Sunday, November 30, 2014

வாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான ‘மௌத் ஃப்ரஸ்னர்ஸ்’…

வாய் நாற்றத்தை தடுக்கும் இயற்கையான ‘மௌத் ஃப்ரஸ்னர்ஸ்’…
நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தாங்கவே முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின், வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை, ஏதேனும் சுயிங் கம்களை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள். ஆகவே அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் ஒரு சில பொருட்களை மெல்லலாமே!!!
* ஏலக்காய்: உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
* கொத்தமல்லி: கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாது தான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
* கிராம்பு/லவங்கம்: உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
* புதினா: நிறைய உணவில் மேலே அலங்கரிக்க புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் என்று தெரியுமா? ஏனெனில் அதனால் உணவு நன்கு கலராக இருப்பதோடு, வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும் என்பதால் தான்.
* கொய்யாப்பழம்: பழங்களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்கப் பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட்களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.
* மாதுளை: அனைவருக்கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம். ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொண்டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
ஆகவே மேற்கூறிய பொருட்களை சாப்பிட்டால், எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாமல் இருப்பதோடு, உடல் ஆரோக்கியமாகவும், வாய் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும்.
http://www.tamildoctor.com/

இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ்!!

இதயத்துக்கு ரத்தம் சீராக செல்ல மருத்துவ டிப்ஸ்!!
ஒரு காலத்தில் நோய் இல்லாமல் வாழ்ந்தவன் மனிதன். ஆனால் இன்றைக்குள்ள நடைமுறையில் மனிதனோட வாழ்வில் நோய் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் வயது பாரபட்சம் இன்றி வரும் நோய் இதயத்தில் ஏற்படும் நோய் தான். இதை இரண்டு விதமாக பிரிக்கலாம். இதயத்தின் வால்வுகளில் ஏற்படுவது மற்றும் இதய தசைகளில் ஏற்படும் பிரச்னை.
இதில் இதய தசைகளில் உருவாகும் பிரச்னை காரணம் நம்முடைய அன்றாட வாழ்க்கை முறையில் உள்ள உணவு பழக்கம். இதுபோன்ற பிரச்னைகளை உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்தல், முறையான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் 90 சதவீதம் கட்டுப்படுத்தலாம். இதயத்தின் தசைகளுக்கு ரத்தம் சரிவர செல்லவில்லை என்றால் நெஞ்சு வலியும், இதயத்தின் உட்பகுதி மற்றும் விரல்களின் நுனிப்பகுதி ஆகிய பாகங்களில் அதிக வலி ஏற்படும்.
இந்தியாவில் அடுத்த பத்து ஆண்டுகளில் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அதனால் 35 வயது கடந்தவர் என்றால் அவர்கள் இதய நோய் குறித்து மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும்.
இதய கோளறுகள் ஏற்பட இரண்டு காரணங்கள்:
1. பரம்பரையாக வருவது.
2. நடைமுறை வாழ்க்கை முறை காரணமாக நவீன வாழ்க்கை முறையில் வாகனங்களை பயன்படுத்துவதால் நடைபயிற்சி என்பது குறைந்து விட்டது. இதனால் உடலில் சேரும் தேவையில்லாத கலோரிகள் சரியாக எரிக்கப்படுவதில்லை.
உணவில் கவனம் தேவை:
இதய நலன் காக்க உணவு முறையில் கவனம் தேவை. காலை உணவை தவிர்க்கவே கூடாது. மற்றபடி பசித்தால் மட்டுமே சாப்பிடுவது நல்லது. வேக வைத்த நார்ச்சத்து உள்ள காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருப்பது முக்கியம். பழங்கல் பல வகைகளில் நம் உடலுக்கு நன்மை அளிப்பதால் அதை நாம் தினமும் சாப்பிடுவது நல்லது.
உட்காந்தபடியே பணிகளை செய்வது உடலுக்கு நல்லது அல்ல. உடலுக்கு அசைவும், இயக்கமும் அடிக்கடி தேவை. காலை, மாலையில் 40 நிமிடங்கள் நடப்பது அல்லது ஒரு வேளையாவது நடப்பது நல்லது. வாரத்தில் 5 நாட்களுக்கு தினசரி 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி தேவை. இதுபோன்ற சூழ்நிலை மனதை மென்மையாக வைத்து கொள்ளும்.
சிகிச்சை என்ன?
இதய பிரச்னை உள்ளவர்கள் அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. அக்குபஞ்சர் சிகிச்சை முறை முதலில் பிரதானமாக இதயத்திலிருந்து தொடங்கப்பட்டு பிறகு உள்பாகங்களில் பரவி, கைகள் மூலம் விரல்களின் முனைகளில் முடிவடைகிறது. அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை பெறும் நபர் வேறு இதய கோளாறுகள் வராமல் தங்களை பாதுகாத்து கொள்ளலாம். சரியான புள்ளியை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுவதால், இதய தசைகளுக்கு ரத்தம் சீராக செல்லும். இதனால் வலி, வேதனையில் இருந்து விடுபடலாம். மேலும் உண்ணும் உணவும் எளிதில் செரிமானம் ஆகும். இதன் மூலம் ஒருவரின் வாழ்நாள் அதிகரிக்கும்

பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!!

பிபி-யை கட்டுப்படுத்தும் உணவுப் பொருட்கள்!!!
இன்றைய அவசர காலத்தில் விரைவிலேயேஅனைவருக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதற்கு முதற்காரணம், சுவைக்காக உணவில் அதிகமான அளவு உப்பை சேர்க்கின்றனர். ஏனெனில் உப்பில் சோடியம் என்னும் பொருள் அதிகமாக உள்ளது. இந்த பொருள் உடலில் அதிகம் சேர்வதால், இரத்தத்தில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் இரத்த அழுத்தம் இருக்கும் போது, மேலும் மேலும் உப்பை சேர்த்தால், உடல் மற்றும் உயிருக்கு தான் பாதிப்பு ஏற்படும். அதிலும் தற்போது உடலில் எல்லா நோய்களுமே அழையா விருந்தாளிகளைப் போல வந்துவிடுகிறது. அதில் முதலில் வருவது தான் இரத்த அழுத்தம்.
எனவே சோடியம் அதிகம் உள்ள உப்பை பயன்படுத்துவதை விட, ஒரு சில உப்பை சுவையை மறக்க வைக்கும் உணவுப் பொருட்களை சமையலில் பயன்படுத்தலாம். இப்போது எந்த பொருளை சமைக்கும் போதோ, சாப்பிடும் போதோ எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போமா!!!
* மிளகுத்தூள் - மிளகு உணவுக்கு மிகவும் சுவையை அதிகமூட்டும் பொருட்களில் ஒன்று. இந்த மிளகை அரைத்து, பொடி செய்து உண்ணும் உணவுகளில் சேர்த்து வந்தால், அதன் சுவைக்கும் மணத்திற்கும், உப்பு பற்றிய எண்ணமே இல்லாமல் போய்விடும். ஆகவே எப்போது உணவில் சுவை, காரம் குறைவாக இருந்தாலும், அப்போது மிளகுத்தூளை தூவி சாப்பிடலாம்.
* எலுமிச்சை - உணவின் சுவையை கூட்டுவதில் சிறந்த பொருள் தான் எலுமிச்சை. இந்த எலுமிச்சை உப்பு சுவையோடு இருக்காது. ஆனால் அதில் உள்ள புளிப்புத்தன்மை உப்பு சுவையை மறக்க வைக்கும். அதிலும் வீட்டில் செய்யும் சாலட், உணவுகளில் அதிகமாக உப்பை சேர்க்காமல், அதில் எலுமிச்சை சாற்றை பிளிந்து சாப்பிட்டால், நன்கு சுவையோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
* சோயா சாஸ் - அனைவரும் சோயா சாஸில் அதிகமாக சோடியம் இருக்கிறது என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனெனில் சோயா சாஸில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று அதிக சோடியம் இருப்பது, மற்றொன்று குறைந்த சோடியம் இருப்பது. ஆனால் உண்மையில் சோயா சாஸ் ஒருவிதத்தில் சுத்தமான உப்பு வகையை சேர்ந்தது. அதனால் தான், ஒரு சில உணவுகளில் உப்பிற்கு பதிலாக சோயா சாஸை பயன்படுத்துகிறார்கள். அதிலும் தற்போது கடைகளில் குறைவாக சோடியம் இருக்கும் சோயா சாஸ்களும் விற்கப்படுகிறது. ஆகவே அதிக இரத்த அழுத்தம் இருப்பவர்கள், இத்தகைய சோயா சாஸை பயன்படுத்துவது சிறந்தது.
* பூண்டுப் பொடி - கடைகளில் பூண்டு பவுடரை வாங்கியும் பயன்படுத்தலாம், அல்லது பூண்டை வாங்கி அதனை வறுத்து, அரைத்தும் பயன்படுத்தலாம். ஏனெனில் இந்த பவுடர் உணவில் நல்ல சுவை மற்றும் மணத்தை தருகிறது. இது ஒரு சிறந்த உப்பை உணவில் சேர்க்காமல், சுவையைக் கூட்டும் பொருள்.
* சாட் மசாலா - இந்த மசாலாவில் அனைத்து வகையான காரமான சுவைகளும் கலந்திருக்கும். இதனை பொதுவாக சாட்ஸ் உணவுகளான பானி பூரி, பேல் பூரி போன்றவற்றிகலும் மற்றும் சாலட்டிலும் கலந்து சாப்பிடுவார்கள். வேண்டுமென்றால் இதனை வீட்டில் சமைக்கும் உணவுகளில் கலந்து சமைத்து சாப்பிட்டால், உப்பு போடாமலேயே உப்பு போட்ட சுவை கிடைக்கும். ஆனால் உண்மையில் இதில் உப்பு இல்லை.
* வினிகர் - சாப்பிடும் சாலட் மற்றும் சூப்பில் உப்பை சேர்ப்பதற்கு பதிலாக, சிறிது வினிகரை தெளித்தால், அந்த உணவுப் பொருள் மிகவும் அருமையான சுவையில் இருக்கும். முக்கியமாக வினிகர் வாங்கும் போது, உப்பில்லாத வினிகரை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
மேற்கூறியவற்றையெல்லாம் உண்ணும் உணவுகளில் உப்பிற்கு பதிலாக சேர்த்து வந்தால், உப்பின் சுவை கிடைப்பதோடு, உணவும் சுவையானதாக இருக்கும்.

இல்லத்தரசிகளுக்கு ஃபிட்னெஸ் மந்திரங்கள்!

இல்லத்தரசிகளுக்கு ஃபிட்னெஸ் மந்திரங்கள்!
''வொர்க் அவுட்ஸ், ஃபிட்னெஸ் போன்ற வார்த்தைகள் இன்று வீட்டுக்கு வீடு தண்ணிபட்ட பாடு.ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, இல்லத்தரசிகள் பலர் ஜிம்முக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். ''ஜிம்முக்குப் போய், வொர்க் அவுட்ஸ் செய்தால்தான், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்பதில்லை. வீட்டில் நாம் செய்யும் சின்னச் சின்ன வேலைகளிலேயே, உடலை 'ஃபிட்’ ஆக வைத்துக் கொள்ளும் ஏராளமான பயிற்சிகள் இருக்கின்றன. தினசரி அவற்றை செய்து வந்தாலே போதும். உடல் 'சிக்’கென இருக்கும். உடல் உறுப்புகளும் சோர்வின்றி, 'ஆக்டிவ்’ ஆக வைத்திருக்கமுடியும். வேலைக்குப் போகும் பெண்களும் இவற்றைப் பயிற்சி செய்யலாம் என்றாலும் வீட்டிலேயே இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இவை ஐடியல்! ஆண்களுக்கும் கூடத்தான்!'' என்கிறார் 'ரீபோக்’ நிறுவனத்தின் உடற்கல்வி ஆலோசகரும் ஃபிட்னெஸ் பயிற்றுனருமான விஜயசாமுண்டீஸ்வரி.
 கைவிரல்கள்
முன்பெல்லாம், அலுவலகத்தில் பேனா அல்லது பென்சிலைப் பிடித்து, விரல்களை வளைத்து, அசைத்து எழுதுவோம். அதுவே, தனிப் பயிற்சி. ஆனால் இன்றோ, பெரும்பாலும் கம்ப்யூட்டரில்தான் வேலை செய்கின்றனர்.  தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்யும்போது, விரல்களில் ஒரு விறைப்புத்தன்மையும், உள்ளங்கையில் வலியும் ஏற்படும். இதற்கான சூப்பர் பயிற்சி, சப்பாத்தி மாவு பிசைவதுதான்! சப்பாத்தி, பூரிக்கான மாவை அழுத்தி பிசையலாம். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டலாம். கைவிரல்களுக்கும், உள்ளங்கைகளுக்கும் இது நல்ல பயிற்சி.
 டென்னிஸ் பந்து சைஸில், மென்மையான பந்து ஒன்றை வாங்கி வைத்துக்கொண்டு, இரண்டு கைகளிலும் மாறி மாறி, உள்ளங்கைகளில் வைத்து விரல்களால் பிடித்து அழுத்தி, உருட்டியும் பயிற்சி செய்யலாம். பத்திரிகை படிக்கும்போது, டி.வி. பார்க்கும்«பாது கூட இதைச் செய்யலாம்.
 இப்போது கணக்குப் போடுவதற்குக் கூட செல்போன்தான். யாருமே கைவிரல்களை நீட்டி எண்ணுவது கிடையாது. குழந்தைகளுக்கும் கற்பிப்பது இல்லை. விரலை ஒவ்வொன்றாக நீட்டும் பயிற்சி நமக்கு அவசியம் தேவை. ஏனெனில், நம் உடலின் எல்லா நரம்புகளும் முடியும் இடம் நமது கை மற்றும் கால் விரல் நுனிகள்தான்.
 சமையலறை ஷெல்ஃபில் மேல்தட்டில் பொருள்களை வைத்து, கைகளை நீட்டி, எம்பி எடுக்கலாம். கை, கால்களுக்கு நல்ல 'ஸ்ட்ரெட்ச்’ கிடைக்கும்.
 வயிறு
இலை போல வயிறு வேண்டும் என்ற ஆசை எல்லாப் பெண்களுக்கும் உண்டு. ஆனால், அதற்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். முதல் படியாக, நிற்கும்போதும், உட்காரும்போதும் எப்போதுமே வயிற்றைக் கொஞ்சம் உள்ளே இழுத்தபடி இருக்கப் பழகவேண்டும். இதைத் தினமுமே ஒரு பயிற்சியாகச் செய்து வந்தால் பழகிவிடும். இதைத்தான் ஜிம்மில், 'க்ரன்ச்சஸ்’ என்று வயிற்றுக்கான பயிற்சியாக செய்கின்றனர். சமைக்கும்போதும், பஸ், ட்ரெயினுக்குக் காத்திருக்கும்போதும்கூட, இந்தப் பயிற்சியை செய்யலாம். சீக்கிரமே 'இலை போல வயிறு’ சாத்தியம். முதுகுப் பகுதி வலிமை பெறும்; வயிற்றுத் தசைகள் இறுகும்.
 பேப்பர் படிக்கும்போது, குழந்தை தவழ்வது போல இரு கைகளையும் தரையில் ஊன்றி, முழங்கால்களை மடித்து நின்ற நிலையில் இருக்கலாம். அப்போது வயிறு கீழ்நோக்கித் தொங்கும். அதை உள்ளிழுத்தபடி இருப்பதுதான் பயிற்சி. இதனால் வயிற்றுத் தசைகள் இறுகி, வயிறு உள்ளடங்கி, அழகாகும். எப்போதுமே உள்ளே இருக்கும் தசைகளை வலிமையாக்காமல், வெளி அழகுக்காகப் பயிற்சி செய்வது பயனற்றது. கர்ப்பிணிகள், தவழும் நிலைப் பயிற்சியைச் செய்யக் கூடாது. முழங்கால் வலி இருப்பவர்கள், வெறும் தரையில் முட்டி போடாமல், ஏதாவது மென்மையான விரிப்பில் செய்யலாம்.
 தோள்கள்
தோள்பட்டைக்கு அடிக்கடி அசைவு கொடுக்காமல் போனால், அது அப்படியே இறுகிவிடும் அபாயம் உண்டு. அதை 'ஃப்ரோஸன் ஷோல்டர்ஸ்’ என்பார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களால் ஓரளவுக்கு மேல் கையைத் தூக்கவே முடியாது. சில பெண்கள், ஹாண்ட்பேகை ஒரு பக்கமாகவே மாட்டிப் பழகிவிடுவார்கள். இவர்களுக்கு, அந்த ஒரு பக்கத் தோள்பட்டையின் 'ஃப்ளெக்ஸிபிளிட்டி’யும் வலிமையும் அதிகமாகி, இன்னொரு பக்கம் குறைந்து சமச்சீரற்ற நிலை உருவாகும். மேலும், ஆசிரியர்கள் ஒரு கையைத் தூக்கியபடியே போர்டில் எழுதுவதால், அவர்களுக்கும் இந்தப் பிரச்னை அதிகமாக வர வாய்ப்புண்டு. இதனால் தோள்பட்டையில் வலியும் ஏற்படும். இதற்கும் பயிற்சிகள் உண்டு.
 அன்றாடம் காலையில் எழுந்ததும் கைகள் இரண்டையும் மேல் நோக்கி நீட்டி, சோம்பல் முறிப்பதே தோள்பட்டை மூட்டுக்கான நல்ல பயிற்சி. இதனால் கைகளின் விறைப்புத்தன்மை குறையும்.
 தோள்பட்டை மூட்டுகளின் அசைவுத்தன்மையைப் பராமரிக்க, குளித்து முடித்ததும் முதுகில் துண்டை வைத்து, ஒரு துண்டை வலது கையால் பிடித்து, தோளுக்குப் பின்புறமாக முதுகில் விட்டு, இடது கையால் அந்தத் துண்டின் கீழ் நுனியைப் பிடித்து கீழ்நோக்கி இழுக்க வேண்டும். இடது உள்ளங்கை வெளிப்புறமாகத் திரும்பி இருக்கவேண்டும். பிறகு, துண்டை மேலும் கீழுமாக, நிதானமாக இழுக்க வேண்டும். இரு கால்களையும் சமமாக வைத்து, நேரே நின்று, வயிறை உள்ளிழுத்தபடி, உடல் அசையாமல் செய்ய வேண்டும்.
தினசரி இப்படிச் செய்வதால் தோள்பட்டை ஆரோக்கியமாக இருக்கும். அலுவலகத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்த்தபின், கர்ச்சீஃபை வைத்தும் இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.
 முதுகு
 துணி துவைத்த பிறகு அலசுகிறோமே.. கிட்டத்தட்ட அதுதான் ஜிம்மில் கற்றுத் தரும் 'டெட் லிஃப்ட்’ பயிற்சிதான்.
கால்களைச் சமமாக வைத்து நின்று, முழங்காலைத் தளரவிட்டு, வயிற்றை நன்கு உள்ளிழுத்துக் கொண்டு, முன்னே குனிந்து, வாளியில் இருந்து துணியை எடுத்து நிமிர்ந்து, மீண்டும் குனிகிறோம். இது, நம் பின்பகுதிக்கு வலிமை தரும் நல்ல பயிற்சி! இதைச் செய்யும்போது, இடுப்பு மூட்டுக்கள் தொடர்ந்து இயங்குவதால், அந்த மூட்டுக்களைச் சுற்றி இருக்கும் தொடையின் பின்பக்கப் பகுதிகள் வலிமை பெறும். அடிக்கடி முதுகின் கீழ்ப்பகுதியில் வலி வருபவர்களுக்கு இந்தப் பயிற்சி நல்லது. இதனால், பின்பக்கக் கால் சதைகளும் வலுவாகும்.
 தினமும் நாற்காலி, சோஃபாவில் உட்கார்ந்து எழுவதும் கூட, 'ஜிம்’மில் நின்றபடியே உட்கார்ந்து எழும் 'ஸ்குவாட்ஸ்’ பயிற்சி போலத்தான். முதுகு வலிமைக்கு இது நல்ல பயிற்சி.
 தொடைகள்
 பெண்களுக்கு 40 வயதுக்குப் பிறகு, கால்சியம் பற்றாக்குறையினால் மூட்டு வலி வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது. இதற்கு, தொடையை மேலே தூக்கிப் பயிற்சி செய்வது, தொடைக்கும் முட்டிக்கும் நல்லது. ஒரு குக்கர் கேஸ்ட்டை எடுத்துக்கொண்டு, எந்த சப்போர்ட்டும் இல்லாமல் நின்றபடி, குனிந்து முதலில் ஒரு காலைத் தூக்கி உள்ளே விட வேண்டும். பிறகு, அதை வெளியே எடுத்துவிட்டு, அடுத்த காலை உள்ளே விட வேண்டும். இந்தப் பயிற்சி, கிட்டத்தட்ட சுடிதார் பேன்ட் அணிவது போலத்தான். இதனால் தொடைகள் வலுப்பெறும்.
 உடல் பாலன்ஸ்
 சமையலறையில் நிற்கும்போதும், பஸ்ஸுக்குக் காத்திருக்கும்போதும் சிலர் ஒரு பக்கமாக இடுப்பை வளைத்து, ஒரு காலிலேயே நிற்பார்கள். இதனால் உடலின் எடை முழுதும் அந்தக் காலுக்குச் செல்லும். இன்னொரு பக்கம் பலவீனமாகிவிடும். அத்தகைய சமயத்தில் உடலின் சமச்சீர்தன்மை குறைகிறது. அன்றாடம் துணி துவைத்தல், அலசுதல், தலை வாருதல், அலமாரியிலிருந்து பொருட்களை எடுத்தல், கடாயில் கிளறுதல் போன்ற வலது கையால் செய்யும் வேலைகளை இடது கையால் செய்யலாம். இப்படி நாம் மற்ற கை, காலையும் உபயோகிக்கும்போது, மூளையின் இன்னொரு பக்கம் தூண்டப்பட்டு, மூளை சுறுசுறுப்படைகிறது. மூளையின் 'எச்சரிக்கைத் தன்மை’ அதிகரித்து, ஞாபகமறதி குறைகிறது.
 வெகு நேரம் பஸ்ஸுக்கு நிற்கும்போது, சமைக்கும்போது, கியூவில் நிற்கும்போது எல்லாம் ஒரு காலை மடக்கி, சில நிமிடங்கள் ஒற்றைக் காலில் நின்று பழகலாம் (ஆனால் புடவைதான் இதற்கு வசதி).
 ஷூ, சாக்ஸ் போடும்போது, நின்றபடி குனிந்து போட்டுப் பழகலாம். உடல் பாலன்ஸ் சீராக இருக்கும்.  நேராக நின்று, வயிறை உள்ளிழுத்தபடி உடல் எடையை ஒரு காலுக்கு மாற்றிக்கொண்டு, மற்றொரு காலை மேலே தூக்கி, சாக்ஸ், செருப்பின் பக்கிள் போடலாம்.
 செருப்புகளை ஸ்டாண்டில் விடும்போது, கைகளைப் பயன்படுத்தாமல், கால் கட்டை விரல் மற்றும் மோதிர விரலால் செருப்புகளைப் பிடித்துத் தூக்கி, அப்படியே நின்றபடியே காலை உயர்த்தி ஸ்டாண்டில் வைத்துப் பழகலாம்.  இதனால் உடம்புக்கு பாலன்ஸ் கிடைப்பதுடன், வயிறும் உள்ளே போகும். கால்களை மேலே தூக்குவதால் முன் தொடையின் சதைப்பகுதி உறுதியாகும். முட்டி வலி வராது.
 பாதங்கள்
 ரிலாக்ஸ்டான நேரத்தில், ஒரு நாற்காலியில் அமர்ந்து, சப்பாத்திக் குழவி போன்ற ஒரு பொருளை, இரு பாதங்களின் கீழ் இருக்கும் வளைவுப் பகுதியின் கீழ் வைத்து முன்னேயும் பின்னேயுமாக உருட்டலாம்.  இதனால் குதிகால் வலி மறையும். பாதங்களுக்கு சுகம் தரும்.
  செருப்பு இல்லாமல், கடற்கரை மணல்வெளி, கூழாங்கற்கள் நிரம்பிய பாதைகளில் அடிக்கடி நடப்பதும் பாதங்களுக்கு நல்ல பயிற்சி. பாதங்களில் ரத்த ஓட்டம் நன்றாக இருப்பதுடன், விறைப்புத் தன்மை வராமல், மசாஜ் செய்தது போல இருக்கும். நீண்ட நேரம் நின்றபிறகு இந்தப் பயிற்சியைச் செய்யலாம்.
இப்படி, நம் அன்றாட வாழ்வின் பல செயல்கள், உடலுக்கு வலு சேர்க்கும் மறைமுகப் பயிற்சிகள்தான். என்ன, இன்னைக்கே ஆரம்பிச்சிடலாம்தானே?!

சருமத்துக்கு ஆகாத பனிக்காலம்

பனி விழும் தேகம் பத்திரமா?

ருமத்துக்கு ஆகாத பனிக்காலம் இது. சருமப் பரமரிப்புக்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றிக் கூறுகிறார், சென்னையைச் சேர்ந்த சரும சிறப்பு மருத்துவர் தனலட்சுமி.

தேங்காய் எண்ணெய் சிறந்த நிவாரணி! 

சரும வறட்சியைத் தவிர்க்க... குளிக்கும் முன்னும், குளித்த பின்னும் உடல், முகம், உதடு என சருமம் முழுவதும் தேங்காய் எண்ணெய் அல்லது லிக்விட் பாராஃபின் தடவலாம். தேங்காய் எண்ணெய், இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவது.

ஆனால், லிக்விட் பாராஃபின் என்பது பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கக் கூடியது, அதனால், எண்ணெய் சருமம் உள்ளவர்கள் உடல் முழுவதும் இதைத் தடவாமல், வறட்சி கண்ட இடங்களில் மட்டும் தடவலாம். ஏனெனில், அவர்கள் சருமத்தில் இருக்கக் கூடிய எண்ணெய் பசையுடன் இதுவும் சேர்ந்து பருக்களை வரவைக்கக் கூடும்.

மிக வறண்ட சருமம் உள்ளவர்கள், சோப் பயன்படுத்தாமல் குளிக்கலாம். சருமத்தில் வறட்சியை உண்டாக்கும் பனி படாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியம்.

இதேபோல்தான் கேசமும். முடியையும், தலையையும் வறண்டு போக விடாமல் எண்ணெய் தடவ வேண்டும். தலையிலும் பனி படாமல் துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.

வாசனை திரவியம்... வேண்டவே வேண்டாம்!

சோப், ஷாம்பூ, கண்டிஷனர் என நாம் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்கள், அதிக வாசனை திரவியம் சேர்க்காமல் மைல்டாக இருக்க வேண்டும். காரணம், வாசனை திரவியத்துக்கு சூரிய ஒளியை இழுக்கும் தன்மை உண்டு. எனவே, ‘ம்ம்... சூப்பர் வாசனை!’ என மயங்காதீர்கள் இனி.
அதேபோல, நம் சருமத்தின் pH5.5. நாம் பயன்படுத்தும் காஸ்மெடிக் பொருட்களும் pH  மதிப்பு  5.5 உள்ளதாக இருக்க வேண்டும். இந்த pH அளவு 5.5 ஐ விட அதிகமாக இருந்தால், காரத்தின் அளவு அதிகம் இருக்கும். இது வறட்சியை உண்டாக்கும். pH அளவு குறைவாக இருந்தாலும் பிரச்னையே. இதனால், அமிலத்தின் அளவு அதிகமாகி சருமத்தில் எரிச்சல் உண்டாகும். இது செல்களை பாதிக்கும். எனவே, தேவையான அளவை விட pH அளவு வேறுபட்டிருக்கும் காஸ்மெடிக் பொருட்களை வாங்க வேண்டாம்.

சூரிய ஒளி... கொஞ்சம் போதும்!

பலரும் இந்த பனி கிளைமேட்டில் வெயிலுக்காக ஏங்கியிருப்பார்கள். சிலர், பனிக்கு இதமாக வெயிலைத் தேடிப் போவார்கள். சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் டி கிடைக்கிறதுதான். அதற்காக தினமும் ஒரு ஐந்து நிமிடம் வெயிலில் நின்றாலே போதும், உடலுக்குத் தேவையான வைட்டமினை நமது சருமம் உற்பத்தி செய்துகொள்ளும். அதற்கு மேல் நின்றால், சூரியக் கதிர்கள் நம் சருமத்தை கருக்கவோ, சரும செல்களை சிதைக்கவோ செய்யும். எனவே, காலை 9 மணி முதல் சாயங்காலம் 4 மணி வரையிலான வெயிலைத் தவிர்க்க வேண்டும்.

உணவால் சரிசெய்யலாம் வறட்சியை! 


சரும வறட்சி கண்டவர்கள் நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். மேலும், இயற்கையான  பீட்டா கரோட்டின் உள்ள மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறப் பழங்கள் மற்றும் காய்கறிகளும், சுண்டலும் சருமத்துக்கு பொலிவு தரும்!’’

-கே. அபிநயா
( மாணவப் பத்திரிக்கையாளர்)

ஈரலின் எதிரிகள்! ****

*** ஈரலின் எதிரிகள்! ****

* மது: மதுவில் 6 சதவித ஆல்கஹாலாக இருந்தாலும் சரி, 60 சதவித ஆல்கஹாலாக இருந்தாலும் சரி... அது ஓர் உயிர்க்கொல்லியே! வேறுபாடு, கடைசிக் காரியத்தின் நாள் எப்போது என்பது மட்டுமே!

* புகை: புகை, ஈரலை நேரடியாகப் பாதிக்கும் மிக மோசமான எதிரி.

* வலி நிவாரணிகள்: தேவை இல்லாமல் அதிக அளவில் பயன்படுத்தும் வலி நிவாரணிகள் அனைத்தும் ஈரலைப் பலவீனப்படுத்தும்.

* ஆபத்தான உணவுகள்: கெட்ட கொழுப்பினால் செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் - சிப்ஸ், குக்கீஸ், பிஸ்கட்.

* குளிர்பானங்கள் மற்றும் இனிப்புக் கூழ்பண்டங்களில் (ஐஸ்கிரீம் போல) சேர்க்கப்படும் சோளச் சர்க்கரை சிரப். (ஹை ஃப்ரக்ட்டோஸ் கார்ன் சிரப்)

* இதுபோக, மன அழுத்தம், மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, டைஃபாய்டு முதலிய நோய்களால் நுண்ணுயிர் தொற்றுக் காலங்களிலும் ஈரல் பாதிக்கப்படலாம்!
Photo: *** ஈரலின் எதிரிகள்! ****

* மது: மதுவில் 6 சதவித ஆல்கஹாலாக இருந்தாலும் சரி, 60 சதவித ஆல்கஹாலாக இருந்தாலும் சரி... அது ஓர் உயிர்க்கொல்லியே! வேறுபாடு, கடைசிக் காரியத்தின் நாள் எப்போது என்பது மட்டுமே!

* புகை: புகை, ஈரலை நேரடியாகப் பாதிக்கும் மிக மோசமான எதிரி.

* வலி நிவாரணிகள்: தேவை இல்லாமல் அதிக அளவில் பயன்படுத்தும் வலி நிவாரணிகள் அனைத்தும் ஈரலைப் பலவீனப்படுத்தும்.

* ஆபத்தான உணவுகள்: கெட்ட கொழுப்பினால் செய்யப்படும் நொறுக்குத் தீனிகள் - சிப்ஸ், குக்கீஸ், பிஸ்கட். 

* குளிர்பானங்கள் மற்றும் இனிப்புக் கூழ்பண்டங்களில் (ஐஸ்கிரீம் போல) சேர்க்கப்படும் சோளச் சர்க்கரை சிரப். (ஹை ஃப்ரக்ட்டோஸ் கார்ன் சிரப்)

* இதுபோக, மன அழுத்தம், மலேரியா, மஞ்சள் காமாலை, டெங்கு, டைஃபாய்டு முதலிய நோய்களால் நுண்ணுயிர் தொற்றுக் காலங்களிலும் ஈரல் பாதிக்கப்படலாம்!

மாதுளை ....

Photo

சிறுநீரகம் சிறப்பாக செயல்பட ..எளிய வழிகள்

Photo: சிறுநீரகம் சிறப்பாக செயல்பட ..எளிய வழிகள்

உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் வாழைப்பூ

உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் வாழைப்பூ

புளிப்பு, தித்திப்பு என்று நாக்கை சப்புக்கொட்டிச் சாப்பிடுகிறோம். வாரம் ஒரு முறையேனும் வாழைப் பூவை சமைத்து சாப்பிடும் பழக்கம் இல்லாமலே போய்விட்டது. அப்படியே சமைத்தாலும், துவர்ப்பு சுவை இருக்கக்கூடாது என்பதற்காக, வாழைப் பூவை அலசி, தண்ணீர்விட்டு நன்றாக பிழிந்துவிடுகிறோம். எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தன்மை துவர்ப்புச் சுவையான வாழைப்பூவுக்கு தான் உண்டு. வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் இந்த தருணத்தில், வாரம் ஒருநாள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவது ரொம்பவே நல்லது.
மாதவிடாயின்போது, பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். ஆண்மை விருத்திக்கும் நல்லது.

வாழைப்பூ பருப்பு உசிலி ரெசிப்பி
வாழைப்பூ மடலை பிரித்து, பூவின் நடுவில் உள்ள காம்பினை அகற்றி, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 4 காய்ந்த மிளகாய், ஒரு கப் கடலைப்பருப்பை ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல் தண்ணீர் அதிகம் விடாமல் அரைத்து, குக்கரில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். இதில், மஞ்சள் தூள், உப்பு, நறுக்கிய வாழைப்பூவை போட்டு நன்றாக வெந்ததும், வேக வைத்தக் கடலைப்பருப்பை போட்டு அடுப்பை சிம்-ல் வைத்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
Photo: உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் வாழைப்பூ   

புளிப்பு, தித்திப்பு என்று நாக்கை சப்புக்கொட்டிச் சாப்பிடுகிறோம்.  வாரம் ஒரு முறையேனும் வாழைப் பூவை சமைத்து சாப்பிடும் பழக்கம் இல்லாமலே போய்விட்டது.  அப்படியே சமைத்தாலும், துவர்ப்பு சுவை இருக்கக்கூடாது என்பதற்காக, வாழைப் பூவை   அலசி, தண்ணீர்விட்டு நன்றாக பிழிந்துவிடுகிறோம்.  எல்லா நோய்களையும் குணப்படுத்தும் தன்மை துவர்ப்புச் சுவையான வாழைப்பூவுக்கு தான் உண்டு.  வீட்டில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் இந்த தருணத்தில், வாரம் ஒருநாள் வாழைப்பூவை சமைத்து சாப்பிடுவது ரொம்பவே நல்லது. 
மாதவிடாயின்போது, பெண்களுக்கு ஏற்படும் அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தும்.  வயிற்றுப் புண்ணை ஆற்றும். ஆண்மை விருத்திக்கும் நல்லது. 

வாழைப்பூ பருப்பு உசிலி ரெசிப்பி
வாழைப்பூ மடலை பிரித்து, பூவின் நடுவில் உள்ள காம்பினை அகற்றி, சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.  4 காய்ந்த மிளகாய், ஒரு கப் கடலைப்பருப்பை ஊற வைத்து சிறிது உப்பு சேர்த்து வடைக்கு அரைப்பது போல் தண்ணீர் அதிகம் விடாமல் அரைத்து, குக்கரில் வேக வைக்கவும்.  கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.  இதில்,  மஞ்சள் தூள், உப்பு, நறுக்கிய வாழைப்பூவை போட்டு நன்றாக வெந்ததும், வேக வைத்தக் கடலைப்பருப்பை போட்டு அடுப்பை சிம்-ல் வைத்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

தடுப்பூசி ரகசியங்கள்! - 10

தடுப்பூசி ரகசியங்கள்! - 10
விரட்டி அடிக்கலாம் ‘ரோட்டா’ வைரஸை!

குழந்தைகளின் ஆரோக்கி யத்துக்கு அதிகம் வேட்டு வைப் பது இரண்டே இரண்டு நோய் கள்தான். ஒன்று, நெஞ்சுச் சளி, மற்றொன்று, வயிற்றுப்போக்கு. பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவா (protozoa) போன்ற கிருமிகள் குழந்தைகளைத் தாக்கும்போது வயிற்றுப்போக்கு ஏற்படும். இவற்றில் 'ரோட்டா’ வைரஸால் ஏற்படும் வயிற்றுப் போக்குதான் மிகவும் கடுமையானது. இது சாதாரண வயிற்றுப்போக்கு போல் இல்லாமல், சிறுநீர் போல மலம் போகும். தொடர்ந்து வாந்தி. காய்ச்சல் ஏற்படும். இதனால், குழந்தை சீக்கிரத்திலேயே நீர்ச்சத்தை இழந்துவிடும். வயிற்றுப்போக்கு நிற்பதற்குச் சில நாட்கள் ஆகும். காலத்தோடு இதைக் கவனிக்கத் தவறினால், குழந்தையின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கு மிக முக்கிய காரணம், ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்குதான்.  
நோய் பரவும் வழி:
சுகாதாரமின்மையே ரோட்டா வைரஸை வீட்டுக்கு அழைத்து வருகிறது. அசுத்தமான சூழலில் வளரும் குழந்தைகளும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ள குழந்தைகளும் இந்தக் கிருமிகளுக்கு எளிதான இலக்கு. சுகாதாரமற்ற உணவு, குடிநீர், பாதிக்கப்பட்ட நோயாளி உபயோகித்த பொருள்கள் ஆகியவை மூலமும் குழந்தைகளை ரோட்டா வைரஸ் தாக்குகிறது. மலம் கழித்துவிட்டு அல்லது மலம் கழித்த  குழந்தையை கழுவிவிட்டு கையை சோப் போட்டுக் கழுவாமல், குழந்தை யைக் கொஞ்சுவது ரோட்டா வைரஸைக் குஷிப்படுத்தி, குழந்தைகளைப் பாதிப்படையவைத்துவிடும்.
எப்படித் தவிர்ப்பது?
புட்டிப்பால் கொடுக்கும் முன் ஒவ்வொரு முறையும் ஃபீடிங் பாட்டில், நிப்பிள், பாட்டில் மூடி இந்த மூன்றையும் சுத்தமாகக் கழுவி, குறைந்தது ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைத்த பிறகே பயன்படுத்த வேண்டும். முறையாகக் கிருமி நீக்கம் செய்யாமல் குழந்தைக்குப் பால் கொடுப்பது, பிளாஸ்டிக் டப்பாக்கள் மூலம் பால் தருவது இவற்றைத் தவிர்க்கலாம். குழந்தையின் ரப்பர் நிப்பிள்கள் சுத்தமாக இருக்கிறதா என உறுதிசெய்வது அவசியம். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். புட்டிப்பால் மற்றும் பசும்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவாக இருப்பதால், இந்த வைரஸோடு எதிர்த்துப் போராட முடியாது.
தடுப்பு மருந்துகள்
ரோட்டா வைரஸை அழிப்பதற்கான மருந்துகள், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இந்த வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக மூன்று வகை தடுப்புச் சொட்டு மருந்துகள் உள்ளன. இதில், 'ஆர்வி1’ (Rv1) என்று அழைக்கப்படும் ரோட்டாரிக்ஸ் (Rotarix) ஒரு வகை. ரோட்டா வைரஸ் கிருமிகளில் பல துணை இனங்கள் உண்டு. இதில் 'ஜி1பி1ஏ’ (G1P1A1) என்ற கிருமியை வீரியம் இழக்கச்செய்து, இந்தத் தடுப்பு மருந்தைத் தயாரிக்கி றார்கள். இதில் அமினோ அமிலம், டெக்ஸ்ட்ரான், சார்பிட்டால், சுக்ரோஸ் என்று பல துணைப்பொருட்களையும் சேர்த்துக்கொள்கிறார்கள். இது பவுடராக இருக்கும். இதற்கென்றே உள்ள கரைப்பான் விட்டுக் கரைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான் இதைச் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்.
'ஆர்வி5’ (Rv5) என்று அழைக்கப்படும் ரோட்டாடெக் (RotaTeq) அடுத்த வகை. ரோட்டா வைரஸ் துணை இனங்களில் ஜி1, ஜி2, ஜி3, ஜி4, பி1ஏ என்று மொத்தம் ஐந்து வகைக் கிருமிகளை வீரியம் இழக்கச்செய்து இதைத் தயாரிக்கிறார்கள். இதில் சுக்ரோஸ், சோடியம் ஹைட்ராக் சைட், சோடியம் சிட்ரேட் ஆகியவற்றைத் துணைப் பொருட்களாகச் சேர்க்கின்றனர். இதை திரவ மருந்தாகவே தயாரிக்கிறார்கள். அதனால், அப்படியே இதை உபயோகிக்கலாம்.
புதிதாக 'இந்தியன் நியோநேட்டல் ரோட்டா வைரஸ் தடுப்புச் சொட்டு மருந்து’ (indian neonatal Rota Virus live Vaccine) என்ற சொட்டு மருந்தை ஒரு தனியார் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு 116 E (116 E) என்று இன்னொரு பெயரும் உண்டு. 'ஜி9பி’ (G9P) என்ற ரோட்டா வைரஸ் துணை இனத்தை வீரியம் இழக்கச்செய்து இதைத் தயாரிக்கிறார்கள்.
'ரோட்டாரிக்ஸ்’ எப்படிக் கொடுப்பது?
குழந்தைக்கு இரண்டரை மாதம் முடிந்ததும் முதல் தவணை மருந்தைக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கத் தவறினால், 15 வாரங்கள் முடிவதற்குள் முதல் தவணையைக் கொடுத்துவிட வேண்டும். இரண்டாம் தவணை மருந்தை மூன்றரை மாதங்கள் முடிந்ததும் கொடுக்க வேண்டும். தவறினால், குறைந்தது 8 மாதங்களுக்குள் இரண்டாம் தவணையைக் கொடுத்துவிட வேண்டும். இந்த இரு தவணைகளுக்கு இடையில் குறைந்தது ஒரு மாதம் இடைவெளி இருக்க வேண்டும். குழந்தைக்கு எட்டு மாதங்களுக்குப் பிறகு இதைக் கொடுக்கக் கூடாது. ஒருமுறை கொடுக்கப்படும் தடுப்பு மருந்தின் அளவு ஒரு மி.லி வாய் வழியாகக் கொடுக்கப்படும் தடுப்பு மருந்து இது.
'ரோட்டாடெக்’ கொடுக்கப்படும் முறை:
குழந்தைக்கு ஒன்றரை மாதம் முடிந்ததும் முதல் தவணை மருந்தைக் கொடுக்க வேண்டும். தவறினால் 15 வாரங்கள் முடிவதற்குள் கொடுத்துவிட வேண்டும். இரண்டாம் தவணையை இரண்டரை மாதங்கள் முடிந்ததும் கொடுக்க வேண்டும். இடையில் நான்கு வாரங்கள் இடைவெளி இருக்க வேண்டும். மூன்றாம் தவணை மருந்தை மூன்றரை மாதங்கள் முடிந்ததும் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கத் தவறினால், குறைந்தது எட்டு மாதங்களுக்குள் மூன்றாம் தவணையைக் கொடுத்துவிட வேண்டும்.
பொதுவாக, இந்தத் தடுப்பு மருந்துகளை தனியாகவோ, மற்ற தடுப்பூசிகள் போடப்படும் போதும் கொடுக்கலாம். இந்தியன் நியோநேட்டல் ரோட்டா வைரஸ் தடுப்புச் சொட்டு மருந்தை 'ரோட்டா டெக்’ மருந்தைக் கொடுப்பது போலவே கொடுக்க வேண்டும். இவற்றில் எந்தச் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டாலும் ஏழு நாட்களுக்குள் மிதமான வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி போன்றவை ஏற்படலாம். இதனால் குழந்தை சில மணி நேரத்துக்குத் தொடர்ந்து அழலாம். மிக அரிதாகச் சில குழந்தைகளுக்குக் 'குடல்சொருகு நோய்’ ஏற்படலாம்.
யாருக்குக் கொடுக்கக் கூடாது?
மருந்து 'அலர்ஜி’ உள்ள குழந்தைகளுக்கும் கடுமையான காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கும் இதைக் கொடுக்கக் கூடாது. மிதமான வயிற்றுப்போக்கு இருக்குமானால், இதைக் கொடுக்கத் தயங்க வேண்டாம். எய்ட்ஸ் நோய், 'சிட்’ (SCID) நோய், புற்றுநோய் பாதிப்புள்ள குழந்தைகள், ஏற்கனவே 'குடல்சொருகு’ நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்தை ரொம்ப காலம் சாப்பிட்டுவரும் குழந்தைகளுக்கும் இந்த மருந்தை டாக்டர்கள் தருவது இல்லை.
தடுப்பு மருந்தின் முக்கியத்துவம்
பொது சுகாதாரம் குறைவாக உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தை ஒவ்வொன்றும் ஒருமுறையாவது ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டிருக்கும். இந்தியாவில், வருடத்துக்கு 20 லட்சம் குழந்தைகள் இந்த வைரஸ் தாக்கி சிகிச்சை பெறுகிறார்கள். ஆண்டுக்கு 5 லட்சம் குழந்தைகள் இந்த வயிற்றுப்போக்கினால் மட்டுமே உயிரிழக்கிறார்கள். சுத்தமும் சுகாதாரமும் நன்றாகப் பேணப்படும் அமெரிக்கா போன்ற மேல்நாடுகளில்கூட இந்த வயிற்றுப்போக்கின் பாதிப்பு இருக்கிறது. அந்த நாடுகளில் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்தைக் கொடுக்கத் தொடங்கிய பிறகுதான், இந்த நோயின் தீவிரம் குறையத் தொடங்கியது. ஆக, இந்த நோயைத் தடுக்க வேண்டுமானால், சுத்தமும் சுகாதாரமும் மட்டும் போதாது; குழந்தைக்குத் தடுப்பு மருந்தும் கொடுக்க வேண்டியது அவசியம்.
வயிற்றுப்போக்கு - என்ன செய்வது?
குழந்தைக்கு வயிற்றுப்போக்கு இருக்கும்போது, நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காய்ச்சி, ஆறவைத்த சுத்தமான தண்ணீரை, அடிக்கடி சிறிது சிறிதாகக் கொடுக்கலாம். ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலை, கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூன் மூலம் கொடுக்கலாம். அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில், 20 கிராம் சர்க்கரையையும், 5 கிராம் உப்பையும் கலந்து, அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தரலாம். எலுமிச்சைச் சாறு, மோர், இளநீர், ஜவ்வரிசிக் கஞ்சித் தண்ணீர் போன்றவையும் உதவும். தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். அப்படியும் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு நிற்கவில்லை என்றால், டீஹைட்ரேட் பாதிப்பைத் தடுக்க, மருத்துவமனையில் உடனே அனுமதிக்க வேண்டும்.
மருந்தும் இலவசம்!
ரோட்டாரிக்ஸ், ரோட்டா டெக் என்ற இரண்டு சொட்டு மருந்துகளுமே அதிக விலை. ஒரு டோஸின் விலை 1,000 ரூபாயைத் தாண்டும். ஆனால், இந்தியன் நியோநேட்டல் சொட்டு மருந்தின் ஒரு டோஸ் விலை 80 ரூபாய்க்குள்தான் அடங்கும். எனவே, இந்தச் சொட்டு மருந்தைக் கூடிய சீக்கிரத்தில் நம் தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்க்க இருக்கிறார்கள். அதன் பிறகு அரசு மருத்துவமனைகளில் இது இலவசமாகவே கிடைக்கும்.

கால்சியம்

Photo

நெஞ்செரிச்சலை தடுக்க ஆறு கட்டளைகள் :-

நெஞ்செரிச்சலை தடுக்க ஆறு கட்டளைகள் :-

1.வயிறு முழுவதும் நிரம்புமாறு தின்றுவிட்டு படுக்கைக்கு செல்லாதே ..

2.மெதுவாக சாப்பிடு 

3.இறுக்கமான ஆடைகளை அணியாதே 

4.புகைப்பதை நிறுத்து 

5.ஆல்கஹால் தவிர்

6.தினமும் அதிகளவில் தண்ணீர் குடி .

குட்நைட் 'டிப்ஸ்'

குட்நைட் 'டிப்ஸ்' 
சாக்லெட் மற்றும் குளிர்பானங்களில் விழிப்பைத் தூண்டுகிற 'காஃபின்’ இருக்கிறது. எனவே, தூங்குவதற்கு முன்பு இவற்றைச் சாப்பிட வேண்டாம். 

இரவில் தூங்குவதற்கு முன்பாக தண்ணீர் அருந்தினால், நள்ளிரவில் அடிக்கடி டாய்லெட் போக வேண்டிய உந்துதல் ஏற்படும். இதனால், ஆழ்ந்த தூக்கம் தடைப்படும். எனவே, தூங்கச் செல்லும் முன் டாய்லெட் சென்றுவிட வேண்டும். 

இன்சோம்னியா பிரச்னை இருப்பவர்கள் தூங்குவதற்கு முன்பு அதிகமாகத் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.

தூக்கத்தில் பிரச்னை உள்ளவர்கள், பகலில் குட்டித் தூக்கம் போடுவதைத் தவிர்க்க வேண்டும்.
************************************
டிப்ஸ்

குறட்டைத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் மல்லாக்கப்படுப்பதைத் தவிர்த்து, ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால் குறட்டையின் அளவு குறையும். காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொள்வதும் குறட்டைப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி. அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லையால் அவதிப்படுவோருக்கு எளிதில், குறட்டைத் தொல்லையும் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, பிரச்னைகளுக்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் காரத்துக்கு தடா சொல்ல வேண்டும்!

முதுகு வலி வராமல் தடுக்க..

முதுகு வலி வராமல் தடுக்க..

நீண்ட நேரம் ஒரே இடத்தில், ஒரே பொஸிஷனில் அமர்ந்து வேலை செய்வதைத் தவிர்ப்பது, சேரில் அமர்ந்து வேலை செய்யும்போதும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போதும் 90 டிகிரி நேராக நிமிர்ந்து அமர்வது, குழந்தைகள் அதிக சுமை கொண்ட புத்தகப்பை தூக்குவதை தவிர்ப்பது, தினமும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா இவற்றில் ஏதாவது ஒன்று, வாரத்தில் இரண்டு நாட்கள் குறைந்தது 40 நிமிட நீச்சல் பயிற்சி, தினமும் சத்தான உணவு எடுத்துக்கொள்வது...

இந்தச் செயல்பாடுகள் எல்லாம் உங்கள் தண்டுவடத்துக்கு பாதிப்பு ஏதும் நேராமல் காக்கும். மேலும் முதுகுவலிக்கு மருத்துவ ஆலோசனை இன்றி நீங்களாகவே வலி நிவாரணி எடுத்துக்கொள்வது, பாதிப்பை அதிகப்படுத்துவதோடு, சிறுநீரகப் பிரச்னை வரை இழுத்துச் சென்றுவிடும். முதுகுவலிக்காக கடைகளில் கிடைக்கும் தைலங்கள், பாம் போன்றவற்றை பயன்படுத்துவது தற்காலிக தீர்வு மட்டுமே என்பதை மனதில் கொள்ளுங்கள்!''

நெல்லிக்காய் ஜூஸ்!

நெல்லிக்காய் ஜூஸ்!

நான்கு நெல்லிக்காயை வெந்நீரில் போட்டு துண்டுகளாக நறுக்கி, அதனுடன், சிறு துண்டு இஞ்சி, ஐஸ்கட்டிகளை சேர்த்து அரைக்கவும். தேன் சேர்த்து பருகவும்.

பலன்கள்: ஓர் ஆப்பிளின் பலன் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பார்கள். ஐந்து கிராம் நெல்லிக்காயில் இருக்கக்கூடிய வைட்டமின் சி சத்து, 200 கிராம் ஆப்பிளில் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். பொட்டாசியம், வைட்டமின் சி, தாது உப்புகள் ஓரளவு உள்ளன. குறைந்த அளவு கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் இருக்கின்றன.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அருந்த வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்ற அருமையான ஜூஸ் இது.
Photo: நெல்லிக்காய் ஜூஸ்!

நான்கு நெல்லிக்காயை வெந்நீரில் போட்டு துண்டுகளாக நறுக்கி, அதனுடன், சிறு துண்டு இஞ்சி, ஐஸ்கட்டிகளை சேர்த்து அரைக்கவும். தேன் சேர்த்து பருகவும்.

பலன்கள்: ஓர் ஆப்பிளின் பலன் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பார்கள். ஐந்து கிராம் நெல்லிக்காயில் இருக்கக்கூடிய வைட்டமின் சி சத்து, 200 கிராம் ஆப்பிளில் இருக்கிறது.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும். பொட்டாசியம், வைட்டமின் சி, தாது உப்புகள் ஓரளவு உள்ளன. குறைந்த அளவு கார்போஹைட்ரேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் இருக்கின்றன.

  சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அருந்த வேண்டாம். மற்றபடி எல்லோருக்கும் ஏற்ற அருமையான ஜூஸ் இது.

ரோஸ் மில்க்!

ரோஸ் மில்க்!

பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, ரோஸ் எசென்ஸ் (அ) பவுடர், சர்க்கரை சேர்க்கவும். பிறகு ஐஸ் கட்டிகளைச் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்: இதயத்துக்கு மிகவும் நல்லது. பால் சேர்ப்பதால் வைட்டமின் ஏ சத்து கிடைக்கும். புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம் இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.
Photo: ரோஸ் மில்க்!

பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, ரோஸ் எசென்ஸ் (அ) பவுடர், சர்க்கரை சேர்க்கவும். பிறகு ஐஸ் கட்டிகளைச் சேர்த்துப் பருகலாம்.

பலன்கள்:  இதயத்துக்கு மிகவும் நல்லது. பால் சேர்ப்பதால் வைட்டமின் ஏ சத்து கிடைக்கும். புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம் இருப்பதால் உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். கண்களுக்கு மிகவும் நல்லது.

  சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கவேண்டும்.

பாதாம் பால்!

பாதாம் பால்!

50 கிராம் பாதாமை மிதமான கொதிநீரில் ஊறவைத்துத் தோல் நீக்கி, மிக்சியில் விழுதாக அரைக்கவும். 250 மி.லி. பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, பாதாம் விழுது, சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். தேவையான சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். குளிரவைத்துப் பருகவும்.
பலன்கள்: புரதம், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் இருக்கின்றன. குறைந்த அளவு நார்ச்சத்துக் கிடைக்கிறது. பால் சேர்ப்பதால் சக்தி கிடைக்கும். காலை வேளையில் அருந்துவது நல்லது.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். வளரும் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், வயோதிகர்கள் அருந்தலாம்.
Photo: பாதாம் பால்!

50 கிராம் பாதாமை மிதமான கொதிநீரில் ஊறவைத்துத் தோல் நீக்கி, மிக்சியில் விழுதாக அரைக்கவும். 250 மி.லி. பாலை நன்றாகச் சுண்டக் காய்ச்சி, பாதாம் விழுது, சிறிது குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும். தேவையான சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவைக்கவும். குளிரவைத்துப் பருகவும்.
பலன்கள்: புரதம், நல்ல கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் இதில் இருக்கின்றன. குறைந்த அளவு நார்ச்சத்துக் கிடைக்கிறது. பால் சேர்ப்பதால் சக்தி கிடைக்கும். காலை வேளையில் அருந்துவது நல்லது.

 சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம். வளரும் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள், வயோதிகர்கள் அருந்தலாம்.