Sunday, December 21, 2014

சுண்டைக்காய்வத்தக்குழம்பு



தேவையான பொருட்கள்:

சுண்டைக்காய் வத்தல் - 1/4 கப்
புளி - 1/2 எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - 15 (தோலுரித்தது)
பூண்டு - 10 பற்கள் (தோலுரித்தது)
சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
நாட்டுச்சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 3/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் புளியை சுடுநீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சுண்டைக்காய் வத்தலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின் அதில் புளிச்சாறு மற்றும் உப்பு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். குழம்பில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, அதில் சுண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கினால், சுண்டைக்காய் வத்தக்குழம்பு ரெடி!!!

No comments:

Post a Comment