Sunday, April 21, 2019

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவ

முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் !...
அல்ஹம்துலில்லாஹ்

1. ஐக்கியப் பொருளாதாரப்
பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ்
ரோடு ஆயிரம் விளக்கு,
சென்னை – 600 006 தொலைபேசி:
2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட்
பேங்க், ராயபேட்டை,
நெடுஞ்சாலை, சென்னை – 14
தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 ,
அண்ணா சாலை, சென்னை – 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக்
பவுண்டேசன், 688 ,
அண்ணா சாலை, சென்னை – 06

5. B S. அப்துல் ரஹ்மான் ஜகாத்
பண்ட் பவுண்டேசன், 4 மூர்ஸ்
ரோடு, சென்னை – 06
(ஜகாத்துக்கு உரியவர்களுக்கு மட்டும்)

6. சுலைமான் ஆலிம் சாரிடபிள்
டிரஸ்ட், ஜாவர் பிளாசா,
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை – 34

7. முஹம்மது சதக்
அறக்கட்டளை, 133 , நுங்கம்பாக்கம்
நெடுஞ்சாலை, சென்னை – 34

8. மெஜெஸ்டிக் பவுண்டேசன் 117
ஜெனெரல் பேட்டர்ஸ்
சாலை, சென்னை – 02

9. முஸ்லிம் பவுண்டேசன் டிரஸ்ட்,
ஜபார்ஷா தெரு, திருச்சி.

10. தமிழ்நாடு முஸ்லிம்
தொண்டு இயக்கம், 118 /
பி வேப்பேரி நெடுஞ்சாலை,
சென்னை – 03

11. தமிழ்நாடு முஸ்லிம்
பட்டதாரிகள் சங்க வெல்பர்
டிரஸ்ட், டி – பிளாக் 10 ( 23 ) 11
வது தெரு, அண்ணா நகர் –
சென்னை 40 போன் 98400 80564

12. அஸ்மா காசிம்
அறக்கட்டளை, மாண்டியத் சாலை,
எழும்பூர் – சென்னை – 08

13. ராஜகிரி பைத்துல்மால், கீழத்
தெரு, ராஜகிரி – 614 207

14. டாம்கோ 807, – அண்ணா சாலை,
5 வது சாலை, சென்னை

15. ஹாஜி. அஹமது மீரான்,
Managing Director Professional
Courier’s, 7 மகாராஜா சூர்யா ராவ் ரோடு, ஆழ்வார்பேட்டை – சென்னை – 18

16. மியாசி, புதுக்
கல்லூரி வளாகம், பீட்டர்ஸ்
ரோடு சென்னை – 14

17. S I E T கே.பி. தாசன் சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 18

மாஷா அல்லாஹ் .... உதவி செய்ய
முன்வந்திருக்கும்
நிறுவனங்களுக்கும் ,
தனியார்களுக்கும் எல்லாம் வல்ல
ரஹ்மான் அவர்களின்
செல்வத்தை இரடிப்பாக்கி கொடுப்பானாக !..
நல்ல ஆரோக்கியத்தையும்
இவர்களின் குடும்ப
உறுப்பினர்கள் அனைவருக்கும்
அல்லாஹ் நல்லாரும்
புரிவானாக !.. ஆமீன் ..

எனதருமை சகோதரர்களே !...
மேற்காணும் தகவல்கள் பலரையும்
சென்றடைய share செய்யுங்கள்.

இன்ஷா அல்லாஹ் ...    https://m.facebook.com/story.php?story_fbid=990794480933177&id=100000079044529

Saturday, April 13, 2019

பொன்னாங்கண்ணிக்கீரை

*♨ இன்றைய சமையல் குறிப்பு♨*

*📆14-04-2019📆*

*🥬ருசியான பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி🥯*

*🍱தேவையானப் பொருட்கள்*

🥗கோதுமை மாவு - 500 கிராம்

🥗பொன்னாங்கண்ணிக்கீரை - 2 கப் (பொடியாக நறுக்கியது)

🥗வெண்ணெய் - 4 டீஸ்பு+ன்

🥗வெள்ளை எள் - 2 டீஸ்பு+ன்

🥗ஓமம் - 2 டீஸ்பு+ன்

🥗எண்ணெய் - தேவையான அளவு

🥗உப்பு - தேவையான அளவு

🥗தண்ணீர் - தேவையான அளவு

*🍴செய்முறை*

🍘 முதலில் கோதுமை மாவுடன் வெண்ணெய், எள், ஓமம், சிறிதளவு உப்பு போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். பின் பொன்னாங்கண்ணிக்கீரையில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி வதக்கி, மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.

🍘 பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் சப்பாத்தி மாவை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

🍘 பிறகு, பிசைந்த மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பின்பு அதனை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும்.

🍘 கடைசியாக, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சு+டானதும் தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியைப் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு திருப்பி போட்டு வேக விட்டு எடுத்தால் வித்தியாசமான சுவையில் பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தி தயார்!!!

*🕹குறிப்பு*

🥙பொன்னாங்கண்ணிக்கீரை சப்பாத்தியில் இஞ்சி பேஸ்ட், பு+ண்டு பேஸ்ட் சேர்த்துப் பிசைந்தும் தயாரிக்கலாம். இது எளிதில் ஜீரணம் ஆகிவிடும். இதற்கு சட்னி, சாஸ் தொட்டு சாப்பிடலாம்

*════*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*

*📆14-04-2019📆*

*🥬பொன்னாங்கன்னி கீரையின் மருத்துவப் பயன்கள்💊*

🥬மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்த ஏற்றது.

🥬பொன்னாங்கன்னி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

🥬வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் உடலும், தோலும் பளபளவென்று மாறிவிடும்.

🥬பொன்னாங்கன்னி கீரையை நன்றாக அலசி சிறிதாக நறுக்கி, அதனுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு, மிளகுத்தூள் சேர்த்து வேகவைத்து மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

🥬அதிக வெயிலில் அலைந்து வேலை செய்பவர்களுக்கும், கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும்.இவர்கள் பொன்னாங்கன்னி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் இப்பிரச்சினை நீங்கும்.

🥬பொன்னாங்கன்னி கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு ஊட்டும்.

*════♢வானவில்♢════*

Wednesday, April 10, 2019

கேழ்வரகு இடியாப்பம

*♨ இன்றைய சமையல் குறிப்பு♨*_

*📆10-04-2019📆*

*🍿 கேழ்வரகு இடியாப்பம்🍕*

*🍱தேவையான பொருட்கள்*

🥙கேழ்வரகு மாவு1 கப்

🥙கோதுமை மாவு1 கப்

🥙கடலை மாவுகால் கப்

🥙உப்புதேவைக்கேற்ப

🥙சுடு தண்ணீர்மாவு பிசைய

*🍴செய்முறை*

  🍲கேழ்வரகு மாவையும், கடலை மாவையும் தனித்தனியே லேசாக வறுக்க வேண்டும். ஆவியில் கோதுமை மாவை வேக வைக்க வேண்டும்.

 🍲 வறுத்த மாவுகளோடு ஆவியில் வேக வைத்த கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலந்து தேவையான சுடு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவேண்டும்.

 🍲 இடியாப்பக் குழலில் சிறிது எண்ணெய் தடவி மாவை அதில் நிரப்பி இடியாப்பத் தட்டில் பிழிந்து ஆவியில் 3 நிமிடங்கள் வேக வைக்கவேண்டும்.

🍲இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : காய்கறி மசாலா.

*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*_

*📆10-04-2019📆*

*🍿கேழ்வரகின் மருத்துவப் பயன்கள்💊*

🍟தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.

🍟இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும்.
குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம்.

🍟கேழ்வரகு உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுப்பதுடன் உடல் எடையைக் குறைக்கும் குணமும் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகமிக நல்லது.

*◆◇◆◇◆வானவில்◇◆◇◆◇*

Tuesday, April 9, 2019

கோடை வெயிலு

கோடை வெயிலுக்கு இயற்கையின் கொடைகள்:-
------------------------------------------------------------
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதை ஆகியவை உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத்தர வல்லவை.

பாதாம் பிசினை இரண்டு நகக்கண் அளவு எடுத்து  ஒரு பெரிய டம்ளர் தண்ணீரில் இரவில் போட்டு வைத்தால் காலையில் மொத்த நீரும் ஒரு ஜெல் போல மாறிவிடும் (இது ஜிகர்தண்டா செய்ய பயன்படுத்தப்படுகிறது). இதை தண்ணீருடனோ அல்லது எந்த பழச்சாறு, சர்பத்துடனோ கலந்து நீங்கள் அருந்தலாம்.

அதைப்போன்று கடுகு போல தோற்றமளிக்கும் சப்ஜா விதைகளை (பலூடா செய்ய இது பயன்படுத்தப்படுகிறது) சிறிது நேரம் நீரில் ஊற வைத்தால் அவை உப்பி நாம் அருந்தும் சர்பத் அல்லது பழச்சாறுகளில் கலக்கவோ தயாராகிவிடும்.

மொத்தம் 50-100 ரூபாய்க்கு இவற்றை வாங்கிக்கொண்டால் ஒரு நபருக்கு இந்த கோடைகாலம் முழுவதுக்கும் போதுமானது.

Wednesday, April 3, 2019

மாம்பழ ஐஸ்கிரீம்

[4/4, 12:14 PM] 🅰LEEⓂ: _*♨ இன்றைய சமையல் குறிப்பு♨*_

*📆04➖04➖2019📆*

*🍋 மாம்பழ ஐஸ்கிரீம்🍧*

*🍱தேவையான பொருட்கள்*

🥙பெரிய மாம்பழம்4

🥙பால்2 கப்

🥙வெண்ணிலா ஐஸ்கிரீம் 2 கப்

🥙ஜெல்லி4 ஸ்பு+ன்

*🍴செய்முறை*

*🍨 மாம்பழ கேக் செய்வதற்கு முதலில் பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும். பிறகு மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.*

*🍨 பிறகு குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும். பிறகு பால் கலந்த மாம்பழச்சாற்றை ஃபிரிட்ஜில் சுமார் 3 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும். பிறகு வெளியே எடுத்து, அதனுடன் வெண்ணிலா ஐஸ்கிரீமைச் சேர்த்து பரிமாறவும். இப்போது மாம்பழ ஐஸ்கிரீம் ரெடி.*

*════♢வானவில்♢════*
[4/4, 12:14 PM] 🅰LEEⓂ: _*♨ இன்றைய மருத்துவ குறிப்பு♨*_

*📆04➖04➖2019📆*

*🍋மாம்பழத்தின் மருத்துவ பயன்கள்💊*

*🍋மாம்பழத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை மாம்பழச்சாறு தீர்க்கும். கோடை மயக்கத்தைத் தீர்க்கும். மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து ஜீரணத்தைக் கூட்டும். பல்வலி, றுவலி போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.*

*🍋மாம்பழம் நோய்த்தடுப்பு சக்தியைக் கூட்டும். இரத்தத்தை ஊற வைக்கும்.*

*🍋மாம்பழச்சாறு நரம்புத்தளர்ச்சியை குணப்படுத்தும். கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் போன்றவற்றை மாம்பழம் குணப்படுத்தும்.*

*🍋மாம்பழச்சதையை மிக்சியிலிட்டு சிறிதளவு பால் சேர்த்து, ஏலக்காய், ஐஸ் துண்டுகளைச் சேர்த்து அருந்தினால் சுவையாக இருப்பது மட்டுமின்றி கோடையில் ஏற்படும் வெப்பம் மற்றும் தோல் தொல்லைகளை நீக்கும்.*

*════♢வானவில்♢════*

Tuesday, April 2, 2019

உணவே_மருந்து_மருந்தே_உணவு

#மூளை_முதல்_மலக்குடல் வரை... உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்

👽#மூளை

கறிவேப்பிலைத் துவையலை 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சீராகி, நாம் சுறுசுறுப்புடன் இருப்போம்.

குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால், மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

வல்லாரை இலைகளை நெய்யில் வதக்கி சுடுசாதத்துடன் இரண்டு கவளம் சாப்பிட்டு வர வேண்டும்.

தினசரி இரண்டு துண்டு தேங்காயை மென்று தின்பதால் மூளையில் எந்தப் புண்களும் வராது.

👀#கண்கள்

பாலுடன் குங்குமப்பூ சேர்த்துக் குடித்து வருவது நல்லது.

தினமும் 50 கிராம் அளவுக்கு மாம்பழம் அல்லது பப்பாளியைச் சாப்பிட்டு வர பார்வைத்திறன் மேம்படும்.

அரைக்கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும். அதுபோல் பொன்னாங்கண்ணி, முருங்கைக் கீரைக்ச் சாப்பிட்டாலும் பார்வைத்திறன் மேம்படும்.

வெண்டைக்காய் மோர்க்குழம்பு, வெண்டை மசாலா, வெண்டைக்காய் பொரியல் என சாப்பிட கண்களுக்கு நல்லது.

தினந்தோறும் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், கண் தொடர்பான பிரச்னைகள் வராது.

தினமும் 5 பாதாம்களை சாப்பிட்டு வரவேண்டும்.

😁#பற்கள்

மாவிலைப் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதியாகும்.

கோவைப்பழம் சாப்பிட்டால் பல் தொந்தரவுகள் வராது. உணவிலும் அடிக்கடி கோவைக்காயைச் சேர்த்துக்கொள்ளலாம்.

செவ்வாழைப் பழத்தை தினமும் இரவில் சாப்பிட்டு வர பல்லில் ரத்தக்கசிவு, பல் சொத்தை ஆகியவை வராது.

பல் உறுதியாக, உணவை நன்றாக மென்று சுவைக்க வேண்டும். கேரட், கரும்பு, ஆப்பிள் போன்றவற்றைப் பத்து முறையாவது நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

🍁#நரம்புகள்

சேப்பங்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நரம்புகள் பலம் பெறும்.

இரண்டு அத்திப்பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வரலாம்.

மாதுளைப் பழச்சாற்றில் தேன் கலந்து 48 நாள்கள் குடித்து வரலாம்.

இலந்தைப் பழத்தை அவ்வப்போது சுவைத்து வரலாம்.

கரிசலாங்கண்ணிக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது.

🌹#ரத்தம்

வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும்.

திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.

தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும்.

அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும்.

இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு 10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.ஷ...ரு🌴🌷

💃#சருமம்

தேகம் பளபளப்பாக மாற ஆவாரம் பூ டீ குடித்து வரலாம். ஆரஞ்சுப் பழத்தையும் சாப்பிட்டு வரலாம்.

முட்டைக்கோஸ் சாற்றை முகத்தில் தடவி வர முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மறையும்.

சந்தனக் கட்டையை இழைத்து அதனுடன் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசினால் பருக்கள் நீங்கும். முகம் பிரகாசமாகும்.

ஆரோக்கியமான உடல், பொலிவான முகம், பளபளப்பான சருமம் பெற அறுகம்புல்லை நீர் விட்டு அரைத்து, வெல்லம் சேர்த்து வாரம் மூன்று முறைக் குடித்து வரவேண்டும்.

💓#நுரையீரல்  & இதயம்

தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை தினசரி சாப்பிட்டு வர நுரையீரல், இதயம் பலமாகும்.

கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நல்லது.

ஆர்கானிக் ரோஜாப்பூ, பனங்கற்கண்டு, தேன் ஆகியவற்றை லேகியம் போல கலந்து, தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர இதயம் பலமாகும்.

இஞ்சி முரப்பா, இஞ்க்ச் சாறு, இஞ்சித் துவையல் ஆகியவற்றைச் சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக துடித்துக் கொண்டிருக்கும்.

சுண்டை வற்றலை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால்  நுரையீரல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

திராட்சை ஜூஸ், உலர் திராட்சையை சாப்பிட இதயம் பலம் பெறும்.

#முள்ளங்கிச் சாற்றை அரை கப் அளவுக்கு மூன்று வாரங்களுக்கு குடித்து வருவது நல்லது. இதனால், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் நெருங்காது.

#ஆளிவிதைகள், பாதாம், வால்நட் ஆகியவற்றில் ஒமேகா 3, நல்ல கொழுப்பு இருப்பதால் இதயத்துக்கு நல்லது.

🍒#வயிறு

காலையில் எழுந்ததும் ஊறவைத்த ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட்டு சிறிதளவு தயிரையும் குடிக்க வேண்டும். வயிறு சுத்தமாகும்.

🌴🌷மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.
வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடிக்க வேண்டும்.

🌴🌷வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

#சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொள்ள தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும்.

வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்

🍅#கல்லீரல் & #மண்ணீரல்

கரிசலாங்கண்ணிக் கீரையைக் கூட்டாக செய்துச் சாப்பிடலாம். கீழாநெல்லியை புளியங்கொட்டை அளவு வெறும் வயிற்றில் மாதந்தோறும் ஐந்து நாளைக்குச் சாப்பிட வேண்டும்.

மாதத்தில் இரண்டு நாள்கள் வேப்பம்பூ ரசம் வைத்துச் சாப்பிடுங்கள்.

திராட்சை பழச்சாற்றை அருந்தி வந்தால் கல்லீரல், மண்ணீரல் உறுப்புகளுக்கு நன்மையைச் செய்யும்.

🍓#மலக்குடல்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும்.

பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வரலாம்.

மாலை ஆறு மணி அளவில், மாம்பழ சீசனில் மாம்பழத்தைத் தொடர்ந்து சுவைத்து வரலாம்.

மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

👣#பாதம்
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சம அளவு எடுத்து பாதத்தில் தடவி வந்தால் பாதம் மிருதுவாக இருக்கும்.

லேசாக சூடு செய்த வேப்பெண்ணெயை விரல்களின் இடுக்கில் தடவினால் சேற்றுப் புண்கள் சரியாகும்.ஷ...ரு🌴🌷

வாழைப்பூவை பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால்களில் வரும் எரிச்சல் நீங்கும்.

இரண்டு கால் விரல்களையும் தினமும் ஐந்து நிமிடத்துக்கு நீட்டி - மடக்கும் பயிற்சியைச் செய்து வரவேண்டும். ரத்த ஓட்டம் சீராகும்.

#உணவே_மருந்து_மருந்தே_உணவு