50- வகையான சாதம்....
பெப்பர் ரைஸ்.....
தேவையான பொருள்கள்
சாதம் - ஒரு கப்
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
அதன் பிறகு கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
கடலைப்பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் மிளகுத் தூளை சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.
மிளகு வாசனை வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையை சாதத்துடன் சேர்க்கவும்.பெப்பர் கலவை சாதத்துடன் நன்கு ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.
இறுதியில் கொத்தமல்லி தழையை மேலே தூவவும்.சூடான, சுவையான பெப்பர் ரைஸ் தயார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁💖💖💖💖
ஆனியன் ரைஸ்....
தேவையான பொருள்கள்
அரிசி - ஒரு ஆழாக்கு (சாதமாக வடித்துக் கொள்ளவும்)
வெங்காயம் - 2
கொத்தமல்லித்தழை - 2 கொத்து
தனி மிளகாய் தூள் - அரை மேசைக்கரண்டி
கரம்மசாலாத் தூள் - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
உப்பு - 1 1/4 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் - 4
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 4
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
செய்முறை
சாதத்தை வடித்து உதிர் உதிராக இருக்கும்படி கிளறி வைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீளவாக்கிலும், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடிக்க விடவும்.
அதில் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் அரைப்பதம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் கரம் மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விடவும்.
நன்கு மசாலாப் போல் வந்ததும் உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.
அதில் வடித்த உதிரியான சாதத்தை போட்டு கிளறி விடவும். மசாலாவுடன் சாதம் ஒன்றாக சேர்ந்ததும் இறக்கி வைக்கவும்.
இறக்கி வைத்து சாதத்தின் மேல் நெய் ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எளிதில் செய்து விடக்கூடிய சுவையான வெங்காயம் சாதம் தயார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁😁👍👍👍👍
கேரட் ரைஸ்.....
தேவையான பொருள்கள்
கேரட் - கால் கிலோ
சாதம் - 4 கப்
முந்திரி - 10
கிராம்பு - 3
பட்டை - 2
பச்சை மிளகாய் - 3
ஏலக்காய் - 2
கசகசா - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - கால் கப்
நறுக்கிய கொத்தமல்லி - கால் கப்
உப்பு - 1 1/2 தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி + 2 மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை......
காரட்டை தோல் சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லியை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், கசகசா போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டாக உடைத்து வைத்திருக்கும் முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து அதில் அரைத்த தேங்காய் விழுதை போட்டு 2 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
விழுதை போட்டு 2 நிமிடம் கிளறிய பிறகு அதில் துருவி வைத்திருக்கும் காரட்டை போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும்.
அதன் பிறகு அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து 4 நிமிடம் நன்கு சுருள கிளறி இறக்கி விடவும்.
ஒரு தட்டில் வடித்த சாதத்தை போட்டு பொலபொலவென்று உதிர்த்து விடவும்.
அதில் செய்து வைத்திருக்கும் காரட் மசாலாவை போடவும்.
பின்னர், மசாலா சாதத்துடன் நன்கு ஒன்றாகும் படி கிளறி விடவும்.
அதிக நேரம் கிளறி விட்டுக் கொண்டே இருந்தால் சாதம் குழைந்து விடும்.
அதன் மேலே வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். வெங்காய ரைத்தாவுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁💖💖💖💖😊
புதினா ரைஸ்....
தேவையான பொருள்கள்
புதினா - 2 கப்
அரிசி - 2 கப்
இஞ்சி - ஒரு சிறுத் துண்டு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 2
வேர்கடலை - சிறிது
உப்பு - தேவைக்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - சிறிது
எண்ணெய் - தேவைக்கு
தாளிக்க
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைபருப்பு - அரை தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - ஒன்று
செய்முறை
அரிசியை சுத்தம் செய்து சாதம் வடிக்கவும். இதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து வைக்கவும்.
புதினா இலை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புளி அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் வடித்த சாதத்தை கலந்து விடவும்.
கடாயில் வேர்கடலை வறுத்து தோல் நீக்கி சாதத்தில் கலந்து எடுக்கவும். சுவையான புதினா ரைஸ் தயார்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கேப்ஸிகம் ரைஸ்
தேவையான பொருள்கள்
பாசுமதி அரிசி - ஒரு கப்
கேப்ஸிகம் - ஒன்று
உப்பு
முந்திரி - சிறிது
தாளிக்க
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - அரை தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
வறுத்து பொடிக்க
மிளகாய் வற்றல் - 5
தனியா - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுந்து - 1 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 1/2 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
வேர்கடலை - சிறிது
செய்முறை
அரிசியை கழுவி உதிரியாக வடித்து வைக்கவும்.
வறுக்க தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து இத்துடன் நறுக்கிய கேப்ஸிகம் சேர்த்து 2 - 4 நிமிடம் வதக்கவும்.
இதில் பொடி, உப்பு சேர்த்து கலந்து விடவும்.
சூடாக சாதத்தை போட்டு கிளறி 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.
வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.
சுவையான கேப்ஸிகம் ரைஸ் தயார். விரும்பினால் கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁😊😊😊😊
5 - வகையான சாதம்......
முட்டைக்கோஸ் சாதம்
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ்
சாதம்
பெரிய வெங்காயம்
இஞ்சி
பூண்டு
பச்சை மிளகாய்
கறி மசாலா தூள்
சோம்பு
உப்பு
எண்ணெய்
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், 1/4 ஸ்பூன் கறி மசாலா தூள், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், 1/2 கப் பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், 1/4 டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை நன்கு வதக்கவும்.
பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁
அரைக்கீரை தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி
தக்காளி
அரைக்கீரை
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
மஞ்சள் தூள்
கடுகு
சீரகம்
வெந்தயம்
கடலைப்பருப்பு
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி சேர்ந்து வதக்கவும்.
பின்னர், ஒரு கப் அரைக்கீரை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
30 நிமிடம் ஊற வைத்த இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவைப்பட்டால் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥
அவரைப் பருப்பு தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி
தக்காளி
அவரைப் பருப்பு
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
மஞ்சள் தூள்
கடுகு
சீரகம்
வெந்தயம்
கடலைப்பருப்பு
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி சேர்ந்து வதக்கவும்.
பின்னர், 1/4 கப் அவரைப் பருப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
30 நிமிடம் ஊற வைத்த இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவைப்பட்டால் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥😊💥🍁💥😊
தேங்காய் தக்காளி சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி
தக்காளி
தேங்காய்
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
காய்ந்த மிளகாய்
மஞ்சள் தூள்
கடுகு
சீரகம்
வெந்தயம்
கடலைப்பருப்பு
எண்ணெய்
உப்பு
கறிவேப்பிலை
கொத்தமல்லி இலை
செய்முறை
குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, 1/2 ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் வெந்தயம், இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி சேர்ந்து வதக்கவும்.
பின்னர், பொடியாக நறுக்கிய தேங்காய் 1/2 கப் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
30 நிமிடம் ஊற வைத்த இரண்டு டம்ளர் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவைப்பட்டால் தண்ணீர் அதிகமாக சேர்த்துக் கொள்ளலாம். தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும்.
💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥🍁💥
மாங்காய் சாதம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
அதிக புளிப்பில்லாத மாங்காய்2
அhpசிஅரை கிலோ
எண்ணெய்தேவைக்கேற்ப
கடுகு கால் டீஸ்பூன்
பெருங்காயம்1 சிட்டிகை
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
வேர்க்கடலை கால் கப்
உப்புதேவைக்கேற்ப
மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
அரிசிகால் கிலோ
கொத்தமல்லி தழை1 கைப்பிடி
செய்முறை :
அரிசியை நல்ல உதிரி உதிரியாக சாதம் செய்து ஆற வைக்கவும். மாங்காய்த் தோல் சீவி, துருவிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, பெருங்காயத்தைப் சேர்த்து பொரிந்ததும் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும். பிறகு மிளகாயையும் வதக்கி அதனுடன் மாங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கவும்.
பின் சிறிது உப்பு, மஞ்சள் சேர்த்து நன்றாக வதக்கவும். ஆற வைத்த சாதத்தில் உப்பு சேர்த்து, மாங்காய் கலவையைச் சேர்த்து கலக்கவும். பிறகு பச்சைக் கொத்தமல்லி தழையை அதன் மேல் தூவவும். இப்போது சுவையான மாங்காய் சாதம் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சட்னி, ஊறுகாய்
🍁🍁🍁🍁🙏
5 - வகையான புளி சாதம்...
1- புளி சாதம்....
தேவையான பொருட்கள்:
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரிசி - 3 கப்
தண்ணீர் - 6 கப்
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
புளியை தண்ணீர் விட்டு ஊற வைத்து கரைத்து வடிகட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளிக்கவும்.
அதில் உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் போட்டு சிவந்ததும் பெருங்காயம் சேர்க்கவும்.
அடுப்பை சிறுந்தீயில் வைத்து மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து வாசம் போக வதக்கவும்.
பிறகு அதில் கரைத்த புளி தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்ததும் கழுவி ஊற வைத்த அரிசி சேர்த்து வழக்கமாக சாதம் போல் சமைக்கவும்.
🍁🍁🍁🍁🍁
2- புளி சாதம்
தேவையான பொருட்கள்:
சாதம் - 3 கப்
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
உப்பு - 1 தேக்கரண்டி
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 இலை
செய்முறை:
நாம் எப்பொழுதும் சாதம் மீந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி விடுவோம். அதற்கு பதில் மீந்த சாதத்தில் புளி ஊற்ற போகிறோம்.
முதலில் புளியை அரை டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து மிகவும் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
பின் அதில் மஞ்சள் தூள், உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து மீதம் உள்ள சாதத்தில் சேர்த்து கிளறவும்.(தண்ணீர் அதிகம் இருக்க கூடாது.).
இதை அனைத்தும் முன் தினம் இரவே செய்து மறு நாள் காலையில் எழுந்து சாதத்தை தாளித்தால் மட்டும் போதும்.
மறுநாள் காலையில் :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை சேர்த்து பின் புளி சாதம் கலவையை சேர்த்து கிளறவும்.
சுமார் 10 நிமிடம் புளி வாசம் போகும் வரை கிளறி சூடாக புளி சாதத்தை பரிமாறவும்.
🍁🍁🍁🍁🍁
3- புளி சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - 1 கப்
புளி - 1 1/2 எலுமிச்சை அளவு (கரைத்துக் கொள்ளவும்)
---------------------------
தாளிக்க:
-------------------------------
கடுகு, உளுந்து - 1 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 2 இனுக்கு
பச்சை மிளகாய் - 1 என்னம்
கடலை பருப்பு - 1 ஸ்பூன்
நிலக்கடலை பருப்பு - 2 ஸ்பூன் (தோல் நீக்கியது)
----------------------------
பொடிக்க:
--------------------------------
கடுகு - 1 ஸ்பூன் (வெறும் வாணலியில் வறுக்கவும்)
எள் - 1 1/2 ஸ்பூன் (வெறும் வாணலியில் வறுக்கவும்)
வெந்தயம் -1 ஸ்பூன் (வெறும் வாணலியில் வறுக்கவும்)
சிவப்பு மிளகாய் - 2 என்னம்
செய்முறை:
அரிசியை சாதமாக வடித்து ஆறவிடவும்.
பொடிக்க கொடுத்த வற்றை கொர கொரவென (தண்ணீர் இல்லாமல்) பொடிக்கவும்.
வாணலியில் 1/4 கப் நல்லெண்ணைய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கடலை பருப்பு, நிலக்கடலை பருப்பு தாளிக்கவும்.
பின் கரைத்த புளிதண்ணீருடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணைய் மேலே மிதந்து வரும் வரை கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து எண்ணைய் மிதந்ததும் பொடித்த பொடியை போட்டு கலந்து கொதித்து எண்ணைய் மிதந்ததும் இறக்கி வைக்கவும்.
ஆறவைத்த சாதத்தில் கொதித்த கலவை சேர்த்து கிளறி சாப்பிடலாம்.
🍁🍁🍁🍁🍁
4-புளி சாதம்
தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்து ஆறவைக்கவும் அரிசி - ஒரு கப்
-----------------------------
வறுத்து திரிக்க:
---------------------------
காய்ந்த மிளகாய் - மூன்று
வெந்தயம் - கால் தேக்கரண்டி
----------------------------
தாளிக்க:
------------------------------
நல்லெண்ணெய் - ஐந்து தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஐந்து ஆர்க்
கருப்பு கொண்டைகடலை - அரை கப் (ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும்)
புளி - ஒரு எலுமிச்சை அளவு (கரைத்து கொள்ளவும்)
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு தூள் - தேவையான அளவு
பெருங்காய தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
முதலில் சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்து கொள்ளவும்.
காய்ந்த மிளகாய், வெந்தயம் போட்டு கருக விடாமல் வறுத்து ஆறியதும் பொடி செய்யவும்.
தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து வேகவைத்த கொண்டைகடலையையும் சேர்த்து புளியை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றவும். அதில் எல்லா தூள் வகைகளையும் போட்டு தீயை சிம்மில் வைத்து கொதிக்கவிடவும். கொதித்து கொண்டிருக்கும் போது வறுத்த பொடியையும் போடவும்.
நல்ல கொதித்து தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே மிதந்து வரும் போது இறக்கி ஆறவைத்து ஆறிய சாதத்தை போட்டு கிளறவும்.
💥💥💥💥💥
5-புளி சாதம்
தேவையான பொருட்கள்:
------------------------------------------
முதல் நாள் இரவு:
------------------------------------------
மீந்த சாதம் - 2 கப்
புளிக்கரைசல் - 1/2 கப்
மஞ்சள் பொடி - சிறிதளவு
உப்பு - சுவைக்கு
------------------------------
மறுநாள் காலை:
-------------------------
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
வர மிளகாய்/பச்சை மிளகாய் - 3
எண்ணெய், கடுகு, கறிவேப்பில்லை - தாளிக்க
செய்முறை:
முதல் நாள் இரவு : சாதத்தை தனித்தனியாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.
புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
பின் இத்துடன் மஞ்சள் பொடி மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
பின் இதனை சாதத்துடன் நன்றாக கலந்து மூடி வைத்து விடவும்.
------------------------------------
மறுநாள் காலை:
----------------------------------
பூண்டை உரித்து தட்டிக் கொள்ளவும், மிளகாயை கிள்ளிக் கொள்ளவும்
வாணலியை அடுப்பில் காய வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, மிளகாய், பின் பூண்டு இவைகளை ஒன்றன் பின் ஒன்றாக போடவும். வெங்காயமும், பூண்டும் சற்று வதங்கியவுடன் முன்பே புளியுடன் கலந்து வைத்த சாதத்தை கொட்டி நன்றாக கிளறவும். பின் உப்பு சரிபார்த்து இறக்கவும்.
💥💥💥💥💥
10- வகையான சாதம்...
1-எள்ளு சாதம் செய்வது எப்படி....
தேவையான பொருட்கள்:
வெள்ளை எள்ளு - அரை கப்
மிளகாய் வற்றல் - 5
வெள்ளை உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - குண்டு மணி அளவு
கல் உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
எள்ளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் எள்ளை போட்டு 4 நிமிடம் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். தீயை குறைத்து வைத்து கை விடாமல் வறுத்துக் கொண்டே இருக்கவும். எள்ளு பொரிந்ததும் ஒரு தட்டில் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி பெருங்காயத்தை போட்டு பொரிக்கவும். பிறகு அதில் உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாய் வற்றல் போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.
வறுப்பட்டவுடன் எல்லாவற்றையும் எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆற விடவும்.
ஆறியதும் மிக்ஸியில் வறுத்த பெருங்காயம், மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்துக் கொள்ளவும்.
பிறகு அதில் வறுத்த எள்ளை போட்டு மீண்டும் பொடி செய்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தேவையான போது ஒரு பாத்திரத்தில் சாதத்தை போட்டு எண்ணெய் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும். மேலே எள்ளு பொடியை தூவி சாதம் முழுவதும் படரும்படி கலந்து பரிமாறவும்....
🍁🍁🍁🍁💖
2- ஈசி எக் ரைஸ்......
தேவையான பொருட்கள்:
உதிர் உதிரான சாதம் - 2 கப்
முட்டை - 3
எண்ணெய் - 3 அல்லது 4 தேக்கரண்டி
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான தீயில் வைத்து தனி மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
தூள் வகைகள் என்பதால் எண்ணெய் சூட்டில் கருகி விடும். எனவே சிறிது (ஒரு கைப்பிடி) தண்ணீர் சேர்க்கவும்.
தூள் கலவையில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
முட்டை வெந்து கீமா பதத்திற்கு வரும் வரை கிளறவும். முட்டையுடன் வடித்த சாதத்தை சேர்த்து நன்றாக கிளறி விடவும்
🍁🍁🍁🍁
3- வேர்க்கடலை சாதம்
தேவையான பொருட்கள்:
அரிசி - முக்கால் கப்
மஞ்சள் தூள் - சிறிது\
உப்பு - தேவையான அளவு
------------------------
வறுத்து பொடிக்க
----------------------------:
வேர்க்கடலை - அரை கப்
எள்ளு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
மிளகாய் வற்றல் - 4
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
மிளகு - அரை தேக்கரண்டி
--------------------
தாளிக்க:
------------------
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயம் - தாளிக்க
செய்முறை:
அரிசியை வேக வைத்து உதிரியாக சாதத்தைத் தயார் செய்து வைக்கவும். (மீந்து போன சாதம் இருந்தாலும் கூட பயன்படுத்தலாம்).
வேர்க்கடலையை வறுத்து தோல் நீக்கி வைக்கவும்.
வெறும் கடாயில் மிளகாய் வற்றல், மிளகு, எள் மற்றும் உளுந்தை வறுக்கவும்.
பிறகு தேங்காய் துருவலுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
மிக்ஸியில் வேர்க்கடலையைத் தவிர மற்ற அனைத்தையும் போட்டு பொடித்துக் கொண்டு பிறகு அத்துடன் வேர்க்கடலையையும் சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டவும்.
அதனுடன் சாதம் மற்றும் வேர்க்கடலைப் பொடியைச் சேர்த்து 2 நிமிடங்கள் சிறு தீயில் வைத்து பிரட்டி இறக்கவும்.
🔥🔥🔥🔥
4- தேங்காய் பால் சாதம்...
தேவையான பொருட்கள்:
அரிசி - 2 1/2 கப்
இஞ்சி - 250 கிராம்
பூண்டு - 10 பல்லு
மிளகாய் - 4
புதினா - 25 கிராம்
தேங்காய் - ஒன்று
பட்டை கிராம்பு - 25 கிராம்
பிரிஞ்சி இலை - ஒன்று
நெய் - 25 கிராம்
முந்திரி - 100 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
உப்பு - ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து வாணலியில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, இஞ்சி, பூண்டு, மிளகாய் அரைத்தவற்றை சேர்த்து வதக்கவும்.
அதன் பின்னர் முந்திரி, நறுக்கிய வெங்காயம், புதினா ஆகியவற்றையும் சேர்த்து சிவக்க வதக்கவும்.
ஒரு தேக்கரண்டி உப்பு போட்டு தேங்காய் பால் 2 டம்ளர் அதில் சேர்த்து கொதிக்க விடவும்.
பின் அரிசியை களைத்து அதில் போட்டு கிளறி விட்டு குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்ததும் இறக்கவும்.
🔥🔥🔥🔥
5- இட்லி பொடி சாதம் செய்வது எப்படி...
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 கப்
இட்லி பொடி - 2 மேசைக் கரண்டி
--------------------------
தாளிக்க:
----------------------------
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - தாளிக்க
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 4 இலை
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு பின் கடலைப் பருப்பு சேர்த்து வறுத்து கடைசியில் கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பொருட்களை சாதம் மற்றும் இட்லி பொடியுடன் சேர்த்து கிளறவும்.
இப்பொழுது சுவையான இட்லி பொடி சாதம் ரெடி..
🔥🔥🔥🔥
6- கட்டு சோறு..
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - அரை படி
சிறிய தேங்காய் - ஒன்று
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய் - 4
கடுகு - அரை ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை - அரை கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
பூண்டு - 2
நல்லெண்ணெய் - 150 மில்லி
உப்பு - ஒரு ஸ்பூன்
செய்முறை:
சோறு குழைந்துவிடாமல் பதமாக ஆக்கி எடுத்து சற்று ஆறவிட்டு வைக்கவும். தேங்காயை பால் பிழிந்து சுமார் அரை லிட்டர் அளவுக்கு பால் எடுத்துக்கொள்ளவும்.
அதிலேயே புளியை ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும். பூண்டை நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய்விட்டு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, கடுகு போட்டு வெடித்தவுடன் வேர்க்கடலையை போட்டு லேசாக வறுத்துக் கொண்டு, பூண்டு போட்டு தீயவிடாமல் லேசான பொன்முறுகலாகும்வரை வறுக்கவும்.
பிறகு கறிவேப்பிலை போட்டு தாளித்து, எடுத்துவைத்துள்ள தேங்காய்ப்பால், புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்க்கவும்.
கொதிக்க ஆரம்பித்து திரண்டு வரும்போது இறக்கி, ஆக்கிவைத்துள்ள சோற்றில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு ஆப்பையால் கலக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து அழுத்தி விட்டு வைத்து, சுமார் ஒரு மணி நேரம் கழித்து (தண்ணீர் சற்று உறிஞ்சியவுடன்) பரிமாறலாம்.
💖💖💖💖
7- பொடி சாதம்.....
தேவையான பொருட்கள்:
பட்டைமிளகாய் - 10
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
மிளகு - 10
அரிசி - அரை கிலோ
கடுகு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
நல்லெண்ணெய் - 5 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு அதில் பட்டைமிளகாய் எட்டு, சிறிது பெருங்காயம் எடுத்து வறுத்துக் கொள்ளவும்.
பின் கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்து எண்ணெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
எண்ணெய்யில் வறுத்த பொருட்களை சிறிது உப்பு சேர்த்து அம்மியில் பொடி செய்து கொள்ளவும்.
பின்பு வாணலியில் நான்கு கரண்டி எண்ணெய் விட்டு இரண்டு மிளகாய், கடுகு இரண்டையும் சேர்த்து தாளிக்கவும்.
சாதத்தை வடித்து அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆறவிடவும். ஆறிய பின் சாதத்தில் மூன்றையும் சேர்த்து நன்றாக கிளறவும்.
கலந்தபின் தாளித்த பொருட்களை கொட்டி கிளறவும். பின் பொடியைத் தூவிக் கிளறவும்.
🔥🔥🔥🔥
8- முட்டை மசாலா சாதம்....
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/4 கிலோ
முட்டை - 4
பெரிய வெங்காயம் -2
தக்காளி - 3
பச்சை மிளகாய் -2
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்
கறி மசாலா - 1 டீஸ்பூன்
பட்டை - சிறிது
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 4 ஸ்பூன்.
செய்முறை:
சாதத்தை உதிர் உதிராக வடித்து, 1 ஸ்பூன் எண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்து வதங்கியதும், எல்லா தூள்களையும், உப்பையும் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கிளறவும். கொஞ்சம் தளர இருக்கும் பொழுதே, ஆற வைத்த சாதத்தை போட்டு நன்கு கலந்து, 5 நிமிடம் கழித்து இறக்கவும்.
💖💖💖💖
9 புளி சாதம்
தேவையான பொருட்கள்:
சாதம் - ஒரு ஆளுக்கு தேவையான அளவு
கெட்டியான புளிக் கரைசல் - அரை கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
------------------------------
பொடிக்க:
---------------------------------
சீரகம் - 2 தேக்கரண்டி
வறுத்த வெந்தயம் - அரை தேக்கரண்டி
--------------------------
தாளிக்க:
--------------------------
கடுகு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 2
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - 10 இலை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
எண்ணெயை காயவைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை வரிசையாக தாளித்து புளிக்கரைசலும், உப்பும் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதித்ததும் தீயை அணைத்து விட்டு சாதம் சேர்த்து கிளறவும். வெந்தயம், சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்து சாதத்தில் தூவவும்.
💖💖💖
10- பெப்பர் சாதம்
தேவையான பொருட்கள்:
வடித்த சாதம் - ஒரு கப்
நீளமாக நறுக்கிய குடைமிளகாய் - அரை கப்
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
நிலக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - மூன்று சிட்டிகை
எலுமிச்சை - அரை மூடி
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு நன்றாக வெடிக்க விடவும்.
வெடித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு சிவக்கும் வரை வறுக்க வேண்டும்.
பின்பு நிலக்கடலை சேர்த்து வதக்கி கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கி பெருங்காயம் சேர்த்து பொரிக்க விடவும்.
குடைமிளகாய் சேர்த்து மூன்று நிமிடம் வதக்கி பொடிகள் சேர்த்து கிளறி உப்பு சேர்த்து சாதம் சேர்த்து கிளறவும்.
பரிமாறும்முன் எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்...
🔥🔥🔥🔥
தக்காளி சாதம்
தேவையான பொருள்கள்:
1. அரிசி
2. தக்காளிப் பழம் (பெங்களூர் தக்காளி)
3. வெங்காயம்
4. சாம்பார் பொடி
5. உளுத்தம் பருப்பு
6. கடுகு
7. பச்சை மிளகாய்
8. உப்பு
செய்முறை:
1. சாதத்தை அதிகம் தண்ணீர் ஊற்றாமல் உதிரியாக வடித்துக் கொள்ளவும் (அரை ஆழாக்கு அரிசி என்றால் ஒரு ஆழாக்கு தண்ணீர் ஊற்றவும்).
2. ஒரு வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் வீட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு பொடிப் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக் கொண்டு உடன் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளிப் பழத்தையும் போட்டு அரை ஸ்பூன் (சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஸ்பூனில் அரை ஸ்பூன்) சாம்பார் பொடி போட்டு நன்றாகச் சிறிது நேரம் வதக்கி சாத்தின் மீது கொட்டவும். உடன் அரை ஸ்பூன் உப்பை போட்டு சாதத்தை கலந்து வைக்கவும்.
3. இதோ, இப்போது சுவையான தக்காளி சாதம் தயாராகிவிட்டது.
தக்காளி புற்றுநோயை தடுக்கும் இயல்பு கொண்டது.
🍁🍁🍁🍁
தக்காளி சாதம் (வேறு வகை)
தேவையான பொருள்கள்:
1. சாதம்
2. தக்காளி
3. பெரிய வெங்காயம்
4. பச்சை மிளகாய்
5. கறிவேப்பில்லை
6. கடுகு, உளுந்து
7. பட்டை
8. சோம்பு
9. கிராம்பு
10. இஞ்சி
11. பூண்டு
12. புதினா
13. கொத்தமல்லி
14. கரம் மசாலா
15. மஞ்சள் பொடி
16. சீரகம்
17. நெய்
18. மிளகாய் பொடி
19. எண்ணெய்
20. உப்பு
செய்முறை:
1. தக்காளியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
2. இப்போது கொதிக்கும் தண்ணீரில் சுத்தம் செய்த தக்காளியை ஐந்து நிமிடங்கள் போட்டு வைத்தால் பழத்தின் தோல் தனியாகப் பிரிந்து வரும்.
3. தக்காளியை நன்றாக உரித்து பழத்தை மட்டும் தனியே எடுத்து மிக்சியில் போட்டு சாறு எடுக்கவும்.
4. வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிதளவு நறுக்கிக் கொள்ளவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, பட்டை, சோம்பு, கிராம்பு, சீரகம் ஆகியவற்றைப் போட்டு பொரிக்கவும்.
6. நன்கு பொரிந்து வந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உடன் தோல் நீக்கி சுத்தப்படுத்தி நறுக்கிய இஞ்சி, தட்டிய பூண்டு, புதினா ஆகிய இவற்றை எல்லாம் போட்டு நன்கு வதக்கவும்.
7. இப்போது மேற்கண்டவற்றுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, கரம் மசாலா சேர்த்துக் கிளறவும்.
8. இறுதியாக அரைத்து வைத்த தக்காளிச் சாற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
9. எண்ணெயும், தக்காளிச் சாரும் தனித்தனியே பிரிந்து வரும் வரையில் நன்றாகக் கொதிக்க விடவும்.
10. இப்போது இதனை இறக்கி வைத்து இரண்டு கப் சாதத்திற்குத் தேவையான அளவு கலவையை எடுத்து சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.
11. கடைசியாக சிறிது நெய்யை விட்டுக் கிளறி கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.
12. மேற்கண்ட இந்த முறையில் தக்காளி சாதம் செய்யும் போது தக்காளி தோல் இல்லாமல் மிகவும் ருசியாக இருக்கும். இதனால் அனைத்து வயதினரும் விரும்பி உண்பார்கள்.
தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன. தக்காளி பழத்தில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. இவை நமது எலும்பை உறுதியாகவும் திடமாகவும் மாற்றுகின்றன.
💖💖💖
பெப்பர் ரைஸ் செய்வது எப்படி...
செய்முறை
ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும்.
அதன் பிறகு கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
கடலைப்பருப்பு பொன்னிறமானதும் அதனுடன் மிளகுத் தூளை சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும்.
மிளகு வாசனை வந்ததும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையை சாதத்துடன் சேர்க்கவும்.பெப்பர் கலவை சாதத்துடன் நன்கு ஒன்றாக சேரும்படி கிளறி விடவும்.
இறுதியில் கொத்தமல்லி தழையை மேலே தூவவும்.சூடான, சுவையான பெப்பர் ரைஸ் தயார்.
💖💖💖💖
ஆனியன் ரைஸ் செய்வது எப்படி....
செய்முறை
சாதத்தை வடித்து உதிர் உதிராக இருக்கும்படி கிளறி வைத்துக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீளவாக்கிலும், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு வெடிக்க விடவும்.
அதில் நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் அரைப்பதம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அதில் கரம் மசாலா தூள், தனி மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விடவும்.
நன்கு மசாலாப் போல் வந்ததும் உப்பு சேர்த்து ஒரு முறை கிளறி விடவும்.
அதில் வடித்த உதிரியான சாதத்தை போட்டு கிளறி விடவும். மசாலாவுடன் சாதம் ஒன்றாக சேர்ந்ததும் இறக்கி வைக்கவும்.
இறக்கி வைத்து சாதத்தின் மேல் நெய் ஊற்றி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
எளிதில் செய்து விடக்கூடிய சுவையான வெங்காயம் சாதம் தயார்.
💖💖💖💖
கேரட் ரைஸ் செய்வது எப்படி....
செய்முறை
காரட்டை தோல் சீவி விட்டு துருவி வைத்துக் கொள்ளவும். முந்திரியை இரண்டாக உடைத்துக் கொள்ளவும்.
கொத்தமல்லியை சுத்தம் செய்து ஆய்ந்து கழுவி வைத்துக் கொள்ளவும்.மிக்ஸியில் தேங்காய் துருவல், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பச்சை மிளகாய், கசகசா போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் இரண்டாக உடைத்து வைத்திருக்கும் முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் 2 மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து அதில் அரைத்த தேங்காய் விழுதை போட்டு 2 நிமிடம் கிளறிக் கொண்டே இருக்கவும்.
விழுதை போட்டு 2 நிமிடம் கிளறிய பிறகு அதில் துருவி வைத்திருக்கும் காரட்டை போட்டு ஒரு நிமிடம் நன்கு கிளறி விடவும்.
அதன் பிறகு அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் வைத்து 4 நிமிடம் நன்கு சுருள கிளறி இறக்கி விடவும்.
ஒரு தட்டில் வடித்த சாதத்தை போட்டு பொலபொலவென்று உதிர்த்து விடவும்.
அதில் செய்து வைத்திருக்கும் காரட் மசாலாவை போடவும்.
பின்னர், மசாலா சாதத்துடன் நன்கு ஒன்றாகும் படி கிளறி விடவும்.
அதிக நேரம் கிளறி விட்டுக் கொண்டே இருந்தால் சாதம் குழைந்து விடும்.
அதன் மேலே வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். வெங்காய ரைத்தாவுடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
💖💖💖💖
புதினா ரைஸ் செய்வது எப்படி....
செய்முறை
அரிசியை சுத்தம் செய்து சாதம் வடிக்கவும். இதில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கலந்து வைக்கவும்.
புதினா இலை, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, புளி அனைத்தையும் மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும்.
இதில் அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் வடித்த சாதத்தை கலந்து விடவும்.
கடாயில் வேர்கடலை வறுத்து தோல் நீக்கி சாதத்தில் கலந்து எடுக்கவும். சுவையான புதினா ரைஸ் தயார்.
💖💖💖💖
கேப்ஸிகம் ரைஸ் செய்வது எப்படி....
செய்முறை
அரிசியை கழுவி உதிரியாக வடித்து வைக்கவும்.
வறுக்க தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
அனைத்தையும் தனித்தனியாக வெறும் கடாயில் வறுத்து எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து இத்துடன் நறுக்கிய கேப்ஸிகம் சேர்த்து 2 - 4 நிமிடம் வதக்கவும்.
இதில் பொடி, உப்பு சேர்த்து கலந்து விடவும்.
சூடாக சாதத்தை போட்டு கிளறி 2 நிமிடம் விட்டு எடுக்கவும்.
வறுத்த முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.
சுவையான கேப்ஸிகம் ரைஸ் தயார். விரும்பினால் கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
💖💖💖💖
உடனடி புளி சாதம் செய்வது எப்படி...
தேவையான பொருட்கள்
தேவைக்கேற்ப சமைத்த அரிசி
அரிசிக்கு 1 தேக்கரண்டி எள் விதை எண்ணெய்
அரைப்பதற்கு
30 கிராம் புளி (30 கிராம் அல்லது ஒரு சிறிய எலுமிச்சை அளவு உருண்டை)
4 சிவப்பு மிளகாய்
1 தேக்கரண்டி கல் உப்பு (1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப)
வறுத்த மற்றும் தூள்
1 தேக்கரண்டி எள் விதைகள்
1/2 தேக்கரண்டி வெந்தய விதைகள்
1/2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்
சீசனிங்கிற்கு
50 மிலி இஞ்சி எண்ணெய் (நெல்லென்னை)
1 தேக்கரண்டி கடுகு விதைகள்
1 சிட்டிகை அசாஃபோடிடா
1 துளிர் கறிவேப்பிலை
1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
3 டீஸ்பூன் வறுத்த வேர்க்கடலை
வழிமுறைகள்
உடனடி புளி சாதம் செய்வது எப்படி
புளி, சிவப்பு மிளகாய், உப்பு ஆகியவற்றை மிகக் குறைந்த வெந்நீரில் 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
20 நிமிடங்களுக்குப் பிறகு, புளி, சிவப்பு மிளகாய், உப்பு ஆகியவற்றை நன்றாக விழுதாக அரைக்கவும். பேஸ்ட் தயாராக உள்ளது.
1 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள் மற்றும் 1/2 டீஸ்பூன் வெந்தய விதைகளை நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். கடாயில் இருந்து அகற்றவும்.
அதே கடாயில், எள்ளை உலரவைக்கும் வரை வறுக்கவும். இப்போது மூன்றையும் சேர்த்து பொடி செய்யவும். இந்த மசாலா பொடியை ஒதுக்கி வைக்கவும்.
சமையல் அரிசி
ஒவ்வொரு தானியமும் தனித்தனியாக இருக்கும் வகையில் அரிசியை சமைக்கவும்.
அரிசியுடன் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு தட்டில் பரப்பவும். அதை முழுமையாக குளிர்விக்க விடவும்.
சுவையூட்டும்
1/4 கப் நல்லெண்ணெய் (நல்லென்னை) சூடாக்கி, ஒரு தேக்கரண்டி கடுகு, பெருங்காயம், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும், வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
புளி விழுதில் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஊற்றவும்.
அதில் தயார் செய்த பொடியை சேர்த்து நன்கு கலக்கவும். புலிகச்சல் தயார்.
இப்போது அரிசியில் தேவையான விழுதை சேர்த்து நன்கு கலக்கவும்.
எங்கள் புளி சாதம் தயார். அப்பளம் அல்லது பப்பாளி அல்லது பருப்பு வடையுடன் மகிழுங்கள்.
❤️❤️❤️❤️
பீன்ஸ் சாதம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பீன்ஸ் கால் கிலோ
தக்காளி விழுது அரை கப்
அரிசி 4 கப்
எண்ணெய்தேவைக்கேற்ப
வேர்கடலை கால் கப்
சீரகம் 1 டீஸ்பூன்
பொpய வெங்காயம் 1
இஞ்சி பூண்டு விழுது 1டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் அரை டேபிள் ஸ்பூன்
கடுகு1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து
கொத்தமல்லி, பொதினா 1 கைப்பிடி அளவு
எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
செய்முறை :
குக்காpல் சிறிது எண்ணெயைவிட்டு வேர்கடலையை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின்பு சிறிது எண்ணெய் சேர்த்து சீரகம், வெங்காயம், கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். வதங்கியதும் தக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி, பொதினா சேர்த்து கிளறிவிட்டு ஊறவைத்த அரிசியையும் சேர்த்து 9 கப் தண்ணீர் விட்டு குக்கரையை மூடிபோட்டு வேகவிட வேண்டும்.
தண்ணீர் வற்றியதும் வறுத்த வேர்கடலை, எலுமிச்சை சாறும் சாதத்துடன் சேர்த்து கிளறிவிடவும். இப்போது சுவையான பீன்ஸ் சாதம் தாயர். பீன்சுடன் கேரட் சேர்த்து செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
💖💖💖
மஷ்ரூம் பட்டாணி கலவை சாதம்
தேவையான பொருட்கள்
2 கப் உதிராக வடித்த சாதம்
3 பெரிய வெங்காயம்
2 பெரிய தக்காளி
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
2 பச்சை மிளகாய்
200 கிராம் மஷ்ரூம்
1/2 கப் பச்சை பட்டாணி
1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள்
1 ஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
1/2 ஸ்பூன் சீரகத்தூள்
1/2 ஸ்பூன் மல்லித்தூள்
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவுஉப்பு
6 டேபிள்ஸ்பூன் கடலெண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் சோம்பு
3 டேபிள்ஸ்பூன் நெய்
சிறிதுகறிவேப்பிலை
சிறிதுகொத்தமல்லி தழை
சிறிதுபுதினா
சமையல் குறிப்புகள்
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்
தக்காளி சுருள வதங்கியதும் சுத்தம் செய்த மஷ்ரூம் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து வேக விடவும் தண்ணீர் எதுவும் சேர்க்க வேண்டாம் மஷ்ரூம் வேக வேக அதுவே தண்ணீர் விடும்
மஷ்ரூம் வெந்ததும் மிளகாய்த்தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள் கரம் மசாலா தூள் மல்லித்தூள் சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்
மசாலா நன்கு பச்சை வாசனை போக வதங்கியதும் பச்சை பட்டாணி சேர்த்து மெல்லிய தீயில் ஐந்து நிமிடம் வரை மூடி வைத்து வேக விடவும்
பின் உதிராக வடித்த சாதம் சேர்த்து கொத்தமல்லி தழை தூவி விடவும்
பின் நெய் விட்டு மெதுவாக கிளறி விடவும்
அரிசி உடையாமல் மெதுவாக கிளறி இறக்கவும்
சுவையான ஆரோக்கியமான மஷ்ரூம் பட்டாணி கலவை சாதம் ரெடி
💖💖💖💖
தக்காளி சாதம்.....
தேவையான பொருட்கள்
நான்கு தக்காளி
கறிவேப்பிலை
உப்பு
மஞ்சள் தூள்
சிக்கன் மசாலா
இரண்டு கிராம்பு
இஞ்சி பூண்டு விழுது
மூன்று பட்டை
வடித்த சாதம்
எண்ணெய்
சமையல் குறிப்புகள்
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில்இரண்டு கிராம்பு மூன்று பட்டை இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்
மிக்ஸி ஜாரில் ஐந்து தக்காளியை நறுக்கி நன்கு அரைக்க வேண்டும்
அதன் பிறகு ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த கலவையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
வதுங்கியதும் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.பிறகு வடித்த சாதத்தை சேர்த்து கிண்ட வேண்டும்
சாதத்தை தக்காளியுடன் நன்கு கலந்தவுடன் அதை எடுத்து பரிமாறவும்.சூடான தக்காளி சாதம் ரெடி
🔥🔥🔥
பூண்டு சாதம்.....
தேவையான பொருட்கள்
1 மணி நேரம்
4 பேர்கள்
பூண்டு பல்- 40
பெரியதக்காளி - 2
பெரிய வெங்காயம்- 2
புதினா- ஒரு கைப்பிடி
மல்லிதழை- 1 சிறிய கட்டு
முந்திரி பருப்பு -15
வரமிளகாய் - 8
கருவேப்பிலை-1 கொத்து
நெய்- 6ஸ்பூன்
நல்லெண்ணெய்- 6ஸ்பூன்
சீரக சம்பா- 3 கப்
உப்பு -தேவைக்கு
பச்சைமிளகாய் - 2
சமையல் குறிப்புகள்
முதலில் பூண்டை உரித்துக் கொள்ளவும்.தக்காளி, மல்லி தழை,புதினா,லெங்காயம் கட் பண்ணிக்கொள்ளவும்.
சீரக சம்பா அரிசியை தனியாகவேக வைத்து ஒரு வடிதட்டில் வடித்துக்கொள்ளவும்.
ஒரு வாணலியில் நெய் 1 ஸ்பூன் ஊற்றி பூண்டுப்பல் போட்டுவதக்கவும்.பின் வரமிளகாய், கருவேப்பிசேர்த்துவதக்கவும்.முந்திரிபருப்பைச் சேர்க்கவும்.
இவற்றை ஆறியதும் கொரகொரப்பாக அரைக்கவும்.பச்சை மிளகாயை மிக்ஸியில் ஒரு சுத்துசுத்தி எடுத்துக்கொள்ளவும்..வேறு வாணலியை அடுப்பில்வைத்து எண்ணெய்,நெய்சேர்த்து ஊற்றவும். கட் பண்ணிய வெங்காயம் போட்டுவதக்கவும்.அரைத்த பச்சைமிளகாய் சேர்க்கவும்.
மல்லிதழை,புதினா,தேவையான உப்பு சேர்க்கவும்.ஒன்று போல் வதக்குபட்டதும் வடித்த சாதத்தைச்சேர்க்கவும்.
🍁🍁🍁🍁
தயிர் சாதம்
பொருள்அளவு
வேகவைத்த சாதம் 3 கப்
பால் 1 கப்
தயிர் கால் கப்
தாளிக்க :
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லி - கைப்பிடி
பெருங்காயம் - 2 சிட்டிகை அளவு
பச்சை மிளகாய் - 2 கிறீயது
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
செய்முறை :
வேகவைத்த சாதத்தினை கரண்டியில் மசித்து கொள்ளவும்.
இத்துடன் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இத்துடன் தயிர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சேர்த்து தாளித்து இத்துடன் சேர்த்து கலந்து கொள்ளவும். கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான தயிர் சாதம் ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : அனைத்து வகையான வறுவல், ஊறுகாய் சேர்த்து சாப்பிட சுவையான இருக்கும்.
🍁🍁🍁🍁
புளி சாதம்
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
உதிரியாக வடித்த சாதம் 1 கப்
புளி ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் 3
பச்சை மிளகாய் 2
மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
பெருங்காயம் ஒரு சிட்டிகை
சிறிய வெங்காயம் 10
எண்ணெய் தேவைக்கேற்ப
வேர்க்கடலை கால் கப்
எள் 1 டீஸ்பூன்
எண்ணெயில் வறுத்து பொடியாக்கவும் :
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
தாளிக்க :
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
முந்திரிபருப்பு - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை :
புளியை கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
எள்ளை எண்ணெய் ஊற்றாமல் வாணலியில் போட்டு வறுத்து அதை மிக்சியில் அரைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தைச் சேர்த்து பின் காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்கவும்.
மிளகாய் கருப்பாக வதங்கியதும் வெங்காயத்தை போடவும். அதன் பிறகு கரைத்த புளியை ஊற்றவும். பின் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
புளிச்சாறு கொதித்து கெட்டியாகும் வரை கலக்கி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, வேர்க்கடலையை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
உதிர்த்த சாதத்தை புளிச்சாறுடன் சேர்த்து, தாளிக்க வேண்டிய பொருட்களை எண்ணையில் வறுத்து இதன் மீது ஊற்றவும்.
தேவையான உப்பு, வறுத்துப் பொடித்த மிளகாய்ப் பொடி சேர்த்து கலக்கி பரிமாறலாம்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனுடன் உருளைக்கிழங்கு, மசால் வடை, புதினா துவையல் சேர்த்து சாப்பிடலாம்.
❤️❤️❤️❤️❤️❤️
எலுமிச்சை சாதம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
உதிராக வடித்த சாதம்2 கப்
எலுமிச்சை பழம்2
உப்பு தேவைக்கேற்ப
பச்சை மிளகாய்2 (பொடியாக அரிந்தது)
வறுத்தரைத்த வெந்தயப்பொடி 1 சிட்டிகை
மஞ்சள்தூள்அரை டீஸ்பூன்
இஞ்சி1 டீஸ்பூன் (பொடியாக அரிந்தது)
வறுத்து தோல் நீக்கிய வேர்கடலைகால் கப்
தாளிக்க
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
எலுமிச்சம் பழத்தை பிழிந்து விதை இல்லாமல் சாறு எடுத்துக்கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, இவற்றுடன் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்புகளை தாளித்து, இஞ்சி, பச்சைமிளகாய், சிரகம், கறிவேப்பிலை, வேர்கடலை சேர்த்து வதக்கி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
இவற்றுடன் எலுமிச்சை சாறு சேர்த்து அதிக நேரம் கொதிக்கவிடாமல் எலுமிச்சைக் கலவையை இறக்கவும்.
எலுமிச்சைக்கலவை ஆறியவுடன், உதிராக வடித்த சாதத்தை கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இவற்றுடன் வெந்தயப்பொடி, பெருங்காயப்பொடி சேர்த்து கலந்தால் சுவையான, வாசனையான எலுமிச்சை சாதம் ரெடி.
🙏🙏🙏
குடைமிளகாய் சாதம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
பச்சரிசி சாதம்ஒரு கப்
பெரிய வெங்காயம்1
இஞ்சி1 டீஸ்பூன் (சிறிதாக நறுக்கியது)
சிகப்பு, பச்சை குடைமிளகாய்கால் கப் (இரண்டும் சேர்த்து)
எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழைஒரு கைப்பிடி அளவு
உப்புதேவைக்கேற்ப
மிளகு தூள்1 டீஸ்பூன்
முந்திரி5
பச்சை மிளகாய்3
தாளிக்க :
எண்ணெய் - தேவைக்கேற்ப
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை :
வெங்காயத்தை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.
பச்சை குடைமிளகாய் மற்றும் சிவப்பு குடைமிளகாய்களை சிறுசிறு துண்டுகளாக, சதுரமாக நறுக்கிக்கொள்ளவும்.
சாதத்தை சிறிது எண்ணெய், நெய், உப்பு சேர்த்து கலந்து ஆற விடவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய், நெய் ஊற்றி காயவைத்து, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுப்பை சிறுதீயில் வைத்து, ஆற வைத்த சாதத்தைச் சேர்த்துக் கிளறவும். பின்பு மிளகுதூள், தேவைக்கு ஏற்ப உப்பு, கொத்தமல்லி தழையைத் தூவி கிளறவும். கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து 2 நிமிடம் கழித்து இறக்கினால் சூடான குடைமிளகாய் சாதம் ரெடி.
🔥🔥🔥🔥
தக்காளி சாதம்
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
அரிசி2 கப்
தக்காளி5
பெரிய வெங்காயம்3
பச்சை மிளகாய்3
இஞ்சி பூண்டு விழுது2 டீஸ்பூன்
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்அரை டேபிள் ஸ்பூன்
சோம்புத் தூள்அரை டேபிள் ஸ்பூன்
புதினா மற்றும் கொத்தமல்லிஅரை கட்டு(இரண்டும் சம ஆளவு)
தாளிக்க:
பட்டை - 2
ஏலக்காய் - 2
கிராம்பு - 3
தண்ணீர் - 5 கப்
எண்ணெய் - தேவைக்கேற்ப
உளுத்தம்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் அரிசியை தண்ணீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, கழுவி வைத்துக் கொள்ளவும். பின் வெங்காயம், தக்காளியை நன்கு நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளமாக கீறிக் கொள்ளவும். கொத்தமல்லி மற்றும் புதினாவை நன்கு நீரில் அலசி, அதன் இலைகளை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், இஞ்சி பூண்டு விழுது, சோம்புத் தூள், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு நன்கு வதக்கி, சிறிது நேரம் கழித்து கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை போட்டு வதக்கவும். பின்னர் கழுவி வைத்துள்ள அரிசியை அத்துடன் சேர்த்து 5 நிமிடம் கிளறி விட்டு, பின்னர் அதில் தண்ணீர் மற்றும் உப்பு ஆகியவற்றை வேண்டிய அளவு சேர்த்து மூடி விட்டு, 3 விசில் வந்ததும் இறக்கவும். பின்னர் அதனை ஒரு முறை கிளறி விட்டு, பரிமாறவும்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தயிர் பச்சடி, கொத்தமல்லி சட்னி, தேங்காய் சட்னி, ஊறுகாய், உருளைக்கிழங்கு பொhpயல்.
🍁🍁🍁🍁
கேரட் சாதம்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
கேரட் கால் கிலோ
பாஸ்மதி ரைஸ்அரை கிலோ
பட்டை1
கிராம்பு2
ஏலக்காய்1
புதினாஒரு கைப்பிடி
பாதாம்4
முந்திரி4
காய்ந்த மிளகாய்3
நெய்ஒரு டீஸ்பூன்
கடுகுஒரு டீஸ்பூன்
எண்ணெய்தேவைக்கேற்ப
மல்லித்தழைஒரு கைப்பிடி
உப்புதேவைக்கேற்ப
தண்ணீர்தேவைக்கேற்ப
செய்முறை :
முந்திரி, பாதாமை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காயை வறுக்கவும். கடைசியில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
வறுத்த மசாலா பொருட்களை மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன், முந்திரி, பாதாமையும் சேர்த்து லேசாக அரைத்துக் கொள்ளவும்.
பாஸ்மதி அரிசியை பத்து நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சேர்த்து பொhpந்ததும் புதினாவை போட்டு வதக்கி, பிறகு ஊற வைத்த அரிசியைப் போட்டு லேசாக வறுக்கவும்.
கேரட்டை மிக்ஸியில் அரைத்து சாறெடுக்கவும். இந்த சாறை வறுத்த அரிசியில் விடவும். அரிசி மூழ்கும் அளவுக்கு சாறு இருந்தால் போதும், அதற்கேற்ப சாறெடுக்கவும்.
பிறகு உப்பு சேர்த்து, பொடித்து வைத்துள்ளவற்றை போட்டு நன்றாக கலக்கி, குக்கரை மூடி விடவும்.
ஒரு விசில் வந்ததும் இறக்கி, மேலே மல்லித்தலை தூவினால் கேரட் சாதம் ரெடி.
🍁🍁🍁🍁
தக்காளி சாதம் செய்வது எப்படி.... 👍
தேவையான பொருட்கள்
அரிசி - அரை ஆழாக்கு
4 தக்காளிப் பழம் (பெங்களூர் தக்காளி) -2 பெரியது
வெங்காயம் - 1 பெரியது
சாம்பார் பொடி அரை ஸ்பூன்
+ உளுத்தம் பருப்பு அரை ஸ்பூன்
கடுகு - கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் -2 (மீடியம் சைஸ்)
+ உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சாதத்தை அதிகம் தண்ணீர் ஊற்றாமல் உதிரியாக வடித்துக் கொள்ளவும் (அரை ஆழாக்கு அரிசி என்றால் ஒரு ஆழாக்கு தண்ணீர் ஊற்றவும்).
2. ஒரு வாணலியில் 3 ஸ்பூன் எண்ணெய் வீட்டுக் கடுகு, உளுத்தம் பருப்பை வறுத்துக் கொண்டு பொடிப் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக் கொண்டு உடன் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளிப் பழத்தையும் போட்டு அரை ஸ்பூன் (சாதாரணமாக நாம் பயன்படுத்தும் ஸ்பூனில் அரை ஸ்பூன்) சாம்பார் பொடி போட்டு நன்றாகச் சிறிது நேரம் வதக்கி சாத்தின் மீது கொட்டவும். உடன் அரை ஸ்பூன் உப்பை போட்டு சாதத்தை கலந்து வைக்கவும்.
3. இதோ, இப்போது சுவையான தக்காளி சாதம் தயாராகிவிட்டது.
தக்காளி புற்றுநோயை தடுக்கும் இயல்பு கொண்டது.
💖🔥🔥🔥
கதம்பம் சாதம்....
தேவையான பொருட்கள்
அரிசி - 2 கப்
புளி - 1/2 சுண்ணாம்பு அளவு உருண்டை
துவரம் பருப்பு - 1/2 கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம்-10
கடுகு விதை - 2 டீஸ்பூன்
அசாஃபோடிடா - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 1 பெரியது
1 கப் காய்கறிகள் (கேரட், உருளைக்கிழங்கு, ஆவரைக்காய், முருங்கை, முட்டை செடி.. போன்றவை)
கறிவேப்பிலை - 1 இளநீர்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
சுவைக்கு உப்பு
வறுத்து அரைத்து, பின்வருவனவற்றை பேஸ்ட் செய்து தனியே வைக்கவும்.
கொத்தமல்லி விதைகள் - 1 டீஸ்பூன்
வங்காளம் கிராம் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3 எண்கள்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
தேங்காய் - 1 அங்குல துண்டு
தயாரிப்பு
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சாம்பார் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
பிறகு தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
சாதம், மஞ்சள் தூள் தூவி சிறிது நேரம் வதக்கவும்
துண்டுகளாக்கப்பட்ட காய்கறிகள், பருப்பு, உப்பு, புளி மற்றும் அரைத்த கலவையைச் சேர்க்கவும்
6 கப் தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும், பின்னர் இந்த கலவையை பிரஷர் குக்கரில் மாற்றவும்
அரிசி சேர்க்கவும்
அழுத்தி 4 விசில் வரை வேக வைக்கவும்
கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெயை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் தாளிக்கவும்
அரிசி கலவையில் தாளிக்கப்பட்ட பொருட்களை சேர்த்து நன்கு கலக்கவும்
எலுமிச்சை ஊறுகாயுடன் சூடாக பரிமாறவும்
💖💖💖💖
தக்காளி சாதம்......
தேவையான பொருட்கள்
நான்கு தக்காளி
கறிவேப்பிலை
உப்பு
மஞ்சள் தூள்
சிக்கன் மசாலா
இரண்டு கிராம்பு
இஞ்சி பூண்டு விழுது
மூன்று பட்டை
வடித்த சாதம்
எண்ணெய்
சமையல் குறிப்புகள்
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில்இரண்டு கிராம்பு மூன்று பட்டை இஞ்சி பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைக்க வேண்டும்
மிக்ஸி ஜாரில் ஐந்து தக்காளியை நறுக்கி நன்கு அரைக்க வேண்டும்
அதன் பிறகு ஒரு கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் அரைத்து வைத்த கலவையை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
வதுங்கியதும் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேக வைக்க வேண்டும்.பிறகு வடித்த சாதத்தை சேர்த்து கிண்ட வேண்டும்
சாதத்தை தக்காளியுடன் நன்கு கலந்தவுடன் அதை எடுத்து பரிமாறவும்.சூடான தக்காளி சாதம் ரெடி
🔥🔥🔥🔥
லெமன் ரைஸ்.....
தேவையான பொருட்கள்
ஒரு கப் அரிசி
ஒரு எலுமிச்சை பழம் சாறு
தாளிக்க தேவையான அளவு கடுகு உளுந்து
கடலைப்பருப்பு சிறிதளவு
தாய்க்கு தேவையான அளவுக்கு வெந்தயம்
சிறிதளவுகருவேப்பிலை கொத்தமல்லி இலை
தேவையானஅளவு உப்பு,
தேவையானஅளவு எண்ணெய்
நான்கு வர மிளகாய்
சமையல் குறிப்புகள்
ஒரு கடாயில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கடலைப்பருப்பு வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கி எலுமிச்சை சாரி மற்றும் உப்பு சேர்க்கவும்
ஒரு கப் அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து குக்கரில் வேகவைத்தால் சாதம் ரெடி அதை நாம் தாளித்தவுடன் சேர்ந்து கிளறிவிட்டால் ரோமன் ரைஸ் ரெடி
👍👍👍👍
தேங்காய் பால் சாதம்....
தேவையான பொருட்கள்
வெண்புழுங்கலரிசி 1 1/2 கப்
தேங்காய் பால் 3 கப்
பெரிய வெங்காயம் 1
தக்காளி 1
பிரிஞ்சி இலை 2
இஞ்சி, பூண்டு விழுது 2 ஸ்பூன்
பட்டை சிறு துண்டு
கிராம்பு 4
ஏலக்காய் 1
அன்னாசி பூ 1
ப.மிளகாய் 2
சீரகம் 3/4 டீ ஸ்பூன்
சோம்பு 1/2 டீ ஸ்பூன்
உடைத்த முந்திரி 12
கல் உப்பு ருசிக்கு
எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
நெய் 1 டேபிள் ஸ்பூன்
அலங்கரிக்க:- வட்டமாக நறுக்கின வெங்காய ரிங்க்ஸ், முந்திரி, தேங்காய் துண்டுகள், 1 ப.மிளகாய்
சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைத்துக் கொள்ளவும்
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். தக்காளியை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்ஸியில், தேங்காய் துண்டுகள், சிறிது தண்ணீர் விட்டு முதலில் அரைக்கவும். திரும்பவும் தண்ணீர் விட்டு நன்கு மைய அரைத்து வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை நன்கு களைந்ததும், தண்ணீர் விட்டு ஊற வைத்து, பிறகு வடித்துக் கொள்ளவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, நெய், எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, முந்திரி, இஞ்சி பூண்டு விழுது, கீறின ப.மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி, கறிவேப்பிலையை சேர்த்து, வதக்கினதும், அரிசியை சேர்த்து, 1 நிமிடம் பிரட்டிக் கொள்ளவும்.
அடுத்து தேங்காய் பாலை விட்டு மூடி போட்டு மூடவும்.
பிறகு 1 விசில் விட்டு இறக்கவும். மேலே 1 ஸ்பூன் நெய் விட்டு சாதம் உடையாமல் கிளறவும்.
இறக்கினதும், பௌலுக்கு மாற்றவும்.
❤️❤️❤️❤️
ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்......
தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் 3கப் (வெண்புழுங்கலரிசி)
3மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு
மீடியம் சைஸ் வெங்காயம் 4
ம.தூள் 1 டீ ஸ்பூன்
தனி மி.தூள் 2 ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் 1 டீ ஸ்பூன்
கல் உப்பு ருசிக்கு
கறிவேப்பிலை 2 ஆர்க்கு
தே.எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
நெய் 1 ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக தண்ணீரில் நறுக்கிப் போடவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 2 டேபிள்ஸ்பூன், தே.எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கின உருளைக்கிழங்கு, ம.தூள், மி.தூள், உப்பு, சேர்த்து நன்கு பொரித்து, பௌலில் எடுக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில், வெங்காயம், ம.தூள், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, கறிவேப்பிலை, சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு, நன்கு வதக்கியதும், பொரித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலா தூள், சேர்த்து வதக்கி அடுப்பை நிறுத்தி விடவும்.
அடுத்து வடித்த சாதத்தை சேர்த்து, மேலே 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறவும்.
இப்போது, வித்தியாசமான, சுவையான, சுலபமான,*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*தயார்.தே.எண்ணெயில் செய்வதால் கூடுதல் சுவை கிடைக்கும். குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரெசிபி. செய்து பார்த்து, அசத்தி என்ஜாய் செய்யவும்.
💖💖💖💖💖
No comments:
Post a Comment