Thursday, July 24, 2014

நுனி ஒட்டு மூலம் கத்தரிக்காய்... கொத்துக் கொத்தாகக் காய்க்கும்

Paste the tip of the stomach ... fruit clusters
ஹோம் கார்டன்

அநேக பழ மரங்கள் மற்றும் சில வகை காய்கறிகளில் ஒட்டு முறையில் நாற்று உற்பத்தி அதிக அளவில் செய்யப்படுகிறது. குறுகிய காலத்தில் தரமான உற்பத்திக்கும், நல்ல சுவைக்கும், நோய்த் தாக்குதல் மற்றும் வறட்சியைத் தாங்கி வளர்க்கவும் இந்த முறை மிகப் பிரபலம் என்கிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், அது பற்றி விரிவாக விளக்குகிறார். 

மா, பலா, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, சப்போட்டா போன்ற பழ வகைகளில் ஒட்டுச் செடிகளே பெரிதும் விரும்பப்படுகின்றன.

இம்முறை 1920களில் ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. மா, பலா, கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சு, சப்போட்டா போன்ற பழ வகைகளில் ஒட்டுச் செடிகளே பெரிதும் விரும்பப்படுகின்றன. ரோஜாவிலும் ஒட்டுச் செடிகளே பிரபலம். வீட்டுத் தோட்டத்தில் நுனித் தண்டு மூலம் ஒட்டு செய்வது எளிமையானது. ஒரே குடும்பத்தைச் சார்ந்த இரு வேறு செடிகளை  உ.தா.

சோலேனம் (Solanum)  குடும்பத்தைச் சார்ந்த வறட்சி மற்றும் பூச்சித் தொல்லை குறைவாயுள்ள, மருத்துவ குணமிக்க, நீண்ட காலம் காய்க்கும் சுண்டைக்காயை வேர்ப் பகுதியாகவும் (Rootstock) தண்ணீர் சற்று அதிகம் தேவைப்படும் அதிக பூச்சித் தாக்குதலுக்குள்ளாகும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த உணவுப் பொருளான கத்தரிக்காயின் நுனிப் பகுதியை (Scion) ஒட்டு இடுவதன் மூலம் அதிக நாட்கள் கொத்துக் கொத்தாகக் காய்க்கும், குறைந்த பூச்சித் தாக்குதல் கொண்ட கத்தரிக்காய் செடிகளை நாம் பெற முடியும்.

உருவாக்கும் முறை... ஒரே பருமனுள்ள சுண்டைக்காய் மற்றும் கத்தரிக்காயின் செடிகளை எடுத்துக் கொண்டு வேர்ப்பகுதியாக சுண்டைக்காயின் தண்டை தரையிலிருந்து 1  2 இன்ச் விட்டு வெட்ட வேண்டும். பின்பு அதனை இரண்டாக பிளந்து கொள்ளவேண்டும். கத்தரிச் செடியிலும் அதேபோன்று வெட்டி இலைப் பகுதியின் அடிபாகத்தில் க்ஷி போன்று (Wedge) வெட்டி சுண்டைக்காயின் பிளவில் வைத்து ஒட்டுத்தாள் கொண்டு சுற்றி விடலாம் அல்லது நூல் வைத்துக் கட்டலாம்.

நீர் ஆவியாதலைத் தவிர்க்க பெரிய இலைகளை அகற்றி பெட் பாட்டில் கொண்டு மூடி நிழல் பகுதியில் வைக்க வேண்டும். சிறிது நாட்களில் சுண்டைக்காயின் குருத்துகள் தோன்றும். அவற்றை அகற்றிவிட வேண்டும். 15 அல்லது 20 நாட்களில்  கத்தரி செடி நன்கு வளர்ந்திருக்கும். அவ்வாறு நன்கு வளர்ந்த பின் பாட்டிலை அகற்றி சற்று வெயிலில் வைத்து நன்கு வளர்ந்த பின் பெரிய பை/தொட்டிகளில் வைத்து சாதாரணமாக வளர்ப்பதைப் போன்று வளர்க்கலாம். 23 மாதங்களில் தரமான அறுவடைக்குத் தயாராகலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டியது... வேர்ப் பகுதியாக (Root stock) உபயோகிக்கும் செடியிலிருந்து வரும் குருத்துகளை வளரவிடக் கூடாது.

(விதை போடுவோம்!)

No comments:

Post a Comment