Wednesday, December 23, 2020

விசாரணைச் சட்டம்

*விசாரணைச் சட்டம் அறிந்து கொள்வோம்!*

https://m.facebook.com/story.php?story_fbid=2689177934686628&id=1705615563042875



*அரசியல் சாசனம் சொல்வது என்ன?*

*அரசியல் சாசணம் 21 பிரிவு*

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 21ன் படி சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ள விசாரணை முறைப்படியன்றி, வேறெந்த விதமாகவும் ஒரு நபரின் தனிப்பட்ட சுதந்திரத்தையும் உயிரையும் பறிக்கக்கூடாது.

*அரசியல் சாசணம் 22-1 பிரிவு*

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (1) இன் படி, “கைது செய்து ஒரு நபரைக் காவலில் வைப்பதற்கு முன், அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பதற்கான காரணத்தை அவருக்கு தெரிவிக்க வேண்டும். மற்றும் கைது செய்யப்படும் நபரால் தேர்ந்தெடுக்கப்படும் வழக்குரைஞரை கலந்தாலோசிக்கவும், அவரை தமது சட்டரீதியான தற்காப்பிற்கு பயன்படுத்துவதற்கும் உள்ள உரிமைகள் மறுப்பேதுமின்றி வழங்கப்படவேண்டும்”

*அரசியல் சாசணம் 22-2 பிரிவு*

இந்திய அரசியல் சட்டத்தின் உறுப்பு 22 (2) இன் படி, “ஒரு நபரைக் கைது செய்து காவலில் வைக்கும்போது, அப்படி கைது செய்யப்பட்ட நபரை, கைது செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குள் அருகே உள்ள ஒரு குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும். அந்த 24 மணி காலக்கெடுவில், கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து அந்த குற்றவியல் நடுவர் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல தேவைப்படும் பயண நேரத்தை சேர்க்கக்கூடாது. எந்த ஒரு நபரையும், ஒரு குற்றவியல் நடுவரின் உத்தரவின்படி இல்லாமல், அந்த காலக்கெடுவுக்கு மேல் காவலில் வைத்திருக்கக்கூடாது”

.
*குற்றவியல் நடைமுறை சட்டம் 46-1*

சட்டத்தின் பிரிவு 46(1)ன் படி, “உரிய அதிகாரி ஒருவர், கைது செய்யப்பட வேண்டிய நபரிடம், அவரை கைது செய்வதற்கான காரணத்தை தெரிவித்தவுடன், கைது செய்யப்படுவதற்கு உடன்படுவதை வெளிப்படையாக தெரிவித்தல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் கைது செய்யப்படவேண்டிய நபர், கைது செய்யப்படுவதற்கு உடன்படாதபோது அவருடைய உடலை நேரடியாக தொட்டு கைது செய்யலாம். மேலும் கைது செய்யப்பட்ட நபர் தப்பித்து சென்றுவிடாத வகையில் காவலில் வைக்கலாம்”.

*குற்றவியல் நடைமுறை சட்டம் 46-2*

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 46(2)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், கைது முயற்சியை வன்மையாக தடுத்தாலோ, அல்லது தாம் கைது செய்யப்படுவதிலிருந்து தந்திரமாக தப்பிக்க முயற்சி செய்தாலோ, கைது செய்யும் அதிகாரம் படைத்த அதிகாரி கைது நடவடிக்கைக்கு தேவையான வழிமுறைகளை கையாளலாம்”. (அதாவது தப்பியோட முயற்சிக்கும் நபரை தடுத்து நிறுத்தவும், தம் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவும் தேவையான அளவிற்கு கைது செய்யப்படவேண்டிய நபரை தாக்கியும் தடுத்து நிறுத்தலாம்)

*குற்றவியல் நடைமுறை சட்டம் 46-31*

கு.ந.சட்டம் பிரிவு 46(3)ன் படி, “கைது செய்யப்பட வேண்டிய நபர், மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக குற்றம் சாட்டப்படாத நிலையில், அவரை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அவருக்கு மரணத்தை விளைவிப்பதற்கான உரிமை வழங்கப்படவில்லை. (அதாவது, கைது செய்யப்படவேண்டிய நபர் மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ பெறத்தக்க அளவில் ஒரு குற்றத்தை செய்ததாக சந்தேகிப்படும் நிலையில், அவர் தப்பியோட முயற்சித்தாலோ – கைதை தவிர்க்க முயற்சித்தாலோ அதை தடுப்பதற்காக முயற்சிக்கும் அதிகாரி தேவையெனில், கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு மரணம் ஏற்படுத்தும் வகையிலும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்)

*குற்றவியல் நடைமுறை சட்டம் 46-4*

கு.ந.சட்டம் பிரிவு 46(4)ன் படி, “ பொதுவாக பெண்களை கைது செய்ய நேரிட்டால் சூரியன் உதித்த பின்னரும், சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்கு முன்னதாகவும் மட்டுமே கைது செய்ய வேண்டும்”.

*குற்ற விசாரனை சட்டம் 1073/ 160 சம்மன் எனும் அழைப்பாணை*

குற்ற விசாரணை முறை சட்டம் 1973 சட்டப்பிரிவு 160ன் படி சம்மன் எனும் அழைப்பாணை இல்லாமல் வாய் மொழியாக விசாரணைக்கு அழைக்க கூடாது.

வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்துக்கு பயணம் செய்ய முடியாதவர்கள், படுக்கையில் இருக்கும் நோயாளிகள் பெண்கள் சிறுவர்களை விசாரணைக்கு அழைக்கக் கூடாது. சம்மனைக் கொண்டு வந்து அவ்ர்கள் இருக்கும் இடத்தில் தான் விசாரிக்க வேண்டும்.

சம்மனில் புகார் குறித்த விபரம், புகார் கொடுத்தவர் பற்றிய விபரம், இபிகோவின் எந்தப் பிரிவுகளில் வழக்கு பதிய இயலும் என்ற விபரம் ஆகியவை சம்மனில் குறிப்பிட வேண்டும். காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் முத்திரையுடன் கைய்ப்ப்பம் இட வேண்டும்.

கைது செய்யும் அதிகாரி தனது அடையாளத்தைக் காட்ட வேண்டும்.

*விசாரணை குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பு 1996*

(AIR 1997 SC 610) தீர்ப்பு 18.12.1996 அன்று வழங்கப்பட்டது.

மேலும் அந்தத் தீர்ப்பில் கைது சம்பவத்தின்போது பின்பற்றவேண்டிய மிகவும் முக்கியமான 11 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.  

1. கைது மற்றும் விசாரணை ஆகிய பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் அவர்களின் பெயர் மற்றும் பதவியை குறிக்கும் பேட்ஜை அனைவரின் பார்வையில் தெளிவாக படும்வகையில் அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் அதிகாரிகள் குறித்த முழு விவரங்களும் ஒரு பேரேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2. ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி, கைது சம்பவத்தின் போதே அதற்கான குறிப்பை தயாரிக்க வேண்டும். அந்த குறிப்பில் கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது அப்பகுதியில் வசிக்கும் மரியாதைக்குரிய நபர் ஒருவரிடம் சான்று ஒப்பம் பெற வேண்டும். கைது செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தை குறித்து கைது செய்யப்படும் நபரிடம் கையொப்பம் பெறலாம்.

3. கைது குறிப்பில் சாட்சிக் கையொப்பம் இடுபவர் கைது செய்யப்படுபவரின் உறவினராகவோ, நண்பராகவோ இல்லாதபோது – கைது  செய்யப்படும் நபர் – தாம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ, நலனில் அக்கறை கொண்ட வேறெந்த நபருக்கோ தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு. கைது செய்த அதிகாரி மற்றும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் இந்த தகவலில் கூறப்படவேண்டும். இதற்கான வசதியை செய்து தரவேண்டியது கைது செய்யும் அதிகாரியின் கடமையாகும்.

4. கைது செய்யப்படும் நபரின் உறவினரோ, நண்பரோ, நலனில் அக்கறை கொண்ட வேறெவரோ கைது செய்யப்படும் நகரம் அல்லது மாவட்டத்திற்கு வெளியே இருந்தால், குறிப்பிட்ட கைது சம்பவம் குறித்து சட்ட உதவி மையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தந்தி மூலம் தகவல் தெரிவித்து, கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது நண்பருக்கு 12 மணி நேரத்திற்குள் கைது குறித்த தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.

5. கைது செய்யப்படும் நபருக்கு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

6. கைது செய்யப்பட்டுள்ளவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், கைது சம்பவம் குறித்து அவரது எந்த உறவினருக்கு அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், எந்த அதிகாரிகளின் பொறுப்பில் கைது செய்யப்பட்ட நபர் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் பதிவு செய்யப்பட வேண்டும்.

7. கைது செய்யப்பட்ட நபர் விரும்பினால் அவர் உடலில் உள்ள பெரிய மற்றும்  சிறிய காயங்கள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பில் கைது செய்யும் அதிகாரியும், கைது செய்யப்படும் நபரும் கையொப்பம் இட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பின் நகல் கைது செய்யப்படும் நபருக்கும் வழங்கப்பட வேண்டும்.

8. கைது செய்யப்படும் நபரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் மூலமோ, மருத்துவர்கள் குழு மூலமோ பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான மருத்துவர் குழுவை அனைத்து மாநில மருத்துவ இயக்குனர்கள் அமைக்க வேண்டும்.

9. கைது சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும், கைது குறிப்புடன் உரிய அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவருக்கு உரிய காலத்தில் அனுப்பப்படவேண்டும்.

10. கைது செய்யப்படும் நபரிடம் விசாரணை நடைபெறும்போது, முழு விசாரணையின் போது முடியாது என்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

11. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைகளிலும், அந்தந்த அலுவலகங்களின் அதிகார வரம்புக்குள் வரும் காவல்நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கைது சம்பவங்கள் குறித்த தகவல்கள் 12 மணி நேரத்திற்குள் பெறப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட இந்த அம்சங்களை நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மாநில மொழிகளில் எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர். 

*2005ல் குற்றவிசாரணை நடைமுறைச் சட்டத்தில் சேர்க்கப்பட்ட விதிகள் 50ஏ*

இதன் ஒரு கட்டமாக 2005ம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ என்று உட்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டது. இதன்படி

(1)  ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி கைது செய்யப்படுபவரின் உறவினர் அல்லது நண்பரிடம், கைது குறித்தும் – கைது செய்யப்பட்டவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்க வேண்டும்.

(2)  மேற்குறிப்பிட்ட (நண்பருக்கோ, உறவினருக்கோ தகவல் தெரிவிக்கும்) உரிமை குறித்து கைது செய்யப்பட்ட நபருக்கு, அவர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன், கைது செய்த காவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

(3)  கைது சம்பவம் குறித்து, கைது செய்யப்பட்ட நபரின் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ தகவல் தெரிவித்தது குறித்து காவல்நிலைய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

(4)  கைது செய்யப்பட்ட நபரை குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்தும் போது, கைது செய்யப்பட்ட நபரின் மேற்கூறப்பட்ட உரிமைகள் குறித்து அவருக்கு எடுத்துக்கூறப்பட்டதா என்பதை, தொடர்புடைய குற்றவியல் நடுவர் உறுதி செய்ய வேண்டும்.

Saturday, December 19, 2020

மின்சாரத்தை சிக்கனமாக ...

❇ _விழிப்புணர்வு பதிவு_

Dec 2020

🌐 *100 யூனிட்வரை இலவச மின்சாரம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில் இந்த சலுகை எல்லோருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மின்வாரியம், அதேநேரம் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை  மணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது.*

🔘 *இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.96 கோடி மின் நுகர்வோரும் அரசின் இந்த 100 யூனிட் இலவச மின் சலுகையை பெற முடியும்.*

🔘 *தற்போது 2 மாதத்துக்கும் சேர்த்து 100 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் மின் நுகர்வோர் தமிழகத்தில் 79 லட்சம் பேர் உள்ளனர்.*

🔘  *அவர்கள் மாதம் ரூ.60 வீதம் 2 மாதத்துக்கும் சேர்த்து  ரூ.120 மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர்.*

▪ *இனி அவர்கள் அதை செலுத்த வேண்டியதில்லை.*

▫ *ஆனால்,*
 
🔘 *100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்து பவர்களுக்கு ஒவ்வொரு படிநிலைக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.* 

🔲  *இனி அவர்கள் உபயோகிக்கும் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணத்தைக் கழித்தது போக, எஞ்சிய யூனிட்டுக்குரிய கட்டணம்  பழைய முறைப்படி வசூலிக்கப் படும்.*

▫ *ஆனால்,*

🔘   *பெரும்பாலானவர்களுக்கு நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை.*

💢 *உதாரணமாக,* 

🔘 *இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.*

▪ *ஆனால்*
 
 🔘  *அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உபயோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.*

▫ *அதுபோல*

🔘 *40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும்.*

🔘 *750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.*

🔘 *150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.*

🔘 *2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப் படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.*

🔘 *அதுவே 200 வாட்ஸ் ஏர்கூலர் என்றால்  மாதம் 30 யூனிட் செலவாகும்.*

🔘 *75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம் 36 யூனிட் செலவாகும்.*

🔘 *400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் மாதம் 12 யூனிட் செலவாகும். 100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.*

🔘 *500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும்,  300 வாட்ஸ் வெட் கிரைண்டர் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.*

🔘 *200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 740 வாட்ஸ்குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால்,  மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்.*

🔘 *7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும்.*

🔘 *இந்த அளவீடுகளைத் தெரிந்து மின்சாரத்தைச் சிக்கனமாக  உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது’’* 

========================
📌மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் 
====================

Monday, December 7, 2020

Ration Cards

தமிழ்நாட்டில் சுமார் 2 கோடி  Smart ரேஷன் கார்டுகள் 5 வகையாக உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொருத்து மாறும்.

எல்லா ரேஷன் கார்டுகள் ஒன்று போலவே இருக்கும் நிலையில் இந்தக் குறியீடுகள் மூலமாகத் தான் எந்தக் குறியீட்டிற்கு என்ன அர்த்தம் என்று இங்குப் பார்ப்போம்.

PHH - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன.

PHH - AAY: ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

NPHH - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன.

NPHH-S: ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். இந்த கார்டை 10,01,605 குடும்பங்கள் வைத்துள்ளனர்.

NPHH-NC: ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்.

Wednesday, November 18, 2020

No claim bonus

அன்புள்ள நண்பர்களே

கார் வைத்து உள்ளீர்களா ?
அப்படி என்றால் இந்த செய்தியை தெரிந்து கொள்ளுங்கள்  உங்கள் காரின் காப்பீட்டு பாலிசியை பாருங்கள். கிளைம் எதுவும் இல்லாத பட்சத்தில் No claim bonus கூடிக்கொண்டே வந்து 50% வந்தவுடன் நின்று விடும்.
கிளைம் இல்லை...
இப்போது காரை விற்றுவிட்டு வேறு கார் வாங்க முடிவு செய்தால் அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் சென்று *NCB* certificate கேளுங்கள் எழுத்து பூர்வமாக...
அந்த Certificate ஐ புதிய கார் எடுக்கும்போது அவர்களிடம் கொடுத்து புதிதாக எடுக்கும் வாகன பிரிமியத்தில் உங்கள் பழைய காரின் No claim bonus எவ்வளவு இருக்கிறதோ...
அதே அளவு Discount பெற்றுக்கொள்ளுங்கள்.

No claim bonus என்பது காருக்கு அல்ல...
விபத்தில் சிக்காமல்
காரை இயக்கி வந்தாரே அந்த காரின் ஓனருக்குத்தான் சொந்தம் அந்த No claim bonus.
புதிய வாகனம் எடுக்கும்போது மறக்காமல் இந்த பயனை அடையுங்கள்.

அன்புடன்
MMA.Sathiyanathan
LIC Of India
National insurance
Star health insurance
Mettupalayam
9994495999

Saturday, November 14, 2020

நாவை* ⤵️ *பேனுவோம் - 8

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

               *🔥 நாவை*
                                ⤵️
                        *பேனுவோம் 🔥*

                 *✍🏻....தொடர் { 08 }*

            *☄️ அவதூறு { 04 } ☄️*

*🏮🍂சிலர் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமலேயே பேச்சை நீட்டிக் கொண்டே இருப்பார்கள். அதில் புறம். கோள், அவதூறு, நக்கல், நையாண்டி அனைத்தும் கலந்திருக்கும்.* இதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்தி ருக்கிறார்கள்.

6477- حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ ، حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ ، عَنْ يَزِيدَ ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ التَّيْمِيِّ ، *عَنْ أَبِي هُرَيْرَةَ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مَا يَتَبَيَّنُ فِيهَا يَزِلُّ بِهَا فِي النَّارِ أَبْعَدَ مِمَّا بَيْنَ الْمَشْرِق.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியார் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.*_

     *📚நூல்: புகாரி (6477)📚*

6478- حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ مُنِيرٍ سَمِعَ أَبَا النَّضْرِ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللهِ ، يَعْنِي ابْنَ دِينَارٍ ، عَنْ أَبِيهِ ، عَنْ أَبِي صَالِحٍ ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللهِ لاَ يُلْقِي لَهَا بَالاً يَرْفَعُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللهِ لاَ يُلْقِي لَهَا بَالاً يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்து களை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரண மாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரண மாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.*_

*🎙️ அறிவிப்பவர் :*
                   *அபூஹுரைரா (ரலி)*
 
       *📚நூல் : புகாரி (6478)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சமூக விழிப்புணர்வு பற்றியது

சமூக விழிப்புணர்வு பற்றியது 
---------------------------------------------------

#மகள்களை_பெற்ற_அப்பாக்களுக்கு
காலம் மிகவும் கெட்டுக் கிடக்கு! 
நாம் தான் இன்னும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

பெண் பிள்ளைகளுக்கு
 #பேட்_டச் என்பதை பொத்தாம் பொதுவாக சொல்லிக் கொடுக்காமல், 
அந்த பேட் டச்சுகான சமிக்ஞைகள் எவ்வாறு இருக்கும், சில செயல்களை செய்யாமல் இருப்பதன் மூலம் ஆபத்திலிருந்து முன்கூட்டியே எவ்வாறு நம்மை சுதாரித்து தற்காத்து கொள்ள முடியும் என்பதை முதலில் பெண் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்

காரணம் வலிமை நிறைந்த தேகம் உண்ணும் 
#மனித&மிருகங்களிடம் பிஞ்சுகள் மாட்டிக்கொண்ட பின் தப்பிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல

முதலில்,

1. எவர் மடியிலும் அமரக் கூடாது

2. எவரையும் தொட்டு பேசக்கூடாது

3. எவரையும் தன்னை தொட்டு பேசவும் அனுமதிக்க கூடாது

4. யாருடனும் தனியே செல்லக் கூடாது

5. அதிகம் பாராட்டுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்

6. அழகை அடிக்கடி வர்ணிப்பவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்

7. பணத்திற்க்கு அதிகமான தின்பண்டங்களை கொடுக்கும் கடைக்காரர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

8. அடுத்தவருக்கு கைக் கொடுக்கும் போது அவர்களின் விரல்களின் தடுவுதல், உராய்வுகளை உணர வேண்டும்.

9. அடுத்தவரிடம் பேசும் போதும், விளையாடும் போது ஆடைகள் அங்கத்தில் சரியாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

10. கால்களை அகட்டி அமரக்கூடாது, உள்ளாடையின்றி யார் முன்பும் அமரக்கூடாது.

11. அக்கம் பக்கம் வீட்டாருக்கு பலகாரங்கள் கொண்டு போகும் போது உடன் அழைத்தவர்களுடன் அறைக்குள் உடனே செல்லக் கூடாது.

12. அனைவரையும் மாமா என்று அழைக்க கூடாது.

13. ஜ லவ் யூ என்ற வார்த்தையை எவரிடமும் உபயோகிக்க கூடாது.

14. காரணமின்றி எவருடனும் இரண்டு சக்கர வாகனத்தின் முன்பு அமர்ந்து செல்லக் கூடாது.

15. அடிக்கடி விளையாடுவது போல் கண் அடிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

16. இவற்றில் ஏதேனும் ஒரு நிகழ்வு ஏற்படும் பட்சத்தில், எந்த தயக்கமும் இல்லாமல், கூச்சமும் இல்லாமல் உடனே அப்பாவிடமோ அல்லது அம்மாவிடமோ அந்த நபரின் செய்கைகளையும், எந்த நபர் என்பதை பற்றியும் சொல்ல உடனே வேண்டும்.

#குறிப்பு

குறிப்பிட்டுள்ள இந்த அத்துனை சமிக்ஞைகளையும் அப்பாக்கள் மட்டுமே பெண் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்,

காரணம் பெண் பிள்ளைகள் அம்மாவை காட்டிலும் அப்பாவின் அன்புக்கரசிகள் என்பதால் அப்பாவின் வார்த்தைகள் பசு மரத்து ஆனி போல் பெண் பிள்ளைகள் மனதில் நன்கு பதியும், கூடவே அவற்றை கையாலும் தைரியமும் பிறக்கும்,

பெண் பிள்ளைகள் இருக்கும் வீட்டில் எவரை அனுமதிக்க வேண்டும்,? 

பெண் பிள்ளைகள் எவர் வீட்டுக்கு சென்று வர வேண்டும் என்பதை பெற்றோர்கள் தான் கண்கொத்தி பாம்புகளாக கவனித்து முடிவெடுக்க வேண்டும்,
பதிவுக்கு நன்றி:
Fiyas Mohamed

Tuesday, November 3, 2020

பெண்கள்) பேண வேண்டிய ஒழுங்குகள்

*வெளியில் செல்லும் போது (பெண்கள்) பேண வேண்டிய ஒழுங்குகள்*

புறப்படும் போது

முதலில் வீட்டை விட்டு வெளியே போகும் போதே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து செல்ல வேண்டும். ஏனென்றால் நாம் போகும் இடங்களில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அல்லாஹ்வை பொறுப்பாளனாக்கி செல்வதே சிறந்தாகும்.

நபி(ஸல்)அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது துஆச் செய்து செல்வார்கள்.

5486- أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ قُدَامَةَ ، قَالَ : حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ مَنْصُورٍ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ أُمِّ سَلَمَةَ

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ : بِسْمِ اللهِ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பிஸ்மில்லாஹி ரப்பி அவூது பி(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய என்று வீட்டைவிட்டு வெளியேறும் போது கூறுவார்கள்.

நூல்: நஸயீ 5391,5444.

(பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்).என் இறைவா! நான் சருகி விடாமலும் வழிதவறிவிடாமலும் அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும்,(பிறரை)மூடனாக்காமலும்,இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

பெண்கள் வெளியே செல்லும் போது

பொதுவாக இன்றைய பெண்கள் வெளியே செல்லும் போது முகத்திற்கு பவுடர், உதட்டிற்கு சாயம்,தலை நிறைய மல்லிகை பூக்கள் என தன்னை முழுமையாக அலங்கரித்துக் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பெண்கள் வெளியே செல்லும் போது தன்னை அழகு படுத்தக்கூடாது என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَى عَوْرَاتِ النِّسَاءِ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

(அல் குர்ஆன் 24:31

يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

(முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல் குர்ஆன் 33:59)

தண்ணீர் பிடிக்கும் இடம்

பொது பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது வரும் சண்டையைக் கவனித்தால் காது கொடுத்து கேட்க முடியாது. அந்த அளவுக்கு கீழ்த்தரமான கெட்ட வார்த்தைகளை சர்வசாதாரணமாக முஸ்லிம் பெண்கள் பேசுகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக ஓராயிரம் பொய் பேசுகின்றனர். அது மட்டுமல்லாமல் கண்ணிலே சாடை செய்து மற்ற பெண்களைக் கேலி செய்கின்றனர். இந்தச் செயலை அல்லாஹ் கண்டிக்கிறான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَوْمٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الِاسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம்.இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறைகூறவேண்டாம். பட்டப்பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கைகொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 49:11)

لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَنْ ظُلِمَ وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا

அநீதி இழைக்கப்பட்டவன் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதைஅல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:148)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

6018- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ ، عَنْ أَبِي حَصِينٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلاَ يُؤْذِ جَارَهُ ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ ، وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ فَلْيَقُلْ خَيْرًا ، أَوْ لِيَصْمُتْ

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (6018)

தள்ளுவண்டிக்காரனிடம் துள்ளி பேசும் பெண்கள்  

காய்கறி, மீன், துணிகள்,போன்றவற்றை விற்க வரும் ஆண்களிடம் 5 ரூபாய் குறைக்க வேண்டும் என்பதற்காக வளைந்து குழைந்து பேசுவதைப் பார்க்கலாம். வெகுநேரம் சிரித்து பேசும் பெண்களையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. இவையெல்லாமே பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களாகும்.

பஜார் கடைகளும் பசாங்கு வார்த்தைகளும்

கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் பெண்கள் அங்கு வேலைக்கு பெண்கள் உள்ளனரா என்று பார்ப்பது கிடையாது. ஒரு ஆண் மட்டும் உள்ள கடைக்குள் ஒரு பெண் தனியே செல்கிறாள். இவ்வாறு தனியே செல்லும் பெண்களிடம் ஒரு சில சபலம் கொண்ட கெட்ட ஆண்கள் இரட்டை அர்த்தத்தில் பேசியும், அந்த பெண்ணின் அழகை வர்ணித்து பேசவும் செய்து தன் வலையில் சிக்க வைத்து அந்த பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கப் பார்க்கின்றான். இது போன்ற இடங்களுக்குச் செல்ல நேரிட்டால் அல்லாஹ் திருமறை குர்ஆனில் கூறியதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنَ النِّسَاءِ إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

அல்குர்ஆன் 33:32)

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிக்குச் சொல்லப்பட்டதாக இருந்தாலும் இந்த எச்சரிக்கை அனைவருக்கும் பொருந்தும்.

களங்கப்படும் கடைத் தெருப் பயணங்கள்

இன்று கடைத் தெருவுக்குச் செல்லும் பெண்களை இரு வகைப்படுத்தலாம். 1. புர்கா அல்லது துப்பட்டி அணிந்து செல்லும் பெண்கள். 2. புர்காவோ, துப்பட்டியோ அணியாமல் செல்லும் பெண்கள்.

இன்று மாற்று மதப் பெண்கள் கடைத் தெருவுக்கு வரும் காட்சிகளை நம்மால் வர்ணிக்க இயலாது. இலைமறை காயாக தெரியும் சேலை, ஜாக்கெட்டுகளை அணிந்து கொண்டு தலை நிறைய வாசனைப் பூவை சூடிக் கொண்டு வருகின்றனர். இதற்குக் கொஞ்சமும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று முஸ்லிம் பெண்களும் கிளம்பி வருகின்றனர். இவர்கள் அணிந்து வரும் ஆடையைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுவதை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.

5704 – حَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلاَتٌ مَائِلاَتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لاَ يَدْخُلْنَ الْجَنَّةَ وَلاَ يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3971

இவர்களின் இந்தப் போக்கு நிச்சயமாக சுவனத்திற்கு ஒரு தடைக்கல்லாக ஆகி விடும். அல்லாஹ் காப்பானாக!

 

நிரம்பி வழியும் பேருந்தில் நெரிலில் மாட்டும் பெண்கள்

இப்போதுள்ள டவுண் பஸ்ஸின் கொள்ளளவு 60 என்றால் அதை விட இரண்டு மடங்கு அளவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு நிறை மாத கர்ப்பிணி போல் உள்ளே எள்ளளவுக்குக் கூட இடமில்லாமல் குண்டு, குழிகளில் விழுந்து நகர முடியாமல் ஊர்ந்து செல்கின்றது. இதிலுள்ள நெரிசலில் இந்தக் கற்பு நெறியுள்ள பெண்கள் மாட்டித் தவிப்பது வேதனைக்குரிய விஷயம். இதில் இவர்கள் பர்ஸ் வைக்கும் இடமும், அதை எடுக்கும் விதமும் ஆபாசத்திற்குரியது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ اللَّهُ أَعْلَمُ بِإِيمَانِهِنَّ فَإِنْ عَلِمْتُمُوهُنَّ مُؤْمِنَاتٍ فَلَا تَرْجِعُوهُنَّ إِلَى الْكُفَّارِ لَا هُنَّ حِلٌّ لَهُمْ وَلَا هُمْ يَحِلُّونَ لَهُنَّ وَآتُوهُمْ مَا أَنْفَقُوا وَلَا جُنَاحَ عَلَيْكُمْ أَنْ تَنْكِحُوهُنَّ إِذَا آتَيْتُمُوهُنَّ أُجُورَهُنَّ وَلَا تُمْسِكُوا بِعِصَمِ الْكَوَافِرِ وَاسْأَلُوا مَا أَنْفَقْتُمْ وَلْيَسْأَلُوا مَا أَنْفَقُوا ذَلِكُمْ حُكْمُ اللَّهِ يَحْكُمُ بَيْنَكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ (10) وَإِنْ فَاتَكُمْ شَيْءٌ مِنْ أَزْوَاجِكُمْ إِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَآتُوا الَّذِينَ ذَهَبَتْ أَزْوَاجُهُمْ مِثْلَ مَا أَنْفَقُوا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ

(திருக்குர்ஆனின் 60:10 முதல் 12 வரையிலான) இந்த வசனங்களின் கட்டளைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள். இந்த (வசனத்திலுள்ள) நிபந்தனையை இறை நம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவரிடம், “உன் விசுவாசப் பிரமாணத்தை நான் ஏற்றுக் கொண்டேன்” என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வழங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், “நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன்” என்று அவர்கள் வாய் மொழியாகவே தவிர வேறு எந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை.

2713- قَالَ عُرْوَةُ فَأَخْبَرَتْنِي عَائِشَةُ

أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُهُنَّ بِهَذِهِ الآيَةِ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ} إِلَى {غَفُورٌ رَحِيمٌ} قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنْهُنَّ قَالَ لَهَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قَدْ بَايَعْتُكِ كَلاَمًا يُكَلِّمُهَا بِهِ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُهُ يَدَ امْرَأَةٍ قَطُّ فِي الْمُبَايَعَةِ وَمَا بَايَعَهُنَّ إِلاَّ بِقَوْلِه

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 2713, 4891, 5288

நபித்தோழியரிடம் விசுவாசப் பிரமாணம் எடுக்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். நபி (ஸல்) அவர்களின் கையைப் பிடித்து எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி தான் விசுவாசப் பிரமாணம்! இதை அல்குர்ஆன் 48:10 வசனத்தில் காணலாம். அத்தகைய விசுவாசப் பிரமாணத்தைக் கூட நபி (ஸல்) அவர்கள் பெண்களின் கையைப் பிடித்து எடுத்ததில்லை என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக விளக்குகின்றது.

ஆனால் பஸ்ஸின் நெருக்கத்தில் கை மட்டுமல்ல. மொத்த மேனியும் அந்நிய ஆண்களுக்கு மேல் படுகின்றது.

6243م- حَدَّثَنِي مَحْمُودٌ ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنِ ابْنِ طَاوُوسٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم

إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது. அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 6243

விபச்சாரத்தின் பல படித்தரங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். இவை அனைத்தும் ஒரு சேர இல்லை அதையும் தாண்டி மேனியும் மேனியும் ஒட்டி உரசி நிற்கும் நிலை! எத்தனை சபலப் புத்திக்காரர்கள் இந்தச் சந்தர்ப்பத்துக்காக காத்துக் கிடக்கின்றார்கள். பெண்களை நெருக்கித் தள்ளுகின்றார்கள். இப்படி ஒரு மானம் போகின்ற ஒரு பயணம் தேவையா? பெண்களே சிந்தியுங்கள்.

இது போன்ற கட்டங்களில் நம்முடைய தன்மானத்தைக் காக்கும் வகையில் கட்டுப்பாட்டுணர்வுடன், கற்பு நெறியுடன் கொஞ்சம் காசு போனாலும் பரவாயில்லை. காரிலோ ஆட்டோவிலோ பயணம் செய்யும் பெண்களும் இருக்கவே செய்கின்றனர்.

எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாத கட்டத்திலும், என்ன நெரிசலாக இருந்தாலும் பரவாயில்லை என்று காலணா பெறுமான கத்தரிக்காய் வாங்குவதற்காக கடைத் தெருவுக்குக் கூட பஸ்ஸில் பயணம் செய்யும் பெண்கள் இந்தப் பயணங்களைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும். ஏதோ தவிர்க்க முடியாத நிர்ப்பந்தத்தின் போது வேறு வழியே இல்லையே என்று நாணி, கூனிக் குறுகிப் போய் தான் இந்த டவுண் பஸ் பயணங்கள் அமைய வேண்டும்.

இக்கட்டுரையில் சொல்லப்பட்ட இடங்களுக்கு அனைவரும் அன்றாடம் செல்வோம். எனவே இது போன்ற இடங்களில் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டி தந்த முறையில் நடந்து மறுவுலகில் வெற்றிபெறுவோம்.

Wednesday, October 28, 2020

மீனுடன் எதை சேர்த்து சாப்பிட்ட கூடாது

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவுமீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தாம்!!👹👹👹*



 *🛑🛑🛑இன்று நாம் பார்க்க இருப்பது மீனுடன் எதை சேர்த்து சாப்பிட்ட கூடாது ஆதனால் உண்டாக்கும் ஆபத்து என்ன என்று பார்ப்போம்🛑🛑🛑* 


 *🐬🐬🐬மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தாம்!!🐬🐬🐬* 


 *✍️✍️✍️நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும்.* 
 *அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி நமது ஆரோகியத்தை வளப்படுத்துவதான். ஆகவே ஆயுர்வேதத்தை நாம் தாரளமாக நம்பலாம்.* 
 *அவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட கேடை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம்✍️✍️✍️.* 

 *🐬🐬🐬திப்பிலி மற்றும் மீன் 🐬🐬🐬:* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகி விடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🍼🍼🍼பாலும்,  மீனும்🐬🐬🐬* 


 *✍️✍️✍️பாலும், மீனும் ஆரோக்கியமான உணவுகள் என்பதில் உங்களுக்கு துளியும் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் இந்த இரண்டுமே நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று நம் அம்மா சொல்வதை அடிக்கடி கேட்டிருப்போம். அம்மாவுக்கு அவரின் அம்மா சொல்லியிருப்பார். ஆனால் அது உண்மையா என்பதை நமது அம்மாவும் யோசித்திருக்க மாட்டார், நாமும் யோசிக்க மாட்டோம். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♀️அறிவியல் உண்மை அறிவியல்ரீதியாக பார்க்கும் போது இந்த இரண்டு பொருட்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடாமல் இருக்க வேண்டுமெனில் இதில் ஏதாவது ஒரு பொருளால் அலர்ஜி இருக்க வேண்டும். அதனை தவிர்த்து இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேறு எந்த காரணமும் இல்லை. இவை இரண்டும் ஒன்றாக சாப்பிடப்படும் போது அவை உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஊட்டச்சத்துக்கள் இந்த இரண்டு பொருளையும் தனித்தனியாக பார்த்தால் இரண்டுமே அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. இதனால்தான் பல கலாச்சாரங்களில் உடல்நிலை விரைவில் முன்னேற்றமடைய இந்த இரண்டு உணவையும் பரிந்துரைத்தார்கள்✍️✍️✍️.* 


 *🛑எப்போது சாப்பிடக்கூடாது❓🛑* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மீன் சரியாக சமைக்கப்படாததாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த இரண்டு உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. அதனை மீறி சாப்பிட்டால் அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

சுவனம் 🔥* ⤵️ *தடுக்கப்பட்டவர்கள் - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

                 *🔥 சுவனம் 🔥*
                               ⤵️
           *தடுக்கப்பட்டவர்கள் 🔥*

              *✍🏻....தொடர் ➖0️⃣1️⃣*

           *☄️ முன்னுரை ☄️*

*🏮🔥அல்லாஹ் இவ்வுலகில் மனிதனை படைத்ததின் நோக்கமே அவனை வணங்கி, வழிபட்டு, அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த முறைப்படி நம் வாழ்வை அமைத்து இறுதியில் மரணம் நம்மை வந்து அடையும்.* ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கு தகுந்தாற்போல் அவரவர்களுக்கு சுவர்க்கம், நரகம் நிச்சயிக்கப்படும். *ஆனால், சொர்க்கத்திற்கு செல்லக் கூடியவர்கள் ஒரு சில செயல்கள் அவர்களை சுவர்க்கம் செல்வதை விட்டும் தடுத்துவிடுகின்றது. அவ்வாறு தடுக்கும் செயல்கள் எது என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் முற்றிலும் பூரணிக்க கூடியவர்களாக ஆக வேண்டும்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️உறுதி செய்யப்பட்ட*
               *சுவர்க்கம், நரகம்*

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، *قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ مَرُّوا بِجَنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏‏ وَجَبَتْ ‏"‏‏.‏ ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا فَقَالَ ‏"‏ وَجَبَتْ ‏"‏‏.‏ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ مَا وَجَبَتْ قَالَ ‏"‏ هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ ‏"‏‏.‏"*

_*🍃ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது’ என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர்.*_ _அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது?’ எனக் கூறினார்கள். உமர்(ரலி) ‘எது உறுதியாகிவிட்டது?’ எனக் கேட்டதும்_ _*நபி(ஸல்) அவர்கள், ‘இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்’ எனக் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
                *அனஸ் (ரலி),*
           *📚 நூல் : புஹாரி 367 📚*

ஒருவரின் செயல்பாடுகளை வைத்தே சுவர்க்கம் நரகம் பற்றி தீர்மானிக்கக்கூடிய அளவிற்கு அவரவரின் நிலை இருக்கின்றது. 

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃 - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 10 ]*

                *⛱️ இறுதி பாகம் ⛱️*

*☄️உபரி தொழுகைகள்☄️*

*🏮🍂கடமையல்லாத நாமாக விரும்பித் தொழும் உபரியான தொழுகைகளும் சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யும் ஓர் தகுதியாகும். இதைத் தெரிவிக்கும் சான்றுகள் கணக்கற்ற வகையில் இருந்தாலும் பிலால் (ரலி) அவர்களின் நிகழ்விலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.*

_*🍃(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.*_

_*அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளு செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகை யை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)” என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்*
              *அபூஹூரைரா (ரலி),*
    
             *📚 முஸ்லிம் 4854 📚*

*🏮🍂சொர்க்கம் செல்பவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், எதையெல்லாம் சொர்க்கவாசிகளுக்குரிய தகுதிகளாக அல்லாஹ், ரசூல் குறிப்பிடுகிறார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அறிந்து கொண்டோம். இந்த அடிப்படையில் நன்மைகளைச் செய்து, நல்லடியார்களாக மரணிக்கிற பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்து அருள்புரிவானாக!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

*தொடர் முடிந்தது*
                    ⤵️⤵️⤵️
              *அல்ஹம்துலில்லாஹ்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி❓

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்💊💊💊* 


*👶👧👶குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி❓👶👧👶*


 *🧚‍♀️🧜‍♀️🧍‍♀️குளியல் பொடி தயாரிக்கும் முறை 1 (Bath Powder)🧚‍♀️🧜‍♀️🧍‍♀️* 


*♻️♻️♻️தேவையானவை பொருட்கள் :♻️♻️♻️*


 *பச்சைப்பயறு – ½ கிலோ* 

 *கடலப்பருப்பு – ½ கிலோ* 

 *கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்* 

 *பூலாங்கிழங்கு – 10 கிராம்* 

 *ஆவாரம்பூ – 50 கிராம்* 

 *ரோஜா – 50 கிராம்* 

 *செம்பருத்தி பூ – 10* 

 *வேப்பிலை – 30 கிராம்* 

 *துளசி – 30 கிராம்* 

 *வெட்டிவேர் – 10 கிராம்* 


*♻️♻️செய்முறை:♻️♻️*


 *👆👆👆மேற்சொன்ன  அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.👆👆👆* 



 *✍️✍️✍️இவையெல்லாம் காய வைத்துதான் விற்கப்படும். நீங்களே வீட்டில் இருப்பதைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதையே குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏற்றது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🙋‍♂️யார் பயன்படுத்தலாம்❓🙋‍♀️* 


 *✍️✍️✍️குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதைப் பயன்படுத்தலாம்.* 
 *ஆனால், ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் இதைப் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை மட்டும் நீக்கிவிட்டு இதைப் பயன்படுத்தலாம்✍️✍️✍️.* 


 *♻️பலன்கள்:♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குழந்தைகளுக்கு இந்தப் பொடி மிகவும் நல்லது. குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது. இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயை நீக்காமல் பாதுகாக்க உதவும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️துர்நாற்றம் வருவது தவிர்க்கப்படும். உடலில் எங்கும் சரும தொந்தரவுகள் வராது. வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சருமத்தில் கருமை இருந்தால் அவை நீங்கும். பரு, மரு, கருத்திட்டுக்கள் வராமல் தடுக்கப்படும். வியர்க்குரு தொல்லையும் இருக்காது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️பெண் குழந்தைகள், பெண்கள் இதைப் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். மீண்டும் முடி சருமத்தில் வளராது. வாக்சிங் செய்யத் தேவையில்லை.✍️✍️✍️* 


 *🧚‍♀️🧜‍♀️🧍‍♀️குளியல் பொடி தயாரிக்கும் முறை 2🧚‍♀️🧜‍♀️🧍‍♀️* 


 *♻️♻️♻️தேவையானவை பொருட்கள் :♻️♻️♻️* 


 *ரோஜா இதழ் – 150 கிராம்* 

 *பச்சைப்பயறு – 200 கிராம்* 

 *கடலப்பருப்பு – 100 கிராம்* 

 *கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்* 

 *வேப்பிலை – 50 கிராம்* 

 *ஆரஞ்சு தோல் – 3-4*
 *பழத்தின் தோல்கள்* 

 *பாதாம் – 10* 

 *எக்சோரா பூ (இட்லி பூ) – 1 கப்* 

 *செம்பருத்தி பூ – 10* 


 *♻️♻️செய்முறை:♻️♻️♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவை அனைத்தையும் நன்றாக காய வைத்துக் கொள்ளவும்.* 
 *கடையில் கொடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் குளியல் பொடி ரெடி🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🥎யார் பயன்படுத்தலாம்❓🥎* 


 *✍️✍️✍️குழந்தைகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம். ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்✍️✍️✍️.* 


 *♻️பலன்கள்:♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தோலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.* 
 *இயற்கையாகவே சருமம் பொலிவு பெறும். மினுமினுப்பான தோற்றம் கிடைக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️வியர்வைத் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.* 
*சருமத்தில்இயற்கையான பளிச் பிரகாசம் தெரியும். சருமத்தை* *ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும்.✍️✍️✍️*

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே இது போன்ற குளியல் பொடி செய்து இயற்கை முறையில் நம் உடலை நமே காத்துக்கொள்வேம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃 - 9

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 09 ]*

*☄️நோயாளியை*
               *நலம் விசாரித்தல்*

*🏮🍂நோய்வாய்ப்பட்டவர்களை நலம் விசாரிப்பது சொர்க்கவாசிகளின் குணமாகும்.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்.*_

*🎙️அறிவிப்பவர் :*
             *ஸவ்பான் (ரலி),*

               *📚 முஸ்லிம் 5017 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️நல்லறங்களின்*
                   *சங்கமிப்பு☄️*

*🏮🍂ஒரு அடியார் நல்லறங்கள் சங்கமிக்கும் சங்கமமாக இருப்பார் எனில் அவர் சொல்லும் தகுதியைச் சந்தேகமறப் பெறுகிறார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.*

_அபூபக்கர் ரலி அவர்கள் தொடர்புடைய நிகழ்வில் நபிகள் நாயகம் கூறிய இத்தகவலை பின்வரும் நிகழ்வில் அறிந்து கொள்கிறோம்._

_*🍃(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்*
            *அபூஹூரைரா (ரலி),*

           *📚 முஸ்லிம் 1865 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

பெண்கள் சம்மந்தமான நோய்கள் விழிப்புணர்வு

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு👹👹👹*


 *👩‍🦰👩‍🦰👩‍🦰இன்று நாம் பார்க்க இருப்பது பெண்கள் சம்மந்தமான நோய்கள் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை👩‍🦰👩‍🦰👩‍🦰* 


 *🧕🧕🧕பெண்களே இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க அப்புறம் ஆபத்து!🧕🧕🧕* 


 *✍️✍️✍️நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான். ஆனால், அவர்களுக்கு உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. பெண்கள் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அறிகுறிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சில பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை…✍️✍️✍️.* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதே போல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வாறு நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் அது கட்டி, 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


* *✍️✍️✍️மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒரு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி. இந்த நிலையை ஆங்கிலத்தில் “Intraductal Papillomas” என்று கூறுகின்றனர். இதை அறுவை சிகிச்சை மூலமாக தான் சரி செய்ய வேண்டும்✍️✍️✍️.* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பெண்கள் தலைவலிக்கு எல்லாம் மருத்துவரிடம் செல்ல மாட்டார்கள். அவர்களே மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், தொடர்ந்து பெண்கள் மத்தியில் உண்டாகும் கடுமையான தலைவலி நரம்பு மண்டலத்தில் உண்டாகியிருக்கும் இன்பெக்ஷனின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது மூளையில் இரத்தம் கசிவதன் அறிகுறியாக இருக்கலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


* *✍️✍️✍️மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்✍️✍️✍️.* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


* *✍️✍️✍️எந்தவித பயிற்சி அல்லது டயட் இல்லாமல், உடல் எடை திடீரென குறைவது சிலவகை புற்றுநோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். அல்லது வேறு சில அபாயமான உடல்நல குறைபாடுகளாக இருக்கலாம்✍️✍️✍️.* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உடல் இடது அல்லது வலது பக்கங்களில் (மார்பு, வயிறு, இடுப்பு) கூர்மையான வலி உண்டாவது வலி அல்லது பிடிப்பாக இருக்கலாம். ஆனால், கூர்மையாக குத்துவது போன்ற வலி உண்டாவது குடல்வாலழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


* *✍️✍️✍️மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.✍️✍️✍️* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப் படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்று தான். ஒருவேளை இது மஞ்சள் – பச்சை நிறத்தில், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல் / வலியுடன் வெளிப்படுகிறது எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய் . கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற அறிகுறிகள் இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

நாடி துடிப்பு பற்றிய மருத்துவம்

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்💊💊💊*


 *♥️♥️🧶இன்று நாம் பார்க்க இருப்பது நாடி துடிப்பு பற்றிய மருத்துவம் சார்ந்த மருந்து பற்றிய தகவல்♥️♥️♥️* 


 *🧶🧶🧶நாடி துடிப்பு நாடி துடிப்பை சீராக்கும் நித்ய கல்யாணியின் மருத்துவ பலன்கள்🧶🧶🧶* 

 *♻️♻️♻️தேவையான பொருள்♻️♻️♻️* 


 *தண்ணீர் 100 மி.லி* 

 *நித்ய கல்யாணி இலை ஒரு கைப்புடி அளவு* 


 *♻️♻️செய்முறை♻️♻️* 


 *✍️✍️✍️முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் கொதிக்கும் நீருடன் நித்ய கல்யாணியின் இலையை  போட வேண்டும்.இதன்  பிறகு நீரை 100 மி.லி இருந்து 50 மி.லி வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.மேலும் சுண்ட காய்ச்சின நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இவ்வாறு உருவான நீரை சிறியவர்கள் 10 மி.லி மற்றும் பெரியவர்கள் 50 மி.லி தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளிலும் குடித்து வந்தால் நாடி துடிப்பு சீராகும்✍️✍️✍️.*   


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே இது போன்ற இயற்கை மருந்து தயாரிச்சி நம் நாடி துடிப்பை சீராக்குவோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

கொலஸ்ட்ரால் சம்மந்தமான மருத்துவம்

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்💊💊💊*


 *♥️♥️♥️இன்று நாம் பார்க்க இருப்பது கொலஸ்ட்ரால் சம்மந்தமான மருத்துவம் சார்ந்த மருந்து பற்றிய தகவல்♥️♥️♥️*


 *✍️✍️✍️கொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய, நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..!* 
 *இன்றைய காலகட்டத்தில் நாம் வீட்டு உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டே வருகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மையாக உள்ளது. வீட்டில் இருக்கும் உணவுகளை நாம் சாப்பிட்டு வந்த வரைக்கும் உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால், தொப்பை போன்ற பிரச்சினை குறைந்த அளவில் இருந்தது.* 
 *குறிப்பாக கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக சேர்வதால் உடல் எடை கூடுதல், இதய கோளாறுகள், புற்றநோய் போன்ற மிக மோசமான நிலைக்கு நாம் வந்து விடுகின்றோம். இதனை சரி செய்ய சித்தர்கள் பல வகையான ஆயுர்வேத மூலிகைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்துள்ளார். அவை என்னென்ன என்பதை இனி அறிவோம்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஏன் இந்த நிலை..?இன்று நாம் இந்த மோசமான நிலையை அடைந்ததற்கு பல முதன்மையான காரணிகள் கூறப்படுகிறது. குறிப்பாக விரைவு உணவுகள், பாக்கெட்டில் அடைபட்ட உணவுகள், பீட்சா, பர்கர், செயற்கை இனிப்பு மற்றும் நிறமூட்டிய உணவுகள் போன்றவற்றால் தான் நாம் இன்று உடல் பருமனால் அவதிப்படுகின்றோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️தேனும் பூண்டும்..!நம்மில் பலருக்கு ஆயுர்வேத முறைகளில் பயன்படுத்த கூடிய வீட்டு மூலிகைகளை பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல மூலிகைகள் நமது வீட்டிலே எளிமையாக கிடைக்கிறது. அந்த வரிசையில் இந்த பூண்டும், தேனும் அடங்கும். இவை உங்களின் கொலஸ்ட்ராலை கரைக்க பெரிதும் உதவும்.✍️✍️✍️* 


 *♻️♻️♻️தயாரிக்கும் முறை எப்படி..❓♻️♻️♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முதலில் 20 பூண்டு பற்களை எடுத்து கொண்டு தோல் உறித்து, அதனை நசுக்கி கொள்ளவும். பிறகு இதனை கண்ணாடி ஜாடியில் போட்டு கொண்டு, இவை மூழ்கும் அளவுக்கு தேனை இதனுள் சேர்க்க வேண்டும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும், இந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தி வரலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஜின்செங்க் (குண சிங்கி)* 
 *ஏராளமான மூலிகை தன்மைகளை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை இந்த ஜின்செங்க் (குண சிங்கி). ஆசிய கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக இவை பயன்படுத்தப்படுகிறது. கொலஸ்ட்ராலை முற்றிலுமாக வெளியேற்றி இதயத்தை பாதுகாப்பாக வைக்க இவை உதவுகிறது. MOST READ: தினமும் 10 கடலை சாப்பிட்டால், நீண்ட ஆயுளுடன் இருக்கலாமாம்..! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!✍️✍️✍️* 


 *🍻🍻🍻மூலிகை டீ தெரியுமா..❓🍻🍻🍻* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உங்களின் உடலுக்கு பேராபத்தை தர கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை எளிதாக கரைக்க கூடிய சக்தி இந்த மூலிகை டீயிற்கு உள்ளது. epigallocatechin gallate (EGCG) என்கிற முக்கிய மூல பொருள் இந்த மூலிகை டீயில் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை சீக்கிரமாகவே இவை கரைத்து விடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️♻️♻️தேவையானவை பொருட்கள் :-♻️♻️♻️* 


 *கிரீன் டீ 1 ஸ்பூன்* 

 *தேன் 1 ஸ்பூன்* 

 *தண்ணீர் 1 கப்* 


 *♻️♻️தயாரிக்கும் முறை...♻️♻️* 


 *✍️✍️✍️முதலில் 1 கப் நீரில் கிரீன் டீயை சேர்த்து கொண்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு எடுத்து கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து குடிக்கவும். இந்த டீயை தினமும் 2 முறை குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் கரைந்து விடும்✍️✍️✍️.* 


 *🍃🍃🍃துளசி🍃🍃🍃* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மூலிகை தன்மை அதிகம் நிறைந்த இந்த துளசியின் மகிமை நம் அனைவருக்கும் நன்கு தெரிந்தது தான். என்றாலும், இவை கொலஸ்ட்ராலை சரி செய்ய உதவும் என்பதே புதுவிதமான தகவல். உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதில் துளசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️♻️எளிய முறை இதுவே..!♻️♻️* 


 *✍️✍️✍️1 எலுமிச்சை இருந்தால் போதும். உடல் எடை சார்ந்த பல பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளியை வைத்து முடியும். குறிப்பாக இந்த வைத்தியம் உங்களின் கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவும்.✍️✍️✍️* 


 *♻️♻️♻️தேவையானவை பொருட்கள் :-♻️♻️♻️* 


 *தேன் 1 ஸ்பூன்* 

 *எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்* 

 *1 கப் நீர்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️MOST READ: கல்லீரல் கொழுப்பை உடனடியாக வெளியேற்ற கூடிய முன்னோர்களின் ஆயுர்வேத முறைகள்..!🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *♻️♻️♻️தயாரிக்கும் முறை...♻️♻️♻️* 


 *✍️✍️✍️முதலில் நீரை சூடு செய்து கொள்ளவும். மிதமான சூட்டில் இருக்கும் பட்சத்தில் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த டீயை வெறும் வயிற்றில் தினமும் 1 முறை குடித்து வரலாம்.* 
 *கொத்தமல்லி உணவில் கடைசியாக சேர்த்து கொள்ளும் இந்த சிறிய வகை கீரைக்கு எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது. இதனை தினமும் உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் எளிதில் கொலஸ்ட்ராலை இவை கரைத்து விடும். அத்துடன் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதையும் இது தடுக்கும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆளி விதைகள் இந்த சிறிய வகை விதைகளை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், கடைகளில் எளிதாக கிடைக்க கூடிய இந்த விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது. மேலும், இவை மாரடைப்பு போன்றவற்றை தடுக்கவும் செய்கிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️1 ஸ்பூன் சாப்பிடுங்க..! வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ள வெந்தயத்தை தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உங்களின் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வர கூடும். மேலும், இவை செரிமான மண்டலத்தையும் சீராக வைத்து கொள்ளும். எனவே, இந்த பதிவில் கூறிய ஆயுர்வேத முறைகளை பயன்படுத்தி கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பிறருடன் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள் நண்பர்களே.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️MOST READ: ஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🛑🛑🛑ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து! வேகமாக பகிருங்கள்.🛑🛑🛑*


 *✍️✍️✍️உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.* 
 *இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும்.* 
 *இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.✍️✍️✍️* 


 *♻️♻️♻️தேவையான பொருட்கள்:*♻️♻️♻️

  *விதை இல்லாத பேரிச்சம் பழம் – 3-4,* 

 *இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்* 


 *🥚🥚🥚பேரிச்சம் பழம்:🥚🥚🥚*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🥐🥐🥐இஞ்சி:🥐🥐🥐* 


 *✍️✍️✍️இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்✍️✍️✍️.* 


 *♻️♻️செய்முறை:♻️♻️*

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️♻️♻️உட்கொள்ளும் முறை:♻️♻️♻️*


 *✍️✍️✍️தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.✍️✍️✍️* 


 *♻️குறிப்பு:♻️*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற இயற்கை முறையில் மருந்துகளை செய்து கொலஸ்ட்ரால் வராமல் தடுத்து நலமுடன் வாழ்வோம்✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

கொழுப்பு(Cholesterol கொலஸ்ட்ரால்) சம்மந்தமான மருத்துவ குறிப்புகள்

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்♻️♻️♻️*


 *📚📚📚இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்📚📚📚* 


 *♥️♥️♥️இன்று நாம் பார்க்க இருப்பது கொழுப்பு(Cholesterol கொலஸ்ட்ரால்) சம்மந்தமான மருத்துவ குறிப்புகள்♥️♥️♥️*


 *🧶கொலஸ்ட்ரால்🧶 என்றால் 🧶என்ன❓🧶* 


 *✍️✍️✍️கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது.* *80 % கொலஸ்ட்ராலைச் நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.✍️✍️✍️* 


 *♥️♥️♥️கொலஸ்ட்ராலின் தன்மைகள்♥️♥️♥️🌹* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.* 
 *கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.* 
 *நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது✍️✍️✍️.* 


 *♥️♥️♥️எது நல்ல கொலஸ்ட்ரால்❓♥️♥️♥️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.* 
 *இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.* 
 *ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein).🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *♥️♥️♥️கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்♥️♥️♥️.* 


 *✍️✍️✍️Total Cholesterol <—>200 mgm% மொத்த கொலஸ்ட்டிரால்* 
 *LDL Cholesterol <—>100 mgm%குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்* 
 *VLDLCholesterol <—>30 mgm%மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்* 
 *Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்* 
 *HDLP Cholesterol <50 mgm %  மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்* 
 *மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு.* *மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.* 
 *குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.* 
 *முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.✍️✍️✍️* 


 *🥥🍚🍦🍼🥃🍺🍯🥣கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்🥥🍚🍦🍼🥃🍺🍯🥣* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)* 
 *எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.* 
 *ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.* 
 *இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.* 
 *பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.* 
 *பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.* 
 *இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.* 
 *அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.* 
 *இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்✍️✍️✍️.* 


 *🍇🍒🍓ஒமேகா 3 உள்ள உணவுகள்🍇🍒🍓* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🥭🍍🍐🍏🍈ஒமேகா 6 உள்ள உணவுகள்🥭🍍🍐🍏🍈* 


 *✍️✍️✍️சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.✍️✍️✍️* 

 *🧃🥫🥃🍚🍦எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது❓🧃🥫🥃🍚🍦* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்  நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:* 
· *சீரான உடற்பயிற்சி* 
· *உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.* 
· *புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.* 
· *மது அருந்துவதைத் தவிர்ப்பது* 
· *அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.* 
· *அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.* 
· *பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .* 
· *யோகாசன பயிற்சி செய்வது,* 
· *தியானப் பயிற்சி செய்வது .✍️✍️✍️* 


 *♥️♥️♥️கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன்♥️♥️♥️*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு என்ன ? உண்மையில் கொழுப்பு உணவுகள் தீமையானதா விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்...* 
 *By மருத்துவர் கண்ணன்  அறிவியல் – ஆரோக்கியம் ! – கொழுப்பு பற்றிய மெய்யான உண்மை!🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *♥️♥️♥️கொழுப்பும் கொலஸ்ட்ராலும் ஒன்றா❓♥️♥️♥️* 


 *✍️✍️✍️“கொழுப்பு ரொம்ப நல்லது. எவ்ளோவேனா சாப்பிடுங்க” என்று நான் சொல்லப்போவது இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு கொழுப்பு மிகவும் மோசமானது அல்ல என்பதையே சொல்லப் போறேன்.* 
 *கொழுப்பு என்றால் என்ன? அதில் நிறைய வகைகள் இருக்கு. அதில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால். ஆனால் கொழுப்பு, கொலஸ்ட்ரால் இரண்டும் ஒன்று என பேசிக்கொண்டிருக்கிறோம். அது சரியல்ல.* 
 *நாம் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இதில் 25-30% உணவு கொழுப்பிலிருந்து வர வேண்டும். ஆனால் நாம் இப்போது சாப்பிடுவதில் 8-10% தான் கொழுப்பு இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை எப்படி முப்பது சதவீதமாக கூட்டிக்கொள்வது?✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முதலில் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு என்பது என்னவென்று பார்க்கலாம். ரத்தத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பு உள்ளது. “அதை சப்பிடாதே, இதை சாப்பிடாதே, கொலஸ்ட்ரால் கூடிடும்” என்று பயமுறுத்துகிறார்கள் அல்லவா ? அவர்கள் கூறும் விசயம் இந்த எல்.டி.எல் கொலஸ்ட்ரால்தான். இயல்பான நிலையில் இது 160-க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் சென்றால் இது ‘அதிகம்’ என்று சொல்லலாம். ரத்தத்துல இருக்கும் அனைத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. சர்க்கரை, புரதம், சோடியம், பொட்டாசியம் எதுவாக இருந்தாலும் இதுக்கு கீழ போனால் ’குறைவு’, அதுக்கு மேல போனால் ‘அதிகம்’னு ஒரு ரேஞ்ச் வைத்திருப்பார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️உதாரணத்துக்கு சர்க்கரையை எடுத்துக் கொண்டால், நீங்கள் சாப்பிட்ட பிறகு பார்த்தால் கூட 140mg க்கு மேல் தாண்டாது. ஒருவருக்கு 150,160 mg தாண்டிவிட்டால் அவருக்கு ’சர்க்கரை நோய்’ எனச் சொல்ல மாட்டோம். அது 200-ஐ தாண்டினால் மட்டும்தான் அவருக்கு ‘சர்க்கரை நோய்’ என்று சொல்லுவோம்.  சரி அப்படியே 200-ஐ தாண்டினால் அடுத்த நாளே மாரடைப்போ  சிறுநீரகக் கோளாறோ வந்து விடுமா? வராது.* 
 *அது 200-த்தாண்டி அதிக நாட்கள் நீடித்தால்தான் நோயே வரும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது, நமது ரத்தத்தில் இருக்கும் உட்கூறுகள் இயல்பான வரையறையை தாண்டி விட்டதெனில் அடுத்த நாளே நமக்கு நோய் வந்துவிடாது. நம் உடம்பு அதனை சரி செய்வதற்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கும். ஒருவருக்கு எல்.டி.எல் பார்க்கிறீர்கள். 180 இருக்கு. உடனே டாக்டரை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடனே அவருக்கு அட்டாக் வரப் போவதும் இல்லை. உடனே சரி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்.டி.எல். அதிகமானால் அட்டாக் வரும். சிலர் வீடியோவில் சொல்வது போல் கொழுப்பு இருந்தால் பாதிப்பு இல்லை என்று சொல்வது தவறு. எல்.டி.எல். அதிகமானால் இருதய நோய், பக்கவாதம் வரும்.✍️✍️✍️* 


 *🛑🛑🛑எல்.டி.எல். – எச்.டி.எல். – ட்ரைக்லிசெரைட்ஸ் – ட்ரான்ஸ்ஃபாட் என்ன வேறுபாடு❓🛑🛑🛑*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆனால், இந்த அதிக எல்.டி.எல் என்பது நம்மிடம் எவ்வளவு பொதுவாக இருக்கிறது ? இருதய நோயோ, பக்கவாதமோ வந்த உங்கள் உறவினர், நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். கொழுப்பு அளவு, அதில் உள்ள எல்.டி.எல் அளவு எவ்வளவு இருக்கு என கேட்டுப்பாருங்கள். இயல்பாகத்தான்இருக்கும். இதுதான் உண்மை. ரொம்ப சிலருக்குத்தான் இந்த இயல்பு நிலையைத்தாண்டி அதனால் பக்கவாதம் வரும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இருதய நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கக்கூடிய ’கார்டியாக் ஸ்பெசலிஸ்டாக’ இருந்தாலும், மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பேர்தான் அப்படி வருவார்கள். எனில், பாக்கி 98% மாரடைப்பு பிரச்சினைக்கு வருபவர்களுக்கு இரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் இயல்பு நிலையில்தான் இருக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன வெனில், இந்த எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஆபத்தானதுதான். ஆனால் அதிக எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஒருவருக்கு வருவது அரிதானது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த எல்.டி.எல்-லுக்கும், உணவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? சிறிது இருக்கிறது. உணவிலேயே கொழுப்புள்ள வகைகளான தேங்காய், நல்லெண்ணெய், மாமிசங்கள் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேரடித் தொடர்பு கிடையாது. நாம் சாப்பிடும் அளவுக்கு ஏற்ற மாதிரி கூடுமா என்றால் இல்லை.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️நம் இரத்தத்தில் இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ’ட்ரைக்லிசெரைட்ஸ்’. அது 200mg-க்கு கீழே இருக்க வேண்டும். மேலே போனால் அதிக ‘ட்ரைக்லிசெரைட்ஸ்’ என்று சொல்வோம். இது பரவலாக பலருக்கும் வரக்கூடியது. 100 பேருக்கு இந்த டெஸ்ட் எடுத்தால் 60 பேருக்கு இது இருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டோம். மீண்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் எடுத்தவர்களிடம் டி.ஜி. எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். “ஆமாங்க, 220, 250 இருந்தது”என்று சொல்வார்கள். அதற்கும் இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது எதனால் வருகிறது❓✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நம்ம உணவில் இருக்கும் கொழுப்பினால் வருகிறதா? இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது ? மாவுப் பொருட்களில் இருந்து வருகிறது. ஆக, இந்த மாவுப் பொருட்களை உட்கொள்வதைக் குறைத்தால் இந்த ’ட்ரைக்லிசெரைட்ஸ்’-ம் குறைந்து விடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️அடுத்தது மூன்றாவதாக ஒரு கொழுப்பு இருக்கிறது. அது HDL  கொழுப்பு. அது நல்ல கொழுப்பு. அதாவது இந்த ஹெச்.டி.எல் 45 – 50mg இருந்தால் பக்கவாதமோ, மாரடைப்போ வரும். அது ரொம்ப குறைவு. குறைந்தது இதன் அளவு 40 இருக்க வேண்டும். அதற்கு கீழே இருந்தால் கொஞ்சம் அபாயம். ஆனால் இந்த ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்க மாத்திரையோ மருந்தோ எதுவுமே கிடையாது. உடற்பயிற்சி செய்தால் கூடும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் அது கூடும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் எல்.டி.எல். கூடும். ஆனால், குறைவாகத்தான் கூடும். கூடவே ஹெச்.டி.எல்.-ம் கூடும். இதிலிருந்தே தெரிகிறது கொழுப்புள்ள உணவுகளை எல்லாம் நாம பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்✍️✍️✍️* .

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ‘ட்ரான்ஸ்ஃபாட்’. இது உருமாறிய கொழுப்பு. இயற்கையான உணவுகளில் இக்கொழுப்பு கிடையாது. செயற்கையாக நாம் தயாரிக்கும் பண்டங்களால் உருவாகிறது. இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலைப் பற்றி தெரிந்துகொண்டோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♥️♥️♥️உண்ணும் உணவுக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம்❓♥️♥️♥️*


 *✍️✍️✍️இப்போது உணவுக்கு வருவோம்.  உணவு என வரும்போது கொலஸ்ட்ரால் என்று பேசாமல் கொழுப்பு என்று பேசியாக வேண்டும். உணவுல இருக்க கொழுப்பை விரிவாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறாத கொழுப்பு (Unsaturated Fat). இந்த இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடும் வாய்ப்பு உண்டு.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஏனெனில், இந்த நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கூட்டும் வாய்ப்பு அதிகம். இந்த நிறைவுற்ற கொழுப்பு எதில் இருக்கிறது ?. பால், நெய், வெண்ணை, தேங்காய், முட்டை மாமிசம் இவற்றில் எல்லாம் இருக்கிறது. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நேரடி தொடர்பே கிடையாது. உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக் கொள்வோம். தேங்காய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என பலரும் கூறுகின்றனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️“இவன் தேங்காய் நிறையா சாப்பிடுவான், நிறைய தேங்கா சாப்ட்டு கொலஸ்ட்ரால கூட்டிக்கிட்டான்”னு யாரையாவது கேள்விப் பட்டிருக்றீர்களா?  இருக்காது. ஆனால் எப்படி இதை உண்மை என நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த தென்னை மரம் மனுதனோடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது.* 
 *உலகில் சில மரங்கள் ஒருசில பகுதியில் இருக்கும். சில வேறு பகுதியில் மட்டும் இருக்கும். ஆனால், தென்னை மரங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கின்றன. தென்னையிலிருந்து வரும் தேங்காய் அவ்வளவு மோசமானதாக இருந்திருந்தால், ஒன்று அதை சாப்பிட்டு, மனிதன் அழிந்திருக்க வேண்டும். இல்லை மனிதன் அதை வளர்க்காமல் விட்டிருக்க வேண்டும். இதிலேர்ந்தே அது மோசமானது இல்லை என்பது நமக்கு புரிகிறது அல்லவா ❓✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தேங்காய் சாப்பிட்டு கொலஸ்ட்ரால் கூடியதாகவோ, அல்லது தேங்காய் எண்ணெயோ, தேங்காயோ சாப்பிட்டு மாரடைப்பு வந்ததாகவோ ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இதான் உண்மை.* 
 *அடுத்து பாலுக்கு வருவோம். கொழுப்புள்ள முழு பால் குடிப்பது நல்லதா? அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா? கொழுப்போடு சேர்ந்த பாலை குடிப்பதுதான் நல்லது. இதோ இரண்டு வாரம் முன்னால்கூட ஒரு மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது. அதிலும் இதுதான் சொல்லப்படுகிறது. இது நானாக சொல்வது கிடையாது. விஞ்ஞானம் சொல்வதையேதான் நான் சொல்கிறேன். ஆகவே, நாளை நீங்கள் பால் குடிக்கப் போகிறீர்கள் எனில், கெட்டியாக அப்படியே முழு பாலை குடியுங்கள். ஒன்றும் தவறில்லை🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️அதே மாதிரிதான் மாமிசங்கள். மாமிசம் என்றாலே கொழுப்பு அதிகமாக இருக்கும் என நமக்குத் தெரியும். அதில் கொழுப்புதான் இருக்கிறது. கார்போஹைட்ரேட் கிடையாது. ஆனால், குறிப்பாக இந்த மட்டன் மேல், ஒரு தப்பான பார்வை இருக்கிறது. “மட்டன் சாப்பிடாதே” என்று ஆலோசனை கூறுவார்கள். சிலர் நெஞ்சு வலியோடு வருவார்கள். என்ன பிரச்சினை எனக் கேட்டால், “முந்தா நேத்து கொஞ்சம் மட்டன் சாப்பிட்டேன். அதான் அட்டாக் வந்திருச்சிங்க” எனக் கூறுவார்கள்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கோழி இறைச்சியில எவ்வளவு கொழுப்பு இருக்கிறதோ, அதைவிட மட்டனில் இருக்கும் கொழுப்பு அதிகம்தான். கோழியை 100 கிராம் சாப்பிட்டால் மட்டனை 50 கிராம் சாப்பிடுங்கள். அவ்வளவுதான் வித்தியாசமே தவிர, மட்டனை ஏதோ விசம் மாதிரி பார்க்கக் கூடாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️சுருக்கமாகக் கூறினால், நம்மிடையே இருக்கும் கொழுப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவைதான். நாம் அளவாக, முன்னரே சொன்னது போல் 30% சாப்பிட்டோம் எனில், நமது உடலில் எல்.டி.எல். அதிகரிக்க வாய்ப்பே கிடையாது. வெறுமனே ”இதை சாப்டாதே, அதை சாப்டாதே” எனக் கூறுவது மிக மிக தவறு. சொல்லப்போனால் இந்த மாதிரி சொல்லி பயமுறுத்தி, கொழுப்பு சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசியையும் கோதுமையும் சாப்பிட்டு வியாதியை கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.✍️✍️✍️* 


 *🧃🥫எந்த ஆயில் நல்ல ஆயில் ❓🧃🥫*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எண்ணெய் குறித்து கொஞ்சம் வருவோம். எந்த ஆயில் நல்ல ஆயில்? நான் எல்லோருக்கும் சொல்வேன். நம்ம பாரம்பரிய எண்ணெய்தான் நல்ல எண்ணெய். நாம் தமிழகத்தில் என்ன எண்ணெய் உபயோகிக்கிறோம் ? நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உபயோகிக்கிறோம். நம் கேரள நண்பர்கள் தேங்காய் எண்ணை உபயோகிக்கிறார்கள். வட இந்தியர்கள் இந்த கடுகெண்ணெய் உபயோகிக்கிறார்கள்.  அதெல்லாம் நல்லதுதான். இதெல்லாம்தான் வருடக்கணக்கில் நமது மரபணுக்களில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இந்த நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்லது. நிறைவுற்ற கொழுப்பு அதில் இல்லை. நிறைவுறாத கொழுப்புதான் இருக்கிறது. எந்த எண்ணெயாகவும் இருக்கட்டும். எண்ணெயில செய்யப்பட்ட பொருட்களை அன்றைக்கே சாப்பிட்டால்தான் நல்லது. அதனால் கெட்ட கொழுப்பு கூடும் வாய்ப்பு கிடையாது. எண்ணெயில் செய்த பொருட்களை வைத்து, நான்கைந்து நாட்கள் கழித்து உண்ணும் போதுதான் நல்ல எண்ணெய் கெட்ட எண்ணெயாக மாறுகிறது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எப்படியெனில், நாம் அனைவரும் மிகவும் பயப்பட வேண்டிய ஒரு கொழுப்பு இருக்கிறது. அது   டிரான்ஸ்ஃபேட்.  எந்தப் பொருளும் கெடாமல் இருக்க வேண்டுமெனில் அதில் ஒன்று அதிகமான உப்பு இருக்க வேண்டும். அல்லது அதிகமான ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும். நெய்யோ, எண்ணெயோ, வெண்ணெயோ, இயற்கையாக நமக்கு எப்படிக் கிடைக்கிறதோ, அதை அப்படியே வைத்து உணவுப் பொருட்களை செய்தால் விரைவில் கெட்டுப் போய்விடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️எந்த ஒரு திண்பண்டமும் கெடாமல் இருக்கிறதெனில் அதில் டிரான்ஸ் பேட் இருக்கிறது எனப் பொருள். அதற்கு என்ன பொருள் ? அனைத்து பேக்கரி உணவுகள்,  கேக், சிப்ஸ், முறுக்கு, காரசேவு என கடையில் போய் நாம் வாங்கும் பொட்டலம் போடப்பட்ட  உணவுப் பொருட்கள் அனைத்திலும் ‘டிரான்ஸ்ஃபேட்’ இருக்கிறது. இந்த உண்மையை நாம் அதிகமானோர் உணரவில்லை. நாம் சாப்பிடும் பிஸ்கட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கிறது. ஆகவே இந்த மாதிரி உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது மிகப்பெரிய தவறு.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஏன் பொரித்த உணவுகளைஅதிகமா சாப்பிடக்கூடாதுனு எனக் கூறுகிறோமெனில், பொரிக்கும்போதுதான் அந்த எண்ணையின் தன்மை மாறுகிறது. அனைத்து எண்ணெய்க்கும் ’ஸ்மோக் பாயிண்ட்’ என்றொரு எல்லை இருக்கிறது. எண்ணையை சூடு செய்யும்போத், அது கொதித்து ஆவியா மாறும் நிலை. அந்த அளவுக்கு ஆவியா மாறும் நிலைமைக்குப் போகாமல், அதற்கு முன்னரே பண்டங்களை தயாரித்தால் அதில் அவ்வளவு ஆபத்து கிடையாது. ஆவியாகத் தொடங்கிய பின் பண்டங்கள் தயாரிக்கும்போதுதான், அந்த எண்ணையின் தன்மை மாறி கெட்ட எண்ணெயாக மாறுகிறது. அதில் ’டிரான்ஸ்ஃபேட்’ உருவாகிறது. இதுதான் பிரச்சினை. இதே எண்ணையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் என்ன ஆகும்❓🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️அதில் HNE என சொல்லக் கூடிய நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் அதிகமானால், அது நேரடியாக இதயத்தைத் தாக்கும். நேரடியாக மூளையைத் தாக்கும். ’அல்ஜீமர் டிசீஸ்’ என சொல்லக் கூடிய நோய் வரும். புற்றுநோய்க்குக் கூட அது அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, எண்ணெயை ஒருதடவைக்கு மேலே சூடு படுத்தக்கூடாது.* 
 *ஆகவே, தாளிப்பதற்கு, பொரிப்பதற்கு, குழம்பு வைக்கையில்க் எண்ணெயை பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால்,  ஒரு முறை பயன்படுத்தின எண்ணெயை வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தினாலே, அந்த எண்ணெயில் செய்த பலகாரங்களை வைத்து சாப்பிட்டாலோதான் பிரச்சினை.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பருப்பு சாதம் சாப்பிடலாம். நன்றாக நெய் ஊற்றி சாப்பிடலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் எண்ணெயில செய்த பலகாரங்களை வைத்து சாப்பிடுவது போல இருந்தால், இப்போதாவதுதான் சாப்பிட வேண்டும். மிக்சர், காராசேவு, சிப்ஸ் பின்னர் விளம்பரப்படுத்துகிறார்களே குர்குரே, ஹால்திகிராம் சினாக்ஸ் என அனைத்திலும் ட்ரான்ஸ்ஃபேட் இருக்கிறது. இந்த ’டிரான்ஸ்ஃபேட் மிகவும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவும். பல நாள் வைத்து உண்ணும் தின்பண்டங்களில் மற்றும் எளிதாக நமக்கு கிடைக்கும் பொருள் கெடாமல் இருக்கிறது என்றால் அதில் டிரான்ஸ்ஃபேட் இருக்கிறது என்று பொருள். அதை நாம் கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது.* 
 *இந்த எண்ணெயைப் பற்றி பேசும்பொழுது, பலரும் பொதுவாக கேட்கும் கேள்வி, “வடை சாப்பிடலாமா?”  வடை மிகவும் நல்ல உணவுப் பொருள்தான். வடை உளுந்து அல்லது வேறு ஏதாவது பருப்பில்தான் செய்யப்படுகிறது. அதில் வேண்டிய அளவு புரதமும், கார்போஹேட்ரேட்டும் இருக்கிறது. எண்ணெயில் செய்யப்படுவதால் கூடவே கொழுப்பின் கூறுகளும் வருகின்றன🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️ஆக, கொழுப்பு, புரதச் சத்து, மாவுச்சத்து கலந்த உணவுதான் வடை. அதனால் வடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நீங்கள் வீட்டில் செய்தால் 5 வடை கூட சாப்பிடலாம், ஒன்றும் செய்யாது. ஆனால் வெளியில் மட்டும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.* 
 *ஏனெனில், முதலில், அவர்கள் எந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. இரண்டாவதாக, அந்த எண்ணெயை அதிகமாக கொதிக்க வச்சி, அதுல டிரான்ஸ்ஃபேட்ஸ் உருவாகுற மாதிரி செய்வார்கள். மூன்றாவது, அதே எண்ணெயை மறுபடியும் மறுபடியும் உபயோகப்படுத்துவார்கள். காலையில கொதித்த எண்ணையை ஆறவச்சி மதியம் பயன்படுத்துவார்கள். மதிய எண்ணெயை இரவுக்குப் பயன்படுத்துவார்கள். இரவு எண்ணையை அடுத்தநாள் காலையில பயன்படுத்துவார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எங்காவது, எப்போதாவது வெளியே செல்லும்போது 2 வடை, பஜ்ஜி போன்றவை சாப்பிட்டால் தவறில்லை. சில காலையில் 11 மணிக்கு 2 வடை, ஒரு டீ,  மாலை 4 மணிக்கு 2 பஜ்ஜி, 1 டீ என சாப்பிடுவார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.* 
 *வீட்டில் நமக்குத் தெரியும் என்பதால் அது நல்ல எண்ணெயாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் வெளியில் வாங்கி சாப்பிடும் பொருட்களில் உள்ள எண்ணெய் குறித்து அச்சப்படவேண்டும். கொஞ்சமும் யோசித்துப் பார்க்காமல் நாம் சில பொருட்களின் மீது முத்திரை குத்தி வைத்துவிடுகிறோம். நாம் அனைத்து கொழுப்பையும் மாற்றி மாற்றி சாப்பிட்டால், எதுவும் நமது உடலில் பெரியதாக தங்காது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஒன்றை குறிப்பாக புரிந்து கொள்ளவேண்டும். நம்மால் அதிக கொழுப்பை சாப்பிட முடியாது. ஒரு கோப்பை பழச்சாறில் 300 கலோரி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை 5 நிமிடத்தில் நாம் குடித்துவிடுவோம். அதே 300 கலோரி இருக்கும் நல்லெண்ணையோ, நெய்யோ, வெண்ணையோ கொடுத்தால் நம்மால் சாப்பிட முடியாது. கொழுப்பு உணவுவகைகளும் சரி, புரதங்களும் சரி, நம்மை சாப்பிடத் தூண்டாது. சாப்பிட்டது போதும் என சொல்ல வைக்கும். ஆனால், இந்த கொழுப்பையும் மாவுப் பொருட்களையும் சேர்த்த பண்டங்கள் தயாரித்தால் அது நம்மை அதிகம் உண்ண வைக்கிறது. எனவே, நாம மாவுப் பொருட்களை தவிர்ப்போம் என முடிவெடுத்தாலே கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிட மாட்டோம்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உருளைக் கிழங்கை வைத்து ‘பிங்கர் பிரை’ என்றொரு உணவை செய்கிறார்கள். “நான் உருளைகிழங்கு அதிகமாக சாப்பிட மாட்டேன்” என முடிவெடுத்துவிட்டால், அதிகம் சாப்பிடமுடியாது. பீட்சா, பர்கர் இவற்றில் எல்லாம் பெரிய ’பன்’ இருக்கும். பீட்சாவுல பெரிய அளவு ஆக்கிரமிப்பது இந்த ரொட்டிதான். அதில் டிரான்ஸ்ஃபேட்-டும் இருக்கிறது. ஆகவே, இது போன்ற கண்ணுக்குத் தெரியும் மாவுப் பொருட்களை சாப்பிடமாட்டேன் என முடிவு செய்து விட்டால், கண்டிப்பாக உங்களால் அதிகம் கொழுப்பு சாப்பிட முடியாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️உங்களிடம் ஒரு கிலோ சிக்கன் கொடுத்தால் அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. அதிகபட்சம் 200, 300 கிராம் அளவோடு நிறுத்திக் கொள்வோம். இதே சிக்கனை பிரியாணியோடு வைத்தால்  இரண்டையும் மற்றி மாற்றி சாப்பிட்டு முடித்து விடுவோம். ஆகவே மாவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டாலேயே, கொழுப்பை நீங்கள் அதிகமாக சாப்பிட முடியாது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதனால் பயமில்லாமல் தினமும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டுக் கொண்டு சாப்பிடலாம், வெண்ணெய் சாப்பிடலாம், தேங்காய் சாப்பிடலாம், நல்லெண்ணை சாப்பிடலாம். ஆனால் இவை அனைத்தும் வேண்டிய அளவுக்குதான். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️கொழுப்பு மீதான நமது பயத்தைத் தவிர்ப்போம். சரிவிகித உணவில் 30% வரை கொழுப்பு இருக்கலாம் என நாம் ஏற்கனவே பார்த்தது போல அந்த அளவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டால் நமக்கு நோய் வரும் வாய்ப்பு குறைகிறது✍️✍️✍️.* 


 *🛑🛑🛑கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்❓🛑🛑🛑*


 *🧶இது லேட்டஸ்ட்!🧶* 

‘ *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வாழ்க்கையில் பல விஷயங்கள் எளிமை யானவையே. உங்களால்தான் அவை சிக்கலாகிவிடுகின்றன’ என்கிறார் ஓஷோ. இந்த பொன்மொழியை வழிமொழிவதுபோல, கொலஸ்ட்ராலுக்கு ஆதரவாக வெளிவந்திருக்கும் சமீபத்திய அமெரிக்க ஆய்வு பலத்த விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.* 
 *கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொலஸ்ட்ரால் என்பதைக் கேட்டாலே அலறுகிற அளவுக்குத்தான் நம்மிடம் புரிதல் இருக்கிறது. ஆனால், US Dietary guidelines advisory committee 2015 வெளியிட்டிருக்கும் ஆய்வில், `இதய நோய்கள், பருமன், நீரிழிவு பிரச்னைகளுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் சரி செய்ய வேண்டும்’ என்று லாஜிக்கலாக பல காரணங்களை பட்டியல் இட்டிருக்கிறது. இதற்கு மருத்துவ வட்டாரத்தில் ஆதரவும் பெருகி வருகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *‘✍️✍️✍️உணவின் மூலம் கிடைக்கும் டயட்டரி கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. கொலஸ்ட்ராலைவிட அதிகப்படியான சர்க்கரை மற்றும் பாலீஷ் செய்யப்பட்ட தானிய உணவுகளே இதய நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய இடம்பிடிக்கின்றன’ என்கிறது அந்த ஆய்வு. ‘40 வயசாயிருச்சா? எல்லாவற்றையும் தியாகம் செய்து, பத்திய சாப்பாடு சாப்பிடுங்கள்’ என்று சொல்வதையும் தவறு என்கிறது இந்த ஆய்வு✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️காரணம், உணவின் மூலம் கிடைக்கும் கொலஸ்ட்ரால் 15% மட்டுமே. மீதி 85% கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரலே உற்பத்தி செய்கிறது என்பதும் இதில் கவனிக்க வேண்டிய தகவல். 10 கிராம் கொலஸ்ட்ரால் உணவுகளினால் ரத்தத்தில் 10 கிராம் கொலஸ்ட்ரால் உண்டாகும் என்று நினைப்பதும் தவறானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இதய நோய் சிகிச்சை மருத்துவரான ஜாய் தாமஸிடம் இந்த ஆய்வு பற்றி கேட்டோம்...‘‘இந்த ஆய்வை நான் வரவேற்கிறேன். நம் உடலுக்கு அத்தியாவசியமான ஒரு சத்து கொழுப்பு. தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துகள் எப்படி நம் உடலுக்குத் தேவையோ, அதேபோல கொழுப்புச் சத்தும் நமக்குத் தேவை. 30 வயது வரை நம் உடலின் உருவாக்கத்துக்கும், அதன் பிறகு சேதமடையும் செல்களை சரி செய்யவும் ஹார்மோன்களின் இயல்பான செயல்பாட்டுக்கும் கொழுப்பு தேவை. ஆனால், கொலஸ்ட்ரால் பற்றி மக்களிடம் தேவையற்ற பயம் இருக்கிறது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பருமன், இதய நோய்கள், நீரிழிவு என்று பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குபவை கொலஸ்ட்ரால் என்பதெல்லாம் உண்மை தான். அவையெல்லாம் LDL, VLDL, ட்ரைகிளிசராய்ட்ஸ் போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புகள் போன்ற பிரச்னைகள் இந்த கெட்ட கொழுப்புகளாலேயே வருகின்றன.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️நாம் பயம் கொள்ள வேண்டியது கொலஸ்ட்ராலைவிட அதைச் சார்ந்த மற்ற விஷயங்களில்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது அந்த ஆய்வு. அளவு கடந்த சர்க்கரை பயன்பாடு, உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், புகைப்பழக்கம், மன அழுத்தம், மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவைதான் பருமனையும் நீரிழிவையும் உண்டாக்குகின்றன. இதயத்துக்கு எதிரிகள் இந்தப் பிரச்னைகள்தான் என்று சர்வதேச அளவிலான பொது காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அது இப்போது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியிருக்கிறது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கார்போஹைட்ரேட் உணவும் தேவைக்கேற்ப செலவழிந்ததுபோக, மீதமுள்ளது கொழுப்பாக மாறிவிடும். அதனால் கார்போஹைட்ரேட் உணவுகளையும் அளவு தாண்டாமலேயே பயன்படுத்த வேண்டும். ‘கொழுப்பு ஆபத்து’ என்று ஒரேயடியாக ஒதுக்கி விடாமல் கொழுப்பைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது கற்றுக் கொள்வதுதான் அவசியமானது. ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் கொலஸ்ட்ரால் நமக்கு உதவும் ஹீரோ. தவறாகப் பயன்படுத்தினால் நம்மைக் காலி செய்யும் வில்லன்’’ என்கிறார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♥️♥️♥️கொலஸ்ட்ரால் கொலைகாரனா❓♥️♥️♥️*


 *✍️✍️✍️Chol  என்ற வார்த்தை பித்தம் என்பதையும், Sterols என்ற வார்த்தை ஸ்டீராய்டு  ஹார்மோனையும் குறிக்கிறது. அதாவது, கொலஸ்ட்ராலே உடலில் அதிகம் சுரக்கிற ஒரு வகை ஸ்டீராய்டு ஹார்மோன்தான். அதனால்தான் இது அசைவ உணவுகளில் அதிகம்  இருப்பதாகக் கூறுகிறார்கள். பித்தநீர்தான் வைட்டமின்களைப் பிரித்து  ரத்தத்தில் கலக்க உதவி செய்கிறது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொழுப்பின் அளவு 10க்கும் குறைவாக  இருப்பதை சைஸ் ஸீரோ என்கிறார்கள். கரீனா கபூர், கேத்ரினா கைஃப் போன்ற  மும்பை நடிகைகளும், ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களும் எடையை குறைப்பதற்காக இந்த அபாயகரமான வேலையைச் செய்கிறார்கள். சராசரி கொழுப்பின் அளவை பராமரிப்பதே அனைவருக்கும் அவசியம். ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் செக்ஸ்  ஹார்மோன்கள் சீராக செயல்பட கொலஸ்ட்ரால் அவசியம். கொலஸ்ட்ரால் குறைந்தாலோ,  அதிகமானாலோ செக்ஸ் ஹார்மோன்களில் குளறுபடி ஏற்பட்டு ஆண்களிடம் ஆண்  தன்மையையும், பெண்களிடம் பெண் தன்மையையும் குறைப்பதோடு தாம்பத்திய வாழ்வையும் பல வழிகளில் சிக்கலாக்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️உடலில் கால்சியம் அளவை பராமரிப்பதிலும், உணவில் இருக்கிற சத்துகளை உடலின் செல்களுக்குக் கொண்டு செல்வதிலும்,  சூரிய ஒளியிலிருந்து சருமம்  சேதமாகாமல் தடுப்பதிலும் கொலஸ்ட்ராலுக்குப்  பெரும் பங்கு உண்டு. முட்டை கொலஸ்ட்ராலைக் கொண்டு வருகிறது   என்ற கருத்து இருக்கிறது. அதனாலேயே மஞ்சள் கருவை விட்டுவிட்டு பலரும்  சாப்பிடுகிறார்கள். அது அவசியம் இல்லை✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️விளையாட்டு வீரர்கள், பாடி  பில்டர்கள் போன்றோர் மிக அதிக அளவில் முட்டையை சேர்த்துக் கொள்கிறார்கள்.  ஆனாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். சாப்பிடுவதற்கேற்ற உடல் உழைப்பு  கட்டாயம் என்பது மட்டுமே நாம் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். முன்பு  கொலஸ்ட்ரால் பிரச்னை என்றால் மாத்திரைகள் மட்டுமே தருவார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இப்போது  வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், உணவுப் பழக்கத்தை ஒழுங்குக்கு கொண்டு வர  வேண்டும், தியானம் செய்ய வேண்டும் என்று கொலஸ்ட்ராலைச் சார்ந்த மற்ற  பிரச்னைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே நல்ல மாற்றம்தானே! ‘கொழுப்பு ஆபத்து’ என்று ஒரேயடியாக ஒதுக்கிவிடாமல் கொழுப்பைப் பயன்படுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொள்வதுதான் இப்போது அவசியமானது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே இது போன்ற கொலஸ்ட்ரால் உணவுகளை தவிர்த்து மருத்துவர்கள் கூறுவது போல நாம் நம் உடல் நலத்தை பாதுகாப்பொம்மாக🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰