Monday, November 25, 2019

ப்ராய்லரா? நாட்டுக்கோழியா?"

#விழிப்புணர்வு_பதிவு:
//மருத்துவர் ஃபரூக் அப்துல்லா பதிவில் இருந்து...
வீண் வதந்தி வேண்டாமே!!!//

"சார்.. பேலியோல  கோழி சாப்ட  சொல்றீங்க ஓகே . ப்ராய்லரா? நாட்டுக்கோழியா?"

" ப்ராய்லர் தான் சார். உங்க ஏரியால  நாட்டுக்கோழி கிடைக்குதா  சார்.?"

"இல்ல சார். ஆனா வாரம் ஒரு தடவ  சந்தைல  வாங்க முடியும் சார்"

" சந்தைல  வாங்குற  முக்காவாசி  நாட்டுக்கோழியும்  பண்ணைக்கோழிதான்குறது  உங்களுக்கு தெரியுமா  சார்"

" அப்படியா சார்.. தெரியாதுங்களே.. நாட்டுக்கோழினு  கிலோ 350 டூ 450 வரைக்கும் விக்குறாங்க சார் .. நான் தான் ப்ராய்லர்  கோழிக்கு பயந்து  அத வாரம் ஒரு தடவ வாங்கி சாப்புட்றேன் "

" நான் டெய்லி கிலோ 180 ரூபாய்க்கு  
கடந்த நாலு வருசமா  டெய்லி அரைக்கிலோ  ப்ராய்லர் மட்டும் தான் சார் சாப்புட்றேன் " 

" டாக்டர் என்ன சொல்றீங்க? ப்ராய்லர்  சாப்ட்டா  ஆண்மை போய்டும்னு  சொல்றாங்களே ?"

"என் ரெண்டாவது  பொன்னுக்கு  ஒரு வயசு தான் ஆகுது.  இப்ப சொல்லுங்க ப்ராய்லரால  ஆண்மை போகுமா?" 

"இல்லீங்க  சார்.. போகாது.. ஆனா  பொம்பளை  புள்ளைங்க  சீக்கிரம் வயசுக்கு  வந்துருதாம்ல  சார்" 

" ஓ... எத்தனை வயசுல வருதுகளாம்.. அஞ்சு  வயசுலயா.. ஆறு வயசுலயா?"

"பத்து பதினோரு  வயசுலயே  வந்துருதுகளாம்ல  சார். அதான்  பயமா  இருக்கு" 

"சகோ.. பத்து வயசுல  இருந்து பதினாறு  வயசுக்குள்ள  எப்ப வேணாலும்  வயசுக்கு வரலாம். வயசுக்கு வரதுக்கு  பல காரணங்கள் இருக்கு. நம்ம குடும்பத்தோட  மொத்த வருமானம் அதிகமாக இருந்தா  பெண்கள் வயசுக்கு வர்ற  டைம்  சீக்கிரம் இருக்கும்.  ஆனாலும் இந்தியாவோட  சராசரி பெண்கள் பூப்பெய்தும்  வயசு 13 முதல் 14 தான். ஒன்னு ரெண்டு  இங்குட்டும்  அங்குட்டும்  இருக்கும் தான் ஆனா அதுக்கு ப்ராய்லர் கோழி மேல பலி போட்றதுக்கு சரியான முகாந்திரம்  இல்லை" 

" ப்ராய்லர் சாப்ட்டா கேன்சர் வரும்குறாங்க.."

"நீங்க இப்ப  எதுல  வந்தீங்க  கிளினிக்குக்கு?" 

" கார்ல  சார்"

" கார்ல  இருந்து வர்ற  புகைல  இருக்குற  கார்பன்  துகள்கள்  நம்ம நுரையீரலுக்குள்ள  போய் கேன்சர் வரவைக்குது.  இனிமே  வண்டிய  வீட்டுல  நிப்பாட்டிட்டு  மாட்டு வண்டில  வாங்க.. வர்றீங்களா?" 

"சார்.. மதுரைல  இருந்து  மாட்டுவண்டில  எப்டி சார்.. ரெண்டு நாளாகும் " 

" கேன்சர் உருவாக்கும்னு  ப்ரூவ்  ஆன விசயத்துக்கே  நாம சாக்கு வச்சுருக்கோம்
மேலும் நமக்கு நல்லதா கெட்டதானு  பார்த்து ரிஸ்க் எடுக்குறோம் ..ஆனா ப்ராய்லர்னால  கேன்சர் வருதுனு  எந்த எவிடென்சும்  கிடையாது. அத மட்டும் ஏன் நம்புறோம்?" 

" சார்.. நீங்க ஏன் ப்ராய்லர  விடாம  சப்போர்ட் பண்றீங்க.. ப்ராய்லர் கறிக்கடை காரங்க டெய்லி உங்களுக்கு இலவசமா  கறி கொடுத்து ப்ரமோட்  பண்ண சொல்றாங்களா?" 

" ஹி ஹி.. இப்ப வரைக்கும் எனக்கு தேவையான கறியை நான் காசு கொடுத்து தான் வாங்கி சாப்புட்றேன்.  
ஆனா நான் ஏன் தெரியுமா  ப்ராய்லர  சப்போர்ட் பண்றேன். 

ப்ராய்லர் மூலமா தான் ஏழைகள் கூட கறி  சாப்ட முடியுது. 
லேயர்  முட்டைகள  தமிழக பள்ளிகளில்  சத்துணவுக்கு  வாரம் ஐந்து நாள் போடப்பட்றதுனால  தான்..தமிழகம் சோமாலியாவ  மாறாம  இருக்கு. நீங்களும் நானும் மீன் மட்டன் எடுத்து வாரம் ஒருதடவ  சாப்ட முடியும். ஆனா ஏழைகள்னால  கிலோ ஐநூறு  கொடுத்து மட்டன் வாங்க முடியுமா? கிலோ ஐநூறுக்கு  மேல விக்குற  மீன் வாங்க முடியுமா? 

ஏழைகளுக்கும்  புரதச்சத்து  கிடைக்கச்செய்யும் 
ப்ராய்லர் மற்றும் லேயர் முட்டைகளை நான் தொடர்ந்து எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி ஆதரிப்பேன்.  

இதற்கு எதிராக கிளம்பும் வதந்திகளுக்கு விளக்கம் அளிப்பேன். 

ப்ராய்லர் கோழியையும் 
லேயர் முட்டைக்கு எதிராகவும்  வதந்தி பரப்புவோர் 

ஏழைகளின் வீட்டுப்பிள்ளைகள்  வாரம் ஒருமுறையேனும்  தரமான புரதம் சாப்பிட ஒரு மாற்றை காண்பித்து விட்டு பிறகு வதந்திகளை  ஷேர் செய்யுங்கள் 

மாதம் ஒருமுறை மட்டும் ஒரு கிலோ ப்ராய்லர் கோழி எடுத்து ஐந்து பேர் கொண்ட வீட்டில் பகிர்ந்து சாப்பிடும் ஏழை வீடுகளை நான் அறிவேன் என்பதால் 
என்னால் அவர்கள் உண்ணும் அந்த குறைந்தபட்ச புரதம் நிறைந்த உணவை தடுக்க முடியாது. 

அவர்கள் உண்ணட்டும். 

நன்றி:
Dr.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

பிராய்லர் கோழி பற்றிய தவறான செய்திகள்...

பிராய்லர் கோழி பற்றிய தவறான செய்திகள்...
மீண்டும் மீண்டும் ஒரே பொய்யை சொல்லிக்கொண்டே இருந்தால் உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ்  தியரியை  உபயோகித்து தொடர்ந்து ப்ராய்லர்  கோழிகள் மீது அவதூறு பரப்பி வரும் சகோதர சகோதரிகளுக்கான  பதிவு இது. 

நாட்டுக்கோழி என்றால் என்ன??

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் ,ப்ராய்லர் யுகம் ஆரம்பிக்கும் முன்பு, வீடுகளில் கோழிகள் வளர்க்கப்படும் . அவை நாம் கொடுக்கும் தானியங்கள், மற்றும் மேய்ந்து கிட்டும் புழுக்கள் போன்றவற்றை உண்டு வாழும். 

நல்ல நாள் பெரிய நாள்களுக்கு அவற்றை அறுத்து உண்போம். 
அவைகளை நாட்டுக்கோழி என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் அவை free range country chicks என்று அழைக்கிறோம். 

---

ப்ராய்லர் கோழிகள் என்றால் என்ன??

உலகத்தின் ஜனத்தொகை மிக வேகத்தில் பல்கிப்பெருகிக்கொண்டே செல்லும் போது அதற்கு ஈடான வேகத்தில் நாம் உணவுகளையும் உற்பத்தி செய்தாக வேண்டிய சூழல் உருவாகிற்று. 

நமது இந்தியாவின் 1970 ஜனத்தொகை 58 கோடிகள்
அடுத்த 50 ஆண்டுகள் கூட ஆகவில்லை , நமது ஜனத்தொகை இருமடங்கு பெருகி தற்போது 120 கோடி என்ற அளவில் இருக்கிறது. 

மேலும் மனிதர்களே புறாக்கூண்டு போன்ற வீடுகளில் வாழப்பழகி விட்டதால், கோழிகளை ஃப்ரீ ரேஞ்சாக வளர்க்க இடமுமில்லை ஆட்களுமில்லை. 

எனவே, நன்றாக வளரும் கோழியினங்களில் இருந்து ஹைப்ரிட் வெரைட்டியாக உருவாக்கப்பட்டதே ப்ராய்லர் கோழியினம்.

இவ்வகை கோழிகள் , கூட்டமாக பண்ணைகளில் அடைக்கப்பட்டு உணவாக ப்ராட்டீன் கால்சியம் கலந்த தீவணங்கள் கொடுக்கப்பட்டு கொழு கொழுவென வளர்க்கப்படுகின்றன. 

சுமார் 6 முதல் 8 வாரங்களில் இந்த கோழியினம் முழு வளர்ச்சி அடைந்து அறுபட தயாராகின்றது. 

---

இப்படி செய்வது நல்லதா??
இந்த கறி மனிதனுக்கு நன்மையா தீமையா?? 

நமது ஜனத்தொகை பசி பட்டினி என்று மாண்டு போவதற்கு மாற்றாக அறிவியலைக் கொண்டு சில மாற்றங்கள் செய்வதில் தவறில்லை. 

தானியங்களிலும் காய்கறி கனி வகைகளிலும் ஹைப்ரிட் வகைகள் இதே காரணத்திற்காக தான் வந்தன. 

பாலின் கொள்முதலைக் கூட்ட பசுக்களுக்கு இடையே கலப்பினம் தோன்றியதும் இதனால் தான். 

மரபணுக்களில் மாற்றங்களை புகுத்துகையில் அது பல்வேறு நல்ல விசயங்களையும் தீமைகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது. 

ஆனால் நாம் நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப்பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். 

ப்ராய்லர் கோழி என்பது ஒருவகை கலப்பினம் தான் . 
அந்த கறி நமக்கு தீமை விளைவிப்பதில்லை. 

---

ப்ராய்லர் கோழி நன்றாக வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜென் ஊசி போடப்படுகிறதா???

 அது ஒரு கட்டுக்கதை

ப்ராய்லர் கோழியோ பண்ணை நாட்டுக்கோழியோ அவை யாவும் பண்ணைகளில் மிக சிறிய இடத்தில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

ஒரு கோழிக்கு சீக்கு வந்தால் மற்ற கோழிகளுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது . ஆகவே கோழிகளுக்கு ஆண்டிபயாடிக்குகள் ஊசிகளாக போடப்படுகின்றன. ஆனால் இது மனிதனுக்கு பிரச்சனை ஏற்படுத்துவதில்லை.  கோலிஸ்டின்  எனும் ஆண்ட்டிபயாடிக்கை  கடந்த ஜூலை முதல் இந்திய அரசாங்கம் கால்நடைகளில் உபயோகிக்க தடை விதித்து  விட்டது. 

கோழி கறியை சமைத்து உண்பதால் நமக்கு அதன் பாதிப்பு இருப்பதில்லை.

ஈஸ்ட்ரோஜென் ஊசிகள் என்பது ஏன் கட்டுக்கதை என்கிறேன் என்றால்.. அத்தனை கோழிகளுக்கும் ஈஸ்ட்ரோஜென் ஊசி போட்டால் வரும் செலவு அந்த கோழிகளை விற்றால் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாகும். யாரேனும் நட்டத்துக்கு தொழில் நடத்த முடியுமா? 

மேலும், வெறும் ஈஸ்ட்ரோஜென் போட்டால் உடல் குண்டாகாது.. கூட இன்சுலின் போட வேண்டும் இன்சுலின் தான் வளர்ச்சிக்கான anabolic hormone . அது மட்டும் பத்தாது.. உடல் ஏற கடினமான பயிற்சி செய்ய வேண்டும்.  

பண்ணைகளில் அடைத்து வளர்க்கப்படும் கோழிகள் என்ன உடற்பயிற்சி செய்கின்றன??

ஆகவே, ஈஸ்ட்ரோஜென் ஊசி என்பது பொய் கதை. 
மேலும் அதனால் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்துகிறார்கள்  என்பதும் கட்டுக்கதை  தான். 

---

இப்போது கிடைக்கும் நாட்டுக்கோழிகள் ஃப்ரீ ரேஞ்ச் நாட்டுக்கோழிகள் தானா??

இப்போது சந்தையில் கிடைக்கும் நாட்டுக்கோழிகள் பெரும்பான்மை ஃப்ரீ ரேஞ்ச் முறையில் வளர்க்கப்படுபவை அல்ல. 
அவையும் பண்ணைகளில் வளர்க்கப்படுபவையே. ஆனால் , அவை ப்ராய்லர் கிடையாது. நமது நாட்டு வகை கோழி இனம். 

அவற்றையும் ப்ராய்லர் கோழிகள் போல பண்ணைகளில் அடைத்து தீவனம் போட்டு தான் வளர்க்கின்றனர். 
-----

ப்ராய்லர் தின்பதால் தான் பெண்கள் சீக்கிரம் வயசுக்கு வருகிறார்களாமே??

இல்லை. இதுவும் கட்டுக்கதை தான் . 
நமக்கு முந்தைய தலைமுறையில் ஒரு பெண் பத்து குழந்தைகளை பெற்றெடுப்பார். 
வீட்டில் ஒருவர் சம்பாதித்து பனிரெண்டு பேர் உண்ண வேண்டும். 
ஆகவே சத்தான உணவுகள் அனைவருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

இப்போது, வீட்டில் தாய் தந்தை இருவரும் சம்பாதித்து, ஒரு குழந்தை இரு குழந்தை தான் இருப்பதால், சத்துள்ள உணவு கிடைக்கிறது. அதனால் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்துகின்றனர் 

அடுத்த காரணம்..

அந்த காலத்தில் இத்தனை தீனிகடைகள் கிடையாது. குளிர்பானங்கள் , மெக்டொனால்டு, பர்கர், பாஸ்ட் புட் , சோயா கலந்த உணவுகள் எல்லாம் கிடையாது . அவற்றை முழுப்போடு போடுதால் தான் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்து கின்றனர். 

----

உண்ணச்சிறந்தது நாட்டுக்கோழியா ப்ராய்லர் கோழியா??

சிறந்தது வீட்டில் வளர்க்கப்பட்ட ஃப்ரீ ரேஞ்ச் நாட்டுக்கோழி தான் 

ஆனால் எளிதாக உண்ணக்கிடைப்பது 
ப்ராய்லர் கோழி தான். 

ப்ராய்லர் கோழிகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து சத்தான தீவணம் போட்டு நோய் வராமல் பாதுகாத்து வளர்ப்பதால் கொழுத்து வளர்கின்றன. 

இத்தகைய வளர்ச்சி அந்த கோழிகளுக்குத் தான் பிரச்சனையே ஒழிய அதை கறியாக உண்ணும் நமக்கல்ல.

ஏனெனில் நமது உடல் , அதன் கறியை புரதமாகவும், கொழுப்பாகவும் தான் கிரகித்துக்கொள்கிறது. 

பின்குறிப்பு 

கோழியின் உள்ளே இருக்கும் குடல், கல்லீரல், போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ஃபைனல் பாய்ண்ட்

தொடர்ந்து இந்தியாவில் லட்சக்கணக்கில் குழந்தைகள் புரதச்சத்து  குறைபாட்டால்  இறந்து வரும்  சூழ்நிலையில் 
வாரம் ஒரு முறையேனும் ஒரு ஏழை சம்சாரி வீட்டில் வசிக்கும் பிள்ளைககளுக்கு  தரமான புரதம் பெற வழிவகை செய்யும் செலவு குறைவான வழி தான் - ப்ராய்லர் கோழி 

அதையும் வதந்திகள் பரப்பி தடுப்பது நல்லது இல்லை 

இனியும் பழைய வதந்திகளையும் வாட்சப் வதந்திகளையும் நம்பாதீர்கள். 

பரப்பாதீர்கள் 

----
நன்றி 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

Saturday, November 23, 2019

நோய் வந்ததும்

 நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!

1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.

அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு / நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை சுகமாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை சுகமாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்

புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.

கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும். 

https://www.youtube.com/user/Ongarakudil
 சித்தர் மருத்துவம், சித்தர் வர்மக்கலை, சித்தர் நூல்கள், சித்தர் பாடல்கள், சித்தர் வாக்குகள், சித்தரியல் ஒலி/ஒளி நாடாக்கள், ஓலைச்சுவடிகள், சீவநாதச் சுவடிகள் மற்றும் பல சித்தரியல் தகவல்களைப் பெற இணையுங்கள். 
https://www.youtube.com/user/Ongarakudil

பிராய்லர் கோழி

பிராய்லர் கோழி பற்றிய தவறான செய்திகள்...
மீண்டும் மீண்டும் ஒரே பொய்யை சொல்லிக்கொண்டே இருந்தால் உண்மையாகி விடும் என்ற கோயபல்ஸ்  தியரியை  உபயோகித்து தொடர்ந்து ப்ராய்லர்  கோழிகள் மீது அவதூறு பரப்பி வரும் சகோதர சகோதரிகளுக்கான  பதிவு இது. 

நாட்டுக்கோழி என்றால் என்ன??

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் ,ப்ராய்லர் யுகம் ஆரம்பிக்கும் முன்பு, வீடுகளில் கோழிகள் வளர்க்கப்படும் . அவை நாம் கொடுக்கும் தானியங்கள், மற்றும் மேய்ந்து கிட்டும் புழுக்கள் போன்றவற்றை உண்டு வாழும். 

நல்ல நாள் பெரிய நாள்களுக்கு அவற்றை அறுத்து உண்போம். 
அவைகளை நாட்டுக்கோழி என்று அழைக்கிறோம். ஆங்கிலத்தில் அவை free range country chicks என்று அழைக்கிறோம். 

---

ப்ராய்லர் கோழிகள் என்றால் என்ன??

உலகத்தின் ஜனத்தொகை மிக வேகத்தில் பல்கிப்பெருகிக்கொண்டே செல்லும் போது அதற்கு ஈடான வேகத்தில் நாம் உணவுகளையும் உற்பத்தி செய்தாக வேண்டிய சூழல் உருவாகிற்று. 

நமது இந்தியாவின் 1970 ஜனத்தொகை 58 கோடிகள்
அடுத்த 50 ஆண்டுகள் கூட ஆகவில்லை , நமது ஜனத்தொகை இருமடங்கு பெருகி தற்போது 120 கோடி என்ற அளவில் இருக்கிறது. 

மேலும் மனிதர்களே புறாக்கூண்டு போன்ற வீடுகளில் வாழப்பழகி விட்டதால், கோழிகளை ஃப்ரீ ரேஞ்சாக வளர்க்க இடமுமில்லை ஆட்களுமில்லை. 

எனவே, நன்றாக வளரும் கோழியினங்களில் இருந்து ஹைப்ரிட் வெரைட்டியாக உருவாக்கப்பட்டதே ப்ராய்லர் கோழியினம்.

இவ்வகை கோழிகள் , கூட்டமாக பண்ணைகளில் அடைக்கப்பட்டு உணவாக ப்ராட்டீன் கால்சியம் கலந்த தீவணங்கள் கொடுக்கப்பட்டு கொழு கொழுவென வளர்க்கப்படுகின்றன. 

சுமார் 6 முதல் 8 வாரங்களில் இந்த கோழியினம் முழு வளர்ச்சி அடைந்து அறுபட தயாராகின்றது. 

---

இப்படி செய்வது நல்லதா??
இந்த கறி மனிதனுக்கு நன்மையா தீமையா?? 

நமது ஜனத்தொகை பசி பட்டினி என்று மாண்டு போவதற்கு மாற்றாக அறிவியலைக் கொண்டு சில மாற்றங்கள் செய்வதில் தவறில்லை. 

தானியங்களிலும் காய்கறி கனி வகைகளிலும் ஹைப்ரிட் வகைகள் இதே காரணத்திற்காக தான் வந்தன. 

பாலின் கொள்முதலைக் கூட்ட பசுக்களுக்கு இடையே கலப்பினம் தோன்றியதும் இதனால் தான். 

மரபணுக்களில் மாற்றங்களை புகுத்துகையில் அது பல்வேறு நல்ல விசயங்களையும் தீமைகளையும் சேர்த்தே கொண்டு வருகிறது. 

ஆனால் நாம் நன்மைகளையும் தீமைகளையும் சீர்தூக்கிப்பார்த்து ஆய்வு செய்ய வேண்டும். 

ப்ராய்லர் கோழி என்பது ஒருவகை கலப்பினம் தான் . 
அந்த கறி நமக்கு தீமை விளைவிப்பதில்லை. 

---

ப்ராய்லர் கோழி நன்றாக வளர்வதற்கு ஈஸ்ட்ரோஜென் ஊசி போடப்படுகிறதா???

 அது ஒரு கட்டுக்கதை

ப்ராய்லர் கோழியோ பண்ணை நாட்டுக்கோழியோ அவை யாவும் பண்ணைகளில் மிக சிறிய இடத்தில் அடைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

ஒரு கோழிக்கு சீக்கு வந்தால் மற்ற கோழிகளுக்கு எளிதில் பரவும் வாய்ப்பு உள்ளது . ஆகவே கோழிகளுக்கு ஆண்டிபயாடிக்குகள் ஊசிகளாக போடப்படுகின்றன. ஆனால் இது மனிதனுக்கு பிரச்சனை ஏற்படுத்துவதில்லை.  கோலிஸ்டின்  எனும் ஆண்ட்டிபயாடிக்கை  கடந்த ஜூலை முதல் இந்திய அரசாங்கம் கால்நடைகளில் உபயோகிக்க தடை விதித்து  விட்டது. 

கோழி கறியை சமைத்து உண்பதால் நமக்கு அதன் பாதிப்பு இருப்பதில்லை.

ஈஸ்ட்ரோஜென் ஊசிகள் என்பது ஏன் கட்டுக்கதை என்கிறேன் என்றால்.. அத்தனை கோழிகளுக்கும் ஈஸ்ட்ரோஜென் ஊசி போட்டால் வரும் செலவு அந்த கோழிகளை விற்றால் கிடைக்கும் லாபத்தை விட அதிகமாகும். யாரேனும் நட்டத்துக்கு தொழில் நடத்த முடியுமா? 

மேலும், வெறும் ஈஸ்ட்ரோஜென் போட்டால் உடல் குண்டாகாது.. கூட இன்சுலின் போட வேண்டும் இன்சுலின் தான் வளர்ச்சிக்கான anabolic hormone . அது மட்டும் பத்தாது.. உடல் ஏற கடினமான பயிற்சி செய்ய வேண்டும்.  

பண்ணைகளில் அடைத்து வளர்க்கப்படும் கோழிகள் என்ன உடற்பயிற்சி செய்கின்றன??

ஆகவே, ஈஸ்ட்ரோஜென் ஊசி என்பது பொய் கதை. 
மேலும் அதனால் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்துகிறார்கள்  என்பதும் கட்டுக்கதை  தான். 

---

இப்போது கிடைக்கும் நாட்டுக்கோழிகள் ஃப்ரீ ரேஞ்ச் நாட்டுக்கோழிகள் தானா??

இப்போது சந்தையில் கிடைக்கும் நாட்டுக்கோழிகள் பெரும்பான்மை ஃப்ரீ ரேஞ்ச் முறையில் வளர்க்கப்படுபவை அல்ல. 
அவையும் பண்ணைகளில் வளர்க்கப்படுபவையே. ஆனால் , அவை ப்ராய்லர் கிடையாது. நமது நாட்டு வகை கோழி இனம். 

அவற்றையும் ப்ராய்லர் கோழிகள் போல பண்ணைகளில் அடைத்து தீவனம் போட்டு தான் வளர்க்கின்றனர். 
-----

ப்ராய்லர் தின்பதால் தான் பெண்கள் சீக்கிரம் வயசுக்கு வருகிறார்களாமே??

இல்லை. இதுவும் கட்டுக்கதை தான் . 
நமக்கு முந்தைய தலைமுறையில் ஒரு பெண் பத்து குழந்தைகளை பெற்றெடுப்பார். 
வீட்டில் ஒருவர் சம்பாதித்து பனிரெண்டு பேர் உண்ண வேண்டும். 
ஆகவே சத்தான உணவுகள் அனைவருக்கும் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.

இப்போது, வீட்டில் தாய் தந்தை இருவரும் சம்பாதித்து, ஒரு குழந்தை இரு குழந்தை தான் இருப்பதால், சத்துள்ள உணவு கிடைக்கிறது. அதனால் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்துகின்றனர் 

அடுத்த காரணம்..

அந்த காலத்தில் இத்தனை தீனிகடைகள் கிடையாது. குளிர்பானங்கள் , மெக்டொனால்டு, பர்கர், பாஸ்ட் புட் , சோயா கலந்த உணவுகள் எல்லாம் கிடையாது . அவற்றை முழுப்போடு போடுதால் தான் பெண்கள் சீக்கிரம் பூப்பெய்து கின்றனர். 

----

உண்ணச்சிறந்தது நாட்டுக்கோழியா ப்ராய்லர் கோழியா??

சிறந்தது வீட்டில் வளர்க்கப்பட்ட ஃப்ரீ ரேஞ்ச் நாட்டுக்கோழி தான் 

ஆனால் எளிதாக உண்ணக்கிடைப்பது 
ப்ராய்லர் கோழி தான். 

ப்ராய்லர் கோழிகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து சத்தான தீவணம் போட்டு நோய் வராமல் பாதுகாத்து வளர்ப்பதால் கொழுத்து வளர்கின்றன. 

இத்தகைய வளர்ச்சி அந்த கோழிகளுக்குத் தான் பிரச்சனையே ஒழிய அதை கறியாக உண்ணும் நமக்கல்ல.

ஏனெனில் நமது உடல் , அதன் கறியை புரதமாகவும், கொழுப்பாகவும் தான் கிரகித்துக்கொள்கிறது. 

பின்குறிப்பு 

கோழியின் உள்ளே இருக்கும் குடல், கல்லீரல், போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.

ஃபைனல் பாய்ண்ட்

தொடர்ந்து இந்தியாவில் லட்சக்கணக்கில் குழந்தைகள் புரதச்சத்து  குறைபாட்டால்  இறந்து வரும்  சூழ்நிலையில் 
வாரம் ஒரு முறையேனும் ஒரு ஏழை சம்சாரி வீட்டில் வசிக்கும் பிள்ளைககளுக்கு  தரமான புரதம் பெற வழிவகை செய்யும் செலவு குறைவான வழி தான் - ப்ராய்லர் கோழி 

அதையும் வதந்திகள் பரப்பி தடுப்பது நல்லது இல்லை 

இனியும் பழைய வதந்திகளையும் வாட்சப் வதந்திகளையும் நம்பாதீர்கள். 

பரப்பாதீர்கள் 

----
நன்றி 

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர் 
சிவகங்கை

Thursday, November 21, 2019

நோய்கள் நீங்க.:

வீட்டில் இந்த பொருட்கள் இருந்தால் போதும் நோய்கள் நீங்க.:

கண் எரிச்சல் மற்றும் உடல் சூடு.: வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

நெஞ்சு சளி.: தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

தலைவலி.:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

தொண்டை கரகரப்பு.:
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

தொடர் விக்கல்.:
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

அஜீரணம்.:
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை, சுக்கு, சீரகம், ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை, 4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து, அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு, உடல் குளிர்ச்சியடையும். அல்லது 1 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன், சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

வாயு தொல்லை.:
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

வயிற்று வலி.:
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

சரும நோய்.:
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

மூக்கடைப்பு.:
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

நன்மைகளை வாரி - 36

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 36 ]*

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 07 }*

*☄இஷா, ஃபஜ்ரை*
          *ஜமாஅத்தாகத்*
             *தொழுவதன் சிறப்பு [ 04 ]*

*☄நன்மையைத் தரும்*
             *நடுத்தொழுகை☄*

*حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَىٰ وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ*

*🍃தொழுகைகளையும், நடுத் தொழுகையையும்  பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்!*

*📖அல்குர்ஆன் 2:238📖*

*🏮🍂இவ்வசனத்தில் (2:238) நடுத் தொழுகையைப் பேணுமாறு கூறப்படுகிறது. நடுத் தொழுகை என்பது அஸர் தொழுகை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.*

ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ اﻟﻤﺜﻨﻰ، ﺣﺪﺛﻨﺎ اﻷﻧﺼﺎﺭﻱ، ﺣﺪﺛﻨﺎ ﻫﺸﺎﻡ ﺑﻦ ﺣﺴﺎﻥ، ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺳﻴﺮﻳﻦ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﻴﺪﺓ، *ﺣﺪﺛﻨﺎ ﻋﻠﻲ ﺑﻦ ﺃﺑﻲ ﻃﺎﻟﺐ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ: ﻛﻨﺎ ﻣﻊ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻮﻡ اﻟﺨﻨﺪﻕ، ﻓﻘﺎﻝ: «ﻣﻸ اﻟﻠﻪ ﻗﺒﻮﺭﻫﻢ ﻭﺑﻴﻮﺗﻬﻢ ﻧﺎﺭا، ﻛﻤﺎ ﺷﻐﻠﻮﻧﺎ ﻋﻦ ﺻﻼﺓ اﻟﻮﺳﻄﻰ ﺣﺘﻰ ﻏﺎﺑﺖ اﻟﺸﻤﺲ» ﻭﻫﻲ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ*

*📚 (நூல்: புகாரி 6396) 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄அஸரை இழந்தவர்*
       *அனைத்தையும்*
                *இழந்து விட்டார்*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﻧﺎﻓﻊ، *ﻋﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﻤﺮ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «اﻟﺬﻱ ﺗﻔﻮﺗﻪ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ، ﻛﺄﻧﻤﺎ ﻭﺗﺮ ﺃﻫﻠﻪ ﻭﻣﺎﻟﻪ» ﻗﺎﻝ ﺃﺑﻮ ﻋﺒﺪ اﻟﻠﻪ: {ﻳﺘﺮﻛﻢ} [ﻣﺤﻤﺪ: 35] «ﻭﺗﺮﺕ اﻟﺮﺟﻞ ﺇﺫا ﻗﺘﻠﺖ ﻟﻪ ﻗﺘﻴﻼ ﺃﻭ ﺃﺧﺬﺕ ﻟﻪ ﻣﺎﻻ*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (உரிய நேரத்தில் தொழாமல்) யாருக்கு அஸ்ர் தொழுகை தவறிவிடுமோ அவர் தம் குடும்பமும் தமது செல்வமும் அழிக்கப்பட்டவரைப் போன்றவரே ஆவார்.*_

*🎙அறிவிப்பவர்:*
               *இப்னு உமர் (ரலி)*

*📚நூல்: புகாரி (552)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄அஸரைப் பேணியவருக்கு*
              *இருமடங்கு கூலி☄*

وَحَدَّثَنَا  قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ خَيْرِ بْنِ نُعَيْمٍ  الْحَضْرَمِيِّ، عَنِ ابْنِ هُبَيْرَةَ، عَنْ أَبِي تَمِيمٍ  الْجَيْشَانِيِّ، *عَنْ أَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ، قَالَ صَلَّى بِنَا*  *رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْعَصْرَ بِالْمُخَمَّصِ فَقَالَ ‏"‏ إِنَّ هَذِهِ الصَّلاَةَ  عُرِضَتْ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ فَضَيَّعُوهَا فَمَنْ حَافَظَ*  *عَلَيْهَا كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ وَلاَ صَلاَةَ بَعْدَهَا حَتَّى  يَطْلُعَ الشَّاهِدُ ‏"* *وَالشَّاهِدُ النَّجْمُ ‏.‏*

_*🍃(ஒரு பயணத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்முகம்மஸ்' எனுமிடத்தில் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு "இந்தத் தொழுகையை நிறைவேற்றுமாறு உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களிடம் கூறப்பட்டது. ஆனால், அவர்கள் அதைப் பாழாக்கிவிட்டார்கள். எனவே, யார் இத்தொழுகையைப் பேணித் தொழுது வருகிறாரோ அவருக்கு இரு மடங்கு நற்பலன் உண்டு. அஸ்ருக்குப் பின்னாலிருந்து (சூரியன் மறைந்து) நட்சத்திரம் தோன்றும்வரை எந்தத் தொழுகையும் இல்லை.*_

*🎙அறிவிப்பவர்:  அபூபஸ்ரா அல்ஃகிஃபாரீ (ரலி)*

*📚நூல்: முஸ்லிம் (1510)📚*

*🏮🍂தொழுகையை ஜமாஅத்தாகப் பேணித் தொழுபவர்களுக்கு எத்தகைய பாக்கியங்களை நம்முடைய மார்க்கம் வழங்கியுள்ளது என்பதைப் பற்றி மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து நாம் அறிந்து கொண்டோம்.*

*🏮🍂ஜமாஅத்தாகத் தொழுபவர்களுக்கு அந்தத் தொழுகையின் மூலம் இன்னும் அதிகமான பாக்கியங்கள் கிடைக்கின்றன. இன்ஷா அல்லாஹ் அவற்றை வரக்கூடிய தொடர்களில் விரிவாகக் காண்போம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Wednesday, November 20, 2019

நபிகளார் கூறிய கடந்தகால நிகழ்வுகள்:



இந்த பூமியில் இப்போது நாம் வாழ்வதற்கு முன்னால், பல சமுதாய மக்கள் வாழ்ந்து சென்றுவிட்டார்கள். அவர்கள் அனைவரையும் பற்றி முழுமையாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே. முக்காலத்தையும் தெளிவாகத் தெரிந்திருக்கும் தன்மை என்பது ஏகஇறைவனுக்கு மட்டுமே இருக்கும் தனிச்சிறப்பாகும். கடந்த தலைமுறையினர் அனைவரையும் பற்றிய அனைத்துச் செய்திகளையும் அறிந்திருக்கிற ஆற்றல் மனிதனுக்கு இல்லை. இந்நிலையில், இறைவனிடம் இருந்து வரும் இறைச்செய்தியின் வாயிலாக முந்தைய சமுதாயத்தவர்கள் தொடர்பான பல்வேறு சம்பவங்களை முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த நிகழ்வுகளை இந்த உரையில் அறிந்து கொள்வோம்.

1. இரத்தம் சிந்திய இறைத்தூதர்

சத்தியத்தை எடுத்துரைக்கும்போது மடை திறந்த வெள்ளம் போல பல இடையூறுகள் நம்மை நோக்கி வரும். கண்மூடித்தனமாக நம்மைத் திட்டுவது, விமர்சிப்பது என்ற எல்லையைக் கடந்து சில இடங்களில் சில நேரங்களில் அசத்தியவாதிகள் சத்தியவாதிகளை இரத்தம் சிந்துமளவிற்கு தாக்குவதற்கு முற்படுவார்கள். அதன் உச்சகட்டமாக சில தருணம் இறைவழியில் உயிரைத் துறக்கும் நிலையும் ஏற்படலாம். சாதாரண இறைநம்பிக்கையாளர்கள் மட்டுமல்ல இறைத்தூதர்களும் இவ்வாறான உயிருக்கு ஆபத்தான இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்துள்ளார்கள் என்பதை ஏகத்துவவாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

(முற்கால) இறைத்தூதர்களில் ஒருவரின் நிலையை நபி (ஸல்) அவர்கள் எடுத்துரைத்துக் கொண்டிருப்பதை நான் இப்போது பார்ப்பது போன்றுள்ளது. “அந்த இறைத்தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்து அவரை இரத்தத்தில் தோய்த்து விட்டார்கள். அப்போது அவர் தம் முகத்தில் இருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, “இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு! ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

ஆதாரம் : புஹாரி (3477) முஸ்லிம் (1792)

2. கடனைத் தள்ளுபடி செய்தவர்

ஒவ்வொருவரும் சகமனிதர்களுடன் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்பவர்களாக இருக்க வேண்டும். அந்த வகையில், கடன் பெற்றவர் உண்மையாகவே அதைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருக்கும்போது கடன்கொடுத்தவர் அவரிடம் இரக்கத்தோடு நளினமாக நடந்துகொள்ள வேண்டும். அதற்கும் மேலாக ஒருவர், தாம் கொடுத்த கடனைத் தள்ளுபடி செய்துவிடுகிறார் எனும்போது அவர் அல்லாஹ்விடம் தமது பாவங்கள் தள்ளுபடி செய்யப்படும் பொன்னான வாய்ப்பைப் பெற்றுக்கொள்வார்.

(முன் காலத்தில்) ஒரு மனிதர் மக்களுக்குக் கடன் கொடுத்து (உதவி) வந்தார். (அதை வசூலிக்கச் செல்கின்ற) தனது (அலுவலரான) வாலிபரிடம், “(வசதியின்றிச்) சிரமப்படுபவரிடம் நீ சென்றால் (அவரைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து(க் கடனைத் தள்ளுபடி செய்து) விடு. அல்லாஹ்வும் (நம்மைக் கண்டு கொள்ளாமல்) மன்னித்து விடக்கூடும்” என்று சொல்லிவந்தார். அவர் (மரணமடைந்து) அல்லாஹ்வைச் சந்தித்தபோது அவருடைய பிழைகளைப் பொறுத்து அவன் மன்னித்து விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

ஆதாரம் : புஹாரி (3480) (2078), முஸ்லிம் (1562)

3. பூனையைத் துன்புறுத்திய பெண்மணி

ஒருபோதும் நரகத்தில் விழுந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையோடு வாழும் நாம், மனிதர்களிடம் மட்டுமல்ல மற்ற ஜீவராசிகளிடமும் கருணை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். பிற உயிர்களின் விஷயத்தில் மார்க்கம் விடுக்கும் எச்சரிக்கையை மறந்து அவற்றைச் சித்தரவதைச் செய்து துன்புறுத்துவதும், கொடுமைப்படுத்தி வேடிக்கை பார்ப்பதும் பாவமான காரியம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒரு பூனையை, அது சாகும் வரை (பட்டினி போட்டு) கட்டி வைத்த காரணத்தால் பெண் ஒருத்தி (நரகத்தில்) வேதனை செய்யப்பட்டாள். அதை அடைத்து வைத்தபோது அவள் அதற்குத் தீனியும் போடவில்லை; அதற்கு (குடிக்கத்) தண்ணீரும் கொடுக்கவில்லை; அவள் அதை பூமியின் புழு பூச்சிகளைத் தின்ன (அவிழ்த்து) விடவுமில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

ஆதாரம் : புஹாரி (3482) முஸ்லிம் (2242)

4. பூமிக்குள் இழுக்கப்பட்ட மனிதர்கள்

எந்தவொரு நம்பிக்கையாளரிடமும் இருக்கக்கூடாத பண்புகளுள் முக்கியமான ஒன்று பெருமையடிக்கும் பண்பாகும். எல்லாவிதமான பெருமைக்கும் புகழுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. எந்நாளும் எக்காரியத்திலும் அல்லாஹ்வை மறந்து அகந்தையோடு செயல்படுவது கூடாது என்பதை என்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

(முற்காலத்தில்) ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கணுக்காலின் கீழ் தொங்க விட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது, அவன் (பூமி பிளந்து, அதில்) புதைந்து போகும்படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டேயிருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

ஆதாரம் : புஹாரி (3485)

(முற்காலத்தில்) ஒரு மனிதன் (தனக்குப் பிடித்த) ஓர் ஆடையை அணிந்துகொண்டு நன்கு தலைவாரிக்கொண்டு தற்பெருமையுடன் நடந்து சென்றுகொண்டிருந்தான். திடீரென அவனை அல்லாஹ் பூமிக்குள் புதையச் செய்துவிட்டான். அவன் மறுமைநாள் வரை (அவ்வாறே பூமிக்குள்) குலுங்கியபடி அழுந்திச் சென்றுகொண்டேயிருப்பான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : புஹாரி (5789)

5. பிறரறியாமல் தர்மம் செய்தவர்

ஒருவர் செய்யும் செயல்கள் மிகச் சிறியதாயினும், மிகப் பெரியதாயினும் அவற்றை அவர் எந்த எண்ணத்தில் செய்தார் என்பதைப் பொறுத்தே அவருக்குக் கூலி கிடைக்கும். நல்ல நோக்கத்தோடு செய்யும் காரியத்தின் மூலம் எதிர்பார்த்த நல்ல விளைவு ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் அதைச் செய்தவருக்கு அதன் மூலம் கட்டாயமாக நற்கூலி கிடைக்கும் என்பதே உண்மை.

(முற்காலத்தில்) ஒருவர் “நான் இன்றிரவு தர்மம் செய்யப்போகிறேன்’ எனக் கூறிக்கொண்டு, (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது’ எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார்.

மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளியே வந்து, அதை ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். மறுநாள் காலையில் மக்கள், “ஒரு பணக்காரருக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது’ எனப் பேசிக்கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! பணக்காரருக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே புகழ் அனைத்தும் உரியது. (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டுச் சென்று, ஒரு திருடனின் கையில் அதைக் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு ஒரு திருடனுக்குத் தர்மம் செய்யப்பட்டுள்ளது’ என்று பேசிக்கொண்டனர். உடனே அவர், “இறைவா! விபசாரிக்கும் பணக்காரனுக்கும் திருடனுக்கும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் உரியது’ எனக் கூறினார். பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு, உமது தர்மம் ஏற்கப்பட்டு விட்டது. விபச்சாரிக்கு நீர் கொடுத்த தர்மம், அவள் விபசாரத்திலிருந்து விலகி கற்பைப் பேணக் காரணமாக அமையலாம். பணக்காரனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தால் அவன் படிப்பினை பெற்று, அல்லாஹ் தனக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்யக்கூடும். திருடனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மம் அவன் களவைக் கைவிடக் காரணமாக அமையலாம் என்று கூறப்பட்டது என முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

ஆதாரம் : முஸ்லிம் (1856)

6. தாவூத் நபியிடம் முறையிட்ட பெண்கள்

எந்தவொரு தாயும் தமது குழந்தை துன்பத்தில் தவிப்பதைத் தாங்கமாட்டாள். தான் சிரமப்பட்டாலும் தமது குழந்தை இன்பத்தோடு வாழவேண்டும் என்றுதான் பெற்றோர் விரும்புவார்கள். ஒரு குழந்தையின் மீது தாய் தந்தையர் கொண்டிருக்கும் பாசத்திற்கும் மற்றவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கும் இடையே மாபெரும் வித்தியாசம் இருப்பதை மறுக்கவே முடியாது.

(தாவூத் -அலை- அவர்களுடைய காலத்தில்) இரண்டு பெண்கள் இருந்தனர். அவர்களுடன் அவர்களுடைய மகன்களும் இருந்தனர். ஓநாய் (ஒன்று) அவ்விருவரில் ஒருவனைக் கொண்டு சென்று விட்டது. உடனே அவர்களில் ஒருத்தி, தன் தோழியிடம், “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது” என்று கூற, மற்றொருத்தி அவளிடம், “உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்று விட்டது” என்று கூறினாள். ஆகவே, இருவரும் (தங்கள் தகராறைத் தீர்த்துக் கொள்ள) தாவூத் (அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் (அவ்விருபெண்களில்) மூத்தவளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (அவர்களுடைய தீர்ப்பில் கருத்து வேறுபாடு கொண்டு) அப்பெண்கள் இருவரும் சுலைமான் (அலை) அவர்களிடம் (தீர்ப்புக் கேட்டுச்) சென்றனர். அவர்களிடம் விஷயத்தைத் தெரிவித்தனர். அதற்கு அவர்கள், “என்னிடம் ஒரு கத்தியைக் கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்குமிடையே (ஆளுக்குப் பாதியாகப்) பிளந்து (பங்கிட்டு) விடுகிறேன்” என்று கூறினார்கள். அப்போது இளையவள், “அவ்வாறு செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். இவன் என் மகன்” என்று (பதறிப்போய்) கூறினாள். உடனே, சுலைமான் (அலை) அவர்கள் “அந்தக் குழந்தை அ(ந்த இளைய)வளுக்கே உரியது’ என்று தீர்ப்பளித்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

ஆதாரம் : புஹாரி (3427) முஸ்லிம் (1720)

7. தற்கொலை செய்து கொண்டவன்

நமக்கு உயிரைக் கொடுத்து இங்கு வாழ்வதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கே அந்த உயிரை எடுக்கும் உரிமை இருக்கிறது. எனவே எந்தவொரு நேரத்திலும் அவனது உரிமையில் தலையிடக்கூடாது. நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத எந்தவொரு துன்பமான நிலையிலும் சுயமாக உயிரைப் போக்கி தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றுவிடக்கூடாது. இதையும்மீறி, ஒருவர் தற்கொலை செய்துகொண்டால் அவர் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார் என்று மார்க்கம் நம்மை எச்சரிக்கிறது.

உங்களுக்கு முன்னிருந்தவர்களிடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால் வலி பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், “என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப் பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி (அதை அவன் நுழையத் தடை செய்யப்பட்ட இடமாக ஆக்கி) விட்டேன்” என்று கூறினான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுன்தப் (ரலி)

ஆதாரம் : புஹாரி (3463)

8. சோதிக்கப்பட்ட மூன்று நபர்கள்

இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகவே படைத்திருக்கிறான். அவன் எந்தவிதத்திலும் எந்தநேரத்திலும் எந்தக் காரியத்திலும் நம்மைச் சோதிப்பான். எனவே எல்லா நிலைகளிலும் கவனத்துடன் மார்க்கம் கூறும் நெறியில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். சோதிக்கப்படும் போது சரியாக செயல்படும் நல்லவர்களுக்கு இறைவன் ஈருலுகிலும் நல்லதை வழங்குவான். அவர்களின் காரியங்களைப் பொருந்திக் கொள்வான்.

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களைச் சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்க அவர், “நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை). மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்” என்று சொன்னார்.

உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், “எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஒட்டகம் தான்… (என்றோ) அல்லது மாடுதான்…(எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)” என்று பதிலளித்தார். கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், “இதில் உனக்கு பரக்கத் (வளர்ச்சி) வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும்தான் (எனக்கு மிகவும் விருப்பமானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்” என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், “எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது?” என்று கேட்டார். அவர், “மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்” என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, “இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்” என்று சொன்னார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, “உனக்கு மிகவும் விருப்பமானது எது?” என்று கேட்டார். அவர், “அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதிலளித்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரது பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், “உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?” என்று கேட்க அவர், “ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)” என்று பதில் அளித்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார். அந்த இருவரும் (-ஒட்டகம் வழங்கப்பட்டவரும் மாடு வழங்கப்பட்டவரும்) நிறைய குட்டிகள் ஈந்திடப் பெற்றனர். இவர் (ஆடு வழங்கப்பட்டவர்) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழுநோயாளியாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும் வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாளியாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, “நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்” என்று சொன்னார். அதற்கு அந்த மனிதர், “(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)” என்றார். உடனே அவ்வானவர், “உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு நோயாளயாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுததான் அல்லவா?” என்று கேட்டார். அதற்கு அவன், “(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர்களிடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்” என்று பதிலளித்தான். உடனே அவ்வானவர், “நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார்.

பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழுநோயாளியிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன் அவருக்கு பதில்ளிதததைப் போன்றே பதிலளித்தான். வானவரும், “நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்” என்று சொன்னார். பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, “நான் ஓர் ஏழை மனிதன்; வழிப்போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ்வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத் திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்” என்று சொன்னார். (குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், “நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்த்னாக்கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்தமாட்டேன்.” என்று சொன்னார். உடனே அவ்வானவர், “உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தியடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாளி மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான்” என்று சொன்னார். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

ஆதாரம் : புஹாரி (3464)

9. நாய்க்கு நீர்புகட்டிய இருவர்

நம்மைச் சுற்றியிருக்கும் பிற உயிரினங்களுக்கும் நல்லது செய்யும் குணம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். நம்பிக்கையாளர்கள் பிற ஜீவராசிகளுக்கு உதவம்போது அந்தக் காரியத்தை அல்லாஹ் அங்கீகரித்து அதற்கும் கூலி வழங்குவான். அதற்காகவும் அவர்களுடைய பாவங்களை மன்னிப்பான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

(முன்னொரு காலத்தில்) நாய் ஒன்று ஒரு கிணற்றைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அது தாகத்தால் செத்து விடும் நிலையில் இருந்தது. அப்போது, பனூ இஸ்ராயீல் சமுதாயத்தின் விபச்சாரிகளில் ஒருத்தி அதைப் பார்த்தாள். உடனே, அவள் தன் காலுறையைக் கழற்றி (அதில் தண்ணீரை எடுத்து) அந்த நாய்க்குப் புகட்டினாள். அதன் காரணமாக அவளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

ஆதாரம் : புஹாரி (3467)

ஒரு மனிதர் (ஒரு பாதையில்) நடந்து சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு, (கிணற்றிலிருந்து) அவர் வெளியே வந்த போது, நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனத்திற்குள்) “எனக்கு ஏற்பட்டதைப் போன்ற(அ)தே (கடுமையான தாகம்) இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கின்றது போலும்’ என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கித் தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகள் (மற்ற பிராணிகளுக்கு உதவும்) விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(ஆம்;) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவிசெய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

ஆதாரம் : புஹாரி (2363) முஸ்லிம் (2244)

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖0⃣2⃣*

*☄அல்லாஹ்வே முதல்*
               *சாட்சியாளன் [ 01 ] ☄*

*🏮🍂நம்மைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியிலுள்ள அனைத்தையும் அறிந்தவன். உறக்கம், ஓய்வு போன்ற பலவீனம் இல்லாமல் இரவு பகல் முழுவதும் நம்மை கண்காணித்துக் கொண்டிருப்பவன்.* மனிதர்கள் அனைவரையும் பற்றி முழுமையாக துல்லியமாக அறிந்தவன். இத்தகைய இறைவன் மறுமை நாளில் நமது செயல்களுக்கு முதல் சாட்சியாக இருப்பான்.
*நாம் நல்லது செய்தோமா❓ கெட்டது செய்தோமா❓ என்று பகிரங்கப்படுத்துவதற்கு அவனே போதுமானவன். இதை நாம் நமது மனதில் முதலில் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.* இதை குர்ஆனிலும் பல இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான். *இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் நமக்கு தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அந்த ஆதாரங்களில் சிலவற்றை இப்போது காண்போம்.*

*أَمْ يَقُولُونَ افْتَرَاهُ ۖ قُلْ إِنِ افْتَرَيْتُهُ فَلَا تَمْلِكُونَ لِي مِنَ اللَّهِ شَيْئًا ۖ هُوَ أَعْلَمُ بِمَا تُفِيضُونَ فِيهِ ۖ كَفَىٰ بِهِ شَهِيدًا بَيْنِي وَبَيْنَكُمْ ۖ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ*

_*🍃“இவர் இதை இட்டுக்கட்டிவிட்டார்” என்று கூறுகிறார்களா❓ “நான் இட்டுக்கட்டியிருந்தால் அல்லாஹ்விடமிருந்து சிறிதளவும் நீங்கள் என்னைக் காப்பாற்ற முடியாது. நீங்கள் எதில் மூழ்கியுள்ளீர்களோ அதை அவனே நன்கு அறிவான். எனக்கும் உங்களுக்குமிடையே அவனே சாட்சியாகப் போதுமானவன். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!*_

*📖 (அல்குர்ஆன் 46:8) 📖*

_*🍃முஹம்மதே!) “நீர் (இறைவனின்) தூதர் அல்லர்” என்று, மறுப்போர் கூறுகின்றனர். “எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். வேதத்தின் அறிவு உள்ளோரும் போதுமானவர்கள்” என்று கூறுவீராக!*_

*📖 (அல்குர்ஆன் 13:43) 📖*

*وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَىٰ مَا يَفْعَلُونَ*

_*🍃(முஹம்மதே!) நாம் அவர்களுக்கு எச்சரித்ததில் சிலவற்றை உமக்குக் காட்டினாலோ, உம்மை நாம் கைப்பற்றிக் கொண்டாலோ நம்மிடமே அவர்களின் மீளுதல் உள்ளது. பின்னர் அவர்கள் செய்வதற்கு அல்லாஹ் சாட்சியாளனாக இருக்கிறான்.*_

*📖 (அல்குர்ஆன் 10:46) 📖*

_*🍃அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று திரட்டும் நாளில் இணை கற்பித்தோரை நோக்கி “நீங்களும், உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே நில்லுங்கள்!” என்று கூறுவோம். அப்போது அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவோம். “நீங்கள் எங்களை வணங்கவே இல்லை” என்று அவர்களின் தெய்வங்கள் கூறுவார்கள். “எங்களுக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே போதுமான சாட்சியாவான். நீங்கள் (எங்களை) வணங்கியதை அறியாதிருந்தோம்” என்றும் கூறுவார்கள்.*_

*📖 (அல்குர்ஆன் 10:28, 29) 📖*

*وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ ۚ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي ۖ قَالُوا أَقْرَرْنَا ۚ قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُم مِّنَ الشَّاهِدِينَ*

_*🍃“உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பிறகு உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் “தூதர்’ உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா❓ அவருக்கு உதவுவீர்களா❓” என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து “இதை ஒப்புக் கொண்டீர்களா❓ எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா❓” என்று கேட்ட போது, “ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினர். “நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்” என்று அவன் கூறினான்.*_

*📖 (அல்குர்ஆன் 3:81) 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நன்மைகளை வாரி - 35

💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 35 ]*

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 06 }*

*☄இஷா, ஃபஜ்ரை*
          *ஜமாஅத்தாகத்*
             *தொழுவதன் சிறப்பு [ 03 ]*

*☄வானவர்கள் சாட்சி கூறும்*
            *ஃபஜ்ரும் அஸ்ரும்☄*

ﺣﺪﺛﻨﺎ ﻗﺘﻴﺒﺔ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﻋﻦ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﺃﺑﻲ اﻟﺰﻧﺎﺩ، ﻋﻦ اﻷﻋﺮﺝ، *ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻝ: " ﻳﺘﻌﺎﻗﺒﻮﻥ ﻓﻴﻜﻢ ﻣﻼﺋﻜﺔ ﺑﺎﻟﻠﻴﻞ ﻭﻣﻼﺋﻜﺔ ﺑﺎﻟﻨﻬﺎﺭ، ﻭﻳﺠﺘﻤﻌﻮﻥ ﻓﻲ ﺻﻼﺓ اﻟﻌﺼﺮ ﻭﺻﻼﺓ اﻟﻔﺠﺮ، ﺛﻢ ﻳﻌﺮﺝ اﻟﺬﻳﻦ ﺑﺎﺗﻮا ﻓﻴﻜﻢ، ﻓﻴﺴﺄﻟﻬﻢ ﻭﻫﻮ ﺃﻋﻠﻢ ﺑﻬﻢ: ﻛﻴﻒ ﺗﺮﻛﺘﻢ ﻋﺒﺎﺩﻱ؟ ﻓﻴﻘﻮﻟﻮﻥ: ﺗﺮﻛﻨﺎﻫﻢ ﻭﻫﻢ ﻳﺼﻠﻮﻥ، ﻭﺃﺗﻴﻨﺎﻫﻢ ﻭﻫﻢ ﻳﺼﻠﻮﻥ*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவில் சில வானவர்களும் பகலில் சில வானவர்களும் உங்களிடையே அடுத்தடுத்து வருகிறார்கள். அவர்கள் அஸ்ர் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் ஒன்று சேர்கிறார்கள். பிறகு உங்களிடையே இரவு தங்கியிருந்தவர்கள் வானத்திற்கு ஏறிச் செல்வார்கள். அங்கு அவர்களிடம் அல்லாஹ், "என் அடியார்களை எந்த நிலையில் விட்டுவிட்டு வந்தீர்கள்❓'' என்று -அவர்களைப் பற்றி அவன் நன்கறித்த நிலையிலேயே- கேட்பான். அதற்கு வானவர்கள், "அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையில் அவர்களை விட்டுவிட்டு வந்தோம். அவர்கள் தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்களிடம் சென்றோம்'' என்று பதிலளிப்பார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                 *அபூஹுரைரா (ரலி),*

*📚 நூல்: புகாரி (7486)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄நரகத்திலிருந்து காக்கும்*
              *ஃபஜ்ரும் அஸ்ரும்☄*

وَحَدَّثَنَا  أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَاقُ بْنُ  إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ وَكِيعٍ، - قَالَ أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا  وَكِيعٌ، - عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، وَمِسْعَرٍ، وَالْبَخْتَرِيِّ بْنِ  الْمُخْتَارِ، *سَمِعُوهُ مِنْ أَبِي بَكْرِ بْنِ عُمَارَةَ بْنِ  رُؤَيْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه  وسلم يَقُولُ ‏"‏ لَنْ يَلِجَ النَّارَ أَحَدٌ صَلَّى قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَقَبْلَ غُرُوبِهَا ‏" .يَعْنِي الْفَجْرَ وَالْعَصْرَ ‏.‏ فَقَالَ لَهُ رَجُلٌ مِنْ أَهْلِ  الْبَصْرَةِ آنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم  قَالَ نَعَمْ ‏.‏ قَالَ الرَّجُلُ وَأَنَا أَشْهَدُ أَنِّي سَمِعْتُهُ  مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ  قَلْبِي*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சூரியன் உதயமாவதற்கு முன்னரும் சூரியன் மறைவதற்கு முன்னரும் தொழுதவர் -அதாவது ஃபஜ்ர் மற்றும் அஸ்ர் தொழுதவர் - எவரும் ஒருபோதும் நரக நெருப்பில் நுழையமாட்டார்'' என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என (என் தந்தை) உமாரா பின் ருஐபா (ரலி) அவர்கள்  கூறினார்கள். அப்போது அவர்களிடம் பஸ்ராவாசிகளில் ஒருவர், "இதை நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)  அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா❓'' என்று கேட்டார். அதற்கு உமாரா (ரலி) அவர்கள் "ஆம்' என்றார்கள். அந்த மனிதர் "நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இவ்வாறு செவியுற்றேன் என உறுதி அளிக்கிறேன். அதை என்னிரு காதுகளும் செவிமடுத்தன; என் மனம் அதை மனனமிட்டுக் கொண்டது'' என்று கூறினார்.*_

*🎙அறிவிப்பவர்:  அபூபக்ர் பின்  உமாரா பின் ருஐபா*

*📚நூல்: முஸ்லிம் (1115)📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄இறைவனைக்*
             *காணும் பாக்கியம்☄*

ﺣﺪﺛﻨﺎ اﻟﺤﻤﻴﺪﻱ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻣﺮﻭاﻥ ﺑﻦ ﻣﻌﺎﻭﻳﺔ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﻋﻦ ﻗﻴﺲ، *ﻋﻦ ﺟﺮﻳﺮ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﻗﺎﻝ: ﻛﻨﺎ ﻋﻨﺪ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻨﻈﺮ ﺇﻟﻰ اﻟﻘﻤﺮ ﻟﻴﻠﺔ - ﻳﻌﻨﻲ اﻟﺒﺪﺭ - ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻜﻢ ﺳﺘﺮﻭﻥ ﺭﺑﻜﻢ، ﻛﻤﺎ ﺗﺮﻭﻥ ﻫﺬا اﻟﻘﻤﺮ، ﻻ ﺗﻀﺎﻣﻮﻥ ﻓﻲ ﺭﺅﻳﺘﻪ، ﻓﺈﻥ اﺳﺘﻄﻌﺘﻢ ﺃﻥ ﻻ ﺗﻐﻠﺒﻮا ﻋﻠﻰ ﺻﻼﺓ ﻗﺒﻞ ﻃﻠﻮﻉ اﻟﺸﻤﺲ ﻭﻗﺒﻞ ﻏﺮﻭﺑﻬﺎ ﻓﺎﻓﻌﻠﻮا» ﺛﻢ ﻗﺮﺃ: {ﻭﺳﺒﺢ ﺑﺤﻤﺪ ﺭﺑﻚ ﻗﺒﻞ ﻃﻠﻮﻉ اﻟﺸﻤﺲ ﻭﻗﺒﻞ اﻟﻐﺮﻭﺏ} [ﻗ: 39]، ﻗﺎﻝ ﺇﺳﻤﺎﻋﻴﻞ: «اﻓﻌﻠﻮا ﻻ ﺗﻔﻮﺗﻨﻜﻢ*

_*🍃(முழு நிலவுள்ள ஓர் இரவில்) நபி (ஸல்) அவர்களுடன் (அமர்ந்து கொண்டு) இருந்தோம். அப்போது அவர்கள் முழுநிலவைக் கூர்ந்து பார்த்தபடி, "இந்த நிலவை நீங்கள் நெரிசல் இல்லாமல் காண்பது போன்று உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் வெளிவேலைகள் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்'' என்று கூறிவிட்டு, "சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்'' எனும் (50:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
    *ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)*

*📚நூல்: புகாரி (554)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

ஜமாஅத்துகள் முன் வர வேண்டும் !!!

சட்டி சட்டியாக சோறு ஆக்கிப் போடுவதை நிறுத்தி விட்டு... சமுதாய மக்களுக்கு கல்வியை
வழங்க ஜமாஅத்துகள் முன் வர வேண்டும்
***********************************

முஸ்லிம் சமுதாயத்திடம் உள்ள செல்வம்,
நல்ல தரமான உயர் கல்வி நிறுவனங்களை 
உருவாக்குவதற்கு பயன்படட்டும்,

யாரையும் அண்டிப்பிழைக்க வேண்டிய
அவசியம் இல்லை,

பாத்திமாக்களை இழக்க வேண்டிய
நிர்பந்தம் இல்லை,

நம்மை விட எண்ணிக்கையில் 
குறைந்த ஒரு சிறுபான்மை சமுதாயம் 
எப்படி சொந்தக் காலில் 
தலை நிமிர்ந்து நிற்க முடிகிறது?

இட ஒதுக்கீடு கோரவில்லை,
அரசு வேலைக்காக காத்திருக்கவில்லை;

கொடி பிடிக்கவில்லை,
கோஷங்கள் எழுப்பவில்லை,

பொது வெளியில் இறங்கி 
ஆர்ப்பாட்டங்கள் நடத்தவில்லை,

சூடான விவாதங்களில் பங்கெடுப்பதில்லை 
அரசியல் கட்சிகள் இல்லை,
வாக்குகள் சேகரிப்பதில்லை

தங்களுக்குத் தேவையான வேலை வாய்ப்பை 
தாங்களே உருவாக்கிக் கொள்கிறார்கள், 

கல்வி நிறுவனங்களை கையில் வைத்திருப்பதால் 
கவலை இல்லாமல் வாழ்கின்றனர்,

தர்காக்களில் கொடி ஏற்றுவதையும்
சட்டி சட்டியாக சோறு ஆக்கிப் போடுவதையும் 
நிறுத்தி விட்டு ,

வசதியுள்ள ஜமாஅத் துகள் 
சமுதாய மக்களுக்கு உயர் கல்வியை
வழங்க முன் வர வேண்டும், 

கோடி கோடியாக கொட்டிக்கிடக்கும் 
சொத்துக்களை கல்விக்காக பயன்படுத்த வேண்டும்,

நமது சமுதாயத்தில் 
சோற்றுக்கு வழியில்லாதவர்களை விட 
கல்விக்கு வழியில்லாதவர்களே அதிகம்.

ஷேக் சையதுஅலி பைஜி

73 கூட்டங்களில் சொர்க்கம் செல்லும் ??

*🎯🎯🎯மீள் பதிவு🎯🎯🎯* 

*📚📚📚73 கூட்டங்களில் சொர்க்கம் செல்லும் ஒரு கூட்டம் யார்❓❓❓ஓர் இஸ்லாமிய பார்வை🔰🔰🔰* 

 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 


 *✍✍✍நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொன்மொழியில் இருந்து உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇* 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

*எனது உம்மத்தினர் 73 பிரிவினராகப் பிரிவார்கள்.* அவர்களில் ஒரு கூட்டத்தினரைத் தவிர ஏனைய அனைவரும் நரகம் செல்வர் என்று கூறினார்கள்: அப்போது அல்லாஹ்வின் தூதரே அவர்கள் (அந்த ஒரு கூட்டம்) யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் நானும் எனது ஸஹாபாக்களும் இருக்கின்ற இந்த கொள்கையைப் பின்பற்றி நடப்பவர்கள் என்று பதிலளித்தார்கள்.

 *அறிவிப்பவர் அபூஹுரைரா (ரழி)நூல்: திர்மிதீ 2641* 

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பனூ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டத்தினராக பிரிந்தார்கள் என்னுடைய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள் ஒரு கூட்டத்தைத் தவிர மற்ற கூட்டங்கள் சொர்க்கம் செல்ல இயலாது  *அந்த ஒரு கூட்டம் யார்* என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது? *நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்* தான் என்று பதிலளித்தார்கள். 

 *அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)* 
 *நூல் : முஸ்தத்ரக் அஸ்ஸஹிஹைன்: 444* 

இந்த சமுதாயத்தில் ஏற்பட்ட பிளவுகள், முரண்பாடுகள், மார்க்கம் துண்டாக்கப்படும். இவைகள் அனைத்திற்கும் மறுமையில் கேள்வி கணக்கு உள்ளது என்று அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் ஹதீஸ்களில் கூறுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இவர்களைப் பட்டியல் போட்டு எச்சரித்தார்கள். நீங்கள் யூத கிறிஸ்தவர்கள் பிரிந்து சென்றதை விடவும் ஒரு படி மேல் சென்று *73கூட்டத்தினராக பிரிந்து செல்வீர்கள்.* பிரிந்து நிற்கும் எழுபத்தி மூன்று கூட்டங்களில் அனைத்துக் கூட்டமும் நரகத்திற்குச் செல்லும். *ஒரே ஒரு கூட்டத்தைத் தவிர* என்ற இந்த ஹதீஸை வைத்துக் கொண்டு இந்த சமுதாயத்தை பல வழிகளிலும் வழிநடத்தக் கூடிய அனைத்து அறிஞர்கள் இந்த நபிமொழியை மக்கள் மத்தியில் கூறி நாம் தான் அந்தக் கூட்டத்தினர் என்று ஒவ்வொரு கூட்டத்தாரும் கூறி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். 

இவ்வாறு ஒவ்வெருவரும் பெருமைப் பட்டுக் கொள்வதற்குக் காரணம் இந்த ஹதீஸில் கூறப்பட்ட நானும் என்னுடைய தோழர்களும் இன்று எவ்வாறு இருக்கிறோமோ அவ்வாறு இருக்கக் கூடியவர்கள் என்ற செய்தியினை மக்கள் மத்தியில் மறைத்துக் கூறுவார்கள். 

இந்த நபி மொழியில் கூறப்பட்டுள்ளதை நன்கு கவனித்தால் *இன்று என்ற ஒரு வாசகம்  இடம் பெற்றுள்ளது. இதை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டார்கள்.இன்று என்ற வாசகத்தை யார் ஒருவர் கூறுகிறாரோ அவர் வாழும் காலத்தைத் தான் குறிக்கும்.* நான் கூறினால் நான் வாழ்கிற காலத்தைத்தான் குறிக்கும் நீங்கள் இன்று என்று கூறினால் நீங்கள் வாழும் காலத்தைக் குறிக்கும். இன்று,இப்போது, இந்தக் காலம் என்பதை யார் இந்த வார்த்தையைக் கூறினாலும் அவருடைய வாழ் நாளைத் தான் குறிக்கும். 

இன்று என்ற வார்த்தையை நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது அவர்கள் காலத்தில் வாழும் நபித் தோழர்களையும் இணைத்துக் கூறுவதனால் அவர்களுக்குப் பிறகு நபித் தோழர்கள் எதையேனும் ஒன்றைச் செய்தாலோ அல்லது நாம் அதை மார்க்கம் என்று எண்ணிக் கொண்டு செய்தாலும் அது தவறுதான். எனவே யார் அந்த ஒரு கூட்டத்தில் இருக்க ஆசைப்படுகிறாறோ அவர் நபி (ஸல்) அவர்கள் கூறுவது போல் நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினத்தில் எப்படி நடக்கிறோமோ அப்படி நடக்கக் கூடியவர்கள்தான். அந்த ஒரு கூட்டம் தான் வெற்றி பெற்ற கூட்டம் என்று மிகத் தெளிவாக இருக்கிறது.

 "நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டம் சுவனம் செல்லும் என்று கூறிய போது நபித் தோழர்களால் நபி (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டக்கப்பட்டது? அந்த ஒரு கூட்டத்தினர் யார்? (எழுபத்தி இரண்டு கூட்டம் எங்களுக்கு தேவையில்லை) என்று *அந்த ஒரு கூட்டத்தை எங்களுக்கு கூறுங்கள் நாங்கள் அதில் இருப்போம் என்று அவர்கள் கூறியபோது நபியவர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அவ்வாறு இருக்கக் கூடியவர்கள்* தான் அந்த ஒரு கூட்டம் என்று பதிலளித்தார்கள்". 

இன்று இந்த நபி மொழியை மக்களுக்கு கூறும் அறிஞர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்று எவ்வாறு இருக்கின்றோமோ அவ்வாறு இருக்கக் கூடியவர்கள்தான் வெற்றிபெற்ற அந்த ஒரு கூட்டம் என்று வரும் கேள்வியை மறைத்து இருட்டடிப்புச் செய்து விடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதையும் மார்க்கத்தில் மறைக்க வில்லை அவர்கள் நமக்கு போதித்தது தெளிவான மார்க்கம். இந்த மார்க்கத்தை ஆளாளுக்கு வளைக்கும் விதமாக விட்டுச் செல்லவில்லை அவர்கள் இந்த சமுதயாத்திற்கு எதையும் விளக்காமலும் மரணிக்க வில்லை இந்த ஹதீஸை கூறிய அல்லாஹ்வின் தூதர் இதன் மூலம் வெற்றி பெற்ற கூட்டத்தை விளக்காமல் சென்றிருந்தால் இதனால் சமுதாயத்துக் என்ன பயன் கிடைக்கும்? இதன் மூலம் இந்த சமுதாயத்திற்கு என்ன நன்மை? யாருக்கு இந்தப் போதனை பயனளிக்கும்? இதன் மூலம் யார் திருந்துவார்கள்? என்று சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக அவர்கள் மக்களுக்கு இது பற்றி விளக்கமால் சென்றிக்க மாட்டார்கள் என்று உறுதிபட  கூற முடியும். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஆழமான பொருளை உடைய வார்த்தைகளை இரத்தினச் சுறுக்கமாக பேசக் கூடியவர்கள். அதனால் அவர்கள் மக்களுக்கு எதையும் தெளிவாக விளக்கும் ஆற்றலும் உடையவர்களாக இருந்தார்கள். 

உதாரணமாக ஒரு சபையில் இருக்கும் நூறு பேர்களைப் பார்த்து இதில் உள்ள இருபத்தி ஐந்து பேர்கள் நல்லவர்கள் எழுபத்தி ஐந்து பேர்கள் கெட்டவர்கள். என்று கூறினால் அதில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை எந்த இருபத்தி ஐந்து நல்லது எந்த எழுபத்தி ஐந்து கெட்டது என்பதை கூறினால் அதற்குத் தகுந்தாற் போல் நம்மை மாற்றிக் கொள்ளவோ திருத்திக் கொள்ளவோ முடியும். நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறிய பிறகு அந்த ஒரு கூட்டம் யார்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்றைய தினம் எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள் தான் என்று பதிலளித்தார்கள். மிகவும் அற்புதமான ஒரு பதிலைச் சொன்னார்கள். 

 *72 கூட்டத்தை விளங்குவதற்கு முடியாவிட்டாலும் ஒரு கூட்டத்தை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.* இதில் அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தாரை கண்டு கொள்வதற்கு முன்னர் நபி (ஸல்) அவர்கள் கூறிய அந்த ஒரு கூட்டத்தாரில் நாம் இருக்கிறோமா? இல்லையா? என்பதை முதலில் பார்க்க வேண்டும்
நானும் என் தோழர்களும் என்று கூறி இருந்தாலும் இந்த செய்தியில் முரண்பாடுகள் தெளிவாகத் தென்பட்டிருக்கும். ஏனெனில் அவர்கள் நபித்தோழர்களுக்கிடையில்   நபி (ஸல்) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு சண்டைகள் ஏற்பட்டது. அவர்கள் தங்களுக்குள்ளே பிளவுபட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலம் வரை அவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களின் மரணித்திற்குப் பிறகு அவர்களுக்கு மத்தியில் குழப்பங்களும் சண்டைகளும் ஏற்பட்டன.  நபி (ஸல்) அவர்கள் உயிரோடு வாழும் காலத்தில் இருந்த தூய்மை அவர்களின் மரணத்திற்குப் பிறகு இருக்க வில்லை. மாற்றங்கள் ஏற்பட்டன. நபித் தோழர்கள் காலம் என்று அந்த செய்தியில் கூறப்படிருந்தால்  அவர்கள் காலத்தில் ஏராளமான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் வாளைத் தூக்கிக் கொண்டு ஆளாளுக்கு வெட்டிக் கொண்டு பிரச்சினைகள் ஏற்பட்டது என்கிற போது எப்படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று எண்ணத்தோன்றும். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் இடம் தரவில்லை.
 
 இன்று என்ற ஒரு வாசகத்தை அவர்கள் பயன்படுத்தி நானும் என் தோழர்களும் *நான் உயிர் வாழும் காலத்தில் எப்படி தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்தோமோ அந்த வாழ்க்கையை வாழக் கூடியவர்கள் என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.* நபித் தோழர்கள் என்னுடைய மறைவிற்குப் பிறகு மார்க்கம் என்று ஒன்றைச் செய்தாலும் அதை நாம் பின்பற்றிச் செய்தால் நமக்குப் பிரச்சினை ஏற்பட்டு விடும்.
யாரெல்லாம் அந்த ஒரு கூட்டத்தில் இருப்பதற்கு ஆசைப் படுகிறார்களோ அவர்கள் நபியவர்களும் அவர்களின் காலத்தில் வாழ்ந்த நபித் தோழர்களும் அன்று எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்தார்களோ அந்த வாழ்க்கையை வாழக் கூடியவர்கள் தான் அந்த ஒரு கூட்டத்தினர் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் வாழும் போது நபித் தோழர்கள் நபியவர்களின்  அனுமதியோடு செய்தது நாம் இன்று செய்யும் வணக்க வழிபாடுகளில் இருந்ததா? அது அக்காலத்தில் இருந்தது என்றால் அதைக் கடைப்பிடித்தால் அந்த ஒரு கூட்டத்தில் சேருவோம். அக்காலத்தில் அந்த வணக்க வழிபாடுகள் இல்லையென்றால் *அது  72 கூட்டத்தில் சேர்ந்துவிடும்.* 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எவையெல்லாம் வணக்க வழிபாடுகளாக காணப்படவில்லையோ அதையெல்லாம் செய்யக் கூடியவர்கள் அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை எந்த விதமான ஆராய்ச்சிகளும் இன்றி விளங்கிக் கொள்ள முடியும்.
மக்களுக்கு கூற வேண்டிய செய்தியை உரிய நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள் என்பதற்கு அவர்கள் அரபா பெருவெளியில் இறுதிப் பேருரை ஆற்றியது சான்றாகும்.

 *நபியவர்கள் மக்களுக்கு தெளிவு படுத்தாமல் சென்று விட்டார்கள் என்று யாராவது சொல்வார்களானால்  நிச்சயமாக அதில் ஏதாவது ஒன்றை இருட்டடிப்பு செய்திருப்பார்கள்* என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
நபி (ஸல்) அவர்கள் விளக்காமல் சென்றுள்ளார்கள் என்பதற்குரிய சான்றுகளை அவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்களை வைப்போரிடம் மக்கள் மத்தியில் அதைத்  தெளிவுபடுத்துங்கள் என்று  அழைப்புவிடுத்தால் புறமுதுகு காட்டி ஒடுவதையும் நான் இன்று பார்த்து வருகிறோம்.

*தர்ஹா என்ற ஒரு வழிபாடு* இன்று பல நாடுகளில் இருக்கின்றன. இது நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் போது *இந்த வழிபாடு இருந்துள்ளதா?* அதற்கான ஏதாவது சான்றுகள் உள்ளதா என்று தேடிப்பார்த்தால் அப்படியான எந்த ஒரு சான்றையும் பார்க்க முடியவில்லை அப்படியென்றால் அவர்கள்  *72 கூட்டத்தில் சேர்வார்கள்.* 
நபி (ஸல்) அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் *கொடி மரம் இருந்ததா?* இல்லையென்றால் அதுவும் *72 கூட்டத்தில் சேரும்.* 
நேர்வழி எது என்று கண்டு பிடிப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய தெளிவான வார்த்தையின் மூலம் விளங்கிக் கொள்ளலாம். நானும் அதை செய்திருக்க வேண்டும் என்னுடைய தோழர்களும் அதை செய்திருக்க வேண்டும் அதுவும் நான் வாழும் காலத்தில் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் தான் *அந்த  சுவனத்திற்குச் செல்லும் கூட்டத்தில் சேரும்.* 

இன்று முஸ்லீம்கள் மத்தியில் காணப்படும் *தரீக்கா, மத்ஹபுகள், பைஅத், மௌலீது கத்தம் பாத்திஹா, சமாதி வழிபாடு, தர்கா, பெரியார்கள் பெயரில் வணக்கம், தயாத்து, தட்டு, இஸ்மு, அஸ்மா*  என்ற பெயரில் நடத்தப்படும் அனைத்து விதமான செயல்களையும் செய்யக் கூடியவர்கள் அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தில் அடங்குவர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இதை *ஆதரிக்கக்கூடிய ஆலிம்களிடம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததா? அல்லது அவர்களின் மறைவுக்குப் பிறகு தோன்றியதா? என்று கேட்டால் பிற்காலத்தில் தான் தோன்றிது என்று பதில் அளிப்பார்கள்.* 

மத்ஹபுகளோ, இமாம்களோ நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு தோன்றியவர்கள் தான்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இல்லாத ஒன்றைச் செய்பவர்கள் அந்த ஒரு கூட்டத்தில் அடங்க மாட்டார்கள். அதனால் எவன் ஒருவன் தன்னுடைய மார்க்க - வணக்கவழிபாடுகளை அல்லாஹ் சொன்னால் கொண்டு வா  நபி (ஸல்) அவர்கள் சொன்னால் கொண்டு வா என்று யாரல்லாம் உறுதியாக இருக்கிறார்களோ அவர்கள்தான் அந்த ஒரு கூட்டம். இதன் மூலம் யார் அந்த ஒரு கூட்டத்தினர் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி விளங்க முடிகிறது.

ஒவ்வொருவரும் நாங்கள் தான் அந்த ஒரு கூட்டம் என்று சொல்லிக் கொள்வார்கள். அல்லாஹ்வும் இவர்கள் இவ்வாறு கூறுவதை திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான்.
ஒவ்வொரு கூட்டத்தினரும் தம்மிடம் உள்ளதில் மகிழ்ச்சியடைகின்றனர்

.  *அல்குர்ஆன் (30:32)* 

அவர்கள் எந்தக் கொள்கையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு அது சரியென்று தென்படும். இது பற்றி நாம் இங்கு விளக்க வரவில்லை. நாம் இருப்பது சரியா தவறா என்பதைப் பார்க்க வேண்டியதில்லை.
நானும் என்னுடைய தோழர்களும் இன்றைக்கு எப்படி இருக்கிறோமோ அப்படி இருக்கக் கூடியவர்கள்தான் அந்த ஒரு கூட்டம் என்பதற்கு என்ன விளக்கம்? இதை இக்கூட்டத்திற்கு வெளியே இருந்தோ உள்ளே இருந்தோ சிந்தித்தாலும் நம்மை எதிர்த்துக் கொண்டு சிந்தித்தாலும் இந்த வார்த்தைக்குரியவர்கள் யார்? என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.
                
*எந்தக் கட்டத்திலும் யாருக்கும் வளைந்து கொடுக்காமல் அவர் சொன்னார், இவர் சொன்னார், இந்த அறிஞர் சொன்னார் என்று கூறாமல்  இதைச் சொன்னால் பிரச்சினை ஏற்பட்டு விடும் இதைச் சொன்னால் அடிக்க வருவார்கள், ஊர் நீக்கம் செய்வார்கள் என்று சொல்வார்கள். எதற்கும் வளைந்து கொடுக்கக் கூடாது என்று யார் இருக்கிறார்களோ அவர்கள் தான் உறுதியாக நின்று சத்தியத்தைக் கூறுபவர்கள். அவர்கள்தான் அந்த ஒரு கூட்டத்தில் அடங்குவர்.*

 நாம் இக்கொள்கையில் இருந்தால் சந்தோசப்பட்டுக் கொள்ளலாம். இக்கொள்கையில் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்கள் சொல்லாததைச் செய்கிறோம். நன்றாகத் தெரிகிறது அந்த எழுபத்தி இரண்டு கூட்டத்தில் சேர்ந்து விடுவோம். *இன்ஷா அல்லாஹ்*

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

Tuesday, November 19, 2019

பார்வையைப் பாதுகாப்போம்

பார்வையைப் பாதுகாப்போம்:
*****************
உண்மையான இறைநம்பிக்கையாளர்களிடம் இருக்க வேண்டிய பல்வேறு பண்புகளை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் விவரித்துள்ளான். அவற்றில் மிக முக்கியமான ஒன்றுதான் நம்முடைய பார்வையைப் பாதுகாப்பதாகும். இந்த மனித சமுதாயம் ஒழுக்க வீழ்ச்சியடைவதற்கு மிக முக்கியமான ஒரு காரணி பார்வையை தவறான முறையில் பயன்படுத்துவதாகும். இதன் காரணமாகத்தான் இறை நம்பிக்கையாளர்களான ஆண்களும், பெண்களும் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என இறைவன் தன் திருமறையில் கட்டளையிடுகின்றான்.

இறைவனின் கட்டளை

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!

(அல் குர்ஆன் 24 : 30,31)

தங்களின் பார்வையைப் பாதுகாத்துக் கொள்வதுதான் இறைநம்பிக்கையாளர்களுக்கு பரிசுத்தமானது என மேற்கண்ட வசனம் தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் இன்றைக்கு விபச்சாரம், கற்பழிப்பு போன்ற பல்வேறு பெரும்பாவங்களுக்கு அடிப்படையாகத் திகழ்வது பார்வைதான்.

இன்றைய உலகில் பத்ரிகைகள் வாயிலாகவும், ஆபாசப் புத்தகங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிப் பெட்டிகளின் வாயிலாகவும், இணையதளங்களின் மூலமாகவும் பல்வேறு விதமான ஆபாசக் காட்சிகள் வெளியிடப் படுகின்றன. அழகிய பெண்களின் அறைகுறை ஆடையுடன் கூடிய காட்சிகள் காட்டப்படுகின்றன.

சாதாரண செய்திப் பத்ரிகைகள் முதல் வார இதழ், மாத இதழ் போன்ற எந்த ஒரு பத்திரிக்கையும் இதற்கு விதிவிலக்கல்ல, அனைத்து இதழ்களிலும் இது போன்ற ஆபாசப் படங்கள் வெளியிடப்படுகின்றன. ஆபாசப் படங்களை வெளியிடாத பத்திரிகைகளின் விற்பனை கூட குறைந்து விடுவதால் விற்பனைக்காகவே இது போன்ற காட்சிகளை அதிகம் வெளியிடுகின்றனர்.

கிரிக்கெட் என்ற விளையாட்டை சாதரணமாகப் பார்ப்பதில் தவறில்லை என்ற நமக்கு நாமே ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு அதனை பார்த்து வருகின்றோம். ஆனால் அந்த விளையாட்டின் மத்தியில் அரை குறை மங்கைகளை ஆடவிட்டு காட்டுகின்ற காட்சிகளும் அதிகம் இடம்பெறுகின்றன. இடைஇடையே காட்டப்படும் விளம்பரங்களில் கூட ஏராளமான அரைகுறை காட்சிகள் காட்டப்படுகின்றன. இவற்றைப் பற்றி நாம் யாரும் சிந்திப்பதில்லை.

இளைஞர்கள் பலர் இது போன்ற தவறான காட்சிகளின் காரணமாக தங்களுடைய மனதை அலைபாய விடுகின்றனர். இதனால் அவர்களுடைய கல்வித் தரம் குறைகிறது. வாழ்க்கையில் எந்த ஒரு துறையிலும் ஈடுபாடில்லாமல் தவறான பாதையில் சென்று தங்களுடைய எதிர்கால வாழ்வையே சீரழித்து விடுகின்றனர். இன்றைய உலகில் மிக வேகமாகப் பரவி வரும் எய்ட்ஸ் போன்ற கொடிய நோய்களுக்கு அடிப்படைக் காரணம் தவறான உடலுறவுதான் என்றாலும் அத்தகைய தவறான உறவைத் தூண்டக்கூடிய மிக முக்கிய காரணி ஆபாசக் காட்சிகளைப் பார்ப்பதுதான்.

மார்க்கத்தின் எச்சரிக்கை

இதனால்தான் நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் தவறான காட்சிகளை பார்ப்பதைக் கூட விபச்சாரம் என்கிறது.

6243م- حَدَّثَنِي مَحْمُودٌ ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنِ ابْنِ طَاوُوسٍ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنَ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لاَ مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ.

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும் பேச்சாகும்). மனம் ஏங்குகிறது இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவையனைத்தையும் உண்மையாக்குகிறது அல்லது பொய்யாக்குகிறது.

அறி : அபூஹ‚ரைரா (ரலி),

நூல் : புகாரி (6243)

மனதைக் கெடுக்கக்கூடியது தவறான பார்வைதான் என்பதை நபி (ஸல்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்கள். தவறான பார்வைதான் அதிகமான பாவங்களுக்கு அடிப்படையாகத் திகழ்வதால் நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய அனைத்து வாசல்களையும் அடைப்பதற்கு நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை நாம் காண்போம்.

உரிய வயதில் திருமணம் செய்தல்

ஆண்களோ பெண்களோ அவர்கள் பருவ வயதை அடைந்து பாலியல் ரீதியான நாட்டங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது பெற்றோர்கள் மீது கடமையாகும். இன்றைக்கு நம்முடைய சமுதாயத்தில் திருமணம் என்பது ஒரு பாரதூரமான காரியமாக ஆக்கப்பட்டுவிட்டது. வரதட்சணை போன்ற கொடுமைகளின் காரணமாக பெண்களுக்குரிய திருமண காலம் தாமதமாகின்றது. அது போன்று பல ஊர்களில் ஆண்களுக்கு வேண்டுமென்றே திருமணகாலம் தாமதிக்கப்படுகிறது. அண்ணன் திருமணத்தில் நாட்டமில்லாதவறாக இருந்தால் அவருக்கு திருமணமாகின்ற வரை அவருடன் பிறந்த சகோதரர்களுக்கும் திருமண காலங்கள் பிற்படுத்தப்படுகின்றன. இதனால் பலர் மன நோய்களுக்கு ஆளாகின்றனர். தவறான பல காரியங்களைச் செய்வதற்குத் துணிகின்றனர்.
இது போன்ற நிலை ஏற்பட்டு விடக்கூடக்கூடாது என்பதற்காகத்தான் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கட்டளையிடுகின்றார்கள்.

1905- حَدَّثَنَا عَبْدَانُ ، عَنْ أَبِي حَمْزَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ إِبْرَاهِيمَ ، عَنْ عَلْقَمَةَ قَالَ بَيْنَا أَنَا أَمْشِي مَعَ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، فَقَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ
مَنِ اسْتَطَاعَ الْبَاءَةَ فَلْيَتَزَوَّجْ فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْصَنُ لِلْفَرْجِ ، وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَعَلَيْهِ بِالصَّوْمِ فَإِنَّهُ لَهُ وِجَاءٌ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இளைஞர்களே உங்களில் யார் திருமணத்திற்கான செலவினங்களுக்கு சக்தி பெற்றிருக்கிறாரோ அவர் திருமணம் செய்யட்டும். ஏனெனில் திருமணம் (அந்நியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) பார்வையைக் கட்டுப்படுத்தும். கற்பைக் காக்கும். யார் அதற்குச் சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவரது இச்சையைக் கட்டுப்படுத்தும்.

அறி : அப்துல்லாஹ் (ரலி),

நூல் : புகாரி (1905)

மேற்கண்ட செய்தியில் உரிய வயதில் தகுதியுடையவர்கள் திருமணம் செய்வதும், அதற்கு இயலவில்லையென்றால் இறையச்சத்தை வளர்க்கும் நோன்பை நோற்பதும் நம்முடைய தவறான பார்வைக்குத் திரையாக அமையும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

வீதியில் செல்லும் போது பார்வையைத் தாழ்த்துதல்

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்ட வசனங்களில் இறைநம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் வீதிகளில் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்தியவர்களாத்தான் செல்ல வேண்டும் என்ற இறைக்கட்டளையை நாம் பார்த்தோம். பார்வையைத் தாழ்த்தி வீதிகளில் நடந்து செல்வது வீதிக்கும் செய்ய வேண்டிய கடமை என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். இன்றைய காலங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த பெண்களில் ஒரு பகுதியினரும் மிக அதிகமாக மாற்று சமுதாயப் பெண்களும் தங்களுடைய அலங்காரங்களையும், அங்கங்களையும் வெளிப்படுத்திக் கொண்டுதான் வீதியில் நடமாடுகின்றனர். பல இஸ்லாமிய நாடுகளிலும் இது போன்ற அவல நிலைதான் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் உண்மையான முஃமின்கள் தங்களுடைய பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டால் தான் தங்கள் மனதை அசுத்தத்திலிருந்து பரிசுத்தப்படுத்த முடியும். தங்களுடைய பார்வைகளை உலாவ விடுபவர்கள் நிச்சயம் பல விதமான மனோ இச்சைகளுக்கு அடிமையாவதிலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியாது. பின்வரக்கூடிய நபி (ஸல்) அவர்களின் உபதேசத்தை நாம் பின்பற்றி நடந்தால் நம்முடைய மனதை வழிகெடுவதிலிருந்து நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

2465- حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ ، حَدَّثَنَا أَبُو عُمَرَ حَفْصُ بْنُ مَيْسَرَةَ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
إِيَّاكُمْ وَالْجُلُوسَ عَلَى الطُّرُقَاتِ فَقَالُوا مَا لَنَا بُدٌّ إِنَّمَا هِيَ مَجَالِسُنَا نَتَحَدَّثُ فِيهَا قَالَ فَإِذَا أَبَيْتُمْ إِلاَّ الْمَجَالِسَ فَأَعْطُوا الطَّرِيقَ حَقَّهَا قَالُوا وَمَا حَقُّ الطَّرِيقِ قَالَ غَضُّ الْبَصَرِ وَكَفُّ الأَذَى وَرَدُّ السَّلاَمِ وَأَمْرٌ بِالْمَعْرُوفِ وَنَهْىٌ ، عَنِ الْمُنْكَرِ.

”நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” மக்கள் ”எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவைதாம் நாங்கள் பேசிக்கொள்கின்ற எங்கள் சபைகள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ” அப்படியென்றால் நீங்கள் அந்த சபைகளுக்கு வந்துதான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள். மக்கள் ” பாதையின் உரிமை என்ன?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ” பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும் , தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்” என்று கூறினார்கள்.

அறி : அபூ ஸயீத் (ரலி),

நூல் : புகாரி ( 2466)

5773 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ حَكِيمٍ عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِى طَلْحَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ أَبُو طَلْحَةَ
كُنَّا قُعُودًا بِالأَفْنِيَةِ نَتَحَدَّثُ فَجَاءَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَامَ عَلَيْنَا فَقَالَ « مَا لَكُمْ وَلِمَجَالِسِ الصُّعُدَاتِ اجْتَنِبُوا مَجَالِسَ الصُّعُدَاتِ ». فَقُلْنَا إِنَّمَا قَعَدْنَا لِغَيْرِ مَا بَاسٍ قَعَدْنَا نَتَذَاكَرُ وَنَتَحَدَّثُ. قَالَ « إِمَّا لاَ فَأَدُّوا حَقَّهَا غَضُّ الْبَصَرِ وَرَدُّ السَّلاَمِ وَحُسْنُ الْكَلاَمِ ».

மற்றொரு அறிவிப்பில் ” அழகிய பேச்சைப் பேசுதலும்” பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது.

அறி : அபூ தல்ஹா (ரலி),

நூல்: முஸ்லிம் ( 4020 )

அந்நியப் பெண்களை விட்டும் பார்வையைத் திருப்புதல்

இஸ்லாமிய எந்த முறையில் எதற்காக அந்நியப் பெண்களை பார்ப்பதற்கு அனுமதியளிக்கிறதோ அதுவல்லாத முறைகளில் அந்நியப் பெண்களை நாம் பார்ப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் யார் யார் முன்னிலையில் பர்தா அணியாமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்கிறதோ அவர்களைத் தவிர மற்ற அனைத்து ஆண்கள் முன்னிலையிலும் தங்களை மறைத்துதான் இருக்க வேண்டும்.

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌ ؕ ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌ ؕ اِنَّ اللّٰهَ خَبِيْرٌۢ بِمَا يَصْنَـعُوْنَ‏
وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآٮِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآٮِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِىْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآٮِٕهِنَّ اَوْ مَا مَلَـكَتْ اَيْمَانُهُنَّ اَوِ التّٰبِعِيْنَ غَيْرِ اُولِى الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِيْنَ لَمْ يَظْهَرُوْا عَلٰى عَوْرٰتِ النِّسَآءِ‌ وَلَا يَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِيُـعْلَمَ مَا يُخْفِيْنَ مِنْ زِيْنَتِهِنَّ‌ ؕ وَتُوْبُوْۤا اِلَى اللّٰهِ جَمِيْعًا اَيُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْ

”அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

(அல் குர்ஆன் 24 : 30,31)

பர்தாவைப் பேணாத பெண்கள் முன்னிலையில் நாம் பேசுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அது போன்று தனிமையில் பேசுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

2776 – حدثنا أحمد بن منيع حدثنا هشيم أخبرنا يونس بن عبيد عن عمرو بن سعيد عن أبي زرعة بن عمرو بن جرير عن جرير بن عبد الله قال :
سألت رسول الله صلى الله عليه و سلم عن نظرة الفجأة فأمرني أن أصرف بصري
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் நபி (ஸல்) அவர்களிடம் (அன்னியப் பெண் மீது) திடீரெனப் படும் பார்வையைப் பற்றிக் கேட்டேன். நான் என்னுடைய பார்வையைத் திருப்ப வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நூல் : திர்மிதி (2700)

1513- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ ، أَخْبَرَنَا مَالِكٌ ، عَنِ ابْنِ شِهَابٍ ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ :
كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَجَاءَتِ امْرَأَةٌ مِنْ خَثْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللهِ إِنَّ فَرِيضَةَ اللهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لاَ يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ ، وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ.

(இளைஞரான) ஃபழ்ல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்த போது ”கஸ்அம்” கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள்.

அறி : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (1513)

885 – حدثنا محمد بن بشار حدثنا أبو أحمد الزبيري حدثنا سفيان عن عبد الرحمن بن الحارث بن عياش بن أبي ربيعة عن زيد بن علي عن أبيه عن عبيد الله بن أبي رافع عن علي بن أبي طالب رضي الله عنه قال :
وقف رسول الله صلى الله عليه و سلم بعرفة فقال هذه عرفة وهذا هو الموقف وعرفة كلها موقف ثم أفاض حين غربت الشمس وأردف أسامة بن زيد وجعل يشير بيده على هينته والناس يضربون يمينا وشمالا يلتفت إليهم ويقول أيها الناس ! عليكم السكينة ثم أتى جمعا فصلى بهم الصلاتين جميعا فلما أصبح أتى قزح فوقف عليه وقال هذا قزح وهو الموقف وجمع كلها موقف ثم أفاض حتى انتهى إلى وادي محسر فقرع ناقته فخبت حتى جاوز الوادي فوقف وأردف الفضل ثم أتى الجمرة فرماها ثم أتى المنحرة فقال هذا المنحر ومنى كلها منحر واستفتته جارية شابة من خثعم فقالت إن أبي شيخ كبير قد أدركته فريضة الله في الحج أفيجزئ أن أحج عنه ؟ قال حجي عن أبيك قال ولوى عنق الفضل فقال العباس يا رسول الله ! لم لويت عنق ابن عمك ؟ قال رأيت شابا وشابة فلم آمن الشيطان عليهما ثم أتاه رجل فقال يا رسول الله ! إني أفضت قبل أن أحلق قال إحلق أو قصر ولا حرج قال وجاء آخر فقال يا رسول الله ! إني ذبحت قبل أن أرمي قال إرم ولا حرج قال ثم أتى البيت فطاف به ثم أتى زمزم فقال يا بني عبد المطلب ! لولا أن يغلبكم الناس عنه لنزعت قال وفي الباب عن جابر
قال أبو عيسى حديث علي حديث حسن صحيح لا نعرفه من حديث علي إلا من هذا الوجه من حديث عبد الرحمن بن الحارث بن عياش وقد رواه غير واحد عن الثوري مثل هذا والعمل على هذا عند أهل العلم رأوا أن يجمع بين الظهر والعصر بعرفة في وقت الظهر وقال بعض أهل العلم إذا صلى الرجل في رحله ولم يشهد الصلاة مع الإمام إن شاء جمع هو بين الصلاتين مثل ما صنع الإمام قال و زيد بن علي هو ابن حسين بن علي بن أبي طالب عليه السلام
قال الشيخ الألباني : حسن

(இதைக் கண்ட) அப்பாஸ் (ரலி) அவர்கள் ” அல்லாஹ்வின் தூதரே எதற்காக நீங்கள் உங்களுடைய சிறிய தந்தையின் மகனின் கழுத்தை திருப்பினீர்கள் என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் ” ஒரு இளைஞனையும், இளம்பெண்ணையும் நான் பார்த்தேன். அவ்விருவருக்கு மத்தியில் ஷெய்தான் நுழைவதை நான் அஞ்சுகிறேன் என்று கூறினாரகள்.

நூல் : திர்மிதி

இறைவனை அஞ்சி வாழ்தல்

எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தனிமையில் இருக்கும் போதும் கூட்டாக இருக்கும் போதும் இறைவனை அஞ்சிக் கொள்ள வேண்டும். தவறான பத்ரிகைகள் தொலைக்காட்சி காட்சிகள் இணையதளங்கள் போன்றவற்றை பார்ப்பதை விட்டும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய பார்வைகளுக்காகவும் நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நம்முடைய பார்வைகளும் நமக்கெதிராக மறுமையில் சாட்சி சொல்லும் என்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த பயம் இருந்தால்தான் நாம் நம்முடைய பார்வையைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

وَلَا تَقْفُ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ‌ ؕ اِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤٮِٕكَ كَانَ عَنْهُ مَسْـُٔوْلًا‏
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை.
(அல்குர்ஆன் 17:36)

தோல்கள் சாட்சி சொல்லும்

   وَقَالُوْا لِجُلُوْدِهِمْ لِمَ شَهِدْتُّمْ عَلَيْنَا‌ ؕ قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِىْۤ اَنْطَقَ كُلَّ شَىْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ‏ ‏
அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்த தும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். ”எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று அவர்கள் தமது தோல் களிடம் கேட்பார்கள். ”ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!” என்று அவை கூறும்.

(அல் குர்ஆன் 41:30)

يَعْلَمُ خَآٮِٕنَةَ الْاَعْيُنِ وَمَا تُخْفِى الصُّدُوْرُ‏
கண்களின் (சாடைகள் மூலம் செய் யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

(அல் குர்ஆன் 40:19)

لَا تُدْرِكُهُ الْاَبْصَارُوَهُوَ يُدْرِكُ الْاَبْصَارَ‌ۚ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

(அல் குர்ஆன் 6 : 103)

இறைவன் எந்நேரமும் நம்முடைய கண்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்கின்ற இறையச்சம்தான் தவறான பார்வைகளை விட்டும் நம்மை பாதுகாக்கும் திரையாகும்.

தர்கா வழிபாடு

உங்களுக்கு முன் சென்றோரின் வழியை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரித்துச் சென்றதை மெய்ப்பிக்கும் வகையில் கனிசமான முஸ்லிம்கள் பிற சமயக் கோட்பாடுகளைத் தமதாக்கிக் கொண்டு விட்டனர்.

‘அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அவனைத் தவிர எவரையும், எதனையும் வணங்கக் கூடாது’ என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைக் கூட பலர் தூக்கி எறிந்து விட்டு சமாதிகளையும் அதில் அடக்கம் செய்யப்பட்டவர்களையும், கொடி மரங்களையும் வணங்கி வருகின்றனர்.

நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக மாற்றிக் கொண்ட யூதர்கள் மற்றும் ஈஸா நபியைப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே எந்த வேறுபாட்டையும் காண முடியவில்லை.

என்றைக்கோ மரணித்து விட்டவர்களிடம் குழந்தை வரம் கேட்கின்றனர்! தமது வறுமையை முறையிடு கின்றனர்! நோய் தீர்க்க வேண்டுகின்றனர்.

சமாதிகளில் காணிக்கை செலுத்துகின்றனர். விழுந்து கும்பிடுகின்றனர்! அறுத்துப் பலியிடுகின்றனர்! நேர்ச்சை செய்கின்றனர்!

இவற்றை இஸ்லாத்தின் பெயரால் தான் இவர்கள் செய்து வருகின்றனர். இவற்றுக்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்று போலி மத குருமார்கள் இவர்களுக்குக் கற்பித்திருப்பதே இந்த நிலைமைக்குக் காரணம்.

முஸ்லிம்களை நிரந்தர நரகத்தில் தள்ளி விடக் கூடிய இந்தப் பாவத்திலிருந்து முஸ்லிம்களை மீட்டெடுக்கும் நோக்கத்தில் ‘தர்கா வழிபாடு’ என்ற இந்த நூலை வெளியிடுகிறோம்.

தர்கா வழிபாட்டுக்கும் தனி நபர் வழிபாட்டுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இல்லை என்பது இந்நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் வாதங்கள் அனைத்துக்கும் தக்க பதில் தரப்பட்டுள்ளது.

திறந்த மனதுடன் இந்நூலை வாசிக்கும் எவரும் தர்கா வழிபாடு இஸ்லாத்திற்கு விரோதமானது என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ள முடியும்.

இதன் மூலம் ஏகத்துவக் கொள்கையை எழுச்சி பெறச் செய்வானாக என்று வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.