Sunday, August 12, 2018

மின்இணைப்பு

*நாட்டு ⚖ நடப்பு*

*#தமிழ்நாடு ஆன்லைன் மின்இணைப்பு*

12-08-2018

புதிதாக மின்இணைப்பு தேவைப்படும் பொதுமக்கள் எளிமையான முறையில் மின்இணைப்பு பெறவும் , காலதாமதம் மற்றும் லஞ்சத்தை தவிர்க்கும் பொருட்டும் தமிழ்நாடு மின்சார வாரியம் இணையதளம் வாயிலாக மின்இணைப்பு  வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

*www.tangedco.gov.in*. என்ற மின்வாரிய இணையதள முகவரி மூலம் நேரடியாக விண்ணபித்து மின்வாரிய சேவையை பெறலாம்.

*_புதிய மின்இணைப்பு கட்டணம் விபரம்_*

*_Single Phase_*

வீடு - ₹ 1600

கடை - ₹ 1600

தொழிற்சாலை - ₹ 1620

தற்காலிக இணைப்பு - ₹ 1600

*_Three Phase_*

வீடு - ₹ 6850

கடை - ₹ 6250

தொழிற்சாலை - ₹ 7070

தற்காலிக இணைப்பு - ₹ 6850

*கூடுதல் கட்டணம் வசூலித்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்*

வாட்ஸ் ஆப் :- 94421 11912

ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு :-

0422- 2498038, 94458 57156

Saturday, August 11, 2018

மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும

நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
1. IAS - Indian Administrative Service
2. IPS - Indian Police Service
3. IFS - Indian Foreign Service
4. IFS - Indian Forest Service
5. IRS - Indian Revenue Service (Income Tax )
6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )
7. IAAS - Indian Audit and Accounts Service
8. ICAS - Indian Civil Accounts Service
9. ICLS - Indian Corporate Law Service
10. IDAS - Indian Defence Accounts Service
11. IDES - Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS  -   Indian Ordinance Factory Service
22. IDSE  -  Indian defence engineering services
23.  IES  - Indian Economics Services
24. ISS  - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES -  indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.
இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை.
நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம்,
*விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.*
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
*💙இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.💙

Friday, August 10, 2018

நெல்லிக்காயை 😍😍

தினமும் ஒரு மலை நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

நம் அனைவருக்குமே நெல்லிக்காய் மருத்துவ குணம் நிறைந்த ஓர் அற்புதமான உணவுப் பொருள் என்பது தெரியும். இத்தகைய நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக நெல்லிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளது.

இவ்வளவு மருத்து பண்புகளை தன்னுள் கொண்ட மலை நெல்லிக்காயை ஒருவர் தங்களது அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் இந்த நெல்லிக்காயை பல வடிவங்களிலும் அன்றாடம் எடுக்கலாம். அதில் அதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறுகாய், ஜூஸ் போன்ற வடிவங்களிலும் உட்கொள்ளலாம்.

உங்களுக்கு தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியாதெனில், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே மலை நெல்லிக்காயை ஒருவர் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதய ஆரோக்கியம்
மலை நெல்லிக்காயில் உள்ள இயற்கை உட்பொருட்கள் இதய தசைகளை வலிமைப்படுத்தி, இரத்த ஓட்டத்தை இதயத்தில் மென்மையாக ஓடச் செய்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டிவிட்டு, உடலில் தங்கு தடையின்றி இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும்.

கொலஸ்ட்ரால்
மலை நெல்லிக்காயில் உள்ள பெக்டின் என்னும் உட்பொருள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை ஊக்குவிக்கும். இயற்கையாகவே இதில் உள்ள வளமான அளவிலான வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள், உடலில் கொலஸ்ட்ரால் அளவில் உள்ள பிரச்சனைகளைத் தடுத்து சரியான அளவில் பராமரிக்கும்.

ஆன்டி-ஏஜிங்
மலை நெல்லிக்காய் முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் மற்றும் முதுமைப் புள்ளிகளைக் குறைக்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே எளிய வழியில் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

அறிவாற்றல் ஆரோக்கியம்
மலை நெல்லிக்காய் சாறு நரம்பு மற்றும் மூளைக்கு மிகச்சிறந்த டானிக். இதனை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள வளமான அளவிலான வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மூளைக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே உங்களது மூளையின் சக்தியை அதிகரிக்க நினைத்தால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுங்கள்.

நோயெதிர்ப்பு மண்டல ஆரோக்கியம்
மலை நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களால் உடலினுள் ஏற்படும் பாதிப்பை எதிர்த்துப் போராடும். முக்கியமாக மலை நெல்லிக்காய் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, உதலைத் தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கும். எனவே அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிட்டு வர, நோய் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்கலாம்.

கண் பார்வை
மலை நெல்லிக்காய் கண்களில் உள்ள செல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், கண் பிரச்சனைகளான கண்களில் இருந்து நீர் வடிதல், கண் அரிப்பு போன்றவற்றைத் தடுத்து, பார்வையை கூர்மையாக்கும். ஆகவே பார்வை பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க நினைத்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்.

சர்க்கரை நோய்
மலை நெல்லிக்காயில் உள்ள குரோமியம், உடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, இன்சுலினை செயல்படச் செய்யும். இதன் விளைவாக சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணியான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதோடு இதில் உள்ள வைட்டமின் சி, கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.

சிறுநீரக கோளாறுகள்
மலை நெல்லிக்காய் மிகச்சிறப்பான சிறுநீர் பெருக்கி மூலிகையாக கருதப்படுகிறது. ஒருவர் இந்த மலை நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள டாக்ஸிக் பொருட்களை உடலில் இருந்து சிறுநீரின் வழியே வெளியேற்றும். மேலும் இது பாக்டீரியாக்களை அழித்து, சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களையும் சரிசெய்யும்.

வாய் ஆரோக்கியம்
மலை நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, வாயில் உள்ள பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, பல் வலி மற்றும் பல் சொத்தையாவதைத் தடுக்கும். மேலும் மலை நெல்லிக்காய் ஈறு நோய்களுடன், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். எனவே உங்களுக்கு வாயில் பிரச்சனைகள் இருந்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள்.

தலைமுடி வளர்ச்சி
மலை நெல்லிக்காய் பல்வேறு தலைமுடி பிரச்சனைகளுக்கான மிகச்சிறந்த மருந்து. எப்போது ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக உள்ளதோ, அப்போது தான் தலைமுடியில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இத்தகைய வைட்டமின் சி மலை நெல்லிக்காயில் ஏராளமான அளவில் உள்ளது. உங்களுக்கு தலைமுடி பிரச்சனை இருந்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள் அல்லது நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி மசாஜ் செய்து, 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.

ஆர்த்ரிடிஸ்
மலை நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். இது எலும்புகளில் உள்ள வீக்கம் மற்றும் மூட்டு இணைப்புக்களில் உள்ள வலியைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், மலை நெல்லிக்காயை அல்லது அதன் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள்.

மெட்டபாலிசம்
ஆரோக்கியமான மெட்டபாலிசம் உடல் எடையைக் குறைக்கும் செயல்பாட்டை எப்போதும் சிறப்பாக வைத்துக் கொள்ளும். மலை நெல்லிக்காயில் உள்ள இயற்கை பண்புகள், புரோட்டீன் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, விரைவில் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். ஆகவே உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் தினமும் மலை நெல்லிக்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நல்ல பலன் கிடைக்கும்.

பித்தக்கற்கள்
பித்தப்பையில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்வதன் மூலம், அவை கற்கள் உருவாகின்றன. மலை நெல்லிக்காய் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, அந்த கொலஸ்ட்ராலை பித்த அமிலமாக மாற்றி, பித்தக்கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே பித்தக்கல் அபாயத்தைத் தடுக்க வேண்டுமானால், தினமும் ஒரு மலைநெல்லிக்காய் சாப்பிடுங்கள்.

அசிடிட்டி பிரச்சனைகள்
மலை நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்ற பிரச்சனைகளான வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். குறிப்பாக அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள், மலை நெல்லிக்காய் அல்லது அதன் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, அசிடிட்டி குணமாகும்.

சரும ஆரோகியம்
மலை நெல்லிக்காய் சருமத்திற்கு ஊட்டமளித்து, பல்வேறு வகையான சரும பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர சத்துக்ள், சருமத்திற்கு நல்ல நிறத்தையும் வழங்கும். எனவே சரும பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுங்கள். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.


Thursday, August 9, 2018

நாகரிகங்கள் இவை

*அனைவரும் பின்பற்ற வேண்டிய*
*நாகரிகங்கள் இவை:*

*பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.* 

*நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள்.*

*(இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! -none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.*

*கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு  ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள். ஓயாமல் அதைப்பற்றி பேசி அவர்கள் மனதை புண்படுத்தி குளிர்காயாதீர்கள்.கடன் பட்டவர்கள் ஏற்கனவே கலங்கித்தான் போய் இருப்பார்கள்.*

*ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.*

*ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ  , பதவியிலோ , முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார்.* *பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள்.*
*அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்துவிடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும்.*

*பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள்.*

*நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின்  personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.*

*சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others !*

*ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.*

*ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்*.

*நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்கு என்று இருக்கும் உரிமையை மீறி அந்த குடும்ப விசயங்களில் தலையிடாதீர்கள்.*

*முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.*

*நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான் இப்படி,என் ஸ்டேட்டஸ் எப்படி தெரியுமா,என் தகுதி இப்படி etc)*

*யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.*

*வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.*

*உங்களை விட வயதில் சிறியவர்களிடம்  உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.*

*வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.*

*புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.*

*உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள்.*
*allow them freedom !* 

*ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ்செய்து கொடுத்தால்  . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .*

*பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி  உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.*

*ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.*

*உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.*

*ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.*

*பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.*

*ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!.*

*Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.*

*மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!*

*ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.*

*என் வாழ்க்கை எனக்கு தான், என் விருப்பம்தான் எனக்கு, மற்றவர்களுக்காக வாழமுடியாது என அடிக்கடி பேசாதீர்கள் இது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். அப்படி நீங்க வாழனும் என நினைச்சால் நீங்க மட்டும் தனியா இருக்கனும். மற்றவர்களுக்காக கொஞ்சம் வாழ்ந்து பாருங்கள் அது தான் உண்மையான இன்பம்.*

*படித்ததில் பிடித்தது.*

பொது மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

பொது மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி

அவசியம் பகிருங்கள் நண்பர்களே...!

https://m.facebook.com/groups/685954204947280?view=permalink&id=894294827446549


Monday, August 6, 2018

தினம் ஒரு சட்னி

தினம் ஒரு சட்னி😀😀😀😀

எல்லா பெண்களுக்கும் காலையில் காபி குடித்ததும் இட்லிக்கு இன்று என்ன சட்னி வைக்கலாம் என்ற குழப்பம் வந்து விடும், நான் எனக்கு தெரிந்த 4 சட்னி வகைகளை தொகுப்பாக கொடுக்கிறேன்.நீங்களும் இந்த முறையில் செய்து பாருங்க. இன்னும் எனக்கு தெரிந்த சட்னி வகைகளை ஷேர் பண்ணுகிறேன்.

வெங்காய சட்னி -

சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்த வெங்காய சட்னி டேஸ்ட் செமயா இருந்தது

பெரிய வெங்காயம் - 1/2 கப்,சின்ன வெங்காயம் - 1/2 கப், தக்காளி - 1, மிளகாய் வத்தல், 2 இஞ்சி - சிறிது, பூண்டு பற்கள் - 2, பொட்டுக்கடலை - 1 மேஜைக்கரண்டி எல்லாவற்றையும் வதக்கி உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி கலக்கி விடவும். அருமையான வெங்காய சட்னி ரெடி.

உளுந்து சட்னி -

தேவையான பொருள்கள் -

தேங்காய் துருவல் - 3/4 கப்,
தோல் உளுந்து - 1/4 கப்.
புளி - சிறிய கோலி அளவு
பச்சை மிளகாய் - 2
பூண்டுப்பற்கள் - 3,
உப்பு - தேவையான அளவு

தாளிக்க -

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எல்லா பொருள்களையும் தனித்தனியாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.ஆறிய பிறகு அதனுடன் உப்பு சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும்.கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றவும். இட்லி,தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்

தோல் உளுந்துக்கு பதில் வெள்ளை உளுந்தும் பயன்படுத்தலாம். தோல் உளுந்து நல்ல ருசியை கொடுக்கும்.

தேங்காய் தக்காளி சட்னி -

தேங்காய் துருவல் - 3/4 கப்,
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு தேவையான அளவு

தாளிக்க -
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை -

அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் அரைத்து வைத்துள்ள சட்னியை ஊற்றி அடுப்பை அணைக்கவும். சுவையான தேங்காய் தக்காளி சட்னி ரெடி.
  
சிறிது வித்தியாசமான தேங்காய் சட்னி

தேங்காய் துருவல் - 3/4 கப்
பச்சை மிளகாய் - 2
முந்திரிப்பருப்பு - 6
புளி - சிறிய கோலி அளவு
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு

செய்முறை -

அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ்சியில் அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் ஊற்றவும்.

Vitamins

Vitamins