Wednesday, June 27, 2018

கத்தரி வளர்ப்பு

https://agriculturetrip.com/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-brinjal-or-egg-plant/

https://agriculturetrip.com/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் கத்தரிக்காய் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்
Grow bags அல்லது Thotti
அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
நாற்றுகள் அல்லது விதைகள்
சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி அல்லது பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்

இதற்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது. அதனால் பிளாஸ்டிக், மண்பானை, உலோகம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.

இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண் கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 7-10 நாட்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.

விதைத்தல்

நன்கு முற்றிய கத்தரியில் விதைகளை பிரித்து சாம்பல்/மண் கலந்து காய வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு காய்ந்த விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். 25 முதல் 30 நாட்கள் ஆன நாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும்.

நாற்றுகளாக இருந்தால் அப்படியே நடவு செய்ய வேண்டும்.

நீர் நிர்வாகம்

நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

உரங்கள்

செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.

மேலும் சமையலறை கழிவுகளை உரமாக இடலாம்.

பாதுகாப்பு முறைகள்

வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது. நாற்றுகளை நட்டவுடன் அதன் அருகில் சிறிய கம்பு ஒன்றினை ஊன்றிவிட வேண்டும். செடி வளர்ந்ததும் கம்புடன் சேர்த்து கட்டிவிட வேண்டும். அப்பொழுது தான் காய்க்கும் பொழுது பாரம் தாங்காமல் செடி சாயாமல் இருக்கும். இலைகளை நுனிக் கிளையுடன் கவாத்து செய்து, பின் வேருக்கு மண்புழு உரத்துடன் பஞ்சகாவ்யா அளிக்க வேண்டும். முற்றிய பெரு இலைகளையும், பழுத்த இலைகளையும் நீக்கினால் நோய் தாக்குதல் இருக்காது.

அறுவடை

காய்களை முற்றி விடாமல் இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.

பயன்கள்:
கத்தரிக்காயில் மக்னிசியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி3 , வைட்டமின் பி6 , தாதுஉப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல்பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று.
வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.
அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் காணப்படும் தாதுக்கள் நோய்எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.

++++++++++++++++++++++++++++

கத்தரிக்காய் தென்னிந்தியப் பகுதியைப் பூர்விகமாக கொண்டது. கருநீலம், இளம்பச்சை நிறங்களில் கத்தரிக்காய் விளைகிறது. உருண்டை, நீல் உருண்டை வடிவங்களில் காய்கள் உற்பத்தியாகின்றன. சில வகை கத்தரிகாய்களில் சிறிதளவு கசப்பு இருக்கும். கத்தரிக்காயின் தோல், சதைப்பகுதி, விதைப்பகுதி என் முற்றாத அனைத்து பகுதிகளுமே உண்ணப் பயன்படுகின்றன.

ரகங்கள்:
கோ.1 , கோ.2 , MTU 1 , PKM 1 , PLR 1 , KKM 1 , அர்கா நவனீத், அர்கா கேசவ், அர்கா ஆனந்த் ஆகிய ரகங்கள் அன்றாட காய் உற்பத்திக்கு பயிரிடப்படும் ரகங்கள் ஆகும்.

பயிரிடும் முறை:
மே – ஜூன், டிசம்பர் – ஜனவரி ஆகிய பருவங்கள் கத்தரிக்காய் உற்பத்தி செய்வதற்கு ஏற்ற காலங்கள் ஆகும், இக்காலங்களில் பயிரிடும்போது நாம் நல்ல மகசூலை பெறலாம்.
செம்மண் மற்றும் வண்டல் மண் கத்தரிக்காய் சாகுபடிக்கு சிறந்த மண் ஆகும்.
ஒரு ஹெக்டர்க்கு 400 கிராம் விதைகள் தேவைப்படும்.
நிலத்தை நன்கு உழுது தேவையான அளவுக்கு பாத்திகள் அமைத்துக் கொள்ள வேண்டும். பாத்திகளில் 10 செ.மீ இடைவெளிகளில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போடு அதில் விதைகளைப் பரவலாகத் தூவ வேண்டும். விதைத்த பின்பு மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்ச வேண்டும்.
நடவு வயலை நன்கு உழுது அதில் 15 டன் தொழு உரம் போட்டு தயார்படுத்த வேண்டும்.
நடவு வயலில் பாத்திகளை போட்டு அதில் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு 25 முதல் 30 நாட்களான நாற்றை நடவேண்டும்.
நடவு செய்த மூன்றாம் நாள் நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 7 நாட்களுக்கொருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்:
நாற்றுகளை நடுவதற்கு முன்பு களை கொல்லி மருந்தை தூவ வேண்டும், இது அதிக அளவில் களைகள் வராமல் தடுக்கும். பின்பு நன்கு வேர் பற்றியவுடன் களை இருந்தால் அவற்றை நீக்கிவிட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.
பாதிக்கப்பட்ட வேர் அல்லது காய்களை கிள்ளி எறிந்துவிட வேண்டும். இதனால் மற்ற காய்கள் பாதிப்பிலிருந்து தடுக்கலாம். அதிக அளவு பாதிக்கப்பட்டால் 50 மில்லி வேப்பங்கொட்டைச்சாறை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
நடவு செய்த இரண்டு மாதங்களில் அறுவடை ஆரம்பிக்கும். காய்களை பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்ய வேண்டும். 4 – 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்.
Brinjal-Egg Plant
Brinjal-Egg Plant cultivation
பயன்கள்:
கத்தரிக்காயில் மக்னிசியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் பி3 , வைட்டமின் பி6 , தாதுஉப்புக்கள் நிறைந்து காணப்படுகிறது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, பித்தம், மலச்சிக்கல், உடல்பருமன் முதலியவற்றை குணப்படுத்தும் காய்கறிகளில் கத்தரிக்காயும் ஒன்று.
வைட்டமின் சி குறைவாக இருப்பதால், அது ஒரு சிறந்த வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பானாக செயல்படுகிறது.
அடர்நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் காணப்படும் தாதுக்கள் நோய்எதிர்ப்பு சக்தியாக விளங்குகிறது.


No comments:

Post a Comment