Wednesday, February 28, 2018

தயிரின் 20 மருத்துவ குணங்கள்

தயிரின் 20 மருத்துவ குணங்கள்

தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது.

ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்தை பேணும் ஆதாயங்கள் கொண்டவை. அவற்றில் சில ...

தயிரின் பயன்கள்

1. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.

2. தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்.

3. தயிர் நம் உடலுக்கு ஒரு அரு மருந்து.

4. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியை தருவது தயிர்தான்.

5. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32% பால்தான் ஜீரணமாகியிருக்கும்.
ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.

6. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது.

7. த‌‌யி‌ரி‌ல் இரு‌க்கு‌ம் பா‌க்டீ‌ரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.

8. பாலில் LACTO இருக்கிறது. தயிரில் இருப்பது LACTOBACIL. இது ஜீரண சக்தியை
தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.

9. வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் சொல்வார்கள்.

10. அதிகமாக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும்.

11. பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவுவகைகளை சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் 'ரயித்தா' சாப்பிடுகிறோம்.

12. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.

13. வெண்ணெய் காய்ச்சி இறக்கும் பொழுது சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.

14. புளித்த தயிரை தலையில் தேய்த்து சுத்தம் செய்தால் தலை முடி மிருதுவாக இருக்கும்.

15. தயிர் புளிக்காமல் 2-3 நாள் இருக்க தேங்காய் சிறிய துண்டாக்கி சேர்த்தால் புளிக்காது.

16. வெண்டைகாய் வதக்கும் பொழுது ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால் நிறம் மறாமல், பிசுபிசுக்காமல் இருக்கும்.

17. வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை தயிர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது.

18. மண்ணெண்ணெய் வாசம் போக தயிர் கொண்டு கை கழுவலாம்.

19. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.

20. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக உண்ணலாம்.

உடலில் ஏற்படும் சூட்டை

உடலில் ஏற்படும் சூட்டை இரண்டே நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்திவாய்ந்த எளிய வழி..!

தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால்நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது

,இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது,இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்தப் பெருமகான்களின் அன்றைய காலகட்டத்திலேயேஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்.

■ தேவையான பொருள்கள் :1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு■
செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும்.
எண்ணெய் இலேசாக சூடாகியதும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விடவேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.
2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்கக் கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.

மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.
அந்தக் காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும்என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.

ஏனெனில், இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில்குழந்தை உருவாகுமாம்.

இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.
மேலும், சிறியவர்களாக இருந்தால் வாரத்தில்இருமுறை இதனை செய்யலாம்.உறவுகளே…
இந்தச் செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்களும்) பயன் பெற இந்தச் செய்தியை பகிர்ந்து உதவிடுங்கள்.

*தொப்புளில் எண்ணை போடுங்கள்*

நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.

அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள்  பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.

நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள்  3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள்  அமைக்கப்பட்டுள்ளது.

நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா?  நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

*கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*முழங்கால் வலி*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு*

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

*ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?*

நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால்  இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக  செலுத்தி அவற்றை திறக்கும் .

ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும்.
அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

Saturday, February 24, 2018

கொய்யா மரங்களில் மகசூல்

சேலம்: கொய்யா மரங்களில் மகசூல் அதிகரிக்க, மணல் நிரம்பிய பைகளை, மரக்கிளைகளில், விவசாயிகள் தொங்க விட்டுள்ளனர். சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் உள்ள கிராமங்களில், கொய்யா மரங்கள் அதிகம்உள்ளன. மகசூல் அதிகரிக்க, மரத்தை கவாத்து செய்தல், நுண்ணுாட்டம், மக்கிய தொழு உரம் இடப்படுகிறது.

காளியாக்கோவில்புதுார் விவசாயிகள், உற்பத்தியை அதிகரிக்க, புது, 'டெக்னிக்'கை செயல்படுத்தி உள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது: மரத்தின் கிளைகள் உயரமாக சென்று விடுதால், காய், பழங்களை அறுவடை செய்வதில் சிரமம் உள்ளது. உச்சியில் மட்டும் பூக்கள் தோன்றி, பிஞ்சு உற்பத்தியாகிறது.

அதனால், மணல் நிரம்பிய பிளாஸ்டிக் பைகளை, கிளைகளில் தொங்க விடுவதால், உயரமாக செல்லாமல், கீழ் நோக்கி வளைகிறது. அந்த குச்சிகளில், பல இடங்களில், அதிகமான புது துளிர்கள் தோன்றி, மேல் நோக்கி வளரும். அதில், பூக்கள், பிஞ்சுகள் உற்பத்தியாகி, மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

குடல் குழம்பு செய்வது எப்படி...

குடல் குழம்பு செய்வது எப்படி...

தேவையான பொருட்கள் :

ஆட்டு குடல் - 750 கிராம்
வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசாவுடன் )
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம்
மிளகாய்த்தூள் - தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும்)

* குக்கரில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை, கிராம்பு, சோம்பு போட்டு தாளித்த பின் நறுக்கின வெங்காயதை போட்டு வதக்கி கொள்ளவும். வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.

* அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும்.

* இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

* அடுத்து வேக வைத்த குடலை போடவும்.

* நன்றாக கொதி வரும் போது அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.

* ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தொக்கு பதம் வரும் போது கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்.

* இட்லிக்கு சரியான டிஷ் இந்த மட்டன் குடல் குழம்பு தான்.

Kaludeen Ahmed

அல்வா செய்வது எப்படி...

அல்வா செய்வது எப்படி...

தேவையான பொருட்கள்..!!

1.முழுக்கோதுமை - 2 கப்.

2. சர்க்கரை - 7-8 கப்.

3. நெய் - 4 கப்.

4.முந்திரி பருப்பு - 50 கிராம்.

செய்முறை.
**********

கோதுமையை 4-5 மணி நேரம் வெது வெதுப்பான தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.. பின்னர் கிரைண்டரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்..

அரைத்த கோதுமையுடன் நீர் சேர்த்து நன்றாக கலக்கி.. துணி ( வடிகட்டி )  வைத்து பாலை பிரித்தெடுக்க வேண்டும்.. சக்கையை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து பால் எடுக்கவும்.. 

பிரித்தெடுத்த பாலை 2-3 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.. பின்னர் கட்டியான பால் அடியிலும் தெளிந்த தண்ணீர் மேற்புறமும் இருக்கும்..

மேற்புறம் உள்ள தண்ணிரை கீழே கொட்டி விட்டு தனி பாலை வைத்துக்கொள்ளவும்..

# இப்போது அடுப்பில் ஒரு அலுமினிய சட்டியை வைத்து 1/2 கப் சர்க்கரையை போட்டு சூடு பண்ணவும்.. அது கேரமல் கலர் வந்த உடன் மீதமுள்ள சர்க்கரையை கொட்டி  அரை கப் அளவு தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.. இப்போது சர்க்கரை பாகு கேரமல் கலரில் இருக்கும் இதுவே அல்வாவின் கலர் ஆகும்..

சர்க்கரை பாகு கம்பி பதம் வந்த உடன்.. மெதுவாக சிறிது சிறிதாக கோதுமை பாலை சேர்த்து கிளற வேண்டும்.. பால் கொதிக்கும் போது அடுப்பை சிம்மில் வைத்து சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளற வேண்டும்.. இடையில் சிறிதளவு ஏலக்காய் தூளும் முந்திரி பருப்பு 50 கிராமையும் சேர்க்கவும்.. மெதுவாக கிண்டவும்... அல்வா சட்டியில் திரண்டு வரும் போது அடுப்பை ஆஃப் செய்து விட்டு நெய் தடவிய தட்டில் கொட்டி விடவும்....!!

சுவையான திருநெல்வேலி அல்வா ரெடி..!!

குல்பி ஐஸ் செய்வது எப்படி ...

கூல்........

குல்பி ஐஸ் செய்வது எப்படி ...
.
தேவையான பொருட்கள் ...
.
பால் - கால் லிட்டர்
.
கன்டண்ஸ்டு மில்க் - கால் டின்
.
சீனி - 5 மேசைக்கரண்டி
.
ஃப்ரஷ் க்ரீம் - 2 மேசைக்கரண்டி
.
சோள மாவு - 1 1/2 மேசைக்கரண்டி
.
குங்குமப்பூ - சிறிது
.
ஏலத்தூள் - கால் தேகரண்டி
.
பாதாம், பிஸ்தா - சிறிது (விரும்பினால்)
.
உப்பு - சிட்டிகை
.
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சுண்ட காய்ச்சவும்.
.
சோள மாவை சிறிது பாலில் கரைத்து காய்ச்சிய பாலில் ஊற்றி குங்குமப்பூ மற்றும் உப்பு சேர்க்கவும்.
.
அதனுடன் சீனி மற்றும் ஏலத்தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
.
பால் ஆறிய பின்பு, கன்டண்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும்.
.
பின்னர் அதில் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து கலக்கவும்.
.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து விடவும்.
.
விருப்பப்பட்டால் பாதாம், பிஸ்தாவை நுணுக்கி
போட்டு மோல்டில் ஊற்றவும்.
.
ஆறு மணி நேரம் ஃப்ரீசரில் வைத்திருந்து எடுத்து ஜில்லென்று பரிமாறவும்.

Thursday, February 22, 2018

கஞ்சி காய்ச்சுவோம்

கஞ்சி காய்ச்சுவோம் வாருங்கள்...

தேவையானவை:
பச்சரிசி (குர்னா அரிசி) = 500 கிராம்
பூண்டு = 1 முழு பூண்டு
கடலைப்பருப்பு = 50 கிராம்
வெந்தயம் = 2 தேக்கரண்டி
இஞ்சி = இருவிரல் அளவு
சீரகப்பொடி = 2-3 தேக்கரண்டி
மஞ்சள் பொடி = 1 டீ ஸ்பூன்
மிளகாய்பொடி = அரை டீ ஸ்பூன்
உப்பு = தேவையான அளவு
பெரிய வெங்காயம் = இரண்டு
கேரட் = பாதி
தக்காளி = 2 பழங்கள்
சமையல் எண்ணை = 50 மில்லி
பச்சை மிளகாய் = 2-3 (காம்பு நீக்கியது)
புதினா+மல்லி = தலா ஒரு கொத்து
எலுமிச்சை பழம் = ஒன்று
தேங்காய்ப் பால் = 300 மில்லி
மட்டன் கீமா/ எலும்பு/கறி = 100 கிராம்
சமைக்கும் முன்பு செய்ய வேண்டியவை:
1) சாதாரண தண்ணீரில் பச்சரிசி,வெந்தயம்,கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்கு அலசி தண்ணீர் வடித்து தனியாக எடுத்து வைக்கவும்.
2) ஆட்டுக்கறி கீமா அல்லது நெஞ்செலும்பை நீரில் அலசி உப்பு+மஞ்சள்பொடி+மிளகாய்பொடி கலந்து தயாராக வைக்கவும்.
3) தக்காளி,வெங்காயத்தை சிறுசிறு துண்டுகளாக/ஸ்லைசாக நறுக்கவும்.
4) புதினா+மல்லியை காம்பு நீக்கி இலைகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
5) கேரட் மற்றும் பாதி இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
6) எஞ்சிய இஞ்சியையும் பூண்டையும் தோல்நீக்கி மிக்ஸியிலிட்டு பேஸ்ட் ஆகும்படி அரைக்கவும்.
செய்முறை:
7) சட்டியை அடுப்பில் வைத்து சூடாக்கி தேவையான அளவு எண்ணைவிட்டு வெங்காயத்தை வதக்கவும்.
8) நன்கு வதங்கிய வெங்காயத்துடன் தக்காளியை சேர்த்து மேலும் வதக்கவும்.
9) ஆட்டிறைச்சி/ நெஞ்செலும்பையும் கலந்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
10) நறுக்கிய கேரட் துண்டுகள் மற்றும் முழு பச்சைமிளகாயை வதக்கும்போது சேர்த்துக் கொள்ளவும்.
11) வதங்கும்போது சீரகப் பொடி+மஞ்சள் பொடியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து சட்டிக்குள் இறக்கவும்
12) மல்லித் தழையைத் தூவி, சட்டியை 5-6 நிமிடங்கள் மூடவும்.
13) அடி பிடிக்காதபடி தேவையான அளவு நெருப்பைக் குறைத்து 1:3 அளவு தண்ணீரில் கொதிக்க விடவும்.
14) கொதி வந்தபிறகு அரிசியை சட்டிக்குள் மெல்ல இட்டு தொடர்ந்து 30-45 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
15). கொதிக்கும்போது பாதியளவு எலுமிச்சை சாறுபிழிந்து சட்டியில் இடவும்.
16) தேவையான அளவு உப்பிட்டு சட்டியின் அடிப்பாகம் பிடிக்காத வகையில் அடிக்கடி கிளறவும்.
17) அரிசி கரைந்தபிறகு தேங்காய்ப் பாலுடன் சமபங்கு தண்ணீர் கலந்து மேலும் ஓரிரு நிமிடங்கள் கிளறவும்.
18) புதினா இலையை கஞ்சியில் தூவி, சட்டியை நன்கு மூடிவைக்கவும். சுவையான கஞ்சி தயார்.😋😋😋😋

யம்மி...யம்மி...

Sunday, February 18, 2018

உங்களுக்கு அடிக்கடி குசு தொல்லை ஏற்படுகிறதா?

உங்களுக்கு அடிக்கடி குசு தொல்லை ஏற்படுகிறதா?

குசு தொல்லைக்கு முக்கிய காரணம் மென்று தின்னாமல் அப்படியே விழுங்குவது தான். உணவுகளை உட்கொள்ளும் போது காற்று உணவுகளுடன் குடலுக்கு செல்கிறது. மென்று தின்றால் உள்ளே செல்லும் காற்று குறைகிறது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை இந்த குசு தொல்லை இருக்கிறது. குசு தான் வெளியேற்றினேன் என்று யாரும் ஒதுக்க மாட்டார்கள். குசு நாற்றம் மற்றும் சத்தம் ஏற்பட்டால் கிண்டல் கேளி செய்வது வழக்கம்.இவை சிலருக்கு சங்கத்தை ஏற்படுத்தலாம். குசு நாற்றம் அதிகரித்தால் உடல் நிலை சரியில்லை என்று அர்த்தம். குசு நாற்றம் இல்லாமல் ஏற்படுவது தொல்லை இல்லை. ஆனால் குசு ஏற்படுவதை தவிர்க்க சில வழிமுறைகள்.

குசு தொல்லைக்கு முக்கிய காரணங்கள்:

குடலில் அதீத பாக்டீரியாக்கள் வளர்ச்சி
மலச்சிக்கல் பிரச்சனை
க்ரோன் நோய் பிரச்சனை
நொதித்தல்
மன அழுத்தம்
உணவு விஷத்தன்மை.
நீண்ட நேரமாக குசு அடக்கி வைத்தால் வயிற்றில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று அசிடிட்டி. சில நாட்களில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் குசு ஏற்படலாம். இவை உடல் நலக்குறைவின் அறிகுறியாக இருக்கலாம்.

உணவுகளை மென்று சாப்பிடாமல் விழுங்குவதை தவிர்த்தால் 90% குசு தொல்லை இல்லை. குடலில் நொதித்தல் நடந்து உணவில் இருந்து உடலுக்கு சத்துக்கள் கிடைக்கின்றது. உணவுகளை அப்படியே விழுங்குவதால் அதிகப்படியான காற்று குடலுக்கு செல்கிறது. இந்த காற்று நொதித்தல் வினையை பாதித்து குசு உற்பத்தியை அதிகரிக்கிறது.

நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் குசு தொல்லைக்கு முற்று புள்ளி வைக்கும். கெஃப்பைன் உள்ள பானங்கள் குசு ஏற்பட காரணமாக உள்ளது. எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது. வாயுக்கள் நிறைந்த பானங்களை தவிர்ப்பதும் நல்லது.

குறிப்புகள்:

குசு என்பது அனைவருக்கும் ஏற்பட கூடிய ஒன்று, குசு விட்டால் அவர்களை கிண்டல் செய்ய வேண்டாம்.
மென்று தின்றால் குசு தொல்லை இல்லை
நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் குசு தொல்லை தீர உதவுகிறது

Sunday, February 11, 2018

எறும்பே அண்டாது

இது இருந்தால் போதும்... வீட்டில் எறும்பே அண்டாது...

    
பொதுவாக எறும்புகளை அழிப்பதற்கு கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ்களை வாங்கிப் பயன்படுத்துவோம். அதனால் எந்தவித பயன்களும் இல்லாமல் போய்விடுகின்றன.

பொதுவாக எறும்புகளை அழிப்பதற்கு கடைகளில் சென்று மருந்துகள் கலந்த சாக்பீஸ்களை வாங்கிப் பயன்படுத்துவோம். அதனால் எந்தவித பயன்களும் இல்லாமல் போய்விடுகின்றன.

அதனால் முடிந்தவரை நம்முடைய வீட்டில் உள்ள இயற்கைப் பொருள்களைக் கொண்டே எறும்புகளை விரட்டுவது நல்லது.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சம அளவில் கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, எறும்புகள் இருக்கும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் அழிந்துவிடும்.

மசாலா பொருள்களை எறும்பு வருமிடங்களில் தூவி வைத்திருந்தால் எறும்புகள் ஓடிவிடும்.

எறும்புகளை கொல்வதற்கு வெள்ளரிக்காய் மிகவும் உதவுகிறது. அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் சிறுசிறு துண்டுகளாக வெட்டியோ அல்லது துருவியோ போட்டு வைத்தால் எறும்புகள் வராமல் இருக்கும்.

புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, அவற்றை எறும்புகள் வரும் இடங்களான ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை பேக்கிங் சோடாவுடன் சமமான அளவில் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் வரும் இடத்தில் தூவி விட வேண்டும். இதனால் எறும்புகள் அதை சாப்பிட்டு இறந்துவிடும்.

சர்க்கரை டப்பாவில் சிறிது கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் தடுக்கப்படும்.

பூண்டு

பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு

எறும்புகள் அதிகமாக இருக்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி வைத்தால், எறும்புகள் வராமல் இருக்கும்.

மேலும் வீட்டை துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

உடனடி எனர்ஜி வேண்டுமா? உங்களுக்கான 9 உணவுகள்

உடனடி எனர்ஜி வேண்டுமா? உங்களுக்கான 9 உணவுகள்

உணவு உண்பதே ஆற்றலைப் பெறத்தான். சிலருக்கு, அதிலும் சில உணவுகள் உடனடியாக ஆற்றலாக மாறி உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக்குகின்றன. உடல் சோர்வுற்று இருக்கும் நேரங்களில் இந்த உணவுகளை உண்பதன் மூலம் உடலுக்குத் தேவையான எனர்ஜியைப் பெருக்கி, சட்டென சுறுசுறுப்பாகலாம். உடனடி ஆற்றல் கிடைக்க கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

1. வாழைப்பழம்: வாழைப்பழத்தில், வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட், நார்ச்சத்து மற்றும் நல்ல கார்போஹைட்ரேட் நிறைவாக உள்ளன. இது உடனடி ஆற்றலைத் தரும். வாழை மட்டும் அல்ல... ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களும் உடனடி ஆற்றலைத் தரும். 100 கிராம் வாழையில் தோராயமாக 90 கலோரிகள் உள்ளன. இது உடனடி அற்றல் கிடைக்கச் செய்யும்.

2. முட்டை: முட்டையில் மஞ்சள் கருவில் பி வைட்டமின்கள் நிறைவாக உள்ளன. இவை, உணவை விரைவாக ஆற்றலாக மாற்ற உதவுகின்றன. மேலும், இதில் வைட்டமின் டி சத்தும் உள்ளது. கால்சியத்தை எலும்பு கிரகிக்க இது உதவுகிறது. முட்டையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி15, பி12, ஃபோலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்களும் பாஸ்பரஸ், செலினியம் உள்ளிட்ட தாதுஉப்புகளும் நிறைவாக உள்ளன. எனவே, உடற்பயிற்சிக்குப் பிறகு அதிக ஆற்றல் தேவைப்படும் நேரத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

3.நட்ஸ்: நட்ஸில், நல்ல கொழுப்பு அதிகம் இருக்கிறது. மேலும், புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருக்கின்றன. உடல் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அதிக ஆற்றலைக் கொடுக்கும். ரத்த செல்களின் உருவாக்கத்துக்கு உதவும். உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்துக்கு உதவும். வைட்டமின் இ நிறைந்திருப்பதால், செல்களைப் புத்துணர்வாக்கும்

4. முளைகட்டிய தானியங்கள் மற்றும் பயறு:முளைகட்டிய தானியத்தில் புரதம் அதிகம். இதனுடன் காய்கறிகள் சேரும்போது, எலும்பை உறுதியாக்கும். கால்சியம் சற்று அதிகமாகவே கிடைக்கும். அனைத்துவிதமான ஊட்டச்சத்தும் நிறைந்த இவை, ஒரு முழுமையான உணவு. முளைகட்டிய பயறில் வைட்டமின்கள், தாதுஉப்புகள், என்சைம்ஸ், ஆன்டிஆக்ஸிடன்ட் போன்ற சத்துகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது. தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது.

5. தேன்: ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டுவந்தால் அரை மணி நேரத்தில்நரம்புகள் சுறுசுறுப்பாகும். உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேடை அளித்து, நமக்குத் தேவையான எனர்ஜியைத் தருகிறது. சிறந்த ஆன்டிஏஜிங் பொருளாகச் செய்ல்படுகிறது. தொண்டை உலர்வதைத் தடுக்கிறது. புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து பாதுகாத்து, செல்களுக்குப் புத்துயிர் அளிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

6.சிவப்பு அரிசி: தானிய வகைகளில் ஆரோக்கியம் நிறைந்த அறிய உணவு, சிவப்பு அரிசி. சிவப்பு அரிசியில், மக்னீசியம், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் போன்ற தாதுஉப்புகள் அதிக அளவில் உள்ளன. வைட்டமின் இ சிவப்பு அரிசியில் உள்ளது. இதில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், செரிமானம் சுலபமாகும். சிவப்பு அரிசியில் உள்ள காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது. இதில் உள்ள தாதுஉப்புகள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன.

7.7. கிரீன் டீ: கிரீன் டீயில் ஃப்ளேவோனாய்டு, கேட்டச்சின் முதலான பாலிபீனால்கள் அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன. மேலும், கிரீன் டீயில் உள்ள சிறிதளவு காஃபின், மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. மூளை நன்றாக இயங்கும். சுறுசுறுப்பான உணர்வுகிடைக்கும்.

8.  தயிர்: தயிரில் உள்ள புரதம் புதிய செல்கள் வளரவும் தசைகளை வலுவாக்கவும் செய்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி12, நோய் எதிர்ப்பு சக்தியைக் அதிகரிக்கிறது. புரோபயாடிக் நிறைந்த தயிரில் துத்தநாகம், வைட்டமின் இ, பாஸ்பரஸ் ஆகியவை இருக்கின்றன. எலும்பு மற்றும் பற்களுக்குத் தேவையான கால்சியம் கிடைக்க உதவும்.

9. . பழச்சாறு: குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு, எலுமிச்சைப் பழச்சாறு குடிப்பது சிறந்தது. ஆப்பிளில் வைட்டமின்கள், நார்ச்சத்து, புரதம் ஆகியவை உள்ளன. எச்சில் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. ஆப்பிளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், மூளையில் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களைத் தூண்டுகிறது. ஆரஞ்சில் உள்ள வைட்டமின் சி, உடலில் உள்ள செல்களிலும் உடலில் உற்பத்தியாகும் ரசாயனங்களிலும் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால், செல்கள் பாதுகாக்கப்பட்டு, நோய்கள் தடுக்கப்படுகின்றன.

- ச.மோகனப்பிரியா

தண்ணீர்: ஊட்டச்சத்துக்களை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பணியை ரத்தம் செய்கிறது. இரண்டு டம்ளர் தண்ணீர் குடிக்க, ரத்தத்தின் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்லும் பணி துரிதமாகும். எனவே, கார்போஹைட்ரேட் நிறைந்த உணவை உட்கொண்டதும் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்துவது இன்னும் உடனடி ஆற்றல் கிடைக்க உதவும்.