Thursday, July 24, 2014

தண்ணீருக்குமா வயதாகும்?

'The water is not going to change,' everyone knows that. But, pattilkalilum kenkalilum closing date for coming ekspairi kurippituvaten in   water?
‘தண்ணீர் கெட்டுப் போவதில்லை’ என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், பாட்டில்களிலும் கேன்களிலும் அடைத்து விற்பனைக்கு வருகிற  தண்ணீரில் மட்டும் எக்ஸ்பைரி தேதி குறிப்பிடுவதேன்? பாட்டில் தண்ணீரைத் திறக்காத வரை, அதில் பாதிப்பில்லை. ஆனாலுமே, அதன் சுவையானது  நாள்பட மாறிக் கொண்டே இருக்கும்.

சரியாக பத்திரப்படுத்தாவிட்டால், அதன் பிளாஸ்டிக் பாட்டிலே, தண்ணீரின் சுவையை மிக மோசமானதாக மாற்றி விடும். சூரிய வெளிச்சம் பட்டாலும்,  பிளாஸ்டிக்கில் மாற்றங்கள் உண்டாகி, அதன் பாதிப்பு, தண்ணீரின் சுவையை மாற்றும். எனவேதான் பாட்டில் மற்றும் கேன்களில் தண்ணீர்  வாங்கினால், அவற்றை ஈரமோ, சூரிய வெளிச்சமோ படாத இடத்தில் வைக்க வேண்டும் என்றும், அதன் பக்கத்தில் பெயின்ட்,  எரிபொருள்கள்,   உலர்சலவைக்கான ரசாயனங்கள் எதுவும் இருக்கக்கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

பாட்டிலை திறந்து விட்டால், அதை அதிகபட்சம் 1 வாரத்துக்குள் உபயோகித்து விட வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாசி மற்றும் பாக்டீரியா  தொற்றி, வளரத் தொடங்கி, அதைக் குடிப்போரின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அபாயம் உண்டு. அதற்காக திறக்கப்படாமலே வைத்திருக்கிற வாட்டர்  பாட்டில்களை எத்தனை நாள் வேண்டுமானாலும் வைத்து உபயோகிக்கலாம் என அர்த்தமில்லை. அதற்கும் காலக்கெடு உண்டு என்பதால்தான் வாட்டர்  பாட்டில்களில் எக்ஸ்பைரி தேதி குறிப்பிடப்படுகிறது.
*********************************************************************************************

அதிக தண்ணீர் அதிக ஆயுள்

Smith says the university health adviser:'' When one patarrampat increases their unarccittanmai. If you can reduce the amount of   exercise and mental tension silent.
அமெரிக்கா பல்கலைக்கழக உடல் நல ஆலோசகர் ஸ்மித் கூறுகிறார்: ‘‘ஒருவர் பதற்றம்படும்போது அவர்களது உணர்ச்சித்தன்மை அதிகரிக்கிறது.  இவர்கள் உடற்பயிற்சி செய்தால் மனம் அமைதிப்பட்டு பதட்டத்தின் அளவை குறைக்க முடிகிறது.

ஒரு மனிதனின் உடல் எடையில் 2 இல் மூன்று பங்கு தண்ணீர் இருக்கிறது. கொழுப்பு இருக்கும் இடங்களில் தண்ணீர் குறைவாக இருக்கும். எனவே  பெண்கள் 52% நீரும் ஆண்கள் 60 சதவிகிதம் நீரும் கொண்டிருக்கிறார்கள். அதேபோல வயதானவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள் தண்ணீர்  அலவும் குறைவாக இருக்கும். ஒரு 150 பவுண்டு எடை உள்ள மனிதன் கிட்டதட்ட 10 காலன் தண்ணீர் இருக்கிறது. 

அதில் 7 காலன் செல்களில் இருக்கிறது, இன்னும் இரண்டு காலன் திசுக்களிலும் ஒரு காலன் இரத்தத்திலும் இருக்கிறது. தண்ணீர் உடலில்  ஒவ்வொரு பாகமும் சரிவர இயங்க காரணம் எனவே தேவையான அ ளவு இருக்கும் வரை உடலினுள் ஓடிக்கொண்டே இருக்கிறது. முக்கியமாக  தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். நேர்மறையான எண்ணத்துடன் காலையில் எழுந்திருங்கள். 

உடலுக்கு தண்ணீர் அருந்துவதாலும் சில உணவுப்பொருட்களை செரிக்கும் போது உப பொருளாக உற்பத்தியாவதாலும் கிடைக்கிறது. அதிக உடல்  பயிற்சியின் போதும் வெளியே வெப்ப நிலை அதிகம் இருக்கும் போது தண்ணீர் வியர்வையாய் உப்புடன் சேர்ந்து வெளியேறுகிறது. வியர்வை  ஆவியாகி வெளியேறும்போது உடலின் வெப்பத்தை உபயோகிப்பதால் உடல் குளிர்ச்சி அடைகிறது. 

வேலை செய்யும்போது சீரான இடைவெளியில் சற்று ஓய்வு எடுத்து கொள்ளுங்கள். மனிதனின் ஆயுளை குறைக்கும் மது, சிகரெட் பழக்கத்தை அறவே  விட்டு விடுங்கள். கோபத்தை குறைத்து எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். அது உங்களின் வாழ்வை வளமாக்கும்.
*********************************************************************************************

எங்கும் எப்போதும் தேவை தண்ணீர்

The human body is 55% to 78% niralanatu body size. Dehydration of 1 to 7 liters of water per day to function properly, the body   requires. Body movement, temperature, humidity, and other factors vary depending on the need of water.
உடல் பருமனுக்கேற்றவாறு மனித உடம்பு 55% முதல் 78% நீராலானது.  வறட்சியை ஈடுசெய்து சரிவர செயல்பட உடலுக்கு நாள் ஒன்றிற்கு 1  முதல் 7 லிட்டர்கள் நீர் தேவைப்படுகிறது. உடல் இயக்கம், வெப்பநிலை, ஈரப்பதம், மற்றும் ஏனைய காரணிகளைப் பொறுத்து நீரின் தேவை  மாறுபடுகிறது.

இதில் பெருமளவு நேரடி நீர் உட்கொள்ளுதல் என்றில்லாமல் உணவின் வாயிலாகவோ, பானங்கள் வாயிலாகவோ உட்கொள்ளப்படுகிறது.   ஆரோக்கியமான மக்களுக்காகும் நீரின் அளவு தெளிவாகக் கணிக்கப்படவில்லையென்றாலும், சரியான நீரேற்றத்தைத் தக்கவைக்க குறைந்தது 6  முதல் 7 டம்ளர் நீர் (சுமார் 2 லிட்டர்கள் நீர்)அவசியமென வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஆரோக்கியமான சிறுநீரகங்களை உடையவர்களுக்கு அதிக நீர் உட்கொள்ளுதல் கடினமாயிருந்தாலும், தேவையை விட (குறிப்பாக வெப்பமான  ஈரபதமான வானிலையின் பொழுதும்,உடற்பயிற்சியின் பொழுதும்) குறைவாக நீர் உட்கொள்ளுதல் ஆபத்தானது.  சிறுநீரக செயல் இழப்பு வராமல்  தடுக்க அதிக தண்ணீர் குடிப்பது அவசியம். வெளியில் சென்றுவிட்டு வரும் போதும், உடற்பயிற்சி முடித்த பின்னரும் தேவையான அளவு தண்ணீர்  அருந்த வேண்டும். தண்ணீர் குடிப்பதை தள்ளிப்போடுவது தவறானது. 

தேவையற்ற தாதுக்களை உடலில் சேர்க்கும் துரித உணவுகளை தவிர்ப்பது மிகவும் அவசியம். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தண்ணீர் குடிக்கும்  அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். 1 லிட்டருக்கும் குறைவான நீர் ஆகாரங்கள் எடுத்துக் கொள்வது முக்கியம். 

காய்கறிகளை வேகவைத்து தண்ணீரை வடிகட்டிய பின்னர் மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மிகச்சிறிய அளவில் உப்பு சேர்த்து சாப்பிடலாம்.
உப்பையே மறந்து விட்டாலும் நல்லதுதான். அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை கிராம் உப்பு மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். மட்டன், சிக்கன்,   முட்டை போன்ற அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. இதில் சேர்க்கப்படும் மசாலா சிறுநீரகப் பழுது உள்ளவர்களுக்கு எதிரி. 

No comments:

Post a Comment