Sunday, December 21, 2014

பயனுள்ள அட்டகாசமான வீட்டுக்குறிப்புகள்

டிப்ஸ்:பயனுள்ள அட்டகாசமான வீட்டுக்குறிப்புகள்
தெரிந்து கொள்வதற்காக இதோ எளிய வீட்டு உபயோகக் குறிப்புகள்:-
பாதுகாப்பு:
* அந்துப் பூச்சி வராமலிருக்க நெல் மூட்டையைச் சுற்றிலும், அதன் இடுக்குகளிலும் புங்கை இலை, வேப்ப இலைகளை பறித்துப் போட்டு வைக்கவும்.
* பயறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைப்பதால் அவை பல நாட்கள் வரை புழுத்துப் போகாமல் இருக்கும்.
* புளியை நீண்ட நாட்கள் வைத்துக் கொள்ள பானையில் போட்டு வைக்கவும். பானையின் அடியில், புளியைப் போட்டு அதன் மேல் கொஞ்சம் உப்பைத் தூவினால் புளி கெடாமல் இருப்பதோடு, காய்ந்து போகாமலும் இருக்கும்.
* மாங்காய், எலுமிச்சம்பழம் போன்றவற்றை நீண்ட நாட்கள் பாதுகாக்க வேண்டுமாயின் நறுக்கி, வெயிலில் காய வைத்து வற்றல் போல் உலர்த்திக் கொள்ளவும். பின் எப்போது ஊறுகாய் வேண்டுமோ அப்போது வெந்நீரில் ஊற வைத்து ஊறுகாய் மாதிரி தாளித்து உபயோகிக்கலாம்.
* தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைப் போட்டு வைப்பதால், பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
சமையல்:
* காலிப்ளவரை சமைக்கும் முன் வெந்நீரில் சர்க்கரை கலந்து வேக வைத்தால் காளிப்ளவர் வெண்மையாக இருப்பதுடன் கண்ணுக்குத் தெரியாத புழுக்கள் அழிந்து விடும்.
* தோசைக்கு, இட்லிக்கு ஆட்டும்போது ஒரு வெண்டைக்காய் சேர்த்து ஆட்டினால் தோசை, இட்லி பூவாயிருக்கும்.
* சாதம் மிஞ்சி விட்டால், ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைத்து, சாதத்தை ஆவியில் சூடு பண்ணலாம். சாதம் கொதிக்கும் போது மிஞ்சிய சாதத்தையும் சேர்த்துப் போட்டு வேக வைக்கலாம்.
* காய்ந்து போன ரொட்டித் துண்டுகளை இட்லி பாத்திரத்தில் ஆவியில் அவித்தால் புதியது போலாகி விடும்.
* போளி தட்டும் வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.
* கொதிக்கும் பாலை உடனே உறை ஊத்த வேண்டுமாயின் ஒரு துண்டு வாழைப்பட்டையை நறுக்கிப் போட்டு மோர் ஊற்றவும். குளிர் நேரத்தில் தயிர் உறையாது. எலெக்ட்ரிக் ஸ்டெபிலைசர் மீது பாத்திரத்தை வைத்தால் தயிர் விரைவில் உறைந்து விடும்.
* தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.
* உப்புத்தூளை வறுத்து உபயோகித்தால், முட்டைக்குப் போட்டு சாப்பிட வசதியாக இருக்கும்.
* கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.
* வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில் போட்டு வைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேக வைக்கும் போதும், வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும். வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.
* வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் வந்தவுடன் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து விட்டால் பாகு முற்றாது.
* வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்­ரில் போட்டு உரிக்கவும். கண்ணும் கரிக்காது.
* புளித்த தயிரை தலையில் தேய்த்துக் கொண்டு சுத்தம் செய்தால் தலைமுடி மிருதுவாக இருக்கும்.
* தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.
* தயிர் கொண்டு கை அலம்ப மண்ணெண்ணெய் வாசம் போய்விடும்.
* வெண்ணெய் காய்ச்சி இறக்கும் முன்னர் சிறிது தயிர் சேர்த்தால் நெய் வாசமாக இருக்கும்.
* சமையலுக்குப் பின் எஞ்சியிருக்கும் இஞ்சியை மண்ணில் புதைத்து வைத்தால் வேண்டும் போது எடுத்துக் கொள்ளலாம்.
* குளிர் சாதனப் பெட்டி இல்லாத வீடுகளில் கருவேப்பிலை, கொத்தமல்லிகளை பாட்டில்களில் போட்டு வைக்கலாம்.
* சமையலறையின் ஒரு நோட்டும் பென்சிலும் வைத்திருந்தால் தேவையான பொருட்களை குறித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.
* கேக் அல்லது பிஸ்கட் செய்து முடித்த பின் ஓவன் சூடாகவே இருக்கும். அப்போது சிறிது பழைய பிஸ்கட், முறுக்கு போன்றவற்றை உள்ளே வைத்தால் புதிது போல் முரமுரப்பாக இருக்கும்.
துணிமணிகள்:
* துணிகளுக்கு நீலம் போடும் சமயம் சிறு முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்தால் நீலம் ஒன்று போல் தண்­ரில் பரவும்.
* நீலம் கலந்த நீரில் பாத்திரம், கண்ணாடி, பாட்டில் முதலியவற்றைக் கழுவினால் பளிச் என்று இருக்கும்.
* வெள்ளை நிற சட்டைகளை, நீல நிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலத் துணியில் சுற்றி வைத்தால் பழுப்பு நிறம் ஏறாமலிருக்கும்.
* பட்டுப் புடவைகளை துவைக்கும் போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் சாயம் போகாமலும் பூச்சி வெட்டாமலுமிருக்கும்.
* டீக்கரையைப் போக்க சீனியை உபயோகிக்கலாம். வெள்ளைத் துணிகளில் உள்ள கரையைப் போக்க தண்­ரில் ப்ளீச்சிங் பவுடரைக் கரைத்து உபயோகிக்கலாம்.
* டாய்லெட் சோப் மேலுரைகளை துணி அலமாரிகளில் போட்டு வைத்தால் மணமாக இருக்கும்.
* எண்ணெய் கறையை போக்க துணியின் மேலும் கீழும் ப்ளாடிங் பேப்பரை வைத்து அயர்ன் பண்ண வேண்டும்.
* ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது.
* பழைய துணிகளையும் நன்கு சலவை செய்து, மடிப்புக் கலையாமல் அலமாரிகளில் அடுக்கி வையுங்கள். அல்லது பழைய சூட்கேஸ், பிரயாணப் பைகளில் சேமித்து வைக்கவும்.
+++++++
பெண்களுக்கு இப்பகுதி மிகவும் உபயோகமானது. காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும்? எப்படி சமைக்கவேண்டும்? எப்படி பாதுகாக்கவேண்டும்? காய்கறிகள் பாதுகாப்பு:

கிழங்குகளை மூடி வைக்கக்கூடாது. காற்றாடப் பரப்பி வைக்க வேண்டும். கோடையில் காய்கறிகள் சீக்கிரமாக காய்ந்து விடும். ஒரு புதிய மண்பானையில் காய்கறிகளைப் போட்டுப் பானையை ஈரமுள்ள மணல் மேல் வைத்தால் இரண்டொரு நாள் வரை காய்கறிகள் புகிதாகவே இருக்கும்.
நீரில் நனைத்த காகிதத்தினால் கீரைகளைச் சுற்றி வைத்தால் சீக்கிரம் வாடாமல் இருக்கும்.
குளிர்சாதனப் பெட்டியில் காய்கறிகளை வைக்கும் போது அவைகளைத் தனித்தனியே பிளாஸ்டிக் கவர்களில் வைக்க வேண்டும். எல்லாக் காய்கறிகளும் ஒரே பையில் வைக்கக் கூடாது.
கூடையில் காய்களைப் போட்டு ஈரத்துணியினால் மூடி வைத்திருந்தால் பல நாட்கள் வரை வாடாமல் இருக்கும்.
பச்சை மிளகாயைக் காம்புடன் வைத்தால் சீக்கிரம் வாடிவிடும். சில நாட்களுக்கு மிளகாய் இருக்க வேண்டுமென்றால் அதன் காம்பை அகற்றி விட்டு நிழலான, குளிர்ச்சியான இடத்தில் வைக்க வேண்டும்.
பச்சைப் பட்டாணி மலிவாகக் கிடைக்கும் போது அதை உரித்து எடுத்து, பிளாஸ்டிக் பையில் போட்டு அதன் வாயை நன்கு இறுக்க கட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பல மாதங்கள் வரை பச்சை மாறாமல் இருக்கும்.
வாழைப் பழங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாது. வைத்தால் அதன் தோல் கறுத்துப் போய்விடும்.
பூ வாடாமல் இருக்க:
முதல் நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா? பூவை ஈரத்துணியில் சுற்றி வைக்காதீர்கள். ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்த பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடி வையுங்கள். பூ வாடாமல் வதங்காமல் நீங்கள் வைத்த மாதிரியே இருக்கும்!
கிழங்கு விரைவாக வேக:
கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.
பாகற்காய் பழுக்காமல் இருக்க:
பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும். இதைத் தவிர்க்க பாகற்காய்களை இரண்டிரண்டாக நறுக்கி வைத்துவிடுங்கள்.
இஞ்சி மிச்சம் இருந்தால்:
இஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்­ர் விட்டு வையுங்கள். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். இஞ்சி காய்ந்து போகாது.

No comments:

Post a Comment