Friday, September 12, 2014

தூக்கம் மிகவும் முக்கியம்

இரவில் எட்டு மணி நேர தூக்கம் மிகவும் முக்கியம் என்கிறார்கள் மன நல ஆராய்ச்சியாளர்கள். மன உளைச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் பாதிப்புக்கள் காரணமாக, ஒருவருக்கு தூக்கம் கெடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு தினமும் சரியான தூக்கம் இல்லாத நிலையில், மறுநாள் வேலை திறன் பாதிக்கப்படும். உடல் பருமன் போன்ற பல‌ காரணங்களால் தேவையான‌ தூக்கம் இல்லாமல் போய்விடும்.

தூக்கத்தின் போது உடல் மற்றும் மூளைக்கும் ஓய்வு கிடைக்கிறது. இதன் காரணமாகவே காலையில் தூங்கி எழுந்ததும் உற்சாகம் பிறக்கிறது.

தூக்கம் வராமல் சிலர் இரவில் கஷ்டப்படுவார்கள். வீட்டுப் பிரச்சினைகளையோ, ஆபீஸ் பிரச்சினைகளையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். கவலை இருந்தால் தூக்கம் கிட்டே வராது.

உறக்கமின்றி தவிப்பவர்களுக்கான உணவுப் பட்டியல்.

தயிர்:

கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது.ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வரவழைக்கும். இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின்மை ஏற்படுவதோடு,மன அழுத்தம் மற்றும் தசை வலி போன்றவையும் ஏற்படலாம்.


பசலைக்கீரை:

பசலைக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் இந்த இக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள்.

இறால்:

இறால் மீனுக்கு தூக்கத்தை வரவழைக்கும் திறன் இருக்கிறது என்கிறார்கள் உணவு சத்து நிபுணர்கள். இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் வல்லமை உள்ளது.

பீன்ஸ்:

பீன்ஸ், அவரைக்காய், பச்சைப் பட்டாணி போன்றவற்றில் பி6,பி12 உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இனி என்ன, மேற்சொன்னவற்றில் தினம் ஒன்றை சாப்பிட்டு அமைதியான ஆழமான தூக்கத்துக்குள் அமிழ்ந்து போகலாம்.
 
Photo: இரவில் எட்டு மணி நேர தூக்கம் மிகவும் முக்கியம் என்கிறார்கள் மன நல ஆராய்ச்சியாளர்கள்.  மன உளைச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் பாதிப்புக்கள் காரணமாக, ஒருவருக்கு தூக்கம் கெடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இவ்வாறு தினமும் சரியான தூக்கம் இல்லாத நிலையில், மறுநாள் வேலை திறன் பாதிக்கப்படும். உடல் பருமன் போன்ற பல‌ காரணங்களால் தேவையான‌ தூக்கம் இல்லாமல் போய்விடும்.

தூக்கத்தின் போது உடல் மற்றும் மூளைக்கும் ஓய்வு கிடைக்கிறது. இதன் காரணமாகவே காலையில் தூங்கி எழுந்ததும் உற்சாகம் பிறக்கிறது.

தூக்கம் வராமல் சிலர் இரவில் கஷ்டப்படுவார்கள்.  வீட்டுப் பிரச்சினைகளையோ, ஆபீஸ் பிரச்சினைகளையோ மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். கவலை இருந்தால் தூக்கம் கிட்டே வராது.

உறக்கமின்றி தவிப்பவர்களுக்கான உணவுப் பட்டியல்.

தயிர்:

கொழுப்பு குறைந்த தயிரில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டுக்குமே தூக்கத்தை வரவழைப்பதில் முக்கிய பங்கு உள்ளது.ஆழ்ந்த தூக்கம் வர உதவும் இந்த தாதுக்கள், வேகமாகவும் தூக்கத்தை வரவழைக்கும். இந்த தாதுக்கள் ஒருவருக்கு உரிய அளவு கிடைக்காமல் பற்றாக்குறையாக இருந்தால், அதனால் தூக்கமின்மை ஏற்படுவதோடு,மன அழுத்தம் மற்றும் தசை வலி போன்றவையும் ஏற்படலாம்.


பசலைக்கீரை:

பசலைக்கீரையில் இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது. தூக்கமின்மையை ஏற்படுத்தக்கூடிய ஒருவித படபடப்பு மற்றும் மன அமைதியின்மை போன்றவை ஏற்படாமல் பாதுகாப்பதில் இந்த இக்கீரை முக்கிய பங்கு வகிப்பதாக கூறுகிறார்கள் நிபுணர்கள். 

இறால்:

இறால் மீனுக்கு தூக்கத்தை வரவழைக்கும் திறன் இருக்கிறது என்கிறார்கள் உணவு சத்து நிபுணர்கள். இதிலுள்ள ஆரோக்கியமான கொழுப்பு,தூக்கத்தை ஒழுங்குபடுத்தும் ஹார்மோன் சுரப்புகளை அதிகரிக்கும் வல்லமை உள்ளது.

பீன்ஸ்:

பீன்ஸ், அவரைக்காய், பச்சைப் பட்டாணி போன்றவற்றில் பி6,பி12 உள்ளிட்ட 'பி' வைட்டமின்களும், ஃபோலிக் அமிலமும் மிகுதியாக உள்ளன. இவை மனிதனின் தூக்க சுழற்சி முறையை ஒழுங்குபடுத்துவதோடு, மனதை ஆசுவாசமாக வைத்திருக்கக் கூடிய செரோட்டோனினை சுரக்க வைக்கிறது.மேலும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு 'பி' வைட்டமின்கள் மிகவும் உதவுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இனி என்ன, மேற்சொன்னவற்றில் தினம் ஒன்றை சாப்பிட்டு அமைதியான ஆழமான தூக்கத்துக்குள் அமிழ்ந்து போகலாம்.

No comments:

Post a Comment