்,* 

 *◀தனிமையை விரும்புதல்,* 

 *◀பசி உணர்வு குறைதல்,* 

 *◀தூக்கமின்மை,* 

 *◀உடல் பலவீனம்,* 

 *◀நம்பிக்கையின்மை,* 

 *◀வாழ்வதே அர்த்தமற்றது* 


 *✍️✍️✍️என்பது போன்ற எண்ணங்கள் தலைதூக்கும்.நோயாளியின்…………✍️✍️✍️* 


 *▶குணநலன்* , 

 *▶பழக்கவழக்கங்கள்,* 

 *▶உடல்நிலை* , 

 *▶சுற்றுச்சூழல்* , 

 *▶சமுதாயம்* , 

 *▶வாழ்க்கைமுறை* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆகியவற்றைப் பொருத்து இந்த நோயின் பாதிப்பு வேறுபடும். பொதுவாக, வயதான வர்களுக்கு மட்டுமே இந்நோய் வருகிறது. அதனாலேயே, ‘வயசாச்சுன்னா வர்றதுதானே’ என்று உதாசீனப்படுத்திவிட வாய்ப்பு உண்டு.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌐🌐#ஆரம்பநிலை_அறிகுறிகள்🌐🌐* 


 *1. மொழித் திறனில் தடுமாற்றம்* 

 *2. ஞாபகக் குறைவு, குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள்* 

 *3. நேரம், காலத்தைப் பாகுபடுத்த இயலாமை* 

 *4. எப்போதும் செல்லும் பாதையை மறப்பது* 

 *5. முடிவு எடுப்பதில் சிரமம்* 

 *6. ஒரு செயலைச் செய்ய ஆர்வம் இல்லாமை* 

 *7. சோகம், கோப உணர்ச்சிகளை அதிகப்படியாக வெளிப்படுத்துதல்* 

 *8. பொழுதுபோக்கு, தினசரி நடவடிக்கைகளில் ஆர்வம் குறைதல்* 


 *🌰🌰இடைநிலை அறிகுறிகள்🌰🌰* 


 *✍️✍️✍️நோய் தீவிரமடையும்போது பிரச்சினைகளும் அதிகமாகும். அதனால் தினசரி நடவடிக்கைகளைச் செய்வதற்கே சிரமப்படுவார்கள்✍️✍️✍️.* 


 *1. மறதி அதிகமாகும். குறிப்பாகச் சமீபத்திய நிகழ்ச்சிகள், உறவினர்களின் பெயர்கள்* 

 *2. துணையில்லாமல் தனித்து வாழக் கஷ்டப்படுவார்கள்* 

 *3. தன்னையும், வீட்டையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள சிரமப்படுவார்கள்* 

 *4. கடைத் தெருவுக்குச் சென்று திரும்ப இயலாது* 

 *5. குளிக்க, கழிவறைக்குச் செல்ல என எல்லாவற்றுக்கும் குடும்பத்தினரைச் சார்ந்திருப்பார்கள்* 

 *6. தான் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் இருப்பார்கள்* 


 *🟢இறுதிநிலை🟢 அறிகுறிகள்🟢* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த நிலையில், நோயாளி முற்றிலுமாகக் குடும்பத்தினரைச் சார்ந்தும், உடல் பாகங்களை இயக்க இயலாத நிலையிலும் இருப்பார். மறதி மிக அதிகமாகவும், உடல்நலக் குறைவும் காணப்படும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *1. தானாக உணவு உட்கொள்வதில் சிரமம்* 

 *2. உறவினர், நண்பர்களை அடையாளம் காண்பதில் சிரமம். தன் குழந்தைகளையேகூட மறக்க நேரிடலாம்* 

 *3. குழப்பமான மனநிலையில் இருப்பார்கள்* 

 *4. தானாக நடக்க இயலாது* 

 *5. தெரிந்த பொருள்களை அடையாளம் சொல்ல முடியாது* 

 *6. புரிந்துகொண்டு செயல்பட முடியாது* 

 *7. சிறுநீர், மலம் கழிப்பதில் கட்டுப்பாடு இருக்காது* 

 *8. தான் யார் என்பதே மறந்துவிடும்* 


 *🔯🔯🔯 #நினைவாற்றல்_அதிகரிக்கக் #கை_மருந்துகள்🔯🔯🔯* 


 *⭐ 10 பாதாம் பருப்பை ஊறவைத்து இரவு சாப்பிட வேண்டும். காலையில் என்றால் 4 - 5 உட்கொள்ளலாம்.* 

 *⭐ வெண்டைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பிஞ்சு வெண்டைக்காயைப் பச்சையாகச் சாப்பிடலாம்.* 

 *⭐ ஒரு கப் எலுமிச்சை சாற்றில் மூன்று கிராம் வால்மிளகு சேர்த்துச் சாப்பிட வேண்டும்.* 

 *⭐ வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி, மிளகு சேர்த்துச் சட்னி போல சாப்பிடலாம்.* 

 *⭐ தினமும் 5 துளசியிலைகளைச் சாப்பிடலாம்.* 

 *⭐ கல்யாணப் பூசணி சாறு 100 மி.லி., 1 சிட்டிகை ஏலக்காய் பொடி சேர்த்துத் தினமும் 1 கப் சாப்பிடலாம்.* 

 *⭐ 5 கிராம் அதிமதுரச் சூரணத்தை நெய்யில் குழைத்துக் காலை, மாலை சாப்பிடலாம்.* 

 *⭐ சிற்றமிர்து என்ற சீந்தில்கொடி பால் கஷாயம் வைத்து 100 மி.லி. குடிக்கலாம்.* 

 *⭐ உணவில் சிறிது நெய் சேர்த்துச் சாப்பிடுவது சிறந்தது. வல்லாரை நெய், சாரஸ்வதாரிஷ்டம், கூஸ்மாண்ட கிருதம் போன்றவையும் சிறந்தவை.* 

 *⭐ தலைக்குப் பலா அஸ்வகந்தாலாக்ஷாதி தைலம், ஆறுகாலாதி தைலம் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.* 

 *⭐ அஸ்வகந்தா சூரணத்தை 10 கிராம் எடுத்து இரவில் பாலில் கலந்து சாப்பிடலாம்.* 

 *⭐ 3 கிராம் மஞ்சள் பொடி, 5 கிராம் இஞ்சி பொடி, லவங்கப்பட்டை 3 - 5 கிராம், 20 மி.லி. கல்யாணக கிருதத்துடன் இரவில் சாப்பிடலாம்.* 

 *⭐ புதினா கீரையைத் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.* 

 *⭐ தேன் சேர்த்து நீர் பிரம்மியின் சாறு 15 மி.லி. சாப்பிடலாம்.* 

 *⭐ தினமும் 4 நெல்லிக்காய் சாப்பிடலாம்.* 

 *⭐ பாலுடன் சங்குப்பூவின் வேர் 3 கிராம் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.* 


 *நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம்*


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment