Tuesday, September 16, 2014

ஆன்லைன் மூலம் பட்டா/சிட்டா

ஆன்லைன் மூலம் பட்டா/சிட்டா



ஆன்லைன் மூலம் நில உரிமம் பட்டா/சிட்டா பார்க்க விரும்பினால்
                                           http://eservices.tn.gov.in/eservicesnew/home.html

                                                 

                                       இந்த page open ஆகும்
குறிப்பு;தமிழ் font download செய்யவில்லை என்றால் உரிமையாளர் 
 பெயர் தமிழ்-ல் வராது    click on photo to zoom     


சரியான பட்டா என் புல என் உட்பிரிவு என் உள்ளிட்டு 
சமர்ப்பிக்கவும்

உரிமையாளர் பெயர் மற்றும் இடத்தின் அளவு 1 ஏக்கர் மேலாக 
இருந்தால் ஏக்கர் & ஏர்ஸ் காட்டும் 1 ஏக்கர்க்கு குரைவாக இருந்தால் 
 ஏர்ஸ்  மட்டும் காட்டும் 1 ஏர்ஸ் என்பது 2.47 சென்ட் 
இந்த page open செய்வதற்க்கு அரசு பதிவேட்டில் பார்க்கவும்

ADSL2+ வயர்லெஸ் மோடம் அல்லது ரூட்டர்– கட்டமைப்பது (configure) எப்படி?

ADSL2+ வயர்லெஸ் மோடம் அல்லது ரூட்டர்– கட்டமைப்பது (configure) எப்படி?

பொதுவாக எல்லா வகையான ADSL2+ வயர்லெஸ் மோடம்(modem) அல்லது ரூட்டர்(router) கான்பிகர் செய்யும் விதம் ஒரே மாதிரியாக தான் இருக்கும். சிறு வேறுபாடுகள் இருக்கலாம். இந்த பதிவில் நான் Cisco Linksys WAG-12௦N மோடம் கான்பிகர் செய்வது எப்படி என்று தொகுத்து இருக்கிறேன். இது மிக விரிவான செய்முறை விளக்கம் இல்லை என்றாலும் முக்கியமான தகவல்கள் தமிழில் கொடுக்க வேண்டும் என்பதற்காக முடிந்தவரை கொடுத்து இருக்கிறேன். மேலும் அதிக தகவல்களுக்கு பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள சில ஆங்கில வலைதள சுட்டிகளின் வழியாக அறிந்து கொள்ளலாம்.

புதிதாக கான்பிகர் செய்யும்போது ரீசெட் செய்வது நல்லது. (எச்சரிக்கை: இது ஏற்கனவே இருக்கும் கான்பிகரேசன் அனைத்தையும் அழித்து விடும்.) முதலில் மோடமை கணினியுடன் ஒரு RJ-45 கேபிள் மூலம் இணைக்க வேண்டும். கணினிக்கு192.168.1.x என்ற series இல் ஒரு ip முகவரியை கொடுதுக்கொள்ளவும். பின்னர் மின்சார இணைப்பும் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் ரீசெட் பட்டன் மிகசிறிய அளவில் மோடமின் பின்புறம் காணப்படும். இதை ஒரு கூர்மையான பொருள் கொண்டு மெதுவாக அழுத்த வேண்டும். இப்பொழுது மோடம் மீண்டும் ரீபூட் ஆகும்.

பின்னர் கணினியில் உலாவியை(Browser) இயக்கி அதில் http://192.168.1.1 என்று டைப் செய்து என்ட்டர் செய்யவும். இப்பொழுது user name மற்றும் பாஸ் வோர்ட் கொடுக்க வேண்டும். இது பெரும்பாலும் admin மற்றும் admin என்றே இருக்கும்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள திரையில் வட்டமிடப்படுள்ள பிரிவுகளை மட்டும் configure செய்தால் போதுமானது. Username மற்றும் password கட்டங்களில் உங்கள் இனைய இணைப்பு விபரங்களை அளிக்க வேண்டும்இது ISP லிருந்து பெற்றுகொள்ளலாம். 


மற்றவைகளை கீழே கொடுத்து உள்ளபடி கான்பிகர் செய்யவும். save settings கொடுக்கவும்.


பின்னர் வட்டமிடப்படுள்ளபடி wireless என்ற பிரிவை தேர்வு செய்து அதில் Basic wireless settings தேர்வு செய்யவும். இதிலும் கீழே கொடுத்துள்ளபடி கான்பிகர் செய்யவும். SSID என்ற இடத்தில நமக்கு விருப்பமான பெயர் கொடுத்துக்கொள்ளலாம். save settings கொடுக்கவும்.


பின் wireless security என்ற துணைப்பிரிவை தேர்வு செய்யவும். அதில் கீழே கொடுத்துள்ளபடி கான்பிகர் செய்யவும். Preshared Key என்ற இடத்தில நமக்கு விருப்பமான பாஸ்வோர்ட் கொடுத்துக்கொள்ளலாம். save settings கொடுக்கவும்.


பின்னர் Status பிரிவில் சென்று பார்க்கும்போது Connected என்று வர வேண்டும். இப்பொழுது இன்டர்நெட் மற்றும் லோக்கல் wireless இயங்க ஆரம்பித்து விடும்.


http://dhruva-bsnl.blogspot.in/2011/02/how-to-configure-linksys-wag120n-modem.html

Monday, September 15, 2014

வீட்டு பொருட்கள் பராமரிப்பு.

வீட்டு பொருட்கள் பராமரிப்பு.

தட்டுமுட்டுச் சாமான்கள் இல்லாத வீடு கிடையாது. அவற்றை ஒழுங்காக வைக்காவிட்டால் வீடு வீடாக இருக்காது. குப்பைககூளம் போல காட்சியளிக்கும். பர்னிச்சர்கள் முதல்,பாத்திரங்கள் வரை எல்லாமே தட்டுமுட்டுச் சாமான்கள் தான். அவற்றை அடுக்கி வைத்திருந்தால் அழகு. அழுக்கு படியாமல் பாதுகாத்தால் அழகோ அழகு. சுகமும் கூட. இல்லாவிட்டால் வீட்டிற்கு வரும் விருந்தினர் முகம் சுளிப்பர். ஏன் நாம்கூட உற்சாகம் இழந்து விடுவோம்.

பர்னிச்சர்கள் பொலிவை இழப்பதற்கு கறைவிரிசல்சிராய்ப்பு என பல காரணங்கள் உண்டு. உணவு பொருட்கள் சிந்துவதால் பர்னிச்சர் அழகை இழக்கும். சாப்பிட்ட உடன் சிந்திய உணவு துணுக்குகளை துடைத்து விட்டால் சுத்தமாகி விடும். இல்லாவிட்டால் உறைந்து போய் கறையை ஏற்படுத்தலாம். காபி,டீ சிந்துவதாலும் கறை தோன்றலாம்.


பர்னிச்சர்களில் அன்றாடம் படிவது தூசுகள் தான். இவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்யாவிட்டால் அவை அழுக்காக படிந்து விடும். அழுக்குகளை நீக்குவது எளிது தான் என்றாலும் தினசரி செய்ய முடியாததால் அவை பர்னிச்சர்களின் அழகை பாழாக்கும். அழுக்குகளை சுத்தம் செய்ய பாலிஷ்ஸ்ப்ரே தெளித்து சுத்தமான துணியால் பர்னிச்சர் முழுதும் துடைக்கவும்.

கரைகளை விட சிராய்ப்புகள் பர்னிச்சர்களின் அழகை அதிகமாக சிதைக்கிறது. குழந்தைகள் விளையாடுவதுபொருட்களை வைத்து எடுப்பதுஇடம் பெயர்த்துவது போன்றவற்றால் சிராய்ப்புகள் ஏற்படுகின்றன. முட்டை மஞ்சள் கருவுடன் சிறிது வினிகர் சேர்த்து பசை போல் ஆக்கி சிராய்ப்பில் பூசிவிட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு துடைத்து விடுங்கள் சிராய்ப்பு மறைந்து விடும். மெழுகையும் தேய்க்கலாம்.

ஆழமான சிராய்ப்புகளை வாதுமை கொட்டைகளை கொண்டு சரி செய்யலாம். பள்ளத்தின் அளவுக்கேற்ப வாதுமை கொட்டையை நறுக்கி அதில் அழுத்திவிட்டுசீராக உரசி விடுவதன் மூலம் சரிப்படுத்தி விடலாம். வெட்டுக்காயம்போல் ஏற்ப்பட்டுள்ள சேதங்களில் இன்ஸ்டன்ட் காபி பவுடரை’ சிறிது நீருடன் சேர்த்து பேஸ்ட் பதத்தில் எடுத்து பூசி சரி செய்யலாம். ஆனால் இது கருப்பு நிற பர்னிச்சர்களுக்குத்தான் நன்றாக இருக்கும்.

சேர்கள் நன்றாக இருந்தும் கால்கள் பழுதுபட்டால் பயனற்று போய் விடும். இருக்கையின் கால்கள் தேய்ந்து அல்லது உடைந்து போயிருந்தால் ரப்பர் தக்கையை அல்லது கடல்நுரையை பயன்படுத்தி நிற்க வைக்க முயற்சிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை ஒட்ட வைக்கும் பசை கூட விற்பனைக்கு கிடைக்கிறது. அவற்றை வாங்கி உடைந்த துண்டுகளை அல்லது ரப்பர் தக்கைகளை ஒட்டி வைத்து பயன்படுத்தலாம்.

அடிக்கடி முற்றம் அல்லது தோட்டத்திற்கு எடுத்துச்சென்று பயன்படுத்தும் இருக்கையின் கால்கள் அதிகம் தேய்மானத்தை சந்திக்கும். அதன் கால்களில் சிறிய பிளாஸ்டிக் அல்லது தகர தக்கையை பொருத்தி தேய்மானத்தை குறைக்கலாம். இதனால் சேர்களை இழுத்துக்கொண்டு சென்றாலும் ஒன்றும் ஆகாது. பாலிஷ் செய்யும்போது கீழே பழைய சாக்கை விரித்துக் கொண்டால் வடியும் வார்னிஷை உறிஞ்சி விடும்.

சேர்கள் சுவர் ஓரமாக போடப்பட்டு இருக்கும்போது சுவரில் உரசலாம். அதேபோல அதில் அமருபவர்கள் சுவரில் சாய்வதால் எண்ணெய் கறை சுவரில் படியலாம். இதை தவிர்க்க ரப்பர் மெத்தைகளை வாங்கி தலைசாயும் இடம்இருக்கைகள் சுவரில் உரசும் பகுதிகளில் பொருத்தலாம். பர்னிச்சர் பாலிஷை அகற்ற வினிகருடன் பாதியளவு தண்ணீர் சேர்த்து துடைக்கவும்.



.

வருமான வரி ITR-V நகல்களை பதிவிறக்கம் செய்யும் முறை

வருமான வரி ITR-V நகல்களை பதிவிறக்கம் செய்யும் முறை



கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...

கிரெடிட் கார்டை பாதுகாப்பாக பயன்படுத்த சில ஆலோசனைகள்...



1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யா விட்டாலும் உரிய காலத்தில்அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. புதிய கார்டு வாங்கினால் உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இது உங்கள் கார்டை மற்றவர்கள் பயன்படுத்துவதை (ஓரளவு) தடுக்கும்.

3. கிரெடிட் கார்டு தொலைந்து போனால் வங்கியில் புகார் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்ணை எப்பொழுதும் கையில் வைத்திருங்கள். அதோடு கிரெடிட் கார்டு எண்ணையும் வைத்திருக்க மறந்து விடாதீர்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்து கார்டை செயலிழக்க செய்யுங்கள்.

4. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்பொழுது அவசியம் தேவையான பொருட்கள் மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் பணம் செலுத்த வேண்டும்.

5. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

6. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன் தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக பாருங்கள். தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. புதிதாக பொருள் வாங்கியிருந்தால்அதற்கான தொகை மட்டுமே அடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வங்கிக்கு உடனே புகார் செய்யுங்கள்.

9. அனுமதியின்றி பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை பயனாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும்அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.

10. வங்கியிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோபுகாரை பதிவு செய்தவர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள்.

11. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டு அடிப்படையில்வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள்பழைய கார்டின்முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணைப் முறைகேடாக வேறு யாரேனும் பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

12. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கதொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரச்னை வந்தால் அவர்கள் தப்பி விடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்ட நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

13. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால்அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும்வங்கிக்கும் இடையே கிரெடிட் கார்டு சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உங்கள் சம்மதம் இன்றியே உங்கள் பணத்தை வங்கி எடுத்துக்கொள்ளும் அபாயம் உள்ளது.

14. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் உள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

15. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும்மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி நடைமுறை குறை தீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள்.

வங்கி நடைமுறை குறைதீர்ப்பாளர்,
இந்திய ரிசர்வ் வங்கி,
கோட்டைச்சரிவு,
16, இராஜாஜி சாலை,
சென்னை  600001.
தொலைபேசி: 044-25395487,
இணைய முகவரி: www.bankingombudsman.rbi.org.in

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா?

பாஸ்போர்ட் எடுப்பதற்கு தேவைப்படும் ‘Annexure A’ படிவம்

பாஸ்போர்ட் எடுப்பதற்கு பல ஆவணங்கள் நாம் பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுக்க வேண்டியிருக்கும். அதில் மிக முக்கியமான ஒன்று பிறப்பு சான்றிதழ். சிலசமயம் நம்மிடம் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் இருக்கலாம். உதரணமாக பள்ளி சான்றிதழும் இல்லாமல் முனிசிபாலிட்டி சான்றிதழும் இல்லாமல் இருக்கலாம். இந்த சூழ்நிலையில் இந்த ஆவணங்களுக்கு மாற்றாக அரசு ‘Annexure A’ என்ற படிவத்தை அனுமதித்து இருக்கிறது. இந்த‘Annexure A’ படிவத்தை பற்றி இங்கு பார்ப்போம்.

இந்த படிவ மாதிரியை http://passportindia.gov.in என்ற வலை தளத்தில் இருந்து பெற்றுகொள்ளலாம். இந்த படிவத்தை குறைந்த பட்ச நீதித்துறை சாராத முத்திரை தாளில்(Non- Judicial Stamp Paper) அச்சடித்து, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டி நோட்டரி பப்ளிக் (Notary Public) சான்று பெற வேண்டும். நோட்டரி பப்ளிக் என்பவர் ஒரு அட்வகேட் / வக்கீல். மாவட்ட நீதி மன்றங்களில் நீங்கள் நோட்டரி பப்ளிக்கை அணுகலாம். அவர்களே நாம் கொண்டு செல்லும் ஆவணத்தில் சான்றளித்து முத்திரையிட்டு(Stamp) கொடுப்பார்கள். இதற்காக நோட்டரி பப்ளிக் உண்டான தொகையை கொடுக்க வேண்டும். கோர்ட் அருகமையிலேயே நீங்கள் ஆவணத்தை டைப் செய்து பிரின்ட் எடுத்து கொள்ளலாம்.

கீழே காட்டப்பட்டுள்ளது ‘Annexure A’ -வின் மாதிரி.

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்

தங்கம் வாங்க போறீங்களா? எச்சரிக்கை குறிப்புகள்







'மளமள'வென விலைவாசி உயர்ந்துகொண்டே போனாலும் தங்கத்தின் மவுசு மட்டுமே என்றுமே குறையாது. தங்கத்தின் மீது ஆசைக்கொண்ட பெண்கள் இல்லையென்றே சொல்லலாம்..

பெண்கள் மட்டுமா.. ஆண்களும் கூட அதன் மீது தனி மோகம் வைத்திருக்கிறார்கள்..

என்றுமே.. எக்காலத்திலுமே தங்கத்தின் மதிப்பு குறைந்ததாக சரித்திரம் இல்லை.. அப்படிப்பட்ட தங்கம் இரண்டு வகையாக நமக்கு கிடைக்கும். ஒன்று  கட்டித்தங்கம்.. மற்றொன்று ஆபரணத்தங்கம்.

கட்டித் தங்கத்தை வாங்கி நேரடியாக நகை செய்ய முடியுமா என்றால் அது முடியாது. அதனுடன் ஒரு சில உலோகங்களை சேர்த்துதான் தங்க நகைகள் செய்ய முடியும்.


அவ்வாறு கலப்படம் செய்யப்பட்டு உருவாகும் நகைகளின் தரத்தை குறிக்கும் சொல்தான் காரட் (KARAT)என்பது.

தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்துள்ள விகிதத்தைப் பொறுத்து அவற்றை தரத்தை அறிய முடியும்.

அதாவது 

  • 24 கேரட், 
  • 22 கேரட்
  • 18 கேரட்
  • 14 கேரட்
  • 10 கேரட்
  • 9 கேரட்
  • 8 கேரட்

 என தரம் பிரிக்கின்றனர்.

இதில் 22 கேரட் தங்கமே பெரும்பாலும் பயன்பாட்டில் உள்ளது. இதில் 97.61% சுத்த தங்கம் உள்ளது.

இந்த வகையான தங்கத்தைதான் நாம் டிவியிலும், நாளிதழ், வார இதழ் விளம்பரங்களிலும் பார்க்கிறோம். இதை 916 BIS ஹால்மார்க் தங்கம் எனக் குறிப்பிடுகின்றனர்.  இதையே ஆபரத்தங்கம் என்று குறிப்பிடுவார்கள். 

தங்கத்தின் தரத்தை அறிய ஹால்மார்க்:

பெரும்பாலான தங்க நகைகள் 24 கேரட், 22 கேரட், 18 காரட் தங்கமாகவே உள்ளது. எந்த வகையான தங்கம் என அறிய உதவுகிறது ஹால்மார்க் முத்திரை.

இந்த முத்திரையானது மற்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தரத்தை நிர்ணயிக்கும் ISI தர முத்திரையைப் போன்றதுதான் தங்கத்தின் தரத்தை அறியும் BIS ஹால்மார்க் முத்திரை.

இந்திய அரசின் தரக் கட்டுப்பாடு அமைப்பு Bureau of Indian Standards என்பதின் சுருக்கமே BIS என அழைக்கபடுகிறது. இந்த இமைப்பு தங்க நகைகளுக்கு ஹால்மார்த் முத்திரையை வழங்கி தரத்தை நிர்ணயிக்கிறது.

BIS முத்திரையை யார் கொடுப்பார்கள்? 

BIS முத்திரையை வழங்குவதற்காக அரசு நாடு முழுவதும் உரிமைப்பெற்ற (License) டீலர்களை நியமித்திருக்கிறது. இந்த உரிமைப் பெற்ற டீலர்கள் மட்டுமே தங்க நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரையை வழங்க முடியும்.

ஜூவல்லரி கடை உரிமையாளர் இந்த நகைகளை பொற்கொள்ளர்களிடமிருந்து பெற்று இந்த லைசென்ஸ் பெற்ற டீலர்களிடம் பரிசோதித்து, அந்த நகைகளுக்கான தரத்தை நிர்ணயித்து ஹார்மார்க் முத்திரையைப் பெற்றுக்கொள்கின்றனர். சோதிக்கப்படும் நகைகள் 22 கேரட் கொண்டதாக இருப்பின் அவற்றை 91.6% ஹால்மார்க் முத்திரையும், 18 காரட் அளவுடையதாக இருப்பின் 75% ஹார்மார்க் முத்திரையும் கொடுக்கப்படுகிறது.

தங்கம் வாங்கறீங்களா? கொஞ்சம் கவனமா பார்த்து வாங்குங்க.. 

நீங்கள் வாங்கும் தங்கத்தில் ஹால்மார்க் முத்திரை மட்டும் இருந்தால் போதாது. அந்த ஹால்மார்க் முத்திரையில் நகையின் தரம் எத்தனை சதவிகிதம் என்பது குறிக்கப்பட்டிருக்கிறதா என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும்.

தவறான ஹால்மார்க் நகைகளை எப்படி கண்டுபிடிப்பது? 

நீங்கள் 22 காரட் நகையென கடைகளில் வாங்கிய பிறகு, ஏதாவது ஒருகாரணத்திற்காகவோ.. அல்லது சோதனை செய்து பார்க்கும்பொழுதே அந்த நகை 18 காரட் தரமுடைய நகை என்பதை தெரியவந்து உறுதி செய்யப்பட்டால் கண்டிப்பாக  தவறான ஹால்மார்க் முத்திரையை வழங்கிய டீலரின் லைசென்சை BIS அலுவலகம் ரத்து செய்துவிடும்.

தரமற்ற நகைகளை விற்ற ஜூவல்லரி கடையும் வாங்கிய நகைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கியே ஆக வேண்டும். அவ்வாறு நஷ்ட ஈடு தர மறுக்கும் பட்சத்தில் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகி நஷ்ட ஈட்டைப் பெற முடியும்.

இவர்தான் ஹால்மார்க் முத்திரையை வழங்கினார் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? 

இது மிக சுலபம். நீங்கள் வாங்கும் எந்த ஒரு ஆபரணத் தங்கத்திலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை இருக்கும்.  BIS ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரையை வழங்கியிருப்பார்கள். அதாவது ஒருவருக்கு கொடுக்கப்படும் முத்திரை அடையாளமானது, மற்ற எந்த முத்திரை டீலருக்கும் கொடுக்கமாட்டார்கள். ஒவ்வொரு டீலருக்கும் தனிப்பட்ட முத்திரை வழங்கப்படும். குறிப்பிட்ட ஹால்மார்க் முத்திரைக்கு சொந்தக்காரர் இவர்தான் என எளிதாக அந்த அடையாளத்தை வைத்து,  கண்டுபிடித்துவிடுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள BIS  அலுவலகங்களின் முகவரிகள்:

SOUTHERN REGIONAL OFFICE

C.I.T CAMPUS, IV CROSS ROAD,CHENNAI-600 013.
91 044 22542315,22541584, 22541470
Fax: 91 044 22541087 . 
 sro@bis.org.in

COIMBATORE BRANCH OFFICE

5th Floor, Kovai Towers, 
44 Bala Sundaram Road,
Coimbatore 641 018.
LandMark- on RTO road, near womens polytechnic
0422 2201016, 2210141, 2215622; Fax: 0422-2216705
cbto@bis.org.in

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஜூவல்லரி (நகைகடைகளிலும்) உள்ள நகைகளிலும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை பதிந்தே விற்பனை செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி நீங்கள் நகைகள் வாங்கினால் அதன் தரம் என்ன எத்தனை காரட்.. அதில் BIS ஹால்மார்க் முத்திரை பதியப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் நன்றாக கவனித்து வாங்குங்கள்...

உங்களின் பணத்தின் மதிப்புக்கேற்ற நகைகளையும் நீங்கள் வாங்க வேண்டாமா என்ன? கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும். இந்த தகவல்களனைத்தையும் நகைக்கடைகளிலேயே பெற்று மனதுக்கு திருப்தியாக நகைகளை வாங்கலாம்.