Friday, June 29, 2018

மல்லிகைப்பூ இட்லி செய்வது எப்படி?

மல்லிகைப்பூ இட்லி செய்வது எப்படி?

‘‘மேற்புறத்தில் பூப்போல உரிந்து, வெள்ளை வெளேரென்று இருக்கும் மல்லிகைப்பூ இட்லி களை (குஷ்பூ இட்லி) பார்த்தாலே ஆசையாக இருக்கிறது. ஆனால், ஓட்டல்களில் பரிமாறப்படுவதுபோல் வீட்டில் செய்ய வரவில்லையே... அந்தப் பக்குவத்தை சொல்வீர்களா?’’ ‘‘மல்லிகைப்பூ இட்லிக்கான முயற்சியை, நீங்கள் அரிசி வாங்கு வதில் இருந்தே தொடங்கவேண்டும். புழுங்கலரிசி வாங்கும்போது, ஐ.ஆர்.20. ரக அரிசியைக் கேட்டு வாங்குங்கள். உளுத்தம்பருப்பில் ‘ஜாங்கிரி பருப்பு’ ரகம் என்று வாங்கவேண்டும். அரிசி 4 பங்கு; உளுத்தம்பருப்பு 1 பங்கு என்பதுதான் இட்லிக்கான சரியான அளவு. இரண்டையும் கழுவி, தனித்தனியே நல்ல தண்ணீரில் ஊறவையுங்கள். முதலில் அரிசியையும், பிறகு உளுந்தையும் தனித்தனியே அரைத்துக் கொள்ளுங்கள். உளுந்தை நன்கு தண்ணீர் தெளித்து, தெளித்து பொங்கப் பொங்க அரைக்க வேண்டும். பிறகு, இரண்டு மாவையும் கலந்து, உப்புப் போட்டு, வலதுகையின் ஐந்து விரலையும் நன்கு பிரிந்திருக்குமாறு வைத்து, மாவுக்குள் விட்டு, மாவை நன்கு அடித்துக் கலந்து வையுங்கள். தூக்கி ஊற்றினால், ஊற்றும்பதத்தில் மாவு இருப்பது சரியான பதம். அடுத்து, மாவை 6&லிருந்து 8 மணி நேரம் வரை புளிக்க விடுங்கள். புளித்தபின், இட்லிகளாக தட்டில் ஊற்ற வேண்டியதுதான்! குக்கர் தட்டு எனில், ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை விட, அலுமினியம் தட்டு சிறந்தது. அதில் எண்ணெயெல்லாம் தடவத் தேவையில்லை. முடிந்தால், துணி போட்டு ஊற்றலாம். இல்லையென்றாலும் அப்படியே குழியில் ஊற்றி வெந்ததும் ஒரு சிறு அன்னக் கரண்டியால் எடுக்க, இட்லி, பூப்போல அழகாக வரும். குக்கர் தட்டு இல்லாதவர்கள், சாதாரண இட்லி தட்டில் துணி போட்டும் ஊற்றி, எடுக்கலாம். டிப்ஸ்: ஒரு சிலர் புளித்த பிறகு கரண்டிவிட்டு மாவைக் கிளறுவார்கள். அப்படிச் செய்யவே கூடாது. மேலாக, கரண்டியால் மாவை எடுத்து ஊற்ற வேண்டும். மாவு நீர்த்துவிட்டாலோ, உளுந்து சற்று அதிகமாகி விட்டாலோ, அரை கப் ரவையை சேர்த்துக் கரைத்துக் கொள்ளுங்கள்


காலிஃபிளவர் தக்காளி சாப்ஸ்..

#காலிஃபிளவர் தக்காளி சாப்ஸ்...

தேவையான பொருட்கள்
காலிஃபிளவர்                 -      2 கப்,
துருவிய தக்காளி            -      2 கப் (விழுதாக்கிக் கொள்ளவும்),
வெங்காயம்                   -      2 கப் (பொடியாக நறுக்கியது),
இஞ்சி, பூண்டு விழுது        -      2 டேபிள்ஸ்பூன்,
கரம் மசாலா                 -      1 டீஸ்பூன்,
உப்பு                           -      தேவையான அளவு,
மஞ்சள் தூள்                -      1 டீஸ்பூன்,
மிளகாய் தூள்               -      2 டீஸ்பூன்,
தனியா தூள்                -      2 டீஸ்பூன்,
கசகசா விழுது             -      2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய்                 -      1/4 கப்,
சீரகம்                       -      2 டீஸ்பூன்.

செய்முறை:
*காலிஃபிளவரை வெந்நீரில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
*அடுப்பில் எண்ணெய் காய வைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*பின் இஞ்சி, பூண்டு விழுது, கச கசா விழுது மற்ற தூள் வகைளை சேர்த்து வதக்கி தக்காளி விழுதும் உப்பும் சேர்க்கவும்.
*கொதிக்கும் போது காலிஃபிளவரையும் சேர்த்து கலந்து 10 நிமிடம் சிம்மில் மூடி வைக்கவும்.
*நன்றாகக் கிளறிவிடவும். தேவைப்பட்டால் 1 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொதிக்கும் போது கீழே இறக்கி பரிமாறவும்.
இப்போது சுவையான காலிஃபிளவர்  தக்காளி சாப்ஸ்  ரெடி.!!!!!

Engr Sulthan


Land information

Information


Wednesday, June 27, 2018

பெருங்குடலை_சுத்தம்

#பெருங்குடலை_சுத்தம் #செய்ய_சில_இயற்கை #வழிமுறைகள்!!!!

வாயில் தொடங்கி ஆசனவாய் வரை உள்ள நம் செரிமான மண்டலத்தின் கடைசிப் பகுதி… பெருங்குடல். இந்தப் பெருங்குடல் சுமார் ஐந்து அடி நீளமும் இரண்டரை இன்ச் சுற்றளவும் கொண்டது. இதன் முக்கியப் பணி, உணவு செரிமானத்துக்குப் பிறகு ஏற்படும் கழிவுகளை வெளியேற்றுவதும் நீர் இழப்பைத் தவிர்ப்பதும்தான்.

பெருங்குடலில் நன்மை தரும் #பாக்டீரியா வசிக்கிறது. இந்த பாக்டீரியா
வைட்டமின் கே மற்றும் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களின் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது.

சில நேரத்தில் பெருங்குடலிலேயே கழிவுகள் தங்கிவிடலாம். அது நாம் சாப்பிட்ட உணவின் #எச்சம்,
#இறந்த_செல்_திசு, வயிற்றில் #சுரக்கும்_சளி போன்ற திரவம், #ஒட்டுண்ணியாகவும் இருக்கலாம். இப்படி தங்கும் கழிவுகளால் நமக்குப் பிரச்னைதான்.

கழிவுகள் என்றாலே #விஷம்தான். இப்படி தங்கிவிட்ட #நஞ்சானது மீண்டும் ரத்தத்தில் கலந்து, நல்ல பாக்டீரியாவைப் பாதித்து ஊட்டச்சத்து உற்பத்தியைத் தடுத்துவிடும். மேலும், செரிமான மண்டலத்தின் செயல்திறனையே பாதித்து மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

#ஒருவருக்கு_இப்படி_கழிவு #தங்கினால்……

தலைவலி,

முதுகுவலி,

மலச்சிக்கல்,

சோர்வு,

வாயில் கெட்டவாடை,

உடலில் துர்நாற்றம்,

எரிச்சல்,

குழப்பமான மனநிலை,

தோல் பிரச்னைகள்,

வாயுத்தொல்லை,

வயிற்றுப்போக்கு,

இரத்தம் கலந்த வயிற்றுபோக்கு

இடுப்புவலி

போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். இதனால் பெருங்குடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.

#நீர்

பெருங்குடல் சுத்தம், நீங்கள் செய்ய சிறந்த வழி நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அது இயற்கையான முறையில் உடலில் இருந்து தீங்கு செய்யும் நச்சுகளையும் மற்றும் கழிவுகளையும் வெளியே தள்ளி விடுகிறது.

#ஆப்பிள்_சாறு

புதிதாக எடுக்கப்பட்ட ஆப்பிள் சாறு பருங்குடலை சுத்தம் செய்யும் ஒரு சிறந்த இயற்கை வழியாகும். இந்த சாற்றை தொடர்ந்து குடித்து வரும்போது கல்லீரல் மற்றும் செரிமானத்தையும் சுத்தம் செய்கிறது. அப்படி தேர்ந்தெடுக்கும் ஆப்பிள் சாறு புதிதாகவும், ஆர்கானிக் ஆப்பிளை தேர்வு செய்வது சிறந்தது. ஆப்பிள் சாறு குடித்த 30 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு குவளையில் குடிக்க நீர் குடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் பலன் கிடைக்கும்.

#எலுமிச்சைசாறு

எலுமிச்சை ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்த வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் செரிமானத்துக்கு நல்லது. எனவே, எலுமிச்சை சாறு பெருங்குடல் சுத்தம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. எலுமிச்சை சாற்றோடு, கடல் உப்பு ஒரு சிட்டிகை மற்றும் தண்ணீர் கொஞ்சம் தேன் கலந்து. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பயன்பெறமுடியும்.

#பச்ச_காய்கறி__சாறு

புதிய காய்கறி சாறு பல முறை குடிக்க அதாவது பச்சை காய்கறிகள் சாற்றை, குறிப்பதால் நச்சுகளை நீக்க உதவுகிறது. ரெடிமேட் ஜூஸ் குடிப்பதை காட்டிலும் நாம் செய்ய கூடிய சாறு ஆரோக்கியமானதாக இருக்கும்.

#நார்_சத்து_அதிகமுள்ள #உணவுகள்

நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணுவதால் தீங்கு செய்யும் நச்சுகளை பெருங்குடலில் இருந்து சுத்தப்படுத்துவதோடு கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. இது குடல் இயக்கம், மேம்படுத்த உதவுகிறது. அதே நேரத்தில், நார் அதிகமுள்ள உணவுகளை உணவுக்குழாய் எந்த பிரச்சினையின்றி சத்துக்களை பெற உதவும்.

நார் சத்துக்கள் நிறைந்த உணவுகளான பட்டாணி, ப்ரோக்கோலி, ஆப்பிள், புதிய காய்கறிகள், புதிய பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உணவில் நார்ச்சத்து நிறைய சேர்க்க முடியும். தானியங்கள், முழு தானியங்கள், கொட்டைகள், பீன்ஸ் மற்றும் விதைகள் ஆகியவை அதிக அலவு நார் சத்துக்களை கொண்டிருக்கும்.

#தயிர்

தயிர் அஜீரணம், வாய்வு பிரச்சனை, ஒழுங்கற்ற குடல் இயக்கங்கள் மற்றும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்கும் ஆரோக்கியமான புரோபயாடிக் உணவாகும்.


கத்தரி வளர்ப்பு

https://agriculturetrip.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-brinjal-or-egg-plant/

https://agriculturetrip.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் கத்தரிக்காய் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
Grow bags அல்லது Thotti
அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
நாற்றுகள் அல்லது விதைகள்
சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி அல்லது பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்

இதற்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.

விதைத்தல்

நன்கு முற்றிய கத்தரியில் விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு காய்ந்த விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். 25 முதல் 30 நாட்கள் ஆன நாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும்.

நாற்றுகளாக இருந்தால் அப்படியே நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.

பாதுகாப்பு முறைகள்

வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது. நாற்றுகளை நட்டவுடன் அதன் அருகில் சிறிய கம்பு ஒன்றினை ஊன்றிவிட வேண்டும். செடி வளர்ந்ததும் கம்புடன் சேர்த்து கட்டிவிட வேண்டும். அப்பொழுது தான் காய்க்கும் பொழுது பாரம் தாங்காமல் செடி சாயாமல் இருக்கும். இலைகளை நுனிக் கிளையுடன் கவாத்து செய்து, பின் வேருக்கு மண்புழு உரத்துடன் பஞ்சகாவ்யா அளிக்க வேண்டும். முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் நீக்கினால் நோய் தாக்குதல் இருக்காது.

அறுவடை

காய்களை முற்றி விடாமல் இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்:
கத்தரிக்காயில் மக்னிசியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி3 , வைட்டமின் பி6 , தாதுஉப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல்பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று.
வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.
அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் காணப்படும் தாதுக்கள் நோய்எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.

++++++++++++++++++++++++++++

கத்தரிக்காய் தென்னிந்தியப் பகுதியைப் பூர்விகமாக கொண்டது. கருநீலம், இளம்பச்சை நிறங்களில் கத்தரிக்காய் விளைகிறது. உருண்டை, நீல் உருண்டை வடிவங்களில் காய்கள் உற்பத்தியாகின்றன. சில வகை கத்தரிகாய்களில் சிறிதளவு கசப்பு இருக்கும். கத்தரிக்காயின் தோல், சதைப்பகுதி, விதைப்பகுதி என் முற்றாத அனைத்து பகுதிகளுமே உண்ணப் பயன்படுகின்றன.

ரகங்கள்:
கோ.1 , கோ.2 , MTU 1 , PKM 1 , PLR 1 , KKM 1 , அர்கா நவனீத், அர்கா கேசவ், அர்கா ஆனந்த் ஆகிய ரகங்கள் அன்றாட காய் உற்பத்திக்கு பயிரிடப்படும் ரகங்கள் ஆகும்.

பயிரிடும் முறை:
மே – ஜூன், டிசம்பர் – ஜனவரி ஆகிய பருவங்கள் கத்தரிக்காய் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற காலங்கள் ஆகும், இக்காலங்களில் பயிரிடும்போது நாம் நல்ல மகசூலை பெறலாம்.
செம்மண் மற்றும் வண்டல் மண் கத்தரிக்காய் சாகுபடிக்கு சிறந்த மண் ஆகும்.
ஒரு ஹெக்டர்க்கு 400 கிராம் விதைகள் தேவைப்படும்.
நிலத்தை நன்கு உழுது தேவையான அளவுக்கு பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் 10 செ.மீ இடைவெளிகளில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போடு அதில் விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும். விதைத்த பின்பு மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.
நடவு வயலை நன்கு உழுது அதில் 15 டன் தொழு உரம் போட்டு தயார்படுத்த வேண்டும்.
நடவு வயலில் பாத்திகளை போட்டு அதில் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 25 முதல் 30 நாட்களான நாற்றை நடவேண்டும்.
நடவு செய்த மூன்றாம் நாள் நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 7 நாட்களுக்கொருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்:
நாற்றுகளை நடுவதற்கு முன்பு களை கொல்லி மருந்தை தூவ வேண்டும், இது அதிக அளவில் களைகள் வராமல் தடுக்கும். பின்பு நன்கு வேர் பற்றியவுடன் களை இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
பாதிக்கப்பட்ட வேர் அல்லது காய்களை கிள்ளி எறிந்துவிட வேண்டும். இதனால் மற்ற காய்கள் பாதிப்பிலிருந்து தடுக்கலாம். அதிக அளவு பாதிக்கப்பட்டால் 50 மில்லி வேப்பங்கொட்டைச்சாறை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
நடவு செய்த இரண்டு மாதங்களில் அறுவடை ஆரம்பிக்கும். காய்களை பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். 4 – 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.
Brinjal-Egg Plant
Brinjal-Egg Plant cultivation
பயன்கள்:
கத்தரிக்காயில் மக்னிசியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி3 , வைட்டமின் பி6 , தாதுஉப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல்பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று.
வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.
அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் காணப்படும் தாதுக்கள் நோய்எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.


Tuesday, June 26, 2018

திரிபலா தரும் நன்மைகள்

திரிபலா தரும் நன்மைகள்...

திரிபலா பொடியை இரவில் சாப்பிட்டால், நன்மைகள் ஏராளமாகக் கிடைக்கும். அதை மனதில்கொள்ளவும்.

* முதுமையைத் தாமதப்படுத்தி, இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.

* இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதயநோய்கள் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

* உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது. செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது. உடலில் உள்ள நச்சுப்பொருட்களை நீக்கும். சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

* வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களையும், வளைப்புழுக்களையும் (Ring worms) வெளியேற்ற உதவுகிறது. மேலும், வயிற்றில் பூச்சி வளர்தல் மற்றும் தொற்றுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

* வயிற்றுப்புண்ணை ஆற்றும். அல்சரை கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. ரத்தசோகையை சரிசெய்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

* கணையத்தில், இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் குளூகோஸின் அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது. திரிபலாவில் உள்ள கசப்புச் சுவை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

* உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சீரான உடல் எடையைப் பெற உதவும். உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.

* ரத்தத்தில் உள்ள நச்சுப்பொருட்களை சுத்திகரிக்கும். ரத்தத்தைச் சுத்தம் செய்யும். தோல் நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் வராமல் சருமத்தைக் காக்கும். சருமத்தைப் பளபளப்பாக்கும்.

* மூச்சுக்குழாயில் உள்ள அடைப்பை நீக்கி, சீரான சுவாசத்தை ஏற்படுத்தும். சைனஸ் நோயைத் தீர்க்கும். சுவாசப் பாதையில் உள்ள சளியைப் போக்க உதவும்.

* உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும். வளர்ச்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலியைக் குணப்படுத்தும். கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.

எப்போது, எப்படிச் சாப்பிட வேண்டும்?

* கடுக்காய் ஒரு பங்கு, நெல்லிக்காய் நான்கு பங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு எடுத்துக்கொள்ளவும். அவற்றை நிழலில் நன்றாக உலர்த்தவும். பின்னர், அரைத்துப் பொடியாக்கவும். இதை வீட்டில் தயாரிக்க முடியாதவர், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய திரிபலா பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

* மழைக் காலங்களில் திரிபலாப் பொடியை சுடுதண்ணீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

* குளிர் காலங்களில் திரிபலாப் பொடியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வாய்ப்புண் மற்றும் வெடிப்பை சரி செய்யும்.

* பனிக்காலங்களில் தேன் மற்றும் திரிபலாப் பொடியை சேர்த்து சாப்பிட வேண்டும்.

* கோடை காலத்தில் திரிபலாப் பொடியை நீருடன் கலந்து சாப்பிட வேண்டும்.


திரிபலா_என்றால் #என்ன?

#திரிபலா_என்றால் #என்ன?

#திரிபலா_என்பது #பாரம்பரிய #ஆயுர்வேத_மருந்து.

இது ஒரு ரசாயனமாகவும், காயகல்பமாகவும் கருதப்படுகிறது. மூன்று மூலிகைகள் சேர்ந்த கூட்டுப்பொருள் தான் திரிபலா. அம்மூன்று மூலிகைகளாவன நெல்லிக்காய் (Emblica officinalis),கடுக்காய் (Terminalia chebula) மற்றும் தான்றிக்காய் (Terminalia belerica) ஆகும்.

★★திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?

திரிபலா என்பது அற்புதமான ஆயுர்வேத மருத்துவத் தயாரிப்பு ஆகும். ஆயுர்வேத மருத்துவர்களால், உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும்.

நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.

#நோய்_எதிர்ப்புச் #சக்தி

ஆயுர்வேதத்தில் திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்
பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள்.
இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது.

ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் '#ஆன்டிபாடி'
(antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.

#ஆன்டி-ஆக்ஸிடன்ட்

உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான "கட்டற்ற காரணிகளை"
(free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோ
காண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.

#செரிமானமின்மை

செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது.

உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை
(pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.

#மலச்சிக்கல்

திரிபலா ஒரு
சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது.

மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும்.

உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.

#வயிற்றுப் #பூச்சிகளும் #தொற்றுகளும்

வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்
களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.

#இரத்தசோகை

இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).

#சர்க்கரை_நோய்

திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் #லாங்கர்ஹான் திட்டுக்கள் (#langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும்.

மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.

#உடல்பருமன்

இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்த
ப்படுகிறது.

#சருமப் #பிரச்சனைகள்

இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.

#சுவாசக் #கோளாறுகள்

சுவாசப் பாதையிலுள்ள அடைப்புகளை நீக்கி சீரான சுவாசம் ஏற்பட பெரிதும் உதவுகிறது. சைனஸ் என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாகவும் இது செயல்படுகிறது. மேலும் நமது சுவாசப்பாதை
யிலுள்ள சளியில் பாக்டீரியாக்கள் வளராமலும் இது தடுக்கிறது.

#தலைவலி

தலைவலிக்கு நிவாரணமாகவும் திரிபலா பயன்படுகிறது. குறிப்பாக வளர்சிதை மாற்றத்தின் இடையூறுகளால் உண்டாகும் தலைவலிக்கு சிறப்பான நிவாரணத்தை அளிக்கிறது.

#புற்றுநோய்

புதுடில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட சமீபத்திய ஆய்வுகளின் படி, திரிபலாவுக்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறன் இருப்பது கண்டுபிடிக்கப்
பட்டுள்ளது.

புற்றுநோய் செல்களில் மைட்டேடிக் நிலையில் ஸ்பிண்டில் வடிவத்தோற்றம் உண்டாவதைக் குறைக்க உதவி செய்கிறது. அதன்மூலம், புற்றுநோய் செல்களில் #மெடாஸ்டேடிஸ் (metastasis) வளரும் அபாயத்தையும் குறைக்கிறது.
அனைத்து
ஆயுர்வேத ,
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.  மாத்திரை வடிவிலும் உள்ளது

தயாரிக்கும் முறை

#கடுக்காய்  மற்றும்
#தான்றிக்காய் வாங்கி வந்து கொட்டையை நீக்கி தோலை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
நாட்டு மருந்து கடையி்ல்
#நெல்லிவற்றல் கிடைக்கும்.
இந்த மூன்றையும் சம அளவு எடுத்து பொடித்து  சலித்து பத்திரப்படுத்தவும்.
திரிபலா சூரணம் தயார் இந்த சூரணம் தான் உயர்ந்தது.
இல்லாவிட்டால்
நாட்டு மருந்துவ நிறுவனங்கள் தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்தலாம்.
ஆனால் பலனை முழுமையாக எதிர் பார்க்க முடியாது.
காலை இரவு சாப்பாட்டுக்கு பின்பு எடுத்துக்கெள்ளலாம்.