Thursday, July 24, 2014

ரத்த அழுத்தமா கூல் கூலா தண்ணி குடிங்க


நிறைய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு பலன்கள் இருப்பது நமக்குத் தெரியும். லேட்டஸ்டாக, ரத்த அழுத்தத்தை சீராக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்புக்கு தண்ணீர் உதவுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ளது வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம். அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர். தண்ணீர் குடித்ததும் அது ரத்த தமனிகளில் அடைப்புகளை கரைந்து ஓடச் செய்வது ஆய்வில் தெரிய வந்தது. அதன்மூலம், உடலில் ரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படும்.

எனவே, ரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலைசுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது. அத்துடன், நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது. அன்றாட வேலைகளின்போது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுபற்றி வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில்,

‘‘ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது. இந்த பிரிவில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது’’ என்றனர்.
******************************************************************************************

சலபாசனம்

இந்த ஆசனம் செய்வதால் குடல்கள் நன்கு இழுக்கப்படுவதால் மலச்சிக்கல், அஜீரணம் நீங்கும். சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகள் நன்கு செயல்படும்.
இது செய்வதால் முதுகெலும்பு பின்புறமாக வளைவதாலும் வயிற்றுப் பகுதி அழுத்தப்படுவதாலும் உடலின்  கீழப்பகுதிக்கு அதிகப் பலன்கள் கிடைக்கின்றன.
வயிறு இடுப்பு தொடைகளில் அதிகப்படியான சதை போடாமல் உடம்பு கட்டாக இருக்கும்.
வயிற்றுப் பகுதிக்கு அதிகமாக ரத்த ஓட்டம் ஏற்படுவதால் பாலுறவுச் சுரப்பிகள் வலுவடையும்.

பாதஹஸ்தாசனம்
அழகாகத் தோற்றமளிக்க விரும்பும் பெண்கள் செய்ய வேண்டிய ஆசனம் இது. இந்த ஆசனம் செய்வதால் முதுகெலும்பு வளையும் தன்மை பெறுவதுடன் தொந்தியும் கரையும்.
*********************************************************************************************

தண்ணீரே மருந்து..!

உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண்ணீர். செலவே இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது தான் வேதனையான வேடிக்கை.

சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் பெரும்பாலோர், தனியாரிடம் வாங்கி சாப்பிடும் `கேன் வாட்டர்’தான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் மெட்ரோ தண்ணீரை குடித்தாலே போதும், முக்கியமாக காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது.

நாம் சாப்பிடும், குடிக்கும் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை, திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது.

உணவு சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்விவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன்படாது. உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை. ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம்.
*******************************************************************************************

தண்ணீர்

‘நீரின்றி அமையாது உலகம் யார்யார்க்கம்
வானின்று அமையாது ஒழுக்கு’

என்னும் குறளின் வாக்கிற்கேற்ப இறைவனின் படைப்பில் அனைத்து உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவைகளான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பவை பஞ்ச பூதங்களாக கருதப்பட்டு உயிரினங்கள் அனைத்திற்கும் ஆதாரமாக துணை நிற்கின்றன என்பதை அனைவரும் நன்கு அறிவோம். வையகம் முழுவதும் நீரால் சூழப்பட்ட இவ்வுலகம் கடல் நீரால் சூழப்பட்டு உப்புத் தன்மையுடன் அமைந்திருக்கிறது. உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழிக்கேற்ப, நமது அன்றாட உணவிற்கு அத்தியாவசியமான தேவை உப்புதானே! நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் உப்பு தேவையான அளவில் சேர்க்காவிட்டால் உணவருந்த முடியுமா?

அதிலும் சாதாரணமாக தாகம் எனும் நாவரட்சி ஏற்படும்போதோ அல்லது மயக்கம், விக்கல், களைப்பு போன்றவற்றிற்குத் தண்ணீர் உடனடி, நிவாரணமாக உயிர் காக்கும் அருமருந்தாகும்.

பொதுவாக நீரில் ஆக்சிஜன், ஹைட்ரஜன், அயோடின், போன்றவை இயற்கையிலேயே நிறைந்திருப்பதால், பல்வேறு வகைகளில் நமக்கு பயன்தருபவையாகும். முக்கியமாக ஆக்சிஜன் அதிக அளவில் இருப்பதால் நமது உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும், உடற் சீதோஷ்ணத்தை கட்டுப்படுத்தி குளிர்ச்சியாக வைத்திருக்கவும், ஆரோக்கியமாக வாழவும் வைக்கின்றது. எனினும் விஞ்ஞான யுகத்தில் வாழ்கின்ற இன்றைய நாகரிக உலகில், தண்ணீர் எவ்வாறெல்லாம் மாசுபடுத்தப்பட்டு எண்ணற்ற தொற்று நோய்களுக்கும், விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் நோய்களுக்கும் காரணமாக உள்ளது என்பதை விவரிக்க வேண்டுமாகில், அதற்கென ஒரு தனி கட்டுரை தான் எழுத வேண்டும். அந்த அளவிற்கு தொழிற்புரட்சி, சுற்றுப்புற சுகாதார சீர்கேடுகள், இயற்கையை மாசுபடுத்தி, ஓசோன் எனும் வாயு மண்டலத்தையும் ஓட்டையாக்கி இயற்கைச் சீற்றத்திற்கு ஆளாகிக் கொண்டு வருகிறோம்.

எதிர்கால சந்ததியினர் நல்ல காற்றும், நல்ல தண்ணீரும் கிடைக்காமல் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள் என்று விஞ்ஞானிகள் தங்கள் ஆராய்ச்சி மூலம் கூறியிருக்கின்றனர். பொதுவாக கழிவுப் பொருட்களின் தாக்கம், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், மழைக்காலங்களில் நீர் ஓட்டத்தினால் எடுத்துச் செல்லப்படும் கழிவுகள், தூசுகள் போன்றவைதான் பல்வேறு இடங்களில் தேங்கி, தொற்று நோய்க் கிருமிகளான பேக்டிரியா, வைரஸ் மற்றும் பல்வேறு நோய்க் கிருமிகள் வளரவும் பெருகவும் வழி வகுக்கின்றன. எனவே குடிநீர் என்றவுடன் நாம் அனைவரும் பயன்படுத்த வேண்டியது பாதுகாக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகும்.

சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு டம்ளர் சுத்தமான தண்ணீர் பருக வேண்டும் என்று மருத்துவ குறிப்பு கூறுகின்றது. பொதுவாக அனைவரும் பெரும் கேன்களிலும், பாட்டில்களிலும் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையே அன்றாடம் உபயோகிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. காரணம் வீட்டில் உள்ள பைப் லைன்களில் துரு போன்ற அசுத்தம் அல்லது ஓட்டை ஏற்பட்டு வேறு நோய் தரக்கூடிய பொருட்கள் கலக்க வாய்ப்புகள் இருக்கின்றபடியால், குடிநீரைப் பொறுத்தவரையில் விழிப்புணர்வுடன் இருக்கின்றார்கள்.

இயற்கை தரும் மழைநீர் என்பது மிகவும் சுத்தமானது. ஆனால் அதை சேமித்து பாதுகாக்கும் நீர்த்தொட்டிகள் சரியான முறையில் பாதுகாக்கப்படாவிட்டால், மாசுத்தன்மை உண்டாகி, அதை தெரியாமல் பயன்படுத்தும்போது பல்வேறு கொடிய நோய்களுக்கு உட்பட நேரிடுகிறது. அந்த நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேலே எழும்பி மேகங்களாக மாறி, அதில் குளிர்ந்த காற்று பட்டவுடன் மழையாகவும், பனியாகவும் பெய்து பூமிக்கு நீர் வளமும் சேர்த்து, அந்த உப்புத் தண்ணீரை நன்னீராக மாற்றி நமக்கெல்லாம் குடிப்பதற்கான தண்ணீரை வழங்குகின்றது. இது இயற்கை நமக்கு செய்துவரும் அற்புத உதவியாகும். ஆகவே நாம் மிக முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டியது, நாம் குடிக்கும் நீரை ஓரளவிற்கு சுட வைத்து, ஆற வைத்து வடிகட்டி அருந்தினால், எந்தவித நோயும் ஏற்படாது.

வெறும் வயிற்றில் காலைப்பொழுதில் இரண்டு டம்ளர் சுத்தமான தண்ணீரும் அதுபோன்றே காலை உணவு, மதிய உணவு, இரவு விருந்து மற்றும் படுக்கப் போகும் முன் இரண்டு டம்ளர் நீர் அவசியம் பருகுவதை பழக்கமாய் வைத்திருந்தால் நல்ல ஆரோக்கியம், நல்ல நித்திரை, பசி, ஜீரணம், தெம்பு சுறுசுறுப்பு மற்றும் உடல் பலம் ஆகியவை சீராக அமைவதோடு மற்றும் பல்வேறு பழங்களான மாம்பழம், ஆரஞ்சு, சாத்துக்குடி, தர்பூசணி, கன்டலோப், வெள்ளரி, போன்றவற்றிலும், அதைப்போன்றே காய்கறி மற்றம் கீரை வகைகளிலும் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. இவற்றை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அடிக்கடி உணவாகப் பயன்படுத்தி தேக ஆரோக்கியத்திற்கு கூடுதல் பயன்பெற முடியும்.

சிறுநீரகத்தின் செயல்பாடுகள் ஒழுங்காய் இருக்கவும், மலச்சிக்கலை தவிர்க்கவும், ஒரு சில உஷ்ணத்தின் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாக்கவும் அடிக்கடி நீர் அருந்துவது என்பது இன்றியமையாததாகும். நமது ஊரில் செப்புக் குடங்கள், வெள்ளிக் குடங்கள் மற்றும் பானைகளில் சுத்தமான நீரை நிரப்பி அன்றாடம் பயன்படுத்துவதை நாம் அறிந்ததே. அதன் பயன் என்பது உலோகப் பொருளான இவற்றால் நமக்கு தேவையான தாமிர, வெள்ளி ஆகியவற்றின் சக்தியை அளிப்பதோடு உடலை குளிர்ச்சியாகப் பாதுகாக்கவும் துணை புரிகின்றன. தாயைப் பழித்தாலும் நீரைப் பழிக்காதே என்ற முன்னோர்கள் பழமொழிக்கேற்ப, தண்ணீரின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்து, அதன் மருத்துவ குணத்தினால் ஏற்படும் பயன்கள் கருதி, கூடுமானவரை நீரை சுட வைத்து, வடிகட்டி, ஆற வைத்து பயன்படுத்தி, வாழ்க்கை வாழ்வதற்கே என்றளவில் வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் நோயின்றி வாழ்க.
***************************************************************************************

வாட்டர் தெரப்பி தெரியுமா?

உடல் இளைப்பது முதல் புற்றுநோய் பாதிப்பு குறைவது வரை செலவே இல்லாத மருந்து ஒன்று இருக்கிறது தெரியுமா? அது தான் தண்ணீர். என்ன சிரிக்கிறீங்க? உண்மை தான். இந்த செலவே இல்லாத தண்ணீரின் மகிமை பற்றி நமக்கு தெரிந்தும் அலட்சியப்படுத்துவது தான் வேதனையான வேடிக்கை. 

செலவே இல்லாத தண்ணீரா? என்று திருப்பி கிண்டல் அடிக்காதீர்கள். சென்னையில் உள்ளவர்கள் பெரும்பாலோர், ஏதோ தனியாரிடம் வாங்கி சாப்பிடும் "கேன் வாட்டர்' தான் நல்ல பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்று நினைக்கின்றனர். இப்போது மெட்ரோ வாட்டர் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. அதை குடித்தாலே போதும், ஆனால், காய்ச்சிக் குடிக்க மறந்து விடக்கூடாது. 

அதென்ன "வாட்டர் தெரபி?.' நாம் சாப்பிடும், குடிக்கும் எதுவாக இருந்தாலும், அதில் உள்ள நல்ல சத்துக்களை திரவமாகவும், திடமாகவும் பிரித்து பிரித்து வெளியேற வேண்டிய சமாச்சாரங்களை வெளியேற்றி, சத்துக்களை, திரவ வடிவில் ஏற்று உடலின் பாகங்கள் பிரித்துக் கொள்கின்றன. இப்படித் தான் கால்சியம், இரும்பு, கார்போஹைட்ரேட் என்று எல்லாம் உடலில் சேர்கிறது. 


தொண்டை வரை காரமாகவோ, இனிப்பாகவோ இருக்கும் எதுவும் உடலில் சத்துக்களை சேர்ப்பதில்லை. நாம் வாய் ருசிக்காக சாப்பிடும் பல வேண்டாத சமாச்சாரங்களும், கழிவுப் பொருளாக நேரடியாக சிறுநீராகவும், மலமாகவும் தான் வெளியேறுகின்றன. 

நம் வீட்டில் எப்படி சமையல் அறை, படுக்கையறை, ஹால்,பாத்ரூம், டாய்லெட் உள்ளதோ அது போல நம் உடலிலும் உள்ளது. எல்லாவற்றையும் கழுவி, நல்லதை "டெட்டால்' ஊற்றி சுத்தம் செய்ய வேண்டாமா? அப்போது தானே உடல் என்ற வீடு, நாறாமல் இருக்கும். 

அதற்காக தான் அவ்வப்போது நாம் தண்ணீர், திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

முன்பு இருந்த உணவு முறையில் இப்படி ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு வகுத்து வைத்தனர். இப்போது "லைப் ஸ்டைல்' எவ்வளவோ மாறி விட்டது. 

உடலை எப்படியெல்லாம் பாதிக்க வைக்க வேண்டுமோ, அதற்கு நாமே தேவையான கெட்ட சத்துக்கள் அனைத்தையும் நம் உணவுகளின் மூலம் தருகிறோம். கொழுப்பு, ஷûகர், ஆயில் என்று எல்லாவற்றையும் சேர்த்து, கடைசியில் ரத்த அழுத்தம், சர்க்கரை, ஹார்ட் பிராப்ளம் என்று எல்லாவற்றையும் உடலில் ஏற்றி விடுகிறோம். 

இந்த புது "லைப் ஸ்டைலில்' எதையும் யாரும் கேட்பதாக இல்லை. இந்த லைப் ஸ்டைல் காரணமாக தான், இளைய வயதினர், குழந்தைகள் எல்லாரிடமும் பழங்கள் போன்ற திரவ சம்பந்தப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்ளும் பழக்கமே போய்விட்டது. அதுவும், தண்ணீர் குடிப்பது என்பது அரிதாகி விட்டது. இது பெரும் தவறு. 

ஏதோ உணவு, சிற்றுண்டி சாப்பிடும் போது மட்டும் தண்ணீர் குடிப்பது போதாது. தண்ணீர் குடிப்பதை பழக்கப்படுத்த வேண்டும். தண்ணீர் தொடர்பான பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும். பல ஆயிரக்கணக்கில் பணம் கறந்து சொல்லித் தரப்படும் "வாட்டர் தெரபி' உட்பட மூலிகை தெரபிகளை நாம் ஏன் இப்போதே ஆரம்பிக்கக் கூடாது? நீங்கள் ஆரம்பியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். 

இது தான் "வாட்டர் தெரபி' பயிற்சி. இனியும் நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருக்க மாட்டீர்களே? என்ன பாட்டிலை வாங்கி டேபிளில் தண்ணீருடன் வைத்திருங்கள். வீட்டிலாகட்டும், ஆபீசிலாகட்டும் மணிக்கொருதரம் தண்ணீர் குடிங்க, பாருங்க, உடல் "கும்ம்ம்'ன்னு இருக்கும். 

வெயிட் குறைய தண்ணீர் முக்கியம்: என்ன தான் உடற்பயிற்சி செய்தாலும், டானிக் சாப்பிட்டாலும், உடல் எடை குறையாது. ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே ரிசல்ட் தெரிந்து விடும். உடல் எடையை அதிகப்படுத்திக் காட்ட இளைஞர்கள், இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்டபடி தண்ணீர் குடித்துச் செல்வர். இது சரியல்ல. உண்மையில், உடல் எடையை கூட்டிக் காட்ட தண்ணீர் பயன் படாது. உண்மையில், அது உடலை பாதிக்கும். தினமும் குறிப்பிட்ட அளவு சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்பது தான் உண்மை. 

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையல்ல, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடத்தையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி சென்று கடைசியில் வெளியேறி விடுகிறது. இப்படி செய்வதால் தான் சிறுநீரக பிரச்னை, குடல் பிரச்னை என்று எதுவும் வராமல் இருக்கிறது சிலருக்கு. 

ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவீதம் வரை தண்ணீர் சத்து தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது. கண்ட கண்ட நொறுக்குத் தீனியை சாப்பிடுவதை விட, பழங்கள் நல்லது. 

"அப்பா விடட்டும் முதலில்; நான் அப்புறம் விடறேன்!' 

இருபது வயதில் ஆரம்பித்த உணவு, பழக்கவழக்கங்கள், நாற்பதுக்கு மேல், உடலில் தங்கள் வேலையை செய்து, எல்லா வியாதிகளையும் வரவழைத்து விடுகிறது. அப்புறம், ஐம்பதில் தான் நமக்கு "விழிப்புணர்வே' வருகிறது. நம் பிள்ளைகளுக்கு தான் "அட்வைஸ்' சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், மகனாவது கேட்கிறானா? "போப்பா, நீ தானே ஓட்டலுக்கு அப்பப்போ அழைச்சிக்கிட்டு போய் ப்ரைடு ரைஸ் சாப்பிடு, நுõடுல்ஸ் சாப்பிடு, பனீர் பட்டர்... அது இதுன்னு சாப்பிட வச்சே...' என்று பிள்ளைகள் திருப்பி கேட்பார்கள் தானே. 

அதனால், இன்றைய முப்பதில் இருப்பவர்களா நீங்கள்? வேண்டாமே, இந்த உணவுப் பழக்கங்களில் தவறான சமாச்சாரங்கள். நீங்க விட்டா தான், உங்க பிள்ளைகள் விடுவார்கள். இன்னிலேர்ந்து விட்டுவிடுங்கள், ப்ளீஸ். 

நீச்சல் பயிற்சி நல்லது: நீச்சல் சேம்பியனாக வர வேண்டும் என்றால் தான் நீச்சல் பயிற்சி செய்ய வேண்டுமா? உடல் பயிற்சியில் நீச்சல் பெரும்பங்கு வகிக்கிறது. 

முன்பெல்லாம் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு நீச்சல் முக்கியம். கிராமங்களில் பிறந்தவர்களுக்கு இதெல்லாம் இல்லாமல் இளமை வாழ்க்கை நகராது. நகரங்களில் உள்ளவர்களை பற்றி கேட்கவே வேண்டாம். பாத்ரூம் குளியலில் கூட ஏதோ காக்காய் குளியல் தான். இதனால் பலருக்கு தண்ணீர் அலர்ஜி கூட வரும். பெரும்பாலோர் வெந்நீரில் குளிக்க இதுவும் காரணம். நல்ல குளிர்ந்த நீரில் குளித்துப் பாருங்கள், அதன் மணமே, தன்மையே தனி. ரிலாக்ஸ் செய்ய, மருத்துவரீதியாக தண்ணீரில் நிற்பதும் ஒன்று. அதனால், தான் பலரும் டென்ஷனாக, பிசியாக இருந்து வீடு திரும்பினால், உடனே குளிக்கின்றனர். முடிந்தவரை டென்ஷனை போக்கும் தன்மை, குளிர்ந்த நீருக்கு உண்டு. 

பாதிக்கு பாதி தண்ணீர் வேணும்!: நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? இது தான் பலரின் கேள்வி. 

* பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவு அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். 

* இதை ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டம்ளர் என்று பிரித்துக் கொண்டு தண்ணீர் சாப்பிடலாம். 

* ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின். 

* ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது. 

* தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு. 

* வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை பிழிந்தோ சாப்பிடலாம். 

* ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பப்பாளி, மாம்பழம், சாத்துக்குடி, கேரட் ஜூஸ் போன்றவற்றையும் சாப்பிடலாம். 

* தொண்டை கரகரப்பு இருந்தால்... வெந்நீர், அல்லது வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் கரகர... போச்.  

No comments:

Post a Comment