Thursday, July 24, 2014

தூக்கம் A to Z


‘நல்ல சிரிப்பும் ஆழ்ந்த உறக்கமுமே ஆரோக்கிய வாழ்க்கைக்கான அடிப்படை மருந்துகள்’ என்கிறது ஒரு வெளிநாட்டுப் பழமொழி. ஆனால், ஆரோக்கியத்துக்கு அடிப்படையான அந்த தூக்கத்துக்கே நம்மில் பலருக்கு மருந்து தேவையாக இருக்கிறது. 

தினசரி தூக்கத்துக்கு மாத்திரைகள் சாப்பிடுவது, போதை கலந்த இருமல் மருந்து குடிப்பது, கொஞ்சமாக மது எடுத்துக் கொள்வது, வயிறு முட்ட முழு உணவு உண்பது என ஒவ்வொரு வருக்கு ஒவ்வொரு ஆயுதம். வராத தூக்கத்தை எல்லாம் சேர்த்து வரவழைக்கிற இந்த எல்லா டெக்னிக்குமே, சில நாட்களில் செயலிழக்கும் என்பதை அறியாதவர்கள் இவர்கள். ஒன்றுக்கு நான்காக மாத்திரைகள் உள்ளே போனாலும், பாட்டில் பாட்டிலாக மருந்தோ, மதுவோ குடித்தாலும் ஒரு கட்டத்தில் தூக்கம் நிரந்தரமாகத் தொலையத் தொடங்கும்.

தொலைவது தூக்கம் மட்டுமல்ல... ஆரோக்கியமும்தான். வருடக் கணக்கில் உள்ளே போன மருந்தும் மதுவும் அதற்குள் தன் வேலைகளைக் காட்ட ஆரம்பித்ததன் விளைவாக உங்கள் ஆயுளும் கொஞ்சம் குறைந்திருக்கும். இப்படி எந்த ஆபத்தும் இல்லாமல் தூக்கத்தை வரவழைக்க வழியே இல்லையா? ‘‘ரோமா தெரபி எனப்படுகிற வாசனை சிகிச்சையில் இருக்கிறது தீர்வு’’ என்கிறார் அழகுக்கலை நிபுணரும் அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். வாசனைக்கும் தூக்கத்துக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்விக்கு அவர் சொல்கிற தகவல்கள் ஆச்சரியமளிக்கின்றன.

‘‘தூக்கமின்மைக்கான முக்கிய காரணம் பட படப்பும் மனப்பதற்றமும். பள்ளிக்கூடச் சூழல், வேலையிடம், பொருளாதார சிக்கல், உறவுகளுக்கு இடையிலான பிரச்னைகள், உணர்வுரீதியான பிரச்னைகள், குழந்தைகள் சந்திக்கிற பாலியல் அத்துமீறல், அதைத் தொடர்ந்த பயம், திடீர் திடீரென மாறும் வானிலை, வேறு பிரச்னைகளுக்கு எடுத்துக்கொள்கிற மருந்துகளின் பக்க விளைவுகள், அதிக காபி, டீ குடிக்கிற பழக்கம், சுவாசக் கோளாறு கள், உடலில் ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மை குறைவு... இப்படி தூக்கமின்மையின் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம்.

நல்ல தூக்கத்தை வர வழைக்க மனமும் உடலும் ஒத்துழைக்க வேண்டும். மனதை அமைதிப்படுத்தும் இனிமையான சூழல், நல்ல இசைக்கு இணையாக நல்ல நறுமணங்களுக்கும் தூக்கத்தை வரவழைக்கிற குணம் உள்ளதை நிரூபித்திருக்கிறது அறிவியல். எத்தனையோ கவலைகளுடனும் பிரச்னைகளுடனும் கோயிலுக்குள்ளோ, தர்காவினுள்ளோ, சர்ச் உள்ளேயோ நுழைகிறோம். உள்ளே போனதும் அங்கே நம்மை ஈர்க்கிற பூ வாசமும், ஊதுபத்தி, சந்தனம், அத்தர் வாசமும் நம் கவலைகளை எல்லாம் மறக்கச் செய்து அமைதிப்படுத்துவதில்லையா? அதே மாதிரிதான் அரோமா தெரபியும். ஒரு நல்ல வாசனையை நுகரும் போது, மூக்கிலுள்ள சிலியா என்கிற ரோமங்கள்,

அதை உள்வாங்கி, ‘ஆல்ஃபேக்டரி சிஸ்டம்’ மூலம் மூளைக்கு அனுப்பும். மூளையிலுள்ள லிம்பிக் சிஸ்டம், அதை கிரகித்ததும் உடலுக்குக் கட்டளையிடும். அந்த வாசனையின் தன்மையைப் பொறுத்து உடலும், மனதும் உற்சாகமாகவோ, உறக்கத்துக்குத் தயாராகவோ செய்கிறது. தூக்கத்தை வரவழைப்பதில் அரோமா தெரபி செய்கிற அற்புதங்கள் எக்கச்சக்கம். தூக்கமின்மையால் தவிக்கிறவர்கள் அரோமாதெரபியை 3 வழிகளில் முயற்சி செய்யலாம்.

ச்டிஃப்யூசர் எனப்படுகிற கருவியின் மூலம், அரோமா தெரபியின் குணத்தை புகையாக வெளிவரச் செய்து பலன் பெறலாம். ச்அரோமாதெரபி ஆயில் கலந்த ரூம் ஸ்பிரே உபயோகிக்கலாம். ச்குளிக்கிற தண்ணீரில் அரோமா ஆயில்களை கலந்தும் தூக்கத்தைத் தழுவலாம். உகுழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஒரு வகையான காம்பினேஷனிலும், மற்றவர்களுக்கு வேறு காம்பினேஷனிலும் இந்த சிகிச்சை மாறுபடும்.

உகுழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ரோஸ், லேவண்டர், ஜாஸ்மின், ஜெரேனியம் மற்றும் ஸ்பைகினார்ட் கலவை. உநடுத்தர வயதினருக்கு சைப்ரஸ், ஸ்பைகினார்ட், நெரோலி, லேவண்டர் மற்றும் ரோஸ் ஓட்டோ கலவை. உடிஃப்யூசர் உபயோகிப்பது மிக அருமையான பலன் தரும். குடுவை போன்ற அந்தக் கருவியில் அடியில் அரோமா தெரபி மெழுகை ஏற்றி வைத்து விட்டு, மேல் பாகத்தில் தண்ணீர் விட்டு, அதில் இந்த எண்ணெய் கலவையிலிருந்து 5 துளிகள் விட வேண்டும். மெழுகுச் சூட்டில் தண்ணீர் சூடாகி, அந்தச் சூடு எண்ணெயில் பட்டு, புகை அறை முழுக்க பரவும். அந்த வாசனையில் உங்களையும் அறியாமல் ஆழ்ந்த நித்திரை வரும்.

மேலே சொன்ன எண்ணெய் வகைகளில் தலா 30 மி.லி. எடுத்து ஒன்றாகக் கலந்து கொள்ளவும். 1 பக்கெட் தண்ணீரில் இந்தக் கலவையிலிருந்து 5 துளிகள் விட்டுக் குளித்து விட்டுப் படுத்தாலும் சுகமான நித்திரை நிச்சயம். உஅதே எண்ணெய் கலவையை 100 மி.லி. தண்ணீரில் 50 சொட்டு என்கிற கணக்கில் கலந்து, படுக்கையறையில் ரூம் ஸ்பிரேயாக அடித்து விட்டுத் தூங்கினாலும் சுகமான தூக்கம் வரும்.

உஅடம் பிடிக்கிற சில குழந்தைகள் அத்தனை சுலபத்தில் தூங்க மாட்டார்கள். அவர்களுக்கு இந்த எண்ணெய் கலவையைத் தொட்டு, இரண்டு காதுகளுக்கும் பின்னாடி லேசாகத் தடவினால், 10 முதல் 15 வரை எண்ணி முடிப்பதற்குள் தூங்கச் செல்வதைப் பார்க்கலாம்.

அரோமா தெரபியின் மூலம் சாத்தியப்படுகிற இந்தத் தூக்கம் காலப் போக்கில் உங்களுக்கு நிரந்தரமான நித்திரையைக் கொடுக்கும். பக்க விளைவுகள் பற்றிய பயமில்லை. தவிர காலையில் புத்துணர்வுடன் விழிப்பதும் இதில் மட்டுமே சாத்தியம்...’’

தங்கமான சேமிப்பு!

Gold savings!
மழை பொழியும்போது
நாம் செய்ய வேண்டிய
முக்கியமான விஷயம்...
அதை பொழிய விடுவதே!


- ஹென்றி வேட்ஸ்வொர்த் லாங்ஃபெலோ


நாம் செய்ய வேண்டிய அதிமுக்கியமான சேமிப்பு ஒன்று உண்டு. இது நம் வீட்டு இரும்பு பீரோக்களிலுள்ள சேமிப்புகளையும் நம் வங்கி சேமிப்பு  களையும் காட்டிலும் கூடுதல் மதிப்புடையது. ஆம்... மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அமைப்பது குறித்து தான் பேசப் போகிறோம். ஏற்கனவே  இந்த அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழைய வீடுகளில் அவ்வப்போது தேவைப்படும் பராமரிப்புப் பணிகளைச் செவ்வனே செய்து  கொள்ளுங்கள். புதிய வீடு எனில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியம்!

மழை நீர் சேகரிப்பு... எப்படிச் செய்வது?


கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து மழைநீரை தரைப்பகுதிக்கு கொண்டு செல்ல மழைநீர் வடிகுழாயினை அமைக்க வேண்டும். வடிகுழாய்க்கு அல்லது கட்டிடங்களின் அருகில் தரைப்பகுதியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் ஆழத்துக்கு கசிவு நீர்க்குழி ஒன்றை  செங்கல் கொண்டு கட்ட வேண்டும். அதன் பின் குழியை கூழாங்கற்கள் அல்லது கருங்கல் ஜல்லி கொண்டு1 மீட்டர் ஆழத்துக்கு நிரப்ப வேண்டும்.மொட்டை மாடியில் இருந்து வரும் மழைநீரை வடிகுழாய் மூலம் கசிவு நீர் குழியின் மேற்பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும். இதுபோன்று  முறையாக கசிவு நீர்குழி அமைத்தால் மொட்டை மாடியில் விழும் மழை நீரை நேரடியாக பூமிக்குள் ஊறச் செய்யலாம். 

கசிவு நீர்குழியை சிமென்ட் மூடி கொண்டு மூட வேண்டும். கட்டிடம் அமைந்துள்ள இடம் களிமண் பகுதியாக இருந்தால் உரிய முறையில் மழைநீர்  சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். நீரூட்டல் கிணற்றை அனைத்து வகை பகுதிகளிலும் அமைத்திடலாம். கட்டிட வளாகத்தில்  பயன்பாட்டில் இருக்கும் திறந்தவெளி கிணற்றையும் மழைநீர் சேகரிக்க பயன்படுத்தலாம். கட்டிடத்தில் இருக்கும் மழைநீர் வடிகுழாய்களை இணைத்து  கிணறு இருக்கும் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். வடி கட்டும் தொட்டி அமைத்தால், மொட்டை மாடியில் விழும் மழைநீரை வடிகுழாய் மூலம்  பயன்பாட்டுக் கிணற்றில் செலுத்தி மழைநீரை ஊறச் செய்யலாம்.பெரும்பாலும் நாம் காம்பவுண்டின் உள்ளே உள்ள மண்தரைப் பகுதிகளை சிமென்ட்  தளங்களால் மூடிவிடுகிறோம். இதனால் என்ன பிரச்னை? மழைநீர் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படுகிறது. 

அதோடு, வீட்டைச் சுற்றி மழைநீர் உறிஞ்சப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைந்துவிடுகிறது. சிலர் தங்களது வீடுகளின் தாழ்வான பகுதிகளில்  ஆழமான தொட்டி களை அமைத்து சரியான வடிகட்டுதலுடன் மழைநீரைச் சேமிக்கின்றனர். குஜராத்தில் உள்ள காந்தியின் பூர்வீக வீட்டில் கூட  இத்தகைய அமைப்பு இருந்ததாம். இது ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையைப் போக்கியிருக்கிறது. நம் பகுதிகளில் உள்ள குடிநீர் வாரிய  அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதற்கான வழிமுறைகளை அறியலாம். சென்னைக் குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அளித்த தகவல் 
இது... 

சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து வெளியேறும் கழிவுநீரை என்ன செய்யலாம்? (Grey water disposal)

பெருநகரங்களில் சமையலறை மற்றும் குளியலறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர்க்கான குழாய்கள் நேரடியாக சாக்கடைகளுடன் / பாதாளச்  சாக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. கிராமப்புறங்களிலோ, சிறுநகரங்களிலோ பக்கவாட்டுகளில் மரங்களுடன் கூடிய வீடு உங்களுடையது  என்றால்?

வீட்டிலுள்ள மரங்களுக்கு சற்றே அருகாமையில் உறிஞ்சுத் தொட்டிகள் அமைத்து உங்களது வீட்டு கழிவுநீரை அதனுள் விட்டுக் கொள்ளலாம்.  இதனால் தெருவில் ஓடும்சாக்கடைகளையும் அதனால் ஏற்படும் கொசுத்தொல்லை மற்றும் சுகாதாரக் கேடுகளையும் தவிர்க்க முடியும்.  அது  மட்டுமல்ல... மரங்களுக்கான தண்ணீர் தேவையையும் இவை சமன் செய்கின்றன... நிலத்தடி நீரின் மட்டமும் இதனால் ஓரளவுக்கு அதிகரிக்கும்  வாய்ப்புண்டு. செப்டிக் டாங்குகளிலிருந்து வெளியேறும் வடிகட்டப்பட்ட நீருக்கான ‘லீச் பிட்’டுகளை (leach pits) அமைப்பது போன்றே  இவ்வுறிஞ்சு குழாய்களையும் அமைக்கலாம்.

உறிஞ்சுத் தொட்டிகளை அமைப்பது எப்படி?


இக்குழிகள் சுமார் ஆறடி ஆழம் வரை இருக்க வேண்டும். அளவில் சற்றே சிறியதான கிணற்று உறைகளை இத்தொட்டிகளை அமைக்க பயன்படுத்தலாம். கிணற்று உறைகள் வேண்டாமெனில்.  செங்கல் கொண்டு தொட்டிகளாகவே கட்டிக் கொள்ளலாம். இப்போது இத்தொட்டியை ஓரளவுக்கு  நிரப்ப வேண்டும். 

எப்படி நிரப்புவது?

அடிப்பாகத்தில் மணல்... அதன் மேல் மணலைக் காட்டிலும் சற்றே அளவில் கூடுதலான ஜல்லி, சிறு ஜல்லியின் மேலே அதனைக் காட்டிலும்
பருமனான ஜல்லி என நிரப்பிக்கொண்டே வரவேண்டும். மேல் அடுக்கில் சுருக்கியையோ (செங்கல் ஜல்லி), அளவில் பெரியதான கற்களையோ  போட்டு, குழியை மூடி விட வேண்டும். குழியை மூடுவதற்கு முன்னரே, கழிவுநீர் குழாய்கள் இந்த உறிஞ்சுத் தொட்டிகளுடன் இணைக்கப்பட்டிருத்தல்  வேண்டும். அவ்வளவுதான்... உறிஞ்சுத் தொட்டி ரெடி. இனி நம் வீட்டிலிருந்து வெளியேறும் கழிவுநீர் வீணாகப் போகாது. மறுசுழற்சி முறையில் நம்  மரங்களை வாழ வைக்கும் இந்த கழிவுநீர். எனினும் கடுமையான நச்சுத்தன்மை நிரம்பிய ஆசிட்கள் முதலியவற்றை குளியலறையில்  பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தேவை ஏற்படுகையில் இத்தொட்டியில் உள்ள பழைய கற்கள் மற்றும் மணலை அகற்றிவிட்டு புதுமணல்  மற்றும் புது கற்களைப் போட்டுப் பராமரித்தல் வேண்டும்.

பாதுகாவலர் அறை


அளவில் பெரியதான வீடுகளைக் கட்டுகிறீர்கள்... கூடவே வாயில்காப்பாளரையும்   நியமனம் செய்கிறீர்கள்... அவர் அமர்ந்து கொள்ளவும் சிறிது  ஓய்வெடுக்கவும் தனது பொருட்களை வைக்கவும் சிறிய அறை ஒன்று வேண்டுமே... இதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு ஆயத்த வடிவில்  கிடைப்பவையே பாதுகாவலர் அறைகள் prefabricated security cabins. இவை மரம், ஸிசிசி சுவர்கள் மற்றும் றிசிசி இரும்பு  வகைகளில் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றை எந்த இடத்திலும் எளிதாக நிறுவிக் கொள்ளஇயலும். இடம் மாற்றுவதும் எளிது. செங்கல்  கட்டிடங்களைக் காட்டிலும் கூடுதல் வேகத்துடன் நிறுவிக்கொள்ள இயலும். பார்வைக்கு அழகாகவும் இருக்கும். பெரிய பட்ஜெட் வீடாக இருந்தால் இது  கட்டாயத் தேவை. இத்தகைய ரெடிமேட் அறைகளில் விருப்பம் இல்லை என்றால், மதிற்சுவர் கட்டும்போதே பிரதான வாயிலுடன் ஒட்டியே ஒரு  சிறிய அறையை அமைக்கலாம். 

துளசி மாடம்
மதிற்சுவர்களின் உள்ளே வீட்டுக்கு வெளியே வரும் இன்னொரு அமைப்பு துளசி மாடம். நம் தனிப்பட்ட விருப்புகளைச் சார்ந்து துளசி மாடம்  அமைத்துக் கொள்ளலாம். இது அழகியல்,ஆன்மிகம், மன அமைதி, ஆரோக்கியம் என பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. மாடத்தை சுற்றி  வருதல் நாளமில்லா சுரப்பிகளுக்கான ஒரு சிறந்த பயிற்சி என்கிறார்கள். அதோடு, அதிகாலைக் குளியலும் கட்டாயமாகிறது. தினசரி தொழுதல் ஒரு  ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்க வாய்ப்பளிக்கிறது. துளசிச்செடியின் மருத்துவ குணங்களும் இதில் அடக்கம். அழகுக்கு அழகு... அமைதிக்கு  அமைதி... வீடு கட்டும்போதே மாடத்தையும் கட்டிக் கொள்ளலாம்... அல்லது ஆயத்த நிலையில் கிடைக்கும் துளசி மாடம் வாங்கி பொருத்திக்  கொள்ளலாம்.

புற்றுநோய்க்கு முள்ளு சீதா!

Annona muricata  cancer !
பெயர்: முள்ளு சீதா 
தாவரவியல் பெயர்: Annona muricata
மற்ற பெயர்கள்: Graviola, Soursop, Brazilian Paw Paw, Guanabanaª

மாற்று மருத்துவத்தில் மக்கள் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன் பயனுள்ள பல தாவரங்களும் வைத்திய முறைகளும் பிரபலமாகி வருகின்றன.  சமீபத்திய மிகப் பிரபலம் - ‘ஃக்ரவயோலா’ என்று அழைக்கப்படும் முள்ளு சீதா! அமேசான் காடுகளில் வளரும் சிறுமரம் இது. இம்மரத்தை அங்குள்ள  பழங்குடியினர் பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உபயோகித்தனர். 

இதன் பட்டை, இலை, பழம் என எல்லாமே நோய்களை குணமாக்க உதவுகிறது. பழங்கள் உற்பத்தி குறைவு என்பதாலும் இலைகளிலும் நோய் தீர்க்கும்  குணம் இருப்பதால் இதனை பதப்படுத்தி ‘டீ’ போன்று அருந்துகின்றனர். இது பல நாடுகளில் வியாபார ரீதியாக விற்பனையில் உள்ளது. ஒரு  பன்னாட்டு நிறுவனம் மில்லியன் டாலர் பொருட்செலவு செய்து புற்றுநோய்க்கு இப்பழத்தின் மூலம் தீர்வு கண்டதாகவும், பின் காப்புரிமை பெற  முடியாததால் ஆய்வை விரிவுபடுத்தாமல் கைவிட்டதாகவும் ஆய்வு செய்த விஞ்ஞானிகளில் ஒருவர் இந்த ரகசியத்தை வெளியுலகிற்கு  அறிவித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. 

கர்ப்ப காலத்தில் அதிகம் உண்ணக் கூடாது என்றும் சொல்வதுண்டு. தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள மருத்துவ மரமென்றாலும், சிலர் ‘இதை  அதிகம் சாப்பிடக்கூடாது’ என்றும் ‘பக்க விளைவுகள் உண்டு’ என்றும் கூறுகிறார்கள். இருப்பினும் நவீன மருத்துவ முறையில் ‘கீமோதெரபி’  சிகிச்சைக்குப் பின் ஏற்படுகிற உடனடி பக்க விளைவுகள் மற்றும் செலவு போன்றவற்றைக் கணக்கிட்டால் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ள  ‘முள்ளு சீதா’ நன்று  என்றே தோன்றுகிறது.

இப்போதைய உணவுப் பழக்கம், அளவுக்கு மீறிய ரசாயன மருந்து மற்றும் உரங்கள் ஆகியவை புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. இதனை  குறைப்பதற்கு மாற்று மருத்துவத்தில் வழி உண்டு என்பதை பரம்பரை ஞானமும் விஞ்ஞானமும் சொல்கிறது. எடுத்துக் கொள்வதும் விட்டுவிடுவதும்  அவரவர் கையில் உள்ளது!

(விதை போடுவோம்)

தொகுப்பு: வர்ஷா

அழகு... அவசியம்!

Beauty ... is necessary!
இனிய இல்லம்: தமிழினி

தோட்டமென்பது இயற்கைத் தூரிகையால் வரையப்பட்ட லாண்ட்ஸ்கேப்பிங் ஓவியமே! - வில்லியம் கென்ட்

‘‘சார்... நல்லாயிருக்குறீங்களா? நம்ம செடிகள்லாம் எப்படி இருக்குதுங்க? நல்லா கவனிச்சிக்கோங்க சார்...’’ - க்ரெஷ்ஷில் குழந்தைகளை விட்டுவிட்டுப்போன தகப்பனைப் போலவே, தான் நட்டுவிட்டுப்போன செடிகளைக் குறித்து வாடிக்கையாளர்களிடம் இப்படித்தான் விசாரிக்கிறார், கரூரில் ‘கிரீன் லேண்ட் கார்டன்’ லாண்ட்ஸ்கேப்பிங் தோட்டக்கலை நிறுவனத்தை நடத்துகிற மணிமாறன். இவர் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் ‘டிப்ளமோ இன் லாண்ட்ஸ்கேப்பிங்’ படித்திருக்கிறார். உலகின் பார்வையில் மட்டுமே அவர் ஒரு லாண்ட்ஸ்கேப்பிஸ்ட்... அவர் உருவாக்கும் தோட்டங்களைப் பொறுத்த வரை அவர் ஒரு தாயுமானவன்... தந்தையுமானவன்! அத்தகைய ஒரு உணர்வு பந்தத்தையே அவர் செடிகளுடன் உருவாக்கி வைத்திருக்கிறார்! அவரோடு ஓர் உரையாடல்...

‘‘என்னது செடிகளைக் குறித்து நலம் விசாரிப்பீங்களா?’’


‘‘ஆமாங்க... வீட்டின் உள்ளே உள்ள உயிர்களைப் போலவே, இவங்க வீட்டின் வெளியே உள்ள உயிர்கள்னுதான் நான் நெனைப்பேனுங்க...’’ 

‘‘தோட்டக்கலையில் எத்தனை வகை?’’


‘‘நிறைய வகைகள், நிறைய பாணிகள் இருந்தாலும் பொதுவாக ஃபார்மல் கார்டனிங், இன்ஃபார்மல் கார்டனிங் என அடக்கி விடலாம்... 500 சதுரடி இடம் இருக்குதுன்னு வச்சிக்குவோம். அதை இரு 250 அடிகளாக பிரித்துக்கொண்டு, எதிரெதிராக ஒரே வகைச் செடிகளை வைப்பதை ஃபார்மல் கார்டனிங்னு சொல்றோம். உதாரணத்துக்கு... நடைபாதையின் அந்தப்பக்கம் ஒரு ‘ராயல் பாம்’ நட்டிருந்தால், இந்தப் பக்கமும் ஒரு ராயல் பாம் நடுவது... வலது பக்கம் ஒரு குரோட்டன்ஸ் செடி எனில், இடது பக்கமும் அதே வகை குரோட்டன்ஸ் நடுவது. தோட்டத்தில் ஒரு ஒத்திசைவை - ஒரு ஒழுங்கைக் கொண்டு வருவதே இதன் அடிப்படை. இந்த முறையை பெரும்பாலும் வணிக கட்டிடங்களிலேயே காண முடிகிறது. இருந்தாலும், ‘சிறிய நடைபாதையின் இருமருங்கும் மட்டுமே செடிகள் வைக்க இடமிருக்கு’ என்பவர்கள் கூட இதைக் கடைப்பிடிக்கலாம். இதில் செடிகள் அனைத்தும் சமதளத்திலேயே நடப்படுகின்றன...’’

‘‘இன்ஃபார்மல் கார்டனிங் என்றால் என்ன?’’


‘‘இன்ஃபார்மல் கார்டனிங் என்பது ஃபார்மல் கார்டனிங்கிலிருந்து முற்றிலுமாக மாறுபடுகிறது. ஃபார்மல் கார்டனிங்குக்கு சில இலக்கணங்கள் உண்டு. ஆனால், எந்த இலக்கணங்களுக்கும் கற்பனை வரையறைகளுக்கும் உட்படாத ஒரு தோட்ட வடிவமைப்பே இந்த இன்ஃபார்மல் கார்டனிங். மேடுகள், பள்ளங்கள், சமதளங்கள் எனப் பலவகையான நில அமைப்பு வகைகளையும், கூழாங்கற்கள், கற்சிற்பங்கள், ஊஞ்சல்கள், சிறு ஓடைகள், நீரூற்றுகள், சிறு பாலங்கள், இருக்கைகள், பெர்கோலாக்கள், குடில்கள் உள்பட பல வகை பொருட்கள் மற்றும் அமைப்புகளுடனும், கூடவே கட்டிடக்கலை அம்சங்களுடன் ரசனையான கலவையாக அமைப்பதுதான் இன்ஃபார்மல் தோட்டக்கலை! இவை ஷ்ணீtமீக்ஷீ தீஷீபீவீமீs (நீர்நிலைகள்) மற்றும்   க்ஷீஷீநீளீ ணீஸீபீ ஜீமீதீதீறீமீ தீமீபீகளையும் உள்ளடக்கியவை. தண்ணீர் சதா சலசலவென ஓடிக்கொண்டே இருக்கும் இத்தகைய தோட்ட அமைப்புகளில்!’’

‘‘நாம் ஏற்கனவே அறிந்த தோட்டக்கலைக்கும் லாண்ட்ஸ்கேப்பிங்குக்கும் என்ன வித்தியாசம்?’’


‘‘இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தோட்டக்கலை என்பது செடி வளர்ப்பதும் தண்ணீர் ஊற்றுவதும் பராமரிப்பதும் மட்டுமே. லாண்ட்ஸ்கேப்பிங் என்பது சிவில் கான்செப்ட்களையும் உள்ளடக்கியது. நம் வீட்டின் தன்மையை மனதில் கொண்டே லாண்ட்ஸ்கேப்பிங் செய்யப்படுகிறது. செடிகளையும் மரங்களையும் மட்டுமே கொண்டிருக்காமல், பலவகையான வடிவமைப்புகளையும் பொருட்களின் பயன்பாட்டையும் கொண்டது இது. செடிகளை மட்டுமன்றி பொருட்களையும் விதைத்து விளைச்சலெடுக்கும் ஒரு அற்புதமே இந்த லாண்ட்ஸ் கேப்பிங்!’’

‘‘ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் அல்லது பழைய வீடுகளின் தோட்டங்களில் லாண்ட்ஸ்கேப்பிங் என்ன வகையான மாற்றங்களை கொண்டு வருகிறது?’’


‘‘சிவில் கான்செப்ட்டுடன் கூடிய இத்தகைய தோட்ட அமைப்பினால் நம் வீட்டுக்கு ஒரு ஃபேஸ்லிஃப்ட்டும் புத்துணர்வும் கிடைக்கிறது. ஒரு வீட்டின் பார்வையை லாண்ட்ஸ்கேப்பிங் அப்படியே முழுவதுமாக புரட்டிப் போட்டு விடுவதும் உண்டு. வீடுகளில் உள்ள சில குறைகளையும் மதிற்சுவர் மற்றும் வீடுகளில் உள்ள வண்ணங்களின் குறைபாடுகளையும் கூட இது செப்பனிட்டுவிடும். போர்டிகோ முதலிய இடங்களை மேலும் அழகு படுத்திக் காட்டுவதோடு, சிறிய வீடுகளை மிகப் பெரிய வீடுகளாகக் காட்சிப்படுத்தவும் இதனால் முடியும். மொத்தத்தில், நம் கட்டிடத்தில் உள்ள சில தவறுகளைக்கூட லாண்ட்ஸ்கேப்பிங் யுக்திகள் கொண்டு மறைக்க இயலும்...’’  

‘‘ஒரு கன்னி நிலத்தை லாண்ட்ஸ்கேப்பிங் செய்யும் முன் கவனத்தில் கொள்ள வேண்டி யவை?’’


‘‘எந்த வகையான தோட்டம் எனினும், நாம் 4 விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 1. நிலம் 2. மண் 3. நீர்  4. தட்பவெப்ப நிலை.
இவை அனைத்தும் மிகச்சரியாக அமைந்திருப்பின் மிகச்சிறந்த தோட்டத்தை அமைக்க முடியும். தோட்டம் அமைப்பதற்கான போதிய இடவசதி, நீரின்   ஜீலீ யீணீநீtஷீக்ஷீ 7.5 - 8.5க்குள் இருத்தல், சிவப்பு மண் கொண்டிருத்தல், செடிகளுக்கு உகந்த தட்ப வெப்பநிலை... இவை அமைந்தால் மிக ரம்மியமான தோட்டத்தை இயற்கையாகவே உருவாக்கிட முடியும். இல்லையென்றாலும், நமக்குத் தேவையான பொருட்களை நிலத்தில் கொட்டி அத்தகைய நிலத்தன்மையை செயற்கையாக உருவாக்கிட முடியும். நம்மால் முடியவில்லையா? ஒரு லாண்ட்ஸ் கேப்பிஸ்ட்டிடம் பணியை ஒப்படைத்தால், மிக எளிதாக மண்தன்மையை sணீஸீபீ பீuனீஜீவீஸீரீ செய்து மாற்றிக் கொடுத்து விடுவார்கள்...

மண் 

செடி நன்றாக வளர்வதற்கு மண்ணே அடிப்படை. நம் நிலத்து மண் வளமற்று இருப்பின், 2 பகுதி சிவப்பு மண்ணுக்கு ஒரு பகுதி துகள் மணல் என்கிற விகிதத்தில் மண் கலந்துகொண்டு, கூடவே மக்கிய குப்பை, மண்புழு உரம் (மண்புழு உரம் பயன்படுத்துகையில் களை அதிகம் வராது) போன்றவற்றையும் கலந்து கொள்ள வேண்டும். மக்கிய உரம் கிடைக்காதவர்கள் தனியார் நிறுவனங்கள் விற்கும் இது போன்ற இயற்கை உரங்களையும் வாங்கிப் பயன்படுத்தலாம். மண்ணை நன்றாகக் கொத்திவிட்டு, அதன்பின் அதனை நன்றாக கிளறிவிட்டு, நன்கு இளகவிட்டு அதன்பின் 
சமப்படுத்திக் கொள்ளலாம். 

நிலம்

போதிய இடவசதி இல்லை என கவலைப்பட வேண்டாம். இருக்கும் இடத்திலேயே மிக அழகாக லாண்ட்ஸ்கேப்பிங் செய்ய முடியும். 6 இன்ச் அகலம் கொண்ட நிலம் இருந்தால் கூட போதும்... அதிலும் சில வகை செடிகளை வளர்த்து விட முடியும். செடி நடுவதற்கு ஒரு அடி இடம் கூட இல்லையென்றாலும் பரவாயில்லை... மதிற்சுவர்களில் செடிகளுக்கான தொட்டிகளை (ஜீறீணீஸீtமீக்ஷீ தீஷீஜ்மீs) தொங்கவிட்டு செடிகளை வளர்க்கலாம்!

தட்பவெப்ப நிலை 


ரெட் வாக்ஸ் சீலிங் பாம்ஸ் எனும் ஒருவகைச் செடி பெங்களூரு மற்றும் கோவை பருவநிலைக்கு மட்டுமே நன்கு வளரும். மற்ற சில ஊர்களில் என்னதான் பராமரித்தாலும் வராது. அதனால் செடிகளை ‘நம்ம ஊரு’ தட்பவெப்பநிலைக்கு ஏற்றாற்போல தேர்வு செய்வது அவசியம். 

நீர்

நமது வீட்டு தீஷீக்ஷீமீலிருந்து  கிடைக்கும் நீர் அதிக உப்புத் தன்மையுடன் இருந்தால், உப்பு நீரில் வளராத சில வகை செடிகளை தவிர்த்து விடலாம். மாறாக நிறைய தொட்டிச் செடிகளை வளர்த்துக் கொள்ளலாம்.

(பழகுவோம்... படைப்போம்!)

மறைந்து கிடக்கும் மர்மம்!

Latent mystery!
ஹோம் கார்டன்வீட்டுத்தோட்டம் அமைக்கும் முன் சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் மாசு மற்றும் பாதுகாப்பு, நாம் வளர்க்கவிருக்கும் செடிகளின் நீர் தேவை, வறட்சி தாங்கி வளரும் திறன், எளிய பராமரிப்பு, அதன் சத்து மற்றும் சந்தை மதிப்பு, வளர்க்கப்படும் காலம் என நீண்ட பட்டியலிடலாம். இவற்றுள் முக்கியமானது செடிகளின் நீர் தேவை! இதுபற்றி விரிவாக விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட்.

நீர் மேலாண்மை மூலம் நீர் தேவையை சிறப்பாக நிர்வாகம் செய்யலாம்.


1. மழை நீர் சேமிப்பு
    மழைக் காலங்களில் கிடைக்கின்ற நீரைச் சேமித்து, பின் செடிகளுக்குத் தருவது. மழைநீர் செடிகளுக்கு உகந்ததே.

2. சொட்டுநீர் பாசனம்
    மிகக் குறைந்த செலவில் தெளிப்பு நீர் அல்லது சொட்டுநீர் பாசனக் கருவிகளை அமைப்பதன் மூலம் நீர் சிக்கனத்தை நடைமுறைப்படுத்தலாம். வேனிற்காலங்களில் ஒரு சிறிய குழாயை வேரின் அருகில் அமைத்து, இவற்றில் தண்ணீர் ஊற்றினால் வெகுவாக நீர் தேவையை குறைக்க இயலும்.

3. மூடாக்கு இடுதல்
    காய்ந்த இலைச்சருகுகளை மண்ணின் மேல் இடுவதால், நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டு மண்ணின் ஈரம் காக்கப்படுவதால், செடிகள் நன்கு வளரும். அவை மக்கும் போது உரமாக மாறிவிடும்.

4. வறட்சியை தாங்கி வளரும் தாவரங்களைத் தேர்ந்தெடுத்தல்
    பொதுவாக நீர் தேவை குறைந்த அல்லது வறட்சி தாங்கி வளரும் முருங்கை, தவசிக்கீரை, லச்சை கெட்ட கீரை, கறிவேப்பிலை, அகத்தி, தானியக்கீரை, சிறுதானியங்கள் போன்றவற்றை வளர்க்கும்போது நீர் தேவை சற்று குறைவதோடு பராமரிப்பும் எளிமையாகிறது.

5. காய்ச்சலும் பாய்ச்சலும் முறை
    நகரங்களில் நீர் பற்றாக்குறை இருக்கும் போது, கோடை காலத்தில் செடிகளுக்கு காய்ச்சலும் பாய்ச்சலும் முறையில் நீர் தந்தால் சிக்கனம் என்பதோடு, நமக்குப் பயன் தரும் செடிகளும் ஆரோக்கியமாக இருக்கும். அச்செடிகளோடு அதிகமாக நீரை விரும்பும் மென்மையான தண்டுகளுடைய செடிகளையும் சேர்த்தே வளர்ப்பது நல்லது. ஈரப்பதம் தொட்டியிலோ மண்ணிலோ முற்றிலும் உலரத் தொடங்கும் முன் இந்தச் செடிகளின் இலைகள் தளர்ந்து வளைந்து கீழே தொங்க ஆரம்பிக்கும். அப்போது நீர் விட்டால் சற்று நேரத்தில் பழைய நிலைமையை அடைந்துவிடும். நீர் ஊற்றிக்கொண்டே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பால்சம், கோலிஸ் வகை செடிகள் இதற்கு ஏற்றவை.

6. டைமர் கருவி மூலம் நீர் பாய்ச்சும் நேரம் மற்றும் அளவைக் கட்டுப்படுத்துதல்
    இந்த நேரக்கருவியில் ஒரு நாளைக்கு எவ்வளவு முறை நீர் விடவேண்டும் அல்லது எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை நீர் விடவேண்டும் என்று பதிவு செய்தால், அதன்படி நீர் பாய்ச்சுதல் நடைபெறும். எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இந்தக் கருவியே நமது விருப்பப்படி செடிகளுக்கு நீர் பாய்ச்சிவிடும்.

7. தென்னைநார் கழிவுகள் பயன்பாடு
    தென்னைநார் கழிவுகளை பயன்படுத்தும்போது நீரை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்வதோடு, மண்ணும் பொலபொலவென இருப்பதால் வேர்கள் நன்கு வளர்ந்து, செடிகள் ஆரோக்கியமாக இருக்கும். வெர்சுவல் வாட்டர் என்னும் மறைந்துள்ள நீர் விவசாயத்திலும் தொழிற்சாலைகளிலும், ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால் அதனை உற்பத்தி செய்யத் தேவைப்படும் நீரை ‘மறைந்துள்ள நீர்’  (க்ஷிவீக்ஷீtuணீறீ கீணீtமீக்ஷீ)   என்கிறோம். இந்த வெர்சுவல் வாட்டர் முறையை உலகுக்கு உணர்த்தியவர் லண்டன் கிங்ஸ் கல்லூரிப் பேராசிரியர் ஜான் அந்தோணி அலன்.

வெர்சுவல் வாட்டர் அடிப்படையிலேயே நமது வீட்டுக்குத் தேவையான செடிகளை வளர்க்க வேண்டும். மேலைநாடுகள் இம்முறையை பயன்படுத்தி ஏற்றுமதி, இறக்குமதி கணக்கீடு களைக்கூடச் செய்கின்றனர். அதற்கேற்ப அவர்களால் பயிர் முறையை மாற்றி நீர் சேமிப்பு செய்கின்றனர். அல்லது நீர் அதிகமாக எடுக்கும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்கின்றனர். வருங்காலத்தில் இந்த வெர்சுவல் வாட்டர் முறைதான் விவசாயத்தில் பெரும்பங்கு ஆற்றப்போகிறது!

ஒவ்வொரு உணவுப்பொருள் உற்பத்திக்கும்

தேவைப்படும் நீரின் அளவு! 


அரிசி                     1 கிலோ     3,400 லிட்டர்

கோழி இறைச்சி     1 கிலோ      3,900 லிட்டர்

மக்காச்சோளம்     1 கிலோ      900 லிட்டர்

கோதுமை                  1 கிலோ      1,300 லிட்டர்

காபி                 125 மி.லி.     140 லிட்டர்

டீ                250 மி.லி.     30 லிட்டர்

ரொட்டித்துண்டு     1     50 லிட்டர்

வாழைப்பழம்     1     40 லிட்டர்

ரோஜா செடிகளை பராமரிப்பது எப்படி?

How to Care for Rose?
பூச்செடிகள் வளர்ப்பது மற்றும் அலங்கார மலர் தோட்டங்கள் அமைப்பது போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களின் முக்கியமான கவலையே, பல  வண்ணங்களில் பூக்கும் ரோஜா செடிகளின் பராமரிப்பு குறித்துதான். மனம் மயக்கும் வாசனையுடன் வெவ்வேறு வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும்  ரோஜா செடிகளை விரும்பாதவரில்லை. இருப்பினும் முட்கள் நிறைந்த ரோஜா செடியை நல்ல முறையில் வளர்த்து பராமரிப்பது சாதாரண  விஷயமில்லை. 

ஒல்லியான பலவீனமான தோற்றத்தை கொண்டுள்ள ரோஜா செடிக்கு, தேவைப்படும் உபசரிப்பு கொஞ்ச நஞ்சமில்லை. இருப்பினும் சிரமம் பார்க்காமல்  விசேஷமாக கவனித்து கொள்ளும் பட்சத்தில், தோட்டத்திலோ வாசலிலோ பல வண்ணங்களில் மலர்ந்து சிரிக்கும் ரோஜா செடிகளுக்கு  உரிமையாளராக ஆகிவிடலாம். அதனால், ரோஜா செடி பராமரிப்பு குறித்து சில டிப்ஸ்கள் இங்கே.

.செடியின் உயரத்திற்கு ஒன்றரை பங்கு ஆழமும், அதன் அகலத்தை விட இரண்டு பங்கு அகலமும் கொண்ட குழியை வெட்டிக்கொள்ளவும். அடியில்  ரோஜா உரத்தை இட்டு அதன் மேல் இயற்கை எரு மற்றும் செம்மண் கலவையை ஒரு அடுக்குக்கு நிரப்பவும். சிறிதளவு உரத்தை மண்ணின்  மேற்பகுதியிலும் தெளிக்க வேண்டும். இப்போது ரோஜாச்செடியை அதன் பை அல்லது தொட்டியிலிருந்து மென்மையாக எடுத்து குழியில் வைக்கவும்.  செடியின் மண் விளிம்பு புதிதான குழியின் விளிம்பை ஒட்டியிருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். 

செடியில் வேர்களை ஜாக்கிரதையாக சுத்தம் செய்து விடவும். இதனால் வேர் புதிய மண்ணை ஏற்றுக்கொள்வதற்கும், வேர் வளர்ச்சிக்கும் உதவியாக  இருக்கும். அடுத்து குழியை மண், இயற்கை எரு, சிறிது உரத்தெளிப்பு என்று மாற்றி மாற்றி நிரப்பி மூடவும். நன்கு நீர் ஊற்றி திரும்பவும் ஒரு அடுக்கு  மண்எரு உரத்தெளிப்பு என்று நிரப்பவும். நீர் நன்கு உறிஞ்சப்பட்டபிறகு திரும்பவும் மண் இயற்கை எருக்கலவையால் நிரப்பவும். கடைசியாக ஈரம்  காயாமல் இருக்க சிறிது செத்தைகளை லேசாக புதிய மண்பரப்பின் மீது பரப்பி விடவும். 

பூச்சிகள் மற்றும் இலைப்புழுக்கள் ரோஜா செடியை தாக்காமல் இருக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய எளிய பூச்சிக்கொல்லி கலவையாக அரை ஸ்பூன்  விம் வாஷிங் திரவத்தை (அல்லது வேறு பிராண்ட் சோப்புத்தண்ணீர்)கால் லிட்டர் தண்ணீரில் கலந்து ரோஜாச்செடியில் நன்கு தெளிக்கவும். இது  இலைப்புழுக்கள் மற்றும் கம்பளிப் பூச்சிகள் போன்றவற்றை அழித்து விடும்.

பழுத்த இலைகள் தானே விழும் என்று காத்திருக்க வேண்டாம். அழுகும் நிலையில் இலைகள் தெரிந்தால் உடனே அவற்றை அகற்றிவிடவும். மஞ்சள்  கலந்த பச்சை நிறத்தில் இலைகள் காட்சியளித்தால், இரும்புச்சத்து அல்லது நைட்ரஜன் சத்துக்குறைபாடு என்று அர்த்தம். செடியை சீக்கிரம்  வளர்க்கிறேன் என்ற ஆர்வக்கோளாறில் அதிகம் நீர்வார்த்துக்கொண்டே இருக்க கூடாது. தொட்டியில் அல்லது செடிக்குழியின் மேல்பாகத்தில் 3  அல்லது 4 அங்குல ஆழ மண் வறட்சியடையும்போது நீர் ஊற்றினால் போதும். கொஞ்சம் செடியின் மீதும் நீரை தெளிக்கலாம். தினமும்  ரோஜாச்செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை.

ரோஜா செடிகளுக்கு சூரிய வெளிச்சம் மிக அவசியம். எனவே ஒவ்வொரு நாளும் 6 மணி நேரமாவது செடியில் வெயில் விழுமாறு  பார்த்துக்கொள்ளுங்கள். அதே சமயம் ஈரப்பதம் அதிகம் இல்லாத இடத்தை பார்த்து வைப்பதும் முக்கியம். ரோஜா செடிகளுக்கு நல்ல காற்றோட்டம்  இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். செடிகள் நன்கு வளர்ந்த நிலையில் எவ்வளவு பெரிதாக வருமோ அந்த அளவுக்கு இடைவெளி விட்டு நட  வேண்டும். ரோஜா செடிகளை மண்ணில் நடுவதற்கு முன்பு மண் அமிலப்பரிசோதனை செய்து கொள்வது நல்லது. மண் அமிலத்தன்மை எனப்படும்  ஜீபி விகிதாச்சாரம் 5.5 முதல் 6.6 வரை இருப்பது ரோஜாச்செடிகள் செழிப்புடன் வளர மிகவும் அவசியம். 

கோடைக்காலத்தின் போது ரோஜாச்செடிகளுக்கு காலையிலேயே நீர் ஊற்றுவது சிறந்தது. அப்போதுதான் இரவு வருவதற்குள் மண் உலர்ந்த நிலைக்கு  வர வசதியாக இருக்கும். குளிர்காலம் அல்லது வெப்பநிலை குறைவாக இருக்கும் காலங்களில் 3 முதல் 5 நாட்களுக்கு ஒரு முறை நீர் ஊற்றினாலே  போதுமானது. இதுபோன்று, ரோஜா செடிகளை முறையாக பராமரித்தால், செடியின் வளர்ச்சியும் பூக்களின் மலர்வும் செழிப்பாக இருக்கும்.

“செடியை சீக்கிரம் வளர்க்கிறேன் என்ற ஆர்வக்கோளாறில் அதிகம் நீர்வார்த்துக்கொண்டே இருக்க கூடாது. தொட்டியில் அல்லது செடிக்குழியின்  மேல்பாகத்தில் 3 அல்லது 4 அங்குல ஆழ மண் வறட்சியடையும்போது நீர் ஊற்றினால் போதும்.

வாழ்க்கையை வளப்படுத்தும் லாண்ட்ஸ்கேப்பிங்!

Lantskeppin améliore la vie !
பல காரணங்களுக்காக நான் செடிகளை வளர்க்கிறேன்... என் கண்களைக் குளிர்விக்க என் ஆன்மாவைக் குளிர்விக்க என் பொறுமைக்கு சவால் விட இயற்கைக்கு சவால் விட புதுமைக்காக அல்லது பழமைக்காக இப்படி பல காரணங்களுக்காக...  இவை எல்லாவற்றையும் விட மற்றொரு வலிமையான  காரணமொன்றும் இருக்கிறது... அது  இன்னொரு சக உயிர்  என்னுடன் கூடவே வளரும் அச்சந்தோஷத்தைக் காண்பது! 

- டேவிட் ஹாப்சன்

லாண்ட்ஸ்கேப்பிங் செய்யும்போது நாம் பயன்படுத்தும் செடிகளை எத்தனை வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்?இரு வகையாகப் பிரித்துக் கொள்ளலாம்...

1. தனிச்செடி வகை (single specimen plants) 

ஒரு தோட்டத்தில் அல்லது ஒரு புல்வெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தின் அழகை மேலும் அதிகப்படுத்திக்காட்டவே நாம் சிங்கிள் ஸ்பெசிமென் செடிகளை நடுகிறோம். பரந்த புல்வெளி... அத்தகைய புல்வெளியின் நடுவே ஒரு ஒற்றை ராயல் பாம்ஸோ, ஒரு ஃபவுன்டன் பாம்ஸோ, ஒரு பூக்கும் மரமோ நடும்போது, அது அச்சூழலின் அயர்வுத்தன்மையையே மாற்றிவிடுகிறது. ஒரு திருமண விழாவில் கூட்டமான சுடிதார் பெண்களின் நடுவே தாவணி அணிந்து வரும் அந்த ஒற்றைப்பெண் நம் அனைவரின் பார்வையையும் கவர்ந்துவிடுகிறாள் இல்லையா? அதுபோலத்தான் இதுவும்! 

‘வீட்டின் முன் பத்துக்கு பத்து அடி இடம் மட்டுமே இருக்கிறது. என்னாலும் இந்த மாதிரியான தனி அழகூட்டும் செடிகளை நட முடியுமா? என் வீட்டு குட்டித் தோட்டத்துக்கு ஒரு ஃபேஸ் லிஃப்ட் கொடுக்க முடியுமா என உங்களில் பலர் யோசிப்பது புரிகிறது. கண்டிப்பாக முடியும்! ஒரு சிறிய மெக்சிகன் புல்வெளி... அதன் நடுவே ஒரு புத்தர் சிலையும் அவரைச் சுற்றி ஒரு சில மூங்கில் செடிகள் மற்றும் சில வகையான புற்கள் என அமைத்துப் பாருங்கள். கண்களுக்கு மட்டுமல்ல... மனதுக்கும் அவை விருந்தாகும். ராயல் பாம்ஸ், ஃபாக்ஸ்டைல் பாம்ஸ், ஃபவுன்டன் பாம்ஸ் போன்றவை சிங்கிள் ஸ்பெசிமன் செடிகளின் சில வகைகள். இந்த வகை செடிகளை நட மூன்றுக்கு மூன்றடி இடம் போதுமானது,

2. கூட்டுச்செடி வகை (Group Specimen Plants)

புல்வகை இப்பிரிவின் கீழ்தான் வருகிறது. வளைந்து நெளிந்த அமைப்பிலான தோட்டம், ஆங்காங்கே கூட்டமான செடிகள் என்பவையே கூட்டுச்செடி அமைப்பு முறையின் அடிப்படை. இவற்றை நட ஒரு அடிக்கு ஒன்றரை அடிஎன்கிற அளவு இடம் போதுமானது. இருவகையான தோட்ட அமைப்புகள் யாவை?

நம் இட வசதி பொறுத்து இரு வகையான தோட்டங்களை அமைத்துக் கொள்ளலாம். ஒன்று முகலாய தோட்டங்கள்... மற்றொன்று ஜப்பானிய தோட்டங்கள்... 

முகலாய தோட்டங்கள் - அலை போன்ற வளைவுத்தன்மை(undulance) கொண்டவை. சமதள தோட்ட அமைப்பாக இல்லாமல் மேடு பள்ளம், இவற்றுடன் நீர்நிலைகள், கற்சிற்பங்கள் மரங்கள், செடிகள் கொடிகள், காப்பி மேசைகள் என அனைத்து விதமான அழகியல் அம்சங்களும் நிறைந்தவை. எனினும் அதிக ஆக்ரமிப்பைச் செய்பவை புல்வெளிகளே!

எந்த புல் சிறந்த புல்?

இரு வகையான புற்கள் சந்தையில் கிடைக்கின்றன. மெக்சிகன் புல் மற்றும் கொரியன் புல். இதில் மெக்சிகன் புல்லே சிறந்தது. காரணம்... 

மெக்சிகன் புல்வெளியை பராமரிப்பது எளிது.  
அதிகமான சூரிய உஷ்ணத்தையும் தாங்க வல்லது.
நாமே னீஷீஷ்  செய்து கொள்ள இயலும்.
உப்புத் தண்ணீருக்கும் செழித்து வளரும்.
பூச்சித் தொல்லைகள் அதிகம் இருக்காது. 

ஜப்பானிய ஜென் தோட்டங்கள் 


நீர்நிலைகள் மற்றும் கற்படுக்கைகள், சிற்பங்கள், சின்னச்சின்ன நீரூற்றுகள், அதிகப்படியான மூங்கில் செடிகள் - இவை அனைத்தின் ரசனையான கலவையே ஜப்பானிய ஜென் தோட்டங்கள். தோட்டத்தின் ஏதோ ஒரு மூலையில் அல்லது தேவையான இடங்களில் சிறுசிறு அழகிய குளங்களும் உண்டு. இத்தோட்டங்களில் கூழாங்கற்களின் பயன்பாடு அதிகம். கூடவே உயரம் குறைந்த குத்துச்செடிகளையும் (low level foliage shrubs)  அதனிடையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

தோட்டத்துக்கான கூழாங்கல் படுக்கை அமைப்பு (pebble bed concept)

இவ்வகை படுக்கை அமைக்க, கண்டிப்பாக கூழாங்கற்களின் அளவினை கவனத்தில் கொள்ள வேண்டும். கற்கள் 25 னீனீ  30 னீனீ அளவில் இருத்தல் நலம். எனினும் 4060 னீனீ வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இங்கு தனிச்செடி வகைகளை மட்டுமே வளர்க்க இயலும். உதாரணத்துக்கு... அஸ்பாரகஸ். மயூரி, லில்லி, சக்யூலண்ட்ஸ், கற்றாழை வகைகளை வளர்க்கலாம்.

தோட்டத்தில் குளங்கள் அமைப்பது எப்படி?

மூன்று அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் போதும் ஒரு சிறிய அல்லிக்குளம் அமைக்க. நம் வசதிக்கேற்ப ஆழப்படுத்திக் கொள்ளலாம். அல்லி, தாமரை போன்ற நீர்த்தாவரங்களை வளர்க்க இயலும். அம்ப்ரெல்லா கிராஸ், நாச்சுரல் கிராஸ், மூங்கில் செடி ஆகியவற்றை குளத்தினைச் சுற்றி வளர்த்தோமேயானால் நிஜக்குளமே தோற்றுவிடும். பட்டி யக் கல்லினால் ஆன சில கல் பெஞ்சுளையும் அமைத்துக்கொள்ளலாம். மனம் அயர்வான பொழுதுகளில் ஒரு கோப்பை தேநீருடன் இங்கே வந்து அமர்ந்து பாருங்கள்... உங்களை அதுகாறும் உருக்குலைத்த துன்பம் எல்லாம் உருகியே ஓடிவிடும். கூடவே மனசுக்கும் உடலுக்கும் செம ரிலாக்ஸ்... இத்தகைய குட்டிக் குட்டி குளங்கள்!லாண்ட்ஸ்கேப்பிங்கில் மக்களின் பொதுவான எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என லாண்ட்ஸ்கேப்பிஸ்ட் மணிமாறனிடம் கேட்டோம். 

மேடு பள்ள தோட்ட அமைப்பு

தோட்ட ஏரியா கூடுதலாக உள்ள வீட்டுக்காரர்கள் சமநிலையற்ற, மேடு பள்ளங்களுடன் கூடிய அலை போன்ற வளைவுத்தன்மை நிரம்பிய தோட்ட அமைப்பையே பொதுவாக விரும்புகின்றனர். அதிலும் புல் மேடுகளை அதிகம் விரும்புகிறார்கள். 

பசுமைப் புல்வெளி

பரப்பளவு கம்மியாக உள்ள வீடுகளில் குறைந்தபட்சம் ஒரு சிறிய புல்வெளியாவது வேண்டும் என நினைக்கின்றனர். அதனுடன் சில தனிச்செடி வகைகள் மற்றும் ஓரிரு சிலைகள், குட்டியாக ஒரு நீரூற்று என விரும்புகின்றனர். 

வளைந்து செல்லும் நடைபாதை

அடுத்து அவர்கள் பெரிதும் விரும்புவது தோட்டத்தின் ஊடாக செல்லும் நடைபாதைகளை... அதுவும் நடைபாதைகளில் பாவியிருக்கும் கற்கள் சதுர வடிவில் இருப்பதைக் காட்டிலும் செவ்வக வடிவில் இருப்பதை அதிகம் விரும்புகிறார்கள்.

இதமான இருக்கைகள்

ஆங்காங்கே அமரும் இருக்கைகள் கண்டிப்பாக வேண்டும். அதுவும் பாலீஷ் செய்யப்படாத கரடுமுரடான கல் இருக்கைகள் என்றால் மக்களுக்குக் கூடுதல் பிரியம். சிலர் கிரானைட் இருக்கைகளையும் இன்னும் சிலரோ wrought iron மற்றும் மர இருக்கைகளையும் விழைகின்றனர். பிரகாசமான ஒளி அமைப்பு ஒளி அமைப்பில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். பெரும்பாலான மக்கள் spider lights (விரிந்து அடிக்கும் வெளிச்சம்) அல்லது ஃபோகஸ் விளக்குகளை விரும்புகின்றனர். focus light களை பெரிய மரங்களின் வேர்ப்பகுதியில் அல்லது குறிப்பிட்ட செடிகளின் கீழ் அமைத்துக் கொள்ளலாம். நம் வசதிக்கேற்றவாறு இவ்விளக்கின் திசைகளை மாற்றிக் கொள்வதோடு மட்டுமல்லாது, விலாசமான செடிகளை அல்லது அழகியல் பொருட்களை தனித்துக் காண்பிக்கவும் இவை உதவி செய்யும். 

உடன் தவழும் இசை அமைப்பு

சிலர் தோட்டத்தின் நடைபாதை ஓரங்களில் இசை சார்ந்த தொழிற்நுட்ப அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இசைக்கான உணவை விரும்பாதார் யார்? எனினும் வணிகக் கட்டிடங்களின் தோட்டங்களிலேயே இவை பெரும்பாலும் அமைக்கப்படுகின்றன.தனித்த செடி வகைகள் 10 அடியிலிருந்து 25 அடி வரை வளரும் செடி வகைகளை அதிகம் விரும்புகின்றனர். 

மனம் மயக்கும் மரங்கள்

செடிகளோடு செடிகளாக மரங்களை வைத்துக் கொள்ள விரும்பும் மக்களும் இருக்கிறார்கள். பெரும்பாலான மக்கள் பூக்கும் மரங்களான அட்ஸ்டோனியா மில்லங்க்டோனியா போன்ற மரங்களை விரும்புகிறார்கள். வேம்பு, புங்கை போன்ற மரங்களை பல்வேறு உடல்நலக் காரணங்களுக்காக வேண்டிக் கேட்டுக் கொள்ளும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

கண்டிப்பாக காஃபி டேபிள்

யந்திரகதியான இவ்வுலகில் தோட்டத்திலும் தனக்கான ஒரு பிரத்யேக இடத்தை மக்கள் விரும்புகிறார்கள். இந்த இடம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் கூட ஏதுவாக இருப்பதோடு மட்டுமல்லாது கூடவே பல கதைகளும் பேசி ஒரு காப்பியோ அல்லது தேநீரோ அருந்த தோதுவாகவும் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள்... மக்கள் பெரும்பாலும் விரும்புவது இயற்கையான கல்லினால் அமைந்த காப்பி மேசையே... இதன் நீளம் ஐந்து அடியும் அகலம் ஒன்றரை அடியும் இருந்தால் போதுமானது. சிலர் கட்டிடக் கலை அடிப்படையிலும் (நீவீஸ்வீறீ நீஷீஸீநீமீஜீt) காப்பி மேசைகளை அமைத்துக் கொள்ள விரும்புகின்றனர். மரமேசைகளும் அமைக்கலாம். எனினும் அவற்றில் பராமரிப்புத் தேவை கூடுதலாக இருக்கும்.

பெர்கோலா

சிவில் கான்செப்ட்டின் அடிப்படையில் பெர்கோலாவும் ஆங்காங்கே அமைத்துக் கொள்ளலாம். எனினும் இவை அனைத்தும் நம் இட வசதி பொறுத்தே...

வேறு என்ன என்ன அமைத்துக் கொள்ளலாம் ?


குட்டி திரையரங்கு வானம் பார்த்த ஒரு சிறு மேடை (பிறந்த நாள் மற்றும் வேறு சில சிறு விழாக்களை நடத்த வசதியாக) சிறு குடில் (GAZEBO) சிறு பாலம் மரங்களைச் சுற்றிலும் பிணைக்கப்பட்ட இருக்கைகள் நீச்சல் குளம் ஊஞ்சல் குழந்தைகளுக்கான விளையாட்டு இடம் பறவைகளுக்கான கூண்டுகள் சிறு தியானக் கூடங்கள் திறந்தவெளி சாப்பாட்டு அறை ஆகியவற்றையும் இடவசதிக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம் 

லாண்ட்ஸ்கேப்பிஸ்டின் பணிகள் யாவை?

தோட்டம் அமைத்துத் தருவது மட்டுமல்ல... பராமரிப்பு பணிகளையும் இவர்களே செய்து தருகிறார்கள். வாரக்கணக்கு, மாதக்கணக்கு, ஆண்டுக்கணக்கு என பலவகை பராமரிப்புத் திட்டங்களை வைத்திருக்கிறார்கள்.

எவ்வளவு செலவாகும் ?


இப்போதைய சூழலின்படிக்கு 1,000 சதுர அடிக்கு ரூ.90,000த்திலிருந்து ரூ.ஒன்றரை லட்சம் வரை கட்டணம்.லாண்ட்ஸ்கேப்பிங் துறையில் மறக்க முடியாத அனுபவம்  ‘‘கும்பகோணம் டாக்டர் ஒருவர் மனம் நெகிழ்ந்து கை கொடுத்ததை மறக்கவே முடியாது’’ என்கிறார் லாண்ட்ஸ்கேப்பிஸ்ட் மணிமாறன்.   

மருத்துவர் அவ்வீட்டுக்கு குடிவந்து 2 வருடங்கள் ஆகியிருந்தும் எவ்வித மன நிம்மதியும் இல்லாதபடிக்கே அவரும் குடும்பத்தினரும் இருந்திருக்கின்றனர். வீட்டிலும் ஏகப்பட்ட குறைபாடுகள். புறத்தே தெரிந்த குறைகள் அனைத்தையும் தோட்டக்கலை கொண்டு சரி செய்து கொடுத்திருக்கிறார் மணிமாறன். குறைகளைச் சரிசெய்து வீட்டின் பார்வையை செப்பனிட்டது மட்டுமல்லாது, உளவியல் ரீதியாகவும் ஆக்கபூர்வமான மாற்றம் ஒன்றினை அவர்தம் வாழ்வில் கொண்டு வர முடிந்திருக்கிறது.  பச்சையம் தயாரிக்கும் பசுமையான செடிகள் மருத்துவரின் வாழ்க்கையை மட்டுமல்ல... நம் வாழ்க்கையையும் வளப்படுத்தக் கூடியதே... இன்றே முயற்சி செய்து பார்க்கலாம்!

(பழகுவோம்... படைப்போம்!)

அழகு சேர்க்கும் கண்ணாடிகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது அவசியம்

The need for frequent cleaning glasses will add beauty
வீட்டின் உள் அலங்காரத்தில் மரங்களும், கண்ணாடிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அலமாரிகள், ஷோகேஸ்கள், டிரஸ்ஸிங் டேபிள், ஜன்னல்கள்  போன்ற இடங்களில் மரங்கள் மற்றும் கண்ணாடிகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது. மரங்களை கொண்டு நுணுக்கமான வேலைப்பாடுகள்  செய்தாலும் வீட்டில் அல்லது அலுவலகத்தில் சில குறிப்பிட்ட இடங்களில் கண்ணாடிகளை கொண்டு அலங்கரிப்பதால் கிடைக்கின்ற அழகு ஈடு  செய்ய முடியாததாக உள்ளது.

மேலும் கண்ணாடிகளில் வரையப்படும் ஓவியங்கள் கொள்ளை அழகு கொண்டவை. கண்ணாடிகளை கொண்டு அலங்கரிக்க வேண்டும் என்று  விரும்புபவர்கள் அதை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு இருப்பது இல்லை. வீடுகளில் தூசி படிவது என்பது  இயற்கையான ஒன்று. அந்த தூசிகளை அகற்றுவதற்காக அவ்வப்போது வீட்டை சுத்தம் செய்கின்றோம். ஆனால் கண்ணாடிகளை அடிக்கடி சுத்தம்  செய்வது கிடையாது. கண்ணாடிகளில் தூசி படியும் போது அதன் அழகு அப்படியே கெட்டுவிடும்.

கண்ணாடிகளில் தூசிபடிவதை எக்காரணம் கொண்டும் தடுக்கமுடியாது. ஆனால் அடிக்கடி சுத்தம் செய்வது என்பது சாத்தியமான ஒன்று. சுத்தமான  மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்தி துடைத்தால் கண்ணாடி சுத்தமாகிவிடும் என்பது பொதுவான ஆலோசனையாக உள்ளது. ஆனால்,  தொடர்ச்சியாக பராமரிக்க வேண்டும் என்பதை மறந்துவிடுகின்றோம். கண்ணாடியில் படிந்திருக்கும் கறைகளை முற்றிலும் போக்குவதற்கு ஒரு சில  பொருட்களை பயன்படுத்தினால் நிச்சயம் பளிச்சென்று மின்னும். 

ஈரமான துணியை கொண்டு துடைத்துவிட்டு அதன்பின் காய்ந்த துணியால் துடைத்தால் கண்ணாடி சுத்தமாகிவிடும். கண்ணாடிகள் மீது சிறிது  தண்ணீரை தெளித்து காகிதம் கொண்டு அழுத்தி துடைக்கலாம். இவ்வாறு அழுத்தி துடைத்த பிறகும் கண்ணாடி சுத்தமாகாவிட்டாலோ அல்லது  கறைகள் இருந்தாலோ வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது வெள்ளை வினிகரை கலந்து கண்ணாடியின் மீது தெளித்து துணியை கொண்டு  துடைத்தால் கறைகள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.

இதே போல தண்ணீருடன் எலுமிச்சை சாற்றை கலந்து லேசாக கண்ணாடிகளின் மீது தெளித்து துணியை கொண்டு துடைத்தால் கண்ணாடிகள்  பளிச்சென்று மாறிவிடும். இது சாதாரண கண்ணாடிகளை சுத்தப்படுத்தும் போது கையாளும் வழிமுறைகளாகும். ஆனால் வீட்டில் ஹால், போர்டிகோ  போன்ற பகுதிகளில் கண்ணாடிகளினால் ஆன அலங்கார விளக்குகளை சுத்தப்படுத்தும் போது கவனமாக கையாள வேண்டும். அலங்கார  விளக்குகளில் படியும் தூசி மற்றும் அழுக்குகளை சுத்தப்படுத்துவது என்பது சற்று கடினமானதாக இருக்கும். 

எனவே அலங்கார விளக்குகளில் தூசிகள் படியாதவாறு அடிக்கடி சுத்தப்படுத்துவது தான் எளிமையான முறையாகும். கண்ணாடிகளை சுத்தப்படுத்தும்  போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக கைவிரல்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். அலங்கார  விளக்குகளில் படியும் தூசி மற்றும் அழுக்குகளை சுத்தப்படுத்துவது என்பது சற்று கடினமானதாக இருக்கும். எனவே அலங்கார விளக்குகளில் தூசிகள்  படியாதவாறு அடிக்கடி சுத்தப்படுத்துவது தான் எளிமையான முறையாகும்.

கண்ணாடிகளில் தூசிபடிவதை எக்காரணம் கொண்டும் தடுக்கமுடியாது. ஆனால் அடிக்கடி சுத்தம் செய்வது என்பது சாத்தியமான ஒன்று. சுத்தமான  மெல்லிய பருத்தி துணியை பயன்படுத்தி துடைத்தால் கண்ணாடி சுத்தமாகிவிடும் என்பது பொதுவான ஆலோசனையாக உள்ளது.

நீங்களே தயாரிக்கலாம் இயற்கை உரம்!

To produce a natural fertilizer for yourself!
ஹோம் கார்டன்

இன்றைய வீட்டுத் தோட்டத்தை பராமரித்து விளைச்சலை எடுக்க வேண்டுமானால் பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளை அறிந்து அளிக்க  வேண்டும். 1960களுக்குப் பின் ரசாயன உரங்கள் பெருகி னாலும், இப்போது சூழல் மாறுகிறது. உலகெங்கும் பல்வேறு காரணங்களினால் ரசாயன  உபயோகம் குறைக்கப்பட்டு, இயற்கை உரங்கள் மக்களிடையே பிரபலமாகி வருகிறது’’ என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட் இது பற்றி  விரிவாகப் பேசுகிறார்... 

மண்ணுக்கு மாற்றுப் பொருட்கள் வந்தபின் அவற்றை வளமாக்குவதில் இயற்கை உரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. பொதுவாக தாவரங்களுக்கு  ழிறிரி என்று அழைக்கப்படும் தழைச்சத்து-மணிச்சத்து-சாம்பல் சத்து அதிகம் தேவை. இவை தவிர கால்சியம், மெக்னீசியம், சல்பர், இரும்பு, மாங்கனீசு,  துத்தநாகம், போரான் போன்ற வையும் தேவை. இவற்றை நாம் எளிய வளர்ச்சி ஊக்கிகள் மூலமே பெறலாம். இவற்றை மேம்படுத்தி அதிக பலன் பெற  நுண்ணுயிர் உரங்களும் உதவும்.

மண்புழு உரம், பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், மீன் கரைசல், தேமோர், அரப்பு மோர் கரைசல்... இப்படி இதற்கு ஒரு நீண்ட அட்டவணையே  தரலாம்! பெரும்பாலும் கிராமப்புறங்களில் கால்நடைகள் இருப்பதால் மண்புழு உரம், பஞ்சகவ்யம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் போன்றவைற்றை  எளிதாகத் தயாரிக்கலாம். நகரத்தில் இருப்பவர்கள் சமையலறைக் கழிவிலிருந்து மண்புழு உரம் தயாரிக்கலாம் (சற்று கவனம் தேவை). தேங்காய்ப்  பாலுடன் இளநீர், புளித்த மோர் ஊற்றி 7 நாட்கள் நொதிக்க வைத்தால் தேமோர் கரைசல் தயார். 

அரப்புத்தூளுடன் மோர், இளநீர் சேர்த்து 10 நாட்கள் நொதிக்க வைத்தால் அரப்பு மோர் கரைசல் தயார்.இவற்றை குறைந்த அளவில் அதிக நீருடன்  கலந்து செடிகளுக்கு அளிக்க வேண்டும். மீன் கரைசல் கூட மீன் கழிவுகளுடன் கரும்புச் சர்க்கரை சேர்த்து 20 நாட்கள் நொதிக்க வைத்தால்  தயாராகிவிடும். நொதிக்கும் போது ஆரம்ப நாட்களில் துர்வாசம், பக்குவம் எனப் பார்த்து செய்ய வேண்டும். இவை அனைத்தும் இப்போது  அங்காடிகளிலும் கிடைக்கின்றன.

நுண்ணுயிர் உரங்கள்

மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளில் சில வகைகள் நன்மை தருபவை. இவற்றில் சில நுண்ணுயிர்கள் பயிருக்குத் தேவையான தழைச் சத்தை  (Nitrogen) அளிக்கும் வகையில் வளி மண்டலத்தில் உள்ள வாயுவை உரமாக மாற்றும் திறன் படைத்தவை. சில மண்ணில் பயிருக்கு பயன் படாத  வகையில் இருக்கும் சத்தை பயன்படும் வகையில் மாற்றி தரும். சில நுண்ணுயிரிகள் பயிர் வளர்ச்சி ஊக்கியை உற்பத்தி செய்து பயிரின் வளர்ச்சிக்கு  உதவும்.

ரைசோபியம்

வளிமண்டலத்தில் 78% தழைச்சத்து இருந்தாலும், பயிரினால் நேரடியாக அச் சத்தை எடுக்க இயலாது. ரைசோபியம் என்பது பயிறு வகை செடிகளின்,  வேர்களின் உள்ளே முடிச்சு ஏற்படுத்தி அதனுள் வாழும். இந்த வகை உறவால் பயிர் மற்றும் நுண்ணுயிர் இரண்டும் பயன்பெறுகின்றன.  நுண்ணுயிருக்கு உணவும் இடமும் கிடைக்கிறது. நன்றிக்கடனாக - அதனுள் வாழும் ரைசோபியம் வளிமண்டலத்தில் உள்ள தழைச்சத்தை உரமாக்கி  பயிருக்குக் கிடைக்கச் செய்கிறது.

அசோஸ்பைரில்லம்

இவை பெரும்பாலான பயிர்களின் வேருக்கு அருகில் வளர்ந்து வளிமண்டல தழைச்சத்தை நிலைப்படுத்துவதுடன், வேர்களை நன்கு வளரச் செய்யும்  ஊக்கிகளையும் உற்பத்தி செய்கிறது.

பாஸ்போ பாக்டீரியா

மண்ணிலுள்ள மணிச்சத்தை (phosphorus) கரைத்து பயிருக்குக் கொடுக்கும். மற்ற உரங்களின் தேவையை குறைக்கும். இந்த வகை  நுண்ணுயிர்களில் சில, திரவம் அல்லது பொடி வடிவங்களில் அங்காடிகளில் கிடைக்கின்றன.

இதர வகைகள்... 

0.1% பிராசினோலைட்ஸ் என்னும் ஊக்கி ஒரு வகை கடுகுச்செடியின் மகரந்தத்திலிருந்து எடுக்கப்படுகிறது. ஆரோக்கியமான வளர்ச்சியை செடிக்கு  அளிப்பதோடு  பூ, பிஞ்சு உதிர்வதைத் தடுத்து, அதன் நிறம், தரம் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்கிறது. தாவரத்தின் நோய் எதிர்ப்புத் தன்மையை  அதிகரிக்கச் செய்கிறது.

E.M . என்னும் திற நுண்ணுயிரி 

Effective microorganisms என்பதின் சுருக்கமே ணி.வி. ஜப்பான் நாட்டில் 1980களில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த திற நுண்ணுயிரி. இன்று 120  நாடுகளில் விவசாயம், சுற்றுச்சூழல், கால்நடைப் பராமரிப்பு துறைகளில் பயன்படுகிறது. இது இயற்கை இடுபொருள் என Ecocert அமைப்பு சான்று  தந்துள்ளது. E.M 1 என்பது உறங்கும் நிலையிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் தொகுப்பாகும். இது நொதித்த பிறகே பயன்படுத்தப்பட  வேண்டும். 1:1:20 என்ற விகிதத்தில் E.M.1 : வெல்லம்(அ)கரும்புச் சர்க்கரை: குளோரின் கலக்காத நீரில் 5-10 நாட்கள் பிளாஸ்டிக் கலன்களில்  காற்று புகாமல் நிழலில் நொதிக்க வைக்க E.M 2 தயார். 

உருவாகும் வாயுவை வெளியேற்ற தினமும் 1 நொடி மூடியை திறந்து மூட வேண்டும். ஒரு மாதத்துக்குள் பயன்படுத்திவிட வேண்டும். நொதிக்க  வைக்க கண்ணாடிக் கலன்களை தவிர்க்கவும். வீட்டின் சமையலறை, குளியலறை போன்ற இடங்களிலும் E.M 2 உதவும். இவ்விடங்கள் விரைவாக  உலர்ந்து, ஈரமின்றி இருப்பதுடன் ஈக்களும் வராது... துர்வாசனையும் நீங்கும். வீடு துடைப்பதற்கும் உபயோகிக்கலாம். வாகனங்கள் சுத்தம்  செய்வதற்கும், சிறு குழந்தைகளின் உள்ளாடைகளை சுத்திகரிப்பதற்கும் மிகவும் ஏற்றது. செலவு மிகமிகக் குறைவு என்பதோடு, இது மிகச்சிறந்த  இயற்கை ஈடுபொருள். பூனா, கோவை மாநகராட்சிகள், மாநகரத்தின் கழிவுகளை ணி.வி. கொண்டுதான் மக்கச் செய்து மறுசுழற்சி செய்கிறார்கள்!

விவசாயம், சுற்றுச்சுழல், கால்நடைப் பராமரிப்பு போன்ற துறைகளில் இது உபயோகமாகும் முறைகளைக் காணவும், ணி.வி. பயன்படுத்தி ‘பொக்காஷி’,  E.M.5 போன்றவற்றை தயாரிக்கவும் www.agriton.nl/higa.html வலைப்பக்கத்தைக் காணுங்கள்.

வேம் (VAM) என்னும் வேர் பூஞ்சானம்

Vesicular Arbuscular Mycorrhiza என்பதன் சுருக்கமே க்ஷிகிவி. இது தாவரங்களுக்கு பயன் அளிக்கக்கூடிய வேர் பகுதியில் காணப்படும் ஒரு வகை  பூஞ்சானம். தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும் மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள பாஸ்பரஸை நேரடியாகவும், மறைமுகமாக மற்ற  சத்துகளையும், நீரையும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரவல்லது. இது வேர்களை அதிக அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்க  உதவுகிறது. அதோடு, வேர் பகுதி அதிக அளவில் இருப்பதால் தாவரங்கள் ஸ்திரமாக நிலத்தில் இருக்கும். 

வேர்களுக்கு மண்ணிலுள்ள நீரையும் சத்துகளையும் (குறிப்பாக பாஸ்பரஸ்) எளிதில் உறிஞ்ச உதவுகிறது. மண்ணிலுள்ள நோய் உண்டாக்கும்  பாக்டீரியா மற்றும் பூஞ்சை தாக்காமல் தாவரங்களைப் பாதுகாக்கிறது. நாற்றங்காலில் இருந்து மாற்றும்போது ஏற்படும் பயிர் எண்ணிக்கை இழப்பையும்  குறைக்கிறது. வேர்களைத் தாண்டியுள்ள பகுதிகளிலிருந்து சத்துகளையும் நீரையும் ஹைபே (Hyphae) உதவியால் தாவரங்களுக்கு அளிக்கிறது.  அதனால், தாவரங்கள் வறட்சியை சற்று தாங்கி வளரும். உர அளவை குறைப்பதுடன் விளைச்சலை அதிகப்படுத்த உதவுகிறது. நாற்றுப்  பண்ணைகளில் - குறிப்பாக மரப்பயிர்களுக்கு அவசியம் தேவையானது இந்த வேர் பூஞ்சானம். அங்கு வேர்கள் நன்கு உருவாவதால் மரங்கள் நல்ல  வளர்ச்சி பெறும்.

ஹுயுமிக் அமிலம்

இது திரவ வடிவிலும், குருணை அல்லது பொடி வடிவிலும் அங்காடிகளில் கிடைக்கிறது. மண்ணில் கரிமச் சத்தை அதிகரிக்க உதவுகிறது.

இயற்கை உரங்களால் என்ன நன்மை?

1.    சத்துகளை செடிகள் அதிகம் எடுக்கும்.
2.    குறைந்த அளவு உரமே போதுமானது.
3.    வறட்சியைத் தாங்கும் சக்தி அதிகரிக்கும்.
4.    மண்ணில் நன்மை தரும் நுண்ணுயிர்களின் பணி அதிகமாக இருக்கும்.
5.    முளைப்புத்திறன் கூடுவதால் அதிக நாற்றுகள் கிடைக்கும்.
6.    அதிக வேர் வளர்ச்சியை உண்டாக்கும்.
7.    செடிகள் ஆரோக்கியமாகவும் பசுமையாகவும் இருக்கும்.


நன்றி குங்குமம் தோழி