Saturday, December 27, 2014

பாட்டிகள் வைத்தியம்


பாட்டிகள் வைத்தியம் - சளி இருமல் போக்கும் இயற்கை மருந்துகள்.. !!

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.
மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு வெற்றிலையில் மடித்து மென்று விழுங்கினால் இருமல் குணமாகும். நான்கு வால் மிளகைச் சிறிதளவு புழுங்கலரிசியுடன் வாயில் போட்டு மென்று அதன் ரசத்தை பருகினால் இருமல் குணமாகும்.


தூய்மையான அருகம்புல்லை எடுத்து நன்றாக மென்று பற்களில் வலியுள்ள பகுதியில் ஓதுக்கினால் பல்வலி உடனே குணமாகும். பல் துலக்கி பின் தேனை ஈறு முழுவதும் தடவவேண்டும். சிறிது நேரம் கழித்து வாயைக்கொப்பளித்தால் பற்களில் உள்ள கிருமிகள் அழியும். தேங்காய் எண்ணெயை நாள்தோறும் பலமுறை உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு உதட்டு புண், தோல் உரிதல் ஆகியன குணமாகும்.

அரிசியையும் திப்பிலியையும் சிறிதளவு எடுத்து தேனில் பத்து நாட்கள் ஊறவைத்து தினம் ஒரு திப்பிலியை வாயில் போட்டு அடக்கிக்கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும். மழைக்காலத்தில் ஒரு தம்ளர் பாலில் சிறிதளவு சுக்கு பொடி கலந்து இரவு குடித்து வந்தால் காலையில் புத்துணர்வு பெறலாம். துளசி இலையை நன்றாக வெயிலில் காய வைத்து பொடி செய்து டீத்தூளில் சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால் நன்கு பசி எடுக்கும்.

குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய சளி, கபம் நீங்கும். அரிசிபொரியைத் தண்ணீரில் வேகவைத்து சாப்பிட்டால் ரத்த கொதிப்பினால் வரக்கூடிய தலை சுற்றல் குணமாகும். தலை சுற்றலுடன் வாந்தி ஏற்பட்டால் வெங்காயத்தினை சாறெடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிடலாம். துளசி இலைச்சாறு, 150 மிலி கற்கண்டு இவை இரண்டையும் கலந்து சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீஸ்பூன் அளவு தினசரி இருவேளை உட்கொண்ட பின் பசும்பால் அருந்தலாம்.

இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும். மூளை, நரம்பு, இதயம், இரைப்பை ஆகியவற்றைப் பலப்படுத்தும். ஞாபகசக்தியை அதிகரிக்கும். கண்களில் நீர்வடியும் பிரச்சனை உள்ளவர்கள் தினந்தோறும் வெறும் வயிற்றில் சில பாதாம் பருப்புகளை மென்று தின்றால் நீர் வடிதல் குணமாகும். தூய்மையான தாய்ப்பாலில் இருதுளியைக் கண்களில் விட்டால் கண் சூடு, கண் எரிச்சல் ஆகியன குணமாகும். மாதுளை இளைச்சாற்றில் சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.

சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப்பொடித்து, பசும்பாலில் கலந்து உட்கொண்டால் தும்மல், மூக்கில் நீர்வடிதல் குணமாகும். பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து நெருப்பு அனலில் இட்டுப்புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு மூக்கில் நீர்வடிதல் முதலிய நோய்கள் குணமாகும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து அதை சூடு படுத்தி சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு 3வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு உட்கொள்ள வேண்டும்.

இதனால் தொண்டை வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும். வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றை பருகினால் வறட்டு இருமல் குணமாகும். தேனையும், எலுமிச்சை பழசாற்றையும் சமஅளவில் உட்கொண்டால் சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்
http://seithy.com/

முட்டை மிளகு மசாலா !!!


முட்டை மிளகு மசாலா !!!

என்னென்ன தேவை? 

வேகவைத்த முட்டை-12
நறுக்கிய பெரிய வெங்காயம்- 4
தக்காளி-3
பூண்டு- 6 முதல் 7(நறுக்கப்பட்டது)
மிளகு-2டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு
இஞ்சி- சிறிதளவு
தக்காளி சாஸ்-1/4 கப்
எப்படிச் செய்வது?

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறவும். கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும். முட்டையில் கிரேவி படும்படி கிளறவும். சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி

சேமியா பிரியாணி செய்முறை!


சேமியா பிரியாணி செய்முறை!

சேமியாவை பயன்படுத்தி ஒரு வித்தியாசமான எளிதாக சமைக்க கூடிய பிரியாணி.

தேவையான பொருட்கள்:

சேமியா – 200 கிராம்
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
கேரட் – 25 கிராம்
பீன்ஸ் – 25 கிராம்
பட்டாணி – 25 கிராம்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 1 பல்
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 3
கசகசா – 1/2 தேக்கரண்டி

செய்முறை

சேமியாவை லேசாக வறுத்துக் கொள்ளவும்.

இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, கசகசா முதலியவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு, வெங்காயம், கர்வேப்பிலை போட்டுதாளிக்கவும்.

வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.

இதனுடன் அரைத்து வைத்த மசாலாவைப் போட்டு வதக்கவும்.

பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பிறகு காரட், பீன்ஸ், பட்டாணி மற்றும் தேவையான அளவு உப்பு ,தண்ணீர் சேர்த்து

காய்களை முக்கால்வாசி வேகவிடவும்.

200 கிராம் சேமியாவுக்கு 400 கிராம் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

தண்ணீர் கொதி வந்தவுடன் சேமியாவை அதில் கொட்டி கிளறி இறக்கவும்.
http://www.yarl.com/

கார்லிக் -அல்மாண்ட் சூப் !!!


கார்லிக் -அல்மாண்ட் சூப் !!!

என்னென்ன தேவை? 

பூண்டு - 6 பல், 
பாதாம் - 15,
நறுக்கிய சுரைக்காய் - 1/2 கப்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்,
பால் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
மிளகுத் தூள் - 3/4 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?

பாதாமை கொதிக்கும் வெந்நீரில் போட்டு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் அத்துடன் 2 டேபிள்ஸ்பூன் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் வெண்ணெய் விட்டு, பூண்டையும் சுரைக்காயையும் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அத்துடன் தேவையான தண்ணீர்விட்டு 2 விசில் வரும் வரை வேக விடவும். ஆறியதும் அதை அரைத்துக் கொள்ளவும். கடாயில் அரைத்த சுரைக்காய் விழுதைப் போட்டு, பாதாம் விழுதை சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து 2 கொதி வரும் வரை வேக விடவும். சூடான சூப் தயார். சுரைக்காய்க்கு பதிலாக 1 உருளைக்கிழங்கு சேர்த்தும் செய்யலாம்.

நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். !!!


ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். !!!

ஆரோக்கியமாக இருக்க தினமும் நமது ஈரலை சுத்தப்படுத்தி கொள்வது மிகவும் அவசியம். இந்த ஒருவாய் எலுமிச்சை, ஆலிவ் எண்ணெய் கலந்த பானம், ஈரல் இரத்தத்தை சுத்தப்படுத்துவது அல்லாமல் நமது ஜீரணத்தை மேம்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இரத்ததில் உள்ள அசுத்தங்களையும், நச்சுகளையும் வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றது. 

இதை சுலபமான கீழ்காணும் முறையில் செய்து வந்தால் ஒரு மாத்தில் எண்ணற்ற பயன்களை உடனடியாக காணலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் ?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடவேண்டும். சிறிது நேரம் இடைவெளி விட்டு காலை உணவை சாப்பிடலாம்.
பலன்கள்:
ஒரு மாத்திற்க்கு பிறகு உங்கள் உடலில் நிறயை மாற்றங்களை காணலாம்.
* கண்களின் கருவளயம் மறைந்து போகும்
* தோல் இளமையுடன் பளபளப்பாக காணப்படும்
* முன்பை விட மிகுந்த சுறுசுறுப்புடன் நேர்மறையான திறனுடன் செயலாற்றுவீர்கள்
* ஜீரணம் மேம்பட்டு மலச்சிக்கல் மறைந்து போகும்
http://www.yarl.com/

உணவு சாப்பிட்டதும் செய்யக்கூடாதவை!



உண்ட கழை தொண்டனுக்கும் உண்டு..!! உணவு சாப்பிட்டதும் செய்யக்கூடாதவை! 

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா?

* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.ஏன்?

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.

சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அந்த ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு தெரியுமா?

* உடனே பழங்கள் சாப்பிடக் கூடாது.ஏன்?

வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நேரத்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.


* தேநீர் குடிக்கக் கூடாது. ஏன்?

தேயிலை அதிக அளவு அமிலங்களை உள்ளடக்கியது. இது உணவில் உள்ள புரத மூலக்கூறுகளுடன் சேர்ந்து உணவு செரிப்பதை சிக்கலாக்கி விடும்.

* புகை பிடிக்கக் கூடாது. ஏன்?

உணவு எடுத்தவுடன் பிடிக்கும் ஒரு சிகரெட், 10 சிகரெட்டுகள் பிடிப்பதற்கு சமமான விளைவை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

* இடுப்பு பெல்ட்டை தளர்த்தக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட பிறகு லேசாக இருக்கட்டுமே என இடுப்பில் உள்ள பெல்ட்டை இறக்கிவிடுவார்கள் அல்லது தளர்த்தி விடுவார்கள். இதனால் சாப்பிட்ட உணவு உடனடியாக குடலுக்கு சென்று விழுவதால் சரியானபடி வேலை செய்ய முடியாமல் செரிமானக் கோளாறு ஏற்படும்.

* குளிக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் குளிப்பதால் கை, கால்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.

* உடனே நடக்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என ஒரு நம்பிக்கை நிலவுகிறது. இது தவறானது. இப்படி உடனடியாக நடப்பதால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.

* சாப்பிட்டதும் தூங்கக் கூடாது. ஏன்?

சாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும் நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும்.
http://seithy.com/

டிப்ஸ்:........


டிப்ஸ்:தோசை வார்க்கும் போது...!!!

சமையல் குறிப்பு:

* தோசை வார்க்கும் போது சுண்டிப்போனால் கவலைப்பட வேண்டாம். தோசைக் கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை ஸ்பூன் உப்புப் போட்டு கல்முமுவதும் தேய்த்து விட்டு பிறகு வார்த்தால் சுண்டாது.

* பாகற்காய்ப் பொரியல் செய்யும் போதும் சிறிது கடலைப் பருப்பை ஊறவைத்து மையாக அரைத்து பின் இந்த மாவை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும் பாகற்காயை வதக்குகையில் இந்த மாவையும் உதிர்த்துப்போட்டு கிளறினால் பொரியல் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன் கசப்பும் குறைவாகத் தெரியும்.

* நெய் அப்பம் செய்யும் போது ஆழாக்கு பச்சிரியுடன் ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். அப்பம் ரொம்பவும் மிருதுவாக வரும். அப்பக்காரலை உப்புப் போட்டுத் தேய்த்து அடுப்பில் ஏற்றிக் குழிகளைச் சிறிது நல்லெண்ணெய் விட்டுத் துடைத்துப்பின் நெய் விடவும் இப்போது சுலபமாக எடுக்க வரும்.

* பறங்கிக் கொட்டைகளை தூர ஏறியாமல் வெயிலில் உலர்த்தி பருப்பை உரித்து நெய்யில் வதக்கி சர்க்கரை அல்லது வெல்லம் போட்டுச் சாப்பிடலாம்.

வீட்டுக்குறிப்பு:

* புடவையில் வைத்து தைக்கும் ஜம்கியை ஒரு ரப்பர் பந்தில் வைத்து குண்டூசியால் பந்து முமுவதும் குத்தி அதை டேபிள் மேல் பேப்பர் வெயிட்டாக வைத்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.

* இலையுதிர் காலத்தில் பழுத்து உதிரும் வேப்பம் இலைகளை சேகரித்து எடுத்து தூள் செய்து நெருப்பில் போட்டால் புகை நெடி தாளாமல் கொசுக்கள் ஓடி விடும்.

* துணிக்கு நீலம் போடும்போது நீலம் கரைத்து ஜலத்தில் சிறிது வாஷிங் சோடாவை கலந்து கொண்டால் நீலம் திட்டுத் திட்டாகவோ அல்லது புளூ புளூவாகவோ துணியைப் பற்றாது.

http://www.koodal.com/

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?

ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?
********************************************************************************
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஒரு மாதத்தில் ஓடிவிட எளிய ஆனால் உடனே பலன் தரக்கூடிய வழி இதோ...
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்கள்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி (தனியா) - அரை கிலோ
வெந்தயம் - கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சவும்.
பின்பு வடிகட்டி கட்டவும். தினமும் மூன்று வேலை சாப்பாட்டிற்கு முக்கால் மணி நேரத்திற்கு முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
இதை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்.
சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார
இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

வீட்டு குறிப்புகள்


1. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.


6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்ப்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கருப்பாவதைத் தடுக்கலாம்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி மணமாக இருக்கும்.

மிக்ஸட் வெஜ் சூப் !!!


மிக்ஸட் வெஜ் சூப் !!!

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கேரட், 
பீன்ஸ், முட்டை கோஸ், வெங்காயம் - மொத்தமாக 1 கப்,
பச்சை மிளகாய் - 2,
மிளகு - 1/4 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு,
பூண்டு - 2 பல்.
எப்படிச் செய்வது?

அனைத்து காய்களுடன் பூண்டு, பச்சை மிளகாய், மிளகு சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அரைத்ததை வடிகட்டி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது மிளகுத் தூள் சேர்த்துப் பரிமாறவும்.,விரும்பினால் ஒரு தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்.

உயிருக்கு ஆபத்தாகும் முறையற்ற மருந்துகள்


உயிருக்கு ஆபத்தாகும் முறையற்ற மருந்துகள்.. 

டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் தானாகவே கடைகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால், ஏதாவது பக்க விளைவுகள், பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கு பொதுமக்கள் தான் முழு பொறுப்பு. ஏனென்றால், என்ன மருந்து, மாத்திரைகள் உட்கொண்டோம் என்பதற்கு ஆதாரமாக டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இருக்காது. அதனால், யாரையும் குறை சொல்ல முடியாது. டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை முறையாக சாப்பிடாமல், தேவையற்ற மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால், வீரியம் மிக்க மருந்துகளுக்கும் கட்டுப்படாத கிருமிகள் பரவி வருகின்றன. இந்த கிருமிகளை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அழிக்கவும் முடியவில்லை. டிபி, என்டிஎம் பாக்டீரியா, இதுபோன்ற கிருமிகளில் ஒன்றாகும். இந்தியா மட்டுமல்ல; பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்பிரிக்கா நாடுகளிலும் இந்த கிருமிகள் பரவி வருகின்றன.
டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் தானாகவே கடைகளுக்கு சென்று மருந்து, மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதால், ஏதாவது பக்க விளைவுகள், பாதிப்புகள் ஏற்பட்டால், அதற்கு பொதுமக்கள் தான் முழு பொறுப்பு. ஏனென்றால், என்ன மருந்து, மாத்திரைகள் உட்கொண்டோம் என்பதற்கு ஆதாரமாக டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இருக்காது. அதனால், யாரையும் குறை சொல்ல முடியாது. டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்து, மாத்திரைகளை முறையாக சாப்பிடாமல், தேவையற்ற மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவதால், வீரியம் மிக்க மருந்துகளுக்கும் கட்டுப்படாத கிருமிகள் பரவி வருகின்றன. இந்த கிருமிகளை கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அழிக்கவும் முடியவில்லை. டிபி, என்டிஎம் பாக்டீரியா, இதுபோன்ற கிருமிகளில் ஒன்றாகும். இந்தியா மட்டுமல்ல; பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்பிரிக்கா நாடுகளிலும் இந்த கிருமிகள் பரவி வருகின்றன.


தலை வலி, ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கான மருந்து, மாத்திரைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடியாக விளம்பரம் செய்கின்றன. அதை பார்க்கும் மக்கள், அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படும்போது அந்த மருந்து, மாத்திரைகளை வாங்குகின்றனர். குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல் என்று பாதிக்கப்பட்டால் உடனடியாக தாய்மார்கள் பாராசிட்டமால் மருந்து, மாத்திரைகளை அதிகமாக கொடுக்கின்றனர். மேலும், சொட்டு மருந்திற்கும், டானிக்கிற்கும் (சிரப்) வித்தியாசம் தெரிவதில்லை. சொட்டு மருந்தை 3 சொட்டு கொடுக்க வேண்டும், டானிக் ஒரு ஸ்பூன் தர வேண்டும் என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், டானிக் அளவிற்கு, சொட்டு மருந்தை கொடுத்து விடுகின்றனர். டாக்டரின் ஆலோசனை இல்லாமல், டானிக், பாரசிட்டமாலை அதிகமாக கொடுப்பதால் குழந்தைகளின் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும்.

நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகள் ஜீரண மண்டலத்திற்கு சென்று சிறுகுடல், பெருகுடல் வழியாக நோய்களுக்கு தீர்வு காண்கிறது. அதன்பின், கடைசியாக கல்லீரல் வந்தடைகிறது. அதையடுத்து மருந்து, மாத்திரைகள் கரைந்து சிறுநீராக வெளியேறுகிறது. கல்லீரல், சிறுநீரகம் செயல்பாட்டை அறிந்து, உடல் எடையை கணக்கிட்டு, டாக்டர்கள் மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுப்பார்கள். டாக்டர்கள் பரிந்துரைத்ததை விட கொஞ்சம் கூடுதலாக சாப்பிட்டாலும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் நேரடியாக வாங்குகின்றனர். அந்த மருந்தின் பக்க விளைவுகள் தெரிவதில்லை. எவ்வளவு டோஸ் உட்கொள்ள வேண்டும் என்றும் தெரிவதில்லை.

இதனால், முதலில் கல்லீரல் செயலிழக்கும், அதன்பின் சிறுநீரகம் என படிப்படியாக ஒவ்வொரு உறுப்பாக பாதிக்கப்பட்டு, கடைசியாக உயிருக்கே ஆபத்தாக அமையும். படித்தவர்கள் மற்றும் மருந்து, மாத்திரைகளை பற்றி அறைகுறையாக தெரிந்தவர்கள்தான், டாக்டரின் ஆலோசனை இல்லாமல் தானாகவே மருந்து, மாத்திரைகளை வாங்குகின்றனர். தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை இயக்குனர் பாஸ்கரன் கூறுகையில், "மருந்து கடைக்காரர்கள் வலிகளை நீக்கும் மாத்திரை, நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை, மயக்க மருந்து, தூக்க மாத்திரை போன்ற பட்டியலில் உள்ள மருந்துகளை டாக்டர்கள் சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு கொடுக்க அனுமதியில்லை. சாதாரண காய்ச்சல், தலைவலி, சளி, இருமல் போன்ற மருந்து, மாத்திரைகளை விற்கலாம். அதுவும் அளவுக்கு அதிகமாக கொடுக்க அனுமதி இல்லை" என்றார்.

கேரட் சூப்




கேரட் சூப்

என்னென்ன தேவை?
கேரட் -1/4 கிலோ
வெங்காயம்-1
மிளகுத்தூள்-2டீஸ்பூன்
வெண்ணெய்-1டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
வினிகர்-1டீஸ்பூன்
மல்லித்தழை-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
எப்படி செய்வது?
வெண்ணெயில் பாதியைப்போட்டு கேரட் வெங்காயத்தை போட்டு வதக்கி மூன்று டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக வேகவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு காயை மிக்ஸியில் போட்டு அரைத்து வடித்த நீருடன் கலக்கவும். பிறகு அதில் மற்ற பொருட்களையும் சேர்த்துக் கலக்கி சூடாகப் பரிமாறவும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை தெரிந்து கொள்ள ...!!!





வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதை தெரிந்து கொள்ள புதிய ஏற்பாடு :

வாக்காளர் பட்டியலில் நமது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:தமிழகம் முழுவதும் நேற்று முதல் நவம்பர் 10ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதையும் பொதுமக்கள் அந்த முகாம்களுக்கு சென்று பார்க்கலாம்.மேலும், கூடுதலாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்திலும் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, அலுவலக நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தெரிவிக்கப்படும். இது இலவச தொலைபேசியாகும்.அதேபோன்று, செல்போன் மூலம் எஸ்எம்எஸ் செய்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். அதற்கு, EPIC என்று டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்து 94441 23456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். 24 மணி நேரத்திற்குள் தேர்தல் அலுவலகத்தில் இருந்து விவரம் தெரிந்துகொள்ளலாம். பெயர் இல்லை என்றாலும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.

தகவல் உரிமை சட்டம் மூலம் பிரச்சனைகளுக்கு






தகவல் உரிமை சட்டம் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற
இந்தியன் குரல் இலவச உதவி மையம் சென்னை .

பிரதி மாதம் 1ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் காலை 9 மணி முதல் காலை 11 மணிவரை செயல்படும். முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி, சேவைக்கு கட்டணம் இல்லை, அமைப்பில் உறுப்பினர் கட்டணம் பெறுவதில்லை, எவ்வித நன்கொடையும் ஏற்ப்பதில்லை. உங்களின் தேவைக்கு உரிய ஆவணங்களுடன் வந்து பயன் பெறுங்கள்

சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதி மக்கள் பயன்பெற மாவட்ட நண்பர்கள் இதைப் பகிர்ந்து அனைத்து மக்களும் அறிய தாருங்கள்

சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு
எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்

இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்

நன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை



ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..?




ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி..?
*
*
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
*
தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
*
பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.
*
இனி மேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்து விடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி…
*
ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்கு தோராயமாக 61.00 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு.
*
ஆன்லைனில் நேரடியாக தேடி பிரிண்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.
*
இது போக ரெஜிஸ்டர் டாக்குமண்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும்.
*
சென்னை, கடலூர், கோயம்புத்தூர், திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர், திருநெல்வேலி அலுவலகங்களுக்கு இது பொருந்தும்.
*
அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.
*
மேலும் பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன் லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1 ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.
*
மேலும் சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமெண்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது.
*
உங்களின் அரசாங்க லேண்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.
*
அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
*
*
ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
*
ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1
*
டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp
*
திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp
*
சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp
*
சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp
*
லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelineva…/gvaluemainpage2011.asp

நில அபகரிப்பு புகாருக்கு........

நில அபகரிப்பு புகாருக்கு முதல் தகவல் அறிக்கை வாங்க முடியாமல் தவித்தவருக்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை உபயோகப்படுத்தி எந்த லஞ்சமோ, காவல்துறையிடம் கெஞ்சலோ இல்லாமல் வாங்க வழி காட்டியது. இனி அடுத்து புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் கேட்டு பெற வழிவகை சொல்லப்பட்டுள்ளது. 

மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவும் சேவை செய்யவும் தான் அரசு நிர்வாகம். அவர்களிடம் லஞ்சம் கொடுக்கவோ, கெஞ்சி கேட்கவோ அவசியமே இல்லை. முறையான வழிமுறைகளை நியாயமாக பின்பற்றினால் வேலை தானாக நடக்கும்.
இயக்கத்தின் உதவி மையத்தை அழைக்க 7667 100 100.
உறுப்பினராக இணைய http://www.sattapanchayat.org/form.php
நன்கொடை அளிக்க http://www.sattapanchayat.org/nan.php
ஆயிரத்தில் ஒருவராக இணைந்து இயக்கத்தை பலப்படுத்தhttp://other.sattam.org/monthly
மாணவர்கள் இயக்கத்தில் பதிவு செய்யhttp://other.sattam.org/student
நீதிமன்ற வழக்குகள் தொடர்பான சந்தேகங்களில் உதவி பெற 84898 79060
இயக்க செயல்பாடுகளில் பங்கேற்க 8754580274.
மதுக்கடைகளை அப்புறப்படுத்த 8754588222

முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!




நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள் !!

பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ,
செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828


மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )


மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100


வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———- 044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568
விலங்குகள் பாதுகாப்பு ———————— 044 – 22354959 / 22300666


போலீஸ் : —————————————–——100
தீயணைப்புத்துறை :————————-—– 101
ஆம்புலன்ஸ் : —————————————-102, 108
போக்குவரத்து விதிமீறல———————–103
விபத்து :———————————————-– 100, 103
பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——-–1098


அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093
ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910
கண் வங்கி அவசர உதவி : —————-—–1919


நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.

இலவசமாக வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள......!!!!




தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5
முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம்
வழியே பணம்
எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள
கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும்.
அதற்கு மேல் பார்த்தால்
ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய்
பிடித்துக்கொள்ளப்படுகின்றது.
இதனால் சாமானிய மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது இலவசமாக
வங்கி கணக்கில் உள்ள
கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள
இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச
எண்ணிற்கு கால் செய்தால் போதும்,
உங்களுடைய போன்
எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms
அனுப்பிவிடுவார்கள். உங்கள் நம்பர்
பதிவு செய்யப்பட்ட நம்பராக
இருக்கவேண்டும்.
1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india- 09223009292
20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000
---
படித்தால் மட்டும் போதுமா, நீங்கள்
தெரிந்து கொண்டதை மற்றவருக்கும்
தெரியபடுத்துங்கள்... இந்த
பதிவை பகிருங்கள் .....

அறு சுவைகளும்... அதன் பயன்களும்..




அறு சுவைகளும்... அதன் பயன்களும்..

அனைத்து சுவைகளும் அள்வாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்... சில நேரங்களில் அதிகமாகும்பொழுது சில பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. கவனமாக உட்கொள்ளவும்.

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நாம் அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம்.

தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.

துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.

துவர்ப்புச் சுவை (Astringent)

இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது.

இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும்.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

இனிப்புச் சுவை (Sweet)

மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது.

இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது.

கிடைக்கும் உணவுப் பொருட்கள்

பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்புச் சுவை (Sour)

உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும்.

எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

காரச் சுவை (Pungent)

பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது.

அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.

வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்புச் சுவை (Bitter)

அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது.

இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும்.

பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.

உவர்ப்புச் சுவை (Salty)

தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது.

இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது.

உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும்.

கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

அனைவரும் தெரிந்துகொள்ள பகிருங்கள் நட்பூஸ்.....

உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும்

உடலில் தங்கியுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுப் பொருட்கள்!

ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருப்பதற்கு உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். நாம் உள்ளிழுக்கும் புகை, உணவகங்களில் சாப்பிடும் உணவுகள் மற்றும் நம்முடைய சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து வகையான கிருமிகள் மற்றும் குப்பை ஆகியவை என சகல நச்சுக்களையும் விரட்ட வேண்டியது நாம் நீண்ட நாள் மகிழ்ச்சியாக வாழ ஏற்ற செயலாகும்.
அவகேடோ…
அற்புதத்தை ஏற்படுத்தக் கூடிய பழம் என பிரபலமாக இருக்கும் அவகேடோவில் நார்ச்சத்துக்களும், ஆக்சிஜன் எதிர்பொருட்களும் நிரம்பியுள்ளன. இவை தான் உடலின் நச்சுக்களை வெளியேற்றும் சக்தி வாய்ந்த உணவுகளாகும். செரிமானத்திற்கு உதவி புரியும் நல்ல வகையான கொழுப்புச் சத்துக்கள் உள்ள உணவு தான் அவகேடோ.
பீட்ரூட்…
நச்சுப் பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று விரும்பினால், சூப்பர் உணவாக அறியப்படும் பீட்ரூட்களை உண்ண வேண்டும். புற்றுநோய்க்கு எதிரான மிகவும் சக்தி வாய்ந்த உணவுகளாக இவை உள்ளன.
முட்டைக்கோஸ்…
நச்சுப் பொருட்களை விரட்டக் கூடிய அற்புதமான குணங்களை கொண்டிருக்கும் உணவு முட்டைக்கோஸ் ஆகும். முட்டைக்கோஸை தினமும் சாப்பிட்டால் நச்சுப் பொருட்களை விரட்டும் உங்களுடைய திட்டம் வேகம் பிடிக்கும்.
பூண்டு…
பூண்டு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய உணவாகும். இது நுரையீரலை சுத்திகரிக்கவும் உதவும். இதிலுள்ள கந்தகத்தின் குணங்கள் நச்சுப் பொருட்களை மிகவும் சக்தியுடன் எதிர்த்து வெளியேற்றுகின்றன.
இஞ்சி…
மிகவும் சக்தி வாய்ந்த நோயெதிர்ப்பு உணவாக கருதப்படும் இஞ்சியின் காரத்திற்கு, உடலிலுள்ள நச்சுக்களை விரட்டும் குணமும் உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? குறிப்பாக, ஆல்கஹால், புகை போன்ற நச்சுக்களை நீங்கள் விரட்டியடிக்க விரும்பினால் இஞ்சி தான் உங்களுக்கு கடவுள்.
வேர்க்கடலை…
வேர்க்கடலையின் அற்புதமான குணங்கள் நச்சுக்களை எதிர்த்து திறமையுடன் செயல்படுகின்றன. உடலில் உள்ள சில வகையான நச்சுக்களை வெளியேற்ற வேர்க்கடலை உதவுகிறது. சிறுநீர் குழாய் தொடர்பான தொற்றுக்களில் இருந்து விலகி இருக்கவும் வேர்க்கடலை உதவுகிறது.
ப்ளூபெர்ரி …
ஆக்சிஜன் எதிர்பொருட்கள் நிறைந்துள்ள இந்த உணவு நச்சுக்களை வெளியேற்றும் அற்புதமான குணங்களைக் கொண்டுள்ளது. உடலில் உள்ள ஃப்ரீ ராடிக்கல்ஸ்களை அறவே ஒழித்துக் கட்டுவது ப்ளூபெர்ரியின் தலையாய பணியாகும். நோய் எதிர்ப்பு அமைப்பை ஊக்கப்படுத்துவதும் இவற்றின் மற்றொரு உதவியாகும்.
பாதாம்…
ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது முதல் புற்றுநோயைத் தவிர்ப்பது வரை என பல்வேறு வகையான ஆரோக்கிய பலன்களைக் கொண்டதாக பாதாம் கொட்டைகள் உள்ளன. வைட்டமின் ஈ, மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவையும் பாதாம்களில் நிறைந்துள்ளன.
ஆப்பிள்…
ஆப்பிள் சாப்பிடும் ஒவ்வொரு நாளும் மருத்துவர் விலகியிருப்பார் என்ற ஆங்கிலப் பழமொழியை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இதிலிருந்தே நச்சுக்களை நீக்கும் அற்புத உணவுகளில் ஒன்று ஆப்பிள் என தெரிந்திருக்கும். ஆப்பிளில் உள்ள சிலவகையான வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்களை உடலை முழுமையாக சுத்தப்படுத்தும். ஆப்பிளில் உள்ள டெர்பெனாய்டுகள், ஃப்ளேவோனாயிடுகள் மற்றும் டி-க்ளூகேரேட் (Terpenoids, Flavonouids And D-Glucarate) ஆகிய முக்கியமான கூட்டுப் பொருட்கள் மூளையையும், நோய் எதிர்ப்பு குணத்தின் செயல்பாடுகளையும் ஊக்கப்படுத்துகின்றன.
அஸ்பாரகஸ் …
அஸ்பாரகஸ் என்றழைக்கப்படும் தண்ணீர் விட்டான் கொடியில் மிகவும் திறன் வாய்ந்த நச்சு நீக்கும் குணங்கள் உள்ளன. மூப்படைவதை தவிர்க்கும் வகையில் இவை மிகவும் சிறப்பாக செயல்படும் என்பது உங்களுக்கான இனிப்பான செய்தி. மேலும், அஸ்பாரகஸ் சில வகையான புற்றுநோய்கள் வரும் அபாயத்தையும் தவிர்த்திடும்.
இலவங்கப்பட்டை…
ஆச்சரியமான ஆரோக்கிய குணங்கள் இலவங்கப்பட்டை எண்ணெயில் உள்ளது. சின்னாமால்டிஹைட் மற்றும் சின்னாமைல் அசிடேட் ஆகிய இலவங்க எண்ணெய்கள் துடிப்பான ஆக்சிஜன் எதிர்பொருட்களாகும். இவை தான் என்றென்றும் சிறப்பான ஆக்சிஜன் எதிர்பொருட்காள குறிப்பிடப்படுகின்றன. மேலும், உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் மிகவும் சக்தி வாய்ந்த உணவுப்பொருளாக இலவங்கப்பட்டை உள்ளது.
ப்ராக்கோலி…
உங்களுடைய உடலையும், மனதையும் சுத்தப்படுத்தும் சக்தி கொண்ட உணவுகளில் ஒன்று ப்ராக்கோலி ஆகும். ஆக்சிஜன் எதிர்பொருட்கள் மற்றும் சில வைட்டமின்கள் நிரம்பியுள்ள ப்ராக்கோலி இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவுகிறது. எனினும், ப்ரோக்கோலியை மைக்ரோவேவில் வைத்து சமைத்தால், அதன் நச்சு நீக்கும் குணங்கள் பறந்தோடி விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்…


உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் )செல் எண்

உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் )செல் எண்
1 சென்னை மாவட்டம்
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488
2 திருவள்ளூர் மாவட்டம்
6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496
3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram
14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504
4 வேலூர் மாவட்டம் Vellore
22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512
5 திருவண்ணாமலை மாவட்டம் Thiruvannamalai
30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518
6 விழுப்புரம் மாவட்டம் Villupuram
36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526
7 கடலூர் மாவட்டம் Cuddalore
44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532
8 தருமபுரி மாவட்டம் Dharmapuri
50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537
9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri
202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542
10 நாமக்கல் மாவட்டம் Namakkal
64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546
11 சேலம் மாவட்டம் Salem
55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556
12 நீலகிரி மாவட்டம் The Nilgiris
84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562
13 ஈரோடு மாவட்டம் Erode
77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobichettiapalayam 94450 00568
83 Sathyamangalam 94450 00569
14 கோவை மாவட்டம் Coimbatore
68 Coimbatore(South) 94450 00570
69 Coimbatore(North) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578
15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul
90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585
16 Madurai 102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592
17 தேனி மாவட்டம் Theni
97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597
18 Karur 109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601
19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli
119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609
20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur
113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615
21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam
127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622
22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur
134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629
23 தஞ்சை மாவட்டம் Thanjavur
141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637
24 புதுக்கோட்டை மாவட்டம் Pudukkottai
149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646
25 சிவகங்கை மாவட்டம் Sivagangai
158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652
26 ராமநாதபுரன் மாவட்டம் Ramanathapuram
164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659
27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar
171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668
28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli
187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679
29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi
179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687
30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari
198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691