Saturday, March 30, 2019

நாட்டுக்கோழியா ப்ராய்லர் கோழியா??

நாட்டுக்கோழியா ப்ராய்லர் கோழியா???

எது சிறந்தது ???

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

நாட்டுக்கோழி என்றால் என்ன??

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் ,ப்ராய்லர் யுகம் ஆரம்பிக்கும் முன்பு, வீடுகளில் கோழிகள் வளர்க்கப்படும் . அவை நாம் கொடுக்கும் தானியங்கள், மற்றும் மேய்ந்து கிட்டும் புழுக்கள் போன்றவற்றை உண்டு வாழும்.

நல்ல நாள் பெரிய நாள்களுக்கு அவற்றை அறுத்து உண்போம்.
அவைகளை நாட்டுக்கோழி என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் அவை free range country chicks என்று அழைக்கிறோம்.

---

ப்ராய்லர் கோழிகள் என்றால் என்ன??

உலகத்தின் ஜனத்தொகை மிக வேகத்தில் பல்கிப்பெருகிக்கொண்டே செல்லும் போது அதற்கு ஈடான வேகத்தில் நாம் உணவுகளையும் உற்பத்தி செய்தாக வேண்டிய சூழல் உருவாகிற்று.

நமது இந்தியாவின் 1970 ஜனத்தொகை 58 கோடிகள்
அடுத்த 50 ஆண்டுகள் கூட ஆகவில்லை , நமது ஜனத்தொகை இருமடங்கு பெருகி தற்போது 120 கோடி என்ற அளவில் இருக்கிறது.

மேலும் மனிதர்களே புறாக்கூண்டு போன்ற வீடுகளில் வாழப்பழகி விட்டதால், கோழிகளை ஃப்ரீ ரேஞ்சாக வளர்க்க இடமுமில்லை ஆட்களுமில்லை.

எனவே, நன்றாக வளரும் கோழியினங்களில் இருந்து ஹைப்ரிட் வெரைட்டியாக உருவாக்கப்பட்டதே ப்ராய்லர் கோழியினம்.

இவ்வகை கோழிகள் , கூட்டமாக பண்ணைகளில் அடைக்கப்பட்டு உணவாக ப்ராட்டீன் கால்சியம் கலந்த தீவணங்கள் கொடுக்கப்பட்டு கொழு கொழுவென வளர்க்கப்படுகின்றன.

சுமார் 6 முதல் 8 வாரங்களில் இந்த கோழியினம் முழு வளர்ச்சி அடைந்து அறுபட தயாராகின்றது.

---

இப்படி செய்வது நல்லதா??
இந்த கறி மனிதனுக்கு நன்மையா தீமையா??

நமது ஜனத்தொகை பசி பட்டினி என்று மாண்டு போவதற்கு மாற்றாக அறிவியலைக் கொண்டு சில மாற்றங்கள் செய்வதில் தவறில்லை.

தானியங்களிலும் காய்கறி கனி வகைகளிலும் ஹைப்ரிட் வகைகள் இதே காரணத்திற்காக தான் வந்தன.

பாலின் கொள்முதலைக் கூட்ட பசுக்களுக்கு இடையே கலப்பினம் தோன்றியதும் இதனால் தான்.

மரபணுக்களில் மாற்றங்களை புகுத்துகையில் அது பல்வேறு நல்ல விசயங்களையும் தீமைகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது.

ஆனால் நாம் நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப்பார்த்து ஆய்வு செய்ய வேண்டும்.

ப்ராய்லர் கோழி என்பது ஒருவகை கலப்பினம் தான் .
அந்த கறி நமக்கு தீமை விளைவிப்பதில்லை.

---

ப்ராய்லர் கோழி நன்றாக வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜென் ஊசி போடப்படுகிறதா???

அது ஒரு கட்டுக்கதை

ப்ராய்லர் கோழியோ பண்ணை நாட்டுக்கோழியோ அவை யாவும் பண்ணைகளில் மிக சிறிய இடத்தில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

ஒரு கோழிக்கு சீக்கு வந்தால் மற்ற கோழிகளுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது . ஆகவே கோழிகளுக்கு ஆண்டிபயாடிக்குகள் ஊசிகளாக போடப்படுகின்றன. ஆனால் இது மனிதனுக்கு பிரச்சனை ஏற்படுத்துவதில்லை.

கோழி கறியை சமைத்து உண்பதால் நமக்கு அதன் பாதிப்பு இருப்பதில்லை.

ஈஸ்ட்ரோஜென் ஊசிகள் என்பது ஏன் கட்டுக்கதை என்கிறேன் என்றால்.. அத்தனை கோழிகளுக்கும் ஈஸ்ட்ரோஜென் ஊசி போட்டால் வரும் செலவு அந்த கோழிகளை விற்றால் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாகும்.

மேலும், வெறும் ஈஸ்ட்ரோஜென் போட்டால் உடல் குண்டாகாது.. கூட இன்சுலின் போட வேண்டும் . அது மட்டும் பத்தாது.. உடல் ஏற கடினமான பயிற்சி செய்ய வேண்டும்.

பண்ணைகளில் அடைத்து வளர்க்கப்படும் கோழிகள் என்ன உடற்பயிற்சி செய்கின்றன??

மனித இனத்தில் ஆணழகன் போட்டிகளில் பங்குபெறும் வீரர்கள்
யாவரும் இன்சுலின் ஊசி போட்டு உடல் பயிற்சி செய்து தான் உடலை ஏற்றுகின்றனர். ஈஸ்ட்ரோஜென் போட்டு அல்ல.

ஆகவே, ஈஸ்ட்ரோஜென் ஊசி என்பது பொய் கதை.

---

இப்போது கிடைக்கும் நாட்டுக்கோழிகள் ஃப்ரீ ரேஞ்ச் நாட்டுக்கோழிகள் தானா??

இப்போது சந்தையில் கிடைக்கும் நாட்டுக்கோழிகள் பெரும்பான்மை ஃப்ரீ ரேஞ்ச் முறையில் வளர்க்கப்படுபவை அல்ல.
அவையும் பண்ணைகளில் வளர்க்கப்படுபவையே. ஆனால் , அவை ப்ராய்லர் கிடையாது. நமது நாட்டு வகை கோழி இனம்.

அவற்றையும் ப்ராய்லர் கோழிகள் போல பண்ணைகளில் அடைத்து தீவனம் போட்டு தான் வளர்க்கின்றனர்.
-----

ப்ராய்லர் தின்பதால் தான் பெண்கள் சீக்கிரம் வயசுக்கு வருகிறார்களாமே??

இல்லை. இதுவும் கட்டுக்கதை தான் .
நமக்கு முந்தைய தலைமுறையில் ஒரு பெண் பத்து குழந்தைகளை பெற்றெடுப்பார்.
வீட்டில் ஒருவர் சம்பாதித்து பனிரெண்டு பேர் உண்ண வேண்டும்.
ஆகவே சத்தான உணவுகள் அனைவருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

இப்போது, வீட்டில் தாய் தந்தை இருவரும் சம்பாதித்து, ஒரு குழந்தை இரு குழந்தை தான் இருப்பதால், சத்துள்ள உணவு கிடைக்கிறது. அதனால் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்துகின்றனர்

அடுத்த காரணம்..

அந்த காலத்தில் இத்தனை தீனிகடைகள் கிடையாது. குளிர்பானங்கள் , மெக்டொனால்டு, பர்கர், பாஸ்ட் புட் , சோயா கலந்த உணவுகள் எல்லாம் கிடையாது . அவற்றை முழுப்போடு போடுதால் தான் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்து கின்றனர்.

----

உண்ணச்சிறந்தது நாட்டுக்கோழியா ப்ராய்லர் கோழியா??

சிறந்தது வீட்டில் வளர்க்கப்பட்ட ஃப்ரீ ரேஞ்ச் நாட்டுக்கோழி தான்

ஆனால் எளிதாக உண்ணக்கிடைப்பது
ப்ராய்லர் கோழி தான்.

ப்ராய்லர் கோழிகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து சத்தான தீவணம் போட்டு நோய் வராமல் பாதுகாத்து வளர்ப்பதால் கொழுத்து வளர்கின்றன.

இத்தகைய வளர்ச்சி அந்த கோழிகளுக்குத் தான் பிரச்சனையே ஒழிய அதை கறியாக உண்ணும் நமக்கல்ல.

ஏனெனில் நமது உடல் , அதன் கறியை புரதமாகவும், கொழுப்பாகவும் தான் கிரகித்துக்கொள்கிறது.

பின்குறிப்பு

கோழியின் உள்ளே இருக்கும் குடல், கல்லீரல், போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ஃபைனல் பாய்ண்ட்

நாட்டுக்கோழி கிடைத்தால் அதை உண்ணுங்கள்
நாட்டுக்கோழி முட்டை கிடைக்கிறதா.. அது பெஸ்ட்

இல்லை.. ப்ராய்லர் கோழி மற்றும் முட்டை தான் நமக்கு கிடைக்கிறது.. அது தான் நமக்கு கட்டுப்படும் என்றால் தாராளமாக ப்ராய்லரையும் அதன் முட்டையையும் உண்ணுங்கள்
பிரச்சனையில்லை..

இனியும் பழைய வதந்திகளையும் வாட்சப் வதந்திகளையும் நம்பாதீர்கள்

----
நன்றி

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

https://www.facebook.com/1409247270/posts/10218682181231555/

Friday, March 29, 2019

தெரிந்து கொள்வோம்

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம் மிகவும்
#பயன்உள்ளதகவல் #

1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!
2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு சுவையுங்கள்..
பறந்து போகும் விக்கல்!
3. கொட்டாவியை நிறுத்த...
கொட்டாவி வருவதற்கான காரணம்:
Oxygen பற்றாக்குறை தான்..
அதனால்...
ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை,
நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்...
கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி
விடுவீர்கள்!

5. உடல் துர் நாற்றத்தைப்போக்க...
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை
கலந்து பிறகு குளிக்கவும்... அவ்வளவு தான்...
நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!
6. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும்,
வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.
7. தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?
வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில்
ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

8. வேனல் கட்டி தொல்லையா?
வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.
9. தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்!
•• முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்
•• கசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.
•• நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.
•• சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.
•• செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

•• முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டுக் குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

•• வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்.

10. மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.
11. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.
12. சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால்
மூக்கு ஒழுகுவது நிற்கும்.
13. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால்
ஜலதோஷம் போய்விடும்.
14. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும்.
இருமலை போக்கும்.

15. மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.{ ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம் முகநூல் பக்கம் }
16. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.
17. பாகற்காய் கசப்பு நீங்க,
அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.
18. தினமும் 1 டீஸ்பூன் சீரகம் சாப்பிட்டா
15 கிலோ வரை குறைக்க முடியும்…!!!
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் என்பது தெரியுமா?

மேலும் இது போன்ற ஆரோக்கியமான தகவல்களுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tamilhealthcorner

அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம். சீரகம் உடல் எடையைக் குறைக்க உதவுமா என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடைபெற்றது.
அந்த ஆய்வில் உடல் பருமனான 88 பெண்களை தினமும் சீரகத்தை எடுத்து வர செய்ததில், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளதாம்.
சரி, உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என பலரும் கேட்கலாம்.
உங்களுக்கு மிகவும் வேகமாக 15 கிலோ எடையைக் குறைக்க ஆசை இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் உங்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுத்து, அந்த வழியில் சீரகத்தை உட்கொண்டு வாருங்கள்.

19. சீரக தண்ணீர்
2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தயிர்
மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சீரகப் பொடி மற்றும் தேன்
1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.
•• சூப்புடன் சீரகப் பொடி
உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.
•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி
எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.
அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

•• தொப்பையைக் குறைக்கும் சீரகம்
சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.
•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்
மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு....நன்றி

சாம்பார் பொடி

*26. சாம்பார் பொடி (26/45):*

*தேவையான பொருட்கள்:*
1. சீரகம்                             - 1/4 Kg
2. மிளகு                            - 200 g
3. நாட்டு மல்லி               -      1 Kg
4. வெந்தயம்                   -  100 g
5. கருப்பு உளுந்து        -  100 g
6. குண்டு மிளகாய்      -  1/4 Kg
7. விரலி மஞ்சள்           -  200 g
8. கட்டி பெருங்காயம்  -   50 g
9. பொட்டுக்கடலை      - 150 g
10. அரிசி                          - 100 g
11. கறிவேப்பிலை        - 2 கைபிடி அளவு
12. திப்பிலி                      -  50 g

*செய்முறை:*

மேலே உள்ள அனைத்து பொருட்களையும் வெயிலில் நன்கு காயவைத்து (அல்லது) மஞ்சள் தவிர அனைத்தையும் வறுத்து (திப்பிலியை மிதமான சூட்டில் வறுத்து) அரைத்தால் சாம்பார் பொடி தயார்.

*"அனைத்து விதமான உணவு பொருட்களையும் நாமே விவசாயம் செய்து உருவாக்கும் தமிழரின் வேளாண்மை மற்றும் தற்சார்பு வாழ்க்கை முறை (https://www.facebook.com/groups/137176160305959/permalink/193403971349844/)"*

(1/45). பாத்திரம் கழுவும் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/274326233257617/)

(2/45). துணி துவைக்கும் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/274696779887229/)

(3/45). Multi Purpose Liquid (MPL) (https://www.facebook.com/groups/137176160305959/permalink/274978029859104/)

(4/45). தரை சுத்தி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/274997306523843/)

(5/45). Disposable Napkin (https://www.facebook.com/groups/137176160305959/permalink/275343613155879/)

(6/45). Reusable Napkin (https://www.facebook.com/groups/137176160305959/permalink/275352763154964/)

(7/45). மூலிகை பற்பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/275674846456089/)

(8/45). மூலிகை உடல் குளியல் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/275694409787466/)

(9/45). தலை குளியல் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/275749229781984/)

(10/45). மின்சார தைலம் (வலி நீக்கும் எண்ணெய்) (https://www.facebook.com/groups/137176160305959/permalink/276544956369078/)

(11/45). இயற்கை சோப்பு (https://www.facebook.com/groups/137176160305959/permalink/276613219695585/)

(12/45). இயற்கை ஷாம்பு (https://www.facebook.com/groups/137176160305959/permalink/277859329570974/)

(13/45). கேழ்வரகு (ராகி) செரலாக் (https://www.facebook.com/groups/137176160305959/permalink/278460949510812/)

(14/45). இயற்கை தயிர் மற்றும்  மோர் (https://www.facebook.com/groups/137176160305959/permalink/278547082835532/)

(15/45). சத்து மாவு (https://www.facebook.com/groups/137176160305959/permalink/292643178092589/)

(16/45). தேனீர் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/292684758088431/)

(17/45). சுக்கு மல்லி காபி பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/292708344752739/)

(18/45). காய்கறி சாறு (கொத்தவரங்காய்) (https://www.facebook.com/groups/137176160305959/permalink/293163844707189/)

(19/45). காய்கறி சாறு (புடலங்காய் மற்றும் சுரைக்காய்) (https://www.facebook.com/groups/137176160305959/permalink/293176068039300/)

(20/45). உடனடி தோசை பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/295563861133854/)

(21/45). சாதப்பொடி (கீரைகள்) (https://www.facebook.com/groups/137176160305959/permalink/296402897716617/)

(22/45). மிளகாய் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/297592744264299/)

(23/45). மல்லிப்பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/297597014263872/)

(24/45). மஞ்சள் பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/297606557596251/)

(25/45). ரசப்பொடி (https://www.facebook.com/groups/137176160305959/permalink/299518464071727/)

Thursday, March 28, 2019

கோடைக்கு ஏற்ற ஆரோக்கிய பானங்கள்.:

கோடைக்கு ஏற்ற ஆரோக்கிய பானங்கள்.:

கிர்ணி ஜூஸ்.:
தேவையான பொருட்கள்.:
கிர்ணிப்பழம் - 1,
பால் - 500 மில்லி,
சர்க்கரை - 100 கிராம்.

செய்முறை.:
கிர்ணிப் பழத்தை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். காய்ச்சி, ஆற வைத்த பாலை சேர்த்துக் கலக்கவும். பரிமாறும் முன் ஐஸ் க்யூப் சேர்த்துப் பரிமாறலாம்.

குறிப்பு:
கிர்ணிப் பழத் துண்டுகளுடன் வெல்லம் சேர்த்தும் சாப்பிடலாம். உடல் சூட்டைத் தணிக்கும்.

மாதுளை ஜூஸ்.:
தேவையான பொருட்கள்.:
மாதுளம் பழம் - 1,
சர்க்கரை - 100 கிராம்,
தேன் - 2 டீஸ்பூன்,
பால் - ஒரு கப்.

செய்முறை:
மாதுளம் பழத்தை தோல் உரித்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். சர்க்கரை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பரிமாறுவதற்கு முன், காய்ச்சி ஆற வைத்த பால், ஐஸ் க்யூப் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பால் விரும்பாதவர்கள் அதைச் சேர்க்காமலும் பருகலாம்.

குறிப்பு:
இந்த ஜூஸில் இரும்புச் சத்து, விட்டமின் சத்து அதிகம். தயாரித்த உடனேயே சாப்பிடுவது சிறந்தது. பித்தத்தைக் குறைக்கும்.

3. ஜிஞ்சர் மோர்.:
தேவையான பொருட்கள்.:
மோர் - 500 மில்லி,
பச்சை மிளகாய் - 1,
இஞ்சி - சிறு துண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி - சிறிதளவு, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். மோருடன் அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைப் போட்டுக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் ஐஸ் க்யூப் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
இதில் சேர்க்கப் பட்டிருக்கும் கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவை வியர்வை யினால் வீணாகும் சத்துக்களை சமன்படுத்தும். அதிக செலவு இல்லாத பட்ஜெட் ட்ரிங்!

Wednesday, March 27, 2019

கிளி_இனங்களை_பராமரிக்கும்_முறை

#கிளி_இனங்களை_பராமரிக்கும்_முறை

*வீட்டில் கிளி வளர்ப்பது ஒரு கலை. உங்கள் செல்லக் கிளியை எப்படி கவனமாகப் பராமரிக்கணும்னு தெரிஞ்சுக்குங்க.

* கிளி வளர்க்கும் இடத்தில் சரியான வெப்ப நிலை இருக்கணும். ஏ.சி ரூம், கிச்சன் மாதிரி ரொம்ப சூடான இடங்களில் கிளிகளை வளர்க்கக் கூடாது.

* தினமும் குறிப்பிட்ட நேரத்தை கிளிக்காகச் செலவிடுங்கள். நாம் பேசுவதை திருப்பிச் சொல்ல, நிறைய வார்த்தைகளைக் கற்றுக்கொடுங்கள்.

* கிளி வளர்க்க, கூண்டு ரொம்ப முக்கியம். கிளி ஏறி விளையாட, நடக்க வசதியா இருக்கணும். வட்ட வடிவிலான கூண்டுகளைவிட, மூலைகள் இருக்கும் சதுரம் அல்லது செவ்வக வடிவக் கூண்டுகளே நல்லது.

* சிறிய பந்து, கிளை உள்ள மரக்குச்சி போன்றவற்றை கூண்டுக்குள் வையுங்கள். கிளி விளையாடுவதற்கு உதவும்.

* கதவு, ஜன்னல்களை அடைத்துவிட்டு, அவ்வப்போது கூண்டைத் திறந்து பறக்கவையுங்கள். எங்கே பறந்தாலும் உங்கள் தோள்களில் வந்து அமர பயிற்சி கொடுங்கள்.

* கிளிகளைக் கொஞ்சும்போது  அலகு, சிறகுகள், உடலை மிக மெதுவாகத் தொடவும்.

* கூண்டினுள் எறும்பு மற்றும் மற்ற பூச்சிகள் போகாதவாறு கூண்டை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ளவும்

* குறைந்தது வாரம் இரண்டு முறையாவது கூண்டை சுத்தம் செய்வது மிகவும் நல்லது.

* தண்ணீர், தீவனம் வைக்கும் பாத்திரங்களை தினமும் சுத்தம் செய்வது அவசியம்.

* எப்பவும் சுத்தமான தீவனங்கள, பழங்களை உணவாகக் கொடுங்கள். கூண்டில், ஒரு கிண்ணத்தில் எப்போதும் தண்ணீர் இருக்கட்டும்.

* பறவைகள் கூட்டமாக வாழ்ந்து பழக்கப்பட்டவை. கிளிகளை, வீட்டில் ஆள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். அப்போதுதான், தான் தனியாக இருக்கும் உணர்வு கிளிக்கு ஏற்படாது.

Tuesday, March 26, 2019

மழைநீரை சேமிக்கும் முறை:

வீடுகளில் குறைந்த செலவில் மழைநீரை சேமிக்கும் முறை:

வீட்டின் சுவருக்கும் காம்பவுண்டு சுவருக்கும் இடையிலான இடத்தில் போர் குழியிலிருந்து சுமார் 5 அடி தள்ளி வீட்டின் மொட்டைமாடியிலிருந்து இறங்கும் 4 இஞ்ச் பைப் தண்ணீரைப் பெறும் வகையில் ( 4 அடி நீளம்*2.5 அடி அகலம்*4 அடி) ஆழம் கொண்ட குழி தோண்டலாம். இக்குழியில் மூன்றை அடி ஆழத்தில் 40 மி.மீ அளவுள்ள ஐல்லிக்கற்களை நிறைத்து மீதமுள்ள மேலே உள்ள அரை அடிக்கு செங்கல் வைத்து கட்டிவிடலாம். மேலும் இக் குழியை கடப்பா கல் வைத்தோ அல்லது ஜல்லி வலை வைத்தோ மூடி விட்டால் அந்த சந்தை எப்போதும் போல் உபயோகப்படுத்தலாம்.
குழி எடுப்பது, ஜல்லிக்கல் நிறைப்பது மற்றும் செங்கல் கட்டுமானம்,மூடி அமைப்பது என உள்ள வேலைகளை குறைந்த செலவில் (ரூ.4000-5000)) அமைக்கலாம்.
மொட்டை மாடியில் நீர் இறங்கும் பைப் போக மீதமுள்ள பைப் துவாரங்களைத் துணியைக் கொண்டு மூடி மொத்த தண்ணீரும் ஒரு குழாய் வழி செல்லும் வகை செய்யலாம்.

*பயன்:*
அரை மனை வீட்டு மொட்டை மாடியிலிருந்து ஒரு உழவு மழையை சேகரித்தால் 6 மாதத்திற்கு தேவையான நீரை உங்கள் ஆழ்துளைக் கிணற்றில் சேகரிக்கலாம்.

மேலும் விபரங்களுக்கு:
பிரிட்டோராஜ்
வேளாண் பொறியாளர்
9944450552