தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு உதவித்தொகைகளுக்கான தேர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
அதில் ஒன்று தான் TRUST (Tamilnadu Rural Students Talent Search Examination) டிரஸ்ட் என்ற தேர்வு.
இந்த தேர்வை யார் எழுதலாம்: 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் எழுதலாம்.
எதற்காக இந்த தேர்வு: இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகள் ₹1000 (ஆயிரம்) உதவித்தொகை பெறலாம்.
எப்படி தேர்வு செய்வார்கள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக தேர்வெழுதிய 50 மாணவர்கள், 50 மாணவிகள் மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வெழுத நிபந்தனைகள் என்ன :
அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் தேர்வெழுதலாம்.
கிராமப்புற, நகர பஞ்சாயத்து பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.
விண்ணப்பிக்க என்ன தேவை:
கட்டணம் -₹ 10 மட்டுமே
பெற்றோர் ஆண்டு
வருமானம் ₹ 1,00,000(ஒரு லட்சம்) மிகாமல் இருக்க வேண்டும்.
(வருமான சான்றிதழ் இணைக்க வேண்டும்)
எப்படி விண்ணப்பிப்பது:
தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதற்கான விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். நிரப்பிய விண்ணப்பங்களை பள்ளியிலேயே கொடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25 - 07 - 2019 (வியாழன்)
தேர்வு நடைபெறும் நாள்: 25 - 08 - 2019 (ஞாயிறு)
இறைவனின் அருளால்...
என்றும் கல்விப் பணியில்
தமிழ்நாடு தவ்ஹுத் ஜமாஅத் மாணவர் அணி
#TNTJSW
#TRUST_Examination
https://m.facebook.com/story.php?story_fbid=2116655205107492&id=207212969385068
No comments:
Post a Comment