‘‘பொதுவாகவே பழங்களின் உட்பகுதியைவிடத் தோலில்தான் அதிக அளவு சத்துக்கள் இருக்கும். அதிலும், சப்போட்டா, மாம்பழம், கொய்யா, திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களின் தோல்களில் அதிக அளவு சத்துக்கள் அடங்கி இருக்கின்றன.
ஆப்பிள் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின்- ஏ அதிகமாக உள்ளன. டயட் மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற அதிகமான நார்ச் சத்தும், ஆன்டிஆக்சிடென்ட்களும் இருப்பதால் செல்கள் வலுவடைந்து, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், தோல் நீக்கப்படாத ஆப்பிள் பழத்தில் இருந்து எடுக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்தத்தில் கலந்துள்ள அமிலத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும்.
கொய்யாப் பழத்தைத் தோலுடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சருமத்துக்குப் பொலிவையும் அழகையும் கூட்டுவதுடன் தோல் வறட்சியையும் போக்கும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் வல்லமை மாம்பழத் தோலுக்கு உண்டு. நீரழிவு நோயாளிகள் மாம்பழத்தைத் தோலுடன் சாப்பிடுவது நல்லது.
வாழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச் சத்தும், கால்சியமும் உள்ளன. மூட்டு வலி உள்ளவர்கள் தோலுடன் சேர்த்து பழத்தைச் சாப்பிட்டுவர, மூட்டுவலி சரியகும். கொஞ்சம் கசப்புத்தன்மை இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம்.
திராட்சையைத் தோலுடன் சாப்பிடும் போது, ரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலும் சரியாகும்
ஆப்பிள் தோலில் கால்சியம் மற்றும் வைட்டமின்- ஏ அதிகமாக உள்ளன. டயட் மேற்கொள்பவர்களுக்கு ஏற்ற அதிகமான நார்ச் சத்தும், ஆன்டிஆக்சிடென்ட்களும் இருப்பதால் செல்கள் வலுவடைந்து, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும், தோல் நீக்கப்படாத ஆப்பிள் பழத்தில் இருந்து எடுக்கப்படும் பழச்சாறு ரத்தத்தை சுத்தம் செய்து, ரத்தத்தில் கலந்துள்ள அமிலத்தன்மையை நீர்த்துப்போகச் செய்யும்.
கொய்யாப் பழத்தைத் தோலுடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சருமத்துக்குப் பொலிவையும் அழகையும் கூட்டுவதுடன் தோல் வறட்சியையும் போக்கும்.
ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கும் வல்லமை மாம்பழத் தோலுக்கு உண்டு. நீரழிவு நோயாளிகள் மாம்பழத்தைத் தோலுடன் சாப்பிடுவது நல்லது.
வாழைப்பழத் தோலில் அதிக அளவு நார்ச் சத்தும், கால்சியமும் உள்ளன. மூட்டு வலி உள்ளவர்கள் தோலுடன் சேர்த்து பழத்தைச் சாப்பிட்டுவர, மூட்டுவலி சரியகும். கொஞ்சம் கசப்புத்தன்மை இருக்கும் என்பதால், தேன் கலந்து சாப்பிடலாம்.
திராட்சையைத் தோலுடன் சாப்பிடும் போது, ரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலும் சரியாகும்
No comments:
Post a Comment