ரத்தத்தை உற்பத்தி செய்யும் அன்னாசி பழம்
அன்னாசி பழம்: இப்பழம் ரத்தத்தை சுத்திகரிக்கும். குடல் புண் குணமாகும். புதிய ரத்தத்தையும் உற்பத்தி செய்கிறது.
புடலங்காய் : புடலங்காய் தொடர்ந்து சாப்பிட்டால் கண் பார்வை கூர்மையாகும். கண்ணுக்கு குளிர்ச்சியை தரும்.
அத்திக்காய்: உடற்சூட்டை தணிக்கும், பித்தத்தை போக்கும். பல்லில் தோன்றும் பூச்சிகளை அழிக்கும்.
கருணைக்கிழங்கு: எல்லா வித மூல நோய்களையும் கட்டுப்படுத்தும். சூடு தணியும்.
அவரைக்காய்: இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாய் நாற்றம் போக்கும். ஜீரண சக்தியை அளிக்கும்.
ஆப்பிள்: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் தேகம் சிவப்பாகவும், மினுமினுப்பாகவும் மெருகேறும். உடல் வலுபெறும்.
கேரட் சிறப்பம்சங்கள்
* கேரட் அதிகமாக சாப்பிட்டால் வைட்டமின் ஏ கிடைக்கும்.
* வாழ்நாள் முழுவதும் கண்களுக்கு கண்ணாடி போடாமல் இருக்க கேரட் அதிகமாக சாப்பிடவேண்டும்.
* வயிற்றில் அமிலம் காரணமாக புளியேப்பம், பசி மந்தம் ஏற்பட்டால் கேரட்டை துருவி பச்சடி செய்து சாப்பிடலாம்.
* உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கேரட்டிற்கு உண்டு.
* தொற்று நோய் நமக்கு வராமல் தடுக்கிறது.
* சிறுநீர் சம்பந்தமான கோளாறுகளை சரிப்படுத்தும் சக்தி கேரட்டிற்கு உள்ளது.
No comments:
Post a Comment