Sunday, August 23, 2020

புகையிலை

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு👹👹👹*


 *🛑🛑🛑உங்களுக்கு தெரியுமா புகையிலையை மெல்லுவது எவ்வளவு தீங்கு விளைவிக்கும்❓🛑🛑🛑* 


 *✍️✍️✍️புகையிலை மெல்லுவது மற்றும் புகை பழக்கம் — இவை இரண்டுமே அதை உபயோகிப்பவர்கள் மட்டுமின்றி அவரது அடுத்த தலை முறையையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.✍️✍️✍️* 


 *🩸🩸🩸புகையிலை மெல்லுவதால் வாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.🩸🩸🩸* 


 *🌐🌐🌐மற்ற புற்று நோய்கள் உருவாக இது கிரியா ஊக்கியாக செயல்படுகிறது🌐🌐🌐* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புற்று நோய் ஒரு கட்டத்திலிருந்து அடுத்த கட்டத்திற்கு வேகமாக செல்லக்கூடும்* 
 *புற்று நோய்க்கான மருந்துகளின் வீரியம் தடை பட வாய்ப்புண்டு* 
 *புகையிலை பழக்கம் உடையவர்களின் குழந்தைகள் பெற்றோரின் புற்று நோய் ஏற்படுத்தும் மரபணுக்களுடன் பிறக்கின்றனர். எனவே அவர்களுக்கு புற்று நோய் ஏற்படக்கூடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *🧶புகையிலை🧶 பழக்கம்🧶 அட்ரீனல்🧶 சுரப்பை🧶 தூண்டக்காரணங்கள்🧶 என்ன❓🧶*


*✍️✍️✍️வாய், தொண்டை,நுரையீரல், வயிறு, சிறுநீரகம்,சிறுநீர்ப்பை போன்ற உடல்பாகங்களால் புற்றுநோய்ஏற்பட புகையிலைகாரணமாகிறது.·*  *புகையிலையினால்ஏற்படுகிற வாய்ப்புற்று நோய்கொண்ட நோயாளிகள்,உலகிலேயே, இந்தியாவில் மிகஅதிக எண்ணிக்கையில்உள்ளனர்.· இந்தியாவில், ஆண்கள்மற்றும் பெண்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு, முறையே56.4% மற்றும் 44.9% புகையிலை காரணமாயிருக்கிறது✍️✍️✍️.·* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️90%கும் அதிகமான நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிறநுரையீரல் நோய்களை, புகைபிடித்தல் ஏற்படுத்துகிறது.* *இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு,மார்புவலி, இதயக்கோளாரினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக்(மூளை பாதிப்பு), கால்களில் ஏற்படும் காங்கரின் எனப்பட்ட புறஇரத்தக்குழாய் நோய்கள் போன்றவை ஏற்பட புகையிலைகாரணமாகிறது.· இந்தியாவில் 82% நாட்பட்ட நுரையீரல் சுவாசக்குழாய்அடைப்பு நோய் ஏற்பட, புகைப்பிடித்தல் காரணமாய்அமைகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️புகையிலை மறைமுகமாக நுரையீரல்டியூபர்குளோஸிஸினை (டி.பி) ஏற்படுத்துகிறது. எப்போதும்புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ் ஏற்படும் வாய்ப்புமூன்று மடங்கு அதிகம் ஆகும்.* 
 *சிகரெட் அல்லது பீடிகளைஅதிகளவு புகைபிடிப்பவர்களுக்கு, டியூபர்குளோஸிஸ்ஏற்படும் வாய்ப்பு மிகவும் அதிகம்.· புகைத்தல்/புகையிலை திடீரென இரத்தஅழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் இதயத்திற்குசெல்லும் இரத்தத்தின் அளவினை குறைக்கிறது✍️✍️✍️*

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புகையிலை, கால்களுக்கு செல்லும் இரத்தஓட்டத்தையும் குறைக்கிறது. கால்களில், கரங்களில்காங்கரின் எனப்படும் கால் மாமிசத்தை அரித்துவிடும்புண்களை ஏற்படுத்தலாம்.·* *புகையிலை, உடல் முழுவதிலும் உள்ள தமனிஎனப்படும் இரத்தத்தை ஏந்திச்செல்லும் இரத்தக்குழாய்சுவர்களை சேதப்படுத்துகிறது.* 
 *· புகைத்தல், சிறுபிள்ளைகள் மற்றும் குடும்பத்திலுள்ளமற்றவர்களுக்கு உடல்நலக்கேட்டினை ஏற்படுத்துகிறது.புகைப்பழக்கமில்லாத ஒருவர், புகைப்பழக்கம் (ஒருநாளைக்கு இரண்டு பாக்கெட் சிகரெட் புகைக்கும்)உள்ளவரோடு சேர்ந்து வாழும்போது, புகைபிடிக்காத நபர்அவரை அறியாமலேயே மூன்று சிகரெட்டினை புகைக்கிறார்.இது அவரின் சிறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்டகணிக்கப்பட்டது.· புகைத்தல்/புகையிலை பயன்பாடு டையாபிடிஸ்ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிற காரணியாக அமைகிறதுஎன கண்டறியப்பட்டுள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


.· *✍️✍️✍️புகையிலை, இரத்தத்திலுள்ள நன்மை பயக்கக்கூடியகொழுப்பின் அளவை குறைக்கிறது.· புகைபிடிப்பவர்கள் / புகையிலைபயன்படுத்துபவர்களுக்கு, பயன்படுத்தாாதவர்களை, விடஇதயநோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 2 முதல் 3மடங்கு அதிகமாக உள்ளது.* *ஒவ்வொரு 8 விநாடிகளில் 1 புகையிலை சம்மந்தமானமரணம் நிகழ்கிறது.·✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தியாவில் புகையிலை சம்மந்தமான உயிரிழப்புஆண்டிற்கு 8 முதல் 9 லட்சம் ஆகும்.· புகையிலையை தவிர்ப்பதால் ஒருவிடலைப்பருவத்தினரின் வாழ்வில் 20 ஆண்டுகள் கூடுகிறது.·* *புகையிலை பயன்படுத்தும் விடலைப்பருவத்தினரில்பாதிப்பேர் புகையிலை உபயோகத்தால்கொல்லப்படுகின்றனர். (மீதமுள்ளவர்களில் பாதிபேர்நடுத்தரவயதிலும், பாதிபேர் முதிர்வயதிலும்கொல்லப்படுகின்றர்)· புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் உயிரிழப்பு,மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் ஒவ்வொருவருடமும் வேகமாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.*


 *✍️✍️✍️ஆண்கள் மற்றும் பெண்களில், புகைத்தல் / புகையிலைஉபயோகம், கெடுதலான விளைவுகளை ஏற்படுத்துகிறது.· ஆண்களில் மலட்டுத் தன்மை ஏற்பட, புகைப்பழக்கம்ஒரு காரணமாக அமைகிறது.·* *புகைத்தல் / புகையிலை பயன்பாடு, பெண்களில்ஈஸட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரப்பதை குறைக்கிறது.மாதவிடாய் நின்றுபோவது குறித்த காலத்திற்கு முன்பேஏற்படுகிறது.· புகைத்தல் / புகையிலை பயன்பாடு உடலின் செயல்மற்றும் திறனை குறைக்கிறது.· புகைக்கும் பெண்கள், கர்ப்பத்தடை மாத்திரைகளைப்பயன்படுத்தும் போது, ஸ்ட்ரோக் (மூலை பாதிப்பு) ஏற்படும்வாய்ப்பு விகிதம் அதிகரிக்கிறது.✍️✍️✍️·*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புகைப்பழக்கம் உள்ள கர்ப்பிணிகளில், குழந்தையைஇழக்க அதிகவாய்ப்பு உள்ளது. குறைந்த எடையுடன் கூடியபிள்ளைபிறக்கும் வாய்ப்புள்ளது. வளர்ச்சியில் கோளாறுகள்கொண்ட குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. பிறந்த குழந்தைதிடீரென இறக்க வாய்ப்புள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🚬🚬🚬புகையிலையை தவிர்ப்பதால் உடலில் ஏற்படும்நன்மைகள்🚬🚬🚬* 


 *🟣1.உங்களுக்கு புற்றுநோய் மற்றும் இதயநோய்ஏற்படும் ஆபத்து குறைகிறது🟣.* 


 *🟢2.உங்கள் இதயத்தில் ஏற்படும் அழுத்தம்குறைகிறது.🟢* 


 *🟡3.நீங்கள் நேசிக்கும் நபர் புகையிலையினால்பாதிக்கப்படமாட்டார்.🟡* 


 *🔵4. உங்கள் புகைப்பழக்கத்தினால் ஏற்படும் இருமல்மற்றும் சளி மறையலாம்.🔵* 


 *⚫5.உங்கள் பற்கள் வெண்மையாகவும்,சுத்தமாகவும் மாறும்.⚫* 

 *🚬🚬🚬புகையிலையை தவிர்ப்பதால் ஏற்படும் சமுதாய நன்மைகள்🚬🚬🚬* 


 *🔴1.நீங்கள் கட்டுபாட்டிற்குள் இருக்கும் ஒரு நபராகஇருப்பின், சிகரெட் உங்களை கட்டுப்படுத்தாது.🔴* 


 *🟠2.உங்கள் சுயதோற்றம் மற்றும் சுயநம்பிக்கைவளரும்🟠.* 


 *🌰3.இப்போதும் மற்றும் எதிர்காலத்திலும் நீங்கள்உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெற்றோராய் இருப்பீர்கள்.🌰* 


 *🛑4.புகையிலையை தவிர்ப்பதால் மிஞ்சும் பணம்,மற்ற காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்🛑* 


 *✍️✍️✍️புகையிலை பயன்பாட்டினை விட்டுவிட எந்நேரமும் நல்லநேரம் தான்.·* *புற்றுநோய் மற்றும் பிற மோசமான நோய்கள்ஏற்படும்முன், நடுத்தரவயதில் புகைபிடிக்கும் பழக்கத்தைநிறுத்துவது, பிற்காலத்தில், புகையிலைப் பழக்கத்தினால்ஏற்படும் மரணம் மற்றும் பிற ஆபத்துகளை தவிர்க்கிறது.✍️✍️✍️·* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புகையிலை பழக்கத்தினை ஆரம்ப வயதிலேயேநிறுத்துவதின் பலன் மிகவும் அதிகம்.· புகைபிடிக்கும் பழக்கத்தை நீங்கள் விட்டுவிட்டால், இதயநோய் வரும் அபாயம்,புகைபிடிக்காதவர்களைப்போலவே 3 வருடங்களில்குறைந்து, இயல்பான நிலைக்கு வருகிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🚬🚬🚬புகைத்தல் / புகையிலை பயன்பாட்டினை தவிர்க்க சிலஆலோசனைகள்🚬🚬🚬* 


 *🟣1. சிகரெட் சாம்பல் போடும் தட்டுகள், பான், ஜர்தாபோன்றவற்றை கண்ணிற்கும், மனதிற்கும் மறைவாகவைக்க வேண்டும்.🟣* 

 *🟢2.சிகரெட், பான், ஜர்தா போன்றவற்றை சுலபமாககிடைக்காத,  எட்டாத இடத்தில் வைக்கவும். உ.ம். வீட்டின்பிற அறைகளிலோ, அடிக்கடி செல்லாத இடங்களிலோஅல்லது அலமாரிகளில் வைத்து பூட்டியோ வைக்கவேண்டும்.🟢* 

 *⚫3.புகை, பான், ஜர்தா போன்றவற்றை பயன்படுத்ததூண்டும் காரியங்கள், புகைப்பிடிப்போர் கூட்டம்போன்றவற்றை கண்டறிந்து, சிறிது காலத்திற்குஅவற்றிலுருந்து விலகியிருக்க முயற்சிக்க வேண்டும்⚫* .

 *🌐4.சுவிங்கம், இனிப்புகள், பெப்பர்மென்ட்மிட்டாய்கள், சர்க்கரை மிட்டாய் போன்றவற்றை வாயில்போட்டுக் கொள்ளுதல்🌐*  

 *🧶🧶5.எப்பொழுதெல்லாம் புகையிலை, பான்போன்றவை நினைவுக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம்உட்கார்ந்த அல்லது படுத்த நிலையில், மூச்சினை நன்குஇழுத்து விட முயற்சிக்கவும். ஒரு டம்ளர் தண்ணீர்அருந்துவது மற்றும் உடற்பயிற்சி செய்வது புகைப்பழக்கஎண்ணத்தை குறைக்க உதவுகிறது.🧶🧶* 

 *🔵6.புகையிலை எடுக்க நீங்கள் நினைக்கும்போது,உங்கள் குழந்தைகள் பற்றி சிந்தியுங்கள். மேலும்,புகையிலையினால் நோய் ஏற்படின், அது உங்கள்பிள்ளையின் எதிர்காலத்தை எப்படி பாதிக்கும் என்பதனைசிந்தனை செய்து பாருங்கள்.🔵* 

 *🔴7.புகையிலை பழக்கததினை நிறுத்த ஒருதேதியை குறியுங்கள்🔴.* 

 *🌰8.உங்களுக்கு உதவும் நபரை கண்டறியுங்கள்.🌰* 

 *🟡9.புகையிலை, பான், ஜர்தா போன்றவை இல்லாதமுதல் நாளுக்காய் திட்டமிடுங்கள்.🟡* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️10.புகையிலை, பான், ஜர்தா போன்றவற்றின் மேல்விருப்பம்  ஏற்படும் போது கீழ்க்காணும் 4 வழிகளைப்பின்பற்றுங்கள்· ஏதேனும் ஒரு வேலையை செய்யுங்கள்· அடுத்த சிகரெட்டினை புகைக்க / பயன்படுத்ததாமதியுங்கள்· மூச்சை நன்கு உள்ளிழுத்து விடுங்கள்· தண்ணீர் அருந்துங்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 
 *🟠11.புகையிலை பழக்கததினை விடுவதற்குஉங்களால்  முடியும் என உறுதியாக நம்புங்கள்🟠* 

 *🟣12.உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள்🟣* 

 *🛑13. மனதைத் தளர்ததும் உக்திகளை (யோகா,நடைபயிற்சி, தியானம், நடனம், இசை போன்றவை)ஒவ்வொரு நாளும் செய்யுங்கள்.🛑* 

 *🟢14.காஃபின் (காபியில் இருக்கும் ஒரு வகைவேதியல் பொருள்) மற்றும் ஆல்கஹால் (மது)உட்கொள்வதை குறைத்துகொள்ளுங்கள்🟢* .

 *✍️✍️✍️15.மேலும சுறுசுறுப்பாக இருந்து, ஆரோக்கியமாகஉணவினை உட்கொள்ளுங்கள்.✍️✍️✍️* 


 *💣🧨🕳️குட்கா... பான்மசாலா... புகையிலை... மீள என்னதான் வழி❓💣🧨🕳️*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குட்கா, பான்மசாலா போன்ற வாயில் போட்டு மெல்லும் வகை புகையிலைப் பொருள்களுக்குத் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. உடல் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்பதைக் கருத்தில்கொண்டே, இதுபோன்ற போதை வஸ்துகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனாலும், பெரும்பாலானோரால் அந்தப் பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. அதனால், இன்னமும் அவை மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வப்போது, அப்படி மறைத்து வைத்து விற்கப்படும் புகையிலைப் பொருள்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகிறார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* . 

 
 *✍️✍️✍️உண்மையில், இத்தகைய போதை வஸ்துகளை கைவிடுவதால் உடல்நலனில் ஏதேனும் பிரச்னை ஏற்படுமா? அந்தப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுவதற்கான வழிமுறைகள் என்ன❓✍️✍️✍️* 


 *👩‍🦰👩‍🦰👩‍🦰மன நல மருத்துவர் ரேஷ்மாவிடம் கேட்டோம்.👩‍🦰👩‍🦰👩‍🦰* 


 *"🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கக்கூடிய அல்லது மாற்றக்கூடிய பொருள்கள் (Psychoactive Substances) என சில பொருள்களை உலக சுகாதார நிறுவனம் (World Health Organization) பட்டியலிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் நிகோடின் (Nicotine), ஆல்கஹால் (Alcohol), கஃபைன், பாக்கு (Betel nut) போன்றவை வருகின்றன. இந்தப் பாக்கு வகைகளில்தான் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட மெல்லும் வகை புகையிலைப் பொருள்கள் வருகின்றன.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️தொன்மைவாய்ந்த நமது கலாசாரத்தில் வெற்றிலை, பாக்குடன் புகையிலை போடும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. சாதாரணமாக புகையிலை இலை பதப்படுத்தப்பட்டாலும் அதனுடன் ஏராளமான ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அதாவது, சுண்ணாம்பைக் கொதிக்கவைத்து அதில் பேகிங் பவுடர், மண்எண்ணெய், பாக்குத் தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை மற்றும் சில ரசாயனங்களைக் கலப்பார்கள். இது லேகியப் பதத்துக்கு வந்ததும் ஆறவைத்து பொட்டலம் போட்டு விற்று விடுகிறார்கள். ஆக, புகையிலையினால் மட்டுமல்லாமல், அதனுடன் சேர்க்கப்படும் மற்ற வேதிப்பொருள்களும் சேர்வதால் வாய்ப்புண் முதல் வாய்ப்புற்று நோய் வரை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல உடல், மன ரீதியான பாதிப்புகளையும் உண்டாக்குகிறது✍️✍️✍️.* 


 *🛑முக்கியமான பாதிப்புகள்🛑* 

 *🩸அடிமையாதல்🩸* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️புகையிலைப் பொருள்களைச் சாப்பிட்டதும் ஆற்றல் கிடைத்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். அந்த வகை போதைப் பழக்கத்தை ஆரம்பத்தில் குறைவான அளவில் தொடங்கினாலும், நாளடைவில் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும். பின்னர் அதைப் பற்றிய சிந்தனையே மேலோங்கி காணப்படும். இதனால், பணிபுரியும் இடங்களில் எரிச்சல், மற்றவர்கள் மீது கோபம், பணியில் கவனமின்மை ஏற்படும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 
.   

 *👹புற்று👹 நோய்👹* 


 *✍️✍️✍️புகையிலைப் பழக்கத்தால் வாயில் Oral Submucous Fibrosis எனப்படும் ஒருவகைக் கட்டி ஏற்படுகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவரின் வாயில் நீர் வறட்சி ஏற்படும். தாடைகள் இறுக்கமடைந்து வாயின் இயல்பான அசைவுகள் தடைபடும். இதனால் ஒருகட்டத்தில் வாயைத் திறக்க சிரமப்படுவார்கள். மேலும் பற்கள், ஈறுகள் பாதிக்கப்படும் அல்லது அழுகிப்போக நேரிடும். இது வாய்ப்புற்று நோயின் ஆரம்ப நிலையாகும். இதன் தொடர்ச்சியாக வாய்ப்புற்று நோய்  (Oral Cancer or Mouth Cancer) ஏற்படும்.✍️✍️✍️* 


 *🌰மலட்டுத்தன்மை🌰* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குட்கா, பான்மசாலா போன்றவற்றைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தி வரும் இளைஞர்களுக்கு நரம்புத்தளர்ச்சி, ஆண்மைக்குறைவு ஏற்படும். பெண்களுக்கு இந்தப் பழக்கம் இருந்தால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் உடல் எடை மிகவும் குறைவாக இருக்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *💊எப்படி மீள்வது❓💊* 


 *✍️✍️✍️எந்தவொரு போதைப்பழக்கத்தையும் கைவிட வேண்டும் என்றால், அந்த முடிவை அந்த நபரிடமிருந்துதான் தொடங்க வேண்டும். எனவே, அந்தப் பழக்கத்தை கைவிட வேண்டும் என்று முதலில் அவர்தான் முடிவெடுக்க வேண்டும். அடிக்கடி முகம், வாய்,  உதடுகள் மற்றும் பற்களைக் கண்ணாடியின் முன் நின்று கொண்டு பார்க்க வேண்டும். அப்போது எவ்வாறெல்லாம் அவை முகத்தோற்றத்தை எப்படிக் குலைக்கிறது என்பதை உணர வேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️போதைப் பொருள்களைப் பயன்படுத்தி கண்ட கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற ஒழுங்கீனமான செயல்களை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை துப்பும் போதும், கடைகளில் வாங்கும்போதும் மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை உணரவேண்டும். இவர் பாக்கு போடுபவர், புகையிலை போடுபவர் எனக் குறைத்து மதிப்பிட்டு ஒருவிதமான கண்ணோட்டத்துடனேயே பார்க்க வைக்கிறது. அது நம் சுய மதிப்பீட்டை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️நம்மைவிட வயது குறைவானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாம் ஒரு நல்ல முன்னுதாரணமாக இல்லாமல் இருக்கிறோம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் செலவாகிறது? பொருளாதாரரீதியாக எப்படிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தப் பழக்கத்தினால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவுகளைத் தவிர்க்கிறேன். உடல் நிலையை கெடுத்துக்கொள்கிறேன் என்று தெரியவந்தால் அதற்காக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதேநேரத்தில் தொடர்ச்சியாக பின்பற்றி வந்த பழக்கத்தை திடீரென கைவிடும்போது, அந்த மாற்றத்தை உடலும் மனதும் ஏற்றுக்கொள்ள சில நாள்கள் தேவைப்படும். குறிப்பாக, தூக்கமின்மை, எரிச்சல், சோர்வாக உணர்வது போன்றவை வெளிப்படும். இவையெல்லாம் மனரீதியான பாதிப்புகள் மட்டுமே, மற்றபடி உடலுக்கோ, உயிருக்கு இதனால் எந்தப் பாதிப்பும் இருக்காது. இப்படிப்பட்ட நேரங்களில் இளநீர், மோர் போன்ற இயற்கையான நீராகாரங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது உடலில் ஏற்கெனவே சேர்ந்துள்ள நச்சுகளை வெளியேற்றும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️*
 

 *✍️✍️✍️பெரும்பாலானோருக்கு உணவு உண்டதும் போதை மருந்துகளைச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அப்போது கிராம்பு, ஏலக்காய், சோம்பு ஆகியவற்றைச் சாப்பிடச் சொல்வார்கள். இவை அந்தப் பழக்கத்துக்கு மாற்றாக அமைவதுடன், உடலுக்கும் சத்துக் கிடைக்க உதவும். மற்ற நேரங்களில் இந்த எண்ணம் ஏற்படும்போது, சூயிங்கம், வேர்க்கடலை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக ஒருவருக்கு நீண்ட நாள்களாக இந்தப் பழக்கம் இருந்தால் அந்தப் பழக்கத்தை கைவிடுவதற்கு முன்பு, பல் மருத்துவரைச் சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். புற்றுநோய் நிலைக்குச் சென்றுள்ளதா? என்பதை அறிந்துகொள்ளவும் அவர் தற்போது எந்த நிலையில் உள்ளார் என்பதையும் அறிந்து கொள்ளவும் இது உதவும். பாதிப்பைக் கண்டறியும்பட்சத்தில் அதற்காகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பழக்கத்தைக் கைவிட மனநல மருத்துவர்களின் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்✍️✍️✍️* .


 *🛑நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🛑*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment