தகவல் உரிமை சட்டம் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு பெற
இந்தியன் குரல் இலவச உதவி மையம் சென்னை .
பிரதி மாதம் 1ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் காலை 9 மணி முதல் காலை 11 மணிவரை செயல்படும். முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி, சேவைக்கு கட்டணம் இல்லை, அமைப்பில் உறுப்பினர் கட்டணம் பெறுவதில்லை, எவ்வித நன்கொடையும் ஏற்ப்பதில்லை. உங்களின் தேவைக்கு உரிய ஆவணங்களுடன் வந்து பயன் பெறுங்கள்
சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதி மக்கள் பயன்பெற மாவட்ட நண்பர்கள் இதைப் பகிர்ந்து அனைத்து மக்களும் அறிய தாருங்கள்
சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு
எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்
இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்
நன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை
No comments:
Post a Comment