ஆழமான, அழுத்தமான பதிவு.
படித்து சுதாரித்து கொள்ளுங்கள்!
💘 யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.
💟 வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.
💗 நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.
💌 மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள், தங்கள் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
💓 பணம் இருந்தால் நீ உயர்ந்தவன்,
குணம் இருந்தால் நீ குப்பை, நடித்தால் நீ நல்லவன். உண்மை பேசினால் கோமாளி
அன்பு காட்டினால் ஏமாளி என்று நினைப்பவரிடம் விலகி இருப்பதே நல்லது.
💖 நிலவை தூரத்தில் இருந்து ரசிப்பதை போல சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும், சில வலிகள் இல்லாமல் தவிர்க்க...
💝 தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியென்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உன் ஆயுதமாக வைத்துக்கொள். அவர்களுக்கு புரிய வைக்க வரும் காலம் ஒன்று உள்ளது. சிந்தித்து செயல்படு, இதுவும் கடந்து போகும்.
💞 நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில். ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.
💔 யாரும் உன் கண்ணீரை பார்ப்பதில்லை.
யாரும் உன் கவலைகளை பார்ப்பதில்லை.
யாரும் உன் வலிகளை பார்ப்பதில்லை.
ஆனால், எல்லோரும் உன் தவறை மட்டும் கவனிப்பார்கள்!
No comments:
Post a Comment