Sunday, September 22, 2019

நில அளவைகள்(சர்வே பற்றி) தெரிந்து கொள்ளுங்கள்!!

நில அளவைகள்(சர்வே பற்றி) தெரிந்து கொள்ளுங்கள்!!
===========================
சர்வே” பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 7 சங்கதிகள்:
--------------------------
1. சர்வே இரண்டு பிரிவுகளாக மாநில அரசு பிரிக்கிறது.
1. நில அளவை துறை
2. நில வரிதிட்ட துறை

2. புலப்படம், கிராம வரைபடம் எல்லாம் நில அளவை துறையினால் தயாரிக்கப்படுகிறது.

3. “அ” பதிவேடு (A. Register) நில வரி திட்ட துறையினரால் உருவாக்கப்படுகிறது.

4. மாநில அரசின் நில அள வைகளை நகர நில அளவை , நத்தம் நில அளவை, மலை கிராம நில அளவை, மறு நில அளவை, வட்ட அளவில் நாள் தோறும் நடைபெறும் பட்டா மாறுதல் சம்மந்தமான நில அளவைகள் என பிரிக்கப்படுகிறது.

5. 1. கிராம வரைபடம்,
2. D ஸ்கேட்ச் ( நன்செய், புன்செய், மானவளி, நத்தம், புறம்போக்கு பகுதிகளை பிரித்து காட்டும் வரைபடம்)
3. புலப்படம்
4.சர்வே கற்கள் பதிவேடு
5. டிப்போ பதிவேடு ( கிராமத்தில் இருக்கும் ஸ்டாக் வைக்கப்பட்ட கற்கள், நில அளவை சங்கிலி உட்பட
உபகரணங்கள் இருக்கும் டிப்போ ) போன்ற ஆவணங்ள் கிராம நில அளவையில் இருக்கும்.

6. ஒவ்வொரு நில உரிமையாளரும் சர்வே செய்து போடப்பட்ட கற்களை பராமரிக்க வேண்டும். எல்லை கல்லை பாதுகாப்பது , அந்த கல் தொட்டு கொண்டு இருக்கும் புலன்களுடைய பட்டாதரரின் கூட்டு பொறுப்பு ஆகும்.

7. மத்திய அரசினால் ஆறுகள், ஏரிகள், மலைகள், சாலைகள் கோவில்கள் விளக்கி காட்டி ஸ்தல சர்வே செய்வார்கள், இவை கனிம வள ஆராய்ச்சிக்கு மிகவும் பயன்படும்.

எப்பொழுதெல்லாம் நிலத்தில் சர்வே செய்யப்படும்?

1. நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது, இறுதியாக 1984 ல் இருந்து 1987 வரை நடந்தது.

2. பிறகு நத்தத்தில் நிலவரி திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது , இறுதியாக 1990 களில் நடந்தது.

3. சர்வே புலத்தில் புதிய சர்வே புலம் அமைக்கும் போதும், சர்வே புலத்தின் எல்லையில் மாற்றம் செய்ய நேரிடும் போதும்.

4. கிராம வரைபடம் வரையும் போது திருத்தம் கண்டுப்பிடிக்கப்பட்டு எல்லை மாற்றம் செய்யப்படும் பொழுதும்

5. புறம்போக்கு நிலத்தில் எல்லைகள் மாறுதல், புறம்போக்கு தரிசாக மாறும் பொழுது, தரிசு புறம்போக்காக மாறும் பொழுதும்.

6. நிலத்தை அரசு ஆர்ஜிதம் செய்யும் போது நிலத்தின் உட்பிரிவுகளை ஒன்றாக்கி புறம்போக்காக மாற்றும் பொழுது.

7. அளவுப்பிழை, விஸ்தீரணப் பிழை, உருவப்பிழை பட்டாதரரின் நிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை சரி செய்யும் பொழுது.

8. பராமரிப்பு பணிகளின் போது புதிய சர்வே புலம் அமைக்க வேண்டி இருந்தால் நில அளவை, சர்வே செய்யப்படும்.

9. இரண்டு நில உரிமையாளருக்கு நில அளவுகளில் தகராறு வரும்பட்சத்திலும் நிலத்தை சர்வே செய்ய வேண்டி இருக்கும்.

சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :

1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.

2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).

3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.

4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.

5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.

6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.

7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.நிலத்தை அளக்கும் அளவு முறைகள் பற்றி …

நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.

1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்

பாரம்பரிய வழக்கம், நம் மண்ணில் ஆரம்ப காலம் தொட்டு புழக்கத்தில் இருக்கிறது. பிரிட்டிஸ் அளவுகள், வெள்ளைகாரன் நாட்டை ஆண்டபோது நில நிர்வாகத்தை 90% அவர்கள் உருவாக்கியதால், அதன் அளவு முறைகள் இன்றும் நடைமுறையில் உள்ளன.

உலகம் முழுக்க ஒரே அளவுகள் கொண்டுவந்தால் வியாபாரத்தில் வசதியாக இருக்கும் நோக்கில் மெட்ரிக் அளவுமுறையும் பயன் படுத்தி கொண்டு இருக்கின்றோம்.

• இன்றைக்கும் விருதுகள், சிவகாசி, சாத்தூர் பகுதிகளில் வீட்டுமனைகள் குழி கணக்கில் தான் விற்பனை செய்யபடுகிறது.

• கொங்கு பகுதிகளில் சென்ட் என்றும், சென்னையில், கிரவுண்டு என்றுமே வீட்டுமனைகள் புழக்கத்தில் இருக்கிறது.

• நாட்டு வழக்கு அளவுகளில் பிரிட்டிஸ் அளவு முறைகளில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பரிமாற்றங்கள் நடக்கின்றன.

• ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.

வேலி

• 1வேலி – 2௦ மா
• 1வேலி – 6.17 ஏக்கர்
• 1வேலி – 5காணி

மா

• 1மா – 1௦௦ குழி
• 2௦மா – 1வேலி
• 3மா – 1ஏக்கர்
• 3மா – 1௦௦ சென்ட்
• 7மா – 1ஹெக்டேர்

சதுமீட்டர்

• 1௦,௦௦௦ சதுர மீட்டர் – 1ஹெக்டேர்
• 4046.82 சதுர மீட்டர் – 1ஏக்கர்
• 4௦.5 சதுர மீட்டர் – 1சென்ட்
• 222.96 சதுர மீட்டர் – 1கிரவுன்ட்
• 1சதுர மீட்டர் – 1௦.76391 சதுர அடி
• ௦.௦929 சதுர மீட்டர் – 1 சதுர அடி
• 1௦௦ சதுர மீட்டர் – 1ஏர்ஸ்
• ௦.8361 சதுர மீட்டர் – 1குழி
• 1௦1.17 சதுர மீட்டர் – 121 குழி

செயின்
• 1செயின் – 66அடி
• 1செயின் – 1௦௦ லிங்க்
• 1௦செயின் – 1 பர்லாங்கு
• 1செயின் – 22 கெஜம்

ஏக்கர்
• 1ஏக்கர் – 43,56௦ சதுர அடிகள்
• 1ஏக்கர் – 1௦௦ சென்ட்
• 1ஏக்கர் – 16௦ square Roads
• 1ஏக்கர் – 1.1834 Square Arpents
• 1ஏக்கர் – 1௦ Square Chains
• 1ஏக்கர் – 16௦ Perches
• 1ஏக்கர் – 16௦ Poles
• 1ஏக்கர் – 4௦46.82 சதுர மீட்டர்
• 2ஏக்கர் 47சென்ட்- 1 ஹெக்டேர்
• 1ஏக்கர் – ௦. 4௦469 ஹெக்டேர்
• 1.32ஏக்கர் – 1 காணி
• 64௦ஏக்கர் – 1 சதுர மைல்
• 2.5ஏக்கர் – 1 லட்சம் சதுர லிங்ஸ்
• 6.17ஏக்கர் – 1 வேலி
• 1ஏக்கர் – 3 மா
• 1ஏக்கர் – ௦. 4௦4694 ஹெக்டேர்
• 1ஏக்கர் – 4௦.5ஏர்ஸ்
• 1ஏக்கர் – 4840 சதுர கெஜம்
• 64௦ ஏக்கர் – 1 சதுர மைல்
• 8.64ஏக்கர் – 1வள்ளம்

கெஜம்
• 1கெஜம் – 3அடி
• 22கெஜம் – 1 செயின்
• 22கெஜம் – 66 அடி
• 1கெஜம் – ௦.9144 மீட்டர்
• 1.௦93613 – 1மீட்டர்

ஏர்ஸ்
• 1௦ ஏர்ஸ் – ௦2471 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦76 சதுர அடி
• 1ஏர்ஸ் – 2. 47 சென்ட்
• 1ஏர்ஸ் – 1௦௦ ச.மீ
• 1௦௦ ஏர்ஸ் – 1ஹெக்டேர்
• ௦. 4௦5 ஏர்ஸ் – 1 சென்ட்

ஹெக்டேர்
• 1ஹெக்டேர் – 2 ஏக்கர் 47 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦,௦௦௦ ச.மீ
• 1ஹெக்டேர் – 1௦௦ ஏர்ஸ்
• ௦௦4௦ ஹெக்டேர் – 1சென்ட்
• 1ஹெக்டேர் – 247 சென்ட்
• 1ஹெக்டேர் – 1௦7637.8 சதுர அடிகள்
• ௦. 4௦5 ஹெக்டேர் – 1ஏக்கர்

சென்ட்
• 1சென்ட் – 435.சதுரஅடிகள்
• 1சென்ட் – 4௦.5 சதுர மீட்டர்
• 1சென்ட் – 3குழி
• 1சென்ட் – 48.4 சதுர குழி
• 1௦௦ சென்ட் – 484௦ சதுர குழி
• 1 சென்ட் – ௦௦4௦ ஹெக்டேர்
• 1 சென்ட் – ௦. 4௦5 ஏர்ஸ்
• 1சென்ட் – 4௦. 46 சதுர மீட்டர்
• 2. 47 சென்ட் – 1ஏர்ஸ்
• 1 சென்ட் – 1௦௦௦ சதுர லிங்ஸ்
• 5.5 சென்ட் – 1கிரவுன்ட்
• 1.5 சென்ட் – டிசிமல்
• 1சென்ட் – ௦.௦௦4௦47 ஹெக்டேர்
• 1௦ சென்ட் – ௦.௦4௦47 ஹெக்டேர்
• ௦.௦2471சென்ட் – 1 ஏர்ஸ்
• ௦.௦2471சென்ட் – 1௦ ஏர்ஸ்
• 5.5 சென்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 5.5 சென்ட் – 1 மனை
• 33.௦6சென்ட் – 1 மா
• 6.61 சென்ட் – 1 வேலி
• ௦.7 சென்ட் – 1 குழி – 3௦௦ சதுர அடி ( மதுரை)
• ௦.7. சென்ட் – 3௦௦ சதுர அடிகள் ( மதுரை )

சென்ட்
• 11.௦ சென்ட் – 4800 சதுர அடிகள்
• 11.௦ சென்ட் – 2மனை
• 56 சென்ட் – 1குருக்கம்
• 56 சென்ட் – 24,௦௦௦ சதுர அடிகள்
• 2. 47 சென்ட் – 1௦76 சதுர அடிகள்
• 4.7 சென்ட் – 1வீசம்

கிரவுண்ட்
• 1கிரவுண்ட் – 222.96 சதுர மீட்டர்
• 1கிரவுண்ட் – 24௦௦ சதுர அடிகள்
• 1கிரவுண்ட் – 5.5 சென்ட்

மீட்டர்
• 1 மீட்டர் – 3.281 அடிகள்
• 161௦ மீட்டர் – 1 மைல்
• 1௦௦௦ மீட்டர் – 1கி.மீ
• 1௦௦௦ மீட்டர் – ௦.62 மைல்
• ௦.9144 மீட்டர் – 1 கெஜம்
• 1 மீட்டர் – 39.39 இஞ்ச்
• 2௦1.16 மீ – 8 பர்லாங்கு
• 1 மீட்டர் – 1.௦93613 கெஜம்
• ௦.3௦48 – 1அடி
• 1௦ மீட்டர் – 32. 8௦84 அடிகள்

அடி சதுர அடிகள்
• 435.6 சதுர அடிகள் 1சென்ட்
• 24௦௦ சதுர அடிகள் 1கிரவுண்ட்
• 57,6௦௦ சதுர அடிகள் 1காணி
• 3.28 அடி 1மீட்டர்
• 1அடி 12 இன்ச்
• 1அடி 3௦. 48 செ. மீ
• 528௦ அடி 1 மைல்
• 328௦ அடி 1கி. மீ
• 1௦76 சதுர அடிகள் 1 ஏர்ஸ்
• 1௦.76391 சதுர அடிகள் 1சதுர மீட்டர்
• 1சதுர அடி ௦.௦929 சதுர மீட்டர்
• 24௦௦ சதுர அடிகள் 1 மனை
• 1 சதுர அடிகள் 144 சதுர அங்குலம்
• 43,56௦ சதுர அடிகள் 1 ஏக்கர்
• 1 சதுர அடி 144 சதுர அங்குலம்
• 1௦89 சதுர அடிகள் 33 அடி
• 1௦7637. 8 சதுர அடிகள் 1 ஹெக்டேர்
• 33 அடி 1 குந்தா
• 66௦ அடி 1 பர்லாங்கு
• 66௦ அடி 22௦ கெஜம்
• 66 அடி 1 செயின்
• 66 அடி 1௦௦ லிங்க்
• ௦.66 அடி 1 லிங்க்
• ௦.66 அடி 7.92 அங்குலம்
• 3 அடி 1 கெஜம்
• 1௦76 சதுர அடிகள் 2. 47 சென்ட்
• 66 அடி 22 கெஜம்
• 3.28 அடி 1.௦93613 கெஜம்
• 1 அடி ௦.3048 மீட்டர்
• 3.28௦84 அடி 1 மீட்டர்
• 32. 8௦84 1௦ மீட்டர்
• 1 சதுர அடி ௦.௦929௦ சதுர மீட்டர்
• 1௦ சதுர அடிகள் ௦.929௦ சதுர மீட்டர்
• 1௦௦ சதுர அடிகள் 9.29௦ சதுர மீட்டர்
• 2௦௦ சதுர அடிகள் 18.58௦ சதுர மீட்டர்
• 5௦௦ சதுர அடிகள் 46. 45 சதுர மீட்டர்
• 1௦7.6939 சதுர அடிகள் 1௦ ச. மீ
• 215.278 2௦சதுர மீட்டர்
• 538.195 சதுர அடிகள் 1௦௦ சதுர மீட்டர்
• 4,356 சதுர அடிகள் 1௦ சென்ட்
• 48௦௦ சதுர அடிகள் 1 மிந்திரி
• 24, 4௦௦ சதுர அடிகள் 1குறுக்கும்
• 144 சதுர அடிகள் 1குழி

என்றும் சட்டப் பணியில்..

வழக்கறிஞர்..
R.பாலமுருகன், M.A,M.L,
உயர்நீதி மன்றம் (மதுரை கிளை).

Thursday, September 19, 2019

சின்ன சீரகத்தின

*சின்ன சீரகத்தின் மருத்துவ குணங்கள்*

*சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.*

*அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.*

*நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.*

*சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.*

*மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.*

*சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.*

*சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.*

*ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.*

*சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.*

*சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.*

*சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.*

*சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.*

*ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை தூள் செய்து 50 மி.லி. தேங்காய் எண்ணெய்யில் சூடு செய்து, வடிகட்டி அதில் இரண்டு துளி மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும்.*

*கருஞ்சீரகத்திநறுமண எண்ணெய் உள்ளது. அது வயிற்று உப்புசம் மற்றும் வலியை நீக்கி, கழிவுகளை எளிதாக வெளியேற்றும்தன்மை கொண்டது. இரைப்பையில் பக்டீரியாவால் உண்டாகும் நோய்த் தொற்று மற்றும் குடலில் உள்ள தேவையற்ற பூச்சிகளை அழிக்கும்.*

*கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சுடுநீரில் கலந்து, சிறிதளவு தேனும் சேர்த்து பருகினால் சிறுநீரக கற்களும், பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை, மாலை இருவேளை சாப்பிடலாம்.*

*தொடர் இருமல் மற்றும் ஆஸ்துமா நோயால் துன்பப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ் சீரக பொடியை தேன் மற்றும் அரை தேக்கரண்டி அரைத்த பூண்டு விழுதுடன் கலந்து சாப்பிட வேண்டும். இது நுரையீரலில் உருவாகும் சளியை அகற்றும்.*

*கருஞ்சீரகத்தில் தைமோகியோனின்"ருேதிப்பொருள் உள்ளது. இது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதில் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு உள்ளதால் கெட்ட கொழுப்பு குறையும். ஒவ்வாமையும் நீங்கும்.*

*தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்து. இதனை பொடி செய்து கரப்பான் மற்றும் சொரியாஸிஸ் நோய் இருப்பவர்கள் தேய்த்து குளித்து வரலாம். புண்களால் ஏற்படும் தழும்புகளும் மறையும். குளியலுக்கு பயன்படுத்தும் பொடிகளில் கருஞ்சீரகத்தை அரைத்து சேர்த்து, பயன்படுத்துவது நல்லது.*

*புற்று நோய்க்கும் கருஞ்சீரகம் நல்ல மருந்தாக செயல்படுவதாக பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. குறிப்பாக கணையப் புற்று நோயை கட்டுப்படுத்துவதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தில் இன்டெர்பிதான் என்ற இயற்கை வேதிப்பொருள் உள்ளது. அது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி புற்று நோய் கட்டிகள் ஏற்படாத வண்ணம் பாதுகாக்கிறது. புற்று நோய் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகத்தை சுடுநீரில் கலந்து காலையும், மாலையும் பருகலாம். சுடுநீருக்கு பதிலாக தேன் கலந்தும் சாப்பிடலாம்.*

*சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் இருக்கும். அந்த நாட்களில் அடிவயிறு கனமாகி, சிறுநீர் வெளியேறுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு கருஞ்சீரகம் மருந்தாக பயன்படுகிறது. அதனை வறுத்து லேசாக வெடிக்க விட்டு தூள் செய்து வைத்துக்கொண்டு மாதவிடாய் ஏற்படும் தேதிக்கு பத்து நாட்கள் முன்பிருந்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தினமும் இருவேளை தேன் அல்லது கருப்பட்டி கலந்து சாப்பிடவேண்டும். இது மாதவிடாய் சிக்கலை போக்கும். வயிறு கனம் குறைந்து, சிறுநீர் நன்றாக பிரியும்.*

*பிரசவத்திற்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.*

*கருஞ்சீரகத்த வெந்நீர் விட்டு அரைச்சு தலைவலிக்கும் மூட்டு வீக்கத்துக்கும் மேல்பூச்சா பூசி வந்தா சரியாகும். இந்த பொடிய காடி (நீராகாரம்) விட்டு அரைச்சு படை இருக்குற இடத்துல பூசலாம். அதோட, கரப்பான், சிரங்கு மாதிரி பிரச்சன இருக்குறவங்களுக்கு நல்லெண்ணெயில கருஞ்சீரக பொடிய சேத்து குழச்சு பூச குணமாகும். பசுவோட கோமியம் விட்டு அரைச்சு வீக்கம் உள்ள இடத்துல பூசுனா வீக்கம் குறையும். இந்த பொடிய தேன் விட்டு அரைச்சு பூச, குழந்தை பேறுக்கு பிறகு பெண்களுக்கு வர்ற வலி குணமாகும். கருஞ்சீரகப் பொடிய 1 கிராம் எடுத்து தேன் கூட சேத்தோ இல்லேன்னா நீர் சேத்தோ கலந்து குடுத்தா மூச்சு முட்டல் பிரச்சன உள்ளவங்களுக்கு நல்லபலன் கிடைக்கும்.*

*கருஞ்சீரகப் பொடிய 1 கிராம் எடுத்து மோர் கூட கலந்து தொடர்ந்து குடிச்சு வந்தா விடாமல் வர்ற விக்கல் பிரச்சனை குணமாகும்.*

*1 கிராம் பொடிய எடுத்து* *நீராகாரத்தோட குடிச்சு வந்தா குடல்ல உள்ள புழுக்கள்லாம் வெளியேறிடும்*

*சளி, இருமலை போக்க கூடியதும்,* *தோல் நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டதும்,* *மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கவல்லது கருஞ்சீரகம்.*
*பிரசவத்துக்கு பின்பு கருப்பையில் உள்ள அழுக்கை நீக்க, குழந்தை பெற்ற மூன்றாவது நாளில் இருந்து, ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் கலந்து உருண்டை செய்து காலை, மாலை ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.*

*கர்ப்பப்பை வலி, சிரங்கு, கண்வலி போன்ற நோய்களுக்கும், கருஞ்சீரகம் நல்ல நிவாரணியாகும். கருஞ்சீரகம் சிறந்த நோய் நிவாரணி என்று  நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே வாரத்தில் சில நாட்கள் எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு சிறந்தது.*

*கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து கருகாமல் வறுத்து பொடி செய்து, இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர  வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் தேவையற்ற கொழுப்பு நீங்குகிறது. ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.*

*கருஞ்சீரக பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் தேன் கலந்து பருகினால், சிறுநீரக கற்களும் பித்தப்பை கற்களும் கரையும். இதை காலை மாலை என இருவேளை சாப்பிடலாம்*

இனிய நற்காலை நல்வாழ்த்துக்கள்

Monday, September 9, 2019

வரலாற்றின் தந்தை

*1.வரலாற்றின் தந்தை?* ஹெரடோடஸ்

*2.. புவியலின் தந்தை?* தாலமி

*3..இயற்பியலின் தந்தை?* நியூட்டன்

*4..வேதியியலின் தந்தை?* இராபர்ட் பாயில்

*5..கணிப்பொறியின் தந்தை?* சார்லஸ் பேபேஜ்

*6..தாவரவியலின் தந்தை?* தியோபிராச்டஸ்

*7..விலங்கியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்

*8..பொருளாதாரத்தின் தந்தை?* ஆடம் ஸ்மித்

*9..சமூகவியலின் தந்தை?* அகஸ்டஸ் காம்தே

*10..அரசியல் அறிவியலின் தந்தை?* அரிஸ்டாட்டில்

*11..அரசியல் தத்துவத்தின் தந்தை?* பிளேட்டோ

*12..மரபியலின் தந்தை?* கிரிகர் கோகன் மெண்டல்

*13..நவீன மரபியலின் தந்தை?* T .H . மார்கன்

*14..வகைப்பாட்டியலின் தந்தை?* கார்ல் லின்னேயஸ்

*15..மருத்துவத்தின் தந்தை?* ஹிப்போகிறேட்டஸ்

*16..ஹோமியோபதியின் தந்தை?* சாமுவேல் ஹானிமன்

*17..ஆயுர்வேதத்தின் தந்தை?* தன்வந்திரி

*18..சட்டத்துறையின் தந்தை?* ஜெராமி பென்தம்

*19..ஜியோமிதியின் தந்தை?* யூக்லிட்

*20..நோய் தடுப்பியலின் தந்தை?* எட்வர்ட் ஜென்னர்

*21..தொல் உயரியியலின் தந்தை?* சார்லஸ் குவியர்

*22..சுற்றுச் சூழலியலின் தந்தை?* எர்னஸ்ட் ஹேக்கல்

*23..நுண் உயரியியலின் தந்தை?* ஆண்டன் வான் லூவன் ஹாக்

*24..அணுக்கரு இயற்பியலின் தந்தை?* எர்னஸ்ட் ரூதர்போர்ட்

*25..நவீன வேதியியலின் தந்தை?* லாவாயசியர்

*26..நவீன இயற்பியலின் தந்தை?* ஐன்ஸ்டீன்

*27..செல்போனின் தந்தை?* மார்டின் கூப்பர்

*28..ரயில்வேயின் தந்தை?* ஜார்ஜ் ஸ்டீவன்சன்

*29..தொலைபேசியின் தந்தை?* கிரகாம்ப்பெல்

*30..நகைச்சுவையின் தந்தை?* அறிச்டோபேனஸ்

*31..துப்பறியும் நாவல்களின் தந்தை?* எட்கர் ஆலன்போ

*32..இந்திய சினிமாவின் தந்தை?* தாத்தா சாகேப் பால்கே

*33..இந்திய அணுக்கருவியலின் தந்தை?* ஹோமி பாபா

*34..இந்திய விண்வெளியின் தந்தை?* விக்ரம் சாராபாய்

*35..இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?* டாட்டா

*36..இந்திய ஏவுகணையின் தந்தை?* அப்துல் கலாம்

*36..இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?* வர்க்கீஸ் குரியன்

*37..இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?* சுவாமிநாதன்

*38..இந்திய பட்ஜெட்டின் தந்தை?* ஜேம்ஸ் வில்சன்

*39..இந்திய திட்டவியலின் தந்தை?* விச்வேச்வரைய்யா

*40..இந்திய புள்ளியியலின் தந்தை?* மகலனோபிஸ்

*41..இந்திய தொழில்துறையின் தந்தை?* டாட்டா

*42..இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?* தாதாபாய் நௌரோஜி

*43..இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?* ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

*44..இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?* ராஜாராம் மோகன்ராய்

*45..இந்திய கூட்டுறவின் தந்தை?* பிரடெரிக் நிக்கல்சன்

*46..இந்திய ஓவியத்தின் தந்தை?* நந்தலால் போஸ்

*47..இந்திய கல்வெட்டியலின் தந்தை?* ஜேம்ஸ் பிரின்சப்

*48..இந்தியவியலின் தந்தை?* வில்லியம் ஜான்ஸ்

*49..இந்திய பறவையியலின் தந்தை?* எ.ஒ.ஹியூம்

*50..இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?* ரிப்பன் பிரபு

*51..இந்திய ரயில்வேயின் தந்தை?* டல்ஹௌசி பிரபு

*52..இந்திய சர்க்கஸின் தந்தை?* கீலெரி குஞ்சிக் கண்ணன்

*53..இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?* கே.எம் முன்ஷி

*54..ஜனநாயகத்தின் தந்தை?* பெரிக்ளிஸ்

*55..அட்சுக்கூடத்தின் தந்தை?* கூடன்பர்க்

*56..சுற்றுலாவின் தந்தை?* தாமஸ் குக்

*57..ஆசிய விளையாட்டின் தந்தை?* குருதத் சுவாதி

*58..இன்டர்நெட்டின் தந்தை?* விண்டேன் சர்ப்

*59..மின் அஞ்சலின் தந்தை?* ரே டொமில்சன்

*60..அறுவை சிகிச்சையின் தந்தை?* சுஸ்ருதர்

*61..தத்துவ சிந்தனையின் தந்தை?* சாக்ரடிஸ்

*62..கணித அறிவியலின் தந்தை?* பிதாகரஸ்

*63..மனோதத்துவத்தின் தந்தை?* சிக்மண்ட் பிரைடு

*64..கூட்டுறவு அமைப்பின் தந்தை?* இராபர்ட் ஓவன்

*65..குளோனிங்கின் தந்தை?* இயான் வில்முட்

*66..பசுமைப்புரட்சியின் தந்தை?* நார்மன் போர்லாக்

*67..உருது இலக்கியத்தின் தந்தை?* அமீர் குஸ்ரு

*68..ஆங்கிலக் கவிதையின் தந்தை?* ஜியாப்ரி சாசர்

*69..அறிவியல் நாவல்களின் தந்தை?* வெர்னே

*70..தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?* அவினாசி மகாலிங்கம்

  நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள்

*1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?*

7வது இடம்

*2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?*

23 வது இடம்

*3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*

16வது இடம்

*4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?*

15வது இடம் 

*5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?* 14வது இடம்

*6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?*

மதுரை

*7 ) சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?*

2004

*8 ) தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?*

72993

*9 ) தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?*

சென்னை

*10 ) தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?*

1076 கி.மீ

*11 ) தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அவையாக மாற்றப்பட்டது?*

1986

*12 ) தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?*

கன்னியாக்குமரி (92.14 சதவீதம்)

*13 ) தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?*

சென்னை (23,23,454)

*14 ) தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*

சென்னை (46,81,087)

*15 ) தமிழகத்தில் உள்ள ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*

68.45 ஆண்டுகள்

*16 ) தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?*

13 மாவட்டங்கள்

*17 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*

234

*18 ) தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?*

1

*19 ) தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?*

12 துறைமுகங்கள்

தமிழகத்தில் உள்ளன

*20 ) பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?*

சென்னை

*21 ) தமிழகத்தில் உள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு?*

71.54 ஆண்டுகள்

*22 ) தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?*

15979

*23 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?*

561

*24 ) தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?*

146

*25 ) தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*

18

*26 ) தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?*

39

*27 ) தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?*

தர்மபுரி (64.71 சதவீதம்)

*28 ) தமிழகத்தில் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?*

பெரம்பலூர் 5,64,511

*29 ) தமிழகத்தில் மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம்?*

சென்னை (26903பேர் ஒரு சதுர கி.மீட்டரில் வாழ்கின்றனர்)

*30 ) தமிழகத்தில் மிகக்குறைந்த மக்கள் நெருக்கம் கொண்ட மாவட்டம் எது?*

நீலகிரி (1சதுர கி.மீட்டரில் 288 மட்டுமே வாழ்கின்றனர்)

*31 ) தமிழகத்தில் மிக்குறைந்த பெண்கள் கொண்ட மாவட்டம் எது?*

தர்மபுரி

*32 ) தமிழகத்திலுள்ள மொத்த மாவட்டங்கள் எத்தனை?*

32

*33 ) தமிழகத்தின் 31 வது மாவட்டம் எது?*

அரியலூர்

*34 ) தமிழகத்தின் 32 வது மாவட்டம் எது?*

திருப்பூர்

*35 ) தமிழகத்தின் கல்வியறிவு எவ்வளவு சதவீதம்?*

80.33 சதவீதம்

*36 ) தமிழகத்தின் காடுகளின் பரப்பு எவ்வளவு?*

17.58 சதவீதம்

*37 ) தமிழகததின் மாநில விலங்கு எது?*

வரையாடு

*38 ) தமிழகத்தின் முக்கிய 3 துறைமுகங்கள் எது?*

சென்னை, எண்ணூர், தூத்துக்குடி

*39 ) தமிழகத்தின் முக்கிய ஆறுகள் எது?*

காவேரி, வைகை, தாமிரபரணி, பாலாறு, பவானி

*40 ) தமிழகத்தின் முக்கியமான 6 விமானநிலையங்கள் எங்குள்ளது?*

1. சென்னை 

2. கோவை 

3. மதுரை 

4. திருச்சி 

5 தூத்துக்குடி 

6 சேலம்

*41 ) தமிழ்நாட்டில் 2011 கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் எவ்வளவு?*

999பெண்கள்(1000 ஆண்கள்)

*42 ) தமிழ்நாட்டில் காடுகள் அதிகமாக உள்ள மாவட்டங்கள் எவை?*

1. நீலகிரி 

2. சேலம் 

3. வேலூர் 

4. கன்னியாக்குமாரி

*43 ) தமிழ்நாட்டில் காடுகள் குறைவாக உள்ள மாவட்டங்கள் எவை?*

1. திருவாரூர் 

2. இராமநாதபுரம் 

3. தூத்துக்குடி 

4. கடலூர்

*44 ) தமிழ்நாட்டில் சமத்துவபுரம் தொடங்கப்பட்ட முதல் மாவட்டம் எது?*

மதுரை (மேலக்கோட்டை - ஆண்டு 1997)

*45 ) தமிழ்நாட்டின் இணைய தளம் எது?*

www.tn.gov.in

*46 ) தமிழ்நாட்டின் தலைநகரம் எது?*

சென்னை

*47 ) தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி எவ்வளவு?*

ஒரு ச.கி.மீட்டருக்கு 555 பேர்

*48 ) தமிழ்நாட்டின் மாநில அரசு சின்னம் எது?*

திருவில்லிபுத்தூர் கோபுரம்

*49 ) தமிழ்நாட்டின் மாநில எல்லையை குறிப்பிடுக?*

கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே கேரளா, வடக்கே ஆந்திரபிரதேசம், தெற்கே இந்தியபெருங்கடல்

*50 ) தமிழ்நாட்டின் மாநில தமிழ்தாய் வாழ்த்து எது?*

நீராடும் கடலுடுத்த

*51 ) தமிழ்நாட்டின் மாநில நடனம் எது?*

பரத நாட்டியம்

*52 ) தமிழ்நாட்டின் மாநில பறவை எது?*

மரகதப்புறா

*53 ) தமிழ்நாட்டின் மாநில மரம் எது?*

பனைமரம்

*54 ) தமிழ்நாட்டின் மாநில மலர் எது?*

செங்காந்தள் மலர்

*55 ) தமிழ்நாட்டின் மாநில விளையாட்டு எது?*

கபடி

*56 ) தமிழ்நாட்டின் மொத்த பரப்பு எவ்வளவு?*

1,30,058 ச.கி.மீ