Wednesday, October 28, 2020

மீனுடன் எதை சேர்த்து சாப்பிட்ட கூடாது

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவுமீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தாம்!!👹👹👹*



 *🛑🛑🛑இன்று நாம் பார்க்க இருப்பது மீனுடன் எதை சேர்த்து சாப்பிட்ட கூடாது ஆதனால் உண்டாக்கும் ஆபத்து என்ன என்று பார்ப்போம்🛑🛑🛑* 


 *🐬🐬🐬மீனுடன் இந்த ஒரு பொருளை சேர்த்து சாப்பிட்டால் ஆபத்தாம்!!🐬🐬🐬* 


 *✍️✍️✍️நம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை விதித்திருக்கிறார்கள். எந்த உணவோட எதை சேர்த்தால் நன்மைகள் இருமடங்காகும்.* 
 *அல்லது கேடு விளைவிக்கும் என்று அனுபவப் பூர்வமாக ஆராய்ந்து அதனை நடைமுறைப்படுத்தி வாழ்கிறார்கள். ஆயுர்வேதம் என்பது நமது உடலில் சக்தி தரும் புள்ளிகளை தூண்டி நமது ஆரோகியத்தை வளப்படுத்துவதான். ஆகவே ஆயுர்வேதத்தை நாம் தாரளமாக நம்பலாம்.* 
 *அவ்வாறு இரு வேறு உணவுப் பொருட்கள் ஒரே குணத்தைப் பெற்றிருந்தால் சில சமயங்களில் அவை குறிப்பிட்ட கேடை உடலில் உண்டு பண்ணும். அத்தகைய இரு பொருட்களை சேர்த்து உண்ணக் கூடாது. எடுத்துக்காட்டாக மீன் மற்றும் முள்ளங்கியை சொல்லலாம்✍️✍️✍️.* 

 *🐬🐬🐬திப்பிலி மற்றும் மீன் 🐬🐬🐬:* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️திப்பிலியுடன் மீன், அல்லது தேன் கலந்து சாப்பிட்டால் இறப்பு உண்டாகி விடுமாம். மீன் பொறித்த எண்ணெய் கூட திப்பிலியுடன் பயன்படுத்தக் கூடாது என ஆயுர்வேதத்தில் சொல்லப்படுகிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🍼🍼🍼பாலும்,  மீனும்🐬🐬🐬* 


 *✍️✍️✍️பாலும், மீனும் ஆரோக்கியமான உணவுகள் என்பதில் உங்களுக்கு துளியும் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் இந்த இரண்டுமே நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று நம் அம்மா சொல்வதை அடிக்கடி கேட்டிருப்போம். அம்மாவுக்கு அவரின் அம்மா சொல்லியிருப்பார். ஆனால் அது உண்மையா என்பதை நமது அம்மாவும் யோசித்திருக்க மாட்டார், நாமும் யோசிக்க மாட்டோம். இவை இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடலாமா என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♀️அறிவியல் உண்மை அறிவியல்ரீதியாக பார்க்கும் போது இந்த இரண்டு பொருட்களையும் ஒரே நேரத்தில் சாப்பிடாமல் இருக்க வேண்டுமெனில் இதில் ஏதாவது ஒரு பொருளால் அலர்ஜி இருக்க வேண்டும். அதனை தவிர்த்து இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேறு எந்த காரணமும் இல்லை. இவை இரண்டும் ஒன்றாக சாப்பிடப்படும் போது அவை உடலில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஊட்டச்சத்துக்கள் இந்த இரண்டு பொருளையும் தனித்தனியாக பார்த்தால் இரண்டுமே அதிகளவு ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. இதனால்தான் பல கலாச்சாரங்களில் உடல்நிலை விரைவில் முன்னேற்றமடைய இந்த இரண்டு உணவையும் பரிந்துரைத்தார்கள்✍️✍️✍️.* 


 *🛑எப்போது சாப்பிடக்கூடாது❓🛑* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மீன் சரியாக சமைக்கப்படாததாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த இரண்டு உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. அதனை மீறி சாப்பிட்டால் அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற பொருளுடன் மீனை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

சுவனம் 🔥* ⤵️ *தடுக்கப்பட்டவர்கள் - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

                 *🔥 சுவனம் 🔥*
                               ⤵️
           *தடுக்கப்பட்டவர்கள் 🔥*

              *✍🏻....தொடர் ➖0️⃣1️⃣*

           *☄️ முன்னுரை ☄️*

*🏮🔥அல்லாஹ் இவ்வுலகில் மனிதனை படைத்ததின் நோக்கமே அவனை வணங்கி, வழிபட்டு, அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த முறைப்படி நம் வாழ்வை அமைத்து இறுதியில் மரணம் நம்மை வந்து அடையும்.* ஒவ்வொருவரின் வாழ்க்கை முறைக்கு தகுந்தாற்போல் அவரவர்களுக்கு சுவர்க்கம், நரகம் நிச்சயிக்கப்படும். *ஆனால், சொர்க்கத்திற்கு செல்லக் கூடியவர்கள் ஒரு சில செயல்கள் அவர்களை சுவர்க்கம் செல்வதை விட்டும் தடுத்துவிடுகின்றது. அவ்வாறு தடுக்கும் செயல்கள் எது என்பதை உணர்ந்து அவை அனைத்தையும் முற்றிலும் பூரணிக்க கூடியவர்களாக ஆக வேண்டும்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️உறுதி செய்யப்பட்ட*
               *சுவர்க்கம், நரகம்*

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، *قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ يَقُولُ مَرُّوا بِجَنَازَةٍ فَأَثْنَوْا عَلَيْهَا خَيْرًا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏‏ وَجَبَتْ ‏"‏‏.‏ ثُمَّ مَرُّوا بِأُخْرَى فَأَثْنَوْا عَلَيْهَا شَرًّا فَقَالَ ‏"‏ وَجَبَتْ ‏"‏‏.‏ فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ مَا وَجَبَتْ قَالَ ‏"‏ هَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَهَذَا أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا فَوَجَبَتْ لَهُ النَّارُ، أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الأَرْضِ ‏"‏‏.‏"*

_*🍃ஒரு முறை, மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்து சென்றபோது, இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது’ என்றார்கள். மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்றபோது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி இகழ்ந்து பேசலாயினர்.*_ _அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘உறுதியாகிவிட்டது?’ எனக் கூறினார்கள். உமர்(ரலி) ‘எது உறுதியாகிவிட்டது?’ எனக் கேட்டதும்_ _*நபி(ஸல்) அவர்கள், ‘இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள். எனவே இவருக்கு நரகம் உறுதியாகிவிட்டது. ஆக நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாகவீர்கள்’ எனக் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
                *அனஸ் (ரலி),*
           *📚 நூல் : புஹாரி 367 📚*

ஒருவரின் செயல்பாடுகளை வைத்தே சுவர்க்கம் நரகம் பற்றி தீர்மானிக்கக்கூடிய அளவிற்கு அவரவரின் நிலை இருக்கின்றது. 

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃 - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 10 ]*

                *⛱️ இறுதி பாகம் ⛱️*

*☄️உபரி தொழுகைகள்☄️*

*🏮🍂கடமையல்லாத நாமாக விரும்பித் தொழும் உபரியான தொழுகைகளும் சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்யும் ஓர் தகுதியாகும். இதைத் தெரிவிக்கும் சான்றுகள் கணக்கற்ற வகையில் இருந்தாலும் பிலால் (ரலி) அவர்களின் நிகழ்விலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.*

_*🍃(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகையின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாக நீர் கருதிச் செய்துவரும் நற்செயல் ஒன்றைப் பற்றிக் கூறுவீராக. ஏனெனில், சொர்க்கத்தில் உமது காலணி ஓசையை எனக்கு முன்னால் நான் செவியுற்றேன்” என்று சொன்னார்கள்.*_

_*அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இஸ்லாத்தில் இணைந்த பிறகு பயனுள்ளதாகக் கருதி அப்படி (பிரமாதமாக) எந்த நற்செயலையும் செய்யவில்லை. ஆயினும், நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் முழுமையாக உளு செய்தாலும், அந்த உளூ மூலம் நான் தொழ வேண்டும் என அல்லாஹ் என் விஷயத்தில் விதித்துள்ள அளவுக்கு (கூடுதல் தொழுகை யை)த் தொழாமல் இருந்ததில்லை. (இதுவே இஸ்லாத்தில் நான் செய்த பயனுள்ள நற்செயலாகக் கருதுகிறேன்)” என்று கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்*
              *அபூஹூரைரா (ரலி),*
    
             *📚 முஸ்லிம் 4854 📚*

*🏮🍂சொர்க்கம் செல்பவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும், எதையெல்லாம் சொர்க்கவாசிகளுக்குரிய தகுதிகளாக அல்லாஹ், ரசூல் குறிப்பிடுகிறார்கள் என்பதை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அறிந்து கொண்டோம். இந்த அடிப்படையில் நன்மைகளைச் செய்து, நல்லடியார்களாக மரணிக்கிற பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்து அருள்புரிவானாக!*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

*தொடர் முடிந்தது*
                    ⤵️⤵️⤵️
              *அல்ஹம்துலில்லாஹ்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி❓

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்💊💊💊* 


*👶👧👶குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி❓👶👧👶*


 *🧚‍♀️🧜‍♀️🧍‍♀️குளியல் பொடி தயாரிக்கும் முறை 1 (Bath Powder)🧚‍♀️🧜‍♀️🧍‍♀️* 


*♻️♻️♻️தேவையானவை பொருட்கள் :♻️♻️♻️*


 *பச்சைப்பயறு – ½ கிலோ* 

 *கடலப்பருப்பு – ½ கிலோ* 

 *கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்* 

 *பூலாங்கிழங்கு – 10 கிராம்* 

 *ஆவாரம்பூ – 50 கிராம்* 

 *ரோஜா – 50 கிராம்* 

 *செம்பருத்தி பூ – 10* 

 *வேப்பிலை – 30 கிராம்* 

 *துளசி – 30 கிராம்* 

 *வெட்டிவேர் – 10 கிராம்* 


*♻️♻️செய்முறை:♻️♻️*


 *👆👆👆மேற்சொன்ன  அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.👆👆👆* 



 *✍️✍️✍️இவையெல்லாம் காய வைத்துதான் விற்கப்படும். நீங்களே வீட்டில் இருப்பதைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதையே குளியல் பொடியாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு ஏற்றது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🙋‍♂️யார் பயன்படுத்தலாம்❓🙋‍♀️* 


 *✍️✍️✍️குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இதைப் பயன்படுத்தலாம்.* 
 *ஆனால், ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் இதைப் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை மட்டும் நீக்கிவிட்டு இதைப் பயன்படுத்தலாம்✍️✍️✍️.* 


 *♻️பலன்கள்:♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குழந்தைகளுக்கு இந்தப் பொடி மிகவும் நல்லது. குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு ஏற்றது. இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயை நீக்காமல் பாதுகாக்க உதவும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️துர்நாற்றம் வருவது தவிர்க்கப்படும். உடலில் எங்கும் சரும தொந்தரவுகள் வராது. வெயில் காலங்களில் ஏற்படும் சரும தொல்லைகள் வராமல் தடுக்கப்படும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சருமத்தில் கருமை இருந்தால் அவை நீங்கும். பரு, மரு, கருத்திட்டுக்கள் வராமல் தடுக்கப்படும். வியர்க்குரு தொல்லையும் இருக்காது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️பெண் குழந்தைகள், பெண்கள் இதைப் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும். மீண்டும் முடி சருமத்தில் வளராது. வாக்சிங் செய்யத் தேவையில்லை.✍️✍️✍️* 


 *🧚‍♀️🧜‍♀️🧍‍♀️குளியல் பொடி தயாரிக்கும் முறை 2🧚‍♀️🧜‍♀️🧍‍♀️* 


 *♻️♻️♻️தேவையானவை பொருட்கள் :♻️♻️♻️* 


 *ரோஜா இதழ் – 150 கிராம்* 

 *பச்சைப்பயறு – 200 கிராம்* 

 *கடலப்பருப்பு – 100 கிராம்* 

 *கஸ்தூரி மஞ்சள் – 25 கிராம்* 

 *வேப்பிலை – 50 கிராம்* 

 *ஆரஞ்சு தோல் – 3-4*
 *பழத்தின் தோல்கள்* 

 *பாதாம் – 10* 

 *எக்சோரா பூ (இட்லி பூ) – 1 கப்* 

 *செம்பருத்தி பூ – 10* 


 *♻️♻️செய்முறை:♻️♻️♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவை அனைத்தையும் நன்றாக காய வைத்துக் கொள்ளவும்.* 
 *கடையில் கொடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் குளியல் பொடி ரெடி🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🥎யார் பயன்படுத்தலாம்❓🥎* 


 *✍️✍️✍️குழந்தைகள், பெண்கள் அனைவரும் பயன்படுத்தலாம். ஆண் குழந்தைகளுக்கு, ஆண்கள் பயன்படுத்துவதாக இருந்தால் கஸ்தூரி மஞ்சளை நீக்கிவிட்டு பயன்படுத்தலாம்✍️✍️✍️.* 


 *♻️பலன்கள்:♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தோலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் இதில் உள்ளன.* 
 *இயற்கையாகவே சருமம் பொலிவு பெறும். மினுமினுப்பான தோற்றம் கிடைக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️வியர்வைத் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.* 
*சருமத்தில்இயற்கையான பளிச் பிரகாசம் தெரியும். சருமத்தை* *ஆரோக்கியமாகப் பராமரிக்க உதவும்.✍️✍️✍️*

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே இது போன்ற குளியல் பொடி செய்து இயற்கை முறையில் நம் உடலை நமே காத்துக்கொள்வேம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃 - 9

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 09 ]*

*☄️நோயாளியை*
               *நலம் விசாரித்தல்*

*🏮🍂நோய்வாய்ப்பட்டவர்களை நலம் விசாரிப்பது சொர்க்கவாசிகளின் குணமாகும்.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர், திரும்பி வரும்வரை சொர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்.*_

*🎙️அறிவிப்பவர் :*
             *ஸவ்பான் (ரலி),*

               *📚 முஸ்லிம் 5017 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️நல்லறங்களின்*
                   *சங்கமிப்பு☄️*

*🏮🍂ஒரு அடியார் நல்லறங்கள் சங்கமிக்கும் சங்கமமாக இருப்பார் எனில் அவர் சொல்லும் தகுதியைச் சந்தேகமறப் பெறுகிறார் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள்.*

_அபூபக்கர் ரலி அவர்கள் தொடர்புடைய நிகழ்வில் நபிகள் நாயகம் கூறிய இத்தகவலை பின்வரும் நிகழ்வில் அறிந்து கொள்கிறோம்._

_*🍃(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை (பிரேதம்) பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்’ என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எந்த மனிதர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்*
            *அபூஹூரைரா (ரலி),*

           *📚 முஸ்லிம் 1865 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

பெண்கள் சம்மந்தமான நோய்கள் விழிப்புணர்வு

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு👹👹👹*


 *👩‍🦰👩‍🦰👩‍🦰இன்று நாம் பார்க்க இருப்பது பெண்கள் சம்மந்தமான நோய்கள் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை👩‍🦰👩‍🦰👩‍🦰* 


 *🧕🧕🧕பெண்களே இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க அப்புறம் ஆபத்து!🧕🧕🧕* 


 *✍️✍️✍️நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான். ஆனால், அவர்களுக்கு உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. பெண்கள் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அறிகுறிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சில பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை…✍️✍️✍️.* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதே போல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வாறு நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் அது கட்டி, 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


* *✍️✍️✍️மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒரு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி. இந்த நிலையை ஆங்கிலத்தில் “Intraductal Papillomas” என்று கூறுகின்றனர். இதை அறுவை சிகிச்சை மூலமாக தான் சரி செய்ய வேண்டும்✍️✍️✍️.* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பெண்கள் தலைவலிக்கு எல்லாம் மருத்துவரிடம் செல்ல மாட்டார்கள். அவர்களே மருந்து வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், தொடர்ந்து பெண்கள் மத்தியில் உண்டாகும் கடுமையான தலைவலி நரம்பு மண்டலத்தில் உண்டாகியிருக்கும் இன்பெக்ஷனின் அறிகுறியாக இருக்கலாம். அல்லது மூளையில் இரத்தம் கசிவதன் அறிகுறியாக இருக்கலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


* *✍️✍️✍️மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்✍️✍️✍️.* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


* *✍️✍️✍️எந்தவித பயிற்சி அல்லது டயட் இல்லாமல், உடல் எடை திடீரென குறைவது சிலவகை புற்றுநோய்களின் அறிகுறிகளாக இருக்கலாம். அல்லது வேறு சில அபாயமான உடல்நல குறைபாடுகளாக இருக்கலாம்✍️✍️✍️.* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உடல் இடது அல்லது வலது பக்கங்களில் (மார்பு, வயிறு, இடுப்பு) கூர்மையான வலி உண்டாவது வலி அல்லது பிடிப்பாக இருக்கலாம். ஆனால், கூர்மையாக குத்துவது போன்ற வலி உண்டாவது குடல்வாலழற்சியின் அறிகுறியாக இருக்கலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


* *✍️✍️✍️மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.✍️✍️✍️* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப் படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்று தான். ஒருவேளை இது மஞ்சள் – பச்சை நிறத்தில், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல் / வலியுடன் வெளிப்படுகிறது எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய் . கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற அறிகுறிகள் இருக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

நாடி துடிப்பு பற்றிய மருத்துவம்

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்💊💊💊*


 *♥️♥️🧶இன்று நாம் பார்க்க இருப்பது நாடி துடிப்பு பற்றிய மருத்துவம் சார்ந்த மருந்து பற்றிய தகவல்♥️♥️♥️* 


 *🧶🧶🧶நாடி துடிப்பு நாடி துடிப்பை சீராக்கும் நித்ய கல்யாணியின் மருத்துவ பலன்கள்🧶🧶🧶* 

 *♻️♻️♻️தேவையான பொருள்♻️♻️♻️* 


 *தண்ணீர் 100 மி.லி* 

 *நித்ய கல்யாணி இலை ஒரு கைப்புடி அளவு* 


 *♻️♻️செய்முறை♻️♻️* 


 *✍️✍️✍️முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் கொதிக்கும் நீருடன் நித்ய கல்யாணியின் இலையை  போட வேண்டும்.இதன்  பிறகு நீரை 100 மி.லி இருந்து 50 மி.லி வரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.மேலும் சுண்ட காய்ச்சின நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இவ்வாறு உருவான நீரை சிறியவர்கள் 10 மி.லி மற்றும் பெரியவர்கள் 50 மி.லி தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளிலும் குடித்து வந்தால் நாடி துடிப்பு சீராகும்✍️✍️✍️.*   


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே இது போன்ற இயற்கை மருந்து தயாரிச்சி நம் நாடி துடிப்பை சீராக்குவோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

கொலஸ்ட்ரால் சம்மந்தமான மருத்துவம்

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்💊💊💊*


 *♥️♥️♥️இன்று நாம் பார்க்க இருப்பது கொலஸ்ட்ரால் சம்மந்தமான மருத்துவம் சார்ந்த மருந்து பற்றிய தகவல்♥️♥️♥️*


 *✍️✍️✍️கொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய, நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..!* 
 *இன்றைய காலகட்டத்தில் நாம் வீட்டு உணவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து கொண்டே வருகிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மையாக உள்ளது. வீட்டில் இருக்கும் உணவுகளை நாம் சாப்பிட்டு வந்த வரைக்கும் உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால், தொப்பை போன்ற பிரச்சினை குறைந்த அளவில் இருந்தது.* 
 *குறிப்பாக கொலஸ்ட்ரால் அளவுக்கு அதிகமாக சேர்வதால் உடல் எடை கூடுதல், இதய கோளாறுகள், புற்றநோய் போன்ற மிக மோசமான நிலைக்கு நாம் வந்து விடுகின்றோம். இதனை சரி செய்ய சித்தர்கள் பல வகையான ஆயுர்வேத மூலிகைகளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்துள்ளார். அவை என்னென்ன என்பதை இனி அறிவோம்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஏன் இந்த நிலை..?இன்று நாம் இந்த மோசமான நிலையை அடைந்ததற்கு பல முதன்மையான காரணிகள் கூறப்படுகிறது. குறிப்பாக விரைவு உணவுகள், பாக்கெட்டில் அடைபட்ட உணவுகள், பீட்சா, பர்கர், செயற்கை இனிப்பு மற்றும் நிறமூட்டிய உணவுகள் போன்றவற்றால் தான் நாம் இன்று உடல் பருமனால் அவதிப்படுகின்றோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️தேனும் பூண்டும்..!நம்மில் பலருக்கு ஆயுர்வேத முறைகளில் பயன்படுத்த கூடிய வீட்டு மூலிகைகளை பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல மூலிகைகள் நமது வீட்டிலே எளிமையாக கிடைக்கிறது. அந்த வரிசையில் இந்த பூண்டும், தேனும் அடங்கும். இவை உங்களின் கொலஸ்ட்ராலை கரைக்க பெரிதும் உதவும்.✍️✍️✍️* 


 *♻️♻️♻️தயாரிக்கும் முறை எப்படி..❓♻️♻️♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முதலில் 20 பூண்டு பற்களை எடுத்து கொண்டு தோல் உறித்து, அதனை நசுக்கி கொள்ளவும். பிறகு இதனை கண்ணாடி ஜாடியில் போட்டு கொண்டு, இவை மூழ்கும் அளவுக்கு தேனை இதனுள் சேர்க்க வேண்டும். இதனை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வரலாம். மேலும், இந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தி வரலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஜின்செங்க் (குண சிங்கி)* 
 *ஏராளமான மூலிகை தன்மைகளை தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கும் ஒரு அற்புத மூலிகை இந்த ஜின்செங்க் (குண சிங்கி). ஆசிய கண்டத்தில் பல நூற்றாண்டுகளாக இவை பயன்படுத்தப்படுகிறது. கொலஸ்ட்ராலை முற்றிலுமாக வெளியேற்றி இதயத்தை பாதுகாப்பாக வைக்க இவை உதவுகிறது. MOST READ: தினமும் 10 கடலை சாப்பிட்டால், நீண்ட ஆயுளுடன் இருக்கலாமாம்..! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!✍️✍️✍️* 


 *🍻🍻🍻மூலிகை டீ தெரியுமா..❓🍻🍻🍻* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உங்களின் உடலுக்கு பேராபத்தை தர கூடிய கெட்ட கொலஸ்ட்ராலை எளிதாக கரைக்க கூடிய சக்தி இந்த மூலிகை டீயிற்கு உள்ளது. epigallocatechin gallate (EGCG) என்கிற முக்கிய மூல பொருள் இந்த மூலிகை டீயில் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை சீக்கிரமாகவே இவை கரைத்து விடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️♻️♻️தேவையானவை பொருட்கள் :-♻️♻️♻️* 


 *கிரீன் டீ 1 ஸ்பூன்* 

 *தேன் 1 ஸ்பூன்* 

 *தண்ணீர் 1 கப்* 


 *♻️♻️தயாரிக்கும் முறை...♻️♻️* 


 *✍️✍️✍️முதலில் 1 கப் நீரில் கிரீன் டீயை சேர்த்து கொண்டு 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விட்டு எடுத்து கொள்ளவும். பிறகு இதனை வடிகட்டி தேன் சேர்த்து கலந்து குடிக்கவும். இந்த டீயை தினமும் 2 முறை குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் கரைந்து விடும்✍️✍️✍️.* 


 *🍃🍃🍃துளசி🍃🍃🍃* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மூலிகை தன்மை அதிகம் நிறைந்த இந்த துளசியின் மகிமை நம் அனைவருக்கும் நன்கு தெரிந்தது தான். என்றாலும், இவை கொலஸ்ட்ராலை சரி செய்ய உதவும் என்பதே புதுவிதமான தகவல். உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதில் துளசி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️♻️எளிய முறை இதுவே..!♻️♻️* 


 *✍️✍️✍️1 எலுமிச்சை இருந்தால் போதும். உடல் எடை சார்ந்த பல பிரச்சினைகளுக்கு முற்றுபுள்ளியை வைத்து முடியும். குறிப்பாக இந்த வைத்தியம் உங்களின் கொலஸ்ட்ராலை குறைக்க பெரிதும் உதவும்.✍️✍️✍️* 


 *♻️♻️♻️தேவையானவை பொருட்கள் :-♻️♻️♻️* 


 *தேன் 1 ஸ்பூன்* 

 *எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்* 

 *1 கப் நீர்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️MOST READ: கல்லீரல் கொழுப்பை உடனடியாக வெளியேற்ற கூடிய முன்னோர்களின் ஆயுர்வேத முறைகள்..!🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *♻️♻️♻️தயாரிக்கும் முறை...♻️♻️♻️* 


 *✍️✍️✍️முதலில் நீரை சூடு செய்து கொள்ளவும். மிதமான சூட்டில் இருக்கும் பட்சத்தில் இதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த டீயை வெறும் வயிற்றில் தினமும் 1 முறை குடித்து வரலாம்.* 
 *கொத்தமல்லி உணவில் கடைசியாக சேர்த்து கொள்ளும் இந்த சிறிய வகை கீரைக்கு எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது. இதனை தினமும் உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் எளிதில் கொலஸ்ட்ராலை இவை கரைத்து விடும். அத்துடன் கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதையும் இது தடுக்கும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆளி விதைகள் இந்த சிறிய வகை விதைகளை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், கடைகளில் எளிதாக கிடைக்க கூடிய இந்த விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கிறது. மேலும், இவை மாரடைப்பு போன்றவற்றை தடுக்கவும் செய்கிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️1 ஸ்பூன் சாப்பிடுங்க..! வைட்டமின் ஈ அதிகம் நிறைந்துள்ள வெந்தயத்தை தினமும் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் உங்களின் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வர கூடும். மேலும், இவை செரிமான மண்டலத்தையும் சீராக வைத்து கொள்ளும். எனவே, இந்த பதிவில் கூறிய ஆயுர்வேத முறைகளை பயன்படுத்தி கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் பிறருடன் பகிர்ந்து பயனடைய செய்யுங்கள் நண்பர்களே.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️MOST READ: ஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🛑🛑🛑ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து! வேகமாக பகிருங்கள்.🛑🛑🛑*


 *✍️✍️✍️உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும்.* 
 *இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும்.* 
 *இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.✍️✍️✍️* 


 *♻️♻️♻️தேவையான பொருட்கள்:*♻️♻️♻️

  *விதை இல்லாத பேரிச்சம் பழம் – 3-4,* 

 *இஞ்சி சாறு- 2 டீஸ்பூன்* 


 *🥚🥚🥚பேரிச்சம் பழம்:🥚🥚🥚*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🥐🥐🥐இஞ்சி:🥐🥐🥐* 


 *✍️✍️✍️இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும்✍️✍️✍️.* 


 *♻️♻️செய்முறை:♻️♻️*

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️♻️♻️உட்கொள்ளும் முறை:♻️♻️♻️*


 *✍️✍️✍️தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.✍️✍️✍️* 


 *♻️குறிப்பு:♻️*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற இயற்கை முறையில் மருந்துகளை செய்து கொலஸ்ட்ரால் வராமல் தடுத்து நலமுடன் வாழ்வோம்✍️✍️✍️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

கொழுப்பு(Cholesterol கொலஸ்ட்ரால்) சம்மந்தமான மருத்துவ குறிப்புகள்

*♻️♻️♻️இயற்கை மருத்துவம் வழங்கும் அறிந்து கொள்வோம்♻️♻️♻️*


 *📚📚📚இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்📚📚📚* 


 *♥️♥️♥️இன்று நாம் பார்க்க இருப்பது கொழுப்பு(Cholesterol கொலஸ்ட்ரால்) சம்மந்தமான மருத்துவ குறிப்புகள்♥️♥️♥️*


 *🧶கொலஸ்ட்ரால்🧶 என்றால் 🧶என்ன❓🧶* 


 *✍️✍️✍️கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது.* *80 % கொலஸ்ட்ராலைச் நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.✍️✍️✍️* 


 *♥️♥️♥️கொலஸ்ட்ராலின் தன்மைகள்♥️♥️♥️🌹* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.* 
 *கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.* 
 *நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது✍️✍️✍️.* 


 *♥️♥️♥️எது நல்ல கொலஸ்ட்ரால்❓♥️♥️♥️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.* 
 *இந்த LDL – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு Atherosclerosis என்று பெயர்.* 
 *ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein).🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *♥️♥️♥️கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்♥️♥️♥️.* 


 *✍️✍️✍️Total Cholesterol <—>200 mgm% மொத்த கொலஸ்ட்டிரால்* 
 *LDL Cholesterol <—>100 mgm%குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்* 
 *VLDLCholesterol <—>30 mgm%மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்* 
 *Triglycerides <130 mgm% முக்கிளிசரைடுகள்* 
 *HDLP Cholesterol <50 mgm %  மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்* 
 *மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு.* *மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.* 
 *குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு நோய் வர வாய்ப்புகள் அதிகம்.* 
 *முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.✍️✍️✍️* 


 *🥥🍚🍦🍼🥃🍺🍯🥣கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்🥥🍚🍦🍼🥃🍺🍯🥣* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)* 
 *எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.* 
 *ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.* 
 *இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.* 
 *பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.* 
 *பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.* 
 *இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.* 
 *அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.* 
 *இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்✍️✍️✍️.* 


 *🍇🍒🍓ஒமேகா 3 உள்ள உணவுகள்🍇🍒🍓* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🥭🍍🍐🍏🍈ஒமேகா 6 உள்ள உணவுகள்🥭🍍🍐🍏🍈* 


 *✍️✍️✍️சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.✍️✍️✍️* 

 *🧃🥫🥃🍚🍦எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது❓🧃🥫🥃🍚🍦* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்  நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:* 
· *சீரான உடற்பயிற்சி* 
· *உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.* 
· *புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.* 
· *மது அருந்துவதைத் தவிர்ப்பது* 
· *அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.* 
· *அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.* 
· *பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .* 
· *யோகாசன பயிற்சி செய்வது,* 
· *தியானப் பயிற்சி செய்வது .✍️✍️✍️* 


 *♥️♥️♥️கொழுப்பு என்றாலே அது ஆபத்தானதா ! – மருத்துவர் BRJ கண்ணன்♥️♥️♥️*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொழுப்புக்கும் கொலஸ்ட்ராலுக்கும் உள்ள தொடர்பு என்ன ? உண்மையில் கொழுப்பு உணவுகள் தீமையானதா விளக்குகிறார் மருத்துவர் BRJ கண்ணன்...* 
 *By மருத்துவர் கண்ணன்  அறிவியல் – ஆரோக்கியம் ! – கொழுப்பு பற்றிய மெய்யான உண்மை!🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *♥️♥️♥️கொழுப்பும் கொலஸ்ட்ராலும் ஒன்றா❓♥️♥️♥️* 


 *✍️✍️✍️“கொழுப்பு ரொம்ப நல்லது. எவ்ளோவேனா சாப்பிடுங்க” என்று நான் சொல்லப்போவது இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கும் அளவிற்கு கொழுப்பு மிகவும் மோசமானது அல்ல என்பதையே சொல்லப் போறேன்.* 
 *கொழுப்பு என்றால் என்ன? அதில் நிறைய வகைகள் இருக்கு. அதில் ஒன்றுதான் கொலஸ்ட்ரால். ஆனால் கொழுப்பு, கொலஸ்ட்ரால் இரண்டும் ஒன்று என பேசிக்கொண்டிருக்கிறோம். அது சரியல்ல.* 
 *நாம் சரிவிகித உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். இதில் 25-30% உணவு கொழுப்பிலிருந்து வர வேண்டும். ஆனால் நாம் இப்போது சாப்பிடுவதில் 8-10% தான் கொழுப்பு இருக்கிறது. இந்த 10 சதவீதத்தை எப்படி முப்பது சதவீதமாக கூட்டிக்கொள்வது?✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முதலில் ரத்தத்தில் இருக்கும் கொழுப்பு என்பது என்னவென்று பார்க்கலாம். ரத்தத்தில் LDL என்ற கெட்ட கொழுப்பு உள்ளது. “அதை சப்பிடாதே, இதை சாப்பிடாதே, கொலஸ்ட்ரால் கூடிடும்” என்று பயமுறுத்துகிறார்கள் அல்லவா ? அவர்கள் கூறும் விசயம் இந்த எல்.டி.எல் கொலஸ்ட்ரால்தான். இயல்பான நிலையில் இது 160-க்கு கீழே இருக்க வேண்டும். இதற்கு மேல் சென்றால் இது ‘அதிகம்’ என்று சொல்லலாம். ரத்தத்துல இருக்கும் அனைத்துக்கும் ஒரு வரையறை இருக்கிறது. சர்க்கரை, புரதம், சோடியம், பொட்டாசியம் எதுவாக இருந்தாலும் இதுக்கு கீழ போனால் ’குறைவு’, அதுக்கு மேல போனால் ‘அதிகம்’னு ஒரு ரேஞ்ச் வைத்திருப்பார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️உதாரணத்துக்கு சர்க்கரையை எடுத்துக் கொண்டால், நீங்கள் சாப்பிட்ட பிறகு பார்த்தால் கூட 140mg க்கு மேல் தாண்டாது. ஒருவருக்கு 150,160 mg தாண்டிவிட்டால் அவருக்கு ’சர்க்கரை நோய்’ எனச் சொல்ல மாட்டோம். அது 200-ஐ தாண்டினால் மட்டும்தான் அவருக்கு ‘சர்க்கரை நோய்’ என்று சொல்லுவோம்.  சரி அப்படியே 200-ஐ தாண்டினால் அடுத்த நாளே மாரடைப்போ  சிறுநீரகக் கோளாறோ வந்து விடுமா? வராது.* 
 *அது 200-த்தாண்டி அதிக நாட்கள் நீடித்தால்தான் நோயே வரும். இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டியது, நமது ரத்தத்தில் இருக்கும் உட்கூறுகள் இயல்பான வரையறையை தாண்டி விட்டதெனில் அடுத்த நாளே நமக்கு நோய் வந்துவிடாது. நம் உடம்பு அதனை சரி செய்வதற்கு ஒரு வாய்ப்புக் கொடுக்கும். ஒருவருக்கு எல்.டி.எல் பார்க்கிறீர்கள். 180 இருக்கு. உடனே டாக்டரை பார்க்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடனே அவருக்கு அட்டாக் வரப் போவதும் இல்லை. உடனே சரி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்.டி.எல். அதிகமானால் அட்டாக் வரும். சிலர் வீடியோவில் சொல்வது போல் கொழுப்பு இருந்தால் பாதிப்பு இல்லை என்று சொல்வது தவறு. எல்.டி.எல். அதிகமானால் இருதய நோய், பக்கவாதம் வரும்.✍️✍️✍️* 


 *🛑🛑🛑எல்.டி.எல். – எச்.டி.எல். – ட்ரைக்லிசெரைட்ஸ் – ட்ரான்ஸ்ஃபாட் என்ன வேறுபாடு❓🛑🛑🛑*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆனால், இந்த அதிக எல்.டி.எல் என்பது நம்மிடம் எவ்வளவு பொதுவாக இருக்கிறது ? இருதய நோயோ, பக்கவாதமோ வந்த உங்கள் உறவினர், நண்பரிடம் கேட்டுப்பாருங்கள். கொழுப்பு அளவு, அதில் உள்ள எல்.டி.எல் அளவு எவ்வளவு இருக்கு என கேட்டுப்பாருங்கள். இயல்பாகத்தான்இருக்கும். இதுதான் உண்மை. ரொம்ப சிலருக்குத்தான் இந்த இயல்பு நிலையைத்தாண்டி அதனால் பக்கவாதம் வரும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இருதய நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்கக்கூடிய ’கார்டியாக் ஸ்பெசலிஸ்டாக’ இருந்தாலும், மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பேர்தான் அப்படி வருவார்கள். எனில், பாக்கி 98% மாரடைப்பு பிரச்சினைக்கு வருபவர்களுக்கு இரத்தத்தில் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் இயல்பு நிலையில்தான் இருக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன வெனில், இந்த எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஆபத்தானதுதான். ஆனால் அதிக எல்.டி.எல். கொலஸ்ட்ரால் ஒருவருக்கு வருவது அரிதானது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த எல்.டி.எல்-லுக்கும், உணவுக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? சிறிது இருக்கிறது. உணவிலேயே கொழுப்புள்ள வகைகளான தேங்காய், நல்லெண்ணெய், மாமிசங்கள் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் கொஞ்சம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. ஆனால் நேரடித் தொடர்பு கிடையாது. நாம் சாப்பிடும் அளவுக்கு ஏற்ற மாதிரி கூடுமா என்றால் இல்லை.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️நம் இரத்தத்தில் இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ’ட்ரைக்லிசெரைட்ஸ்’. அது 200mg-க்கு கீழே இருக்க வேண்டும். மேலே போனால் அதிக ‘ட்ரைக்லிசெரைட்ஸ்’ என்று சொல்வோம். இது பரவலாக பலருக்கும் வரக்கூடியது. 100 பேருக்கு இந்த டெஸ்ட் எடுத்தால் 60 பேருக்கு இது இருக்கும். ஆனால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறந்து விட்டோம். மீண்டும் உங்கள் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். கொலஸ்ட்ரால் ரிப்போர்ட் எடுத்தவர்களிடம் டி.ஜி. எவ்வளவு இருக்கிறது என்று கேட்டுப் பாருங்கள். “ஆமாங்க, 220, 250 இருந்தது”என்று சொல்வார்கள். அதற்கும் இருதய நோய்க்கும், பக்கவாதத்துக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது எதனால் வருகிறது❓✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நம்ம உணவில் இருக்கும் கொழுப்பினால் வருகிறதா? இல்லை. அது உணவில் இருக்கும், கார்ப்போஹைட்ரேட், மாவுப் பொருட்களால் வருகிறது. எல்.டி.எல். கொலஸ்ட்ராலை விட ‘ட்ரை க்லிசெரைட்ஸ்’ அதிக பிரச்சனையாக இருக்கிறது. அது எதில் இருந்து வருகிறது ? மாவுப் பொருட்களில் இருந்து வருகிறது. ஆக, இந்த மாவுப் பொருட்களை உட்கொள்வதைக் குறைத்தால் இந்த ’ட்ரைக்லிசெரைட்ஸ்’-ம் குறைந்து விடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️அடுத்தது மூன்றாவதாக ஒரு கொழுப்பு இருக்கிறது. அது HDL  கொழுப்பு. அது நல்ல கொழுப்பு. அதாவது இந்த ஹெச்.டி.எல் 45 – 50mg இருந்தால் பக்கவாதமோ, மாரடைப்போ வரும். அது ரொம்ப குறைவு. குறைந்தது இதன் அளவு 40 இருக்க வேண்டும். அதற்கு கீழே இருந்தால் கொஞ்சம் அபாயம். ஆனால் இந்த ஹெச்.டி.எல். அளவை அதிகரிக்க மாத்திரையோ மருந்தோ எதுவுமே கிடையாது. உடற்பயிற்சி செய்தால் கூடும். நல்ல கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட்டால் அது கூடும். கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் எல்.டி.எல். கூடும். ஆனால், குறைவாகத்தான் கூடும். கூடவே ஹெச்.டி.எல்.-ம் கூடும். இதிலிருந்தே தெரிகிறது கொழுப்புள்ள உணவுகளை எல்லாம் நாம பயமில்லாமல் எடுத்துக் கொள்ளலாம்✍️✍️✍️* .

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இன்னொரு மோசமான கொழுப்பு இருக்கு. அது ‘ட்ரான்ஸ்ஃபாட்’. இது உருமாறிய கொழுப்பு. இயற்கையான உணவுகளில் இக்கொழுப்பு கிடையாது. செயற்கையாக நாம் தயாரிக்கும் பண்டங்களால் உருவாகிறது. இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலைப் பற்றி தெரிந்துகொண்டோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♥️♥️♥️உண்ணும் உணவுக்கும் கொழுப்புக்கும் என்ன சம்பந்தம்❓♥️♥️♥️*


 *✍️✍️✍️இப்போது உணவுக்கு வருவோம்.  உணவு என வரும்போது கொலஸ்ட்ரால் என்று பேசாமல் கொழுப்பு என்று பேசியாக வேண்டும். உணவுல இருக்க கொழுப்பை விரிவாக இரண்டு விதமாக பிரிக்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat), நிறைவுறாத கொழுப்பு (Unsaturated Fat). இந்த இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடும் வாய்ப்பு உண்டு.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஏனெனில், இந்த நிறைவுற்ற கொழுப்பு இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் கூட்டும் வாய்ப்பு அதிகம். இந்த நிறைவுற்ற கொழுப்பு எதில் இருக்கிறது ?. பால், நெய், வெண்ணை, தேங்காய், முட்டை மாமிசம் இவற்றில் எல்லாம் இருக்கிறது. ஆனால் முன்னர் குறிப்பிட்டது போல நேரடி தொடர்பே கிடையாது. உதாரணத்திற்கு தேங்காயை எடுத்துக் கொள்வோம். தேங்காய சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என பலரும் கூறுகின்றனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️“இவன் தேங்காய் நிறையா சாப்பிடுவான், நிறைய தேங்கா சாப்ட்டு கொலஸ்ட்ரால கூட்டிக்கிட்டான்”னு யாரையாவது கேள்விப் பட்டிருக்றீர்களா?  இருக்காது. ஆனால் எப்படி இதை உண்மை என நம்பிக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த தென்னை மரம் மனுதனோடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றது.* 
 *உலகில் சில மரங்கள் ஒருசில பகுதியில் இருக்கும். சில வேறு பகுதியில் மட்டும் இருக்கும். ஆனால், தென்னை மரங்கள் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கின்றன. தென்னையிலிருந்து வரும் தேங்காய் அவ்வளவு மோசமானதாக இருந்திருந்தால், ஒன்று அதை சாப்பிட்டு, மனிதன் அழிந்திருக்க வேண்டும். இல்லை மனிதன் அதை வளர்க்காமல் விட்டிருக்க வேண்டும். இதிலேர்ந்தே அது மோசமானது இல்லை என்பது நமக்கு புரிகிறது அல்லவா ❓✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தேங்காய் சாப்பிட்டு கொலஸ்ட்ரால் கூடியதாகவோ, அல்லது தேங்காய் எண்ணெயோ, தேங்காயோ சாப்பிட்டு மாரடைப்பு வந்ததாகவோ ஒரு ஆய்வும் சொல்லவில்லை. இதான் உண்மை.* 
 *அடுத்து பாலுக்கு வருவோம். கொழுப்புள்ள முழு பால் குடிப்பது நல்லதா? அதில் உள்ள கொழுப்பையெல்லாம் எடுத்தி விட்டு தரப்படும் ’ஸ்கிம்முடு பால்’ குடிப்பது நல்லதா? கொழுப்போடு சேர்ந்த பாலை குடிப்பதுதான் நல்லது. இதோ இரண்டு வாரம் முன்னால்கூட ஒரு மருத்துவ அறிக்கை வந்திருக்கிறது. அதிலும் இதுதான் சொல்லப்படுகிறது. இது நானாக சொல்வது கிடையாது. விஞ்ஞானம் சொல்வதையேதான் நான் சொல்கிறேன். ஆகவே, நாளை நீங்கள் பால் குடிக்கப் போகிறீர்கள் எனில், கெட்டியாக அப்படியே முழு பாலை குடியுங்கள். ஒன்றும் தவறில்லை🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️அதே மாதிரிதான் மாமிசங்கள். மாமிசம் என்றாலே கொழுப்பு அதிகமாக இருக்கும் என நமக்குத் தெரியும். அதில் கொழுப்புதான் இருக்கிறது. கார்போஹைட்ரேட் கிடையாது. ஆனால், குறிப்பாக இந்த மட்டன் மேல், ஒரு தப்பான பார்வை இருக்கிறது. “மட்டன் சாப்பிடாதே” என்று ஆலோசனை கூறுவார்கள். சிலர் நெஞ்சு வலியோடு வருவார்கள். என்ன பிரச்சினை எனக் கேட்டால், “முந்தா நேத்து கொஞ்சம் மட்டன் சாப்பிட்டேன். அதான் அட்டாக் வந்திருச்சிங்க” எனக் கூறுவார்கள்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. கோழி இறைச்சியில எவ்வளவு கொழுப்பு இருக்கிறதோ, அதைவிட மட்டனில் இருக்கும் கொழுப்பு அதிகம்தான். கோழியை 100 கிராம் சாப்பிட்டால் மட்டனை 50 கிராம் சாப்பிடுங்கள். அவ்வளவுதான் வித்தியாசமே தவிர, மட்டனை ஏதோ விசம் மாதிரி பார்க்கக் கூடாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️சுருக்கமாகக் கூறினால், நம்மிடையே இருக்கும் கொழுப்புள்ள உணவுகள் பெரும்பாலும் பாதுகாப்பானவைதான். நாம் அளவாக, முன்னரே சொன்னது போல் 30% சாப்பிட்டோம் எனில், நமது உடலில் எல்.டி.எல். அதிகரிக்க வாய்ப்பே கிடையாது. வெறுமனே ”இதை சாப்டாதே, அதை சாப்டாதே” எனக் கூறுவது மிக மிக தவறு. சொல்லப்போனால் இந்த மாதிரி சொல்லி பயமுறுத்தி, கொழுப்பு சாப்பிடுவதற்குப் பதிலாக அரிசியையும் கோதுமையும் சாப்பிட்டு வியாதியை கொண்டு வந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.✍️✍️✍️* 


 *🧃🥫எந்த ஆயில் நல்ல ஆயில் ❓🧃🥫*


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எண்ணெய் குறித்து கொஞ்சம் வருவோம். எந்த ஆயில் நல்ல ஆயில்? நான் எல்லோருக்கும் சொல்வேன். நம்ம பாரம்பரிய எண்ணெய்தான் நல்ல எண்ணெய். நாம் தமிழகத்தில் என்ன எண்ணெய் உபயோகிக்கிறோம் ? நல்லெண்ணெய், கடலை எண்ணெய் உபயோகிக்கிறோம். நம் கேரள நண்பர்கள் தேங்காய் எண்ணை உபயோகிக்கிறார்கள். வட இந்தியர்கள் இந்த கடுகெண்ணெய் உபயோகிக்கிறார்கள்.  அதெல்லாம் நல்லதுதான். இதெல்லாம்தான் வருடக்கணக்கில் நமது மரபணுக்களில் இருக்கிறது. அதை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இந்த நல்லெண்ணெய் உண்மையிலேயே நல்லது. நிறைவுற்ற கொழுப்பு அதில் இல்லை. நிறைவுறாத கொழுப்புதான் இருக்கிறது. எந்த எண்ணெயாகவும் இருக்கட்டும். எண்ணெயில செய்யப்பட்ட பொருட்களை அன்றைக்கே சாப்பிட்டால்தான் நல்லது. அதனால் கெட்ட கொழுப்பு கூடும் வாய்ப்பு கிடையாது. எண்ணெயில் செய்த பொருட்களை வைத்து, நான்கைந்து நாட்கள் கழித்து உண்ணும் போதுதான் நல்ல எண்ணெய் கெட்ட எண்ணெயாக மாறுகிறது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எப்படியெனில், நாம் அனைவரும் மிகவும் பயப்பட வேண்டிய ஒரு கொழுப்பு இருக்கிறது. அது   டிரான்ஸ்ஃபேட்.  எந்தப் பொருளும் கெடாமல் இருக்க வேண்டுமெனில் அதில் ஒன்று அதிகமான உப்பு இருக்க வேண்டும். அல்லது அதிகமான ட்ரான்ஸ்ஃபேட் இருக்க வேண்டும். நெய்யோ, எண்ணெயோ, வெண்ணெயோ, இயற்கையாக நமக்கு எப்படிக் கிடைக்கிறதோ, அதை அப்படியே வைத்து உணவுப் பொருட்களை செய்தால் விரைவில் கெட்டுப் போய்விடும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️எந்த ஒரு திண்பண்டமும் கெடாமல் இருக்கிறதெனில் அதில் டிரான்ஸ் பேட் இருக்கிறது எனப் பொருள். அதற்கு என்ன பொருள் ? அனைத்து பேக்கரி உணவுகள்,  கேக், சிப்ஸ், முறுக்கு, காரசேவு என கடையில் போய் நாம் வாங்கும் பொட்டலம் போடப்பட்ட  உணவுப் பொருட்கள் அனைத்திலும் ‘டிரான்ஸ்ஃபேட்’ இருக்கிறது. இந்த உண்மையை நாம் அதிகமானோர் உணரவில்லை. நாம் சாப்பிடும் பிஸ்கட், ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கிறது. ஆகவே இந்த மாதிரி உணவுகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் அது மிகப்பெரிய தவறு.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஏன் பொரித்த உணவுகளைஅதிகமா சாப்பிடக்கூடாதுனு எனக் கூறுகிறோமெனில், பொரிக்கும்போதுதான் அந்த எண்ணையின் தன்மை மாறுகிறது. அனைத்து எண்ணெய்க்கும் ’ஸ்மோக் பாயிண்ட்’ என்றொரு எல்லை இருக்கிறது. எண்ணையை சூடு செய்யும்போத், அது கொதித்து ஆவியா மாறும் நிலை. அந்த அளவுக்கு ஆவியா மாறும் நிலைமைக்குப் போகாமல், அதற்கு முன்னரே பண்டங்களை தயாரித்தால் அதில் அவ்வளவு ஆபத்து கிடையாது. ஆவியாகத் தொடங்கிய பின் பண்டங்கள் தயாரிக்கும்போதுதான், அந்த எண்ணையின் தன்மை மாறி கெட்ட எண்ணெயாக மாறுகிறது. அதில் ’டிரான்ஸ்ஃபேட்’ உருவாகிறது. இதுதான் பிரச்சினை. இதே எண்ணையை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினால் என்ன ஆகும்❓🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️அதில் HNE என சொல்லக் கூடிய நச்சுப் பொருட்கள் உருவாகின்றன. இந்த நச்சுப் பொருட்கள் அதிகமானால், அது நேரடியாக இதயத்தைத் தாக்கும். நேரடியாக மூளையைத் தாக்கும். ’அல்ஜீமர் டிசீஸ்’ என சொல்லக் கூடிய நோய் வரும். புற்றுநோய்க்குக் கூட அது அடிப்படையாக இருக்கிறது. ஆகவே, எண்ணெயை ஒருதடவைக்கு மேலே சூடு படுத்தக்கூடாது.* 
 *ஆகவே, தாளிப்பதற்கு, பொரிப்பதற்கு, குழம்பு வைக்கையில்க் எண்ணெயை பயன்படுத்தலாம் தவறில்லை. ஆனால்,  ஒரு முறை பயன்படுத்தின எண்ணெயை வைத்திருந்து மீண்டும் பயன்படுத்தினாலே, அந்த எண்ணெயில் செய்த பலகாரங்களை வைத்து சாப்பிட்டாலோதான் பிரச்சினை.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பருப்பு சாதம் சாப்பிடலாம். நன்றாக நெய் ஊற்றி சாப்பிடலாம். அதில் தவறு கிடையாது. ஆனால் எண்ணெயில செய்த பலகாரங்களை வைத்து சாப்பிடுவது போல இருந்தால், இப்போதாவதுதான் சாப்பிட வேண்டும். மிக்சர், காராசேவு, சிப்ஸ் பின்னர் விளம்பரப்படுத்துகிறார்களே குர்குரே, ஹால்திகிராம் சினாக்ஸ் என அனைத்திலும் ட்ரான்ஸ்ஃபேட் இருக்கிறது. இந்த ’டிரான்ஸ்ஃபேட் மிகவும் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளவும். பல நாள் வைத்து உண்ணும் தின்பண்டங்களில் மற்றும் எளிதாக நமக்கு கிடைக்கும் பொருள் கெடாமல் இருக்கிறது என்றால் அதில் டிரான்ஸ்ஃபேட் இருக்கிறது என்று பொருள். அதை நாம் கூடுமான வரையில் தவிர்ப்பது நல்லது.* 
 *இந்த எண்ணெயைப் பற்றி பேசும்பொழுது, பலரும் பொதுவாக கேட்கும் கேள்வி, “வடை சாப்பிடலாமா?”  வடை மிகவும் நல்ல உணவுப் பொருள்தான். வடை உளுந்து அல்லது வேறு ஏதாவது பருப்பில்தான் செய்யப்படுகிறது. அதில் வேண்டிய அளவு புரதமும், கார்போஹேட்ரேட்டும் இருக்கிறது. எண்ணெயில் செய்யப்படுவதால் கூடவே கொழுப்பின் கூறுகளும் வருகின்றன🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️ஆக, கொழுப்பு, புரதச் சத்து, மாவுச்சத்து கலந்த உணவுதான் வடை. அதனால் வடையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. நீங்கள் வீட்டில் செய்தால் 5 வடை கூட சாப்பிடலாம், ஒன்றும் செய்யாது. ஆனால் வெளியில் மட்டும் வாங்கிச் சாப்பிடக் கூடாது.* 
 *ஏனெனில், முதலில், அவர்கள் எந்த எண்ணெயை பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது. இரண்டாவதாக, அந்த எண்ணெயை அதிகமாக கொதிக்க வச்சி, அதுல டிரான்ஸ்ஃபேட்ஸ் உருவாகுற மாதிரி செய்வார்கள். மூன்றாவது, அதே எண்ணெயை மறுபடியும் மறுபடியும் உபயோகப்படுத்துவார்கள். காலையில கொதித்த எண்ணையை ஆறவச்சி மதியம் பயன்படுத்துவார்கள். மதிய எண்ணெயை இரவுக்குப் பயன்படுத்துவார்கள். இரவு எண்ணையை அடுத்தநாள் காலையில பயன்படுத்துவார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எங்காவது, எப்போதாவது வெளியே செல்லும்போது 2 வடை, பஜ்ஜி போன்றவை சாப்பிட்டால் தவறில்லை. சில காலையில் 11 மணிக்கு 2 வடை, ஒரு டீ,  மாலை 4 மணிக்கு 2 பஜ்ஜி, 1 டீ என சாப்பிடுவார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும்.* 
 *வீட்டில் நமக்குத் தெரியும் என்பதால் அது நல்ல எண்ணெயாக இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் வெளியில் வாங்கி சாப்பிடும் பொருட்களில் உள்ள எண்ணெய் குறித்து அச்சப்படவேண்டும். கொஞ்சமும் யோசித்துப் பார்க்காமல் நாம் சில பொருட்களின் மீது முத்திரை குத்தி வைத்துவிடுகிறோம். நாம் அனைத்து கொழுப்பையும் மாற்றி மாற்றி சாப்பிட்டால், எதுவும் நமது உடலில் பெரியதாக தங்காது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️ஒன்றை குறிப்பாக புரிந்து கொள்ளவேண்டும். நம்மால் அதிக கொழுப்பை சாப்பிட முடியாது. ஒரு கோப்பை பழச்சாறில் 300 கலோரி இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அதை 5 நிமிடத்தில் நாம் குடித்துவிடுவோம். அதே 300 கலோரி இருக்கும் நல்லெண்ணையோ, நெய்யோ, வெண்ணையோ கொடுத்தால் நம்மால் சாப்பிட முடியாது. கொழுப்பு உணவுவகைகளும் சரி, புரதங்களும் சரி, நம்மை சாப்பிடத் தூண்டாது. சாப்பிட்டது போதும் என சொல்ல வைக்கும். ஆனால், இந்த கொழுப்பையும் மாவுப் பொருட்களையும் சேர்த்த பண்டங்கள் தயாரித்தால் அது நம்மை அதிகம் உண்ண வைக்கிறது. எனவே, நாம மாவுப் பொருட்களை தவிர்ப்போம் என முடிவெடுத்தாலே கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிட மாட்டோம்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உருளைக் கிழங்கை வைத்து ‘பிங்கர் பிரை’ என்றொரு உணவை செய்கிறார்கள். “நான் உருளைகிழங்கு அதிகமாக சாப்பிட மாட்டேன்” என முடிவெடுத்துவிட்டால், அதிகம் சாப்பிடமுடியாது. பீட்சா, பர்கர் இவற்றில் எல்லாம் பெரிய ’பன்’ இருக்கும். பீட்சாவுல பெரிய அளவு ஆக்கிரமிப்பது இந்த ரொட்டிதான். அதில் டிரான்ஸ்ஃபேட்-டும் இருக்கிறது. ஆகவே, இது போன்ற கண்ணுக்குத் தெரியும் மாவுப் பொருட்களை சாப்பிடமாட்டேன் என முடிவு செய்து விட்டால், கண்டிப்பாக உங்களால் அதிகம் கொழுப்பு சாப்பிட முடியாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️உங்களிடம் ஒரு கிலோ சிக்கன் கொடுத்தால் அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது. அதிகபட்சம் 200, 300 கிராம் அளவோடு நிறுத்திக் கொள்வோம். இதே சிக்கனை பிரியாணியோடு வைத்தால்  இரண்டையும் மற்றி மாற்றி சாப்பிட்டு முடித்து விடுவோம். ஆகவே மாவுப் பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என சபதம் எடுத்துக் கொண்டாலேயே, கொழுப்பை நீங்கள் அதிகமாக சாப்பிட முடியாது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதனால் பயமில்லாமல் தினமும் இரண்டு தேக்கரண்டி நெய் விட்டுக் கொண்டு சாப்பிடலாம், வெண்ணெய் சாப்பிடலாம், தேங்காய் சாப்பிடலாம், நல்லெண்ணை சாப்பிடலாம். ஆனால் இவை அனைத்தும் வேண்டிய அளவுக்குதான். அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️கொழுப்பு மீதான நமது பயத்தைத் தவிர்ப்போம். சரிவிகித உணவில் 30% வரை கொழுப்பு இருக்கலாம் என நாம் ஏற்கனவே பார்த்தது போல அந்த அளவுக்கு மட்டும் எடுத்துக் கொண்டால் நமக்கு நோய் வரும் வாய்ப்பு குறைகிறது✍️✍️✍️.* 


 *🛑🛑🛑கொலஸ்ட்ரால் ஹீரோ ஆகிறானா நேற்றைய வில்லன்❓🛑🛑🛑*


 *🧶இது லேட்டஸ்ட்!🧶* 

‘ *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️வாழ்க்கையில் பல விஷயங்கள் எளிமை யானவையே. உங்களால்தான் அவை சிக்கலாகிவிடுகின்றன’ என்கிறார் ஓஷோ. இந்த பொன்மொழியை வழிமொழிவதுபோல, கொலஸ்ட்ராலுக்கு ஆதரவாக வெளிவந்திருக்கும் சமீபத்திய அமெரிக்க ஆய்வு பலத்த விவாதங்களை உருவாக்கி இருக்கிறது.* 
 *கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கொலஸ்ட்ரால் என்பதைக் கேட்டாலே அலறுகிற அளவுக்குத்தான் நம்மிடம் புரிதல் இருக்கிறது. ஆனால், US Dietary guidelines advisory committee 2015 வெளியிட்டிருக்கும் ஆய்வில், `இதய நோய்கள், பருமன், நீரிழிவு பிரச்னைகளுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் சரி செய்ய வேண்டும்’ என்று லாஜிக்கலாக பல காரணங்களை பட்டியல் இட்டிருக்கிறது. இதற்கு மருத்துவ வட்டாரத்தில் ஆதரவும் பெருகி வருகிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *‘✍️✍️✍️உணவின் மூலம் கிடைக்கும் டயட்டரி கொலஸ்ட்ராலுக்கும் இதய நோய்க்கும் நேரடியாகத் தொடர்பில்லை. கொலஸ்ட்ராலைவிட அதிகப்படியான சர்க்கரை மற்றும் பாலீஷ் செய்யப்பட்ட தானிய உணவுகளே இதய நோய்களை ஏற்படுத்துவதில் முக்கிய இடம்பிடிக்கின்றன’ என்கிறது அந்த ஆய்வு. ‘40 வயசாயிருச்சா? எல்லாவற்றையும் தியாகம் செய்து, பத்திய சாப்பாடு சாப்பிடுங்கள்’ என்று சொல்வதையும் தவறு என்கிறது இந்த ஆய்வு✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️காரணம், உணவின் மூலம் கிடைக்கும் கொலஸ்ட்ரால் 15% மட்டுமே. மீதி 85% கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரலே உற்பத்தி செய்கிறது என்பதும் இதில் கவனிக்க வேண்டிய தகவல். 10 கிராம் கொலஸ்ட்ரால் உணவுகளினால் ரத்தத்தில் 10 கிராம் கொலஸ்ட்ரால் உண்டாகும் என்று நினைப்பதும் தவறானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️இதய நோய் சிகிச்சை மருத்துவரான ஜாய் தாமஸிடம் இந்த ஆய்வு பற்றி கேட்டோம்...‘‘இந்த ஆய்வை நான் வரவேற்கிறேன். நம் உடலுக்கு அத்தியாவசியமான ஒரு சத்து கொழுப்பு. தாதுக்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற சத்துகள் எப்படி நம் உடலுக்குத் தேவையோ, அதேபோல கொழுப்புச் சத்தும் நமக்குத் தேவை. 30 வயது வரை நம் உடலின் உருவாக்கத்துக்கும், அதன் பிறகு சேதமடையும் செல்களை சரி செய்யவும் ஹார்மோன்களின் இயல்பான செயல்பாட்டுக்கும் கொழுப்பு தேவை. ஆனால், கொலஸ்ட்ரால் பற்றி மக்களிடம் தேவையற்ற பயம் இருக்கிறது.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பருமன், இதய நோய்கள், நீரிழிவு என்று பல்வேறு பிரச்னைகளை உண்டாக்குபவை கொலஸ்ட்ரால் என்பதெல்லாம் உண்மை தான். அவையெல்லாம் LDL, VLDL, ட்ரைகிளிசராய்ட்ஸ் போன்ற கெட்ட கொலஸ்ட்ரால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்புகள் போன்ற பிரச்னைகள் இந்த கெட்ட கொழுப்புகளாலேயே வருகின்றன.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️நாம் பயம் கொள்ள வேண்டியது கொலஸ்ட்ராலைவிட அதைச் சார்ந்த மற்ற விஷயங்களில்தான் என்று குறிப்பிட்டிருக்கிறது அந்த ஆய்வு. அளவு கடந்த சர்க்கரை பயன்பாடு, உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், புகைப்பழக்கம், மன அழுத்தம், மரபியல் ரீதியான காரணங்கள் போன்றவைதான் பருமனையும் நீரிழிவையும் உண்டாக்குகின்றன. இதயத்துக்கு எதிரிகள் இந்தப் பிரச்னைகள்தான் என்று சர்வதேச அளவிலான பொது காரணிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அது இப்போது ஆதாரப்பூர்வமாக நிரூபணம் ஆகியிருக்கிறது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கார்போஹைட்ரேட் உணவும் தேவைக்கேற்ப செலவழிந்ததுபோக, மீதமுள்ளது கொழுப்பாக மாறிவிடும். அதனால் கார்போஹைட்ரேட் உணவுகளையும் அளவு தாண்டாமலேயே பயன்படுத்த வேண்டும். ‘கொழுப்பு ஆபத்து’ என்று ஒரேயடியாக ஒதுக்கி விடாமல் கொழுப்பைப் பயன்படுத்துவது எப்படி என்பதை இப்போது கற்றுக் கொள்வதுதான் அவசியமானது. ஸ்மார்ட்டாக பயன்படுத்தினால் கொலஸ்ட்ரால் நமக்கு உதவும் ஹீரோ. தவறாகப் பயன்படுத்தினால் நம்மைக் காலி செய்யும் வில்லன்’’ என்கிறார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♥️♥️♥️கொலஸ்ட்ரால் கொலைகாரனா❓♥️♥️♥️*


 *✍️✍️✍️Chol  என்ற வார்த்தை பித்தம் என்பதையும், Sterols என்ற வார்த்தை ஸ்டீராய்டு  ஹார்மோனையும் குறிக்கிறது. அதாவது, கொலஸ்ட்ராலே உடலில் அதிகம் சுரக்கிற ஒரு வகை ஸ்டீராய்டு ஹார்மோன்தான். அதனால்தான் இது அசைவ உணவுகளில் அதிகம்  இருப்பதாகக் கூறுகிறார்கள். பித்தநீர்தான் வைட்டமின்களைப் பிரித்து  ரத்தத்தில் கலக்க உதவி செய்கிறது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கொழுப்பின் அளவு 10க்கும் குறைவாக  இருப்பதை சைஸ் ஸீரோ என்கிறார்கள். கரீனா கபூர், கேத்ரினா கைஃப் போன்ற  மும்பை நடிகைகளும், ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறவர்களும் எடையை குறைப்பதற்காக இந்த அபாயகரமான வேலையைச் செய்கிறார்கள். சராசரி கொழுப்பின் அளவை பராமரிப்பதே அனைவருக்கும் அவசியம். ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் செக்ஸ்  ஹார்மோன்கள் சீராக செயல்பட கொலஸ்ட்ரால் அவசியம். கொலஸ்ட்ரால் குறைந்தாலோ,  அதிகமானாலோ செக்ஸ் ஹார்மோன்களில் குளறுபடி ஏற்பட்டு ஆண்களிடம் ஆண்  தன்மையையும், பெண்களிடம் பெண் தன்மையையும் குறைப்பதோடு தாம்பத்திய வாழ்வையும் பல வழிகளில் சிக்கலாக்கும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️உடலில் கால்சியம் அளவை பராமரிப்பதிலும், உணவில் இருக்கிற சத்துகளை உடலின் செல்களுக்குக் கொண்டு செல்வதிலும்,  சூரிய ஒளியிலிருந்து சருமம்  சேதமாகாமல் தடுப்பதிலும் கொலஸ்ட்ராலுக்குப்  பெரும் பங்கு உண்டு. முட்டை கொலஸ்ட்ராலைக் கொண்டு வருகிறது   என்ற கருத்து இருக்கிறது. அதனாலேயே மஞ்சள் கருவை விட்டுவிட்டு பலரும்  சாப்பிடுகிறார்கள். அது அவசியம் இல்லை✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️விளையாட்டு வீரர்கள், பாடி  பில்டர்கள் போன்றோர் மிக அதிக அளவில் முட்டையை சேர்த்துக் கொள்கிறார்கள்.  ஆனாலும், ஆரோக்கியமாகவே இருக்கிறார்கள். சாப்பிடுவதற்கேற்ற உடல் உழைப்பு  கட்டாயம் என்பது மட்டுமே நாம் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். முன்பு  கொலஸ்ட்ரால் பிரச்னை என்றால் மாத்திரைகள் மட்டுமே தருவார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️இப்போது  வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், உணவுப் பழக்கத்தை ஒழுங்குக்கு கொண்டு வர  வேண்டும், தியானம் செய்ய வேண்டும் என்று கொலஸ்ட்ராலைச் சார்ந்த மற்ற  பிரச்னைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதுவே நல்ல மாற்றம்தானே! ‘கொழுப்பு ஆபத்து’ என்று ஒரேயடியாக ஒதுக்கிவிடாமல் கொழுப்பைப் பயன்படுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொள்வதுதான் இப்போது அவசியமானது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே இது போன்ற கொலஸ்ட்ரால் உணவுகளை தவிர்த்து மருத்துவர்கள் கூறுவது போல நாம் நம் உடல் நலத்தை பாதுகாப்பொம்மாக🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

கொழுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு👹👹👹*


 *🛑🛑🛑இன்று நாம் பார்க்க இருப்பது கொழுப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை🛑🛑🛑*


 *🧃🧃🧃சமையலுக்கு இந்த 5 எண்ணெய்களை ஒரு போதும் பயன்படுத்தி விடாதீர்கள்.. மீறினால் உயிருக்கே ஆபத்து..!🧃🧃🧃* 


 *✍️✍️✍️சாப்பாடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. கச்சிதமான உப்பு, காரம், மசாலாக்கள் சேர்த்து சமைத்த உணவை பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பாடு என்றால் வாயை பிளக்கும் பல நண்பர்கள் நம்முடனே இன்றும் சுற்றி திரிவதுண்டு. உணவின் மீது இத்தனை காதல் இருப்பது தவறில்லை.* 
 *ஆனால், சாப்பிட கூடிய உணவு எத்தகைய தரம் கொண்டவையாக உள்ளது என்பது தான் மிக முக்கியமானது. கண்ட உணவுகளை கண்ட எண்ணெய்களில் தயாரித்து விற்றாலும் நாம் ருசிக்காக சாப்பிடுவதுண்டு. இது பல்வேறு பாதிப்புகளை உடலுக்கு உண்டாக்கும். இதே நிலை பல சமயங்களில் நமது வீடுகளிலும் நடப்பதுண்டு. நாம் சாதாரணமாக நினைத்து கொண்டு பயன்படுத்தும் பல எண்ணெய்களில் பயங்கரமான ஆபத்துகள் உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர். எந்தெந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது என்பதை இனி அறிந்து கொள்வோம்✍️✍️✍️.* 


 *👹பாதிப்புகள்👹* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எண்ணெய்கள் பலவிதம். அதில் நாம் பயன்படுத்தும் எண்ணெய் ஆரோக்கியம் தருவதாக இருந்தால் எந்தவித பாதிப்பும் இல்லை. இதுவே மோசமான தாக்கத்தை உடலுக்கு ஏற்படுத்தினால் அவ்வளவு தான். சமையலுக்கு கடலை எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை பெரிதும் பயன்படுத்துவோம். இதை தவிர்த்து சில எண்ணெய்களை நாம் பயன்படுத்தும் போது தான் உடலுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🧶ஆராய்ச்சி!🧶* 


 *✍️✍️✍️சமைக்கும் எண்ணெய்களை பற்றிய ஆய்வில் தான் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, அன்றாடம் சமைக்கும் எண்ணெய்யின் ஊட்டசத்தை விட அதனால் ஏற்படும் பாதிப்பை தான் நாம் முதலில் கவனிக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இல்லையேல் நேரடியாக இவை இரத்தத்தையும், இதயத்தையும் தாக்கி, உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடுமாம்.✍️✍️✍️* 


 *🥥🥥🥥தேங்காய் எண்ணெய்🥥🥥🥥* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தேங்காய் எண்ணெய்யில் அதிக ஆரோக்கியங்கள் இருந்தாலும் இதில் நிறையுற்ற கொழுப்புகள் நிறையவே காணப்படுகிறது. ஆதலால், இவை இதய பாதிப்பை உண்டாக்க கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, கொலஸ்ட்ரால் அதிகமாக உடலில் இருப்போர் இந்த எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🥫🥫🥫தாவர எண்ணெய்🥫🥫🥫* 


 *✍️✍️✍️நேரடியாக தாவரங்களில் இருந்து பெறப்படும் இந்த வகை எண்ணெய்கள் சமையலுக்கு உகந்தது அல்ல. இத தெரியாமல் நம்மில் பலர் சமையலுக்கு இதை பயன்படுத்தி வருகின்றோம். இது உணவை சுவை மிக்கதாக தருகின்றது என்பதற்காக நாம் இவ்வாறு செய்ய கூடாது✍️✍️✍️.* 


 *🌴🌴🌴பனைமர எண்ணெய்🌴🌴🌴* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக இந்த எண்ணெய்யை ஒரு போதும் பயன்படுத்தி விடாதீர்கள். இது நேரடியாக இதயத்தை பாதித்து மாரடைப்பு, இதய நோய்கள் போன்றவற்றை பரிசாக வழங்கும் என அமெரிக்கன் ஹார்ட் அஸோஸியேஷன் கூறியுள்ளது. எனவே, பனைமர எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🍺🍺🍺நெய்🍺🍺🍺* 


 *✍️✍️✍️சிலர் வீடுகளில்எதற்கெடுத்தாலும் நெயை சமையலுக்கு பயன்படுத்தி கொள்வதுண்டு. இவ்வாறு செய்வது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். அத்துடன் கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய நோய்களை உண்டாக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.✍️✍️✍️* 


 *🧉🧉🧉கேனோலா எண்ணெய்🧉🧉🧉* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதுவும் ஒரு வகையான தாவர எண்ணெய் தான். மற்ற வகை எண்ணெய்களை காட்டிலும் இதில் குறைந்த அளவே நிறையுற்ற கொழுப்புகள் உள்ளதாம். ஆதலால், உடல் நலத்திற்கு இது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🔥சரியானது எது❓🔥* 


 *✍️✍️✍️மேற்சொன்ன எண்ணெய் வகைகளை தவிர்த்து விட்டு ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்தலாம். இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு, இதய நோய்களையும் தடுக்கும்✍️✍️✍️.* 


 *👹👹எனவே இது போன்ற எண்ணெய்களை ஒரு போதும் பயன்படுத்தி விடாதீர்கள்👹👹* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

சுவனத்தில்* *நுழைவதற்க்கான* *தகுதிகள்🍃 - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃சுவனத்தில்*
           *நுழைவதற்க்கான*
                               *தகுதிகள்🍃*

                *✍🏻....தொடர்... [ 02 ]*

*☄️உறுதியான*
                     *நம்பிக்கை*

*🏮🍂நம்பிக்கை கொண்டால் மாத்திரம் போதாது. கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருப்பதும் மிக முக்கியமானதாகும்.*

*إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ*

_*🍃எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்களே சொர்க்கவாசிகள்.அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக் கூலியாகும்.*_

*📖அல்குர்ஆன் 46:13,14📖*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*🤲 இறைவனிடம்*
                 *இறைஞ்சுதல் 🤲*

*🏮🍂சில இடங்களில் சொர்க்கம் நுழைய அல்லாஹ்விடம் இறைஞ்சுதல், தர்மம் செய்தல் போன்ற தகுதியும் வேண்டும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.*

*تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُم مِّن قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ*

_*🍃அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும்.நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.*_

*📖 அல்குர்ஆன் 32 16, 17📖*{

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அல்லாஹ்* ⤵ *உருவமற்றவனா - 28

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*

      *🔥 அல்லாஹ்*
                                 ⤵
                    *உருவமற்றவனா❓*

           *✍🏻...தொடர் [ 28 ]*

*☄இறைவனைக்*
           *காண முடியுமா❓ [ 01 ]*

*🏮🍂இதுவரை, அல்லாஹ்வுக்கு முகம் இருக்கின்றது; கண்கள் இருக்கின்றன; காதுகள் இருக்கின்றன; கைகள் இருக்கின்றன; கால்கள் இருக்கின்றன; அதனால் ஏகனான அவனுக்கென்று திருவுருவம் இருக்கின்றது.* அவன் தகுதிக்கேற்ப அர்ஷில் அமர்ந்திருக்கின்றான். அவன் ஒரு போதும் அடியானுடன் ஒன்றாக மாட்டான். அடியானும் அல்லாஹ்வுடன் கலக்க முடியாது போன்ற விபரங்களைப் பார்த்தோம். *இத்தகைய தன்மைகளைக் கொண்ட அல்லாஹ்வை நாம் பார்க்க முடியுமா❓ எங்கு பார்க்கலாம்❓ நிச்சயமாக மறுமையில் தான் அவனைப் பார்க்க முடியும். இதை நாம் குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.*

_*🍃நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது, "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறைவன்), "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது, "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார்.*_

*📖 அல்குர்ஆன் 7:143 📖*

*🏮🍂இந்த வசனத்தில், மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது, அவர்களுக்கு அல்லாஹ் மறுப்புத் தெரிவித்து விடுகிறான்.* "என்னை நீர் பார்க்கவே முடியாது' என்று கூறி விடுகின்றான். மூஸா (அலை) அவர்களால் *அல்லாஹ்வைப் பார்க்க முடியவில்லை என்பதைத் திருக்குர்ஆன் நமக்கு விளக்குகின்றது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

காது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்?

*👹👹👹இயற்கை மருத்துவம் வழங்கும் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவு👹👹👹* 


 *👂👂👂 காது குடைய BUDS பயன்படுத்துபவரா நீங்கள்? உங்களுக்கான ஒர் எச்சரிக்கை…. 👂👂👂*

 *✍️✍️✍️நமது காதின் குழாய் பகுதியில் செல்கள் உள்ளன. அவை செருமனை உருவாக்குகின்றன. இது பொதுவாக காது அழுக்கு என அழைக்கிறோம். ஒரு சிலருக்கு அதிகப்படியாக சுரக்கிறது. இதனால் காது அடைப்பு ஏற்படுவதால், Buds , முடி ஊசி, பேனாக்கள், பென்சில்கள், வைக்கோல் போன்றப் பொருள்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால் நமக்கு நல்லதை விட அதிக தீங்கு தான் ஏற்படுகின்றன✍️✍️✍️* 


 *👂👂👂காதுப்பகுதி மிகவும் மிருதுவானது, அழுக்கை எடுக்கும் வகையில் மென்மையான அழுத்தத்தைக் கொடுத்தாலே செல்கள் சிதையும் மற்றும் ஆபத்து அதிகம் வரும். மேலே, சொன்ன பொருள்களைப் பயன்படுத்துவதால், காதில் வலி அதிகம் ஏற்படும் மற்றும் காதுகளிலிருந்து திரவம் வடிதல் (சீழ் வடிதல்) போன்றவைக் காணப்படும். இவை சிலருக்கு சிறிது நேரத்தில் சரியாகலாம், சிலருக்கு செவித்திறன் இழக்க நேரிடலாம்.👂👂👂* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவ்வளவு ஆபத்து என்றால் காது எவ்வாறு சுத்தம் செய்வது? நாம் சுத்தம் செய்யக் கவலைப்பட வேண்டாம்* .
 *நாம் தலைக்கு குளிக்கும் போதும், அதாவது தலை ஈரமா இருக்கும்போது காது பகுதியில் உள்ள அழுக்கு தானாக வெளியில் வரும், அல்லது அந்த ஈரமா சந்தப்பந்தங்களில் ஒரு தூணியால் துடைத்தாலே போதும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️சில நேரங்களில் காதில் உள்ள அழுக்கு உறங்கும் நேரத்தில் நம் அசைவினாலும் வெளி வந்து விடும்.* 
 *ஒரு சிலருக்கு அழுக்கு அதிகமாக சுரக்கும் அதனால் இந்த இரு வழிகளிலும் அவர்களுக்கு பயன் அளிக்காது. அந்த சமயத்தில் கட்டாயமாக மருத்துவரை அணுகி பயன் பெறலாம். மருத்துவர் தண்ணீரில் சிறிது பெராக்சைடு கலந்து காதுக்குள் செலுத்தும் போது எளிதில் அந்த அழுக்கு வெளி வந்திடும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சிலருக்கு அடிக்கடி மருத்துவரை சந்திக்கும் சூழல் ஏற்படுமானால் அவர்கள் மருத்துவரிடம் வீட்டிலேயே பயன் பெற வழி கேட்கலாம்..* 
 *மருத்துவர் கொடுக்கும் நல்லாலோசனையை கடைப்பிடுத்தால் நாம் நலமுடன் வாழலாம்…🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 



 *👂👂👂காது வலி இருந்தால் இதெல்லாம் செய்யாதீங்க!👂👂👂* 

 *✍️✍️✍️காதுவலி என்பது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் வரக் கூடிய ஒன்று. காதில் கொப்புளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருட்கள் அடைத்துக் கொள்வது, எறும்பு போன்ற பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவற்றால் காதுவலி வரும்.* 
 *காதினுள் உள்ள மென்மையான உறுப்புகளில் ஏதேனும் ஒன்று பழுதுபட்டால் கூட நம்மால் ஒலியுணர்வை முழுமையாகப் பெறமுடியாமல் போகிறது. இந்த சூழ்நிலையில் இதனை முழுமையாக குணப்படுத்த உதவும் சில கை வைத்திய முறைகள் பற்றி பார்ப்போம்.✍️✍️✍️* 


 *👹செய்ய👂👂 கூடாதவை👹* 


 *🙋‍♂️🙋‍♂️🍠காதுக்குள் இயற்கையாகவே வாக்ஸ் என்கிற திரவம் சுரப்பதால் அழுக்கு தானே வெளியேறிவிடும். அதனால் காதுக்குள் குச்சி, பட்ஸ் விட்டு சுத்தம் செய்யக் கூடாது. 80 முதல் 85 டெசிபல் வரைதான் நம் காது சப்தத்தைத் தாங்கும். அதற்கு மேல் என்றால் சவ்வு கிழிந்துவிடும். அதனால் அதிக சப்தத்தைத் தவிர்க்கவும். காதில் இயர் போன் வைத்துக் கொண்டு, அதிக சத்தத்தில் வீடியோ கேம்ஸ், படம் பார்ப்பது செல்போன் பேசினால் காது வலிக்கு அதிக காரணமாகும். நீண்ட நேரம் செல்போன் பேசினால் காது வலிக்கும். அதனால் காது மாற்றி மாற்றிப் பேசப் பழகிக் கொள்ள வேண்டும். சைனஸ், டான்சில், தாடை எலும்பில் பிரச்னை என்றால் காது வலிக்கும். உடனே அது தொடர்பான சிகிச்சை எடுத்துக் கொண்டால் காது வலி நிற்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .

 *👹எச்சரிக்கை👹* 


 *👂🙋‍♂️🙋‍♀️👂காது மருத்துவரின் ஆலோசனைக்குப் பின்னரே, எண்ணெய் ஊற்றலாமா சொட்டு மருந்து இடலாமா என்பதை முடிவு செய்ய வேண்டும். பூச்சி காதுக்குள் நுழைந்தால், எண்ணெயை காய்ச்சி ஊற்றவோ அல்லது குச்சி வைத்துக் குடைவது கூடாது. அதற்கு மாறாக சில சொட்டு சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விட்டால் அது பூச்சியைக் கொன்றுவிடும்.👂🙋‍♂️🙋‍♀️👂* 


 *👂👂👂காது - ஆரோக்கியத்துக்கு செவி சாய்ப்போம்!👂👂👂* 


` *✍️✍️✍️செவிக்கு உணவு இல்லாதபோதே வயிற்றுக்கு ஈய வேண்டும்’ என்கிறார் வள்ளுவர். கேள்விச் செல்வம்தான் ஒரு மனிதனின் ஆகப் பெரிய செல்வம் என்பது நம் முன்னோர் நமக்குக் காட்டிய வழி. நம் உடலில் பல உறுப்புகள் உண்டு. அவற்றில் காதுகள் மிக முக்கியமானவை. காதுகளில் ஏற்படும் நோய்களை குணப்படுத்துவது எப்படி... காதுகளின் ஆரோக்கியம் காப்பது எப்படி? விரிவாக விளக்குகிறார் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் சொ.வெங்கட கார்த்திகேயன்.* 
`` *வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று காதை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். காது மடல், துவாரக்குழாய் சேர்ந்த இடம், வெளிக்காது. நடுக்காது என்பது காது திரையின் உள்ளேயிருக்கும் வெற்றிடத்தைக் குறிக்கும். அதில் மூன்று சிறிய எலும்புகள் இருக்கும். அவை ஒன்றோடொன்று தொடர்பில் இருக்கும். உள்காதில் நத்தை வடிவில் `காக்லியா’     (Cochlea) என்ற உறுப்பு இருக்கும். அதில் சிறு சிறு நரம்புகள் இருக்கும். அந்தச் சிறிய நரம்புகள் இணைந்து, பெரிய நரம்பாகி, மூளையைச் சென்றடையும்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒலியைக் காது மடல் உள்வாங்கி, துவாரத்தின் வழியாக உள்ளே அனுப்பி காதின் திரையிலுள்ள எலும்புகளில் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வு உள்காதுக்குள் சென்று, அங்குள்ள திரவத்தில் அதிர்வலைகளை உருவாக்கும். அந்த அதிர்வுகள் அங்குள்ள நரம்புகளில் பிரதிபலிக்கும். இதையடுத்து அங்கு சிறிதாக ஒரு மின்னோட்டம் ஏற்பட்டு, ஒலியாக மாற்றமடைந்து மூளையைச் சென்றடையும்.* 
 *குழந்தை பிறந்தவுடன், அதற்கு நன்றாகக் காது கேட்க வேண்டும். அதாவது, குழந்தையின் காதின் வழியாக ஒலி உள்ளே சென்று, மூளையிலுள்ள செவிப் பகுதியைத் தூண்ட வேண்டும். அப்படிச் செய்தால்தான், காது கேட்கும் திறன் ஏற்படும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .


 *✍️✍️✍️காது வழியாக உள்ளே செல்லும் ஒலி, மூளையிலுள்ள செவிப்பகுதியைத் தூண்டிய பிறகே குழந்தைக்குப் பேச்சுத்திறன் வரும். ஏனென்றால், மூளையில் ஒலியை உள்வாங்கும் இடமும் பேச்சை வெளிப்படுத்தும் இடமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். காதின் உள்ளே ஒலி செல்லவில்லையென்றால், குழந்தையால் பேச முடியாது. ஆக, ஒருவருக்குப் பேச்சும் மொழியும் வர முதல் காரணம் செவித்திறனே!✍️✍️✍️* 


 *👂👂காது👂👂 கேளாமை👂👂* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️காது கேளாமையில் பல வகைகள் உள்ளன. குறிப்பாக, `கண்டக்டிவ் ஹியரிங் லாஸ்’ (Conductive Hearing Loss). வெளிக்காதில் உள்ள துவாரத்தில் அடைப்பு அல்லது நோய்த்தொற்று  இருந்தாலோ, காது ஜவ்வில் ஓட்டை விழுந்திருந்தாலோ, காது திரையிலுள்ள சிறிய எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலோ, மெழுகு அடைத்துக்கொண்டிருந்தாலோ, சரும உறை கட்டியால் (Cholesteatoma) பாதிக்கப்பட்டாலோ அதை `கண்டக்டிவ் ஹியரிங் ஸாஸ்’ என்கிறார்கள். அதாவது, ஒலியானது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்குச் செல்லும்போது ஏற்படும் தடை என்று இதைச் சொல்லலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️அடுத்தது, நரம்பு சம்பந்தப்பட்ட காது கேளாமை. இது, உள்காதில் வரக்கூடிய பிரச்னை. சிறு சிறு நரம்புகள் இணைந்து, பெரிய நரம்பாகிக் காதுக்குள் செல்லும்போது அந்த நரம்புகளில் ஏற்படும் பிரச்னையை `நரம்பு தொடர்பான காதுகேளாமை’  (Sensorineural Hearing Loss) என்கிறோம். இந்த இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால், கண்டக்டிவ் ஹியரிங் லாஸை நாம் குணப்படுத்த முடியும்.* 
 *காது ஜவ்வில் ஓட்டை இருக்கிறது என்றால், அதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யலாம். சிறு சிறு எலும்புகள், சரும உறை கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தால், அவற்றை அகற்றிவிட்டு, செயற்கை எலும்புகள் பொருத்தி குணப்படுத்தலாம். காதில்  மெழுகு இருந்தால் அதை அகற்றி, சரிசெய்யலாம்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நரம்பு சம்பந்தப்பட்ட காது கேளாமை ஏற்பட்டால், பெரும்பாலான நேரங்களில் நிரந்தரமான காது கேளாமை உண்டாக வாய்ப்பிருக்கிறது. இது குழந்தைகள், பெரியவர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். இது திடீரென்றோ, கொஞ்சம் கொஞ்சமாகவோ எப்படி வேண்டுமானாலும் ஏற்படும். `சடன் ஹியரிங் லாஸ்’ (Sudden Hearing Loss) எனப்படும் திடீர் காது கேளாமையை ஒருவிதமான `இன்னர் இயர் ஸ்ட்ரோக்’ (Inner Ear Stroke) என்றும் குறிப்பிடலாம். திடீர் காது கேளாமைப் பிரச்னைக்கு உடனடியாக மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்றால் செவித்திறனை திரும்பப் பெற வாய்ப்பிருக்கிறது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *👂👂காது👂 கேளாமைக்குக்👂 காரணம் 👂என்ன❓👂* 


 *✍️✍️✍️மரபணுக் குறைபாடு, சுற்றுச்சூழல் மாசு இரண்டுமே காது கேளாமைக்குக் காரணங்கள் என்று சொல்லலாம். மரபணுக் கோளாறால் சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே காது கேளாமை பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அவற்றை மரபணுப் பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம். சிலருக்கு மரபணுப் பிரச்னைகள் இருந்தாலும், அவை வெளிப்படாமல் இருக்கும். ஆனால், வேறொரு நோய்க்கு மருந்து உட்கொள்ளும்போதோ அல்லது சுற்றுச்சூழல் ஒலி மாசு (Noise Pollution) காரணமாகவோ, அதிகச் சத்தத்தால் ஏற்படும் காது நரம்பு பாதிப்பாலோ, மரபணுக் குறைபாட்டாலோ சம்பந்தப்பட்டவருக்கு நிரந்தரமான காது கேளாமை ஏற்படலாம்✍️✍️✍️.* 


 *🔥தொற்றுநோய்கள்🔥* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சளி மற்றும் சைனஸ் பிரச்னைகளால் குழந்தைகளுக்கு காதில் வைரஸ் தொற்று உருவாகலாம். மூக்கு மற்றும் சைனஸ் பகுதியில் ஏற்படும் தொற்று, காதையும் மூக்கையும் இணைக்கும் `யுஸ்டேஷன்’ (Eustachin) குழாயின் வழியாகச் சென்று, நடுக்காதில் தொற்றுநோய்களை உருவாக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு காதுவலி, சீழ் வடிதல் போன்றவை ஏற்படும். இது பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படலாம். பெரியவர்களுக்கும் இது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. வெளிக்காதில் பூஞ்சைக் காளான் தொற்று காரணமாக `ஃபங்கல் இன்பெக்‌ஷன்’ (Fungal Infection) ஏற்படலாம். அசுத்தமான நீர் காதின் உள்ளே போவதும், பட்ஸ்வைத்து காதைச் சுத்தம் செய்வதுமே இதற்கான காரணங்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️சர்க்கரை நோயாளிகளுக்குக்👂👂 காதில் தொற்றுகள் ஏற்படும். சர்க்கரைநோய் பாதிக்காதவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இடையே தொற்றுநோயில் வேறுபாடுகள் உண்டு. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்குத் தொற்று ஏற்பட்டால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 👂👂காதுக்கும் மூளைக்கும் இடையேயுள்ள எலும்பில் தொற்று (Skull Base Osteomyelitis) ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாக முடியலாம். எனவே, இவர்கள் மருத்துவரை உடனே அணுகி, சிகிச்சை மேற்கொள்வது நல்லது✍️✍️✍️.* 


 *👂சீழ் 👂வடிதல்👂 ஏன்❓👂* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சீழ் வடிதல் என்பது வெளிக்காது மற்றும் நடுக்காது பாதிக்கப்படுவதால் வரலாம். நடுக்காது சீழ் வடிதலில் இரண்டு வகைகள் உள்ளன. `சேஃப்’ (Safe),`அன்சேஃப்’ (Unsafe). சேஃப் என்பதில் காதைச் சுத்தம் செய்வதாலோ,  காது திரையில் ஓட்டை விழுவதாலோ, நடுக்காதில் தொற்று ஏற்படுவதாலோ, அடிபடுவதாலோ (பளாரென காதில் அறைவதால்கூட) காது திரையில் ஓட்டை ஏற்படலாம்.* 
 *சரும உறை கட்டியால், காதின் சுவர் எலும்புகள் மற்றும் மூன்று சிறிய எலும்புகள் பாதிப்படையும்போது சீழ் வரலாம். இதனால் காதுக்கும் மூளைக்கும் நடுவே உள்ள எலும்பு பாதிக்கப்பட்டு, மூளையில் பாதிப்பை ஏற்படுத்தினால் அதை `அன்சேஃப்’ என்கிறோம். இந்த நிலையில், நாற்றத்துடன் குறைந்த அளவில் சீழ் வெளியேறும். சில நேரங்களில் ரத்தம் கலந்தும் சீழ் வடிய வாய்ப்பிருக்கிறது. எனவே, மருத்துவரை அணுகி, உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *👂👂👂காது பிரச்னைக்கான அறிகுறிகள், பரிசோதனைகள்👂👂👂* 


 *✍️✍️✍️காதில் அடைப்பு ஏற்படும்போதுதான், ஒருவருக்குக் காதில் பிரச்னை இருப்பது தெரியவரும். காது அடைப்பு, காதுவலி, காதில் சீழ் வடிதல், காதில் ரீங்காரச் சத்தம் போன்றவை காதில் ஏற்படும் பிரச்னையின் அறிகுறிகள்.* 
 *செவித்திறன் குறைந்தவர்கள் சத்தமாகப் பேசுவார்கள். சத்தம் அதிகமாக இருக்கும் பொது இடங்களில், காது கேட்பதில் அவர்களுக்கு சிரமம் இருக்கும். `என்ன பேசினீர்கள்?’ என்று ஒன்றுக்கு இரண்டு முறை கேட்பார்கள். இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகலாம். முதியோர்கள் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருப்பார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, `ஆடியோமெட்ரி’ பரிசோதனை செய்ய வேண்டும். அதன் மூலம் எந்த வகையான பிரச்னை என்று கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சையளிக்க வேண்டும்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️சிலருக்குக் காதில் `கொய்ய்ங்ங்ங்...’ என்ற ரீங்காரச் சத்தம் தொடர்ச்சியாகக் கேட்கும். இதை `டைனிட்டஸ்’ (Tinnitus)என்று குறிப்பிடுவோம். இதில் அதிக பாதிப்படைபவர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகி தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். இவர்கள் உடனடியாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது.* 
 *அதேபோல, தலைச்சுற்றலும்கூட காதுடன் சம்பந்தப்பட்டது என்பது பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. தலைச்சுற்றல் தனியாகவோ அல்லது காது கேளாமை, காது அடைத்துக்கொள்வது, வாந்தி, ரீங்காரச் சத்தம் உள்ளிட்ட மற்ற அறிகுறிகளுடன் சேர்ந்தோ ஏற்படலாம். இதற்கென இருக்கும் சிறப்புப் பரிசோதனைகளைச் செய்து பிரச்னைகளை சரிசெய்து கொள்ளலாம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *🧘‍♀️🧘‍♂️குழந்தைகளுக்கான👂 👂காது 👂👂பராமரிப்பு🧘‍♂️🧘‍♀️* 


 *✍️✍️✍️குழந்தைகளின் காதிலுள்ள மெழுகை `அழுக்கு’ என்று தவறாக நினைத்துக்கொண்டு அகற்றக் கூடாது.* 
 *குழந்தைகளைக் குளிப்பாட்டிய தும், காதைத் துணியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.* 
* *காதிலுள்ள மெழுகு என்பது இயற்கை நமக்கு அளித்திருக்கும் கொடை. அது, காதில் சேரும் அழுக்கை வெளியேற்ற உதவக்கூடியது. எனவே, அதை அகற்றக் கூடாது.* 
* *சில குழந்தைகளின் காதில் நீர் கோத்துக்கொள்ளும். இதனால் காது கேட்காமல் போக வாய்ப்பிருக்கிறது. நன்றாகப் படிக்கும் குழந்தையால் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இதற்கு, மூக்கின் பின்புறமுள்ள `அடினாய்டு’ (Adenoid) சதை வளர்ச்சியே முக்கியக் காரணம். இதன் அறிகுறியாக, குழந்தைகள் தூங்கும்போது குறட்டைவிடுவார்கள் அல்லது வாயைத் திறந்தபடி தூங்குவார்கள். இதை அலட்சியம் செய்யாமல் மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுக்க வேண்டும்.✍️✍️✍️* 


 *🧘‍♂️🧘‍♀️🧘‍♂️பிறந்த குழந்தையை சத்தங்கள் பாதிக்குமா❓🧘‍♀️🧘‍♂️🧘‍♀️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குழந்தைகளைச் சிறு சிறு சத்தங்கள் பாதிக்காது. அவர்களுக்கு சத்தம் கேட்பதுதான் நல்லது. ஆனால், பலத்த சத்தங்கள் குழந்தைகளை பாதிக்கும். சத்தமாகச் சண்டை போடுவது, அதிகச் சத்தத்தில் மியூசிக் சிஸ்டம் பயன்படுத்துவது, டி.வி பார்ப்பது குழந்தைகளின் காதுகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களின் காதுகளையும் பாதிக்கும். எனவே, மெல்லிய ஒலியில் பயன்படுத்துவதே நல்லது. அது குழந்தைகளின் காதுகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களின் காதுகளுக்கும் கெடுதல் தராது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *👂👂காதில் எண்ணெய்விடலாமா❓*👂👂* 


 *✍️✍️✍️காதில் எண்ணெய்விடுவதைச் சிலர் வழக்கமாகக்கொண்டிருகிறார்கள். லேசான சூட்டிலோ அல்லது காய்ச்சி, ஆறவைத்தோ காதில் எண்ணெய்விடுவார்கள். இது தவறான வழிமுறை. இயல்பாகவே, காதுக்குள் மெழுகு போன்ற எண்ணெய் சுரக்கும். அது தானாக காதைச் சுத்தம் செய்துவிடும் என்பதால், காதில் எந்த எண்ணெயையும்விடாமல் இருப்பது நல்லது.✍️✍️✍️* 


 *👂👂பட்ஸ்  பயன்படுத்தலாமா?ஓர் எச்சரிக்கை*👂👂* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️காதை `பட்ஸ்’ வைத்துக் குடைவதால் எந்தப் பயனும் இல்லை. அதனால், காதுக்குப் பல பிரச்னைகள்தான் ஏற்படும். காதின் வெளிப்பகுதியிலிருக்கும் மெழுகு தானாக வெளியே வந்துவிடும். பட்ஸ் மூலம் குடைந்தால் மெழுகு உள்ளே சென்று, வெளியே வர முடியாதபடி அடைத்துக்கொள்ளும். இதனால், காதில் தொற்று ஏற்படும். அதனுள் தண்ணீரும் சேரும்போது அது வலியை உண்டாக்கும். எனவே, பட்ஸ் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .


 *👂👂குளித்தவுடன் காதைச் சுத்தம் செய்யலாமா❓*👂👂* 

 *✍️✍️✍️குளித்தவுடன் கண்டிப்பாக காதைச் சுத்தம் செய்யக் கூடாது. காதில் சீழ் வடியும் பிரச்னை உள்ளவர்கள், காது திரையில் ஓட்டை உள்ளவர்கள் காதில் நீர் புகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்கள், பஞ்சில் தேங்காய் எண்ணெய் அல்லது `வாஸலின்’ தடவி, காதின் துவாரத்தில் வைத்துக்கொண்டு குளித்தால் காதுக்குள் தண்ணீர் புகாது. அதனால், காதில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும். காதைச் சுத்தம் செய்யவேண்டிய தேவையும் இருக்காது✍️✍️✍️* .


 *👂👂நீச்சல் வீரர்கள் காதுகளைப் பாதுகாக்கும் வழி!*👂👂* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நீச்சல் வீரர்கள் காதுகளைப் பாதுகாப்பது ஒருபுறம் இருந்தாலும், நீச்சல்குளத்தைப் பராமரிப்பவர்கள் அதிலுள்ள நீரைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீச்சல் வீரர்கள் அவர்களுடைய காதுகளுக்கேற்றவாறு `கஸ்டம் மோல்டடு இயர் பிளக்ஸ்’* 
 *(Custom Molded Ear Plugs) இருக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தினால் காது தொடர்பான பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம்.* *காதிலிருந்து சீழ் வடிந்தால் நீச்சலைத் தவிர்ப்பது நல்லது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.*


 *👂👂உப்புநீரில் குளித்தால் காது பிரச்னை வருமா❓*👂👂* 


 *✍️✍️✍️கடல் மற்றும் ஆறுகளில் குளிப்பதால் காதுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை.  மேலும், காதுக்குள் உப்பு நீர் புகுவதால் பாதிப்பு ஏற்படும் என்று கூற முடியாது. ஆனால், நீர் அசுத்தமில்லாமல் இருக்க வேண்டும்.✍️✍️✍️* 


 *👂👂காது அடைப்பைச் சரி செய்வது எப்படி❓*👂👂


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️காதில் எதனால் அடைப்பு ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவரை அணுகினால், அவரே காரணத்தைக் கண்டறிந்துவிடுவார். காதில் அழுக்கோ, மெழுகு அடைப்போ இருந்தால், மருத்துவர் அதைச் சரிசெய்துவிடுவார். சுய சிகிச்சை வேண்டாம். விமானத்தில் பயணம் செய்பவர்களுக்குக் காது அடைத்துக்கொள்ளும். சில நேரங்களில் காதில் வலியும் உண்டாகும். காதையும் மூக்கையும் இணைக்கும் யுஸ்டேஷன் குழாயில் பாதிப்பிருந்தால் வலி ஏற்படலாம்.* 
 *ஒருவருக்கு அதிகமாகச் சளி பிடித்திருந்தால் விமானப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கட்டாயம், பயணம் செய்யவேண்டியிருந்தால் மருத்துவரை ஆலோசித்து, விமானத்திலிருந்து இறங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக நோஸ் டிராப்ஸ் போட்டுக்கொள்ள வேண்டும். கண்டிப்பாக தூங்கக் கூடாது. வாயை லேசாக அங்குமிங்கும் அசைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, காது அடைக்காது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🔥பட்டாசு🔥 சத்தம் 👂👂 காதை👂👂 பாதிக்குமா❓🔥* 


 *✍️✍️✍️பண்டிகைகளின்போது, பெரிய அளவில் சத்தம் எழுப்பும் வெடிகளால் காதிலுள்ள சிறு நரம்புகள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. அது, செவித்திறனை நிரந்தரமாகவும் பாதிக்கலாம்.✍️✍️✍️* 


 *🎧🎧🎧ஹெட்போன், புளூடூத் பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள்🎧🎧🎧* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நாம் ஒருவருக்கொருவர் நேரில் பேசிக்கொண்டது போய், செயற்கைக் கருவிகளின் துணையுடன்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். தொடர்ச்சியாக ஹெட்போன், புளூடூத் போன்றவற்றைப் பயன்படுத்துவதால், காதுகள் பாதிப்படையும். சில நேரங்களில் காது கேட்காமல்கூட போகலாம்; வலி உண்டாகும். தொடர்ந்து பல மணி நேரம் பயன்படுத்தினால், தலைபாரம், மனஅழுத்தம் ஏற்படலாம். எனவே, குறைந்த நேரம் மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவது நல்லது. அதேபோல, ஒலியைக் குறைவாக வைத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* . 


 *✍️✍️✍️ஹெட்போன் பயன்படுத்தும்போது மற்றவர்கள் பேசுவதும் நமக்குக் கேட்க வேண்டும். அப்படியில்லையென்றால், அந்த ஒலி காதுக்கு கேடு விளைவிக்கும். அதேபோல, ஹெட்போன் பயன்படுத்தும்போது நீங்கள் பேசுவது சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கு இயல்பாக இருக்க வேண்டும். அதாவது, சத்தத்தைக் குறைவாக வைத்துக் கேட்க வேண்டும். அப்படியில்லாமல் கத்திப் பேசுகிறீர்கள் என்றால் அதுவும் ஆபத்தானதே.✍️✍️✍️* 


 *💥ஒலி மாசு 💥-👂 காதை👂 பாதிக்கும்!💥* 


* *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கூச்சல் எங்கெல்லாம் அதிகமாக இருக்குமோ, அங்கு செல்வதைத் தவிர்க்கலாம்.* 
* *போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில், ஒலி மாசு அதிகமாக இருக்கும். எனவே, கூடுமானவரை அதில் சிக்கிக்கொள்ளாமல் நேரத்தைத் திட்டமிட்டு  பீக் ஹவர்ஸில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️எனவே இது போன்ற விசியத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும்✍️✍️✍️* 


 *🩸நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🩸*


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

பூச்சிக்கொல்லி மருந்து எப்படி தயாரிப்பது

*💊💊💊இயற்கை மருத்துவம் வழங்கும் இயற்கை மருந்துகள்💊💊💊*


 *🛑🛑🛑இன்று நாம் பார்க்க இருப்பது பூச்சிக்கொல்லி மருந்து எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்🛑🛑🛑* 


 *♻️♻️♻️இயற்கை பூச்சி விரட்டி மருந்து தயாரிக்கும் முறை மற்றும் பயன்கள்♻️♻️♻️* 


 *✍️✍️✍️கால மாற்றத்தின் காரணமாக 50 ஆண்டுகளாக விவசாயிகள் ஆகிய நாம் தொடர்ந்து செய்து வரும் தவறு எது என்றால் விவசாயத்திற்கு அதிகளவு செயற்கை இரசாயனங்களை அதிகளவு பயன்படுத்துவது  தான். இந்த செயற்கை ரசாயனங்களை, பயிரிடும் நிலத்திற்கு அதிகளவு பயன்படுத்துகிறோம். அதேபோல் பூச்சி கொல்லியாக செடிகள் மீதும் தெளிக்க பயன்படுத்தி வருகிறோம். இரசாயனம் கலந்த விளைபயிர்களை வாங்கி நாம் உண்ணும்போது பல பின் விளைவுகளை சந்தித்து, தினமும் மருத்துவமனைக்கு சென்று வரிசையில் காத்திருக்கிறோம்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதுமட்டும் இல்லாமல் இந்தியாவில் பிறக்கும் 17% குழந்தைகளுக்கு கண் சம்மந்தமான பிரச்சனைகள் வருகின்றது. எனவே இனியாவது விவசாயிகள் ஆகிய நாம் விவசாயத்திற்கு செயற்கை இரசாயனங்களை பயன்படுத்தாமல் இயற்கை இரசாயனங்களை பயன்படுத்தி, அதாவது இயற்கை முறையில் பூச்சி விரட்டி மருந்து தயாரித்து மண் வளத்தையும் காத்து உயிர் வளத்தையும் காப்போம்..!🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *👹இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை..!👹* 


 *♻️♻️இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்க தேவையான பொருட்கள்♻️♻️:* 

 *எருக்கன் இலை – ஒரு கிலோ* 

 *ஆடாதோடை இலை – ஒரு கிலோ* 

 *நொச்சி இலை – ஒரு கிலோ* 

 *வேப்பிலை – ஒரு கிலோ* 

 *நெய்வேலிகட்டாமணி இலை – ஒரு கிலோ* 

 *வெல்லம் – 1/2 கிலோ* 

 *தண்ணீர் – 2 மடங்கு* 

 *மாட்டு கோமியம் – ஒரு லிட்டர்* 

 *மாட்டு சாணம் – 2 கிலோ* 

 *♻️♻️♻️இயற்கை* 
 *பூச்சி விரட்டி செய்முறை:-♻️♻️♻️* 

 *✍️✍️✍️மேல் கூறப்பட்டுள்ள இலைகளை நன்றாக இடித்து வைத்துக்கொள்ளவும்.* 
 *பின்பு ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் பேனரை எடுத்து கொள்ளவும். அவற்றில் மாட்டு சாணத்தை மற்றும் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.* 
 *பிறகு இடித்து வைத்திருக்கும் இலைகளை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.* 
 *பின்பு அரைகிலோ வெல்லத்தை சேர்த்து நன்றாக கிளறி விடவும். (வெல்லம் நுண்ணுயிரிகளின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது)* 
 *அவ்வளவுதான் இயற்கை பூச்சிக்கொல்லி தயார். இந்த கலவையை 7 நாட்கள் வரை தினமும் மூன்று வேளை ஒரு குச்சியால் கிளறி விட வேண்டும்.* 
 *7 நாட்களுக்கு பிறகு இந்த கலவையை வடிகட்டினால் பூச்சி விரட்டி தயார்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவற்றை அனைத்து வகைப் பயிர்களுக்கும், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வடிகட்டிய பூச்சி விரட்டியை கலந்து மாலை நேரம் தெளித்தால் பூச்சிகள் கட்டுப்படும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️பயன்கள்:♻️* 


 *✍️✍️✍️மண் வளத்தை பாதுகாக்கிறது. கெட்ட பூச்சிகளின் தாக்குதல்களை கட்டுப்படுத்துகிறது. பயிர் வளத்தை மேம்படுத்துகிறது. குறிப்பாக இரசாயனம் இல்லாத இயற்கை பூச்சி விரட்டி யாக விளங்குகிறது✍️✍️✍️.* 


 *🥎🥎🥎இயற்கை பூச்சி விரட்டி – வேம்பு புங்கன் கரைசல்:** 
 *வேம்பின் இலை முதல் காய் வரை அனைத்து பொருட்களும் விவசாயத்துக்கு பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆகவே வேப்பெண்ணெயை கொண்டு இயற்கை பூச்சி விரட்டி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க🥎🥎🥎.* 


 *♻️♻️♻️தேவையான பொருட்கள்♻️♻️♻️:* 


 *வேப்பெண்ணெயை – ஒரு லிட்டர்* 

 *புங்கன் எண்ணெய் – ஒரு லிட்டர்* 

 *மாட்டு கோமியம் (பழையது) – 10 லிட்டர்* 

 *காதி சோப்பு கரைசல் – 1/2 லிட்டர்* 


 *♻️♻️♻️இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறை♻️♻️♻️:* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேல்கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து வைத்து ஒரு நாள் கழித்து உபயோகிக்கலாம்,* 
 *இந்த பொருட்களை கலக்கும் போது வேம்பு குச்சி கொண்டு கலக்கினால் அதிக பயன் கிடைக்கும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *♻️♻️பயன்படுத்தும் முறை♻️♻️* :


 *✍️✍️✍️இவ்வாறு தயார் செய்த பூச்சி விரட்டியினை 10 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வேம்பு புங்கன் கரைசலை கலந்து பயிர்களுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் பயன்படுத்தலாம்✍️✍️✍️.* 


 *♻️நன்மைகள்:♻️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இது எல்லா வகை பயிர்களுக்கும் மிகச்சிறந்த பூச்சி விரட்டி.* 
 *காதி சோப்பு சேர்க்கும் போது தாவரங்களின் மேல் ஓட்டும் பொருளாக பயன்படுகிறது.* 
 *எனவே இது போன்ற இயற்கை மருந்து தயாரிச்சி நம் வயல்களில் இருக்கும் பூச்சிக்களை கொண்று பயிற்களை காப்போமாக🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🌹நோய்யற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்🌹*


🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰