Friday, August 22, 2014

தேநீர் A to Z


தேநீர் A to Z

From local politics to global politics, the tea shop is a place where all things dealing. And the history of politics inverter

உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை சகலத்தையும் அலசுகிற ஒரு இடம் டீ கடை. அரசியலையே புரட்டிப் போட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேயிலைச் சம்பவம் பற்றித் தெரியுமா?‘பாஸ்டன் தேநீர் விருந்து’ என்கிற அந்த நிகழ்வு உலக அரசியலில் மிக முக்கியமான ஒன்று.

அதென்ன பாஸ்டன் தேநீர் விருந்து?

அமெரிக்கா என்ற புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டதும் ஐரோப்பாவிலிருந்து பலர் அங்கு குடியேறினர்.  புதிய கண்டத்தில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த பல பழங்குடியின மக்களை அவர்கள் இடத்திலிருந்து விரட்டி தங்கள் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டனர். அதே நேரம் காலனிகள் அரசுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.  இங்கிலாந்தின் பொருளாதாரக் கொள்கையில் குடியிருப்புகளுக்கு பெரும் அதிருப்தி. வணிகத்தில் இங்கிலாந்து கப்பல்களையே பயன்படுத்தக் கட்டாயப்படுத்தப்பட்டது. புகையிலை, பருத்தி, சர்க்கரை போன்ற பொருட்கள் இங்கிலாந்துக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. 

இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. ஐரோப்பாவில் தொடர்ந்து ஏற்பட்ட போரினால் இங்கிலாந்தில் கடும் வரி சுமை அதிகரித்தது. வருமானத்தைப் பெருக்கும் எண்ணத்தில் 1965ல் முத்திரைச் சட்டம் கொண்டு வரப்பட்டு காலனிகளில் நடைபெறும் அனைத்து தொழில்களுக்கும் வரி விதிக்கப்பட்டது. இது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியதால் இங்கிலாந்து பொருட்களை  மக்கள் புறக்கணித்தனர்.  இங்கிலாந்து பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதில்லை என்றும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அரசு முத்திரைச் சட்டத்தை விலக்கிக் கொண்டது. ஆனால், பொருட்களின் மீதான வரியை அதிகரித்தது. 

இறக்குமதி பாதியாகக் குறைந்ததன் விளைவாக வரிகள் விலக்கிக் கொள்ளப்பட்டு தேயிலை மீதான வரி மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 1773ல் இங்கிலாந்து கப்பலில் வந்த தேயிலையை இறக்க அமெரிக்கர்கள் மறுத்தனர். இரவோடு இரவாக காலனிவாசிகள் தேயிலையைச் சேமித்து வைத்திருந்த கிடங்குகளுக்குள் நுழைந்து, தேயிலை சுற்றி வைத்திருந்த பாக்கெட்டுகளை கிழித்து எல்லாத் தேயிலையையும் கடலில் எறிந்தனர். 
கடலில் எறியப்பட்ட தேயிலைக்குரிய விலையைக் கொடுக்கவில்லை என்றால் பாஸ்டனோடு வணிகம் செய்வதில்லை என்று இங்கிலாந்து அரசு முடிவு செய்தது.

தேயிலையை பாஸ்டனில் கடலில் எறிந்த சம்பவமே பாஸ்டன் டீ பார்ட்டி (ஙிஷீstஷீஸீ ஜிமீணீ றிணீக்ஷீtஹ்). அமெரிக்க காலனிவாசிகள் இங்கிலாந்தை முழுமையாக எதிர்க்கத் தொடங்கி, அமெரிக்க காலனிகள் இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற, இந்தச் சம்பவம் ஆரம்பமாக அமைந்ததால் அமெரிக்க அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கத் தொடங்கியது. எல்லாவற்றுக்கும் ஒரு தினம் கொண்டாடுகிறோம். தேயிலைக்கும் அப்படி ஒன்று உண்டு. 

டிசம்பர் 15ம் தேதியை ‘சர்வதேச தேயிலை தினமா’கக் கொண்டாடுவது   பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 15ம் தேதி ‘சர்வதேச தேயிலை தினமா’க உலகம் முழுக்கக் கொண்டாடப்படுகிறது. தேயிலை வணிகமானது சிறு வியாபாரிகள், நுகர்வோர் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்கிற கவன ஈர்ப்பு தினமாகவும் இது அனுஷ்டிக்கப்படுகிறது. தேயிலை வணிகத்துடன் தொடர்புடைய தொழிற் சங்கங்களும், சிறு உற்பத்தியாளர்களும் தங்களது ஊதிய உரிமை, வாழ்க்கைத் தரம் போன்றவற்றை மக்களுக்கும், அரசுக்கும் சொல்லும் ஒரு வாய்ப்பாகவும் இந்த தினத்தை அறிவிக்கிறார்கள்.

இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, கென்யா, மலேசியா, இலங்கை, நேபாளம், தான்சானியா, உகாண்டா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் சர்வதேச தேயிலை தினத்துக்கு மாபெரும் வரவேற்பு உள்ளது. கடந்த சில வருடங்களாக இந்தியாவிலும், தேயிலை உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிற மாநிலங்களில் தேயிலை தொடர்பான வணிகச் சங்கங்கள் மற்றும் சிறு வியாபாரிகளால் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மீட்டிங்குகள், ஊர்வலம், போராட்டம் எனப் பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது இந்த தினம்!

அரசியலை ஆட்டிப்படைத்த தேயிலைக்கு, மென்மையான இன்னொரு முகமும் உண்டு. யெஸ்... அழகுப் பராமரிப்பிலும் தேயிலைக்கு முக்கிய இடமுண்டு. அதைப் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

‘‘சீனர்களோட ஒல்லியான உடல் வாகுக்கும், பளிங்கு மாதிரியான சருமத்துக்கும் காரணம் அவங்களோட டீ பழக்கம். மல்லிகை சேர்த்த கிரீன் டீயை குழந்தைகள்லேருந்து பெரியவங்க வரைக்கும் அரை மணி நேரத்துக்கொரு முறை குடிச்சுக்கிட்டே இருப்பாங்க. டீ மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடன்ட். அது மட்டுமில்லாம, நம்ம உடம்புல உள்ள அதிகப்படியான கெட்ட நீரை வெளியேத்தவும் உதவுது. மல்லிகை, ரோஜா, சாமந்தினு பூக்கள் சேர்த்த டீ வகைகள் எல்லாமே அழகை மேம்படுத்தக் கூடியவை. துளசி சேர்த்த கிரீன் டீ ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும்.
டீயை உள்ளுக்குக் குடிக்கிறதன் மூலம் கிடைக்கிற அதே பலன்கள், வெளிப்புற அழகு சிகிச்சைகள்லயும் கிடைக்கும்.

உபயோகிச்ச டீ பைகளைக் குளிர வச்சு, கண்களுக்கு அடியில வச்சுக்கிட்டு ஓய்வெடுத்தா, கண்களுக்கடியில தெரியற வீக்கமும், கரு வளையங்களும் மறையும். டீ பைகள் இல்லைன்னா, டீ டிகாக்ஷன்ல பஞ்சை நனைச்சும் கண்கள் மேல வச்சுக்கலாம்.வெயில்ல போயிட்டு வந்ததால கைகள் கருத்துப்போயிருந்தா, டீ டிகாக்ஷனோட முல்தானி மிட்டி கலந்து பேக் மாதிரி போட்டுக் கழுவினாலே, கருமை மாறும். இதையே முகத்துக்குப் போடும்போது, சருமம் கொஞ்சம் வறண்டு போகலாம். அதனால கை, கால்களுக்கு மட்டும் ட்ரை பண்றது நல்லது. நரைமுடியை மறைக்க தலைக்கு ஹென்னா போடும் போதும் டீ பயன்படுத்தறோம். 

வெறும் ஹென்னாவை தடவும் போது, அது சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். காபி டிகாக்ஷன் ரொம்ப அடர்ந்த நிறத்தைக் கொடுக்கும். ஹென்னாவுடன் டீ சேர்க்கும் போது பிரவுன் ஷேடு கிடைக்கும். ரொம்ப இயற்கையான நிறத்துல கூந்தல் பளபளக்கும். கால் கிலோ ஹென்னாவுல ஒரு கப் அளவுக்கு (ரெண்டாவது டிகாக்ஷன்) டீ டிகாக்ஷன் கலந்து தலைக்குத் தடவலாம். கிரீன் டீயைக் கொதிக்க வச்ச தண்ணீரை, தலைக்குக் குளிச்சு முடிச்சதும், கடைசியா ஒரு முறை அலச உபயோகிச்சா, கூந்தலுக்கு ஒருவித பளபளப்பு கிடைக்கும். பருக்களை நீக்கவும், சுற்றுப்புற மாசுக்களால சருமம் பாதிக்கப்பட்டு, கரும்புள்ளிகளும், தழும்புகளும் உள்ளவங்களுக்கும் இப்ப லேட்டஸ்ட்டா ‘ஆன்ட்டி பொல்யூஷன்’ சிகிச்சை வந்திருக்கு. அதுல பிரதான பொருளே கிரீன் டீதான். சருமத்துல உள்ள மாசு, மருக்களை நீக்கி, சுத்தப்படுத்தற அளவுக்கு அது அவ்வளவு சக்தி வாய்ந்தது.’’
*********************************************************************************************

தேநீர் A to Z

மாற்றம் செய்த நேரம்:3/11/2014 2:58:29 PMWhen vitiyatu putumoliye say that without tea. So more people awaken enthusiasm is transferred to the dawn of the first drink tea!



டீ இன்றி விடியாது பொழுது எனப் புதுமொழியே சொல்லலாம். அந்தளவுக்கு அனேக மக்களின் விடியலை உறக்கத்திலிருந்து உற்சாகத்துக்கு மாற்றும் முதல் பானம் தேநீர்!

தேயிலையின் பூர்வீகம் சீனா. தேயிலையை சீனர்கள் மருத்துவ குணமுள்ள மூலிகையாகவே முதலில் அறிந்திருந்தனர். பின் சீனாவுக்கு புத்த மதத்தைக் கற்க வந்த ஜப்பானிய புத்தமதத் துறவிகள் மூலமாக கி.மு. 800களில் தேயிலை ஜப்பானுக்கு பரவியது. ஜப்பானிலிருந்து டச்சுக்காரர்கள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது.  1840-50களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தேயிலை இலங்கையில் சோதனை முயற்சியாக பயிரிடப்பட்டது. அதன் பிறகு தென் கிழக்காசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு தேயிலை பரவியது.

சீனச் சக்கரவர்த்தி ஷென் நுங் பருகுவதற்காக வைக்கப்பட்ட சுடுநீரில் தேயிலைச் செடியின் இலைகள் பறந்து வந்து விழவும், அந்த நீரைப் பருகிய சக்கரவர்த்தி ஒரு வித உற்சாகமான சுகானுபவம் கிடைப்பதை உணர்ந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்துதான் டீயை ஒரு பானமாகக் குடிக்கிற பழக்கம் அறிமுகமானது என்ற வரலாற்றுத் தகவலும் உண்டு. இந்தியாவின் தேயிலைத் தொழிலுக்கு வயது சுமார் 180 ஆண்டுகள். உலகளவில் தேயிலை உற்பத்தியில் இந்தியாவுக்கு 2வது இடம்.

காபியுடன் ஒப்பிடும்போது, தேநீருக்கு மருத்துவக் குணங்கள் சற்று அதிகம் என்பது தெரிகிறது. டீ குடிப்பவர்களுக்கு புற்றுநோய், இதய நோய், அல்சீமர் நோய், கல்லீரல் நோய் போன்றவை பாதிக்கிற வாய்ப்புகள் குறைவு என்கிறது ஒரு புள்ளிவிவரம். சீனர்களின் சுறுசுறுப்புக்கும் இளமைக்கும் நீண்ட வாழ்வுக்கும் அவர்கள் தண்ணீர் மாதிரி நாள் முழுக்க கிரீன் டீ பருகுவதே காரணம். எல்லாவற்றுக்கும் காரணம் தேயிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட். தேயிலைத் தகவல்களுக்கு மறுபடி வருவோம்.

அதற்கு முன் தேநீர் ருசிக்கிற டீ டேஸ்ட்டிங் செரிமனிக்கு சென்று வரலாமா?


மேல்தட்டு பெரிய மனிதர்கள் சூழ, ஒரு நட்சத்திர ஓட்டலில், பிரபல டீ டேஸ்ட்டர் முன்னிலையில் பலவிதமான தேநீர் சுவைகளை ருசிக்கும் இந்த நிகழ்ச்சி யில் உண்மையில் என்னதான் நடக்கும் என்கிற கேள்வி பலருக்கும் இருக்கும்.  ஸ்ப்ளென்டா சார்பில் தென்னிந்தி யாவின் முன்னணி டீ டேஸ்ட்டர்களில் ஒருவரான ஸ்ரீராம் நாராயண ஸ்வாமி முன்னிலையில் நடத்தப்பட்ட டீ டேஸ்ட்டிங் செரிமனியை நேரில் காண்கிற வாய்ப்பு அமைந்தது. 4 விதமான தேநீரை நம் கண் முன்னே தயாரித்து ருசித்துப் பார்த்து வித்தியாசம் கண்டுபிடிக்கச் சொன்னார் ஸ்ரீராம்.

முதலில் ஒயிட் டீ.  ஒயிட் டீ என்பது தேயிலை இனமல்ல... அது ஒரு பிராசஸ். இரண்டு இலைகளுடன் ஒரு மொட்டும் சேர்த்துப் பறிக்கப்படுகிற இந்த ஒயிட் டீ மிகவும் விலை உயர்ந்த தேயிலைகளில் ஒன்றாம். மிகவும் மிதமான வாசனை மற்றும் சுவையில் இருக்கிற அந்த டீயை எப்படிப் பருக வேண்டும் என்றும் விளக்கினார் ஸ்ரீராம்... ‘‘உங்க பலத்தையெல்லாம் திரட்டி, ஆழமா உறிஞ்சி, ஒரு நொடி தொண்டையில நிறுத்தி, அப்புறம் விழுங்குங்க. அப்பதான் டீயோட உண்மையான மணமும் சுவையும் தெரியும்!’’ அடுத்ததும் ஒயிட் டீ வகைதான்.

ஆனால், இது இலைகளைத் தவிர்த்து வெறும் மொட்டுக்களை மட்டுமே பறித்துத் தயாரிக்கப்பட்டதாம். முதல் வகையில் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் என்றால், இதிலோ அது மிகமிக அதிகமாம். விலையைக் கேட்டால் மயங்கி விழுவீர்கள். ஒரு கிலோ ஒயிட் டீயின் விலை ரூ.10 முதல் 12 ஆயிரங்கள்... இந்த டீ, சரும நிறத்தைக் கூட்டும் குணம் கொண்டதாம்.அதனால்தான் சிவப்பழகு கிரீம் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த டீயை கிலோ கிலோவாக அள்ளிச் செல்கின்றனவாம்.

அடுத்து ஸ்ரீராம் நமக்கு ருசிக்கக் கொடுத்தது கிரீன் டீ. இதிலும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் உள்ளதாம். கிரீன் டீயை குடித்த பிறகு நாவில் தங்கும் லேசான கசப்பும் கடுப்பும்தான் அதன் ஸ்பெஷலே!கடைசியாக ஆர்த்தோடாக்ஸ் வகை டீ. 6 ஆயிரம் அடிகள் உயரத்தில் விளைவிக்கப்படுகிற இதை பிளாக் டீயாகவோ, பால் சேர்த்தோ விருப்பப்படி பருகலாம். டீ சுவைக்கிற நிகழ்ச்சியின் முடிவில் ஸ்ரீராம் சொன்ன விஷயங்கள் டீ பிரியர்கள் கவனிக்க வேண்டியவை.

‘‘தமிழ்நாட்டுல, குறிப்பா சென்னை மக்கள்ல பலரும் காபி பிரியர்களா இருக்காங்க. டீ குடிக்கிறவங்களுக்கும் அது நல்ல கலரா இருக்கணுங்கிற விருப்பம் இருக்கு. அப்படி சேர்க்கப்படறது செயற்கையான கலர். அதனால உங்க மக்களுக்கு நல்ல, தரமான டீ வகைகளைப் பத்தி அதிகம் தெரியலை. பிரபலமான பிராண்ட் பலதும் ரெண்டாம்தர தேயிலையைத்தான் விற்பனைக்கு அனுப்பறாங்க. டீயோட உண்மையான மணம் மற்றும் சுவையோட குடிக்கணும்னு ஆசைப்பட்டீங்கன்னா, பிரத்யேக டீ விற்பனைக் கடைகள்ல குடிச்சுப் பாருங்க. சென்னையிலயேகூட ‘டீ பொக்கே’ கான்செப்ட் வந்திருச்சு. அந்த மாதிரி இடங்கள் உங்கள் விருப்பத்தை நிறைவேத்தும்’’ என்றார்.

சுவை பார்க்கும் படலம் முடிந்ததும், ஸ்ரீராமிடம் சில தேநீர் கேள்விகளை முன் வைத்தோம். ஒரு நாளைக்கு 200 கப் தேநீரை சுவைக்கிறதும், அத்தனை ருசியையும் நினைவுல வச்சுக்கிட்டு, சரி, தவறு களைச் சொல்றதும் எப்படி சாத்தியம்? ‘‘அது 35 வருஷ அனுபவம் தந்த திறமை. எத்தனை கப் குடிச்சாலும், எந்த கப்ல என்ன கோளாறு, குறைங்கிறதை எங்களைப் போல டீ டேஸ்ட்டர்களால மிகச்சரியா சொல்லிட முடியும். எங்களோட சுவை நரம்புகள் அதுக்கேத்தபடி பழகியிருக்கும். அந்தக் கோளாறு தயாரிப்பு சம்பந்தப்பட்டதாங்கிற வரைக்கும் துல்லியமா கண்டுபிடிக்க முடியும். இதுக்காக பிரத்யேக படிப்பே இருக்கு.

பெங்களூருல உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளான்ட்டேஷன் மேனேஜ்மென்ட், டீ டேஸ்ட்டிங் படிப்பை சொல்லிக் கொடுக்கிறாங்க. விருப்பமிருக்கிற யார் வேணாலும் படிக்கலாம். ஒரே ஒரு கண்டிஷன்...டீ டேஸ்ட்டர்ஸ் ஸ்மோக் பண்ணக் கூடாது, மசாலா சேர்த்த சாப்பாடு சாப்பிடக் கூடாது. அப்பதான் அவங்களோட சுவை நரம்புகள் ஷார்ப்பா இருக்கும்!’’

கலப்பட டீயை எப்படி கண்டு பிடிக்கிறது?


‘‘ரொம்ப சிம்பிள். நீங்க உபயோகிக்கிற டீ தூளை கொஞ்சமா எடுத்து அரை டம்ளர் பச்சைத் தண்ணியில போடுங்க. கலப்பட டீயா இருந்தா, டீ தூளோட கலர், தண்ணிக்குள்ள இறங்கறதைப் பார்ப்பீங்க. கலப்படமில்லைன்னா, அப்படியே நிறம் மாறாம இருக்கும்.’’

சுவையான டீ தயாரிக்கிறது எப்படி?

‘‘100 மி.லி. தண்ணீரைக் கொதிக்க வையுங்க. கொதிச்சதும் அதுல 1 டீஸ்பூன், அதாவது, 5 கிராம் டீ தூளைச் சேர்த்து நல்லா கொதிக்க வையுங்க. தளதளனு கொதிச்சதும், அதுல பால் சேருங்க. ஒரு நிமிஷம் கொதிக்கவிட்டு இறக்கி, சர்க்கரை சேர்த்துக் குடிச்சுப் பாருங்க... பிரமாதமா இருக்கும். சிலர் டீ டிகாக்ஷனை தனியா தயாரிச்சு வச்சுக்கிட்டு, அதுல பால் சேர்த்துக் குடிப்பாங்க. அதுல டீயோட உண்மையான மணமும் சுவையும் மட்டுப்பட்டு, பாலோட சுவைதான் ஆதிக்கம் செலுத்தும்...’’ 

பழங்களின் பலன்கள்


பழங்களின் பலன்கள்

Fruits are rich in medicinal, FIG. The leaves of the fig tree grows to a height of up to 8 meters banana leaves used as food to eat.

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல்  உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும்  இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும்.  ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து  வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம்.

புத்தம் புதிய அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10  மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன. அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. ஆனால் அதிக அளவு சர்க்கரை  சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. அத்தி பழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். அத்தி பழத்தில் ஜாம்  தயாரிக்கலாம். உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப்படுத்தலாம். காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து  பொருளாக பயன்படுகிறது.

அத்தி, ஜீரணத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். மூல நோயை குணப்படுத்தும். காய்களில்  இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து  காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும்.  பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும். அடுத்ததாக ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா, இந்திய பழ  வகைகளில் 4வது இடத்தை பெற்றுள்ளது. 

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் சத்துகளும் வைட்டமின் சி 260 மில்லி கிராமும் உள்ளது. கொய்யா பழத்தை முழுப்பழமாக, ஜாமாக,  ஜெல்லியாக, சர்பத்தாக எந்த முறையில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். வயிற்றில் புண்களை நீக்கும், நீரிழிவை குறைக்கும், விந்துவை பெருக்கும்.  அடிக்கடி ஏற்படும் விக்கலை குணப்படுத்தும். வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்கள் உறுதியாகும். உடல் வளர்ச்சி கூடும். கொய்யா  பழம் சாப்பிடுவதால் குடல், ஜீரண பை, கல்லீரல் மண்ணீரல் புத்துணர்வு பெற்று பலம் பெறும். கொய்யா காய் வயிற்று போக்கை குணமாக்கும்.  கொய்யா இலை வயிற்று புண்ணுக்கு மருந்தாகிறது.

கொய்யா பழத்துக்கு அடுத்து மிகவும் சிறந்த பழம் மாதுளம் பழம். மாதுளம் பழம் இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ பயன்களை  கொண்டது. மாதுளம் பழம் சாப்பிட்டால் வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். ஜீரணத்தை அதிகரித்து ரத்த விருத்தி பெற வைக்கும். பித்தம் நீக்கும். எலும்பு,  பற்களுக்கு உறுதி தரும். குடல், வயிற்று புண் ஆற்றும். நெஞ்சு எரிச்சலை குறைக்கும். மலச் சிக்கலை தீர்க்கும். புதிய ரத்தத்தை உருவாக்கும்.  மாதுளம் பழ சாறுடன் கற்கண்டை கலந்து சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். மூல நோய் தீரும்.

மாதுளம் பழ சாறுடன் அருகம் புல் சாறு கலந்து சாப்பிட்டால் அறுந்த மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். மாதுளம் பழ தோலை இடித்து சாறு  எடுத்து மிளகு பொடியை கலந்து சாப்பிட்டால் போதை மயக்கம் தீரும். மாதுளம் பூவை கொதிக்க வைத்து குடித்தால் பித்த கோளாறு நீங்கும். வேர்  பட்டையை அரைத்து நீர் சேர்த்து கசாயமாக காய்ச்சி மூன்று வேளை குடித்தால் வயிற்று பூச்சிகள் ஒழியும். மாதுளம் பூவை உலர வைத்து  பொடியாக்கி தூளை நீரில் கலந்து குடித்தால் இருமல் தீரும். பூவை இடித்து சாறு எடுத்து அத்துடன் ஓரிரு துளி இஞ்சி சாறு கலந்து குடித்தால் சளி,  இருமல் தீரும். பூச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்று கடுப்பு நீங்கும். கோடை துவங்கி விட்டதால் நாளும் ஒரு பழத்தை சாப்பிட்டு உடல்  நலனை பேணி பாதுகாப்போம்.

குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்


குறட்டையை தவிர்க்க சில வழிமுறைகள்

At the present time a lot of people அவஸ்தைக்குள்ளாகின்றனர் kurattaiyin great. Such kurattaiyai wanted to stop, while in deep sleep makes us conscious kurattaiyanatu.

இன்றைய காலத்தில் நிறைய மக்கள் குறட்டையினால் பெரும் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய குறட்டையை நிறுத்த நினைத்தாலும், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மை அறியாமலேயே குறட்டையானது வந்துவிடுகிறது. இதனால் நம்முடன் படுப்பவர்கள் பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துவிடுகின்றனர். பொதுவாக குறட்டை என்பது ஒரு கோளாறு. இது குரல் வளையில் காற்றானது அளவுக்கு அதிகமாக செல்லும் போது, அதிகப்படியான ஒலியை உண்டாக்குகிறது. அதிலும் காற்றானது வாய் மற்றும் மூக்கின் வழியாக இடையூறுடன் செல்லும் போது அது பலத்த ஒலியை உண்டாக்குகிறது. குறிப்பாக சளி அல்லது மூக்கடைப்பின் போது இந்த மாதிரியான சப்தம் ஒலிக்கப்படும். மேலும் குறட்டையானது வயது, சைனஸ், அதிகப்படியான உடல் எடை மற்றும் புகைப்பிடித்தல் ஆகிறவற்றின் காரணமாகவும் ஏற்படும். இப்படி குறட்டை விட்டால், அது உடல் நலத்தைப் பாதிப்பதோடு, உறவுகளில் தொல்லையை உண்டாக்கும். ஆகவே அந்த குறட்டையை நிறுத்துவதற்கு ஒருசில எளிய வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.

·         * தலையணை படுக்கும் போது தலையணை பயன்படுத்தாமல் சாதாரணமாக படுப்பதற்கு பதிலாக, சற்று அதிக அளவில் தலையணையைப் பயன்படுத்தி தூங்கினால், குறட்டையை தவிர்க்கலாம்.

·         *  பக்கவாட்டில் தூங்கவும் இப்படி இரவு முழுவதும் படுப்பது சாத்தியம் இல்லை தான். இருப்பினும் இப்படி பக்கவாட்டில் படுத்தால், அது குறட்டையை தடுக்கும்.

·         * நீராவிப் பிடிப்பது ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.

*      புகைப்பிடிப்பதை தவிர்ப்பது புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

*    மது அருந்துதலை நிறுத்துவது மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும்.

*     சளிக்கு நிவாரணம் அளித்தல் சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

·         * தூங்கும் நேரம் ஸ்நாக்ஸ் வேண்டாம் இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.

அற்புதமான 6 உணவுகள்


அற்புதமான 6 உணவுகள்

More than 34 thousand women in the United States for almost 20 years, Apple will continue to monitor research

ஆப்பிள்: 
அமெரிக்காவில் ஆப்பிள் தொடர்ந்து சாப்பிடும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வு  மேற்கொள்ளப்பட்டது. இதில் இந்தப் பெண்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் வருவதற்கான வாய்ப்பு பெருமளவு குறைந்ததைக் கண்டறிந்தனர்.  ஆப்பிள், எல்.டி.எல். என்ற கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. இதில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இந்த ஆன்டிஆக்சிடன்ட்கள்  திசுக்களைப் பாதிக்கும் ரசாயன மூலக்கூறுகளை எதிர்த்துப் போராடி திசுக்கள் சேதம் அடைவதைத் தடுக்கின்றது. இதனால் திசுக்கள் விரைவாக  முதிர்வடையும் தன்மை குறைவதுடன், நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது.

பாதாம்:

வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்தது. இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற தாது உப்புகள், நார்ச்சத்துகள் ஆகியவையும் இதில் அதிக  அளவில் உள்ளன. நாள் ஒன்றுக்கு மூன்று பாதாம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நல்ல கொழுப்பின் அளவு சீராக இருக்கும். இதில் உள்ள தாமிரம்  மற்றும் மக்னீசியம் உடலுக்கு ஆற்றலை அளிக்கும். பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு  உறுதுணையாக இருக்கும்.

எலுமிச்சை:

தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பது என்பது வெறும் தினசரி வைட்டமின் சி தேவையை 100 சதவிகிதம் பூர்த்தி செய்வது மட்டுமல்ல, நல்ல  கொழுப்பான ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்கவும் உதவும். மேலும், இது எலும்பை உறுதிப்படுத்தும். எலுமிச்சையில் உள்ள சிட்ரஸ், திசுக்கள் வீக்கம்  அடையும் பிரச்னையைச் சரிசெய்வதுடன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

பூண்டு:

நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் ஒரு பொருள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருகச் செய்வதுடன், புற்றுநோய் செல்களின்  வளர்ச்சியையும் தடுக்கும். இது எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொழுப்பு அளவைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும். மேலும் கொழுப்பையும்  கட்டுப்படுத்தும். இதில் உள்ள அலிசின்( ணீறீறீவீநீவீஸீ )உயர் ரத்த அழுத்தத்தைக் குறிப்பிடத் தகுந்த அளவில் குறைக்கிறது. கல்லீரலில் கொழுப்புப்  படிவதைத் தடுக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு.

டார்க் சாக்லேட்:

குறைந்த அளவில் டார்க் சாக்லேட் அல்லது கறுப்பு சாக்லேட்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை எடுத்துக்கொள்வது உயர் ரத்த  அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சீராக்கும், ரத்தம் கட்டிப்போகும் பிரச்னையைத் தவிர்க்கும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்தது. இதில்  உள்ள தாமிரம் மற்றும் பொட்டாசியம் தாது உப்புகள் பக்கவாதம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து காக்கும். இரும்புச் சத்து மிகுதியாக  உள்ளதால் ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் இதைச் சாப்பிடலாம். மேலும் உயர் ரத்த அழுத்தம், டைப் 2 சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் ஆற்றல்  டார்க் சாக்லேட்டுக்கு உண்டு.

சோயாபீன்:

சோயாபீனை தாவர இறைச்சி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அதில் புரதச் சத்து உள்ளது. உடலில் புரதச் சத்து குறையும்போது நோய் எதிர்ப்பு  சக்தி குறைவு, சோர்வு போன்றவை ஏற்படுகிறது. இந்தப் பிரச்னையைத் தவிர்க்கும் ஆற்றல் சோயாபீனுக்கு உள்ளது. சோயாபீனில் உள்ள லெசிதின்
(lecithin )என்ற வேதிப் பொருள் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை எளிதில் கிரகித்து திசுக்கள் மற்றும் உறுப்புகளை வலுப்படுத்தும்.  மேலும், இது கொழுப்பு அளவைக் குறைத்து, வளர்ச்சிதை மாற்றப் பணிகளை மேம்படுத்தும். ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க  உதவுகிறது. அதே நேரத்தில் இது நல்ல கொழுப்பை எதுவும் செய்வதில்லை! 

ஆரோக்கிய டிப்ஸ்


ஆரோக்கிய டிப்ஸ்

Black grapes nutrients: black grapes and prevent artery blockage. To keep the body healthy. Memory

கருப்பு திராட்சை சத்துக்கள்: கருப்பு திராட்சைகள் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தடுக்கும். உடலை ஆரோக்கியமாக வைக்கும். ஞாபகசக்தியை வளர்க்கும். தினமும் கறுப்பு திராட்சை சாப்பிட்டால் தலைமுடி நரைக்காமல் இருக்கும். இதயத்தை பலப்படுத்த உதவும்.

இதயத்தை சீராக்கும் மீன்:
மீனில் இருக்கும் ஒமேகா-3 என்ற செறிவற்ற கொழுப்பு இருப்பதால், அவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுகிறது. இதனால் இதய துடிப்பை சீராக வைக்க மீன் உதவுகிறது.


ஆயுள் அதிகாரிக்கும் தயிர்
: தயிரில் உள்ள லேக்டோடைசில்ஸ் மற்றும் லெபிடா என்ற பாக்டீரியாக்கள் உள்ளன. இவை நம் வயிற்றில் கிருமிகள் வராமல் தடுக்கிறது. தயிரிலுள்ள கால்சியம் உடலில் உள்ள எலும்புகளை தேயாமல் காப்பாற்ற உதவும். எலும்பில் உள்ள மஜ்ஜையில் அதிகப்படியான செல்களை உருவாக்க தயிர் உதவுகிறது. உடல் எடையை குறைக்க தயிர் உதவுகிறது.


புதினாக்கீரை
: சிறுநீரகம் சமந்தமான பிரச்னை குறைக்க உதவும்.


மணத்தக்காளிக்கீரை
: நாவில் உள்ள புண்களை நீக்கும். மனித உடலின் மனித உள்ளுறுப்புக்களை பலப்படுத்தும் தன்மை மணத்தக்காளிக்கீரை அதிகமாக உள்ளது.


முளைக்கீரை: ரத்த அழுத்த சமந்தான பிரச்னைகளை குறைக்க முளைக்கீரை சாப்பிடு நல்லது.

வல்லாரைக்கீரை: ஞாபக சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது

துள்ளும் இளமைக்கு நடைபயிற்சி

துள்ளும் இளமைக்கு நடைபயிற்சி

The man who is now living in the wild within the building. Has a 90 percent decrease in body movement. It diabetes, blood


காடுகளில் வாழ்ந்த மனிதன் இப்போது கட்டிடத்திற்குள் வாழும் நிலை உள்ளது. உடல் இயக்கம் என்பது 90 சதவிகிதம் குறைந்து விட்டது. இது  நீரழிவு, ரத்த அழுத்தம், உடல்பருமன் என பல்வேறு கோளாறுகளுக்கு காரணமாகிறது. இவற்றை தவிர்க்க உடற்பயிற்சி அவசியமாகும். யோகா,  நடைப்பயிற்சி போன்ற எளிய பயிற்சிகள் கூட போதுமானவை. அதுவும் 40 வயதுக்கு மேல் அனைவரும் நடைபயிற்சி மேற்கொள்வது நல்லது.

நடைபயிற்சியின் பலன்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 70 வயது முதல் 89 வயது வரையிலான சுமார் 1500 முதியவர்களிடம்  இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், நடைபயிற்சி மேற்கொள்ளாத முதியவர்கள் என இரு  பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

நடைபயிற்சியின் பலன்கள் குறித்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. 70 வயது முதல் 89 வயது வரையிலான சுமார் 1500 முதியவர்களிடம்  இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியவர்கள், நடைபயிற்சி மேற்கொள்ளாத முதியவர்கள் என இரு  பிரிவாக பிரிக்கப்பட்டு அவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வு முடிவுகள் வியக்கத்தக்க வகையில் இருந்தன. தினமும் குறைந்தது 20 நிமிடம்  நடைபயிற்சி மேற்கொண்ட முதியவர்கள் யார் உதவியும் இன்றி நீண்டதூரம் நடக்கும் திறனுடன் இருந்தனர். ஆனால் நடைபயிற்சி மேற்கொள்ளாத  முதியவர்களின் திறன் குறைந்திருந்தது. அவர்களால் பிறர் உதவியின்றி நடக்க முடியவில்லை. 

அவர்களின் கால்கள், உடல் உறுப்புகள் வலு குறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் நடமாட முடியாமல் படுக்கையில் இருக்கும் நிலை  இருந்தது. எனவே தினமும் அருகில் உள்ள பூங்காக்கள், மைதானங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம். அல்லது வீட்டை சுற்றி நடக்கலாம்.
வீட்டு மொட்டை மாடிகளில் கூட நடக்கலாம். தினமும் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று வருவதை பழக்கப்படுத்திக் கொள்லலாம். இது  முதியவர்கள் உடல், மனம் ஆரோக்கியத்துடன் உற்சாகமாக இருக்க வழி வகுக்கும்.

நாள் முழுவதும் களைப்பா?

நாள் முழுவதும் களைப்பா?

After the disbanding of sleep, tired and without energy the body as well? The weakness of the office for several days

தூக்கம் கலைந்த பின்னரும், உடலானது சோர்வுடன் ஆற்றல் இல்லாமல் இருப்பது போல் உள்ளதா? இத்தகைய சோர்வினால் பல நாட்கள் அலுவலகத்திற்கு விடுப்பு கூட எடுத்துள்ளீர்களா? எப்போது ஒருவருக்கு இப்படி அதிகம் வேலை செய்யாமல் அளவுக்கு அதிகமான களைப்பு ஏற்படுகிறதோ, அப்போது உடலின் மேல் சற்று கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் உடலில் ஒருசில பிரச்னைகள் இருந்தாலும், உடல் மிகுந்த சோர்வுடன் இருக்கும். உடலில் ரத்த அழுத்தம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள். அதுமட்டுமின்றி, ஒருசில பழக்கவழக்கங்களாலும் உடல் அதிக அளவில் களைப்படைகிறது. ஆகவே திடீரென்று உங்கள் உடலில் போதிய எனர்ஜி இல்லாமல் அதிக களைப்புடன் இருப்பது போல் உணர்ந்தால், உடனே அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும். இங்கு உடலானது எப்போதும் களைப்புடன் இருப்பதற்கான சில காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதய நோய்:

நாள்பட்ட சோர்வு இதய நோய் இருப்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று. ஏனெனில் இதய நோய் இருந்தால், இதயத்திற்கு போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பதுடன், உடலில் உள்ள செல்களுக்கு போதிய ரத்தத்தை செலுத்த முடியாமல், உடல் எனர்ஜியின்றி களைப்புடன் இருக்கும். 

காலை உணவை தவிர்ப்பது:

8 மணிநேர தூக்கத்திற்கு பின், உடல் சீராக செயல்பட ஆற்றல் தேவைப்படும். அத்தகைய ஆற்றல் காலை உணவின் மூலம் தான் கிடைக்கும். ஆனால் தற்போது பலர் அலுவலகத்திற்கு நேரமாகிவிட்டது என்று, காலை உணவை தவிர்த்துவிடுகின்றனர். இப்படி தினமும் செய்து வந்தால், என்ன தான் மற்ற நேரங்களில் வயிறு நிறைய உணவை உண்டாலும், அவை உடலுக்கு ஆற்றலைத் தருவதற்கு பதிலாக, கொழுப்பை அதிகரித்து, உடலில் உள்ள களைப்பை நீக்காமல் இருக்கும். எனவே எப்போதும் காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது.

குறைவாக தண்ணீர் குடிப்பது:


உடலில் எனர்ஜியின் அளவை சீராக பராமரிக்க தண்ணீர் மிகவும் இன்றியமையாதது. அத்தகைய தண்ணீரை சரியான அளவில் தினமும் பருகாமல் இருந்தால், உடலில் மெட்டபாலிசம் எதுவும் இல்லாமல், உடலுறுப்புக்கள் வறட்சியடைந்து, சரியாக செயல்படாமல் போகும். இதன் காரணமாக, உடலானது மிகுந்த சோர்வுடன் இருக்கும்.

ஜங்க் உணவுகளை உண்பது:

ஜங்க் உணவுகளில் கலோரிகள் அதிகம் இருப்பதால் தான், அவற்றை உண்ட பின்னர் உடல் மந்தமாக இருக்கும். இப்படி இதனை அதிகம் உண்டு வந்தால், பின் உடலுக்கு வேண்டிய ஆற்றல் கிடைக்காமல் போய்விடுவதோடு, உடல் பருமனடைந்துவிடும்.

உடற்பயிற்சியை தவிர்த்தல்:


தற்போது அனைத்து அலுவலகங்களிலும் வேலைப்பளு அதிகம் இருப்பதால், இரவில் தாமதமாக தூங்குவதுடன், அதிகப்படியான அசதியினால் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய முடியாமல் போய்விடுகிறது. இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், எப்போதும் சோர்வுடன் இருக்க நேரிடுகிறது. எனவே தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்து வாருங்கள்.

அதிகப்படியான தூக்கம்:

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 8 மணிநேர தூக்கம் அவசியம் தான். ஆனால் சிலர் விடுமுறை தானே என்று 10 முதல் 12 மணிநேரம் தூங்குவார்கள். இப்படி வார இறுதி நாட்களில் தூங்கியவாறே இருந்தால், அப்போது உண்ணும் உணவுகள் உடலில் எனர்ஜியை அதிகரிக்காமல், மாறாக கொழுப்புக்களாக உடலில் தங்கிவிடும். ஆகவே விடுமுறை நாட்களிலும் ஒரே மாதிரி செயல்படுங்கள். அதாவது, சரியாக தூங்கி எழுந்து, சரியான நேரத்தில் உணவினை உட்கொண்டு, வேலைகளை செய்து வாருங்கள்.

மன இறுக்கம்:

சில நேரங்களில் சிலருக்கு மன இறுக்கம் அதிகம் இருந்தாலும், சோர்வு அதிகம் ஏற்படும். ஏனெனில் மன இறுக்கம் அதிகம் இருக்கும் போது, மூளையானது எதுவும் சொல்லாமல் அமைதியாகிவிடும். எனவே மன இறுக்கத்தில் இருந்து வெளிவர நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, பிடித்தவருடன் நேரத்தை செலவழிப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்று செய்ய வேண்டும்.

வைட்டமின் பி12 குறைபாடு:

நீங்கள் சைவமாக இருந்தால், உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படக்கூடும். ஏனெனில் இந்த சத்தானது அசைவ உணவுகளில் தான் அதிகம் இருக்கும். எனவே சைவ உணவாளர்கள் வைட்டமின் பி12 நிறைந்த உணவுகளை உணவில் அதிகம் சேர்த்து வர வேண்டும். 

நீங்கள் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறீர்கள்?

நீங்கள் எவ்வளவு உப்பு சாப்பிடுகிறீர்கள்?


ஷாக் தரும் சால்ட் வில்லன்

“நாலு காபி’’ என ஆர்டர் சொன்னதுமே, எதிரில் இருப்பவர்களிடம் ‘‘ஷுகர் நார்மல்தானே?’’ எனக் கேட்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது. ஸோ, சர்க்கரை விஷயத்தில் நாம் கொஞ்சம் உஷார்தான். ஆனால், உப்பு?‘‘உங்களுக்கு உப்பு எவ்வளவு போடணும்?’’ என்ற கேள்வியே நமக்கு பரிச்சயமில்லை. ஆனால், சமீபத்தில் ‘உலக உயர் ரத்த அழுத்த நோய் நாளை’க் கடைப்பிடித்த உலக சுகாதார நிறுவனம், உலக அளவில் ஏற்படுகிற இறப்புகளுக்கு முக்கியமான காரணிகளில் ஒன்றாக உப்பைக் குறிப்பிட்டிருக்கிறது. ‘உப்புதானே... என்ன செய்துடும்?’ என்ற நம் அசட்டை மனப்போக்கை சட்டை பிடித்து உலுக்குகிறது இந்தத் தகவல்.

‘‘எல்லோரது உடம்புக்கும் உப்பு தேவை. ஆனால், அது கொஞ்சமும் அளவு தாண்டக் கூடாத அமிர்தம். அந்தக் கால மனிதர்கள் உணவில் நிறைய உப்பு எடுத்துக்கொண்டார்கள். ஆனால், உடல்  உழைப்பால் வியர்வை வழியாக அதை வெளியேற்றினார்கள். இன்றைய ஏசி லைஃப் ஸ்டைலில் அந்த உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஆனால், நவீன உணவுகள் உப்புக் கரிக்காத  வகையில் நூதனமான உப்பு வகைகளை நம் உடலுக்குள் திணிக்கின்றன’’ என ஷாக் துவக்கம் கொடுத்தார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியனான தாரிணி கிருஷ்ணன்.

‘‘நம் உடலின் ஒவ்வொரு ரத்த செல்களுக்கு உள்ளேயும் பொட்டாஷியம் எனும் உப்பு உள்ளது. செல்களுக்கு வெளியே சோடியம் எனும் உப்பு உண்டு. இந்த இரண்டுமே சமமான அளவுகளில்  இருந்தால்தான் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். அதிகம் உப்பு சேர்ப்பதால் இந்த சமன்பாடு கெட்டு, ரத்தம் சரியாகப் பாயாமல் போகும். இதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். ரத்த அழுத்தம் வ ந்துவிட்டால், அது இதய நோய்களையும், சிறுநீரகப் பிரச்னைகளையும், ஸ்ட்ரோக்கையும் காலப் போக்கில் அழைத்து வந்துவிடும். ஆக, உப்பு விஷயத்தில் கவனமாய் இருக்க வேண்டியது மிக மு க்கியம்.

உப்பென்றால் ஏதோ தயிர் சாதத்தில் நாமாக போட்டுக் கொள்வது மட்டுமே என பலர் நினைக்கிறார்கள். உண்மையில் எல்லா வித உப்புகளையும் குறைத்துப் பயன்படுத்த வேண்டும். இன்றைய பாக்கெட் உணவுகள் நீண்ட நாள் கெட்டுவிடாமல் இருப்பதற்கான பிரிசர்வேட்டிவாக சோடியம் பென்சொயேட் சேர்க்கப்படுகிறது. ருசியைக் கூட்டுவதற்காக மோனோசோடியம் க்ளூடமேட் போன்ற உப்புப்  பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பேக்கிங் சோடா, ஆப்ப சோடா போன்றவை மிருதுத் தன்மைக்காக சேர்க்கப்படுகின்றன. இவை எல்லாமே உப்புதான். ஒரு உணவுப் பொருளில் இருக்க வேண்டிய  உப்பின் அளவை இவை கண்ணுக்குத் தெரியாமல் கூட்டி விடுகின்றன. 

சாதாரணமாக ஒரு நாளைக்கு ஒரு மனிதன் ஒரு டீ ஸ்பூன், அதாவது 5 கிராம் உப்பைத்தான் உண்ண வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. ஆனால் பாக்கெட்  உணவுகளிலும், பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் உள்ள உப்பின் அளவு, இதைவிட பத்து மடங்கு அதிகம். சாதாரணமாக நாம் வீட்டில் செய்யும் 200 மில்லி கிராம் சூப்பில் 2 மில்லி கிராம்  உப்புதான் இருக்கும். ஆனால், பாக்கட்டுகளில் விற்கப்படும் 200 மில்லி கிராம் சூப்புகளில் 20 மில்லி கிராம் உப்பு இருக்கும். காரணம், இவற்றில் இருக்கும் பல வகையான உப்புச் சேர்க்கைகள்தான்.

பிளட் பிரஷர் இருக்கும் நோயாளிகள் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது இந்தியாவில் குறைவாக இருக்கிறது என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது. அப்படியே டாக்டர்களிடம் போனாலும் ‘ஊறுகாயை  சாப்பிடாதே’, ‘வீட்டில் சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்க்காதே’ என்றுதான் அட்வைஸ் செய்வார்கள். ‘பாக்கெட் உணவை சாப்பிடாதே’, ‘ரெடிமேட் உணவைத் தொடாதே’ என்று  யாரும் சொல்வதில்லை. உப்பு பற்றிய விழிப்புணர்வு இங்கு குறைவாகவே இருக்கிறது’’ என்றவர், உப்பின் தரம் இன்று கவலைக்கிடமாக இருப்பதை சுட்டிக் காட்டினார்.

‘‘அன்று நாம் பயன்படுத்திய கல் உப்பு உண்மையிலேயே சிறந்தது. அதில் நிறம் குறைவாக இருந்தாலும் எல்லா வித சத்துக்களும் நிறைந்திருந்தன. இன்று வெள்ளையாக எதுவும் இருக்கவேண் டும் என்பதற்காக பெரிய நிறுவனங்கள் விற்கும் தூள் உப்பைப் பயன்படுத்தி வருகிறோம். அவர்கள் கல் உப்பை வெள்ளையாக்குகிறேன் பேர்வழி என்று உப்பில் உள்ள பல சத்துக்களை  வெளியேற்றி விடுகிறார்கள். சத்தும் இல்லை அளவும் இல்லை என்றாகிவிட்டது நம் உப்பு டயட்!’’ என்றார் அவர் வேதனையோடு... உப்புப் பெறாத விஷயத்துக்கெல்லாம் கவலைப்படுவதை விட்டுவிட்டு, உப்புக்காக கவலைப்படுவோம்!

உப்பு எவ்வளவு!

ஒரு நாளில் ஒருவர் சாப்பிட வேண்டிய உப்பின் அளவு ஐந்து கிராம் என்றால், ஒரு சராசரி இந்தியர் 12 முதல் 18 கிராம் உப்பு சாப்பிடுகிறார் என்கிறது ஆய்வு ஒன்று. இந்த மாற்றத்துக்கான காரணகர்த்தா, ‘ஃபாஸ்ட்ஃபுட் உணவு’! பாக்கெட் உணவுகள் மூலம் உடலில் மறைமுக உப்பு சேர்வதே விபரீதங்களுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது. உலக மக்கள் இப்போது சாப்பிடும் உப்பில்  30 சதவீதத்தை 2025ம் ஆண்டுக்குள் குறைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் பாக்கெட் உணவுகளின் மேற்புறத்தில், அதில் எவ்வளவு உப்பு இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில் அப்படி சட்டம் இல்லை. இங்கே கலோரி, புரோட்டீன், சர்க்கரை, கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் அளவை மட்டும் குறிப்பிட்டால் போதும். ஜார்ஜ் இன்ஸ்டிடியூட் என்ற தொண்டு நிறுவனம், இந்தியாவில் விற்கப்படும் 7124 உணவுகளை  ஆய்வு செய்தது. இவற்றில் 73 சதவீத உணவு பாக்கெட்டுகளில் ‘உப்பு அளவு’ குறிப்பிடப்படவில்லை. ‘‘இதையும் கட்டாயமாக்க வேண்டும். விலை மற்றும் காலாவதி தேதி பார்ப்பது போல உப்பு  அளவு பார்த்து பொருளை வாங்க வேண்டும்’’ என்கிறார்கள் இந்த நிறுவனத்தினர்!

உடலில் உப்பைக்கூட்டும் 10 உணவுகள்!


* சமையல் சோடா
* சாஸ்
* ரெடிமேட் இறைச்சி மற்றும் மீன்
* பாலாடைக்கட்டி
* ஊறுகாய்
* இன்ஸ்டன்ட் சூப்
* உப்பிட்டு வறுத்த பயிறுகள்
* ஸ்நாக்ஸ் அயிட்டங்கள்
* ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள்
* பாக்கெட்டில் அடைத்த காய்கறிகள்

தொண்டை வலி

மசாலா டீ குடித்தால் தொண்டை வலி விலகும்

The prospect of all ages at any time of throat pain. Thus, in the event of throat pain can not swallow saliva.

சுகாதாரமின்மை மற்றும் வைரஸ், பாக்டீரியா தொற்றுதான் தொண்டையில் துவங்கி உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தொண்டையில்  புண் இருக்கும்போது தொண்டை கரகரப்பு மற்றும் அரிப்பு இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாகி  விடும். சுகாதாரமற்ற தண்ணீரை குடிக்கும்போது வைரஸ் தொற்றும், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளும்போது பாக்டீரியா தொற்றும்  உண்டாகிறது. இதன் அடுத்தக்கட்டமாக தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும். பாக்டீரியா  தொற்றால் ஏற்படும் தொண்டைப்புண் எளிதில் அடுத்தவருக்கும் பரவுகிறது. 

இதனால் எச்சில் விழுங்கும்போது வலி ஏற்படும். தொண்டையின் பின் சுவர் சிவந்து வெள்ளைப் புள்ளிகள் உருவாகும். மேலும் குளிர் காய்ச்சல்  ஏற்படும். பெரும்பாலும் சளி, எச்சில் வழியாக இந்த நோய் மற்றவருக்கு எளிதில் பரவுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மசாலா டீ குடித்தால்  நல்லது. மசாலா டீ என்பது மிளகு, சீரகம், கிராம்பு, ஏலக்காய் போன்றவற்றை போட்டு, நன்கு கொதிக்க வைத்து, பின் குடிக்க வேண்டும். இவ்வாறு  குடித்தால், தொண்டையில் இருக்கும் புண் சரியாகிவிடும்.

இஞ்சி: தொண்டையில் உள்ள புண்ணிற்கு இஞ்சி மிகவும் சிறந்த ஒரு மருத்துவப்பொருளாகும். இஞ்சியை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து  குடித்தால், தொண்டையில் உள்ள கரகரப்பு சில  நிமிடங்களில் சரியாகி விடுவதோடு, தொண்டை புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

தயிர்: தயிர் உடலுக்கு அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் அவற்றை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடாமல், அறை வெப்பத்தில் வைத்து சாப்பிட்டால்,  தொண்டையில் ஏற்படும் வலி சரியாகிவிடும்.

எலுமிச்சை சாறு, தேன்: சிட்ரஸ் பழங்களில் ஆன்டி வைரஸ் பொருள் அதிகமாக உள்ளது. எனவே அத்தகைய பழங்களில் ஒன்றான எலுமிச்சை  சாற்றில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் சிறிது தேன் சேர்த்து குடித்தால், தொண்டையில் வைரசால் ஏற்பட்டிருக்கும் புண் குணமாகிவிடும்.

மிளகு: 
காரப்பொருட்களில் ஒன்றான மிளகை உணவுடன் சேர்த்தோ அல்லது அதை தூளாக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால்  தொண்டையில் உள்ள கரகரப்பு மற்றும் புண் விரைவில் சரியாகிவிடும். எனவே இருமல் அல்லது சளி இருக்கும்போது மிளகு சாப்பிடுவது எந்த ஒரு  பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்துவிடும்.


தடை: நாவை ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்போடு, வலியும் ஏற்படும். எனவே  அத்தகைய உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும் வினிகர் கலந்திருக்கும் உணவுகளையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

பால்: தொண்டையில் புண் இருக்கும்போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் பாலை இந்த  நேரத்தில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகள்: வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும்போது சாப்பிடக்கூடாது. இதனால் அத்தகைய பொருட்களை விழுங்குவதற்கு கடினமாக  இருப்பதோடு அதிகமான வலியும் ஏற்படும். தொண்டை வலி இருக்கும்போது பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.
தானியங்களை நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால் விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்படாமலும் இருக்கும்.

பாதுகாப்பு முறை: 


தொண்டையில் நோய் தொற்று இருக்கும்பட்சத்தில் இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள் (தண்ணீர், சூப்) போன்றவைகளை குடிக்கலாம். இதன்  மூலம் சளி மென்மையாகி எளிதில் வெளியேறும்.

மிதமான சூட்டில் தண்ணீர் எடுத்து அதில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். இது தொண்டைக்கு  இதமளிப்பதுடன் சளி வெளியேறவும் உதவும்.

சப்பி சாப்பிடும் மாத்திரை மற்றும் இனிப்பில்லாத சூயிங்கம் ஆகியவற்றை சுவைப்பதால் அதிக உமிழ்நீர் சுரந்து தொண்டையை சுத்தம் செய்யும்.  இந்த  மாதிரியான நேரங்களில் பேச்சைக் குறைப்பதும் அவசியம். அசுத்தக் காற்றை சுவாசிப்பதை தவிர்க்க வேண்டும்.  புகை பிடித்தலை கண்டிப்பாக  விட்டுவிட வேண்டும்.

காய்ச்சல், ஜலதோஷம் இருக்கும் பட்சத்தில் அடிக்கடி கைகளை கழுவிக் கொள்வது முக்கியம். கைகளால் முகத்தைத் துடைப்பதை தவிர்க்கலாம்.

இனிது இனிது வாழ்தல் இனிது!

இனிது இனிது வாழ்தல் இனிது!

Starting from the first point where tampatikkul problems? Anyone getting fixed. It tampatikkul


தம்பதிக்குள் பிரச்னைகளுக்கான முதல் புள்ளி எங்கிருந்து தொடங்குகிறது?யார் சரி என்பதில்தான். இது தம்பதிக்குள் என்றில்லை. நண்பர்களுக்குள்,  வேறு உறவுகளுக்குள், அலுவலகத்தில் என எல்லா இடங்களிலும் எல்லா மனிதர்களிடமும் பரவலாகக் காணப்படுகிற மனநிலைதான். தம்பதிக்குள்  இந்த மனநிலை இன்னும் கொஞ்சம் தீவிரமாகவே இருப்பதுதான் பிரச்னை.அதிலும் கணவர்களுக்கு இந்த மனோபாவம் எப்போதும் அதிகமாகவே  இருப்பதைப் பார்க்கலாம். படித்த, பெரிய பதவியில் இருக்கிற கணவர்களுக்கு அதைவிட அதிகமாக இருக்கும். அதற்காக மனைவிகள் விதிவிலக்கு  என்று அர்த்தமில்லை. கணவரை விட அதிகம் படித்த, அவரை விட உயர்ந்த பதவியில் இருக்கும் மனைவியிடமும் இந்த மனநிலையை சகஜமாகப்  பார்க்கலாம்.

வாழ்க்கைத்துணையிடம் இந்த மனோபாவம் இருப்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?

• எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்வார்கள். துணை சொல்கிற விஷயத்துக்குக் காது கொடுக்காமல், எதிர்த்துப் பேசி, தன் தரப்பை சரி என  நிரூபிப்பதில்தான் அவரது கவனம் இருக்கும்.

• இந்தப் போக்கு தவறானது என்று தெரிந்தாலும், அதனால் கெட்ட பெயர் வருமென உணர்ந்தாலுமே அந்த மனநிலையைத் தொடர்வார்கள்.

• தன் துணையின் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும் எனத் தோன்றினாலும், அந்த எண்ணத்தைப் புறந்தள்ளிவிட்டு, தன் தரப்பை  சரியென நிரூபிப்பதற்கான புள்ளி விவரங்களைப் பற்றியே பேசுவார்கள்.

• தவறு செய்கிறோம் என உணர்ந்தாலுமே இவர்களால் மன்னிப்பு கேட்க முடியாது.

• எப்போதும் எந்த விஷயத்தையும் தனக்குத் தெரிந்த ஒரு கோணத்திலிருந்து மட்டுமே பார்ப்பார்கள். மற்றவர் பார்வையிலிருந்து வேறு வேறு  கோணங்களில் இருந்தும் அதைப் பார்க்கலாம் என அறியாதவர்களாக / அறிந்திருந்தாலும் அதைச் செயல்படுத்த விரும்பாதவர்களாக இருப்பார்கள்.  இந்த மனநிலை கொண்டவர்களுக்கு தான் தன் துணையிடம் விவாதிக்கிற விஷயத்தில் உள்ள உண்மைத் தன்மையை விட, தன் தரப்பை சரியென  நிரூபிக்கிற நோக்கமே முக்கியமாகத் தெரியும்.

• தான் மட்டுமே சரியென நினைக்கிற இந்த மனநிலை கிட்டத்தட்ட போதை போன்றது. நம்மைச் சுற்றிலும் பலரும் இத்தகைய மனநிலையில்  இருப்பதைப் பார்க்கலாம்.

• நீண்ட காலம் சந்தோஷமாக வாழ்கிற, அப்படி வாழ நினைக்கிற தம்பதிக்குள் பெரும்பாலும் இந்த மனப்போக்கு இருக்காது. காரணம்... அவர்களில்  ஒருவர் தேவையற்ற வாக்குவாதங்களுக்குள் நுழைவதை விரும்பமாட்டார்கள் அல்லது துணையின் பேச்சை ஏற்றுக் கொள்ளப் பழகுவார்கள்.  தனது  வாக்குவாதத்தில் தவறாகப் போவது தெரிந்தால், அதை ஏற்றுக் கொள்ளவும் தெரிந்தவர்களாக இருப்பார்கள்.

தம்பதியிடம் காணப்படுகிற இந்த மனப்போக்கின் பின்னணி என்ன?

• அவரவர் வளர்ப்பு முறையே அடிப்படை. சாதி, மதம், கடவுள் போன்ற விஷயங்களில் ஒவ்வொரு வருக்கும் இருக்கும் நம்பிக்கை இன்னொரு காரணம்.  கணவனும் மனைவியும் வேறு வேறு நம்பிக்கைகளுடன், வேறு வேறு பழக்கவழக்கங்களுடன் வளர்கிறார்கள். வாழ்க்கையில் இணைகிற போது,  இருவரில் ஒருவர் தனக்கெதிராகவோ, முரண்பட்டோ யோசிப்பது அதிர்ச்சியைத் தரலாம். ஒரு நடிகரைப் பற்றியோ, அரசியல் தலைவரைப் பற்றியோ  ரசிகர்களுக்கு மாறுபட்ட அபிப்ராயங்கள் இருப்பதைப் போன்றதுதான் இதுவும். சிறு வயது முதல் நம் ஒவ்வொருவரையும் ஆயிரக்கணக்கான நம்பிக்கைகளே வளர்க்கின்றன.

• அந்த நம்பிக்கைகள் அவரவர் இனம், மதம், வளர்ப்பு முறை, வாழும் சூழல் எனப் பல்வேறு விஷயங்களால் தீர்மானிக்கப்படுபவை. நமது சிந்தனை,  செயல், பேச்சு என எல்லாம் அவற்றின் அடிப்படையிலேயே இருக்கும். உதாரணத்துக்கு... சில ஆண்களுக்கு பெண்கள் மீதான மதிப்பீடு மிகத்  தாழ்ந்ததாக இருக்கும். பெண் என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என தனக்குள் ஒரு பிம்பத்தை, அளவுகோலை வளர்த்துக் கொண்டிருப்பார்கள். தாம் சந்திக்கிற, தம் வாழ்க்கையில் வருகிற எல்லாப் பெண்களிடமும் அந்த  லட்சணங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள். எந்தப் பெண்ணாவது அதற்கு முரண்படும் போது, அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. தம்  நம்பிக்கை தான் சரி என வாதம் செய்வார்கள். 

• தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற இத்தகைய மனிதர்களை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு முட்டாள்கள் போலத் தெரியலாம்.  ஆனால், உண்மையில் இவர்கள் மிகப்பெரிய புத்திசாலிகளாக இருப்பார்கள். தன் தரப்பை நிரூபிக்க கை நிறைய புள்ளி விவரங்களுடனும்  தகவல்களுடனும் ஒரு வக்கீல் அளவுக்குத் தயாராகவே இருப்பார்கள். தன்னுடைய இந்தப் போக்கு தவறு என்பதையும் உணர்ந்திருப்பார்கள். ஆனால்,  அதிலிருந்து வெளியில் வர அவர்களது ஈகோ அத்தனை சீக்கிரத்தில் அனுமதிக்காது. இன்னும் விளக்கமாகச் சொல்வதானால், ஆண்கள் எப்போதும்  இடது பக்க மூளையிலிருந்து யோசிப்பார்கள். 

• அதில் உணர்வுகளுக்கு இடமிருக்காது. பெண்கள் எப்போதும் வலது பக்க மூளையிலிருந்து பேசுவார்கள். அதில் உணர்வுகள் மட்டுமே  ஆக்கிரமித்திருக்கும். தான் சொல்வதுதான் சரியென நம்புவதிலும் அப்படி நம்ப வைப்பதிலும் சம்பந்தப்பட்டவரின் சுயமரியாதை அடங்கியிருப்பதாக  உணர்வார்கள். அதுவே அவர்கள் அந்த மனநிலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கக் காரணம். இவர்களால் புதிய கருத்துகளை ஒருபோதும் யோசிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ முடியாது. கொள்கை ரீதியான சிந்தனைகள் எனச் சிலதைப்  பிடிவாதமாக நம்பிக் கொண்டிருப்பார்கள். 

• உண்மையில் அந்த எண்ணங்கள் முட்டாள்தனமானவையாகவே இருக்கும். விஞ்ஞானம் உண்மையென நிரூபித்த விஷயங்களைக் கூட இவர்களால்  ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம்... அவர்களது போலியான சுயமரியாதை. தன்னுடைய இந்த மனப்பான்மையின்  மூலம் மற்றவர்களைக்  கட்டுப்படுத்தி விடலாம் என்கிற தவறான, ஆழமான எண்ணம் பதிந்து போயிருக்கும். இவர்கள், திறந்த மனத்துடன் மற்றவர்களது கருத்துகளுக்குக்  காது கொடுக்கவோ, அவை நல்லவையாகவே இருந்தாலும் ஏற்றுக்கொள்ளவோ முடியாமல் தவிப்பார்கள். முதல் பத்தியில் சொன்னது போல  படித்தவர்களிடமும் வசதியானவர்களிடமும் காணப்படுகிற இந்த மனநிலையை, ஒழுக்கமின்றி வாழும் மனிதர்களிடமும் பார்க்கலாம். 

உதாரணத்துக்கு... குடிகாரர்கள், தாம் குடிப்பதற்குக் காரணமாக தமக்கென ஒரு நியாயத்தை வைத்திருப்பார்கள். லஞ்சம் வாங்குவோர் அதற்கு தம்  தரப்பு நியாயம் என ஒன்றைப் பேசுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்போர், ஆசிரியர்கள், பெற்றோர், கணவர்கள் போன்றோர் இந்த ‘நானே சரி’  மனநிலைக்குப் பழகிப் போகும் வாய்ப்புகள் மிக அதிகம்.

இந்த மனநிலை வேறு என்ன செய்யும்?

தான் சொல்வதே சரியென்கிற இந்த மனப்பான்மை,  நல்ல நண்பர்களையும் மனிதர்களையும் தொலைக்க வைக்கும்.

சந்தோஷத்தையும் நிம்மதியையும் காணாமல் போகச் செய்யும்.

ஆப்பிள் மரத்திலிருந்து கீழே விழுகிற பழமானது நேரேதான் விழுமாம். தள்ளிப் போய் விழாது. அதைப் போல இந்த மனப்பான்மையால் உடனடியாக  பாதிக்கப்படுவது சம்பந்தப்பட்டவரின் குடும்பத்தாராகவே இருப்பார்கள். துணையையும் குழந்தைகளையும்தான் அதிகமாக பாதிக்கும். 

என்னதான் தீர்வு?

எல்லா விஷயங்களுக்கும் பதிலுக்குப் பதில் பேசிக் கொண்டிருக்காமல், அமைதியாக அவற்றை உற்றுநோக்கப் பழகலாம்.

தள்ளி நின்று நம்மையே நாம் கவனிக்கலாம். ‘நாம் பரந்த மனப்பான்மையுடன் இந்த விஷயத்தைப் பார்க்கிறோமா’ அல்லது ‘நாம் சொல்வது தான்  சரியென நிரூபிக்கத் துடிக்கிறோமா’ என தன்னையே கேள்வி கேட்டுக் கொள்ளலாம். இந்த சுய கேள்வியின் மூலம் தனக்கிருக்கும் அகந்தையையும்  ஒருவர் உணர முடியும்.

தான் செய்வது தவறு எனத் தெரிந்தால் உடனே மன்னிப்பு கேட்கலாம். தன்னை மாற்றிக் கொள்ள முயற்சி செய்யலாம்.

வாழ்க்கையில் நம் எல்லோருக்கும் பிரச்னைகள் குறித்த பார்வையும் புரிதலும் காலத்துக்கேற்ப மாறிக் கொண்டேதான் இருக்கும். ஒரு விஷயம்  குறித்து, குழந்தைப் பருவத்தில் ஒருவிதமான கருத்து இருக்கும். பதின்ம வயதில் அது வேறு மாதிரி மாறலாம். அதற்கடுத்தடுத்த வயதிலும் இந்த  மாற்றம் தொடரும். ஒரு பிரச்னை பற்றிய பிடிவாத மும் நம்பிக்கையும் மாறலாம்... தளரலாம். இந்த அடிப்படை புரிதல் இருந்தாலே ‘நான் சொல்வது  தான் சரி’ என்கிற மனப்பான்மை மாறுவதோடு, தம்பதிக்கிடையிலான சகிப்புத் தன்மை வளர்வதோடு, சந்தோஷங்களும் பெருகும். 

(வாழ்வோம்!)

*********************************************************************************************

இனிது இனிது வாழ்தல் இனிது!

மாற்றம் செய்த நேரம்:8/1/2014 3:15:17 PMPassing of the great power that can be put back in your life. Somewhat critical practice.



உறவுகள்: சகிப்புத்தன்மை...

போகிற போக்கில் உங்கள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விடக் கூடிய மாபெரும் சக்தி. பழகுவதற்கு சற்றே சிரமமானதுதான். ஆனால், பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும் அது எத்தனை பெரிய மந்திர சக்தி என்பது!

மனிதராகப் பிறந்த எல்லோருக்கும் சகிப்புத்தன்மை அவசியம். சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் வெளிப்பார்வைக்கு புத்திசாலிகள் மாதிரிக் காட்சியளிப்பார்கள். மேல்தட்டு மனோபாவம் கொண்டவர்கள் போலவும் வலிமையானவர்களாகவும் காட்டிக் கொள்வார்கள். சகிப்புத்தன்மை அற்றவர்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாதபடிக்கு போலியான முகமூடியுடன் இருப்பார்கள்.இந்தப் போலித் தோற்றத்தையும் பொய்யான புத்திசாலித்தனத்தையும் பல கணவர்களிடம் காணலாம். பேச்செல்லாம் பெருந்தனத்துடன், அதிமேதாவித்தனத்துடன் இருக்கும். அகம் முழுக்க அவர்களுக்கு அகந்தையும் வெறுப்புமே ஆக்கிரமித்திருக்கும்.

எந்த விஷயத்தையும் பற்றி மோசமாக விமர்சிப்பார்கள். ஜனநாயகக் கூறு என்பதே இருக்காது. மனைவி என்பவள் தனக்கு இணையானவள் என்பதை உணராமல், எப்போதும் அவளது செயல்களை மோசமாக விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். சகிப்புத்தன்மை அற்றவர்களின் பார்வையில் தன்னைத் தவிர எல்லோரும் முட்டாள்கள், திருத்தப்பட வேண்டியவர்கள் என்கிற எண்ணமே மேலோங்கியிருக்கும். அரசியல் முதல் ஆன்மிகம் வரை அனைத்து விஷயங்களைப் பற்றியும் இவர்களுக்கு முன் தீர்மானிக்கப்பட்ட கருத்துகள் இருக்கும். பரந்த மனத்துடன் எதையும் பார்க்க மாட்டார்கள். தான் சந்திக்கிற, எதிர்கொள்கிற மனிதர்களின் கருத்துகள் தனது கருத்துகளுடன் ஒத்துப் போகாததை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். கருத்து வேறுபாடுகளே தவறானவை என நினைப்பார்கள்.

சகிப்புத்தன்மை இல்லாத மனிதர்கள், பசுத்தோல் போர்த்திய புலிகளைப் போன்றவர்கள். துணையின் மேல் அக்கறையும் அன்பும் கொண்டவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள். ஆனால், உண்மை அப்படி இருக்காது. துணையின் சிந்தனைகளையும் செயல்களையும் மதிக்கத் தெரியாதவர்கள். தன் துணை வித்தியாசமாக சிந்திப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருப்பார்கள். துணைக்கு சரி எனப்படுகிற ஒரு விஷயத்தை ஒருக்காலும் அப்படி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் சில நேரங்களில் மிகச் சாதுவாகவே தெரிவார்கள். அவர்களுக்கென ஒரு எல்லை இருக்கும். எலெக்ட்ரிக் ஃபென்ஸ் போன்ற அந்த எல்லை மீறப்படுகிற போது, ருத்ர தாண்டவமே ஆடித் தீர்த்து விடுவார்கள்.

சில வீடுகளில் கணவன் - மனைவிக்குள்ளேயோ, மாமியார் - மருமகளுக்குள்ளோ சண்டை நடக்கும். ஒருவர் உரத்த குரலில் கத்திக் கொண்டிருக்க, இன்னொருவர் அமைதியாகவே இருப்பார். அமைதி காப்பவரின் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கும். அது அவர் மட்டுமே அறிந்தது. அந்த எல்லை தாண்டப்படும் போது, அமைதி காத்தவர் ஆக்ரோஷமாகி, அந்த இடத்தையே துவம்சம் செய்து விடுவார். தனது பொறுமையின் எல்லை இதுதான் என்பதை அவர்கள் பறைசாற்றிக் கொண்டிருக்க மாட்டார்கள். படித்தவர்களிடம் இந்தக் குணம் இன்னும் மோசமாகவே இருக்கும். தனது சகிப்புத்தன்மை இன்மையை ரொம்பவே நியாயப்படுத்திப் பேசுவார்கள்.

இவர்களுக்கு இந்தக் குணம் சிறுவயது முதல் வளர்ந்திருக்கும். அது அவர்களுக்குள் ஊறி ஊறி, திருமணத்துக்குப் பிறகு துணையிடம் அந்தக் குணத்தைக் காட்ட வைக்கும். ஒரு கட்டத்தில் சகிப்புத்தன்மை இன்மை என்பதே அவர்களது இயல்பு மாதிரி மாறிவிடும். சகிப்புத்தன்மை இன்மை என்கிற இந்த இயல்பானது எல்லா இடங்களிலும் எல்லாரிடத்திலும் வெளிப்படுமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். அலுவலகத்தில் தனது மேலதிகாரியிடமோ, பக்கத்து வீட்டுக்காரரிடமோ காட்டத் தோன்றாது. சகிப்புத்தன்மை இன்மையை யாரிடம் காட்ட வேண்டும் எனத் தெரிந்து வைத்திருப்பார்கள்.

‘நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு...’ என சொல்லிக் கொண்டு, மோசமாகவே நடந்து கொள்வார்கள். மற்றவரின் உள் நோக்கங்களை எப்போதும் தவறாகவே புரிந்து கொள்வதும், தான் ரொம்பவே விசேஷமானவர் என்கிற நினைப்பில் வலம் வருவதும் இவர்களுக்குக் கை வந்த கலை. தம்மைப் பற்றிய சுயமதிப்பீடு குறைவாக உள்ளதன் வெளிப்பாடுதான் இவை அனைத்தும். சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய இழப்புகள் ஏற்படும். அவர்களுக்கு சாதனைகள் எதுவும் சாத்தியமாகாது. எப்படிப்பட்ட விஷயத்தையும் பார்த்துப் பாராட்டவோ, வியக்கவோ, சந்தோஷப்படவோ மாட்டார்கள். துணை செய்கிற அசாதாரண விஷயங்களைக் கூட, எல்லோராலும் செய்யப்படக்கூடிய இயல்பான, எளிதான விஷயமாகப் பார்ப்பதும், அதிலும் குறைகள் கண்டுபிடித்து பெரிதாக்குவதுமாக நடந்து கொள்வார்கள்.

கணவன்-மனைவிக்கிடையே சகிப்புத்தன்மை இல்லாமல் போகிறபோது, அது அவர்களது உறவுக்குள் பெரிய பிளவுக்குக் காரணமாகிறது.  ‘எனக்கென எல்லா விஷயங்களிலும் ஒரு கருத்து இருக்கிறது. அவற்றை நீ ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான் எரிச்சலடைவேன்... கஷ்டப்படுவேன்... வருத்தப்படுவேன்...’ என்று சொல்லாமல் சொல்வதே சகிப்புத்தன்மையின்மையில் மறைந்திருக்கிற உள்நோக்கம். காதலித்தோ, காதல் இல்லாமலோ கல்யாணம் செய்கிற தம்பதியரில், இருவரில் ஒருவர், குறிப்பாக பெண், ஆணைவிட புத்திசாலியாக இருப்பதை துணையால் அத்தனை எளிதில் ஜீரணித்துக் கொள்ள முடியாது. யாருடைய கை ஓங்கியிருக்கிறது, யார் தலைவர் என்கிற கேள்வி இருவருக்குள்ளும் எழும். தம்பதிக்குள் இப்படியொரு கேள்வியே அனாவசியமானது.

இருவரும் ஒருவருக்கொருவர் இணை. ஒருவர் ஒரு விஷயத்திலும் மற்றவர் வேறொரு விஷயத்திலும் சிறந்து விளங்குவது தவறில்லை என்கிற எண்ணம் வேண்டும். அதிகாரத்தைத் தன் கையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை, உண்மையில் அப்படியொரு அதிகாரமே அவசியமில்லை என்பதை இருவரும் உணர வேண்டும். கணவன் - மனைவிக்குள் இருக்க வேண்டியது பகிர்தல்தானே தவிர, ஆதிக்கமோ, அதிகாரமோ அல்ல. நல்ல திருமண வாழ்க்கைக்கு நம்பர் ஒன் இடத்துக்கான போட்டியோ, ஆசையோ அவசியமுமில்லை.

சரி... இந்தப் பிரச்னைக்கான சாவி எது?
 

வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கிற ஒவ்வொரு விஷயத்தையும் ஒரு பாடமாகப் பார்க்கப் பழக வேண்டும்.

சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் எந்த விஷயத்தையும் பிரச்னையாகவே பார்க்கிறார்கள். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்கிறவர்களுக்கு எது நடந்தாலும் அது ஒரு அனுபவம்.

சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ள விரும்புவோர், தம்மை ஒரு குழந்தையாகக் கற்பனை செய்து கொள்ள வேண்டும். குழந்தை எல்லா விஷயங்களையும் ஆச்சரியத்துடனும், ஆர்வத்துடனுமே எதிர்கொள்ளும். சளைக்காமல் வியப்படையும். உற்சாகம் கொள்ளும். வயதாக, ஆக நாம் அந்த குணத்திலிருந்து வெளியே வந்து விடுகிறோம். மீண்டும் குழந்தை மனநிலைக்கு மாறுவது சகிப்புத்தன்மையை வளர்க்கும்.

வாழ்க்கையில் கிடைக்காத விஷயங்களுக்கு ஏங்கித் தவிப்பதைத் தவிர்த்து, கிடைத்த விஷயங்களுக்கு நன்றியுடன் இருக்கப் பழக வேண்டும்.

குடும்பம் என்பதை சகித்துக் கொள்ள முடியாத சுமையாக நினைக்காமல், சந்தோஷமான அனுபவம் என்கிற மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


(வாழ்வோம்!)

படம்: மது இந்தியா போட்டோகிராபி